Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
மனநோய்
மறுபடியும், மறுபடியும் அழைப்பு செல்போனுக்கு வந்துக் கொண்டே இருந்தது. சில நேரங்களில் எடுக்கலாமுன்னு நினைத்தால் எடுக்க முடிவதில்லை. ஒரு மாதத்திற்கு முன்பும் அழைப்பு வரும்போது உறுதியாக சொல்லிபுட்டான். சரவணனும் அவங்க தரப்பிலிருந்து உறுதிப்படுத்தி கொண்டார்கள். நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்னு அழைப்பை துண்டித்து விட்டார் சரவணன். இரண்டு மாதத்திற்கு முன்னே சரவணன் அழைக்கும் போது மலைச்சாமி
‘இல்லங்க’
“சார் நான் ஏற்கனவே அவங்க கிட்ட சொல்லிபுட்டேன் இடம் வேணாம்னு. நான் இருக்கும் போதும் சொல்லியும் விட்டேன். இப்ப வந்து, இங்க வா ,அங்க வான்னு சும்மா கால் பண்ணிட்டு இருக்கீங்க.. இப்படி எல்லாம் கால் பண்ணாதீங்க சார். வீட்ல தெரிஞ்சா அவ்வளவுதான். வீட்ல ஆள் இருக்காங்க. தெரிஞ்சுக்கங்க.”
சரவணன் பேச்சை கேட்டதும், சார் ஒரு நிமிஷம் நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க என்று சொல்ல..
‘சொல்லுங்க சார்’ என்றான் மலைச் சாமி
நான் ஆபீஸ்ல இருந்து தான் பேசுறேன் நான் சரவணன். நீங்க வந்து ஒரு சைன் மட்டும் போட்டு போங்க. வேற எதுவும் கேக்கல. காசா பொருளா எதுவும் கேட்கல. சரிங்களா சார்.
சரிங்க சார் என்றான் மலைச்சாமி.
நான் மட்டுமா தனியா வந்து சைன் போட்டு வந்துடறேன் சார். ஏன்னா!!!
சார் சார் நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது புரியாம இல்ல ரெண்டு பேரும் வந்து சைன் போட்டே ஆகணும். புரிந்து கொள்ளுங்கள். இடத்தை வாங்கும்போது ரெண்டு பேரும் தான் சைன் போட்டு இருக்கீங்க. உங்களுக்கு லீவு எப்ப இருக்குனு சொல்லுங்க அப்ப கூட வச்சுக்கலாம். நீங்க வந்து பத்திர ஆபீஸ்ல சைன் போட்டு போகலாம்.
நாங்க அந்த இடத்தை வாங்க போறோம் சார் என்றார் சரவணன்.
அதுதான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் கால் பண்ணிக்கிட்டே இருக்கிறேன் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். சரவணன் மலைச்சாமிகிட்டே இதை அழுத்தமாக சொன்னான்.
அவங்க கிட்டயும் சொல்லிருங்க சார் என்றான் மறுபடியும் மலைச்சாமி.
சரிங்க சார் நான் சொல்லிடுறேன் என்றான் சரவணன்.
இரண்டு ஆண்டுகள் சென்று விட்டது பத்திரம் முடித்து. ஆமா இரண்டு ஆண்டுகள் தாம்.
மலைசாமியும், வளர்மதியும் சேர்ந்து வாழும் போது தான் இடம் வாங்கினார்கள். வளர்மதிக்கு குழந்தை இருந்தும் மலைச்சாமி வளர்மதி ஏற்றுக் கொண்டான். மலைச்சாமி வளர்மதியை விட்டு பிரிந்து இரண்டு வருடமாச்சு.
ஒரு பேச்சும், ஒரு உறவும் இல்ல. இரண்டு பேருமே வேற வேற ஆளுக.
மீண்டும் சரவணன்கிட்டே இருந்து அழைப்பு வந்தது.
எடுக்கவில்லை மலைச்சாமி.
மூன்று நாள் கழிச்சு வளர்மதியிடமிருந்து அழைப்பு வந்தது.
எடுத்தான்..
ஹலோ..
நான் வளர்மதி பேசுறேங்க
ம்…. சொல்லுங்க என்றான் மலைச்சாமி.
‘நாளைக்கு ரிஜிஸ்டர் வச்சிருக்காங்க. சரியா வந்துருங்க.
ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்ல வேண்டியதுதானா இப்ப சொல்லுறீங்க. எப்படி வர முடியும் எனக்கு வேலை கிடக்கு.
எடத்தை வாங்குறவங்களுக்கு நாளை நல்ல நாளாம்.
நீங்களே அவங்ககிட்ட பேசுங்க.
டோக்கன் வேற போட்டாச்சு ஒன்னும் பண்ண முடியாதுங்க. நீங்க வந்து ஆகணும் சரிங்களா என்றாள் வளர்மதி.
சரவணன் வேற கால் பண்ணி சொன்னார்.
நீங்க அவர்கிட்ட பேசுங்க.
பேசிட்டேங்க.
“நாளை வந்துடறேன்”
மறுநாள் காலை 12 மணிக்கு மதிய ரெண்டு மணிக்கு எல்லாம் வந்துருங்கன்னு குறுஞ்செய்தியை அனுப்பினாள் வளர்மதி.
மீண்டும் சரவணன் கிட்ட இருந்து அழைப்பு.
சார்.
‘வணக்கம்’
நாளைக்கு திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்துருங்க சார் ,நான் உங்களை பிக்கப் பண்ணிட்டு அப்படியே நம்ம நெருப்பெரிச்சல் போலாம் சார் என்றான் சரவணன்.
சரவணன் நண்பகல் இரண்டு மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து கால் செய்தான்.
மலைச்சாமி சொன்னான் சார் பத்து நிமிஷத்துல வந்துடறேன்.
வெள்ளை கலர் சட்டை,சிவப்பு ஸ்கூட்டி, பஸ் உள்ளே போகும் வழியில் நிற்கிறேன் வந்துட்டு கூப்பிடுங்க பஸ்சை விட்டு இறங்கியதும் சரவணனுக்கு கால் செய்தான் மலைச்சாமி.
சார்..
வந்துட்டேன்.
சரவணன் கையை காண்பித்தார்.
இருவரும் நெருப்பெரிச்சல் நோக்கி சென்றனர்.
பத்திர ஆபீஸ் பக்கம் இருசக்கர வாகனங்களும், வரிசையாக நிற்க அதனை சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டர் தூரம் வரையில் ஜெராக்ஸ் கடைகள் அதிகமாக இருந்தது.
சரவணனும் ,மலைச்சாமியும் ஸ்கூட்டியை விட்டு கீழே இறங்கியதும், சரவணன் வளர்மதிக்கு கால் செய்தான்.
வந்துகிட்டே இருக்கேன் சார் என்றாள் வளர்மதி.
பத்து நிமிஷத்துல சரவணனுக்கு அழைப்பு வந்தது.
“ஹலோ” நான் சண்முகம் பேசுறேன்.
சொல்லுங்க சார்.
நாங்க பத்திர ஆபீஸ் பக்கம் இருக்கோம்
அப்படிங்களா!
அங்க இருந்து அப்படியே மலர்விழி ஜெராக்ஸ் கடைக்கு வந்துருங்கன்னு சொல்லி கட் செய்தார் சண்முகம்.
சற்று தள்ளி மலர்விழி ஜெராக்ஸ் கடை கடைக்குச் சென்றதும் பக்கத்தில் பெரிய கார் ஒன்னு நிறுத்தப்பட்டு இருந்தது.
காருக்குள்ள ஒரு பெண் உட்கார்ந்து இருந்தாள்.
சார்..
இவர்தான் சண்முகம். காருக்குள்ள இருக்கிறவங்க இவங்க மனைவின்னு அறிமுகப் படுத்தி வைத்தான் சரவணன்.
கடைக்குள்ள போயி உட்காருங்க சார் சரவணன் சொல்ல கடைக்குள்ளே போய் உட்கார்ந்தான் மலைச்சாமி.
அஞ்சு நிமிஷம் உடனே பத்திரத்தில் சைன் போடுங்க சார் என்றார் சண்முகம்.
மலைச்சாமியும் சைன் போட்டான்.
‘ஆதார் கார்டு’ வாங்கி ஜெராக்ஸ் எடுத்தார்கள் மலைசாமிடமிருந்து ,வளர்மதி இன்னும் வரவில்லை.
வளர்மதிக்கு சண்முகம் கால் செய்ய நேரா ஆபீசுக்கு வந்துடறேன்னு சொல்லி கட் செய்தாள்.
கடையிலிருந்து பத்திர ஆபீஸ் ஸ்கூட்டியில் சரவணன் பின்னால் அமர்ந்து சென்றான்.
ஸ்கூட்டியை விட்டு இறங்கியதும், வளர்மதி எங்கே இருக்காளோ என்று தேடித் தேடிப் பார்த்தான்.
ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை கலர் சட்டை போட்டு சேரில் உட்கார்ந்து இருந்தாள்.
இரண்டு வருடம் ஆச்சு.
அவளை விட்டு வந்து மலைச்சாமி.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
மலைச்சாமி வளர்மதியை பார்த்துக்கொண்டே வந்தான்.
முதல் மாடியில் தான் பத்திரப்பதிவு நடக்கும்.
வெளியே சிலர் கூட்டமாக உட்கார்ந்து இருந்தார்கள்.
வளர்மதி வெளியே நின்றுக்கொண்டு இருக்க வளர்மதிக்கு எதிர் பக்கம் நின்றுக் கொண்டு இருந்தான் மலைச்சாமி.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று கொண்டே இருந்தார்கள்.
சரவணனும், சண்முகமும் உள்ளே ஆபீஸ் பக்கத்தில் இருந்தார்கள்.
மலை சாமிக்கு வளர்மதியிடம் பேச வேண்டும் என மனசு தோன்ற, அவள் பக்கத்தில் போய் நின்றான்.
அவள் தள்ளித் தள்ளி சென்றாள்.
“பத்திரத்தை படித்து பார்த்தீர்களா” என்றான் மலைச்சாமி.
அவளிடம் பேச வேண்டும் எதைச் சொல்லி எப்படி பேசுவது என்று தெரியவில்லை இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டான்.
வளர்மதி கையை மட்டும் காட்டி இல்லைன்னு சைகை காட்டினாள்.
மீண்டும் வளர்மதி பக்கத்தில் போய் நின்றான்.
“சாரிங்க”
என் மேல தான் தப்பு நான் உங்களை விட்டு வந்து இருக்கக் கூடாது.
அதுதான் தப்பு பண்ணிட்டேன் .
‘மன்னிச்சிடுங்க சாரிங்கன்னு ‘சொன்னான் மலைச்சாமி.
வளர்மதி கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
அதனை மலைச்சாமியிடம் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
எல்லாத்தையும் விட்டு தான் உன் பின்னாடி வந்தேன். ஆனா நீ இப்படி பண்ணுவேன்னு நான் ஒருபோதும் நினைத்து கூட பார்க்கல உன் மேலே எவ்வளவு நம்பிக்கை வச்சுருந்தேன்.
அவளை அரியாமலே கண்ணீர் வந்தது.
உள்ள இருவரும் சென்றார்கள் .
புகைப்படம் எடுத்தார்கள். சைன் போட்டார்கள் பத்திரம் பதிவு செய்யப்பட்டது.
வளர்மதியை அழைத்துப் போக வெளியே ஒருவர் நரைத்த முடியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
மலைச்சாமி அவரை நன்றாக பார்த்தான்.
சரவணனிடம் மலைச்சாமி பேசிக்கொண்டு இருக்கும் போது தான் வளர்மதி சரிங்க… சார் நான் வரேன்னு சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
வளர்மதியே மலைச்சாமி பார்த்துக் கொண்டே இருந்தான்.
வளர்மதி ஸ்கூட்டி எடுக்கும் போது மலைச்சாமி முரைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.
மலைச்சாமி இவளை விட்டு ஏன் வந்தோம்னு நினைத்தபடி அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.
“சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு அவளை அடித்தோம் .இப்ப நம்ம வாழ்க்கை சந்தேகப்படுற மாதிரி ஆச்சு .சந்தேகம் ஒரு மனநோய் அது ஒருத்தருக்கு வந்துச்சுன்னா வாழ்க்கை அவ்வளவுதான் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையில வாழ்ந்து என்ன பிரயோஜனம்”
தன் பொண்டாட்டியை விட வளர்மதி எவ்வளவோ மேல் வளர்மதியை பற்றிய நினைவுகளை எண்ணியபடியே திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தான்.
-கோம்பை மா.மணிகண்டன்