New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 15
- Thread Author
- #1
நேரம் காலை 9:00 மணி....
கோகுலம் திருமண மஹால், கயத்தாறு...
மங்கள இசை முழங்க, கொத்து கொத்தாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய, அந்த திருமண மண்டபமே கொண்டாட்டமாக காட்சி அளித்தது...
மணமகன் அறையில் உற்சாகமாக கிளம்பி தன்னை அலங்கரித்து கொண்டிருந்தான் மோகன்... அவனுக்கு துணையாக நாலைந்து நண்பர்கள் பட்டாளமும் அங்கு இருந்தது, அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் கலாய்த்துக்கொண்டும், சிரித்துக் கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்,
" டேய் ராஜா "
" சொல்லு மாப்ள "
" லைட்டா பொண்ணு ரூம் வரைக்கும் போய்ட்டு வரியா டா? "
" பொண்ணு ரூம்க்கா? "
" ம்ம் ஆமா டா "
" அங்க இப்போ எதுக்கு டா போக சொல்லுற? "
" என் பொண்டாட்டி ரெடி ஆகிட்டாளான்னு பாக்க டா " உதட்டில் புன்னகை தவழ, முகத்தில் வெட்கத்தை பூசி கொண்டு சொன்னான் மோகன்.
" அடேய் அதான் இன்னும் கொஞ்சம் நேரத்தில பாக்க போற அவ பக்கத்துல உட்கார போற, அவ கழுத்தை உன் கை உரச தாலி கட்ட போற அப்புறம் ஏன் டா பறக்க? "
ராஜா சொல்ல சொல்ல வெட்கத்தில் இன்னும் பூரித்து போன மோகன்,
" டேய் ராஜா சூப்பரா சொன்ன டா இன்னொரு முறை சொல்லு டா " என்றான் அந்த பூரிப்பு மாறாமல்...
ராஜா அவனை புரியாத பார்வை பார்த்தான்,
" ராஜா இப்போ சொன்னியே அத சொல்லு டா சூப்பரா சொன்ன டா " என்று மீண்டும் மோகன் கேட்க, தலையில் அடித்து கொண்டான் ராஜா.
" அது எப்படி டா புது மாப்ள ஆகிட்டா இப்படி எதாவது பேசணுமா என்ன? எல்லா பயலும் இப்படி ஆகிடுறீங்க "
" டேய் ராஜா சொல்லு டா " சிணுங்கலாக மோகன் கேட்க,
" யப்பா டேய் இந்த கருமத்தை எல்லாம் சகிக்க முடியாது டா சாமி இரு நானே போய் பார்த்துட்டு வரேன் " என்று சொல்லி வெளியே கிளம்பினான் ராஜா.
எதிரில் இருந்த மணமகள் அறை வாசலுக்கு அந்த ராஜா எப்படி மணப்பெண்ணின் அறையை தட்டுவது என்று யோசித்தான்.....
பின்னர் யோசனை வந்தவனாக தனது அலைபேசியை எடுத்து உள்ளே இருக்கும் தனது மனைவிக்கு அழைப்பை சொடுக்கினான்...
" என்ன பா சொல்லுங்க "
" பொண்ணு ரெடி ஆகிட்டா மா "
" ம்ம் கிட்ட தட்ட ரெடி ஆகியாச்சு ஏன் பா கேக்கீங்க? "
" மாப்ளகாரன் அலும்பு தாங்கல மா பொண்ண பார்த்து பேசணுமாம் "
" அதான் இன்னும் கொஞ்சம் நேரத்தில பாக்க போறாங்களே அப்புறம் என்னவாம்? "
" சொல்லிட்டேன் மா எங்க கேக்கான், சரி பொண்ணு ரெடின்னு அவன் கிட்ட சொல்லிரவா மா வந்து பாக்க வர சொல்லட்டுமா? "
" கொஞ்சம் இருங்க பா பொண்ணு கிட்ட கேட்குறேன் "
" கேட்டா அந்த புள்ள வேண்டாம்ன்னு தான சொல்லும்... " என்று இழுவையாக கேட்க,
" ம்ம் ஆமா அப்படி தான் சொல்லும்.... " அவளும் இழுவையாகவே சொல்ல
" நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் மா நா அவனை வர சொல்லுறேன் நேர்ல பார்த்து அவங்க பேசிக்கட்டும் " என்று ராஜா சொல்ல அவன் மனைவியும் சரி என்று ஆமோதித்தாள்.
" டேய் மாப்ள உன் வருங்காலம் ரெடி ஆயிட்டாங்களாம் நீ போய் பாக்கலாம் "
" ஹையோ சூப்பர் டா ராஜா " என்று சொல்லி அவனை கட்டி புடித்து கன்னத்தில் எச்சில் செய்ய,
" அட ச்சீ கொய்யால " என்று அவனைத் தள்ளிவிட அவன் சிரித்துக் கொண்டே நின்றான்...
" ஏன் டா இப்படி படுத்துற இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவளை உன் மனைவி ஆக்கி அழகு பாக்க போற அதுக்குள்ள இப்போவே அவளை பாக்கணும்ன்னு ஏன் டா இப்படி அலையுற? "
" டேய் ராசா இன்னும் கொஞ்சம் நேரத்தில நீ சொன்ன மாதிரி அவ என் பொண்டாட்டி ஆகிடுவா அப்போ அவ என்னில் பாதி ஆகிடுவா அப்போ அவளை நா பார்த்து ரசிக்குற சுகம் வாழ்நாள் முழுக்க எனக்கு கிடைக்கும் ஆனா அவளை கன்னி பொண்ணா கடைசியா பாக்குற நாள் இது தான் இதுக்கு அப்புறம் அவளை இப்படி பாக்க முடியாது டா அதான் அவளை பார்த்து ரசிக்க போறேன்... " என்றவன் நீளமாக பேசி முடிக்க கையெடுத்து கும்பிட்டு அவனை வழி அனுப்பி வைத்தான் ராஜா, போதும் டா சாமி தெரியாம கேட்டுட்டேன் என்பதை போல் இருந்தது அவனது செய்கை.....
மோகன் அவனது எதிர்காலத்தை பார்க்க கிளம்ப ராஜா மற்ற நண்பர்களோடு ஐக்கியம் ஆனான்....
************************
பேருந்தின் ஜன்னல் வழியாக காலை கதிரவன் முகத்தில் அடிக்க அப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்தான் அந்த வாலிபன்...
நெடும் தூர பயண களைப்பு அவனது முகத்தில் அப்படமாக தெரிய, கொட்டாவி விட்டு கொண்டே உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்தான். அப்போது அருகில் அமர்ந்து இருந்த பெரியவர் மீது கை இடித்து விட, அடடா என்று பதறியவன் அந்த பெரியவர் அவனை திரும்பி பார்க்கும் முன்பே,
" அய்யா மன்னிச்சுக்கோங்க தூக்க கலக்கம் தெரியாம கை பட்டுட்டு " என்று முகத்தில் பதட்டத்தை காட்டி சொல்ல,
அவனின் முகத்தில் தெரிந்த நிஜமான பதட்டத்தை பார்க்கவும் அந்த பெரியவருக்கு கோபம் காணாமல் கரைந்து போனது,
" பரவா இல்ல தம்பி தெரியாம தான இடிச்ச "
" மன்னிச்சுக்கோங்க அய்யா "
" ரொம்ப தூர பயணமோ தம்பி? "
" ம்ம் ஆமாங்க அய்யா குஜராத்ல இருந்து வாரேன், ரெண்டு நாள் முழுக்க பயணம் இங்க என் பிரண்ட்க்கு கல்யாணம் அதான் போய்ட்டு இருக்கேன் " என்று அவன் சொல்ல,
" அப்படியா தம்பி "
" ம்ம் ஆமாம் அய்யா " என்றான் லேசான சிரிப்போடு.
" கல்யாணம் எங்க வச்சி தம்பி? "
" கோகுலம் மண்டபம், கயத்தாறு "
" அப்படியா தம்பி அப்ப கிட்டத்துல வந்துட்டீங்க இன்னொரு பத்து நிமிஷம் தான் கயத்தாறு டோல்கேட்ல இறங்கிடலாம்.
அங்க இறங்கி ஆட்டோ புடிச்சு போனீங்கன்னா மண்டபத்துக்கு ஒரு பத்து நிமிசத்துல கொண்டு போய் விட்டுடுவாங்க.. "
" ம்ம் தெரியும் அய்யா, ஆட்டோ பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என் பிரண்டு எனக்காக வந்து வெயிட் பண்ணிட்டு தான் இருப்பான். "
" அப்படியா தம்பி அப்ப வேலை இன்னும் சுலபமா முடிஞ்சு போச்சு..., சரி தம்பி நல்ல புள்ளையா இருக்கீங்க உங்களை சந்தித்ததுல ஐயாவுக்கு ரொம்ப சந்தோசம், உங்க ஸ்டாப் வந்துட்டு தம்பி " என்று அந்த பெரியவர் சொல்ல அவனும் சிரித்துக் கொண்டே அவருக்கு நன்றி சொல்லி கீழே இறங்கினான்.
அங்கு அவனது நண்பன் அப்போது வரை வராமல் இருக்க அவனுக்கு அழைப்பை சொடுக்கினான்... மறுமுனையில் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்த ராஜா,
" டேய் டீ குடிகாரா பக்கத்துல இருக்குற நம்ம சாய் டீ கடைக்கு வா டா "
" சூப்பர் டா இதோ வரேன்... "
இருவரும் டீயை குடித்து முடித்தார்கள் மணியை பார்க்க அது 9:20 ஆகியிருந்தது...
" டேய் ராஜா டைம் ஆகிட்டு டா சீக்கிரம் வா போவோம் "
" போவோம் டா மணி 9:20 தான ஆகுது 9:30 லிருந்து 10:30 குள்ள தான டா "
" டேய் நானும் போய் குளிச்சிட்டு கிளம்பி வரணும்ல இப்படியே வந்தா கல்யாணத்துல நிக்க முடியும் "
" ஓ.... ஆமா இல்ல குளிக்க வேற செய்யணும் இல்ல நான் அதை மறந்து போயிட்டன் பாரு, சரி வா போவோம் "
பைக்கை ஸ்டார்ட் செய்ய அது நேராக மண்டபத்தின் சிறிய நுழைவு வாயிலின் வழியாக உள் நுழைந்து நின்றது...
தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் நுழைந்து குளித்து முடித்துவிட்டு பளபளக்கும் வெள்ளை சட்டை, கருப்பு பான்ட் அணிந்து தோரணையாக வெளிய வர,
" டேய் செம்ம தோரணையா இருக்க டா, சட்டையை மாத்திக்குவோமா? " என்று ராஜா கேட்க
" நீ இன்னும் திருந்தவே இல்லையா டா "
" ரைட்டு விடு வா போவோம் முகூர்த்த நேரம் நெருங்கிட்டு, மோகன் வேற மேடையில நின்னு நம்மள தேடிட்டு இருப்பான் " என்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு சென்ற ராஜா அவனை அழைத்து கொண்டு மனமேடைக்கு வந்து இருந்தான்...
அய்யர் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருக்க அது தனக்கு முழுமையாக வரவிட்டாலும் அதை விடாமல் ஏதோ தனக்கு தெரிந்த வகையில் சொல்லிக் கொண்டிருந்தான் மோகன்.
அதனை பார்த்து நண்பர்கள் கலாய்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள் அப்போது மந்திரத்தை முடித்து இருந்த அய்யர் பெண்ணை அழைத்து வரச் சொல்ல, மணப்பெண்ணை பெண்கள் கூட்டம் அழைத்து வந்தது,
தீநிற பட்டு உடுத்தி, அந்த மஞ்சள் நிறத்தழகி மணப்பெண் அலங்காரத்தில் மங்களமாக நடந்து வர, மனவிழாவுக்கு வந்த கூட்டத்தின் பார்வை மொத்தமும் மங்கையின் மீது விழுந்தது... மந்திர புன்னகையோடு மனமேடை ஏறியவள் கண்ணில் விழுந்தான் அந்த வெள்ளை சட்டை வாலிபன். அவனை கண்டதும் சொல்ல முடியாத உணர்வில் சிக்கியவள்,
அவனை பார்த்து வீரா....... என்று கத்தி கொண்டே அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்....
அதுவரைக்கும் நண்பர்களோடு பேசி விளையாடி கொண்டிருந்த வீரா அவளை காணவும் அஞ்சலி என்று தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டான்.....
வீராவும் அஞ்சலியும் பரஸ்பரம் கலந்து இருக்க அங்கு இருந்த மக்கள் கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது.....
மோகன் அப்படியே அதிர்ந்து போய் நிற்க்க, ராஜாவும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றான்....
மனம் கொடுத்த மன்னவன் வருவான்....