• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
17

இரவோடு இரவாக வீடு வந்தவன் பால் மட்டும் போதுமென்று தாயிடம் கேட்டு வாங்கி குடித்துப் படுக்க, ஏனோ இன்று பார்த்த மனிதர்கள் அனைவரும் அவனுள் உலா வந்தார்கள். வெண்மதி! அவளைக் கண்டதும் முதலில் அதிர்வுதான். அதற்கான விளக்கம் கேட்கவோ, கொடுக்கவோ வேண்டிய சூழல் இல்லாமல் போக, பேச வேண்டியதைப் பேசி வந்துவிட்டான்.

‘கருங்குரங்கை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா சார்?’ நினைத்ததுமே சட்டென சிரிப்பு வந்தது. ‘சித்தார்த் கருப்புதான் அதுக்காக அவன் மேலுள்ள கடுப்பில் அவள் சொன்ன கருங்குரங்கு, அதை அந்த சித்தார்த் கேட்டபொழுது, அவன் முகம் அப்படித்தான் இருந்திருக்குமோ! ஹா...ஹா கேஸ் செம இன்ட்ரெஸ்டிங்கா போகும்போல.’

ஏனோ நட்சத்திராவின் நினைவு வர, கைபேசியை எடுத்து மெசேஜ் அனுப்ப நேரம் பார்க்க பனிரெண்டு முப்பதைத் தொட்டிருந்தது. வாட்சப்பில் அவள் போட்டோ தேடிப்பார்க்க வெள்ளை நிற புசுபுசு பூனைக்குட்டிகள் இரண்டு கொஞ்சிக் கொண்டிருந்தது.

“ஹ்ம்.. நேர்லயே பர்தா போட்டு சுத்துறவ வாட்சப்ல போட்டோ வைப்பாளான்னு யோசிக்கவேண்டாம். இந்த மின்னல்கிட்ட போட்டோ சுட்டுருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். என்ன செய்யலாம்?” என யோசித்தவன் எஸ்எம்எஸ்ஸில் ‘ஹாய்’ அனுப்ப பதிலில்லை. சில நிமிடங்கள் கழித்து போட்டோ ப்ளீஸ் என்றனுப்பினான்.

அடுத்த பத்து வினாடிக்குள் பத்து கத்தி எமோஜி வந்து, ‘உன்னை வெட்டுறேன் பார்’ என்றது.

‘ஐயோ!’ எமோஜியை பதிலுக்கு அனுப்பி சிரித்திருப்பாளோ! நினைத்தபடி ‘தேங்க்ஸ்’ என்றனுப்பினான்.

‘தூங்குங்க சந்துரு’ என்று வர,

‘குட் நைட்’ என்றனுப்பி புன்னகையுடன் படுத்தவன் அடுத்த சில நிமிடங்களில் உறங்கினான்.

தன்னைத்தானே தலையில் கொட்டிக் கொண்டிருந்தாள் நட்சத்திரா. ‘அவங்க மெசேஜ் பண்ணினா உடனே ரிப்ளை பண்ணணும்னு இருக்கா என்ன. அவங்களை அவாய்ட் பண்ணு சொன்னா கேட்கறியா?’ என்று மனம் அதட்டியது. ‘ஆனாலும், ஏன் எனக்கு மெசேஜ்? அதுவும் இந்த நேரம். அவங்க காதலி நானில்லையே’ என்பதில் குழம்பித்தான் போனாள்.

‘என்மேல் சிம்பதியா? அது வரக்கூடாதே. அப்படி வர்ற உறவு நமக்கு சரிவராதே’ என்று தன் யோசனைக்கு தீனி போடக் காரணம் தேடிக்கொண்டிருந்தாள்.

மறுநாள் காலை தாயின் பின்னேயும், பாட்டியின் பின்னேயும் மாற்றி மாற்றி சுத்திய பேரனிடம், “அது என்ன அரி, இப்பதான் தவழுற குழந்தை மாதிரி எங்க பின்னாடியே அலையுற?” என்றார் பாக்கியவதி.

“என்னடா எதாவது தெரியணுமா? என்னன்னு சொன்னால்தான தெரியும்” என்றார் சகுந்தலா.

“அம்மா உங்க பையனுக்குக் கல்யாணக்களை வந்திருச்சி. அதான் பொண்ணு பார்க்கச் சொல்லத் தயங்கிகிட்டு நிற்கிறான்” என்று அண்ணனவனை மாட்டிவிட, மகளை முறைத்த மகனிடம், “அவ கிடக்கிறா குட்டி நாய். நீ சொல்லு என்ன விஷயம்?”

“அ...அது...”

“அப்ப அதேதான்” என்றார் பாட்டி.

“க்ரேன்மா வந்தேன் நீ காலி” என மிரட்டி, “முந்தா நாள் பொண்ணு பார்க்கப் போறேன் சொன்னீங்களே அது என்னாச்சி?” மனதில் நினைத்ததைப் பட்டென்று கேட்டுவிட்டான்.

“அதெல்லாம் வேண்டாம்னு விட்டாச்சிடா. நீ வேற வேண்டா வெறுப்பா என்னவோ செய்யுங்க சொன்னியா. கோவத்தோட உன்கிட்ட சவால் விட்டாலும் நிதானமா யோசிச்சப்ப, உன்னோட இஷ்டம் இல்லாம செய்யக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். அதனால வேற பொண்ண பார்க்கலாம்னு அப்பா சொல்லிட்டாங்க” என்று அலட்டாது சொன்னார்.

“அம்மா! நான் எப்பம்மா அப்படிச் சொன்னேன்?” என்றான் அழுது விடுபவன்போல்.

“போடா போய் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பு.”

“ம்மா... இப்ப சாப்பாடா முக்கியம்?” என்றான் சூடாக.

அதை கூல் செய்ய மின்னல் போட்டாள் அந்தப் பாடலை.

நதியே அடி நைல் நதியே


நனைந்தேன் உன் அழகினிலே

உன் சிரிப்பைச் சேர்த்துச் சேர்த்து

மலர் காட்சி ஒன்று வைத்தேன்

உன் வெட்கம் பார்த்துப் பார்த்து

நானும் செர்ரி தோட்டம் போட்டேன்

“னானனானானனனனா னானனானானனா” என வாய் இசையை வெளியிட, தங்கையின் செய்கையில் பல்லைக் கடித்தபடி அவள் தலையில் ஒன்று போட்டு அலுவலகம் கிளம்பினான்.

மாமியாரும் மருமகளும் மின்னல்கொடியைத் திட்ட, மகளுக்கு ஆதரவாய் வந்து நின்றார் ரவிச்சந்திரன்.

“முன்னல்லாம் கோவில்லயும், விசேஷ வீடுகள்லயும்தான் கூட்டம் அதிகமிருக்கும். இப்ப ஷாப்பிங் மால், துணிக்கடை, நகைக்கடைன்னு கூட்டம் குறையாம இருக்கு. நகை இன்னும் பத்து மடங்கு விலை ஏறினாலும் கூட்டம் குறையுற மாதிரியில்ல.” யசோதா மகளிடம் அங்கலாய்த்தபடி வந்தார்.

“இப்ப எதுக்கும்மா ஷாப்பிங் பண்றோம்?” என்று நட்சத்திரா கேட்க,

“உனக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். அதுக்கான ஷாப்பிங்தான் இது.”

“ம்மா... விளையாடாம என்னன்னு சொல்லுங்க?”

“நான் ஏன்டி விளையாடப் போறேன். எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணத்தான போறோம். சும்மாவே அனுப்பிட முடியுமா?”

“என்னவோ இப்பவே கல்யாணம் பண்ற மாதிரி பேசுறீங்க. ஏதோ முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கு.” யோசனையாய் தாயைப் பார்க்க,

“அப்படித்தான் வச்சிக்கோ. அந்தக் கொடி அண்ணன் உன்னை வேண்டாம் சொன்னான்ல. அவனுக்கு சித்திரை முதல் வாரத்துல கல்யாணமாம். அவன் கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடியாவது உன் கல்யாணத்தை முடிக்க வேண்டாமா?”

“ச...சந்துருவுக்கு கல்யாணமா? எப்ப? கொடி என்கிட்ட எதுவும் சொல்லலையேம்மா?” என்றாள் என்னவென்று பிரிக்க முடியா உணர்வுடன்.

“அவனுக்குக் கல்யாணம்னு உன்கிட்ட சொல்றதுக்குக் குற்றவுணர்ச்சி தடுத்திருக்கும்.”

“அம்மா! ஏன் அவன் இவன்னு சொல்றீங்க. கொஞ்சம் மரியாதையா பேசலாம்ல?” தாய் அரிச்சந்திரனை மரியாதையில்லாமல் பேசுவதைப் பொறுக்காது கேட்டுவிட்டாள்.

யசோதா மகளை ஒரு பார்வை பார்க்க, அவரின் பார்வை தாளாது அவளோ வேறுபுறம் திரும்ப, “அரிச்சந்திரன் என்னோட இளையவன்தான? மாப்பிள்ளையா வந்திருந்தா அதுக்கான மரியாதையை கொடுக்கலாம். இப்ப யாரோ ஒரு மூணாவது மனுஷன்தான். இந்த மரியாதை போதும்” என்றார் யசோதா.

“ம்மா... அதுக்காக...”

“அதுக்காகத்தான் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் சொல்றேன்.”

“ப்ச்... அதை விடுங்கம்மா. கொடி அண்ணன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு யாரு?”

“நதீரா!” என்றார்.

“நதீராவா? அ...அம்மா அ...அது அவர் லவ் பண்ணின பெண்தானே. வேற இடத்தில் கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டதா சந்துரு சொன்னாங்க.” தன்னையும் அறியாத ஒருவித கலக்கம் அவளுள் எழ குரலும் கலங்கியது.

‘சந்துரு! என்று அரிச்சந்திரன் பெயரை வெகு உரிமையாய் வெகு சாதாரணமாய் அழைக்கும் தன் பெண்ணை எப்படி சஞ்சித்திற்கு பேசினோம்’ என்று தன்னையே நொந்து கொண்டார். ‘தான் அவசரப்படாமல் இருந்திருந்தால் எல்லாம் சரியாகவே நடந்திருக்குமோ! இப்பொழுது எல்லாம் மாறி...’ எதையும் யோசிக்காதே மனமே! நடந்தவை நடந்தவையாகவே போகட்டும். நடக்கப்போவதை கவனி என்றது மனது.

“அந்தக் கல்யாணம் நடக்கலையாம். அதனால, இப்ப கொடி அண்ணனுக்கே பேசி முடிச்சிட்டாங்க” என்றார் மகளிடம்.

“அந்தப் பொண்ணு முஸ்லீமாச்சேம்மா. எப்படி சம்மதிச்சாங்க?”

“நல்ல வரன் வந்தா ஜாதியாவது, மதமாவது. பையன் நல்லவன்னு தெரிஞ்சிருச்சி. அப்புறம் அவனை விட கசக்குமா என்ன? ஏன் பொண்ணுக்காக பையன் மதம் மாறமாட்டானா?”

‘அவளுக்கும் இன்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் போல!’ அர்ஸ் சொன்னது நினைவில் வர ‘ஓ..’ என்ற வார்த்தை மட்டும் வடிவில்லாமல் ஒலித்து “எப்ப கல்யாணம்?” என கேட்க வைத்தது.

“இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அவங்க வீட்டு கல்யாணத்துக்கும் சேர்த்து நல்லதா இரண்டு சேலை எடுத்துக்கோ நதிமா.”

“அவங்க கல்யாணத்துக்கு எனக்கெதுக்குமா சேலை?”

“கொடி உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். அவள் அண்ணன் கல்யாணத்துக்கு நீ போக வேண்டாமா?”

“நான் வரலம்மா” என்றாள் வேகமாக.

“நதி! அவங்ககிட்ட சம்பந்தம் வச்சிக்க பேசினோம், வேண்டாம் சொல்லிட்டாங்க. உன்னைப் பிடிக்காம சொல்லலையே! வேறொரு பெண்ணைப் பிடிச்சதாலதான அப்படி சொன்னாங்க. அதனால, மறப்போம் மன்னிப்போம். உன்னைக் கூட்டிட்டு வர்றதா சொல்லிட்டேன். வா ஜவுளிக்கடை போகலாம்.”

“ம்மா... நான் வரல” என்றாள் பலகீனமான குரலில்.

“நதிமா எதையும் பாசிட்டிவா எடுத்துக்கணும். நீ ஏன் கொடி அண்ணனை உனக்குப் பேசின பையனா பார்க்கிற. ஃப்ரண்டோட அண்ணனா மட்டும் பாரு. பிரச்சனையே இல்லாமல் போயிரும்.”

‘ம்...’ என தலையசைத்தவள் அதன்பின் தாய் சொன்ன எல்லாவற்றிற்கும் தலையாட்டி அச்சுபிசகாமல் அக்கம் பக்கம் பார்க்காமல் செய்து முடித்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
“பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்ற மெசேஜ் காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து உறங்கிக் கொண்டிருந்த நட்சத்திராவை எழுப்பியது.

சோம்பலாய் எழுந்தவள் கண்ணைக் கசக்கி அதைப் பார்க்க, அவளின் சந்துருவிடமிருந்து வந்த மெசேஜ் என்பதால், ஏனோ அந்த நாளே சிறப்பாக ஆரம்பித்தது போலிருந்தது. பதிலுக்கு தானும் நன்றியை அனுப்பி, புன்னகையுடன் வெளியே வர, அப்பா, அம்மா அவளுக்கு வாழ்த்துச் சொல்ல, அந்த நாள் அவளுக்கு இன்னும் சிறப்பாக ஆரம்பித்தது.

“கோவில்ல பூஜைக்குக் கொடுத்திருக்கு நதி. சீக்கிரம் கிளம்பி வா போகலாம்.” தாயின் வார்த்தை மீற முடியாது கோவில் சென்றாள்.

நட்சத்திரா குடும்பம் கோவில் செல்கையில், சஞ்சயும், ஆர்த்தியும் உடன் வர அவர்களுக்கு முன் அரிச்சந்திரன் குடும்பம் அங்கிருந்தது.

இரு குடும்பமும் பரஸ்பர அறிமுகப் புன்னகை செலுத்தி, பிள்ளைகள் அறியாமல் பூஜை வேலைகளை ஒன்றாக செய்தனர்.

“ஹேய் நீ மின்னல்தானே? இன்னைக்கு உன் தோழி பிறந்தநாள் வேற. கொஞ்சம் கோடை மழையை வரவச்சிடு ப்ளீஸ்... ப்ளீஸ்” என்று ஆர்த்தி மின்னலைக் கடுப்படித்துக் கொண்டிருந்தாள்.

“ஆமாமா அப்படியே ஆட்டுக்குட்டி, சாரி ஆர்த்திக்குட்டி கத்தினாலும் மழை வரும்னு சொன்னாங்க. வாங்களேன் சேர்ந்தே வரவைப்போம்” என பதிலுக்கு அவள் கால்வார,

“நான் உனக்கு ஆட்டுக்குட்டியா?” முறைத்தபடி நின்றவளைக் கண்டு சிரிப்பையடக்கி, “ஹையோ! நான் எப்ப அப்படிச் சொன்னேன். அண்ணன் மனைவியை அப்படிச் சொல்லலாமா? அபச்சாரம் அபச்சாரம்! கன்னத்துல போட்டுக்கோங்கோ மன்னி. இல்லேனா கடவுள் கோச்சுப்பார்.” என்றாள் சிரிக்காமல்.

“என்னங்க இவளைப் பாருங்க” என்று கணவனை துணைக்கழைக்க,

“சும்மா இருந்த பொண்ணை நீதான் வம்பிழுத்த. இப்ப பாருங்கன்னா நான் என்ன செய்றது?” அழகாக எஸ்கேப்பானான் சஞ்சய்.

“சஞ்சய் அத்தான், அத்தை, மாமா வரலையா?” என்று நட்சத்திரா கேட்க,

“அவங்களுக்கு கோவில் வர்றளவுக்கு மனப்பக்குவம் வரலைமா. நல்லா இருந்த சஞ்சித்தை கடவுள் நினைச்சிருந்தா காப்பாத்தியிருக்கலாம்னு கோவம். விதி முடிஞ்சா போய்த்தான் ஆகணும்னு தெரிஞ்சிருந்தாலும் மனசு கேட்கல. பெத்தவங்க இல்லையா? நார்மலுக்கு வர கொஞ்சம் டைம் எடுக்கும். அப்புறம் நதிமா உனக்கு எப்பக் கல்யாணம்?” என்றான்.

சட்டென்று அவள் பார்வை அரிச்சந்திரனிடம் செல்ல, அவனோ அவளின் அப்பா, அம்மாவை நலம் விசாரித்துக் கொண்டிருந்தான். ‘விரும்பிய பெண்! நிறைவேற்றிய குடும்பம்! அவனின் மகிழ்ச்சிக்கென்ன குறை! என்னைக்குமே இதே சந்தோஷத்தோட இருங்க சந்துரு.’ மனதார சொல்லியவள், ‘ஏன் பெண் வீட்டிலிருந்து யாரும் வரலை?’ தோன்றிய நொடி தன் தலையிலேயே அடித்து அவங்க வேற மதம் என்பதை மறந்துட்டியா நதி.

தன்னைத்தானே திட்டிக்கொண்டவள் தனியாக அமர்ந்திருந்த மின்னலின் அருகில் வந்தமர்ந்து, “ஏய் மயிலு உன் அண்ணி போட்டோ எனக்குக் காட்டவேயில்ல. எங்கே காண்பி” எனக்கேட்டு அவள் சுதாரிப்பதற்குள் போனை வாங்க,

“ஏய்! நட்டு வேண்டாம் போனைக் கொடு.” என்றாள்.

“இருடி நான் பார்த்துட்டு தர்றேன்.”

“ஏய்! அதுல அவங்க இல்லடி. நானே இன்னும் பார்த்ததில்லை.”

“ஏய் நடிக்காத. அதெப்படி அண்ணன் கட்டிக்கப்போற பொண்ணை இப்பவரை பார்க்காம இருப்ப? இன்னும் ஐந்து நாள்ல கல்யாணம். நீ பார்க்கலை சொன்னா நான் நம்பணுமா?”

“ஹேய் இது சீக்ரெட் கல்யாணம். என் அண்ணனுக்கு கல்யாணம்னு அவனுக்கேத் தெரியாது. அதுவும் அவனுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்திருக்கிறது தெரியவே தெரியாது. ஏன் அந்தப் பொண்ணுக்குமே இது எதுவும் தெரியாது. அண்ணன்கிட்டயே அண்ணி போட்டோ கிடையாதுன்றப்ப என்கிட்ட எப்படி இருக்கும்?”

“என்ன உளர்ற கொடி? அதெப்படி...” என்றாள் புரியாது.

“கல்யாணத்தன்னைக்கு இரண்டு பேருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கப் போறோம்.”

“லூசா நீ. எங்க வீட்டுக்குப் பத்திரிக்கை வந்ததா அம்மா சொன்னாங்க. அப்ப எல்லாருக்கும் போயிருக்கும்தான? ஏன் அவங்க கூட ஒர்க் பண்றவங்களைக் கூப்பிடமாட்டீங்களா? உன்னை விடு. உங்க அப்பா சுப்ரீம் கோர்ட் லாயர். அவர் எப்படி உன் அண்ணனுக்குத் தெரியாமல் பத்திரிக்கை கொடுத்து நடத்த முடியும்? யாராவது ஒருத்தர் சொல்லிரமாட்டாங்களா? ரெஜிஸ்டர் மேரேஜ்னா யாருக்கும் தெரியாது சொல்லலாம். ஊரைக்கூட்டி பத்திரிக்கை அடிச்சி பையனுக்கும், பொண்ணுக்கும் தெரியாது சொன்னா பச்சைக் குழந்தை கூட நம்பாது.”

‘ஹ்க்கும் உனக்கு மட்டும் தெரிஞ்சிருச்சாக்கும். போவியா!’ மின்னலின் மனம் தோழியை அர்ச்சிக்க, அவர்களின் திருமணத்திற்குப் பேசியது நினைவு வந்தது.

சஞ்சித் அனைத்துக்கும் காரணமானவன். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதைப்போல் சாகும் முன்னே அனைத்தையும் நல்லவிதமாக முடித்துச் சென்றவன்.

அன்று நட்சத்திராவின் மெசேஜ் பார்த்ததும் உணர்ந்த ஒரே விஷயம், அவளால் ஒரு நிமிடம் கூட தன்னுடன் வாழ முடியாது என்பதே! நேரே வீட்டிற்குச் சென்று திருமணத்தை நிறுத்தச் சொல்லிவிட்டான். அப்பா அம்மாவின் எந்தவிதமான எதிர் வாதங்களும் அவன் கேட்கவில்லை. தன் மாமனிடமும் அதையேதான் சொல்லி பத்திரிக்கை வைப்பதை நிறுத்தினான்.

நேரே ரவிச்சந்திரனிடம்தான் வந்தான். பெயர் மாற்றத்தில் இருந்து அனைத்தையும் அவரிடம் சொல்ல, அதையே மகளும் சொல்லவும் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவர், மகனின் தீவிரத்தை உணர்ந்தவர் ஆகையால் வீட்டினரிடம் பேசினார். நந்தகுமாரையும் தனியாக சந்தித்து பேசியவர், பின் இரு குடும்பங்களும் அரிச்சந்திரன் நட்சத்திராவிற்குத் தெரியாமல் அவர்கள் திருமணத்தைப் பேசி முடித்தார்கள்.

சஞ்சத்திற்கும், நட்சத்திராவிற்கும் குறித்திருந்த அதே தேதியில் பதிவுத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததோடு இல்லாமல், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நல்ல நாள் இல்லையாதலால், சித்திரையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார் ரவிச்சந்திரன்.

அவர் மனசு வைக்காமல், நான் பெரியவன் என்ற ஈகோ உள்ள ஆளாக இருந்திருந்தால் சஞ்சித்தால் அவரிடம் பேசியிருக்க முடியாது. பேசியிருக்க என்ன அவரை நெருங்கியிருக்கக் கூட முடியாது. மகனுக்கு பிடித்திருந்த பெண்ணென்ற போதும், அவர் விருப்பப்படி தாங்கள் பார்த்தப் பெண்ணாயிருக்க தடையில்லாமல் போனது பெரியவர்களுக்கு.

சஞ்சித்தின் மரணம் யாருமே எதிர்பாராதது. அதனால் பதிவுத் திருமணத்தையும் நிறுத்திவிட்டார்கள். அதன்பின் திருமணப் பேச்சை எடுக்க யோசனை. இரு குடும்பத்து ஆண்களும் தயக்கத்திலேயே நாள்களை ஓட்டியிருக்க, மின்னல் பெண் இடையிட்டு இதோ திருமணத்தில் வந்து நிற்கிறது.

“அண்ணனுக்கு தீவிரமா பொண்ணு பார்த்திட்டிருக்கிறதா சொல்லியிருக்கோம். அதுக்காக அப்பாவும், அம்மாவும் அலையுறதா நினைச்சிட்டிருக்கான். இப்பவரை சந்தேகம் வரலை. இனிமேல் வந்தா சர்ப்ரைஸ் அண்ணிக்கானதா மட்டும் இருந்துட்டு போகட்டும்” என்றாள் சாதாரணமாக.

“பார்த்துடி சர்ப்ரைஸ்னு பல்ப் வாங்கிடப் போறீங்க.”

“உனக்குக் கஷ்டமாயில்லையா நதி?”

“அவங்களுக்குப் பிடிச்ச, அவங்க விரும்பின பொண்ணு கிடைச்சதுல சந்தோஷம்தான் கொடி. வருத்தம் இல்லாம எப்படி இருக்கும். விழுந்து விழுந்து லவ் பண்ணியிருக்கேனே” என்றவளுக்கு உள்ளும் எதிரிலும் அவன் முகமே! கண்கள் அவனையே பார்த்திருக்க, “நதி” என்ற மின்னலின் அழைப்பில் நிதர்சனம் உணர்ந்து, “இப்ப சஞ்சித் அத்தான் இருந்திருந்தா யோசிச்சிப் பாரு?”

‘அவர் இருந்திருந்தாலும் நீதான்டி எனக்கு அண்ணியா வந்திருப்ப.’ வார்த்தைகளை வெளியே சொல்லவில்லை மின்னல்.

“எனக்குக் கல்யாணம் ஆகலாம். உன் அண்ணனுக்கு ஆனா கஷ்டப்படணுமா? எனக்கு எந்தவிதமான நெகடிவ் ஃபீலும் கிடையாது கொடி.”

“அப்ப மாப்பிள்ளை பார்த்தா சம்மதம் சொல்லிருவ?” என்றதும் அமைதி மட்டுமே நட்சத்திராவிடம். “சொல்லு நதி? வீட்ல பார்த்தா சம்மதம் சொல்லிருவியா?”

“சந்தேகம்தான் கொடி” என்றதில் அவள் பின்னே இருந்த சகுந்தலா அதிர்ந்து, பதற்றம் குறைய கணவரின் கைபிடித்து, “என்னங்க இந்தப் பொண்ணு இப்படி சொல்றா?” என்றார் தவிப்புடன்.

“உன் மகன் செலக்ஷனாச்சே. இந்தக் காலத்துல இப்படி ஒரு காதல் ஜோடி பார்க்க முடியாது சகு. இத்தனை வருட வக்கீல் வாழ்க்கையில் எத்தனை வழக்கு பார்த்திருக்கேன். இந்தளவு தீவிரமா, மனசுக்கு நெருக்கமா, இப்படி ஒருசில ஜோடிதான் பார்த்திருக்கேன். அதுல என் பையனும் மருமகளும் இருக்காங்கன்னு நினைக்கும்போது சந்தோஷம்தான். வெளில காதல்னு பேர் சொல்லிட்டு, கட்டிப்பிடிக்கிறது, முத்தம் கொடுக்கிறதுன்னு காமத்தை மட்டுமே கொண்டாடுதுங்க. நிஜ காதல்லாம் செத்துப்போச்சின்னு நினைச்சேன். இல்லைன்னு நம்ம பையனும் மருமகளும் நிரூபிக்கிறாங்க. அவங்க பேசுறதை மட்டும் கேளு” என்றார் மனைவிக்கு மட்டும் கேட்கும்படி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top