Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
பகுதி 6
துர்வாவின் அறையில், ரோஜாவின் அரவணைப்பில் குழந்தை திக்ஷிதா கட்டிலில் நிம்மதியாக உறங்குவதைப் பார்த்து துர்வாவின் தாத்தா நிம்மதி அடைந்தார்.
"ஏன்மா ரோஜா? நீ இவ்வளவு நேரம் இங்கேயே இருந்துட்டியே. உன்னை உன் வீட்ல திட்ட மாட்டாங்களா?" என்று துர்வாவின் தாத்தா நாசுக்காக ரோஜாவின் நிலையை அறிந்து கொள்ள, தன் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்டார்.
"என்னை திட்ட இந்த ஊருல யாரும் இல்ல தாத்தா" என்று ரோஜா குழந்தையின் உறக்கம் கலைந்து விடாமல் பொறுமையாக பதில் சொன்னாள்.
ஒரு தட்டில் நான்கு கோப்பையுடன் துர்வா, ”எக்ஸ்கியூஸ்மி”என்று கேட்டப்படி உள்ளே நுழைந்தவன், ரோஜாவின் முன் தட்டை நீட்டினான்.
"வேணா துர்கா. நான் வீட்டுக்கு போய் குடிச்சிக்கிறேன். நீங்க சாப்பிடுங்க" என்று ரோஜா அந்த கோப்பையை வாங்க மறுத்தாள்.
"ரோஸ் இது காபி தான். உனக்கு பிடிக்கும் தானே எடுத்துக்கோ" என்று துர்வா சொன்னதும், அதற்கு மேல் அவன் உபசரிப்பை தவிர்க்க முடியாத நிலையில் துர்வா தந்த காபியை கையில் எடுத்து, "நன்றி துர்கா " என்றாள்.
"திக்ஷி எழுந்ததும் பால் கொடுக்கலாம். தாத்தா நீங்க டீ எடுத்துக்கோங்க" என்று சொன்ன துர்வா தானும் ஒரு கோப்பையில் உள்ள காபியை அருந்தியப்படி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
"நேத்தே கேக்கணும்ன்னு நினைச்சேன். நீ இங்க எந்த ஏரியால இருக்க? உன் கணவர் என்ன வேலை பாக்குறாரு? உனக்கு எத்தனை பசங்க?” என்று துர்வாவின் தாத்தா தன் கேள்விகளை அடுக்க தொடங்கினார்.
கையில் இருந்த கோப்பையை மேசை மேல் வைத்த ரோஜா, எந்த கேள்விக்கும் பதில் தராமல் அமைதியாக இருந்ததை பார்த்து, துர்வா வராத அழைப்பிற்கு பதில் தருவது போல தன் கைபேசியுடன் அறையை விட்டு வெளியே சென்றான்.
துர்வாவின் இந்த செயலை மதித்த ரோஜா.... துர்வாவின் தாத்தாவை பார்த்தவள், "எனக்கு சமீபத்துல தான் விவாகரத்து ஆச்சு தாத்தா. பிள்ளைங்க எல்லாம் இல்ல. அந்த ஊருல இருந்தா புகுந்த வீட்டு ஆளுங்களை அடிக்கடி பாக்க நேரிடும். அது மீண்டும் ரெண்டு தரப்பிலும் தர்மசங்கடத்தை தான் உருவாக்கும். அதான் என் தோழனின் சகோதரி வீட்டுல நான் வாடகைக்கு தங்கி இருக்கேன். வேலை தேட தான் சில ஆவணங்களை நகல் எடுக்க கடை தெருவுக்கு வந்தேன். அப்போ நடந்த விபத்துல தான் இதோ இப்போ உங்க எதிர்ல உங்க பேத்தி பக்கத்துல உக்காந்து இருக்கேன்" என்று துர்வாவின் தாத்தாவிடம் தன் தற்போதைய நிலையை தெளிவாக எடுத்துரைத்தாள் ரோஜா.
"எல்லாம் நன்மைக்குன்னு நினைப்போம் ரோஜா. நீ இங்கேயே இரு இதோ நான் இப்போ வரேன்" என்று சொன்ன துர்வாவின் தாத்தா நடையில் வேகத்தை கூட்டி அந்த அறையில் இருந்து தன் அறைக்குள் நுழைந்தவர் கையில் ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து கொண்டு மீண்டும் துர்வாவின் அறைக்குள் நுழைந்தவர், அந்தக் கார்டை ரோஜாவின் முகத்திற்கு முன்பு நீட்டினார்.
"என்ன தாத்தா இது?" என்று கட்டிலில் குழந்தை அருகில் இருந்து எழுந்த ரோஜாவின் கேள்விக்கு,
"இது நம்ம லைப்ரரி முகவரி தான்மா. அங்க நம்பிக்கையான ஒரு ஆள் வேலைக்கு வேணும். இது சேர்ந்தே ஆகணும் இல்ல. உனக்கு விருப்பம்னா நீ இங்கேயே வேலைக்கு சேர்ந்துக்கலாம். உனக்கு புத்தகம் தான் முதல் நண்பன் என்று துர்வா சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்" என்று தாத்தா சொன்னதும், முகம் மலர்ந்த ரோஜா,
"இந்த சூழ்நிலையில நான் இந்த வேலையை எதிர்பார்க்கவே இல்ல தாத்தா. கண்டிப்பா நான் உங்க நூலகத்துல வேலைக்கு வரேன்" என்று சொன்ன ரோஜா அந்த விசிட்டிங் கார்டை தன் கைப்பையில் வைத்து கொண்டவள், தன் முந்தானை குழந்தை திக்ஷிதாவின் விரல்களின் நடுவில் இருந்ததை கவனிக்காமல் கட்டிலில் இருந்து எழ முயன்றவளின் செயலை உணர்ந்து குழந்தை கண்கள் விழித்து, "அம்மா" என்று அழைத்தாள்.
"திக்ஷி பாப்பா அதுக்குள்ள தூங்கி எழுந்துட்டீங்களா? வாங்க வாங்க வாங்க" என்று செல்லம் கொஞ்சிய ரோஜா, குழந்தையை மீண்டும் தன் மடியில் அமர்த்தி கொண்டாள்.
"இங்க பாருங்க. உங்க அப்பா உங்களுக்கு பால் கொண்டு வந்து வச்சிருக்காரு. வாங்க பால் குடிக்கலாமா?" என்று குழந்தையை கொஞ்சியப்படி ரோஜா பால் கோப்பையை கையில் எடுத்து திக்ஷிதாவுக்கு பால்லை ஊட்டினாள்.
பாலை அருந்தும் சமயம் திக்ஷிதா இரும்பி ரோஜாவின் மேல் வாந்தி எடுத்ததும், "ஐயோ என்ன பாப்பா நீ. இங்க பாரு ரோஜா மேல எல்லாம் வாந்தி எடுத்துட்ட. துர்வா... துர்வா இங்க வாடா" என்று தாத்தா அழைத்ததும்,
"என்ன தாத்தா? என்னாச்சு?" என்று பதறி அடித்து துர்வா தன் அறைக்குள் நுழைந்தான்.
"இங்க பாருடா துர்வா. குழந்தை ரோஜா மேல வாந்தி எடுத்துட்டாள். முதல்ல பிள்ளையை ரோஜா கையில இருந்து வாங்கு. எங்க பாட்டிமா அவங்கள கூப்பிடு" என்று தாத்தா சொன்னதும், துர்வா குழந்தையை தூக்க போனவனிடம் பிள்ளையை தராத ரோஜா,
"துர்கா நீங்க பிள்ளைக்கு மாற்று துணி மட்டும் தாங்க. நானே மேலுக்கு துடைச்சு விட்டு துணியை மாத்தி விடுறேன். இங்க குளியல் அறை எங்க இருக்கு" என்று ரோஜா கேட்டதும், தன் ஆள் காட்டி விரலால் குளியல் அறையை காட்டிய துர்வா, குழந்தைக்கு மாற்று துணியை எடுத்து கொண்டு இவனும் ரோஜா பின் சென்றான்.
"பாட்டிமா கட்டிலை சுத்தம் செய்து, போர்வையை எல்லாம் மாத்தி விட்டு, இந்த அறைக்கு சாம்பரணி போட ஏற்பாடு பண்ணுங்க" என்று துர்வாவின் தாத்தா அங்கே பணி புரியும் வேலை ஆட்களை, அறையை சுத்தம் செய்ய சொன்னார்.
ரோஜா குழந்தையை சுத்தம் செய்தவள், பிள்ளையை துர்வாவிடம் கொடுத்து விட்டு தன் புடவையை மேலாக கழுவி கொண்டு இருந்தாள்.
குழந்தை திக்ஷிதாவை தன் தாத்தாவிடம் தந்த துர்வா, தன் அலமாரியில் இருந்து புது புடவையை எடுத்து வந்து ரோஜாவிடம் நீட்டியவன், "ரோஸ்... உன் மேல எல்லாம் ஈரம். பிளீஸ் இந்தா இந்தப் புதுப் புடவையை மாத்திக்கோ" என்று துர்வா சொன்னதும்,
"ஐயோ... வேணா துர்கா. கொஞ்ச நேரத்துல ஈரம் எல்லாம் சரியாகிடும். இதுக்கு ஏன் புது புடவை எல்லாம். வேணாம்" என்று ரோஜா அந்த புடவையை வாங்கி கொள்ள மறுத்து விட்டாள்.
"ஏன்மா வேணாம் சொல்ற? இது புதுப் புடவ தான் வாங்கிக்கோ. துர்வா நீ தா. நான் சொன்னா ரோஜா வாங்கிப்பாள்" என்று தாத்தா சொல்ல, மறுப்பு ஏதும் சொல்லாமல் ரோஜா துர்வாவின் கையில் இருந்த புடவையை வாங்கி கொண்டு குளியல் அறைக்கு சென்றாள்.
சில நொடிகளில் புது புடவையை கட்டிக்கொண்டு இவர்கள் அருகில் வந்தவள், குழந்தையை மீண்டும் தன் வசமே வாங்கி கொண்டாள். "பாப்பாக்கு இன்னும் பசிக்குதா?" என்று ரோஜா கேக்க, குழந்தை சோர்வாக, ‘இல்லை’ என்று தலை ஆட்டியவள் மீண்டும் ரோஜா தோளில் படுத்து கொண்டாள்.
“துர்கா பிள்ளைக்கு இட்லி இடியப்பம்ன்னு இந்த மாதிரி காலை உணவு தாங்க. இப்போ பீவர் இல்ல. இருந்தாலும் மருந்து எல்லாம் நேர நேரத்துக்கு தந்துடுங்க. அப்புறம்..." என்று ரோஜா தன் வார்த்தையை மென்னு விழுங்க,
"நீங்க பேசிட்டு இருங்க. நான் இதோ வரேன் " என்று சொல்லிக்கொண்டே தாத்தா அங்கிருந்து நகர்ந்தார்.
"என்ன ரோஸ்? எதாவது சொல்லனுமா?" என்று துர்வா கேட்டான்.
"ம்... ஆமா துர்கா" என்று ரோஜா சொன்னவள், தன் தோள் மீது உறங்கி கொண்டு இருந்த திக்ஷிதாவை கட்டிலில் படுக்க வைத்து துணைக்கு இரண்டு பக்கமும் தலையணையை அணைத்து வைத்தவள்.
"குழந்தைக்கிட்ட இனி கடுமையா நடந்துக்காதிங்க. அந்த பிஞ்சு உள்ளத்துக்கு என்ன தெரியும் பாவம். நமக்கே நம்ம அம்மா மேல எவ்வளவு பாசம் இருக்கும் சொல்லுங்க. பாவம் குழந்தை இப்படியா ஜுரம் வரும் அளவுக்கு அவள் மீது கோவத்தை காட்டுவீங்க" என்று ரோஜா தன் கண்களில் கோவத்தை வெளிப்படுத்தினாள்.
"உனக்கு கோவமெல்லாம் வருமா ரோஸ்? முதல் முறை நீ கோவமா பேசி நான் பாக்குறேன். ம்... தப்பு தான் குழந்தைக்கிட்ட நான் அப்படி நடந்து இருக்க கூடாது" என்று துர்வா தான் செய்த தவறை உணர்ந்து இருந்தான்.
"ஆனா, இத்தனை மாசம் இந்த பிரச்சனை இல்லாமல் எப்படி குழந்தையை பாத்துகிட்டீங்க?" என்று ரோஜா ஆச்சிரியமாக கேட்டாள்.
"அம்மா சாமிகிட்ட போய் இருக்காங்க. சீக்கிரம் வருவாங்கன்னு சொல்லி தான் ஏமாத்திக்கிட்டு வந்தோம்" என்று விரக்தியாக சொன்னான் துர்வா.
"இனியும் அப்படியே சொல்லுங்க. ஆனா சாமிகிட்ட போன அம்மா, என்ன வேலை இருந்தாலும் வீக் என்ட் உன்னை பார்க்க வருவாங்க.... தினமும் நீ அவங்ககிட்ட வாட்சப்ல கூட பேசலாம்னு சொல்லுங்க" என்று சொன்ன ரோஜா குழந்தையின் நெற்றியில் முத்தமிட்ட பின், தன் கை பையில் இருந்த ஒரு கவரை எடுத்து சென்றவள், குளியல் அறையில் இருக்கும் தன் ஈரப் புடவையை அதில் வைத்துகொண்டு வாசலை நோக்கிச் சென்றாள்.
"ரோஸ் ஒரு நிமிஷம்" என்று அவளை அழைத்தப்படி துர்வா ரோஜாவின் அருகில் சென்றான்.
துர்வாவின் அறையில், ரோஜாவின் அரவணைப்பில் குழந்தை திக்ஷிதா கட்டிலில் நிம்மதியாக உறங்குவதைப் பார்த்து துர்வாவின் தாத்தா நிம்மதி அடைந்தார்.
"ஏன்மா ரோஜா? நீ இவ்வளவு நேரம் இங்கேயே இருந்துட்டியே. உன்னை உன் வீட்ல திட்ட மாட்டாங்களா?" என்று துர்வாவின் தாத்தா நாசுக்காக ரோஜாவின் நிலையை அறிந்து கொள்ள, தன் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்டார்.
"என்னை திட்ட இந்த ஊருல யாரும் இல்ல தாத்தா" என்று ரோஜா குழந்தையின் உறக்கம் கலைந்து விடாமல் பொறுமையாக பதில் சொன்னாள்.
ஒரு தட்டில் நான்கு கோப்பையுடன் துர்வா, ”எக்ஸ்கியூஸ்மி”என்று கேட்டப்படி உள்ளே நுழைந்தவன், ரோஜாவின் முன் தட்டை நீட்டினான்.
"வேணா துர்கா. நான் வீட்டுக்கு போய் குடிச்சிக்கிறேன். நீங்க சாப்பிடுங்க" என்று ரோஜா அந்த கோப்பையை வாங்க மறுத்தாள்.
"ரோஸ் இது காபி தான். உனக்கு பிடிக்கும் தானே எடுத்துக்கோ" என்று துர்வா சொன்னதும், அதற்கு மேல் அவன் உபசரிப்பை தவிர்க்க முடியாத நிலையில் துர்வா தந்த காபியை கையில் எடுத்து, "நன்றி துர்கா " என்றாள்.
"திக்ஷி எழுந்ததும் பால் கொடுக்கலாம். தாத்தா நீங்க டீ எடுத்துக்கோங்க" என்று சொன்ன துர்வா தானும் ஒரு கோப்பையில் உள்ள காபியை அருந்தியப்படி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
"நேத்தே கேக்கணும்ன்னு நினைச்சேன். நீ இங்க எந்த ஏரியால இருக்க? உன் கணவர் என்ன வேலை பாக்குறாரு? உனக்கு எத்தனை பசங்க?” என்று துர்வாவின் தாத்தா தன் கேள்விகளை அடுக்க தொடங்கினார்.
கையில் இருந்த கோப்பையை மேசை மேல் வைத்த ரோஜா, எந்த கேள்விக்கும் பதில் தராமல் அமைதியாக இருந்ததை பார்த்து, துர்வா வராத அழைப்பிற்கு பதில் தருவது போல தன் கைபேசியுடன் அறையை விட்டு வெளியே சென்றான்.
துர்வாவின் இந்த செயலை மதித்த ரோஜா.... துர்வாவின் தாத்தாவை பார்த்தவள், "எனக்கு சமீபத்துல தான் விவாகரத்து ஆச்சு தாத்தா. பிள்ளைங்க எல்லாம் இல்ல. அந்த ஊருல இருந்தா புகுந்த வீட்டு ஆளுங்களை அடிக்கடி பாக்க நேரிடும். அது மீண்டும் ரெண்டு தரப்பிலும் தர்மசங்கடத்தை தான் உருவாக்கும். அதான் என் தோழனின் சகோதரி வீட்டுல நான் வாடகைக்கு தங்கி இருக்கேன். வேலை தேட தான் சில ஆவணங்களை நகல் எடுக்க கடை தெருவுக்கு வந்தேன். அப்போ நடந்த விபத்துல தான் இதோ இப்போ உங்க எதிர்ல உங்க பேத்தி பக்கத்துல உக்காந்து இருக்கேன்" என்று துர்வாவின் தாத்தாவிடம் தன் தற்போதைய நிலையை தெளிவாக எடுத்துரைத்தாள் ரோஜா.
"எல்லாம் நன்மைக்குன்னு நினைப்போம் ரோஜா. நீ இங்கேயே இரு இதோ நான் இப்போ வரேன்" என்று சொன்ன துர்வாவின் தாத்தா நடையில் வேகத்தை கூட்டி அந்த அறையில் இருந்து தன் அறைக்குள் நுழைந்தவர் கையில் ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து கொண்டு மீண்டும் துர்வாவின் அறைக்குள் நுழைந்தவர், அந்தக் கார்டை ரோஜாவின் முகத்திற்கு முன்பு நீட்டினார்.
"என்ன தாத்தா இது?" என்று கட்டிலில் குழந்தை அருகில் இருந்து எழுந்த ரோஜாவின் கேள்விக்கு,
"இது நம்ம லைப்ரரி முகவரி தான்மா. அங்க நம்பிக்கையான ஒரு ஆள் வேலைக்கு வேணும். இது சேர்ந்தே ஆகணும் இல்ல. உனக்கு விருப்பம்னா நீ இங்கேயே வேலைக்கு சேர்ந்துக்கலாம். உனக்கு புத்தகம் தான் முதல் நண்பன் என்று துர்வா சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்" என்று தாத்தா சொன்னதும், முகம் மலர்ந்த ரோஜா,
"இந்த சூழ்நிலையில நான் இந்த வேலையை எதிர்பார்க்கவே இல்ல தாத்தா. கண்டிப்பா நான் உங்க நூலகத்துல வேலைக்கு வரேன்" என்று சொன்ன ரோஜா அந்த விசிட்டிங் கார்டை தன் கைப்பையில் வைத்து கொண்டவள், தன் முந்தானை குழந்தை திக்ஷிதாவின் விரல்களின் நடுவில் இருந்ததை கவனிக்காமல் கட்டிலில் இருந்து எழ முயன்றவளின் செயலை உணர்ந்து குழந்தை கண்கள் விழித்து, "அம்மா" என்று அழைத்தாள்.
"திக்ஷி பாப்பா அதுக்குள்ள தூங்கி எழுந்துட்டீங்களா? வாங்க வாங்க வாங்க" என்று செல்லம் கொஞ்சிய ரோஜா, குழந்தையை மீண்டும் தன் மடியில் அமர்த்தி கொண்டாள்.
"இங்க பாருங்க. உங்க அப்பா உங்களுக்கு பால் கொண்டு வந்து வச்சிருக்காரு. வாங்க பால் குடிக்கலாமா?" என்று குழந்தையை கொஞ்சியப்படி ரோஜா பால் கோப்பையை கையில் எடுத்து திக்ஷிதாவுக்கு பால்லை ஊட்டினாள்.
பாலை அருந்தும் சமயம் திக்ஷிதா இரும்பி ரோஜாவின் மேல் வாந்தி எடுத்ததும், "ஐயோ என்ன பாப்பா நீ. இங்க பாரு ரோஜா மேல எல்லாம் வாந்தி எடுத்துட்ட. துர்வா... துர்வா இங்க வாடா" என்று தாத்தா அழைத்ததும்,
"என்ன தாத்தா? என்னாச்சு?" என்று பதறி அடித்து துர்வா தன் அறைக்குள் நுழைந்தான்.
"இங்க பாருடா துர்வா. குழந்தை ரோஜா மேல வாந்தி எடுத்துட்டாள். முதல்ல பிள்ளையை ரோஜா கையில இருந்து வாங்கு. எங்க பாட்டிமா அவங்கள கூப்பிடு" என்று தாத்தா சொன்னதும், துர்வா குழந்தையை தூக்க போனவனிடம் பிள்ளையை தராத ரோஜா,
"துர்கா நீங்க பிள்ளைக்கு மாற்று துணி மட்டும் தாங்க. நானே மேலுக்கு துடைச்சு விட்டு துணியை மாத்தி விடுறேன். இங்க குளியல் அறை எங்க இருக்கு" என்று ரோஜா கேட்டதும், தன் ஆள் காட்டி விரலால் குளியல் அறையை காட்டிய துர்வா, குழந்தைக்கு மாற்று துணியை எடுத்து கொண்டு இவனும் ரோஜா பின் சென்றான்.
"பாட்டிமா கட்டிலை சுத்தம் செய்து, போர்வையை எல்லாம் மாத்தி விட்டு, இந்த அறைக்கு சாம்பரணி போட ஏற்பாடு பண்ணுங்க" என்று துர்வாவின் தாத்தா அங்கே பணி புரியும் வேலை ஆட்களை, அறையை சுத்தம் செய்ய சொன்னார்.
ரோஜா குழந்தையை சுத்தம் செய்தவள், பிள்ளையை துர்வாவிடம் கொடுத்து விட்டு தன் புடவையை மேலாக கழுவி கொண்டு இருந்தாள்.
குழந்தை திக்ஷிதாவை தன் தாத்தாவிடம் தந்த துர்வா, தன் அலமாரியில் இருந்து புது புடவையை எடுத்து வந்து ரோஜாவிடம் நீட்டியவன், "ரோஸ்... உன் மேல எல்லாம் ஈரம். பிளீஸ் இந்தா இந்தப் புதுப் புடவையை மாத்திக்கோ" என்று துர்வா சொன்னதும்,
"ஐயோ... வேணா துர்கா. கொஞ்ச நேரத்துல ஈரம் எல்லாம் சரியாகிடும். இதுக்கு ஏன் புது புடவை எல்லாம். வேணாம்" என்று ரோஜா அந்த புடவையை வாங்கி கொள்ள மறுத்து விட்டாள்.
"ஏன்மா வேணாம் சொல்ற? இது புதுப் புடவ தான் வாங்கிக்கோ. துர்வா நீ தா. நான் சொன்னா ரோஜா வாங்கிப்பாள்" என்று தாத்தா சொல்ல, மறுப்பு ஏதும் சொல்லாமல் ரோஜா துர்வாவின் கையில் இருந்த புடவையை வாங்கி கொண்டு குளியல் அறைக்கு சென்றாள்.
சில நொடிகளில் புது புடவையை கட்டிக்கொண்டு இவர்கள் அருகில் வந்தவள், குழந்தையை மீண்டும் தன் வசமே வாங்கி கொண்டாள். "பாப்பாக்கு இன்னும் பசிக்குதா?" என்று ரோஜா கேக்க, குழந்தை சோர்வாக, ‘இல்லை’ என்று தலை ஆட்டியவள் மீண்டும் ரோஜா தோளில் படுத்து கொண்டாள்.
“துர்கா பிள்ளைக்கு இட்லி இடியப்பம்ன்னு இந்த மாதிரி காலை உணவு தாங்க. இப்போ பீவர் இல்ல. இருந்தாலும் மருந்து எல்லாம் நேர நேரத்துக்கு தந்துடுங்க. அப்புறம்..." என்று ரோஜா தன் வார்த்தையை மென்னு விழுங்க,
"நீங்க பேசிட்டு இருங்க. நான் இதோ வரேன் " என்று சொல்லிக்கொண்டே தாத்தா அங்கிருந்து நகர்ந்தார்.
"என்ன ரோஸ்? எதாவது சொல்லனுமா?" என்று துர்வா கேட்டான்.
"ம்... ஆமா துர்கா" என்று ரோஜா சொன்னவள், தன் தோள் மீது உறங்கி கொண்டு இருந்த திக்ஷிதாவை கட்டிலில் படுக்க வைத்து துணைக்கு இரண்டு பக்கமும் தலையணையை அணைத்து வைத்தவள்.
"குழந்தைக்கிட்ட இனி கடுமையா நடந்துக்காதிங்க. அந்த பிஞ்சு உள்ளத்துக்கு என்ன தெரியும் பாவம். நமக்கே நம்ம அம்மா மேல எவ்வளவு பாசம் இருக்கும் சொல்லுங்க. பாவம் குழந்தை இப்படியா ஜுரம் வரும் அளவுக்கு அவள் மீது கோவத்தை காட்டுவீங்க" என்று ரோஜா தன் கண்களில் கோவத்தை வெளிப்படுத்தினாள்.
"உனக்கு கோவமெல்லாம் வருமா ரோஸ்? முதல் முறை நீ கோவமா பேசி நான் பாக்குறேன். ம்... தப்பு தான் குழந்தைக்கிட்ட நான் அப்படி நடந்து இருக்க கூடாது" என்று துர்வா தான் செய்த தவறை உணர்ந்து இருந்தான்.
"ஆனா, இத்தனை மாசம் இந்த பிரச்சனை இல்லாமல் எப்படி குழந்தையை பாத்துகிட்டீங்க?" என்று ரோஜா ஆச்சிரியமாக கேட்டாள்.
"அம்மா சாமிகிட்ட போய் இருக்காங்க. சீக்கிரம் வருவாங்கன்னு சொல்லி தான் ஏமாத்திக்கிட்டு வந்தோம்" என்று விரக்தியாக சொன்னான் துர்வா.
"இனியும் அப்படியே சொல்லுங்க. ஆனா சாமிகிட்ட போன அம்மா, என்ன வேலை இருந்தாலும் வீக் என்ட் உன்னை பார்க்க வருவாங்க.... தினமும் நீ அவங்ககிட்ட வாட்சப்ல கூட பேசலாம்னு சொல்லுங்க" என்று சொன்ன ரோஜா குழந்தையின் நெற்றியில் முத்தமிட்ட பின், தன் கை பையில் இருந்த ஒரு கவரை எடுத்து சென்றவள், குளியல் அறையில் இருக்கும் தன் ஈரப் புடவையை அதில் வைத்துகொண்டு வாசலை நோக்கிச் சென்றாள்.
"ரோஸ் ஒரு நிமிஷம்" என்று அவளை அழைத்தப்படி துர்வா ரோஜாவின் அருகில் சென்றான்.