Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
பகுதி 5
ரோஜா, துர்வா தனக்காகத் தந்த புத்தகத்தை மேசை மேல் வைத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.
"வா ரோஜா. நாளைக்கு வாரத்தின் இறுதி நாள். அதனால நான் ஒன்பது மணிக்கு தான் படுக்கையில் இருந்து எழுந்துப்பேன். உனக்கு பசிச்சா பிரிட்ஜ்ல மாவு இருக்கும் நீ தோசை வாத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே டின்னருக்கு மேசை மேல் மூன்று தட்டை வைத்தாள் கனகா.
"இங்க பக்கத்துல சர்ச் இருக்கா?" என்று ரோஜா கேட்டதும், கனகாவின் முகம் மாறியது.
"ஏய் நீ என்ன கிறிஸ்டினா?" என்று கனகா கேட்கும் கேள்வி ஒன்றும் ரோஜாவிற்கு புதிதல்ல.
"நான் தமிழ் குடிமகள். மதத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டவள். ஆனா, என் உயிர் தோழிக்கு நாளை பிறந்தநாள். அதான் அவளுக்கு பிடித்த பரமபிதாவை சந்திச்சி, அவளுக்கான மனுவை தரலாம்னு கேட்டேன" என்றாள் ரோஜா.
"ம்... உன் உயிர் தோழி பிறந்தநாளுக்காக சர்ச் போற நீ, உன் உயிர் நண்பன், அதான் என் தம்பி பிறந்தநாளுக்கு எங்க போவ?"
"அவன் பிறந்தநாளுக்கு கண்டிப்பா நான் வரதராஜன் பெருமாளை சந்திப்பேன்" என்று ரோஜா சொன்னதும், அவள் தட்டில் சிரித்து கொண்டே கனகா தோசையை வைத்தாள்.
"கை வலி இருந்தா சொல்லு. நான் ஊட்டி விடுறேன்" என்று கனகா சொன்னதும்,
"வலி எல்லாம் இல்ல. நீங்க நிம்மதியா சாப்பிடுங்க" என்று ரோஜா சொல்ல, கனகாவின் கணவன் மோகனின் ஆத்மாவுடன் சேர்ந்து மூவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.
"சரி ரோஜா. எனக்கு ஆபீஸ் ஒர்க் கொஞ்சம் இருக்கு. அதை முடிச்சிட்டு நான் தூங்கிடுவேன். நீயும் நேரத்தோடு போய்ப் படுத்துக்கோ. எதாவதுனா என் ரூம் கதவைத் தட்டு" என்று சொன்ன கனகா, கையில் லேப்டாப் தண்ணீர் பாட்டிலுடன் சேர்த்து போனையும் எடுத்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தாள்.
ரோஜா மாடியில் உள்ள தன் அறைக்கு வந்தவள், கட்டிலில் அமர்ந்து, அவள் தந்தையை கைபேசி மூலம் அழைத்தாள். ரோஜாவின் அழைப்புக்காக காத்து இருந்த அவளின் தந்தை மறுமுனையில், "ரோஜாமா எப்படிமா இருக்க? போன இடத்துல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? நீ தனியாவா தங்கி இருக்க? நீ சாப்பிட்டியா? இந்த அப்பா மேல உனக்கு எந்த கோவமும் இல்லயில்ல" என்று கேட்ட எல்லா கேள்விகளும் ரோஜா மீது அவர் கொண்ட அன்பை மட்டுமே வெளிப்படுத்தியது.
"அப்பா நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் என்னோட ஒரே பதில், நான் நானா சந்தோசமா இருக்கேன்" என்று மனநிறைவோடு ரோஜா சொன்னாள்.
"சரிமா நாளைக்கு நான் உன்னை பாக்க வரேன். நீ எங்க இருக்கன்னு முகவரி அனுப்புடா" என்றார்.
தந்தை முகவரி கேட்டதும், அவருக்கு விடையாக ரோஜாவின் மௌவனம் மட்டுமே கிடைத்தது.
"சரி சரிம்மா. இனி கேக்கல. நீ நல்லா இரு. எனக்கு அதே போதும். தினமும் எனக்கு போன் பண்ணு" என்று ரோஜாவின் தந்தை அன்பு கட்டளையிட,
"ம்... சரி அப்பா. நீங்க ஜாக்கிரதை" என்று சொன்ன ரோஜா கைபேசி இணைப்பைத் துண்டித்தாள்.
துர்வா இவளுக்கு தந்த புத்தகத்தைப் பார்த்ததும், அவனின் குழந்தை நினைவுக்கு வர, தன் பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து அதில் உள்ள அலைபேசி எண்ணை அழுத்தினாள்.
நீண்ட நேரம் போன் ரிங் ஆனதும், துர்வா வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவர் அலைபேசியை எடுத்து, “ஹலோ யாருங்க பேசுறீங்க?" என்று கேட்க,
"துர்கா... சாரி துர்வா சார் இல்லையா?" என்று மரியாதையாக கேட்டாள் ரோஜா.
"சின்ன ஐயாவும் பெரிய ஐயாவும் திக்ஷி பாப்பாவை தூக்கிகிட்டு ஹாஸ்பிடல் போய் இருக்காங்கங்க. நீங்க சின்ன ஐயா செல்போன் நம்பர் இருந்தா அதுல கூப்பிட்டு பாருங்க" என்று அந்த நபர் சொன்னதும்,
"குழந்தைக்கு என்னாச்சு" என்று ரோஜா பதறியபடி கேக்கும் முன்பே அலைபேசியின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது..
"ஐயோ பிள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே" என்று வாய் விட்டு புலம்பியவள் வேகமாக துர்வாவின் கைபேசி எண்ணுக்கு அழைத்தாள்.
புது நம்பராக இருக்கவும் யோசனையுடன் எடுத்தவன், “ஹலோ சொல்லுங்க. யார் பேசுறது?" என்று பொறுமையாக துர்வா கேட்டான்.
"துர்கா நான்..." என்று ரோஜா தன்னை கைபேசி வாயிலாக அறிமுகப்படுத்தி கொள்ளும் முன்பாக, “ரோஸ் நீயா? என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க? ஏதாவது பிரச்சனையா?" என்று தன் சூழ்நிலையை மறைத்து துர்வா ரோஜாவை கேள்வி கேட்டான்.
"பாப்பாவுக்கு என்னாச்சு துர்கா? ஏன் நீங்க இந்த நேரத்துல ஹாஸ்பிடல்ல இருக்கீங்க?" என்று ரோஜா பதற்றதுடன் கேட்டாள்.
"அது... அது வந்து ரோஸ், நான் தான் அவகிட்ட கொஞ்சம் கோவமா நடந்துகிட்டேன். அதனால ரொம்ப அழுது ஹை பீவர் வந்து கண்ணு திறக்க முடியாம அனத்த ஆரம்பிச்சிட்டா. அதான் பயந்து போய் நானும், தாத்தாவும். திக்ஷியை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வந்தோம்" என்று துர்வா மனதில் உள்ள வலிகளை வலிமை இழந்த வார்த்தைகளாக சொல்லி முடித்தான்.
"துர்கா நான் உங்க குழந்தையை உடனே பாக்கணும். முடியுமா?" என்று ரோஜா எதை பற்றியும் யோசிக்காமல் கேட்டு விட்டாள்.
"என்ன? இந்த நேரத்துலயா? வேணா ரோஸ். உன் கணவர் எதாவது சொல்ல போறாரு" என்று துர்வா பெண்களுக்கு உரிய கட்டமைப்பை யோசித்து ரோஜாவை அங்கே வர வேண்டாம் என்று சொன்னான்.
"நான் உங்க பொண்ணை பாக்கணும். எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, நான் பார்த்தா உங்களுக்கு எதாவது ப்ரோப்ளம் வரும்னா சொல்லுங்க நான் வரல." என்று ரோஜா தெளிவாகச் சொன்னாள்.
"இந்த நேரத்துல நீ தனியா வர வேணாம். உன்னை ஈவினிங் ட்ரோப் பண்ண டிரைவரையே அனுப்புறேன். அவர் கூட வா. மறுபடியும் சொல்றேன், உன் புகுந்த வீட்டுல பிரச்சனை எதாவது வரப்போகுது யோசிச்சிக்கோ" என்று துர்வா மீண்டும் ஆரம்பித்த வார்த்தையில் வந்து நின்றான்..
"நேர்ல சந்திப்போம். உங்க டிரைவர் சார்க்காக நான் காத்து இருப்பேன்" என்று சொன்ன ரோஜா, தன் பையில் இருந்து பச்சை நிற புடவையை எடுத்தவள் கண் இமைக்கும் நேரத்தில் உடையை மாற்றிக்கொண்டு கைப்பையுடன் கீழே இறங்கினாள்.
கனகா அவள் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என்பது, அவளின் குறட்டை ஒலி இவளுக்கு ஒளிவு மறைவும் இன்றி காட்டிக் கொடுத்தது.
தன் கைப்பையில் இருந்த இவளது கைக்குறிப்பு புத்தகத்தின் கடைசி பக்கத்தைக் கிழித்தவள அதில், "காலை வணக்கம் கனகா. துர்காவின் மகளுக்கு உடல் நிலை சரியில்லை. அதனால், நான் குழந்தையை பார்க்க மருத்துவமனை போகிறேன். காலையில் உன் குழம்பி தயாராகும் முன்பு வீட்டிற்கு திரும்ப முயற்சி செய்கிறேன். ரோஜா
" என்ற சிறிய தகவலை எழுத்தால் தெரியப்படுத்தியவள், அந்தக் காகிதத்தை மேசை மேல் வைத்து, காகிதம் பறந்து விடாமல் இருக்க, அதன் மேல் கனகாவின் கணவர் மோகனின் சின்ன புகைப்படத்தை ஏந்திய போட்டோ வைத்தவள் துர்வாவின் காருக்காக காத்து இருந்தாள்.
கார் இவளை சுமந்து செல்ல வந்து இருப்பதை அறிந்து, வீட்டின் நுழைவாயில் கதவை தன் கையில் இருந்த துறப்பை கொண்டு பூட்டியவள், துர்வாவின் காரில் ஏறி அமர, கார் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலையில் சீறிப் பாய்ந்தது.
காரை விட்டு இறங்கிய ரோஜா, டிரைவரின் உதவியோடு துர்வாவின் மகளை சேர்த்து இருக்கும் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
"மேடம் அதோ அங்க பெரிய ஐயா நிக்கிறாரு பாருங்க" என்று டிரைவர் சொன்னதும், தன் நடையில் வேகத்தை கூட்டிய ரோஜா அவர் எதிரில் போய் நின்றாள்.
ரோஜா, துர்வா தனக்காகத் தந்த புத்தகத்தை மேசை மேல் வைத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள்.
"வா ரோஜா. நாளைக்கு வாரத்தின் இறுதி நாள். அதனால நான் ஒன்பது மணிக்கு தான் படுக்கையில் இருந்து எழுந்துப்பேன். உனக்கு பசிச்சா பிரிட்ஜ்ல மாவு இருக்கும் நீ தோசை வாத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே டின்னருக்கு மேசை மேல் மூன்று தட்டை வைத்தாள் கனகா.
"இங்க பக்கத்துல சர்ச் இருக்கா?" என்று ரோஜா கேட்டதும், கனகாவின் முகம் மாறியது.
"ஏய் நீ என்ன கிறிஸ்டினா?" என்று கனகா கேட்கும் கேள்வி ஒன்றும் ரோஜாவிற்கு புதிதல்ல.
"நான் தமிழ் குடிமகள். மதத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டவள். ஆனா, என் உயிர் தோழிக்கு நாளை பிறந்தநாள். அதான் அவளுக்கு பிடித்த பரமபிதாவை சந்திச்சி, அவளுக்கான மனுவை தரலாம்னு கேட்டேன" என்றாள் ரோஜா.
"ம்... உன் உயிர் தோழி பிறந்தநாளுக்காக சர்ச் போற நீ, உன் உயிர் நண்பன், அதான் என் தம்பி பிறந்தநாளுக்கு எங்க போவ?"
"அவன் பிறந்தநாளுக்கு கண்டிப்பா நான் வரதராஜன் பெருமாளை சந்திப்பேன்" என்று ரோஜா சொன்னதும், அவள் தட்டில் சிரித்து கொண்டே கனகா தோசையை வைத்தாள்.
"கை வலி இருந்தா சொல்லு. நான் ஊட்டி விடுறேன்" என்று கனகா சொன்னதும்,
"வலி எல்லாம் இல்ல. நீங்க நிம்மதியா சாப்பிடுங்க" என்று ரோஜா சொல்ல, கனகாவின் கணவன் மோகனின் ஆத்மாவுடன் சேர்ந்து மூவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.
"சரி ரோஜா. எனக்கு ஆபீஸ் ஒர்க் கொஞ்சம் இருக்கு. அதை முடிச்சிட்டு நான் தூங்கிடுவேன். நீயும் நேரத்தோடு போய்ப் படுத்துக்கோ. எதாவதுனா என் ரூம் கதவைத் தட்டு" என்று சொன்ன கனகா, கையில் லேப்டாப் தண்ணீர் பாட்டிலுடன் சேர்த்து போனையும் எடுத்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தாள்.
ரோஜா மாடியில் உள்ள தன் அறைக்கு வந்தவள், கட்டிலில் அமர்ந்து, அவள் தந்தையை கைபேசி மூலம் அழைத்தாள். ரோஜாவின் அழைப்புக்காக காத்து இருந்த அவளின் தந்தை மறுமுனையில், "ரோஜாமா எப்படிமா இருக்க? போன இடத்துல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? நீ தனியாவா தங்கி இருக்க? நீ சாப்பிட்டியா? இந்த அப்பா மேல உனக்கு எந்த கோவமும் இல்லயில்ல" என்று கேட்ட எல்லா கேள்விகளும் ரோஜா மீது அவர் கொண்ட அன்பை மட்டுமே வெளிப்படுத்தியது.
"அப்பா நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் என்னோட ஒரே பதில், நான் நானா சந்தோசமா இருக்கேன்" என்று மனநிறைவோடு ரோஜா சொன்னாள்.
"சரிமா நாளைக்கு நான் உன்னை பாக்க வரேன். நீ எங்க இருக்கன்னு முகவரி அனுப்புடா" என்றார்.
தந்தை முகவரி கேட்டதும், அவருக்கு விடையாக ரோஜாவின் மௌவனம் மட்டுமே கிடைத்தது.
"சரி சரிம்மா. இனி கேக்கல. நீ நல்லா இரு. எனக்கு அதே போதும். தினமும் எனக்கு போன் பண்ணு" என்று ரோஜாவின் தந்தை அன்பு கட்டளையிட,
"ம்... சரி அப்பா. நீங்க ஜாக்கிரதை" என்று சொன்ன ரோஜா கைபேசி இணைப்பைத் துண்டித்தாள்.
துர்வா இவளுக்கு தந்த புத்தகத்தைப் பார்த்ததும், அவனின் குழந்தை நினைவுக்கு வர, தன் பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து அதில் உள்ள அலைபேசி எண்ணை அழுத்தினாள்.
நீண்ட நேரம் போன் ரிங் ஆனதும், துர்வா வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவர் அலைபேசியை எடுத்து, “ஹலோ யாருங்க பேசுறீங்க?" என்று கேட்க,
"துர்கா... சாரி துர்வா சார் இல்லையா?" என்று மரியாதையாக கேட்டாள் ரோஜா.
"சின்ன ஐயாவும் பெரிய ஐயாவும் திக்ஷி பாப்பாவை தூக்கிகிட்டு ஹாஸ்பிடல் போய் இருக்காங்கங்க. நீங்க சின்ன ஐயா செல்போன் நம்பர் இருந்தா அதுல கூப்பிட்டு பாருங்க" என்று அந்த நபர் சொன்னதும்,
"குழந்தைக்கு என்னாச்சு" என்று ரோஜா பதறியபடி கேக்கும் முன்பே அலைபேசியின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது..
"ஐயோ பிள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே" என்று வாய் விட்டு புலம்பியவள் வேகமாக துர்வாவின் கைபேசி எண்ணுக்கு அழைத்தாள்.
புது நம்பராக இருக்கவும் யோசனையுடன் எடுத்தவன், “ஹலோ சொல்லுங்க. யார் பேசுறது?" என்று பொறுமையாக துர்வா கேட்டான்.
"துர்கா நான்..." என்று ரோஜா தன்னை கைபேசி வாயிலாக அறிமுகப்படுத்தி கொள்ளும் முன்பாக, “ரோஸ் நீயா? என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க? ஏதாவது பிரச்சனையா?" என்று தன் சூழ்நிலையை மறைத்து துர்வா ரோஜாவை கேள்வி கேட்டான்.
"பாப்பாவுக்கு என்னாச்சு துர்கா? ஏன் நீங்க இந்த நேரத்துல ஹாஸ்பிடல்ல இருக்கீங்க?" என்று ரோஜா பதற்றதுடன் கேட்டாள்.
"அது... அது வந்து ரோஸ், நான் தான் அவகிட்ட கொஞ்சம் கோவமா நடந்துகிட்டேன். அதனால ரொம்ப அழுது ஹை பீவர் வந்து கண்ணு திறக்க முடியாம அனத்த ஆரம்பிச்சிட்டா. அதான் பயந்து போய் நானும், தாத்தாவும். திக்ஷியை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு வந்தோம்" என்று துர்வா மனதில் உள்ள வலிகளை வலிமை இழந்த வார்த்தைகளாக சொல்லி முடித்தான்.
"துர்கா நான் உங்க குழந்தையை உடனே பாக்கணும். முடியுமா?" என்று ரோஜா எதை பற்றியும் யோசிக்காமல் கேட்டு விட்டாள்.
"என்ன? இந்த நேரத்துலயா? வேணா ரோஸ். உன் கணவர் எதாவது சொல்ல போறாரு" என்று துர்வா பெண்களுக்கு உரிய கட்டமைப்பை யோசித்து ரோஜாவை அங்கே வர வேண்டாம் என்று சொன்னான்.
"நான் உங்க பொண்ணை பாக்கணும். எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, நான் பார்த்தா உங்களுக்கு எதாவது ப்ரோப்ளம் வரும்னா சொல்லுங்க நான் வரல." என்று ரோஜா தெளிவாகச் சொன்னாள்.
"இந்த நேரத்துல நீ தனியா வர வேணாம். உன்னை ஈவினிங் ட்ரோப் பண்ண டிரைவரையே அனுப்புறேன். அவர் கூட வா. மறுபடியும் சொல்றேன், உன் புகுந்த வீட்டுல பிரச்சனை எதாவது வரப்போகுது யோசிச்சிக்கோ" என்று துர்வா மீண்டும் ஆரம்பித்த வார்த்தையில் வந்து நின்றான்..
"நேர்ல சந்திப்போம். உங்க டிரைவர் சார்க்காக நான் காத்து இருப்பேன்" என்று சொன்ன ரோஜா, தன் பையில் இருந்து பச்சை நிற புடவையை எடுத்தவள் கண் இமைக்கும் நேரத்தில் உடையை மாற்றிக்கொண்டு கைப்பையுடன் கீழே இறங்கினாள்.
கனகா அவள் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என்பது, அவளின் குறட்டை ஒலி இவளுக்கு ஒளிவு மறைவும் இன்றி காட்டிக் கொடுத்தது.
தன் கைப்பையில் இருந்த இவளது கைக்குறிப்பு புத்தகத்தின் கடைசி பக்கத்தைக் கிழித்தவள அதில், "காலை வணக்கம் கனகா. துர்காவின் மகளுக்கு உடல் நிலை சரியில்லை. அதனால், நான் குழந்தையை பார்க்க மருத்துவமனை போகிறேன். காலையில் உன் குழம்பி தயாராகும் முன்பு வீட்டிற்கு திரும்ப முயற்சி செய்கிறேன். ரோஜா
கார் இவளை சுமந்து செல்ல வந்து இருப்பதை அறிந்து, வீட்டின் நுழைவாயில் கதவை தன் கையில் இருந்த துறப்பை கொண்டு பூட்டியவள், துர்வாவின் காரில் ஏறி அமர, கார் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலையில் சீறிப் பாய்ந்தது.
காரை விட்டு இறங்கிய ரோஜா, டிரைவரின் உதவியோடு துர்வாவின் மகளை சேர்த்து இருக்கும் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
"மேடம் அதோ அங்க பெரிய ஐயா நிக்கிறாரு பாருங்க" என்று டிரைவர் சொன்னதும், தன் நடையில் வேகத்தை கூட்டிய ரோஜா அவர் எதிரில் போய் நின்றாள்.