• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jan 19, 2025
Messages
10

கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை​

 
New member
Joined
Jan 19, 2025
Messages
10

அடடா ஆரம்பிச்சிட்டாங்கப்பா அடுத்த தொழில” என நண்பன் ரமேஷ் உடன் இருந்த மற்ற நண்பர்கள் முன் கூற அவனுடன் சேர்ந்து அவர்களும் கோவிந்தனை கண்டு சிரித்தார்கள்.​


“என்ன கோவிந்தா இதாவது நிலைக்குமா இல்ல இதுவும் உன் பேர போல கோவிந்தா கோவிந்தாவா!”என ஒருவன் கூற கோவிந்தால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வேகமாக வீடு நோக்கி புறப்பட்டான்.

வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியவன் வாசற்படி ஏறும் போதே மனைவியை அழைத்து கொண்டே ஏறினான்.

“லட்சுமி, லட்சுமி எங்க இருக்க கூப்படறது காதுல விழுகலயா? கொஞ்சம் சீக்கிரம் வாயேன்”என அழைத்துக்கொண்டே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

“லட்சுமி கேக்குதா சீக்கிரம் வா” என மீண்டும் குரல் கொடுக்க,

லட்சுமி மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எல்லாம் அள்ளிக்கொண்டு வேகவேகமாக படியிறங்கி வந்தாள்.

“தோ வந்துட்டேன் மாமா மழை வர மாதிரி இருந்துச்சே அப்படினு காயவச்ச துணிய எடுக்க போயிருந்தேன்,

பிரண்ட்ஸ்ஸ பாக்க போறேன்னு சொன்னிங்க அதுக்குள்ள வந்துட்டிங்க,

டீ வைக்கவா?” என பேசிக்கொண்டே அருகில் இருந்த நாற்காலியில் கொண்டு வந்த துணியை போட்டுவிட்டு சமையலறையை நோக்கி நகரப் போனவளை கையை பிடித்து நிறுத்தினான்.

“ஏன் மாமா என்னாச்சு இருங்க டீ போட்டுட்டு வரேன்”

“இல்ல இங்க என் பக்கத்துல கொஞ்சம் உட்காரேன்” என கூற,

மறுப்பேதும் கூறாமல் அவன் அருகில் அமர்ந்தவள் “என்னாச்சு மாமா முகம் வாட்டமா இருக்கு, ஏதும் பிரச்சனையா?”என அவள் கேட்ட அடுத்த நொடி அவளின் மடியில் தலை வைத்து ஒரு குழந்தை போல குறுகி படுத்து கொண்டான் கோவிந்த்.

“மாமா என்னாச்சு ஏன் இப்படி படுத்து இருக்கிங்க எனக்கு பயமா இருக்கு என்னனு சொல்லுங்களேன்”என அவள் இருமுறை கேட்டபின் அவன் படுத்தவாறே நண்பர்கள் கூறியதை கூறினான்.

“ஏன் லட்சுமி நான் சொந்த தொழில் செஞ்சா சரிவராதா?

இதுவும் நிலைக்காம போய்டுமா?” என எழுந்து அவள் முகத்தை பார்த்து பாவமாக கேட்டான்.

அவன் கன்னங்களை கைகளில் ஏந்தியவள் “யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்புவிங்களா மாமா யாரோ என்னவோ சொல்லட்டும் உங்க கூட நிக்க போறது நான் தானே? நான் என்னைக்காவது உங்கள அப்படி சொல்லிருக்கேனா?

இல்லதான? அப்படியே எதாவது சிக்கல் ஆனாலும் அத சமாளிக்க போறது நாமதானே? உங்க பிரண்ட்ஸ் கிடையாதே, நாம யார நம்பியும் எதுவும் செய்யல நாம நம்மல நம்பறோம் நான் உங்கள நம்பறேன்

எத்தனை வாட்டி விழுந்தாலும் இவன் எப்படிடா திரும்ப திரும்ப எந்திரிக்கறான்னு அவங்களுக்கு இருக்கற இயலாமைய இப்படி வன்மமா உங்க பக்கம் திருப்பறாங்க, அது கூட தெரியாம இங்க வந்து குழந்தை மாதிரி வருத்தப்பட்டுட்டு இருக்கிங்க” என அவள் கூறிய தைரியமூட்டும் வார்த்தைகள் அவனுள் பரவி முகம் சற்று தெளிவடைந்தான்.

அவள் கன்னங்களை இப்போது இவன் பற்றி “எப்படி லட்சுமா இவ்ளோ தெளிவா யோசிக்கற? எப்படி இவ்ளோ பாஸிட்டிவா பேசற?என் மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கையா?” என கேட்க,

“நம்பிக்கை இல்லாமலா கழுத்த நீட்டி ரெண்டு புள்ள பெத்து இருக்கேன் மாமா”என அவன் நெற்றியில் செல்லமாய் முட்டினாள்.

பதிலுக்கு அவன் அவள் நெற்றியில் காதலோடு அழுந்த முத்தத்தை பதித்த நேரம் பள்ளி முடிந்து வந்த பிள்ளைகள் கதவை திறந்து கொண்டு அவர்களிடம் ஓடி வந்தனர்.

“ஆரம்பிச்சிட்டாங்கடி இவங்களுக்கு லவ் பன்ன நேரங்காலமே இல்ல” என சிறியவள் பெரியவளிடம் கூற,

“என் மாமாவ நான் லவ் பன்றேன் உங்களுக்கு என்னடி” என லட்சுமி கோவிந்தை கட்டிக்கொள்ள,

“எங்களுக்கு என்ன நீங்களே வச்சிக்கோங்க உங்க லவ்வ பத்திரமா

எங்களுக்கு சாப்பாடு இருந்தா போதும்” என கூறிவிட்டு சென்று விட்டார்கள்.

கோவிந்த் லட்சுமி தம்பதிக்கு பத்து வருடங்களுக்கு முன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

பெரியவள் நிஹாரிகா, சிறியவள் மித்ரா.

திருமணமாகி ஐந்து வருடம் கூட்டுகுடும்பமாக வசித்தவர்கள் சிறு மனக்கசப்பின் மூலம் தனிகுடித்தனம் வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.

கோவிந்திற்க்கு சொந்த தொழிலில் முன்னேற வேண்டும் என மிகுந்த ஆர்வம்.

மனைவி லட்சுமிக்கு கணவன் எப்படியாவது முன்னேறி விடுவான் என அதீத நம்பிக்கை.


ஆனால் கோவிந்த் செய்த சில சொந்த தொழில்கள் அவனுக்கு சரியாக கை கொடுக்காமல் படுதோல்வியை சந்தித்தது.

கடைசியாக ஊருக்கு நடுவில் ஒரு பேக்கரி வைத்து நடத்தி வந்த நிலையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்தது.

இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

எப்படியாவது வரும் வருடத்தில் நமது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மேன்மைக்கு வந்துவிடுவோம் என இரவு பகல் பார்க்காமல் இருவரும் உழைத்தனர்.

இந்த நிலையில் தான் உலகையே உலுக்கிய கொரானா தன் கோர தாண்டவத்தை ஆடியது.

பெரிய பெரிய பணக்காரர்களை எல்லாம் என்ன சேதி என கேட்ட கொரோனா இவர்களை பொருளாதார ரீதியில் அகல பாதாளத்தில் தள்ளியது.

லாக்டவுன் இவர்களை மீண்டு வர முடியாத தொலைவுக்கு கொண்டு போய் சேர்த்தது.

இரண்டு லாக்டவுன்களுக்கு பிறகு சமாளிக்க முடியாத நிலையில் பேக்கரியை இழந்து இருவரும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்ப்பட்டது.

அதெல்லாம் நடந்து இரண்டு வருடம் கழிந்த நிலையில் தற்போது தான் மீண்டும் சிறிய அளவில் ஒரு டிபன் கடை தொடங்கலாம் என கோவிந்த் கூறிய ஆலோசனையை ஏற்று லட்சுமியும் அதற்கு தயாராகிறாள்.

ஆனால் பார்ப்போருக்கு கேலியும் கிண்டலுமாக இருக்கிறது.

இரவு உணவிற்கு நால்வரும் ஒன்றாக அமர லட்சுமி தான் செய்த இட்லியை தட்டில் பரிமாறினாள்.

சாப்பிட்டு கொண்டே நிஹாரிகா தந்தையிடம் “அப்பா உங்களுக்கு ஏன் அம்மாவ இவ்ளோ பிடிச்சிருக்கு?” என கேட்க,

லட்சுமியும் ஆர்வமானாள் கணவன் என்ன பதில் கூறுவான் என.

“உங்க தாத்தா உங்க அம்மாவ எனக்கு கல்யாணம் செஞ்சு குடுக்கும் போது அவ சின்ன பொண்ணு 18 வயசு தான் ஆச்சு, பன்னென்டாவது தான் முடிச்சு இருந்தா.

இப்பவும் அவளுக்கு 29வயசு தான் ஆகுது, ஆனா நான் அவள விட பத்து வயசு பெரியவன், ஆனாலும் அவ தான் எல்லா முடிவையும் தெளிவா எடுப்பா,​

என்ன யாரும் நம்பாதப்ப கூட அவ எல்லா நேரமும் என்ன நம்புவா,

எனக்கு எப்பயுமே அவ சப்போர்ட்டா கூட இருப்பா,

என்னோட பக்கபலமே அவ தான்,

நான் தொழில் செஞ்சு அது லாஸ் ஆகி கடன்ல மாட்டனப்போ கூட அவளுக்கு என்மேல எந்த கோவமும் இல்ல,

என்மேல கோபம் இல்லையானு நான் ஒரு தடவை கேட்டதுக்கு,

நீங்க ஜெயிச்சிருந்தா என் புருஷன்னு கெத்தா சொல்லிருப்பேன்ல தோத்துட்டா மட்டும் அது உங்களோடதுனு எப்படி தள்ளி விட முடியும்,

நம்ம சேர்ந்து வேலை செய்யறதே வெற்றி தோல்வி எது வந்தாலும் ஒன்னா ஏத்துக்க தானே.

அப்படினு ஈஸியா சொல்லிட்டா, அவளுக்காக நான் இதுவரை எதுவும் செஞ்சதில்ல அவளும் என்கிட்ட இதுவரை எதுவும் கேட்டதில்லை,​

மத்த பொண்ணுங்க மாதிரி துணி வேணும், நகை வேணும், அந்து ஊருக்கு இந்த ஊருக்குனு இப்படி எதுவும் எங்கிட்ட கேட்டதில்ல,

எங்க ரெண்டு பேத்துக்குள்ள இருக்கற காதல சொன்னா சொல்லிட்டே இருக்கலாம்” என கோவிந்த் முடிக்க மித்ரா உண்ட தட்டை தூக்கிக்கொண்டு “நீங்க சொல்லிட்டே தான் இருப்பிங்க நான் கிளம்பறேன்” என கூறிக்கொண்டே சமையலறைக்கு சென்றவளை கண்டு மூவரும் வாய்விட்டே சிரித்து விட்டனர்.

இப்படியான இவர்களின் வாழ்வில் அந்த டிபன் கடையும் ஒன்று சேர்ந்தது.

இருவரும் கடினமாக உழைத்தனர்.

அவர்களின் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் அதில் கிடைத்தது.

இவர்களை கேலி செய்து பேசிய நண்பர்கள் தற்போது இவர்கள் கடையில் தான் அதிகம் உணவுகளை உண்டு மகிழ்கிறார்கள்.

காலை டிபனும் இரவு டிபனும் மட்டுமே.

இந்த இருவேளை கடைக்கே அவர்களுக்கு வேலை பளு சரியாக இருந்தது.

“ஏன் மாமா நீங்க ஆரம்பிச்சா அப்படி ஆகிடும் இப்படி ஆகிடும்னு சொன்னவங்க பேச்ச கேட்டுட்டு வருத்தப்பட்டிங்கள்ள, இப்போ பாத்திங்களா அவங்களே அப்படி ஒன்னு நடக்காத மாதிரி இருக்காங்க, யார் என்ன சொன்னாலும் நம்ம நம்பிக்கை தான் மாமா நமக்கு கை கொடுக்கும்”என ஆறுதலாய் அவன் மடியில் படுத்து கொண்டு லட்சுமி பேசினாள்.

“உண்மை தான் லட்சுமி நீ மட்டும் என்னோட நிக்கலனா இது எதுவும் என்னால முடியாம போயிருக்கும், சரி நடுராத்திரி ஆகிடுச்சு தூங்கலாமா காலைல நிறைய வேலை இருக்கு”என கூறியவனை பெண்ணவள் செல்லமாக முறைத்தாள்.

“அதுக்குள்ள தூக்கம் வருதா மாமா”என அவளின் குரல் தோணியில் தன்னவளின் எண்ணத்தை கச்சிதமாக புரிந்து கொண்டவன்,

“இல்லையே யார் சொன்னா தூக்கமாவது ஒன்னாவது இன்னைக்கு நைட் முழுக்க நாம பேசுவோம் சரியா” என அவளை இறுக அணைத்தவுடன் புன்னகை பூத்த முகத்துடன் அவளும் அவனை அணைத்து கொண்டாள்.

இப்படி அனைவரும் இவர்கள் அவ்வளவுதான் என எண்ணிய வேளையில் ஒரு வருடத்தில் இவர்களின் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

 
Last edited:
New member
Joined
Jan 19, 2025
Messages
10

ஆம் இருவரும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் ருசியான தரமான உணவு பதார்த்தங்களின் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருந்தனர்.

வேலைக்கு இரு ஆட்களை போட்டு மதிய உணவையும் உடன் சேர்த்து இருந்தார்கள்.

இப்படி அமைதியான கடல் போல அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையின் அமைதியை குலைக்கும் விதம் போல் அமைந்தது அந்த காலை பொழுது.

எப்போதும் போல காலையில் மார்கெட்டுக்கு சென்ற கோவிந்தின் இருசக்கர வாகனத்தின் மீது ஒரு மினி ஆட்டோ நிலைதடுமாறி வேகமாக மோதியதில் கோவிந்த் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டான்.

அக்கம் பக்கம் இருப்போர் அவனை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு லட்சுமிக்கு தகவல் கூறி அனுப்பினர்.

செய்தியை கேட்ட லட்சுமி சித்த பிரமை பிடித்தவள் போல் ஆனாள்.

பிள்ளைகள் அவளை கட்டி கொண்டு அழுதன.

லட்சுமி, மகள்கள், லட்சுமயின் பெற்றோர் என அனைவரும் ஆட்டோவை பிடித்து மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.

“ஏங்க கோவிந்த்துனு ஒருத்தர் காலைல ஆக்ஸிடெண்ட்டுனு கொண்டு வந்தாங்களே” என ரிசெப்சனில் இருந்த நர்சிடம் கேட்க அவர் கோவிந்தை ஐசியூ வில் வைத்திருப்பதாக கூறி அறைக்கு செல்லும் வழியை கூறினார்.

அனைவரும் வேக வேகமாக சென்றனர்.

“டாக்டர் நான் கோவிந்தோட மனைவி, மாமாக்கு இப்போ எப்படி இருக்கு, ஒன்னும் பிரச்சனை இல்லையே”என அவள் கைகூப்பி மருத்துவர் கண்களில் நீர் பெருக கேட்டாள்.

“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லம்மா ஆனா அவரோட கால்கள்ல தான் எலும்புகள் இரண்டு மூனு உடைஞ்சிடுச்சு பிளேட் வச்சிருக்கோம் இருந்தாலும் அவரு சுயமா எழுந்து நடக்க ஒரு வருஷம் ஆகிடும்” என கூறினார்.

லட்சுமியின் தலையில் இடிவிழுந்தது போல் ஆனது, இருந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றது சற்று நிம்மதியை தந்திருந்தது.​


மருத்துவமனையில் அவன் உடன் இருந்து அவனின் ஒவ்வொரு பணிவிடைகளையும் பார்த்து பார்த்து செய்தாள்.

இரண்டு நாள் கழித்து சிறிது பழைய நிலைக்கு திரும்பியவன் தன் கால்களை பார்த்து கண்ணீர் விட்டான்.

அருகில் பிளாஸ்கில் இருந்து காப்பி ஊற்றி கொண்டிருந்த லட்சுமி இவன் அழுவதை பார்த்து வேகமாக அருகில் வந்தாள்.

“மாமா என்னாச்சு மாமா வலிக்குதா டாக்டர வர சொல்லவா” என பதற,

“இல்ல லட்சுமி ஒரு வருஷம் நான் இப்படியே படுத்து கிடந்தா எப்படி வேலை செய்யறது இப்பதா கொஞ்சம் மீண்டு வந்தா மாதிரி இருக்கு அதுக்குள்ள இவ்வளவு பெரிய விஷயம் நடந்து இருக்கு,

எல்லாரும் சொன்னா மாதிரி எனக்கு தொழில் செட் ஆகாது தான் போல மா” என கூறியவனின் வாயை தன் கையால் வைத்து மறைத்தவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“எதுவும் இப்போ பேச வேணாம், எல்லாம் அப்பறம் பேசிக்கலாம் நீங்க பேசாம தூங்குங்க” என அவனை சமாதானப்படுத்தி உறங்க வைத்தாள்.

பத்து நாட்கள் ஆன நிலையில் கோவிந்தை வீட்டிற்க்கு அழைத்து சென்றனர்.

அதுவரை கடை விடுமுறை விடப்பட்டு இருந்தது.

ஆனால் அடுத்த நாள் முதல் லட்சுமி கடைக்கு சென்றாள்.

இன்னும் இரண்டு பெண் வேலையாட்களை துணைக்கு சேர்த்து கொண்டு வேலையை திறம்பட செய்தாள்.

“லட்சுமி உனக்கு ரொம்ப கஷ்டம்மா என்னையும் பாத்துட்டு கடையையும் பாக்க முடியாது ம்மா, பேசாம எடுத்தறலாம்” என கோவிந்த் கூறினான்.

அவனை பார்க்க வீட்டிற்க்கு வந்திருந்த அவனின் நண்பர்களும் இரண்டு மூன்று சொந்தக்கார நபர்களும் அவன் கூறியதை ஆமோதிப்பது போல வன்மத்தை இறக்கினர்.

“சொந்த தொழில் எல்லாம் எல்லாருக்கும் செட் ஆகாது, உங்களுக்கு ஒவ்வொரு தடவையும் அதான் எப்படி எப்படியோ பொருள் சேதம் வந்து உங்கள இத்தனை பாடு படுத்துது,

பேசாம வேலைக்கு போய் சம்பாதிக்கற வழிய பாருங்க”என அவர்கள் கூறியதும் பொங்கி வந்தது கோபம் லட்சுமிக்கு.

“போதும் எல்லாரும் கொஞ்சம் நிறுத்தறிங்களா, இப்போ எங்களால முடியலனு உங்க யார்கிட்டயாவது சொன்னமா, இல்ல அதுல வர நஷ்டத்த நீக்க யாரும் ஏத்துக்க போறிங்களா,

இல்லைல அப்பறம் ஏன் சும்மா நொய் நொய்ங்கறிங்க, எல்லாருக்கும் எல்லா கஷ்டமும் வரத்தான் செய்யும் அதை தாண்டி தான் போயாகனும் அதுக்காக முயற்சி செய்யாமலே இருந்தா அப்புறம் நாங்கெல்லாம் எப்படி மேல வரது,

அவருக்கு ஒன்னும் இல்ல கொஞ்ச நாள்ல நடந்துருவாரு வந்திங்களா பாத்திங்களா கிளம்பி போய்ட்டே இருங்க எங்கள பாத்துக்க எங்களுக்கு தெரியும்”என காரசாரமாக பொரிய அனைவரும் வாயடைத்து தலைகுனிந்து சென்றனர்.

“ஏன் லட்சுமி இவ்ளோ கோவம்” என பாவமாய் கேட்டவனை ஓடி சென்று இறுக அணைத்து அழ ஆரம்பித்தாள்.

“யாரோ என்னவோ சொல்லட்டும் மாமா இந்த வாட்டி எந்த சூழ்நிலைலயும் நாம தோத்தறக்கூடாது”என கூறியவளை கண்களில் நீர் கசிய அணைத்தபடி “இந்த வாட்டி நாமதான் ஜெயிக்கிறோம் லட்சு மா” என கூற,

பிள்ளைகளும் இவர்களை கட்டிக்கொண்டு “நாமதான் ஜெயிக்கறோம்” என்றார்கள்.

அடுத்த நாள் முதல் கோவிந்தும் வீல் சேரில் கடைக்கு சென்று உட்கார்ந்த படியே அவனால் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தான்.

லட்சுமியின் பெற்றோர் பிள்ளைகளையும் வீட்டையும் கவனித்து கொள்ள இவர்களும் இருவரும் கடையையும் முன்னேற்றி இவர்களும் முன்னேறினர்.

நாட்கள் செல்ல செல்ல கோவிந்தும் மெல்ல நடக்க முயன்று வந்தான்.

சிறிது நாட்களில் பழையபடி நடக்கவும் ஆரம்பித்திருந்தான்.

ஒன்றறை வருடங்களுக்கு பிறகு.

“லட்சுமி ரெடி ஆகிட்டயாமா கார் வந்துடுச்சு இப்போ கிளம்பனாவே வர நைட் ஆகிடும் சீக்கிரம் வா”

“இதோ வந்துட்டேங்க பத்திரிக்கையெல்லாம் எடுத்துக்கிட்டிங்களா? அப்பறம் அந்த சந்தன குங்கும சிமிழ் தாம்பால தட்டு எல்லாமே எடுத்தாச்சுல்ல?” என பரப்பரப்பாக கேட்டுக்கொண்டே பட்டுசேலை உடுத்தி நகை எல்லாம் அணிந்து சிலை போல வந்தவளை கண்டு சிலையாகி நின்றான் கோவிந்த்.

அவன் விழுங்குவதை போல பார்பதை கண்ட லட்சுமி “மாமா பாப்பா வயசுக்கு வந்துட்டா மஞ்சள் நீராட்டுக்கு பத்திரிக்கை வைக்கப்போறோம் இப்பதா என்ன பொண்ணு பாக்க வந்திருக்க மாதிரி வாயப்பொழந்துட்டு பாக்கறிங்க” என கிண்டலடித்ததும் நிகழ்காலத்திற்கு வந்தவன்,

“ஏன் பாப்பா வயசுக்கு வந்தா என் பொண்டாட்டிய சைட் அடிக்க கூடாதுனு எவன் சொன்னான்” என கூறிக்கொண்டே அவளை இடுப்பில் கைகொண்டு வளைத்து அணைக்க வாசலில் யாரோ உறவினர்கள் பேச்சு குரல் கேட்டு சலிப்புடன் நகர்ந்தான்.

வந்தவர்களை வரவேற்று அமரவைத்து விட்டு இருவரும் விட்டு போன சொந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்க கிளம்பினர்.

அடுத்த நாள் அந்த பெரிய மண்டபத்தின் வாயிலில் நிஹாரிகாவின் அழகிய தாவணி போட்ட புகைப்பட பேனர் வைக்கப்பட்டிருந்தது.

வரவேற்ப்பில் கோவிந்தும் லட்சுமியும் பட்டாடைகள் அணிந்து ஜொலிப்புடன் வரும் உறவினர்களையும் நண்பர்களையும் சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

மித்ரா பட்டுபாவாடை அணிந்து மத்தாப்பு போல் மண்டபத்தை சுற்றி சுற்றி வந்து அனைவரின் கண்களையும் ஈர்த்தாள்.

வந்தவர்கள் அனைவரும் காத்திருக்க நிஹாரிகாவை பட்டு சேலையுடுத்தி நகைகள் மின்ன அலங்கரித்து தேவதை போல மேடைக்கு அழைத்து வந்தனர்.

வந்திருந்த சனம் முழுவதும் அவள் அழகில் சற்று லயித்து தான் போயினர்.

கோவிந்திற்க்கும் லட்சுமிக்கும் மகளை காண காண முகம் பூரித்து போனது.

 
Last edited:
New member
Joined
Jan 19, 2025
Messages
10

வந்தவர்கள் முன்னிலையில் சடங்கு சம்பிரதாயங்கள் அமோகமாக நடந்து முடிக்க அனைவரும் விருந்தை உண்டு விட்டு மொய் எழுத வந்த வேளையில் கோவிந்தும் லட்சுமியிம் மேடையேறி,

“யாரும் தப்பா நெனச்சிக்க வேணாம் நாங்க மொய் வாங்க விரும்பல, அதனால நீங்க யாரும் மொய்யோ வேற எதும் பரிசு பொருளோ எதுமே தர வேண்டாம்,

நாங்க அத எதுவும் வாங்க கூடாதுனு முடிவு செஞ்சு தான் இந்த நிகழ்ச்சியவே நடத்தனோம் பத்திரிக்கைலயே போட்டு இருந்தோம் எத்தனை பேர் படிச்சிங்கனு தெரில இருந்தாலும் இப்போவும் சொல்றோம் நீங்க எல்லாரும் வந்து விஷேஷத்தை நல்ல படியா நடத்தி கொடுத்ததுக்து நன்றி எல்லாரும் தாம்பூலம் வாங்கிட்டு தான் போகனும்”என சிரித்த முகத்துடனே கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினர்.

குழம்பிய சில நெருங்கிய உறவுகளுக்கு லட்சுமி “நாங்க நல்லா இருக்க மாட்டோம், எங்களுக்கு எந்த தொழில் செஞ்சாலும் நஷ்டம் தான் ஆகும் அப்படினு நினைச்சு இருந்தவங்களுக்கு நாங்க நல்லா தான் இருக்கோம் நீங்க எங்கள பத்தி கவலை படவேணாம்னு சொல்லதான் இத்தனை கிராண்டா இந்த பங்ஷன் மத்தபடி அவங்க கிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் வேணாம்” என கூற அனைவரும் வாயடைத்து போயினர்.

அன்று இரவு லட்சுமி கோவிந்தின் மடியில் படுத்திருக்க அவள் தலையை வருடியபடி “நாம ஜெயிச்சிச்சிடோமா தங்கம்”என கோவிந்த் கேட்க,

“இல்ல மாமா இதுக்கு பேர் வெற்றி இல்ல இப்போ தான் நிலைச்சி இருக்கோம் நிலைச்சத தக்க வைக்கனும் அதுக்கு நாம இன்னும் நிறைய வேலை செய்யனும் நிறைய உழைக்கனும்”என கூறியவளை பெருமிதமாக பார்த்தான்.

“நாம இரண்டு பேரும் சேர்ந்து முன்னேறலாம் மாமா” என அவன் கைகளை இறுகப்பற்றிக்கொள்ள அவனும் அவள் கைகளை பற்றிக்கொண்டான்.

காதல் எதையும் செய்யும் எந்த எல்லைக்கும் போகும் எந்த வெற்றிகனியையும் பறித்து தன்வசமாக்கும்.

அவர்களுக்கு கிடைக்கும் துணையின் துணை கொண்டு.

 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கோவிந்த்கு கிடைத்த லட்சுமி மாதிரி. கதை ரொம்ப நல்லாயிருந்தது புவனா.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐
 
New member
Joined
Jan 19, 2025
Messages
10
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கோவிந்த்கு கிடைத்த லட்சுமி மாதிரி. கதை ரொம்ப நல்லாயிருந்தது புவனா.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐
நன்றி க்கா🥰
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top