Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 30
- Thread Author
- #1
சென்னை ஐ.ஜி அலுவலகம். காலையிலேயே மிகுந்த பரபரப்பாக இருந்தது. அனைத்து உயர் அதிகாரிகளும், மிகுந்த பரபரப்புடன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு விரைந்து வந்தார்கள். அனைத்து அதிகாரிகளையும் தங்கள் கைபேசியின் சத்தத்தைக் குறைத்து வைக்கச் சொல்லிக் கட்டளை வந்தது.
அனைத்து அதிகாரிகளும் தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க, “ஐ.ஜிக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதால், டி.ஐ.ஜி தான் இப்போது வருவார்” என்று ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொன்னார்.
ஒருத்தருக்கும் என்ன பிரச்சினை என்று முழுமையாகத் தெரியாமல்
தெரியாது என்றனர். அவர்களாகவே ஒரு யூகம் செய்து, “அந்தப் பிரச்சினையாக இருக்குமோ?” என்று அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டார்கள்.
அனைத்து உயர் அதிகாரிகளும் வந்தது அறிந்ததும்,
அந்தக் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு கம்பீரமாக வேகமாக நுழைந்தார்
டி.ஐ.ஜி இராமநாதன். டி.ஐ.ஜி வந்ததும், அமர்ந்து இருந்த அனைத்து அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.
அனைவரையும் அமரச் சொல்லி விட்டு, கைபேசியில் தகவல் எதுவும் வந்ததா என்று பார்த்தார். அனைத்து அதிகாரிகளும்
டி.ஐ.ஜி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார். நம் காவல்துறைக்கு ஒரு சமூக விரோத அமைப்புச் சவால் விட்டிருக்கிறது. நாளை இரவுக்குள் தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும். நாங்கள் அந்த இடத்தை க்ளூவாகச் சொல்கிறோம். முடிந்தால் காவல்துறை அதைத் தடுத்து பாருங்கள் என்று உளவுத்துறை மூலம் ஒரு மெசேஜ் வந்தது” என்றார்.
அனைத்து அதிகாரிகளின் முகத்திலும் அதிர்ச்சி. மீண்டும் டி.ஐ.ஜி,
“அந்த க்ளூ இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும். அதான் மொபைலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.
அப்போது அவர் கைபேசிக்குக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் வந்தது. அதை அங்கே உள்ள பெரிய திரையில் தெரியும்படி செய்தார் டி.ஐ.ஜி.
‘ஒன்றாவது க்ளூ, 8,4,9 – 24.
இரண்டாவது க்ளூ, மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று.
மூன்றாவது க்ளூ, பி.சி.33.’ அதோடு முற்றுப் பெற்றிருந்தது தகவல்.
அப்போது டி.ஐ.ஜிக்கு ஒரு அழைப்பு வந்தது, அழைப்பில் உள்ள பெயரைப் பார்த்ததும், அமர்ந்து இருந்தவர் உடனே எழுந்தார்.
அவர் எழுந்தவுடன் அனைத்து அதிகாரிகளும் எழ முயற்சிக்க, டி.ஐ.ஜி அனைவரையும் அமரும்படி சைகை செய்து கொண்டே பவ்யமாகப் பேசினார்.
எதிர் முனையில் பேசியவர் தமிழக முதல்வர். “உங்களுக்கு என்ன அதிகாரம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். என் தமிழக பொதுமக்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று சொன்னார். “மேலும் உங்களுக்கு இன்னும் கூடுதலாகக் காவலர்கள் வேண்டும் என்றாலும், என் அனுமதிக்குக் காத்திருக்காமல், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்,
சீக்கிரம் கண்டுபிடியுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தவர், “முதல்வர் தான் இப்போது பேசினார். நமக்கு எந்த அதிகாரம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார். சந்தேகம் என்றால் என் கட்சி உறுப்பினர் என்று கூடப் பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். நாம் தான் நடக்கபோக இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுக்க வேண்டும். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மறந்து இதை முறியடிக்க வேண்டும். இது உண்மையிலேயே நமக்கு விடுத்த சவால்தான். இதைப் பற்றி உங்களுடைய யோசனை எதுவாக இருந்தாலும், தயங்காமல் சீக்கிரம் தெரிவியுங்கள்” என்றார்.
ஒரு அதிகாரி எழுந்து, “இதை மொத்தமாக விசாரித்தோம் என்றால் காலதாமதம் ஆகும். அதனால், மூன்று க்ளூவையும் இங்குள்ள அதிகாரிகள், மூன்று குழுக்களாகப் பிரிந்து முயற்சி செய்தால் நல்லா இருக்கும்” என்றார்.
“அவரின் ஆலோசனை நல்லாதான் இருக்கிறது” என்று டி.ஐ.ஜி சொல்லி விட்டு, உடனே மூன்று குழுக்களாகப் பிரிக்க முயற்சி செய்தார். பிறகு ஒவ்வொரு குழுவிலும் தலைமை பொறுப்பு ஏற்க, ஒரு அதிகாரியை நியமித்தார் டி.ஐ.ஜி
“நாம் அனைவரும் மற்ற குழுவில் உள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள, புதிதாக வாட்சப்பில் ஒரு குரூப் ஏற்படுத்தித் தருகிறேன்” என்றவர் பிறகு அனைவரிடமும், “இந்த ஆபரேஷனுக்கு காவலுக்கு சவால் என்று பெயர். இந்தச் சதித்திட்டம் முறியடித்த பிறகு, இந்த வாட்சப் குழு இயங்காது. அனைவரும் இது நமக்கும் சமூக விரோதியின் புத்தி கூர்மைக்கும் நடக்கும் சவால் என்று நினைத்துத் துரிதமாகச் செயல்படுங்கள். கான்பரன்ஸ் முடிந்தது” என்று சொல்லி விட்டு டி.ஐ.ஜி அவர் அறைக்குச் சென்றார்.
அனைத்து அதிகாரிகளும் தங்கள் கைபேசியின் சத்தத்தை அதிகரித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு அழைத்து, “நான் ஒரு முக்கியமான கடமை பொறுப்பு காரணமாக உங்கள் அழைப்பை ஏற்க முடியாது. அதி முக்கியமான தகவல் என்றால் மட்டும், வாட்சப்பில் மெசேஜ் செய்யவும்” என்று அனைவரும் சொல்லி விட்டு, மீண்டும் கடமை பொறுப்பைப் பார்க்கச் சென்றார்கள்.
முதலில் உள்ள க்ளூவை ஒரு குழு யோசிக்க ஆரம்பித்தது. 8,4,9, - 24 என்று ஒவ்வொரு நம்பராக யூகித்துப் பார்த்தார்கள். “8 என்பது தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலிலிருந்து எட்டா? அல்லது கடைசியிலிருந்து எட்டா? என்று யோசித்து பார்த்தார்கள். அப்படி அவர்கள் நினைத்து ஒரு மாவட்டத்தின் பெயர் வர, அப்போ 4 என்றால் என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ள 4 வது பெரிய நகரமாக இருக்குமோ? அப்படி என்றால், 9 க்கு என்னவாக இருக்கும்?” என்று யோசிக்கும்போது குழப்பம்தான் வந்தது.
“அப்படியே எல்லாம் ஓரளவு சரியாக வந்தால், கடைசியில் 24 என்று இருக்கிறதே. அது என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த நகரத்தில் உள்ள ஒரு தெருவாக இருக்குமோ?” என்று யூகம் செய்தார்கள்.
ஒருவர் அந்த யூகம் சரியென்றால், மற்றொருவர் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போலப் பதில் சொன்னார்.
அடுத்த குழுவில் உள்ளவர்கள் இரண்டாம் க்ளூவான, ‘மரை+செவிலியர்+நான்கில் ஒன்று’ என்பதை தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, கடைசியில் சேர்த்து பார்த்தால் தமிழ் நாட்டில் அப்படியொரு இடமே இல்லை.
மூன்றாவது குழு மூன்றாம் க்ளூவான, ‘பி.சி.33’
என்பதை வருடத்தைக் கணக்கு செய்து, அந்த வருடத்தில் ஏதாவது விசேசமான பெயரைத் தமிழ் நாட்டில் உள்ள இடங்களில் வைத்து யூகித்து பார்த்தார்கள். எதுவும் சரியாக வரவில்லை.
அனைத்து அதிகாரிகளும் தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க, “ஐ.ஜிக்கு உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதால், டி.ஐ.ஜி தான் இப்போது வருவார்” என்று ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொன்னார்.
ஒருத்தருக்கும் என்ன பிரச்சினை என்று முழுமையாகத் தெரியாமல்
தெரியாது என்றனர். அவர்களாகவே ஒரு யூகம் செய்து, “அந்தப் பிரச்சினையாக இருக்குமோ?” என்று அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டார்கள்.
அனைத்து உயர் அதிகாரிகளும் வந்தது அறிந்ததும்,
அந்தக் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு கம்பீரமாக வேகமாக நுழைந்தார்
டி.ஐ.ஜி இராமநாதன். டி.ஐ.ஜி வந்ததும், அமர்ந்து இருந்த அனைத்து அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.
அனைவரையும் அமரச் சொல்லி விட்டு, கைபேசியில் தகவல் எதுவும் வந்ததா என்று பார்த்தார். அனைத்து அதிகாரிகளும்
டி.ஐ.ஜி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார். நம் காவல்துறைக்கு ஒரு சமூக விரோத அமைப்புச் சவால் விட்டிருக்கிறது. நாளை இரவுக்குள் தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும். நாங்கள் அந்த இடத்தை க்ளூவாகச் சொல்கிறோம். முடிந்தால் காவல்துறை அதைத் தடுத்து பாருங்கள் என்று உளவுத்துறை மூலம் ஒரு மெசேஜ் வந்தது” என்றார்.
அனைத்து அதிகாரிகளின் முகத்திலும் அதிர்ச்சி. மீண்டும் டி.ஐ.ஜி,
“அந்த க்ளூ இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும். அதான் மொபைலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.
அப்போது அவர் கைபேசிக்குக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் வந்தது. அதை அங்கே உள்ள பெரிய திரையில் தெரியும்படி செய்தார் டி.ஐ.ஜி.
‘ஒன்றாவது க்ளூ, 8,4,9 – 24.
இரண்டாவது க்ளூ, மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று.
மூன்றாவது க்ளூ, பி.சி.33.’ அதோடு முற்றுப் பெற்றிருந்தது தகவல்.
அப்போது டி.ஐ.ஜிக்கு ஒரு அழைப்பு வந்தது, அழைப்பில் உள்ள பெயரைப் பார்த்ததும், அமர்ந்து இருந்தவர் உடனே எழுந்தார்.
அவர் எழுந்தவுடன் அனைத்து அதிகாரிகளும் எழ முயற்சிக்க, டி.ஐ.ஜி அனைவரையும் அமரும்படி சைகை செய்து கொண்டே பவ்யமாகப் பேசினார்.
எதிர் முனையில் பேசியவர் தமிழக முதல்வர். “உங்களுக்கு என்ன அதிகாரம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். என் தமிழக பொதுமக்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று சொன்னார். “மேலும் உங்களுக்கு இன்னும் கூடுதலாகக் காவலர்கள் வேண்டும் என்றாலும், என் அனுமதிக்குக் காத்திருக்காமல், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்,
சீக்கிரம் கண்டுபிடியுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தவர், “முதல்வர் தான் இப்போது பேசினார். நமக்கு எந்த அதிகாரம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளச் சொல்லி விட்டார். சந்தேகம் என்றால் என் கட்சி உறுப்பினர் என்று கூடப் பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். நாம் தான் நடக்கபோக இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுக்க வேண்டும். நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மறந்து இதை முறியடிக்க வேண்டும். இது உண்மையிலேயே நமக்கு விடுத்த சவால்தான். இதைப் பற்றி உங்களுடைய யோசனை எதுவாக இருந்தாலும், தயங்காமல் சீக்கிரம் தெரிவியுங்கள்” என்றார்.
ஒரு அதிகாரி எழுந்து, “இதை மொத்தமாக விசாரித்தோம் என்றால் காலதாமதம் ஆகும். அதனால், மூன்று க்ளூவையும் இங்குள்ள அதிகாரிகள், மூன்று குழுக்களாகப் பிரிந்து முயற்சி செய்தால் நல்லா இருக்கும்” என்றார்.
“அவரின் ஆலோசனை நல்லாதான் இருக்கிறது” என்று டி.ஐ.ஜி சொல்லி விட்டு, உடனே மூன்று குழுக்களாகப் பிரிக்க முயற்சி செய்தார். பிறகு ஒவ்வொரு குழுவிலும் தலைமை பொறுப்பு ஏற்க, ஒரு அதிகாரியை நியமித்தார் டி.ஐ.ஜி
“நாம் அனைவரும் மற்ற குழுவில் உள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள, புதிதாக வாட்சப்பில் ஒரு குரூப் ஏற்படுத்தித் தருகிறேன்” என்றவர் பிறகு அனைவரிடமும், “இந்த ஆபரேஷனுக்கு காவலுக்கு சவால் என்று பெயர். இந்தச் சதித்திட்டம் முறியடித்த பிறகு, இந்த வாட்சப் குழு இயங்காது. அனைவரும் இது நமக்கும் சமூக விரோதியின் புத்தி கூர்மைக்கும் நடக்கும் சவால் என்று நினைத்துத் துரிதமாகச் செயல்படுங்கள். கான்பரன்ஸ் முடிந்தது” என்று சொல்லி விட்டு டி.ஐ.ஜி அவர் அறைக்குச் சென்றார்.
அனைத்து அதிகாரிகளும் தங்கள் கைபேசியின் சத்தத்தை அதிகரித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு அழைத்து, “நான் ஒரு முக்கியமான கடமை பொறுப்பு காரணமாக உங்கள் அழைப்பை ஏற்க முடியாது. அதி முக்கியமான தகவல் என்றால் மட்டும், வாட்சப்பில் மெசேஜ் செய்யவும்” என்று அனைவரும் சொல்லி விட்டு, மீண்டும் கடமை பொறுப்பைப் பார்க்கச் சென்றார்கள்.
முதலில் உள்ள க்ளூவை ஒரு குழு யோசிக்க ஆரம்பித்தது. 8,4,9, - 24 என்று ஒவ்வொரு நம்பராக யூகித்துப் பார்த்தார்கள். “8 என்பது தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலிலிருந்து எட்டா? அல்லது கடைசியிலிருந்து எட்டா? என்று யோசித்து பார்த்தார்கள். அப்படி அவர்கள் நினைத்து ஒரு மாவட்டத்தின் பெயர் வர, அப்போ 4 என்றால் என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ள 4 வது பெரிய நகரமாக இருக்குமோ? அப்படி என்றால், 9 க்கு என்னவாக இருக்கும்?” என்று யோசிக்கும்போது குழப்பம்தான் வந்தது.
“அப்படியே எல்லாம் ஓரளவு சரியாக வந்தால், கடைசியில் 24 என்று இருக்கிறதே. அது என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த நகரத்தில் உள்ள ஒரு தெருவாக இருக்குமோ?” என்று யூகம் செய்தார்கள்.
ஒருவர் அந்த யூகம் சரியென்றால், மற்றொருவர் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போலப் பதில் சொன்னார்.
அடுத்த குழுவில் உள்ளவர்கள் இரண்டாம் க்ளூவான, ‘மரை+செவிலியர்+நான்கில் ஒன்று’ என்பதை தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, கடைசியில் சேர்த்து பார்த்தால் தமிழ் நாட்டில் அப்படியொரு இடமே இல்லை.
மூன்றாவது குழு மூன்றாம் க்ளூவான, ‘பி.சி.33’
என்பதை வருடத்தைக் கணக்கு செய்து, அந்த வருடத்தில் ஏதாவது விசேசமான பெயரைத் தமிழ் நாட்டில் உள்ள இடங்களில் வைத்து யூகித்து பார்த்தார்கள். எதுவும் சரியாக வரவில்லை.