• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
26
அனைத்து வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏

நான் வேறு ஒரு தளத்தில் எழுத்தாளராக உள்ளேன்.

முதல் முறையாக முகநூலில் கதை எழுதுகிறேன்.

எனக்கு வாய்ப்பு தந்த
sornasandhanakumarnovels@gmail.com
அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏


"காவலுக்கு சவால்"
இது கிரைம் கதை.

கதையில் ஏதேனும் தவறு இருந்தால்
படிக்கும் உறவுகள் தயங்காமல் சுட்டி காட்ட வேண்டுகிறேன் 🙏 🙏 🙏

இனி கதைக்குள்,

சென்னை -
ஐ.ஜி அலுவலகம்
காலையிலேயே மிகுந்த பரபரப்பாக இருந்தது.

அனைத்து உயர் அதிகாரிகளும்
மிகுந்த பரபரப்புடன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு விரைந்து வந்தார்கள்.

அனைத்து அதிகாரிகளையும் தங்கள்
மொபைலை சைலண்ட் மோடில் போட்டு வைக்க சொல்லி கட்டளை வந்தது.

அனைத்து அதிகாரிகளும்
தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க,

ஐ.ஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால்,
டி.ஐ.ஜி தான் இப்போது வருவார் என்று ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொன்னார்.

ஒருத்தருக்கும் என்ன பிரச்சினை என்று முழுமையாக தெரியாமல்
தெரியாது தெரியாது என்றனர்.

அவர்களாகவே ஒரு யூகம் செய்து
அந்த பிரச்சினையாக இருக்குமோ என்று அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டார்கள்.

அனைத்து உயர் அதிகாரிகளும் வந்தது அறிந்ததும்,
அந்த கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு கம்பீரமாக வேகமாக நுழைந்தார்
டி.ஐ‌.ஜி இராமநாதன்.

டி.ஐ.ஜி வந்ததும் அமர்ந்து இருந்த அனைத்து அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.

அனைவரையும் அமர சொல்லி விட்டு,
மொபைலில் மெசேஜ் எதுவும் வந்ததா என்று பார்த்தார்.

அனைத்து அதிகாரிகளும்
டி.ஐ.ஜி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார்.

நம் காவல்துறைக்கு ஒரு சமூக விரோத அமைப்பு சவால் விட்டிருக்கிறது.

நாளை இரவுக்குள் தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும்.

நாங்கள் அந்த இடத்தை
க்ளுவாக சொல்கிறோம்,
முடிந்தால் காவல் துறை அதை தடுத்து பாருங்கள் என்று
உளவுத்துறை மூலம் ஒரு மெசேஜ் வந்தது என்றார்.

அனைத்து அதிகாரிகளின் முகத்திலும் அதிர்ச்சி.

மீண்டும் டி.ஐ.ஜி
அந்த க்ளு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் அதான் மொபைலை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்றார்.

அப்போது அவர் மொபைலுக்கு உளவுத்துறையில் இருந்து மெசேஜ் வந்தது.

அதை அங்கே உள்ள பெரிய திரையில் தெரியும் படி செய்தார் டி.ஐ.ஜி.

1வது க்ளு
8,4,9 - 24

2 வது க்ளு
மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று

3 வது க்ளு
பி.சி.33
அதோடு முற்றுப் பெற்றிருந்தது மெசேஜ்.

அப்போது டி.ஐ.ஜிக்கு ஒரு அழைப்பு வந்தது,
அழைப்பில் உள்ள பெயரை பார்த்ததும் அமர்ந்து இருந்தவர் உடனே எழுந்தார்.

அவர் எழுந்தவுடன் அனைத்து அதிகாரிகளும் எழ முயற்சிக்க,

டி.ஐ.ஜி அனைவரையும் அமரும் படி சைகை செய்து கொண்டே பவ்யமாக பேசினார்.
எதிர் முனையில் பேசியவர் தமிழக முதல்வர்.
உங்களுக்கு என்ன அதிகாரம் தேவையோ அதை எடுத்து கொள்ளுங்கள்.

என் தமிழக பொதுமக்களுக்கு எதுவும் ஆக கூடாது என்று சொன்னார்.

மேலும் உங்களுக்கு இன்னும் கூடுதலாக காவலர்கள் வேண்டும் என்றாலும் என் அனுமதிக்கு காத்திருக்காமல் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்,
சீக்கிரம் கண்டுபிடியுங்கள் என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார்,
முதல்வர் தான் இப்போது பேசினார் என்றார்.
நமக்கு எந்த அதிகாரம் வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ள சொல்லி விட்டார்.

சந்தேகம் என்றால் என் கட்சி உறுப்பினர் என்று கூட பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
நாம் தான் நடக்க போக இருக்கும் அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என்றார்.

நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மறந்து இதை முறியடிக்க வேண்டும்.

இது உண்மையிலேயே நமக்கு விடுத்த சவால் தான்.

இதை பற்றி உங்களுடைய யோசனை எதுவாக இருந்தாலும் தயங்காமல் சீக்கிரம் தெரிவியுங்கள் என்றார்.

ஒரு அதிகாரி எழுந்து,
இதை மொத்தமாக விசாரித்தோம் என்றால் காலதாமதம் ஆகும்.

அதனால் மூன்று க்ளுவை
இங்குள்ள அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து முயற்சி செய்தால் நல்லா இருக்கும் என்றார்.

அவரின் ஆலோசனை நல்லா தான் இருக்கிறது என்று டி.ஐ.ஜி சொல்லி விட்டு, உடனே மூன்று குழுக்களாக பிரிக்க முயற்சி செய்தார்.

பிறகு ஒவ்வொரு குழுவிலும் ஒரு
தலைமை பொறுப்பு ஏற்க
ஒரு அதிகாரியை நியமித்தார் டி.ஐ‌.ஜி

நாம் அனைவரும் மற்ற குழுவில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ள, புதிதாக வாட்சப்பில் ஒரு குரூப் ஏற்படுத்தி தருகிறேன்.

பிறகு அனைவரிடமும் இந்த ஆபரேஷனுக்கு "காவலுக்கு சவால்"
என்று பெயர்.

இந்த சதித்திட்டம் முறியடித்த பிறகு
இந்த வாட்சப் குழு இயங்காது என்றார்.

அனைவரும் இது நமக்கும் சமூக விரோதியின் புத்தி கூர்மைக்கும் நடக்கும் சவால் என்று நினைத்து துரிதமாக செயல்படுங்கள் என்றார்.

கான்பரன்ஸ் முடிந்தது என்று சொல்லி விட்டு டி.ஐ.ஜி அவர் அறைக்கு சென்றார்.

அனைத்து அதிகாரிகளும்
தங்கள் மொபைலை சைலண்ட் மோடில் இருந்து எடுத்து விட்டு,
அவரவர் வீட்டுக்கு போன் செய்து
நான் ஒரு முக்கியமான கடமை பொறுப்பு காரணமாக உங்கள் அழைப்பை ஏற்க முடியாது,

அதி முக்கியமான தகவல் என்றால் மட்டும் வாட்சப்பில் மெசேஜ் செய்யவும் என்று அனைவரும் சொல்லி விட்டு,
மீண்டும் கடமை பொறுப்பை பார்க்க சென்றார்கள்.

முதலில் உள்ள க்ளுவை ஒரு குழு
யோசிக்க ஆரம்பித்தது.

8,4,9, - 24 என்று ஒவ்வொரு நம்பரையா யூகித்து பார்த்தார்கள்.

8 என்பது தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலில் இருந்து எட்டா? அல்லது கடைசியில் இருந்து எட்டா?என்று யோசித்து பார்த்தார்கள்.

அப்படி அவர்கள் நினைத்து ஒரு மாவட்டத்தின் பெயர் வர,

அப்போ 4 என்றால் என்னவாக இருக்கும்?
ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ள 4 வது பெரிய நகரமாக இருக்குமோ?

அப்படி என்றால்,
9 க்கு என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது குழப்பம் தான் வந்தது.

அப்படியே எல்லாம் ஓரளவு சரியாக வந்தால், கடைசியில் 24 என்று இருக்கிறதே,
அது என்னவாக இருக்கும்?
ஒருவேளை அந்த நகரத்தில் உள்ள ஒரு தெருவாக இருக்குமோ என்று யூகம் செய்தார்கள்.

ஒருவர் அந்த யூகம் சரியென்றால்
மற்றொருவர் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல பதில் சொன்னார்.


அடுத்த குழுவில் உள்ளவர்கள்
இரண்டாம் க்ளுவான

மரை+செவிலியர்+நான்கில் ஒன்று என்பதை தனித்தனியாக பிரித்து பார்த்து , கடைசியில் சேர்த்து பார்த்தால் தமிழ் நாட்டில் அப்படி ஒரு இடமே இல்லை.

மூன்றாவது குழு
மூன்றாம் க்ளுவான
பி.சி.33
என்பதை வருடத்தை கணக்கு செய்து,
அந்த வருடத்தில் ஏதாவது விசேசமான பெயரை தமிழ் நாட்டில் உள்ள இடங்களில் வைத்து யூகித்து பார்த்தார்கள்.

எதுவும் சரியாக வரவில்லை.
 
Joined
Mar 17, 2025
Messages
26
வாட்சப்பில் அப்பப்ப
காவலுக்கு சவால் குரூப்பில் ஏதாவது மெசேஜ் வந்ததா என்று பார்த்து கொண்டார்கள்.

மூன்று குழுவிலும்
மூன்று க்ளுக்களிலும் ஒரு முன்னேற்றம் கூட இல்லை.

ஒரு சிலர் தங்கள் குழுவில் உள்ள க்ளுவை வைத்து
கூகுளில் தேடினார்கள்.

சிலர் முகநூலில் தேடி பார்த்தார்கள்.

வேறு சிலர் யூடியூபில் அந்த க்ளுவை வைத்து பார்த்தார்கள்.

எங்கேயும் அதற்கு விடை கிடைக்கவில்லை.

உண்மையிலேயே சவாலாக தான் இருந்தது காவல்துறைக்கு.

ஆனால் நம் காவல் துறையினர்
முயற்சி செய்வதில் சளைத்தவர்களா என்ன!

தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள்.

அப்போது அனைவரின் வாட்சப்பில்
ஒரு அதிர்ச்சியான தகவல் வந்தது.

அது என்னவென்றால்,
சமூக விரோதி நாளை இரவு வரை என்று சொன்னவன்,
இன்று இரவுக்குள் நாங்கள் சொன்ன நகரங்களில் முக்கியமான இடத்தில் குண்டு வெடிக்கும் என்றும்,
கவுண்டன் ஆரம்பமாகி விட்டது என்றும் தகவல் இருந்தது.

அனைத்து அதிகாரிகளும் மீண்டும் இது நமக்கு விடுத்த சவால் தான்,
இதை முறியடிப்போம் என்று சொல்லி இன்னும் உத்வேகமாக செயல் பட ஆரம்பித்தார்கள்.

அவர்களின் கடின முயற்சிக்கு
பலன் கிடைத்தது.

முதல் குழுவினர்
முதல் க்ளுவை கண்டு பிடித்து விட்டார்கள்.

அது,
8 என்பது ஆங்கில எழுத்தில் எச்
என்றும் 4 என்பது ஆங்கில எழுத்தில்
டி என்றும் 9 என்பது ஆங்கில எழுத்தில் ஐ என்றும் கண்டுபிடித்தார்கள்.

அதன் படி
எச்.டி.ஐ என்று ஒரு ஆங்கில வார்த்தையின் சுருக்கம் வந்தது ‌.

அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது மீண்டும் அதே குழுவில் உள்ள ஒரு காவல் ஆய்வாளர் ,

அதன் விரிவாக்கம்.
எச் - ஹியுமன்
டி- டெவலப்மெண்ட்
ஐ- இன்டெக்ஸ்
என்றார்.

இரண்டையும் சேர்த்து விட்டு
24 என்பதற்கு என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது,
வேறு ஒரு காவல் ஆய்வாளர்,
ஹியுமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ் நம்பர் 24 என்பது
ஜப்பானை குறிக்கும்.

அப்போ தமிழ்நாட்டில் ஜப்பான் என்பது சிவகாசியை தான்
குட்டி ஜப்பான் என்று சொன்னதும்,
அந்த குழுவில் உள்ள அனைவரும் கை தட்டி பாராட்டினார்கள்.

உடனே இதை டி.ஐ.ஜியிடம் சொல்லி விட்டு, காவலுக்கு சவால் வாட்சப் குழுவிலும் தகவல் அனுப்பினார்கள்.

உடனே டி.ஐ.ஜி இராமநாதன் சிவகாசி
காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கொடுத்த ஒரு மணி நேரத்தில் சிவகாசியில் முக்கியமான இடங்களில் வெடி குண்டு நிபுணர்கள் மூலம் சோதித்து,
கடைசியில் மக்கள் அதிகம் கூடும் ஒரு பொது இடத்தில் சக்திவாய்ந்த வெடி குண்டு இருந்தது.

அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தார்கள்.

அந்த தகவலை டி.ஐ.ஜிக்கு
சிவகாசி காவல் கண்காணிப்பாளர் அனுப்பி வைத்தார்.

அவரும் அதை
காவலுக்கு சவாலில்
முதல் சவாலை வெற்றி பெற்றோம் என்று வாட்சப்பில் காவலுக்கு சவால் குழுவுக்கு அனுப்பி வைத்தார்.

அதை பார்த்து அனைத்து காவல்துறையினருக்கும் அளவில்லா மகிழ்ச்சி.

இன்னும் உத்வேகமாக செயல் பட்டால் அடுத்த இரண்டு சவால்களிலும் வெற்றி பெறுவோம் என்று மீண்டும் டி.ஐ.ஜி தகவல் அனுப்பினார்.

அடுத்த க்ளுவை கண்டு பிடிக்க
இப்போது முதல் குழுவும்
இரண்டாவது குழுவுடன் சேர்ந்து கொண்டது.

மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று
என்பதில்,
மரை என்பதற்கு தமிழில் மான் என்று பொருள் என ஒரு காவல் ஆய்வாளர் சொன்னார்
 
Joined
Mar 17, 2025
Messages
26
அப்போ அடுத்த வார்த்தை செவிலியர் என்பது அவர் சிஸ்டர் என்று சொன்னார்.

அப்போ இரண்டையும் சேர்த்து பார்த்தால்,
மான்+சிஸ்டர்=மான்செஸ்டர் என்று வருகிறது.

அப்போ அந்த நான்கில் ஒன்று என்பது என்னவாக இருக்கும் என்று யூகிக்க ஆரம்பித்தார்கள்.

நான்கு வேதங்களில் ஏதாவது ஒன்றா அல்லது
நான்கு யுகங்களில் ஏதாவது ஒன்றா என்று யோசிக்கும் போது,

ஒரு காவல் துணை ஆய்வாளர்
நான்கு திசைகளில் ஒன்றாக இருக்கலாம் என்றார்.

ஒவ்வொரு திசையாக வைத்து யோசித்து விட்டு,
இறுதியில் அது தெற்கு என்று உறுதியாக சொன்னார்.

அது சரியாக தான் இருக்கும் என்று சிலர் சொல்ல,

அதன் படி
மான்செஸ்டர்+ தெற்கு= மான்செஸ்டர் தெற்கு என்று வார்த்தை வந்தது.

மான்செஸ்டர் என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில் நகரம்.

அதேபோல் தென்னிந்தியாவில் நெசவு தொழிலில் மிகப்பெரிய தொழில் நகரமான கோயம்புத்தூரை
மான்செஸ்டர் ஆப் சவுத் என்று சொல்வார்கள் என சொல்லி முடித்த,
உடனே டி.ஐ.ஜி க்கு தகவல் தரப்பட்டது.

அவரும் உடனே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார்.

கோவை கண்காளிப்பாளருக்கு தகவல் கிடைத்ததும்,
உடனே வெடிகுண்டு நிபுணர்களுடன் கோவையில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு சோதனை செய்ய தீவிரமாக முயற்சி செய்தார்.

கடைசியில் மக்கள் அதிகம் கூடும்
ஒரு இடத்தில் சக்திவாய்ந்த வெடி குண்டு இருப்பது தெரிந்தது.

அதை வெடிகுண்டு நிபுணர்கள்
ஜாக்கிரதையாக செயல் இழக்க செய்தார்கள்.

சக்தி வாய்ந்த வெடிகுண்டை
செயல் இழக்க செய்ததை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
டி.ஐ.ஜி இராமநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

அவரும் உடனே
காவலுக்கு சவால் வாட்சப் குழுவில்,
ஒரு சந்தோசமான செய்தி
இரண்டாவது சவாலிலும் வெற்றி பெற்று விட்டோம்.

ஆம் கோவையில் உள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்து விட்டார்கள் என்றார்.

அடுத்து மூன்றாவது சவாலிலும் சீக்கிரம் வெற்றி காண வேண்டும்.

ஏனெனில் இப்போது இரவு வரும் நேரம் ஆகிவிட்டது என்றார்.

மீண்டும் மூன்றாவது க்ளுவை பற்றி கண்டுபிடிக்க இந்த முறை மூன்று குழுக்களும் சேர்ந்து கண்டு பிடிக்க முயற்சி செய்தார்கள்.

அப்போது முதல்வரிடம் இருந்து ஒரு
டி.ஐ.ஜிக்கு பாராட்டு வந்தது,
இரண்டு மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தடுத்ததற்கு காவல்துறை
பாராட்டுகிறேன் என்றும்
மூன்றாவது அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்து விட்டு வாருங்கள்,
தமிழக அரசு சார்பில் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அதை அப்படியே காவலுக்கு சவால் வாட்சப் குழுவில் அனுப்பினார் டி.ஐ.ஜி .

முதல்வரின் பாராட்டால் மகிழ்ந்த
காவல் துறையினர் இன்னும் உற்சாகமாக கடமையாற்ற தயாரானார்கள்.

பி.சி 33 என்பதை பல கோணங்களில் யோசித்து பார்த்தார்கள்.

பி.சி என்பதின் விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்றும்
அதன் பெயரில் தமிழ் நாட்டில் முக்கியமான நகரம் உள்ளதா என்று யோசித்தார்கள்.

33 என்பது
தமிழ் எழுத்துக்களில் உள்ள எண்ணாக இருக்குமோ அல்லது
ஆங்கில எழுத்தில்
மூன்றாவது எழுத்தான சி சி
என்று இருக்குமோ?

அப்படி என்றால் சி சி என்று முடியும் உள்ள நகரங்களை யோசித்து பார்த்தார்கள்.

ஒரு சிலர் திருச்சியாக இருக்குமோ என்று முடிவு செய்தார்கள்.

ஆனால் அது சரியாக இருக்காது என்று பலர் சொன்னார்கள்.

இருப்பினும் நமக்கு நேரம் குறைவு என்பதால்,
திருச்சியில் முக்கியமான இடங்களில் வெடி குண்டு சோதனை செய்ய சொல்வோம் என்றார்கள்.

அதை டி.ஐ.ஜிக்கும் சொன்னார்கள்.

டி.ஐ.ஜியும் நேரம் குறைவாக இருப்பதால்,

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்களும் திருச்சியில் உள்ள முக்கியமான இடங்களில் எல்லாம்
அதிவேகமாக வெடி குண்டு சோதனை செய்தார்கள்.

எங்கேயும் வெடி குண்டு கிடைக்க வில்லை.

டி.ஐ.ஜி அலுவலகத்தில் உள்ள காவல்துறையினர் மற்ற இரண்டு இடங்களிலும் உடனே வெடிகுண்டு செயல் இழக்க செய்து விட்டோம் என்று தகவல் வந்தது.

இந்த முறை அப்படி எதுவும் வரவில்லையே,

நாம் இன்னும் க்ளுவை சரியாக கண்டு பிடிக்காமல் விட்டோமோ?

என நினைத்து வேறு வேறு கோணத்தில் யோசித்து பார்த்தார்கள்.

டி.ஐ.ஜியும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து
வெடிகுண்டை செயல் இழக்க செய்து விட்டோம் என்று தகவல் வராதா,
என நிமிடத்திற்கு ஒரு முறை போனையே பார்த்து கொண்டு இருந்தார்.

சமூக விரோதி கொடுத்த கவன்டவுன்
முடிய இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தது.

டி.ஐ.ஜி காவலுக்கு சவால் வாட்சப் குழுவில் அந்த கவுன்டவுன் நேரத்தை சுட்டி காட்ட சீக்கிரம் என்றார்.

அப்போது அங்கே ஒரு துணை காவல் ஆய்வாளர், நான் கண்டு பிடித்து விட்டேன் என்று சத்தமாக கத்தினார்.

எல்லோரும் என்ன க்ளு என்று கேட்க,

அவர் உணர்ச்சி மிகுதியால் பேச்சு வர தடங்கள் ஆனது.

அருகில் உள்ள ஒரு ஆய்வாளர் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்து குடிக்க சொன்னார்.

அவரும் தண்ணீர் குடித்து விட்டு,
அங்கே சத்தம் கேட்டு வந்த டி.ஐ.ஜியை பார்த்து
அது தேனி சார் என்றார்.

எல்லோரும் எப்படி என்றார்கள்.

அந்த துணை ஆய்வாளர்,
நான் பிறகு விளக்கம் தருகிறேன்.
முதலில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுங்கள் சார்,
நேரம் குறைவாக தான் இருக்கிறது என்று சொன்னவுடன்,

டி.ஐ.ஜியும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அவர்களும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தேனி நகரில் உள்ள முக்கியமான இடங்களில் எல்லாம் வெடி குண்டு சோதனை செய்தார்கள்.

கடைசியில் ஒரு இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது.

அதை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த போது,
அது வெடிக்க இருக்கும் நேரம் மிக மிக குறைவாக இருந்தது.

இருப்பினும் தங்கள் அனுபவ ஆற்றலை வைத்து,
வெடி குண்டு வெடிக்க இருந்த ஐந்து நிமிடங்களுக்கு முன்பே செயல் இழக்க செய்தார்கள்.

அந்த சந்தோச விசயத்தை டி.ஐ.ஜிக்கு
சொன்னார் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
 
Joined
Mar 17, 2025
Messages
26
டி.ஐ.ஜிக்கு சந்தோசம் தாங்க முடியாமல்,

அவர் அறையை விட்டு வெளியே வந்து, உற்சாகமாக மூன்று சவால்களிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றார்.

அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியாமல் தங்கள் அருகில் இருக்கும் காவலர் அதிகாரிகளிடம் கை கொடுத்து தங்கள் வெற்றியை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது ஒரு அதிகாரி,
சார் மூன்றாவது வெடி குண்டு எங்கே இருந்தது, திருச்சியா?
தேனியா? என்று கேட்டார்.

உடனே தான் டி.ஐ.ஜிக்கு
நியாபகம் வந்தது.
உடனே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மொபைலில் தொடர்பு கொண்டு,
தேனியில் தான் அது இருந்தது.
அதனால் நீங்கள் மேற்கொண்டு
எங்கேயும் சோதனை செய்ய வேண்டாம் என்று சொன்னார்.

அவரும் சரி என்று சொல்லி விட்டு தங்கள் சோதனையை நிறுத்தி விட்டு
அவர்கள் அலுவலகத்திற்கு சென்றார்கள்.

இப்போது டி.ஐ.ஜி அலுவலகத்தில் கடைசி க்ளுவை கண்டு பிடித்த
துணை ஆய்வாளரிடம்,
எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டார் டி.ஐ.ஜி.

அவர் உடனே நீங்கள் அனுப்பிய மெசேஜை பார்க்கலாம் என்று
நான் திறந்து பார்க்க,

அப்போது எதிர் பாராமல்
வேறு ஒரு குருப்புக்கு சென்று விட்டேன்.

அதில் பார்லிமென்ட் கான்ஷ்டியுன்சி 33.
தேனியில் ஒரு வாக்குசாவடியில் மட்டும் மறு வாக்கு பதிவு என்ற பழைய செய்தி இருந்தது.

அதை பார்த்த உடனே சந்தோசத்தில் நான் கத்தி விட்டேன் என்றார்.

அங்கே இருந்த அனைத்து காவல் உயர் அதிகாரிகளும் அவரை பாராட்டினார்கள்.

அப்போது முதல்வர் ஐ.ஜி அலுவலகம் வருவதாக தகவல் வந்தது.

முதல்வரும்
ஐ.ஜி அலுவலகம் வந்து அனைவரையும் பாராட்டினார்.

எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்ததற்கு, தமிழக மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

முதல்வர் சென்றதும் ,
டி.ஐ.ஜி நம் காவல் துறைக்கு விட்ட சவாலில் வெற்றி பெற்று விட்டோம்,
மேலும் இதற்காக உழைத்த அனைவருக்கும் நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.🙏🙏🙏

அப்படியே நானும்
என் கதையை படித்த அனைத்து வாசக உறவுகளுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 🙏 🙏

சுபம் 🙏🙏🙏💐💐💐
 
Joined
Feb 8, 2025
Messages
8
டி.ஐ.ஜிக்கு சந்தோசம் தாங்க முடியாமல்,

அவர் அறையை விட்டு வெளியே வந்து, உற்சாகமாக மூன்று சவால்களிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றார்.

அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியாமல் தங்கள் அருகில் இருக்கும் காவலர் அதிகாரிகளிடம் கை கொடுத்து தங்கள் வெற்றியை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது ஒரு அதிகாரி,
சார் மூன்றாவது வெடி குண்டு எங்கே இருந்தது, திருச்சியா?
தேனியா? என்று கேட்டார்.

உடனே தான் டி.ஐ.ஜிக்கு
நியாபகம் வந்தது.
உடனே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மொபைலில் தொடர்பு கொண்டு,
தேனியில் தான் அது இருந்தது.
அதனால் நீங்கள் மேற்கொண்டு
எங்கேயும் சோதனை செய்ய வேண்டாம் என்று சொன்னார்.

அவரும் சரி என்று சொல்லி விட்டு தங்கள் சோதனையை நிறுத்தி விட்டு
அவர்கள் அலுவலகத்திற்கு சென்றார்கள்.

இப்போது டி.ஐ.ஜி அலுவலகத்தில் கடைசி க்ளுவை கண்டு பிடித்த
துணை ஆய்வாளரிடம்,
எப்படி கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டார் டி.ஐ.ஜி.

அவர் உடனே நீங்கள் அனுப்பிய மெசேஜை பார்க்கலாம் என்று
நான் திறந்து பார்க்க,

அப்போது எதிர் பாராமல்
வேறு ஒரு குருப்புக்கு சென்று விட்டேன்.

அதில் பார்லிமென்ட் கான்ஷ்டியுன்சி 33.
தேனியில் ஒரு வாக்குசாவடியில் மட்டும் மறு வாக்கு பதிவு என்ற பழைய செய்தி இருந்தது.

அதை பார்த்த உடனே சந்தோசத்தில் நான் கத்தி விட்டேன் என்றார்.

அங்கே இருந்த அனைத்து காவல் உயர் அதிகாரிகளும் அவரை பாராட்டினார்கள்.

அப்போது முதல்வர் ஐ.ஜி அலுவலகம் வருவதாக தகவல் வந்தது.

முதல்வரும்
ஐ.ஜி அலுவலகம் வந்து அனைவரையும் பாராட்டினார்.

எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்ததற்கு, தமிழக மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

முதல்வர் சென்றதும் ,
டி.ஐ.ஜி நம் காவல் துறைக்கு விட்ட சவாலில் வெற்றி பெற்று விட்டோம்,
மேலும் இதற்காக உழைத்த அனைவருக்கும் நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.🙏🙏🙏

அப்படியே நானும்
என் கதையை படித்த அனைத்து வாசக உறவுகளுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 🙏 🙏

சுபம் 🙏🙏🙏💐💐💐
 
Joined
Feb 8, 2025
Messages
8
மிக மிக அருமையாக இருந்தது அண்ணா... கண்டுபிடிப்புகள் அனைத்தும் முடிவதற்குள் திக் திக் என இருந்தது.... எனில் ஒரு சிறிய தகவலை வைத்து அதை சரியாய் கணித்த காவலர்கள் அற்புதம்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..💐💐
 
Joined
Mar 17, 2025
Messages
26
மிக மிக அருமையாக இருந்தது அண்ணா... கண்டுபிடிப்புகள் அனைத்தும் முடிவதற்குள் திக் திக் என இருந்தது.... எனில் ஒரு சிறிய தகவலை வைத்து அதை சரியாய் கணித்த காவலர்கள் அற்புதம்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..💐💐
மகிழ்ச்சியும் நன்றியும் தங்கச்சி 🙏 🙏 🙏


கதை பதிவேற்றம் செய்ய உங்கள் ஆலோசனையும் உதவியது
 
New member
Joined
Mar 28, 2025
Messages
1
அனைத்து வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏

நான் வேறு ஒரு தளத்தில் எழுத்தாளராக உள்ளேன்.

முதல் முறையாக முகநூலில் கதை எழுதுகிறேன்.

எனக்கு வாய்ப்பு தந்த
sornasandhanakumarnovels@gmail.com
அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏


"காவலுக்கு சவால்"
இது கிரைம் கதை.

கதையில் ஏதேனும் தவறு இருந்தால்
படிக்கும் உறவுகள் தயங்காமல் சுட்டி காட்ட வேண்டுகிறேன் 🙏 🙏 🙏

இனி கதைக்குள்,

சென்னை -
ஐ.ஜி அலுவலகம்
காலையிலேயே மிகுந்த பரபரப்பாக இருந்தது.

அனைத்து உயர் அதிகாரிகளும்
மிகுந்த பரபரப்புடன் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு விரைந்து வந்தார்கள்.

அனைத்து அதிகாரிகளையும் தங்கள்
மொபைலை சைலண்ட் மோடில் போட்டு வைக்க சொல்லி கட்டளை வந்தது.

அனைத்து அதிகாரிகளும்
தங்கள் அருகில் உள்ள அதிகாரிகளிடம் என்ன பிரச்சினை என்று கேட்க,

ஐ.ஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால்,
டி.ஐ.ஜி தான் இப்போது வருவார் என்று ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் சொன்னார்.

ஒருத்தருக்கும் என்ன பிரச்சினை என்று முழுமையாக தெரியாமல்
தெரியாது தெரியாது என்றனர்.

அவர்களாகவே ஒரு யூகம் செய்து
அந்த பிரச்சினையாக இருக்குமோ என்று அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டார்கள்.

அனைத்து உயர் அதிகாரிகளும் வந்தது அறிந்ததும்,
அந்த கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு கம்பீரமாக வேகமாக நுழைந்தார்
டி.ஐ‌.ஜி இராமநாதன்.

டி.ஐ.ஜி வந்ததும் அமர்ந்து இருந்த அனைத்து அதிகாரிகளும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.

அனைவரையும் அமர சொல்லி விட்டு,
மொபைலில் மெசேஜ் எதுவும் வந்ததா என்று பார்த்தார்.

அனைத்து அதிகாரிகளும்
டி.ஐ.ஜி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார்.

நம் காவல்துறைக்கு ஒரு சமூக விரோத அமைப்பு சவால் விட்டிருக்கிறது.

நாளை இரவுக்குள் தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும்.

நாங்கள் அந்த இடத்தை
க்ளுவாக சொல்கிறோம்,
முடிந்தால் காவல் துறை அதை தடுத்து பாருங்கள் என்று
உளவுத்துறை மூலம் ஒரு மெசேஜ் வந்தது என்றார்.

அனைத்து அதிகாரிகளின் முகத்திலும் அதிர்ச்சி.

மீண்டும் டி.ஐ.ஜி
அந்த க்ளு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் அதான் மொபைலை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்றார்.

அப்போது அவர் மொபைலுக்கு உளவுத்துறையில் இருந்து மெசேஜ் வந்தது.

அதை அங்கே உள்ள பெரிய திரையில் தெரியும் படி செய்தார் டி.ஐ.ஜி.

1வது க்ளு
8,4,9 - 24

2 வது க்ளு
மரை+ செவிலியர்+நான்கில் ஒன்று

3 வது க்ளு
பி.சி.33
அதோடு முற்றுப் பெற்றிருந்தது மெசேஜ்.

அப்போது டி.ஐ.ஜிக்கு ஒரு அழைப்பு வந்தது,
அழைப்பில் உள்ள பெயரை பார்த்ததும் அமர்ந்து இருந்தவர் உடனே எழுந்தார்.

அவர் எழுந்தவுடன் அனைத்து அதிகாரிகளும் எழ முயற்சிக்க,

டி.ஐ.ஜி அனைவரையும் அமரும் படி சைகை செய்து கொண்டே பவ்யமாக பேசினார்.
எதிர் முனையில் பேசியவர் தமிழக முதல்வர்.
உங்களுக்கு என்ன அதிகாரம் தேவையோ அதை எடுத்து கொள்ளுங்கள்.

என் தமிழக பொதுமக்களுக்கு எதுவும் ஆக கூடாது என்று சொன்னார்.

மேலும் உங்களுக்கு இன்னும் கூடுதலாக காவலர்கள் வேண்டும் என்றாலும் என் அனுமதிக்கு காத்திருக்காமல் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்,
சீக்கிரம் கண்டுபிடியுங்கள் என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

டி.ஐ.ஜி பேச ஆரம்பித்தார்,
முதல்வர் தான் இப்போது பேசினார் என்றார்.
நமக்கு எந்த அதிகாரம் வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ள சொல்லி விட்டார்.

சந்தேகம் என்றால் என் கட்சி உறுப்பினர் என்று கூட பார்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
நாம் தான் நடக்க போக இருக்கும் அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என்றார்.

நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மறந்து இதை முறியடிக்க வேண்டும்.

இது உண்மையிலேயே நமக்கு விடுத்த சவால் தான்.

இதை பற்றி உங்களுடைய யோசனை எதுவாக இருந்தாலும் தயங்காமல் சீக்கிரம் தெரிவியுங்கள் என்றார்.

ஒரு அதிகாரி எழுந்து,
இதை மொத்தமாக விசாரித்தோம் என்றால் காலதாமதம் ஆகும்.

அதனால் மூன்று க்ளுவை
இங்குள்ள அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து முயற்சி செய்தால் நல்லா இருக்கும் என்றார்.

அவரின் ஆலோசனை நல்லா தான் இருக்கிறது என்று டி.ஐ.ஜி சொல்லி விட்டு, உடனே மூன்று குழுக்களாக பிரிக்க முயற்சி செய்தார்.

பிறகு ஒவ்வொரு குழுவிலும் ஒரு
தலைமை பொறுப்பு ஏற்க
ஒரு அதிகாரியை நியமித்தார் டி.ஐ‌.ஜி

நாம் அனைவரும் மற்ற குழுவில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ள, புதிதாக வாட்சப்பில் ஒரு குரூப் ஏற்படுத்தி தருகிறேன்.

பிறகு அனைவரிடமும் இந்த ஆபரேஷனுக்கு "காவலுக்கு சவால்"
என்று பெயர்.

இந்த சதித்திட்டம் முறியடித்த பிறகு
இந்த வாட்சப் குழு இயங்காது என்றார்.

அனைவரும் இது நமக்கும் சமூக விரோதியின் புத்தி கூர்மைக்கும் நடக்கும் சவால் என்று நினைத்து துரிதமாக செயல்படுங்கள் என்றார்.

கான்பரன்ஸ் முடிந்தது என்று சொல்லி விட்டு டி.ஐ.ஜி அவர் அறைக்கு சென்றார்.

அனைத்து அதிகாரிகளும்
தங்கள் மொபைலை சைலண்ட் மோடில் இருந்து எடுத்து விட்டு,
அவரவர் வீட்டுக்கு போன் செய்து
நான் ஒரு முக்கியமான கடமை பொறுப்பு காரணமாக உங்கள் அழைப்பை ஏற்க முடியாது,

அதி முக்கியமான தகவல் என்றால் மட்டும் வாட்சப்பில் மெசேஜ் செய்யவும் என்று அனைவரும் சொல்லி விட்டு,
மீண்டும் கடமை பொறுப்பை பார்க்க சென்றார்கள்.

முதலில் உள்ள க்ளுவை ஒரு குழு
யோசிக்க ஆரம்பித்தது.

8,4,9, - 24 என்று ஒவ்வொரு நம்பரையா யூகித்து பார்த்தார்கள்.

8 என்பது தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் முதலில் இருந்து எட்டா? அல்லது கடைசியில் இருந்து எட்டா?என்று யோசித்து பார்த்தார்கள்.

அப்படி அவர்கள் நினைத்து ஒரு மாவட்டத்தின் பெயர் வர,

அப்போ 4 என்றால் என்னவாக இருக்கும்?
ஒருவேளை அந்த மாவட்டத்தில் உள்ள 4 வது பெரிய நகரமாக இருக்குமோ?

அப்படி என்றால்,
9 க்கு என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது குழப்பம் தான் வந்தது.

அப்படியே எல்லாம் ஓரளவு சரியாக வந்தால், கடைசியில் 24 என்று இருக்கிறதே,
அது என்னவாக இருக்கும்?
ஒருவேளை அந்த நகரத்தில் உள்ள ஒரு தெருவாக இருக்குமோ என்று யூகம் செய்தார்கள்.

ஒருவர் அந்த யூகம் சரியென்றால்
மற்றொருவர் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல பதில் சொன்னார்.


அடுத்த குழுவில் உள்ளவர்கள்
இரண்டாம் க்ளுவான

மரை+செவிலியர்+நான்கில் ஒன்று என்பதை தனித்தனியாக பிரித்து பார்த்து , கடைசியில் சேர்த்து பார்த்தால் தமிழ் நாட்டில் அப்படி ஒரு இடமே இல்லை.

மூன்றாவது குழு
மூன்றாம் க்ளுவான
பி.சி.33
என்பதை வருடத்தை கணக்கு செய்து,
அந்த வருடத்தில் ஏதாவது விசேசமான பெயரை தமிழ் நாட்டில் உள்ள இடங்களில் வைத்து யூகித்து பார்த்தார்கள்.

எதுவும் சரியாக வரவில்லை.
அண்ணா செம திரில்லிங்காக இருந்தது காவல் துறை மூனு குழுக்களாக பிரிந்து குளுவை கண்டுபடித்தது அபாரம் அண்ணா. அடுத்து அடுத்து என்ன நடக்கும் என மனம் பட படத்தது நல்ல திரில்லிங்காக கத் நகர்ந்தது அண்ணா...

அண்ணா காவல் துறை பற்றி நன்கு அறிந்தவர் போல அதான் மிக சரியாக எழுதியிருக்கார் .

காட்சிகள் ஒவ்வொன்றும் கண்ணுக்கு எதிரே நடப்பது போல இருந்தது அண்ணா

இந்த கதை வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா💛❤️
 
Joined
Mar 17, 2025
Messages
26
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் தங்கச்சி 🙏 🙏 🙏

இந்த அண்ணனின் கதை படிப்பதற்காக நீங்கள் செய்த முயற்சி பாராட்டுக்குரியது.

உங்கள் விமர்சனத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் தங்கச்சி 🙏 🙏 🙏
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top