• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
கெளரவத் திருமணம்

“இதுக்குப் பிறகு என்னால இங்க இருக்க முடியாது ம்மா வாழ்க்கையே சூனியம் ஆன மாதிரி இருக்குது.

என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல. இதுக்கு அப்புறமா இந்த வீட்ல என்னை இருக்கணும்னு சொன்னீங்கன்னா நான் உயிரோட இருப்பேனா இல்லையான்னு தெரியாது. எனக்குப் பயமா இருக்குது மா. நிச்சயமா நான் ஏதாவது பண்ணிக்குவேன்.. என் வாழ்க்கை இத்தோட முடிஞ்சிடும்” என்று சொன்ன மகளின் குரல் கேட்டு திகைத்தார் புவனா.

“என்னடி என்ன உளர்ற... ஏன் இது மாதிரி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கற? உன் வீட்ல எல்லாரும் உன் மேல பாசமாதான இருக்கிறார்கள்.”

“அம்மா உனக்குச் சொன்னா புரியாதும்மா. நான் உனக்கு என்னன்னு சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல.”

“அங்க என்ன தாண்டி பிரச்சனை? நீ சொன்னாதானே தெரியும்.”

“குழந்தை இல்லன்னு ரொம்ப ஒரு மாதிரி பேசுறாங்க. அம்மா எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.”

“அவங்க கேட்கறது நியாயம் தான... கல்யாணம் முடிஞ்சு இதோ ரெண்டு வருஷம் முடியப்போகுது. இன்னுமுமே குழந்தை இல்லன்னா அக்கம் பக்கத்தில் கேட்க தான் செய்வாங்க. அதை வைத்து அவங்க ஏதாவது கோபத்தில் பேசி இருக்கலாம். மத்தபடி நீ பயப்படற அளவுக்குக் கிடையாது.
சம்மந்தி அம்மா ரொம்ப நல்லவங்க.”

“அம்மா உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல. நீ என்னை அழைச்சிட்டு போவியா இல்ல என்னை இப்படியே விட்டுடுவியா. இப்படியே விட்டுடுவேன்ணா சொல்லிடு. உனக்கு ஒரு பொண்ணு இருக்கிறதை மறந்திடு.”

“என்னடி உளறிக்கிட்டு இருக்கற? நீ எங்களுக்கு ஒரே ஒரு மகள் பார்த்து பார்த்து வளர்த்தோம் ஏன் இப்படி எல்லாம் பேசுற? நீ நல்லா இருக்கணும்னு தானே தேடி தேடி இந்த வரனை கண்டுபிடிச்சோம். ஏன் கொஞ்ச நாள் உன் ஹஸ்பண்ட் கூட வெளிநாட்டில் போய்த் தங்கிட்டுதான வந்த கொஞ்ச நாள் அம்மா வீட்ல இருன்னு தானே அனுப்பி வச்சாங்க .இங்க எல்லாமே சுமூகமா தான போயிட்டு இருந்தது. இப்ப என்ன ஆச்சு?“

“அம்மா நான் உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல. இங்க என்னமோ தப்பு இருக்குதும்மா. எனக்கு ரொம்பப் பயமா இருக்குது. நீ முதல்ல என்னை வந்து அழைச்சிட்டு போ .பிறகு மத்த விஷயங்கள தெளிவா சொல்றேன்” என்று சொல்ல மகளின் கலங்கிய குரலே இவரைப் பதற்றத்திற்கு உள்ளாக்கியது.

அன்று மாலையே கணவனை அழைத்துக்கொண்டு நேராக மகளைக் காண சென்றிருந்தார். உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே மாமியார் சற்று சண்டையிடுவது போலத் தான் பேசியது.

“இதெல்லாம் சரி வராது. உங்க பொண்ணுக்கு எங்க வீட்டு வாரிசை பெத்து கொடுக்கிற தகுதி கிடையவே கிடையாது. தயவு செஞ்சு உங்க பொண்ண நீங்க அழைச்சிட்டு போயிடுங்க. என் பையனுக்கு வேற நல்ல இடமா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிடறேன்.”

“என்ன சம்பந்திம்மா இப்படிச் சட்டுன்னு சொன்னா என்ன அர்த்தம் இன்றைக்கு மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருக்குது .என்ன எதுன்னு பார்க்கலாம். நானே என் மகளை அழைச்சிட்டு போறேன். டாக்டர்கிட்ட காட்டறேன்.“

“போதும்! போதும்! ஒரு வருஷமா இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இவ வந்த நேரமோ என்னமோ தெரியல. வந்த நாள்ல இருந்து எல்லாமே தப்பு தப்பா நடக்குது. பொண்ணுக்கு சரியா வரன் அமையலை. இங்க படிக்கிறவனும் சரியா படிக்க மாட்டேங்கறான். அதுக்குத் தகுந்த மாதிரி வெளிநாட்டில் இருக்கிறவனுக்கும் எதுவும் சரியா இல்ல. சரி புருஷன் கூடச் சந்தோஷமா இருக்கட்டும்னு வெளிநாடு வரைக்கும் அனுப்பி வச்சேன் போயிட்டு 6 மாசத்துல திரும்பி வந்தாச்சு. சரி இங்கேயாவது எங்களை எல்லாத்தையும் அனுசரிச்சு போவான்னா அதுவும் இல்ல. தொட்டதுக்கு எல்லாம் சண்டை, கோவம் ,பேச்சும் சரியில்ல”

“என்ன நந்தினி இங்க இப்படிச் சொல்றாங்க?“

“அம்மா ப்ளீஸ் என்னை உன்னால அழைச்சிட்டு போக முடியுமா முடியாதா? இல்ல நான் இங்கதான் இருக்கணும்னா இந்த நிமிஷமே என்னை மறந்திருங்க. இதுக்கு அப்புறம் எப்பவும் என்னைத் தேடி வர வேண்டாம். இந்த வீட்டோடவே என் லைஃப் முடிஞ்சிடட்டும்” கோபமாகச் சொல்ல,

”சரி சரி நீ முதல்ல எங்க பின்னாடி வா. பிறகு என்னன்னு பாத்துக்கலாம் .பத்து நாளைக்கு அழைச்சிட்டு போறேன் சம்பந்திம்மா.”

‘இந்தப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல .அழைச்சிட்டுப் போறதுன்னா போங்க. திருப்பி எல்லாம் அவளை அனுப்பி வைக்க வேண்டாம். நாங்க நிம்மதியா இருப்போம்” சண்டை இடுவது போலப் பேச அப்போதே புவனாவிற்குப் புரிந்து விட்டது இதற்கு மேல் இந்தப் பெண்ணிடம் தன்மகள் இருந்தால் நிச்சயமாக விபரீதமாக ஏதாவது நடந்து விடும் என நினைத்தவர் நேராக மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார் .

“எதா இருந்தாலும் சரி மாப்பிள்ளை கிட்ட போன்ல பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்” என்று சொல்லி அழைத்துச் செல்ல, சுரேந்தரோ வேறு கூறினான்.

“உங்க பொண்ணுக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை சுத்தமா புரியல. அது மட்டும் இல்ல அனுசரிச்சுப் போகத் தெரியல. அவ கூட வாழ்ந்ததை நினைச்சாலே எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்குது. எனக்கு அவ வேண்டாம்.. உங்க பொண்ணை உங்க வீட்டிலேயே வச்சுக்கோங்க.” சற்று கறாராகக் கேட்க இவர்களுக்குமே ஒன்றும் புரியவில்லை.

“கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு நந்தினி .அப்படி என்னதான் உன் லைஃப்ல நடக்குது. ஒன்னும் புரியல ஆளுக்கு ஒரு பக்கம் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. மாப்பிள்ளை என்னடான்னா நீ குடும்பம் நடத்தவே லாயக்கு இல்லங்கறார். மாமியாரோ வேற மாதிரி பேசறாங்க என்னதான் நடந்துச்சு?”

“இந்த ரெண்டு வருஷம் நடந்தது எல்லாத்தையுமே சொல்றேன் மா உனக்கு ஏதாவது புரியுதான்னு சொல்லு.”

“கல்யாணம் முடிஞ்ச உடனே எங்க அம்மா கூடக் கொஞ்ச நாள் இரு. உனக்கு விசா பாஸ்போர்ட் எடுத்த பிறகு அழைச்சிட்டு போறேன்னு சொல்லி விட்டுட்டுப் போனார். உனக்குத் தான் தெரியுமே. இங்க ஆறு மாசம் இருந்தேன். இந்த ஆறு மாசம் நரக வாழ்க்கையாக இருந்தது. மாமியார் தொட்டதுக்கெல்லாம் குறை சொன்னாங்க. என்ன செஞ்சாலும் தப்புன்னு சொல்லி சண்டை பிடிச்சாங்க. ஒரு ஸ்டேஜ்ல என்னால இங்க இருக்க முடியாதுன்னு ஆகும் போது நான் சுரேந்தர்க்கு போன் பண்ணி அழ ஆரம்பிச்சேன். என்னால இங்க இருக்க முடியாது. தயவு செஞ்சு என்னை அழைச்சிட்டு போயிருங்க.. இல்ல நான் எங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். உடனே சுரேந்தரும் இல்ல இல்ல வேண்டாம். அது அவ்வளவா நல்லா இருக்காது. நானே உன்னை அழைச்சிட்டு போறேன்னு வந்து என்னை வெளிநாட்டு அழைச்சுட்டுப் போனார். அதுவரைக்கும் எல்லாம் சரியா தான் இருந்தது. அதுக்கு அப்புறம் தான் நிறையக் குழப்பம். அங்க ஒன்னேகால் வருஷம் இருந்தேன்மா. ஆனா அந்த ஒன்னேகால் வருஷத்துலேயும் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவுமே நடக்கல.”
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
“நீ என்ன சொல்ற நந்தினி எனக்குப் புரியல?”

“அதான் எனக்கும் புரியல. அங்க எங்களுக்குள்ள எதுவும் நடக்கலை. சுரேந்தர் அழைச்சிட்டுப் போனதும் ஒரு விஷயம் சொன்னார். அவரோட தங்கச்சிக்கு கல்யாணத்துக்கு ரெடி பண்ணனும். அதுக்காகக் கொஞ்சம் நிறையப் பணம் சேர்க்கணும். கல்யாணத்துக்காக வாங்கின கடன் எல்லாம் அடைக்கணும் அதனால கொஞ்ச நாளைக்கு நமக்குள்ள எதுவுமே வேண்டாம்ணு சொன்னார்.

எனக்கும் கூட அவர் சொல்லும் போது அது சரின்னு பட்டுச்சு. சரின்னு சொல்லி அங்க இருந்தேன். அங்க இருந்த ஒரு வருஷமுமே நல்ல நண்பர்கள் போலத் தான் இருந்தோம். அவரோட சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்ல. நானும் சரி எல்லாமே மாறிவிடும் என்று நினைத்தேன் .”

“என்ன சொல்ற?”

“எனக்குத் தெரியல மா. ஒருவேளை இப்படித்தான் இருப்பாங்களோன்னு கூட எனக்குத் தோணுச்சு. பிறகு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல நீ அங்க போய்க் கூட இரு என்று சொல்லி ஒரே டார்ச்சர். என்னால பதில் சொல்லவே முடியல. முகத்தைத் திருப்பிக்கிட்டு என்கிட்ட பேசாம ரொம்பவே பண்ணினார்.
அதுக்குப் பிறகு என்னால அங்க இருக்க முடியலன்னு தோணவும் இங்க வந்தேன். இங்க வந்த நாளில் இருந்து அத்தை என்னை ஏதாவது ஒரு வகையில குறை சொல்லிக்கிட்டே இருந்தாங்க. சரி நாள்பட எல்லாம் சரியாயிடும்னு நெனச்சேன் ஆனா எதுவும் சரியாகறது போல இல்ல. இன்னமும் பிரச்சனை பெருசாகத்தான் போய்கிட்டு இருந்தது. இதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியாது ம்மா.”

“உன் புருஷன் என்ன தாண்டி சொல்றான்?“

“அவரு இங்க எல்லாம் வர வேண்டாம் .அங்க தான் இருக்கணும்னு சொல்றாரு. இங்கே அதைவிட டார்ச்சரா இருக்கு. இப்ப எல்லாம் அவருக்குப் போன் பண்ணினாலும் எடுக்கறது இல்ல. இப்படி ஒரு லைஃப் எனக்கு வேணுமான்னு தோண ஆரம்பிச்சிடுச்சு” என்றவள் தாயாரை இறுக கட்டி அணைத்து அழ ஆரம்பிக்க, என்ன என்று புரியாமலேயே கலங்க ஆரம்பித்தார்.

அடுத்தடுத்து நாட்கள் வேகமாக நகர்ந்தது. இவர்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை. சுரேந்தருக்கு அழைத்தால் அவனும் பட்டும் படாமல் பேசினான்.
“என்கிட்ட பேச எதுவும் இல்ல. நீ என் அம்மா வீட்ல போய் இரு “என்று சொல்ல. இவளோ மறுபடியும் அங்கே போக மாட்டேன். என்னை உங்கள் கூடவே அழைச்சிட்டு போயிடுங்க. என்னால அங்க போக முடியாது.“

“என் அம்மா கூட இருப்பேன்னா நீ என்கிட்ட பேசலாம். இல்லன்னா என்கிட்ட பேச வேண்டாம். நீ என்கூட வாழனும்னு ஆசை இருந்தா என் வீட்ல போயிரு இல்லன்னா உன் வீட்டிலேயே இருந்துக்கோ நிரந்தரமா“ என்று சொல்லி போனை வைத்தான்.

இங்கே சுரேந்தரின் தாயார் வீட்டிலோ வேறு விதமாகப் பேசினர். மொத்தத்தில் இனி அங்கே செல்ல முடியாது என்கின்ற நிலைக்கு வந்திருந்தாள். ஒரு வருடத்திற்குப் பிறகு, “சுரேந்தர் அந்தப் பொண்ணு விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாள். இனி உனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. நீ எப்பவும் போல உன் வேலையைப் பார்க்கலாம். நானும் உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். இனி எப்பவும் இங்க வராத வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிடு. இங்கே உன் தம்பி தங்கச்சியைப் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்று சொன்னவர்,

‘என்ன செய்யக் கௌரவம்ணு ஒன்னு இருக்குதே. உன்னால ஒரு பொண்ணு கூடக் குடும்பம் நடத்த முடியாது. ஆனா அதே நேரத்துல உனக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க. நான் என்னதான் செய்ய முடியும். நீ ஆண்மை இல்லாதவன். ஒரு பொண்ணு கூடக் குடும்பம் நடத்த முடியாதவன்ணு வெளியே சொன்னா அது கேவலம் இல்லையா. நம்ம கௌரவம் என்ன ஆகிறது. உனக்கு அப்புறம் உன்னோட தம்பிக்கு உன் தங்கச்சிக்கு எல்லாம் கல்யாணம் ஆகணும். உனக்கே பிரச்சனைனா பின்னாடி பிறந்தவங்களுக்கு நல்ல இடத்திலிருந்து எப்படிப் பொண்ணு, மாப்பிள்ளை கேட்டு வருவாங்க? அது இன்னமும் கஷ்டம். அண்ணனுக்கே இந்தப் பிரச்சனைன்னா அவன் கூடப் பிறந்தவங்களுக்கு இதுபோல வேற ஏதாவது பிரச்சனை இருக்காதா? நான் இவங்களையும் பார்க்கணும்ல, கொஞ்சம் கஷ்டம் தான். உனக்குக் கல்யாணம் பண்ணி எல்லாத்தையும் மறைச்சு இப்போ அந்தப் பொண்ணு கிட்ட சண்டை போட்டு அனுப்புறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுச்சு. அந்தப் பொண்ணே வக்கீல் நோட்டீஸ் அனுப்பினதால நகை கொண்டு வந்த சீதன பொருளை கொடுத்தா போதும். அதைத் தாண்டி மாசா மாசம் ஜீவனாம்சம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அந்த வகையில லாபம் தான்“ என்று மனதிற்குள் சொன்னவர்,

ஒரு நிமிடம் தான் செய்ததை எல்லாம் யோசித்துப் பார்த்தார். முதல் முதலாக நந்தினியின் ஜாதகம் வந்த போது நந்தினி பற்றிய மத்த விபரங்களையும் சேகரிக்க ஆரம்பித்தார். ஒரு மேட்ரிமோனியில் தான் இவளது ஜாதகம் எடுத்தது. நந்தினி பற்றி விசாரிக்கையில் இவருக்கு அவர்களின் நிலை தெளிவாகவே தெரிந்தது. நந்தினி ஆரம்பத்திலிருந்து பெண்கள் படிக்கும் கல்லூரியில் படித்தவள்.

காலேஜ் கூடப் பெண்கள் கல்லூரியில் தான் படித்தது. பெரிதாக நட்பு பட்டம் கிடையாது. யாரையுமே குறை கண்டு பிடிக்கும் வழக்கம் இல்லாதவள். அவளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்த பிறகுதான் திருமணத்தைப் பற்றியே பேச முன் வந்தது. அழகாகச் சர்க்கரை தடவியது போலப் பேச ஆரம்பித்தார். திருமணமும் நடந்தது ஊராருக்குதான் இது ஆடம்பர திருமணம். ஆனால் இவர்களுக்குத் தான் தன் மகனின் நிலை தெரியுமே.

நல்லவள் போலவே நடந்து கொண்டு தன்னுடைய கைக்குள் சில மாதங்கள் வைத்துக்கொண்டார். அப்போதே ஆரம்பித்து விட்டார் சண்டையிட, பிறகு அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவும் இங்கிருந்து அங்கே அனுப்பி வைத்தார். இதுவுமே இவருடைய திட்டம் தான். அங்கும் நடந்தது எல்லாமே தாயார் பேச்சை கேட்டுதான். அவன் செய்வது தவறு என்று தெரியும். ஆனால் வேறு வழி கிடையாது .தான் ஒரு ஆண்மை இல்லாதவன் என்பதை ஊருக்கு சொல்ல அவனுக்குப் பயம் .அதனாலேயே வெளிநாட்டிற்கு வேலை தேடி ஓடி இருந்தான்.

தாயார் பேச்சை கேட்டு மொத்தமாக அதுபோலவே நடத்தவன் பிறகு தாயாரிடம் கொஞ்ச நாட்கள் இரு என்று அனுப்பி வைத்தான். இங்கே இவரோ சண்டையைப் பெரிது படுத்தி ,பெரிது படுத்தி இதோ இன்றைக்கு விவாகரத்து வரையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.

வக்கீல் நோட்டீசை பார்த்தபடி, “இது ஒரு கௌரவக் கல்யாணம் தான். கல்யாணம் ஊருக்காக மட்டும்தான்“ என்றவர், "ஏமாறுகிறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவங்களும் இந்த உலகத்துல இருக்கத் தான் செய்வாங்க” என்ற படியே வெளியேறினார்.

நன்றி

கவிசெளமி.
 
New member
Joined
Nov 23, 2024
Messages
8
சிலரோட சுயநலத்திற்காக அப்பாவி பெண்ணை பலிகொடுக்கும் சமூகம்
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
இது மாதிரி சில இடங்களில் சைலண்டா நடக்குது. கடைசியில் பழி என்னவோ பொண்ணு மேலதான். கேட்டா கௌரவம் சொல்வாங்க.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.💐💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top