• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

காதலின்✨முகவரி நிறைவுப்பகுதி

Joined
Feb 6, 2025
Messages
64
💕K காதல் M முகவரி 💕
💕முகவரி நிறைவுப்பகுதி 💕

காலம் காலமாக நடந்து வரும் ஆணவக்கொலையை கொஞ்சம் மாற்றி அமைத்தால்! கதிர் வீட்டை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது திருப்புமுனை.

முல்லை குழப்பத்தில் இருக்க, கதிர் அவன் வீட்டில் முல்லைக்கு துணையாக மணியை இருக்க சொன்னவன் வெளியே செல்ல, கதிர் சென்ற நேரம் கதிரின் மாமன்கள் ராஜசேகரன், தனசேகரனுடன் கதிரின் அப்பா சேரன் கதிரின் வீட்டுக்குள் வந்தனர்.

முல்லையையும் மணியையும் மிரட்டி ,மணியை அடித்துப்போட்டு முல்லையை விஷம் அருந்தச் சொன்னார்கள். அவளும் பயந்து போய் அழுது கொண்டு இருந்தவள், கையில் சேரன் விஷத்தை தந்து குடிக்க சொல்ல, முல்லை வாங்கி குடிக்கப்போன சமயம் வீட்டின் வாசற்கதவு தட்டப்பட்டது.

“யாரடா இந்த நேரத்துல?” சேரன் வீட்டு கதவை திறக்கவும் கதிர் சிரித்தப்படி வீட்டிற்குள் நுழைந்தான்.

“டேய் கதிர் நீ எங்கடா இங்க?” என்று அதிர்ந்தார் சேரன்.

“அததான் நானும் கேக்குறேன். நீ எங்க இங்க? உனக்கு என்னமோ தலையில அடிபட்டு மல்லாக்க இருக்கன்னு சொன்னாங்க” என்றான் நக்கலாக.

“நீ செஞ்ச அசிங்கத்தை சரி செய்யாம நான் போக மாட்டேன்டா.”

“நீயெல்லாம் ஒரு அப்பன். சரி சரி வழியில நிக்காம கொஞ்சம் தள்ளி நில்லு” என்று அவரை நகர்த்தி கதிர் வீட்டுக்குள் வர, முல்லை அனத்தும் சத்தம் கேட்ட கதிர் அவன் அறைக்குள் சென்றான்.

அவனை பார்த்ததும் முல்லை அழுதபடி அவனை கட்டிக்கொண்டு, “கதிர் கதிர் என்னை இவங்க...” பேச முடியாது திணற,

“என்னாச்சு ஏன் அழுற?”

“உன் அப்பா என்னை விஷம் குடிக்க சொல்லுறாரு.”

“மச்சான் இங்க பாருடா இவனுங்க பண்ற அநியாயத்தை” என்று மணி சத்தம் கொடுக்க, மூவர் மேலும் கோபம் வந்த கதிர் நிதானமாக யோசிக்கலானான்.

“டேய் கதிர் நம்ம குடும்ப கௌவரத்தை குழி தோண்டி புதைச்சுட்டுட்ட இல்ல” என்று தனசேகரன் கேட்க,

“ஸ்ஸ்ஸ்... ஏன் பேசுனதையே பேசுற. வேற எதாவது பேசு கேப்போம்” என்றான் தெளிவாய்.

“டேய் தம்பி இவன்கிட்ட என்ன பேச்சு. இந்த கீழ் ஜாதி ஜென்மத்துக்கு விஷத்தை தந்து இவளை இவ அப்பன் போன இடத்துக்கே அனுப்பி வை. இந்த கதிர் பையயலை அடிச்சு காருல தூக்கி வீசு.”

“யாரு நீங்க என்னை அடிக்க போறிங்களா? செம்ம காமெடியா பேசுறீங்க” என நக்கலாகக் கேட்டான்

“என்ன மச்சான் நீ இவ்வளவு கூலா பேசுற.”

“எமன் கண் முன் நிக்கும் போது கூட உனக்கு இவ்வளவு திமிரா” ராஜசேகரன் கதிரை முறைக்க,

“முல்லை இப்ப சொல்லு இவங்கள என்ன பண்ணலாம்?” மனைவியிடம் கேட்டான்.

“வேணாம் கதிர் நம்ம இங்க இருந்து போயிடலாம் வா.”
“உங்கள கானா பிணமா ஆக்காம நாங்க போக மாட்டோம்.” என நின்றனர் மூவரும்.

“மணி நீ முல்லையை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போ .நான் இவங்ககிட்ட ஒரு டீல் பேசிட்டு வரேன்.”

“மச்சான் இங்க என்ன நடக்குது. நீ என்னடா இவனுங்ககிட்ட டீல் பேசப் போறேன் சொல்ற?”

“டூ வாட் ஐ சே மணி” என்று கத்த,

“பாப்பா நீ வாமா வீட்டுக்குப் போகலாம்” என்றான் மணி.

“இல்ல நான் வரமாட்டேன். கதிர் நீயும் வா போகலாம்.”

“செல்லக்குட்டி நீ என் மச்சான் கூட மாடிக்கு போ. உன் மச்சான் நான் கொஞ்ச நேரத்துல வரேன். ஓகேவா செல்லம்.”

“இல்ல நான் போக மாட்டேன்” என்றாள் அடமாக.

“நான் சொன்னா கேப்பியா, மாட்டியா?”

“ம்... கேப்பேன்.”

“அப்போ இவன் கூட மாடில வெயிட் பண்ணு. மச்சான் முல்லையை மாடியில விட்டுட்டு நீ கீழே வா.”

“சரிடா” என்று முல்லையை அழைத்துச் செல்ல,

“ஏய் எங்கடி போற? என்ற ராஜா முல்லை கையை பிடிக்கப்போக,

“ஐயோ கதிர்” என்று முல்லை அலற, ராஜா மூக்கில் ஒரு குத்து விட்டவன், “நான் இருக்கும் போதே என் பொண்டாட்டி மேல கை வைப்பியா. இரு உனக்கு...” என்று கையைத் திருக்க,

"ஐயோ என் கை. கை ஆஆ....” என்று அவர் அலறினார்.

“டேய் என் அண்ணனை விடுடா” என்று தனசேகரன் வர, கதிர் அவரின் வாயை பார்த்து ஒரு குத்து விட, தனசேகர் அதே இடத்தில் மண்டியிட்டார்.

“கதிர்” என்றழைத்த மனைவியிடம். “நீ மாடிக்கு போ முல்ல” என்றான்.

“டேய் கதிர் என்னடா, என்ன நினைச்சிட்டு இருக்குற? ஜாதி கெட்ட ஜென்மத்தை கல்யாணம் பண்ணிட்டு, தட்டிக்கேட்ட உன் மாமான்களை வேற அடிக்கிறியா. வேணாம்டா நீ ரொம்ப தப்பு பண்ணுற” என்றார் சேரன்.

“யோவ் தப்பு மட்டுமே பண்ணுற நீ, எனக்கு புத்தி சொல்றியா. அவனுங்கள கூட நான் மன்னிப்பேன். ஆனா, உன்னை என்னால மன்னிக்கவே முடியாது. ஊருக்கு நல்லவன் வேஷம் போட்டுக்கிட்டு, மனசுக்குள்ள எவ்வளவு நஞ்சை வளத்து வச்சி இருக்குற. ஜாதி, மதம் எல்லாம் இருக்கு தான். ஆனா ஒரு உயிரை கொன்றுதான் நீங்க எல்லாம் உங்க ஜாதிக்கு பெருமை சேப்பீங்களோ?”

“நீ ரொம்ப பேசுற கதிர். இரு உன்ன...” சேரன் கதிரை அடிக்க அருகில் இருந்த சேரை எடுக்க, கதிர் சேரன் கழுத்தை பிடித்தவன், “உங்களுக்கு எல்லாம் பெற்ற பிள்ளை என்ற பாசம் கொஞ்சம் கூட இல்ல?”

“நீ எப்போ தரம் கெட்ட ஜாதியில வாயை வச்சியோ அப்போவே நீ செத்துட்டடா.”

“டேய்...” தகப்பனைப் பார்த்து கத்த,

“அப்பனையே வாடா போடான்னு சொல்றியா?”

“நீ தானேடா எனக்கு நீ அப்பன் இல்லன்னு சொன்ன.”

“கதிர் அப்பாவ அப்படி எல்லாம் சொல்லாத. நீ வா நம்ம போலாம்.”

“டேய் வீணா போனவனே. முல்லையை மாடிக்கு கூட்டிட்டு போன்னு எத்தனை தடவை சொல்லுறது. கூட்டிட்டுப் போடா” என்றான் கதிர்.
மணி முல்லையை மாடிக்கு அழைத்துப் போய் விட்டு, சற்று நிமிடத்தில் மீண்டும் கதிரின் வீட்டிற்குள் நுழைந்தான்.

“வேணா கதிரு இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. அந்த கணேசன் மவளை எங்ககிட்ட ஒப்படைச்சிட்டு நீ ராஜா மாதிரி நம்ம கிராமத்துக்கு திரும்பி வா. நாங்க அவளை போட்டு தள்ளிட்டு இந்த வழக்கை ஒன்னும் இல்லாம ஆக்கிடுறோம்.”

“யோவ் இன்னைக்கு நீங்க வெளிய இருக்க காரணமே முல்லைதான். ஆனா நீ வழக்கை ஒண்ணுமில்லாம ஆக்க போறியா?”

“மச்சான் நீ உன் கிராமத்துக்கு தானே போன. நீ எப்படிடா இங்க வந்த?”

“நான் கிராமத்துக்கு போகவே இல்லடா. அந்த கணக்கு எனக்கு கால் பண்ணும் போதே அவன் பொய் சொல்லறான்னு எனக்கு தெரிந்துடுது. அதுவும் இல்லாம முல்லை அப்பாவை இந்த ஆளு தான் கொன்னு தூக்குல தொங்க விட்டு இருக்கான்னு எனக்கு முன்னாடியே தெரியும்டா” என்றான்.

“என்னடா சொல்ற?”

“டேய் கணேசனுக்கு படிக்க தெரியாது. ஆனா அவரு கையில ஒரு லெட்டர் இருந்துச்சு தெரியுமா? அத கணக்கு பிள்ளை தான் எழுதி இருக்கான். அது மட்டும் இல்லடா. இதோ என்னை பெத்தவன் இருக்கான் பாரு, இவன் தான் கணேஷனை துடிக்க துடிக்க கொன்னு இருக்கான்.” தன் தகப்பனைக் காட்டினான்.

“ஆமாடா நான் தான் கொன்னேன்.”

“பாத்தியா மச்சான் இப்ப எல்லாம் கொலைகாரங்க தான் டிப்டாப்பா சுத்துறானுங்க.”

“கலிகாலம்டா மணி.”

“சரி இப்ப என்ன மச்சான் பண்ண போற நான் போலீஸ்க்கு கால் பண்ணவா?”

“எதுக்கு... இந்த வெறி பிடிச்சவனுங்கள பிடிச்சி ஜெயில்ல போட்டு நல்லா மூனு வேள சொத்தை போடவா?”

“வேற என்ன மச்சான் பண்ண போற?”

“இவங்க தான் கௌவராவதுக்காக உயிரை கொடுப்பாங்க இல்ல” என்று பூடகமாகக் கேட்க, ஆமாம் என்று வேகமாக தலையசைத்தான் மணி.

“அப்போ குடுக்கட்டும்” என்று சிரித்தான்.

“டேய் கதிர் என்னடா சொல்ற?” தனசேகரன் கேட்க,

“ம் உங்க உயிரை தந்துடுங்கன்னு சொல்றேன்.”

“மச்சான் புரியற மாதிரி சொல்லுடா?”

“டேய் கதிர் வேணா. நீ பின்னாடி ரொம்ப கஷ்ட்டப்படுவ.”

“அத நாங்க பின்னாடி திரும்பும் போது பாத்துப்போம். இப்ப நீங்க மூனு பேரும் என்ன பண்றீங்க இந்தாங்க இந்த விஷத்தை ஒன் பை திரியா குடிச்சிட்டு உங்க கௌரவதுக்காக உயிர விடுங்க” என்றான்.
 
Joined
Feb 6, 2025
Messages
64
“டேய் மச்சான் என்னடா சொல்ற?” மணி பதறி கேட்க,

“ஆமாடா. பழிக்கு பழி தான் சரியான தண்டனை. இப்ப நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்து இருந்தா என் முல்லையை இவனுங்க கொன்னு எரிச்சு இருப்பாங்க. அப்புறம் எப்படி இவங்களை சும்மா விடமுடியும்.”

“கதிர் வேண்டாம்” என்றார் சேரன்.

”ஏய் வாயை மூடு.. ஆங் இல்ல இல்ல வாயை திற. நானே என் கையாள உனக்கு விஷத்தை ஊத்துறேன்.”

“மச்சான் வேணாடா” என்று மணி தடுத்தான்.

“அப்போ இந்தா அவனையே குடிக்க சொல்லு.”

“அண்ணா நீ என்ன இவனை பேச விட்டு வேடிக்கை பாக்குற. அந்த இடுப்புல இருக்குற கத்தியை எடுத்து அவன் கழுத்தை சீவு அண்ணா” என்றார் தனசேகரன்.

“என்னால எந்திரிக்க முடியலடா தம்பி.”

“டேய் மாமாங்களா. என் அப்பனுக்கு தான் புத்தி இல்ல. நீங்க ஏன்டா இவனுக்கு ஜால்ரா தட்டுறீங்க. சரி சரி நேரம் ஆகுது நல்ல நேரம் முடியறதுக்குள்ள விஷத்தை எடுத்து குடிங்க. எனக்கு வேற நிறைய வேல இருக்கு.”

“மச்சான் உன் பிளான் தான் என்னடா?”

“இவனுங்க மூனு பேர் சடலத்தையும் பாக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி இருக்காதுடா
.
“அது கனவுல கூட நடக்காது மவனே.”

“நடக்கும். டேய் இங்க பாரு இந்த வீடியோவை.” கதிர் அவன் கையில் இருந்த வீடியோவை காட்ட, அதில் தனசேகர், ராஜசேகர் இருவர் மனைவிகளின் கழுத்திலும் இருவர் கத்தி வைத்து இருக்கும் காட்சியை கதிர் தன் கைபேசியில் காட்டியதும்,

“ஐயோ என் பொண்டாட்டி” என்று இருவரும் அலறினர்.

“ஆமா ஆமா உங்க மனைவிங்க தான். இப்ப சொல்லுங்க விஷத்தை நீங்க குடிக்கிறிங்களா? இல்ல கத்தியை உங்க மனைவிங்க தொண்டையில இறக்க சொல்லவா?”

“மச்சான் சூப்பர்டா. அப்போ இதுக்கு தான் நீ கிராமத்துக்கு போறேன்னு சொல்லி வெளிய போனியா?”

“ஆமா மச்சான். அந்த கணக்கு போன்ல பொய் சொல்றான்னு எனக்கு எப்பவோ தெரியும். அதான் நான் கிராமத்துக்கு போறேன்னு சொல்லி பொய் சொல்லிட்டு, நம்ம ஆளுங்களை கிராமத்துக்கு போக சொல்லி அங்க இந்த மானம்கெட்ட ஜென்மங்களின் மனைவிங்க கழுத்துல கத்தியை வைக்க சொல்லிட்டேன். இப்ப மட்டும் இவனுங்க இந்த விஷத்தை குடிக்கலைன்னா, இவனுங்க மனைவிங்க சுமங்கலியா இந்த உலகத்தை விட்டு போயிடுவாங்க.”

“வேணாம் என் பொஞ்சாதியை ஒன்னும் பண்ணாதீங்க.”

“ஆமா கதிரு நாங்களே விஷத்தை குடிச்சிடுறோம். எங்க மனைவிங்கள ஒன்னும் பண்ணிடாத” என்றார் ராஜா.

“டேய் என்னடா பூச்சாண்டி காட்டுறியா? மகனாச்சே பார்க்கிறேன். இல்ல...”

“யோவ் முதல்ல நீ குடியா.”

“அந்த வேலைக்காரன் மவள சாகடிக்காம நான் சாகமாட்டேன்.” வீர வசனம் பேசினார் சேரன்.

“டேய் மணி இந்த ஆளு ரொம்ப பேசுறான். பேசாம நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி, அந்த கலைவாணி, கலையரசி கழுத்துல கத்தியை இறக்க சொல்லிடு.”

“ஐயோ வேணாம் கதிர். நான் குடிக்கிறேன் என் மனைவியை ஏதும் பண்ணிடாத.”

“அது நல்ல மாமனுக்கு அழகு. சரி தனா மாமா நீ குடி. யோவ் ராசசேகர் நீயும் குடிடா” என்றான்.

“டேய் அவன் தான் சொல்றான்னா நீங்க என்னடா குடிக்கிறிங்க?”

“வேற என்ன மாமா பண்ண சொல்றிங்க? எங்க மனைவிங்க உயிர் இப்ப கதிர் கையில.”

“நோ நோ போன்ல.”

“டேய் கதிர்.”

“யோவ் என்ன வசனம் பேச போறியா. உன் வசனத்தை கேக்க எனக்கு நேரம் இல்ல. இந்தா நீயும் குடி.”

“மச்சான் இருந்தாலும்...”

“என்னடா, இவன் என் அப்பா தான். ஆனா, முல்லைக்கும் கணேஷன் அப்பா தானே. அப்படி என்ன அங்க தப்பு பண்ணாங்க. இன்னும் கேட்டா நான் தான் முல்லையை காதலிச்சேன். அந்த உண்மை கணேஷனுக்கு தெரிந்தும், நான் அவர சென்னைக்கு என்கூட வாங்க. நம்ம அங்க நிம்மதியா இருக்கலாம்னு சொன்னேன். ஆனா அதுக்கு அவரு இந்த பெரிய மனுஷனுக்கு விசுவாசமா இருக்கணும்னு சொல்லி, என்னை அவர் வீட்டு பக்கமே வர கூடாதுன்னு சொன்னாரு. அவ்வளவு நல்ல மனுஷனை போய் இவனுங்க திருட்டு பழி போட்டு துடிக்க துடிக்க கொன்னு அவரை தூக்குல மாட்டி இருக்கானுங்க.”

“ஆமா மச்சான். இந்த அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்ன்னு சொல்றது எல்லாம் சும்மா வார்த்தைக்கு அழகு தரறது தான் மச்சான். தெய்வத்துக்கு ஆயிரம் வேல இருக்கு. அதனால நீயே இவனுங்கள போட்டுடு மச்சான்.”

“நான் ஏன் மச்சான் போடணும். பாவம் இவங்க செய்த கொலைக்கு தண்டனை கிடைக்க போகுதுன்னு பயந்துகிட்டு, ஊர் தலைவர் சேரன் மற்றும் அவரின் கூட்டாளிகள் தனசேகர் ராஜசேகர் ஆகிய மூவரும் விஷம் குடித்து தூக்கில் தொங்கினர். எப்படி ப்ளாஸ் நியூஸ்?”

“டேய் என்னடா சொல்ற? நமக்குப் பிரச்சனை வராதே?”

“அதெல்லாம் வராது. முல்லையிடம் மன்னிப்பு கேட்டு வந்தாங்க. அவளும் அவங்க அப்பாவைக் கொன்னவங்களை மன்னிச்சிட்டா. பேசிட்டு இருக்கும்போதே அப்படியே விழுந்துட்டாங்க. இதுதான் நாம சொல்லப் போறது. கணக்குப்பிள்ளை என்ன சொல்வார் தெரியுமா?”

“அவர் எங்க இங்க வந்தார் மச்சான்?”

“வருவார். வந்து நமக்காகப் பேசுவார். முல்லை அப்பாவைக் கொன்ன வழக்கில் அவங்களுக்கு எதிரா எல்லாம் இருக்கவும் பயந்து போயிட்டாங்க. மருமகள் கேசை வாபஸ் வாங்கினதும் மனசாட்சி உறுத்திருச்சி. மனசாட்சி கேட்ட கேள்வியை ஒதுக்க முடியலை. கணேசன் கனவுல வந்து என்னை ஏன் கொன்னீங்கன்னு தினமும் வதைக்கிறார். பயத்தில் கொஞ்ச கொஞ்சமா சாகுறதுக்குப் பதில், அவன் மகளிடம் மன்னிப்பு கேட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு, தென்னைக்கு வச்சிருந்த பூச்சி மருந்தையும் எடுத்துட்டுப் போனாங்க. இப்படி தனக்குத்தானே தண்டனை குடுத்துக்குவாங்க என்று நினைக்கலைன்னு போலீஸ் ஸ்டேசன்ல சொல்லுவார்.”

“பத்தாததுக்கு தனசேகரன், ராஜசேகரன் மனைவிங்க சொல்லுவாங்க. கணேசன் அவங்க கனவில் வந்து தொல்லை கொடுத்ததால, செத்துப்போறேன்னு சொல்லிட்டு இருந்தார். இப்படி செய்வார்னு நினைக்கலை அப்படின்னு மீடியா முன்னாடி சொல்வாங்க. இன்னும் ஊரில் சிலர் இதையே சொல்வாங்க. விஷபாட்டில் மட்டும் டிஸ்போஸ் பண்ணிடலாம். அதுக்குப்பிறகு நம்மளுக்கோ முல்லைக்கோ எந்த ஆபத்தும் இல்லை.”

“இனியொரு ஆணவக்கொலை நம்ம ஊர்ல நடக்கக்கூடாது. நம்ம ஜெனரேசன் ஆளுங்கலாவது மாறட்டும். பிடிக்கலையா? ஜாதி மாற்றுக் கல்யாணம் செய்யுறவங்களை, எங்கயோ போய் வாழ்ந்துக்கோ சொல்லிட்டு தலைமுழுகிடட்டும். அதுக்குப் பிறகு ஏத்துக்கிறதும், கடைசிவரை ஏத்துக்காம இருக்கிறதும் அவரவர் விருப்பம். அதில் யாரும் தலையிடக்கூடாது. அது கஷ்டப்பட்டு வளர்த்த பெத்தவங்களின் மன வேதனையைப் பொருத்து. இதை நம்ம செயல்படுத்தினால் தான், அடுத்த வாரிசுகளும் வெறி பிடிச்சி அலையாது. காதல் தவறல்ல. காதலித்த நபர் தவறாகிடக்கூடாது” என்று உணர்ச்சி பொங்க பேசினான் கதிர்.

“சூப்பர்டா மச்சான். இதையே நாம ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்ச்சி மாதிரி குடுக்கலாம். இனியொரு விதி செய்வோம்!” என்று நம்பிக்கையாய் சொன்னான்.

முயன்றவரை நாமும் மாறுவோம்! சமுதாயம் தன்னாலே மாறும்!

💔வாசித்ததில் பாதித்தது 💔
உயர் சாதியென்று ஆணவத்தில்
அலையும் ஜென்மமே,
நீ தொடுவதால்
சுடும் நெருப்பும்
குளிர்ச்சியாய் இருக்குமோ?
நீ இறங்குவதனால்
கடலும் தன் ஆழத்தை
குறைக்குமோ?
நீ குடிப்பதனால்
சாக்கடையும்
தேவாமிர்தமாய்
இனிக்குமோ?
நீ உடுக்கும் உடையில்
சாதி பார்த்தால்
நீ நிர்வாணமாய்
அலைய வேண்டியிருக்கும்!
நீ உண்ணும் உணவில்
சாதி பார்த்தால்
வயிறு ஒட்டியே
உனக்கு
பாடை கட்ட
வேண்டியிருக்கும் !
நீ சுவாசிக்கும் காற்றில்
சாதி பார்த்தால்
மூச்சடக்கியே
உன்னை
மண்ணில் அடக்க
வேண்டியிருக்கும்!
நீ குடிக்கும் தண்ணீரில்
சாதி பார்த்தால்
உன்
நாக்கு வறண்டே
நாய் போல் தொங்க வேண்டியிருக்கும் !
இதில் எல்லாம்
சாதியை காட்டி
வாழ்ந்து பார்!
நான் ஒப்புக்கொள்கிறேன்
நீ உயர்ந்த சாதியென்று !
உலகையும் உன் காலில்
விழச்சொல்கிறேன்
நீ உயர்ந்த சாதியென்று !
சாதி பார்த்துதான்
வாழ்வேன் என்றால்
நீ வாழ்வதற்கு
ஏற்ற இடம்
பூமி அல்ல !
மூட்டை முடிச்சை
கட்டிக்கொண்டு
இப்போதே சென்று விடு
வேற்றுகிரகத்திற்கு!

முற்றும் ✨✨
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top