• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
64
💕K காதல் M முகவரி 💕
💕முகவரி 🔟

ஈருடல் ஓர் உயிராக கடந்த நிலையில், கதிரும், முல்லைபூவும் மஞ்சத்தில் தஞ்சம் கொள்ள, மறுநாள் காலை, “ஏங்க, உங்கள தான் எழுந்துடுங்க” என்று எழுப்பினாள் முல்லை.
“என்னது ஏங்கவா?”
“ஆமா” என்றாள் வெட்கத்துடன்.
“என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு.”
“நகருங்க நான் போய் குளிக்கணும்.”
“இப்ப என்ன அவசரம்? இன்னும் வேல நிறைய இருக்கே.”
“என்ன வேலை? ஆ.. விடு கதிர்.”
“ஹ்ம் ஹ்ம் மாட்டேன்.”
“ஏன் இப்படி பண்ணுற?”
“இங்க வா முல்லை” என்றதும் “என்ன?” என்று அவள் வர, “சாரி” என்றான் கதிர்.
“எதுக்கு கதிர்?”
“நேத்து நைட்டு நான் உன்கிட்ட...” என்று நிறுத்த,
“என்ன என்கிட்ட?” என்றாள் கேள்வியாய்.
“அது இப்படி உன்ன உதட்டை...” என்று இழுத்துப் பிடிக்க, “ஆ... விடு கதிர். நான் குளிக்கணும்.”
“சேர்ந்தே குளிக்கலாம் வாடி செல்லம்.”
“என்னோட தாவணி எங்க?”
“நான் இருக்கும் போது நீ அதையெல்லாம் தேடக்கூடாது. ஓடிவா” என்று முல்லைபூவை தூக்கி சென்று, குளியல் அறையில் இருவரும் இணைந்து குளித்து முடிக்க,
“ஏன் இப்படியெல்லாம் பண்ணுற?” என்று அவனைச் செல்லமாக அடித்தாள் முல்லை.
“ஏன்னா நீ என் காதலி.”
“நான் உன் பொஞ்சாதி தானே.”
“முதல்ல நீ என் காதலி. அப்புறம்தான் என் பொஞ்சாதி.”
“சரி என் துணியைத் தா.”
“நீ இங்கேயே இரு. நான் உனக்கு டிரெஸ் எடுத்துட்டு வரேன்.” கதிர் குளியல் அறையில் இருந்து வெளியே செல்ல, முல்லைப்பூ கண்ணாடியில் தன் அழகை ரசித்தவள் கண்முன் இவளும், அவனும் கலந்திருந்த இரவு நினைவுக்கு வர, தனக்குள் சிரித்தாள்.
மீண்டும் அவளை பின்னிருந்து அணைத்த கதிர், “என்ன சிரிக்கிற?” என்றான்.
“ஒன்னுமில்லையே.”
“சொல்லுடி என்னாச்சு?”
“கதிர்” என்று சிணுங்க,
“ம்...” என்றவன் குரல் உள்ளே செல்ல, “நமக்கு பாப்பா பிறக்குமா?” என்று கேட்டாள்.
“என்னடி திடீர்னு இப்படி கேக்குற?”
“சொல்லு கதிர்.”
“ம்... பிறக்கும்தான். ஏன் கேக்குற?”
“சும்மாதான்.”
கதிர் அவளை மீண்டும் தன்வசம் இறுக்க அணைத்தவன், ”எதுக்குக் கேட்டன்னு சொல்லுடி?”
“இல்ல கதிர். நீயும் நானும் நேத்து என்னமோ பண்ணோம் இல்ல.”
“என்ன? என்னமோ பண்ணோமா?”
“ஆமா.”
“அடியே அது என்னமோ இல்லடி. என்னை உன்கிட்ட முழுசா தந்த அற்புதமான செயல். அதை என்னமோன்னு சொல்லுற.”
“ஆமாமா. ரொம்ப அற்புதம்தான். சரி ஏன் அந்த மாதிரி எல்லாம் பண்ணுனோம்?
“அதெல்லாம் அப்படிதான் பண்ணனும்.”
“ப்ச்... போ கதிர்.”
“எங்க போகச் சொல்ற?”
“வெளிய போ கதிர். இன்னைக்கு வேற நீ நீதி மன்றத்துக்கு போகணும் இல்ல.”
“ஐயோ ஆமால்ல. இன்னைக்கு தான் அந்த ஜாதி பேய்ங்க ஆட்டத்தை ஒழிக்க முடியும்.”
“ஏன் இப்ப இவ்ளோ கோவமா பேசுற?”
“ம்... ஒன்னுமில்ல சரி நீ டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.” என்று கதிர் முல்லையை அழைத்து கொண்டு நீதிமன்றம் செல்ல, முல்லையின் அப்பா கணேஷனை ஜாதி வெறிக்காகக் கொன்ற குற்றத்திற்காக, கதிரின் மாமன்கள் தனசேகர் மற்றும் ராஜசேகர் பெயரில் வழக்கு நடைபெற்றது.
“என்னமா முல்ல ஏன் நடுக்கமா இருக்க?” என்று மணி கேட்க,
“அண்ணா இங்க என்ன பண்ணுவாங்க?”
“உங்க அப்பாவை கொன்னதுக்காக இந்த ரெண்டு நாதாரிங்களை கைது செய்து தூக்குல போட்டுடுவாங்க.”
“ஐயையோ என்ன சொல்றிங்க.”
“ஆமாம்மா தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிக்கனும் தானே.”
“என்ன அண்ணா சொல்றிங்க?”
“முல்லை இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை உள்ள கூப்பிடுவாங்க. நீ உள்ள வந்து கிராமத்துல என்ன நடந்துன்னு ஒன்னுவிடாம சொல்லணும்” என்று மனைவியிடம் சொன்னான்.
“கதிர்” என்று அவள் அழைத்ததும் என்னவென அவன் பார்க்க, “வேண்டாம்” என்றாள்.
“என்ன வேணாம்?”
“நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”
“ஏய் என்ன சொல்ற? அங்க பாரு உன் அப்பாவை கொலை பண்ணவங்க கூட அஜராக வந்துட்டாங்க.”
“சொல்றதக் கேளு கதிர். அப்பா இறந்துட்டாரு தான். அதுக்காக இவங்கள தண்டிச்சா அவரு திரும்ப வரவா போறாரு. அதான் எனக்கு நீ இருக்கியே. அதுபோதும் வா கதிர் நம்ம போலாம்” என்றாள்.
“என்னமா சொல்ற? இவனுங்கள எல்லாம் தப்பிக்க விடக்கூடாது” என்றான் மணி.
“இல்ல வேணாம் கதிர். எனக்காக நீ இவங்கள ஒன்னும் பண்ணக்கூடாது.”
“ஏய் என்ன பேசுற நீ? இவங்க உன் அப்பாவை சாகடிச்சிருக்காங்க இவங்களுக்கு போய் பாரபட்சம் பாக்குற.”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. இவங்கள ஒன்னும் பண்ணவேணாம் வா நம்ம வீட்டுக்கு போலாம்.”
“முல்ல நில்லு. ஏய் நில்லுடி.”
“நீ என்ன தான் என்கிட்ட கோவமா பேசினாலும் நான் கேக்கமாட்டேன். வா கதிர் போலாம். சொல்றேன் இல்ல வா.”
“பாப்பா நீ ரொம்ப தப்பு பண்ணுறமா. உங்க கிராமத்துல இவனுங்க உன்ன எவ்வளவு கஷ்டபடுத்தினாங்க. ஆனா நீ என்னடானா இவனுங்கள மன்னிக்க சொல்ற.”
“அண்ணா நம்ம இவங்கள மன்னிக்க வேணாம். ஆனா மறந்துடுவோம்.”
“எதைடி மறக்க சொல்ற?”
“எல்லாத்தையும் மறந்துடுவோம்.”
“உன் அப்பா மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேணாமா?”
"எப்ப ஒரு உயிர் அந்த உடலை விட்டு போனதோ, எப்ப அந்த உடல இவங்க நெருப்புக்கு இறையாகுனாங்களோ, அப்பவே நியாயம் எல்லாம் மடிஞ்சுடுது."
“இப்ப நீ முடிவா என்ன சொல்ற?”
“முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்.”
“பாப்பா என்னமா நீ. என் மச்சான் உனக்காக தான் அவன் அப்பாவை கூட ஊருல போய் பாக்கல.”
“சேரன் ஐயா நல்லவரு. என் அப்பாவுக்கு அவர் மேல நல்ல மரியாத இருக்கு. அவரு கண்டிப்பா இந்நேரம் கதிரோட மாமன்களை நம்ம ஊரிலேயே தண்டிச்சு இருப்பாரு. அதனால நம்ம ஏன் இத பெருசாக்கணும்?”
“இப்ப இவ்வளவு விவரமா பேசுறவ. இந்த ஒரு மாசம் ஏன்டி நான் கூப்பிடும் போதெல்லாம் கோர்ட்டுக்கு வந்த?”
“இங்க இவங்களுக்கு தண்டனை கடுமையா தருவாங்கன்னு எனக்கு தெரியாது.”
“இப்ப என்ன சொல்ல வர்ற?”
“வீட்டுக்கு போலாம் கதிர். வா போலாம்” என்றழைக்க,
“மணி இவள வீட்டுக்கு அழைச்சிட்டு போ. நான் வர்றேன்” என்றான் நண்பனிடம்.
“நீயும் வா கதிர்” என்று அவனை விடாது நின்றாள் முல்லை.
“இது என்ன உன் மாமனார் வீடா. போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போக” என்றான் கோவமாக.
“ஏன் இப்ப இவ்வளவு கோவமா பேசுற?”
“டேய் மணி இவள கூட்டிட்டு போடா.”
“வா பாப்பா போலாம்.” மணி முல்லைப்பூவை அழைத்து கொண்டு அவன் வீட்டிற்கு செல்ல, கதிர் தன் தாய் மாமான்கள் மேல் தொடங்கிய வழக்கை திரும்பப்பெற்றவன், கோவமாக அவன் வீட்டிற்கு வந்தான்.
“கதிர் கதிர் உன்னைத்தான் வா சாப்பிடலாம்” என்றழைத்தாள் முல்லை.
“இங்க பாரு நான் உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன். ஒழுங்கு மரியாதையா ஓடிடு சொல்லிட்டேன்.”
“சரி போ. நான் போய் தூங்குறேன்.”
“ம் போ. உனக்கு அத தவிர வேற என்ன தெரியும்?”
“இப்படி எல்லாம் என்னை திட்டினா நான் அழுவேன் சொல்லிட்டேன்.”
“உன்னை கட்டிக்கிட்டதுக்கு நான்தான் அழனும்.”
“என்ன சொன்ன.” என்று அடிக்க,
“ஆ.... வலிக்குதுடி. ஏய் அடிக்காத” என்று தடுத்தான்.
“அப்போ ஏன் அப்படி சொன்ன?”
“முல்லன்னு பெயர் வச்சி இருக்கியே.. அதுல கொஞ்சமாவது மண்டையில மூளை வச்சி இருக்கியா?”
“மூளை இருந்தா உன்னை ஏன் கல்யாணம் பண்ணப்போறேன்.”
“என்னடி வாய் நீளுது.”
“நீ சும்மா சும்மா திட்டுற. போ நான் போறேன்” என்றாள்.
“ஏய் நில்லு முல்லை.”
“உன் போன் அடிக்குது நீ எடுத்துப் பேசு. நான் போய் தூங்குறேன்.”
‘இது வேற நேரங்கெட்ட நேரத்துல போன். யாரு இது?’ என மனதில் திட்டி, “ஹலோ யார் பேசுறது?” என்றான் கடுப்புடன்.
“சின்ன ஐயா நான் கணக்கு பேசுறேன்.” என்று அவர்கள் வீட்டின் கணக்குப்பிள்ளை பேச,
“ஓ... என்ன?”
“பெரிய ஐயா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு. நான் மருத்துவமனையில இருந்து தான் ஐயா உங்ககிட்ட பேசுறேன்.”
“என்ன சொல்றிங்க? அப்பாக்கு என்னாச்சு?”
“ஐயாக்கு பின்னாடி மண்டையில பலத்த காயங்க. பக்கத்து ஊருல இருக்குற மருத்துவமனையில தாங்க சிகிச்சை தரோம்”
“ஐயோ அப்பாவ பாத்துக்கோங்க. நான் இப்போவே வறேன்.” கணவனின் பதற்றத்தில், “என்ன கதிரு என்னாச்சு?” எனக்கேட்டாள் முல்லை.
“முல்லை அப்பா அப்பாக்கு...” என்று திணற,
“அப்பாக்கு என்னாச்சு?” அவனின் பதற்றம் இவளையும் தொற்றியது.
“அப்பா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு போல. நான் உடனே கிளம்புறேன்.”
“அப்போ நானு.”
“மறுபடியும் நீ அந்த ஊருக்கு வேணாம். நீ இங்கேயே இரு. நான் மணியை வந்து இங்க உனக்கு துணைக்கு படுக்கச் சொல்றேன். நீ ரூம்ல படுத்துக்கோ” என்றான்.
“சரி கதிர். நீ சீக்கிரம் வந்துடு.”
“கண்டிப்பா சரி நீ ஜாக்கிரதை. நான் மணிக்கிட்ட சொல்லிட்டு போறேன்.” என்று சொன்ன கதிர் பதட்டமாக அவன் கிராமத்தின் பக்கத்து ஊரில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல, முல்லை கதிர் அப்பாவிற்கு என்ன ஆனது என்ற குழப்பத்தில் இருந்தாள்.
“பாப்பா நீ போய் தூங்குமா” என்றான் துணைக்கு வந்த மணி.
“இல்ல அண்ணா கதிர் உங்களுக்கு அந்த... இது...” என சொல்லத் தெரியாது தடுமாற,
“என்னதுமா?”
“அ...அதான் போனு.”
“ஓ... செல்போனா?”
“ம்... ஆமா அண்ணா. அது பண்ணட்டும். அப்புறமா நான் போய் தூங்குறேன்” என்றவள், “அண்ணா யாரோ கதவ தட்டுற மாதிரி இல்ல” எனக்கேட்டாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
64
“சவிதாவா இருக்கும் இரு பாக்குறேன்.” மணி கதவை திறக்க, வாசலில் நின்று இருந்ததோ கதிரின் மாமன்கள் தனா மற்றும் ராஜசேகர்
“நீங்க எங்க இங்க?” மணி கேட்க,
“அது ஏன் உனக்கு?”
“கதிர் வீட்ல இல்ல.”
“தெரிஞ்சு தான்டா வந்து இருக்கோம். சரி எங்க அவன்?” என்று ராஜசேகரன் கேட்க,
“அவுங்க அப்பா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு. அதைப் பார்க்கப் போயிருக்கான்.”
“யாரு நானா?” என்று வந்தார் சேரன்.
“அங்கிள் நீங்க?” என்று மணி விழிக்க,
“உள்ள போய் பேசலாமா?”
“இல்ல வீட்ல யாரும் இல்ல. நீங்க வாங்க மாடியில தான் என் வீடு. அங்க போய்ப் பேசுவோம்.”
“பாரு அண்ணா வீட்ல யாருமே இல்லையாம். அதனால இவன் நண்பன் மனைவி கூட...” என்று தனசேகரன் நிறுத்த,
“யோவ் என்ன பேசுற?” கோபத்தில் பாய்ந்தான் மணி.
“டேய் அடங்கு. முதல்ல உள்ள போ. மாமா நீங்க உள்ள போங்க. டேய் தனா கதவ சாத்து..” என்று ராஜா சொல்ல.
“ஏங்க வெளிய போங்க முதல்ல. இருங்க நான் போலீஸ்கு போன் பண்றேன்” என்றான் மணி.
“டேய் நாங்களே இங்க வேலையை முடிச்சிட்டு போலீஸ்கு தான் போக போறோம்.” தனசேகரன் பொடிவைத்துப் பேச,
“என்ன வேலை?”
“ம் காவு தர போறோம்” என்றார் ராஜசேகரன்.
“என்னங்க சொல்றிங்க?”
“டேய் எல்லாம் உனக்கு விவரமா சொல்லனுமா. எங்கடா அவ?” தனசேகரன் குரல் உயர்த்த,
“அண்ணா யாரு வந்து இருக்காங்க” என்று உள்ளே இருந்து கேட்டாள்.
“பாப்பா நீ வராதமா. ரூம்க்கு போ” என்றான்.
“என்ன சத்தம் அண்ணா?”
சேரன் அவளுக்குத் தெரிந்தாற்போல் நின்று, “வாமா முல்லை வா” என்றார்.
“ஐயா நீங்களா? நீங்க எப்படி இங்க? உங்களுக்கு அடிப்பட்டு இருக்குன்னு தானே கதிர் போனாரு.”
“அவனா போகல. நாங்க போக வச்சோம்” என்றார் சேரன்.
அவரின் சூது புரியாது, “ஓ... சரி சரி நீங்க வாங்க. வந்து உக்காருங்க” என்றாள்.
“ஏன்டி இங்க உக்காரவா நாங்க வந்து இருக்கோம்?” ராஜசேகரன் குரலில், அவள் புரியாது பார்க்க, “அண்ணா இவகிட்ட என்ன பேச்சு.? போட்டு தள்ளுங்க இவள” என்றார் தனசேகரன்.
“டேய் அதுக்கு முன்னாடி அந்த டிவி பொட்டியை போட்டு சத்தத்தை கூட்டி வை.”
“ஏங்க என்னங்க பண்ண போறீங்க? முல்லை நீ வா மா நம்ம வீட்டுக்கு போலாம்.” மணி அழைக்க, அவளோ, கதிர் வரட்டும் அண்ணா” என்றாள்.
சேரன் அவளின் கன்னத்தில் அரை வைத்து, “என்ன கதிரா? என் மவனை பெயர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு உனக்கு திமிர் அதிகமாச்சு இல்ல” என்க,
“அங்கிள் என்ன பண்றிங்க?”
“டேய் தனா அவன ஒன்னு போடுடா. நடுவுல கிடந்தது குதிச்சிட்டே இருக்கான்.”
“அட பாவிங்களா முல்லை அப்பாவை கொன்னதுக்கு, உங்கள மட்டும் இநேரத்துக்கு தண்டித்து இருந்தா, நீங்க உள்ள இருந்து இருப்பிங்க. உங்களுக்கு போய் முல்லை பாவம் பாத்த விளைவு, நீங்க முல்லையை கொடுமை பண்ணுறீங்களா?”
“டேய் இவ அப்பாவை கொன்னது என் மச்சானுங்க இல்லடா. நான்... நான் தான் கொன்னேன்” என்றார் சேரன்.
“என்ன சொல்றிங்க?”
“ஆமாடி. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் வீட்டுக்கு மருமகளா வர நினைச்சு இருப்ப. அதனாலதான் உன் அப்பன் மேல திருட்டு பழி போட்டு, உன்னையும் அவனயும் ஊரை விட்டே துரத்த பாத்தோம். ஆனா நாங்க எதிர் பார்க்காத சமயத்துல என் மகன் உள்ள வந்து எல்லாத்தையும் கலைச்சிட்டான்.”
“எங்க அப்பா உங்கள என்ன பண்ணாரு? ஏன் அப்படி செய்தீங்க?” என்றாள் அழுகையுடன்.
“உன் அப்பன் விசுவாசமானவன். அதனாலதான் என் மகன் உன் குடிசைக்கு ஏன் வந்தான்ன்னு நான் கேட்டதும், அவன் உன்னை காதலிக்கிற விஷயத்தை என்கிட்ட சொன்னான். அப்போ முடிவு பண்ணேன். நீ அந்த ஊரிலேயே இருக்ககூடாதுன்னு. ஆனா, நீ என்னடனா எப்படியோ தப்பித்து என் மகனை கல்யாணம் முடிச்சு சந்தோஷமா வாழற இல்ல” என்றார் ஆத்திரமாக.
“நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு சரியா புரில. ஆனா நீங்க ஏன் என் அப்பாவை கொன்னிங்க?”
“ஆங் அவன் கையால உனக்கு தான் நாங்க விஷம் வைக்க சொன்னோம். ஆனா அவன் முடியாதுன்னு சொன்னது மட்டும் இல்லாம, அவன் மேல நாங்க போட்ட திருட்டு பழியை நிரூபிக்க என்ன வேணும்னாலும் பண்ணுவேன்னு எங்ககிட்டயே சவால் விட்டான். அதான் அவனை அடிச்சு தொங்க விட்டுடோம்.” ராஜசேகரன் நடந்ததைச் சொல்ல,
“அட பாவிங்களா. முல்லை பாத்தியாமா. நான் அப்பவே சொன்னேன் இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் தண்டிச்சே தீரணும்னு. நீ என்னனா இவங்களுக்கு பாவம் பாத்த. ஆனா இவங்க உன் அப்பாவை பதம் பாத்து இருக்காங்க பாத்தியா?”
“என்னை விட்டுடுங்க. நான் கதிர்கிட்ட போகனும்.”
“ஏய் கிராமத்துலேயே உன் கதையை முடிச்சு இருப்போம். ஆனா, நீ தப்பிச்சிட்ட.”
“டேய் ஜாதி பிசாசுங்களா. இப்ப நீங்க வெளிய இருக்கிறதே முல்லை போட்ட பிச்சை தான்.”
“ஆமா ஆமா அதனாலதான் நாங்க ஒரு முடிவு பண்ணியிருக்கோம். தனா அந்த விஷத்தை எடு” என்றார் ராஜசேகரன்.
“டேய் என்னடா பண்ணறீங்க?”
“இவ போட்ட பிச்சையில வாழந்து சாகறதுக்கு பதில், நாங்க எங்க கௌவரவத்துக்காக இவளை கொலை பண்ணிட்டு வீரமா தூக்கில கூட தோங்குவோம்டா. அண்ணா அவ வாயை திற” என்றார் தனசேகரன்.
“என்னை விடுங்க. என் கையை விடுங்க.”
“ஜாதி கௌவரவத்துக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஏன் என் மகனை கூட இநேரத்துக்கு எங்க ஜாதி கார பசங்க குழி தோண்டி புதைத்து இருப்பாங்க” என்று நின்றார் சேரன்.
“கதிர். கதிரை ஒன்னும் பண்ணிடாதீங்க. உங்கள கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன். என் கதிரை விட்டு வேணும்னா நான் போயிடுறேன். ஆனா அவர ஒன்னும் பண்ணாதீங்க” என்று கெஞ்சினாள்.
“அவனுக்கு ஏதும் ஆகக்கூடாதுனா, நீ உயிரோட இருக்ககூடாது.”
“சரி நானே செத்து போறேன். என் கதிர் நல்லா இருக்கட்டும்.”
“பாப்பா என்னமா சொல்ற?”
“என் கதிர் நல்லா இருந்தாலே போதும். நான் போறேன் அண்ணா.”
“அண்ணா முதல்ல இந்த அல்லக்கை காலை உடைச்சு அந்த அறைக்குள்ள தூக்கி போடு” என்றார் தனசேகரன்.
“டேய் விடுங்கடா” என்ற மணியை கதிரின் பெரிய மாமன் அடித்து ஒரு அறைக்குள் போட்டு கதவை தாழிட,
“ஏய் இந்தா குடி இதை” என்றார் சேரன்.
“மாமா இவ இத குடிச்ச பத்து நிமிஷத்துல பரலோகம் போயிடுவா.”
“நமக்கும் அதானே வேணும். இவ போட்ட பிச்சையில நம்ம வாழறதுக்கு நம்ம செத்து போலாம்டா.” என்றார் ராஜா.
“என்னடி பாக்குற? ம்... குடிடி.. கீழ் ஜாதி...” என்று திட்ட,
“இப்ப குடிக்கிறியா? இல்ல கதிரை ஊர்கார பசங்களை வச்சு அடிக்க கொல்லவா.” என்று பயமுறுத்த,
“வேணாம் வேணாம் நான் குடிக்கிறேன். தாங்க” என்று வாங்கிய முல்லைப்பூ இவர்கள் தந்த விஷத்தை குடிக்க, “ரொம்ப கசக்குது. சர்க்கரை கூட சாப்பிடவா?” என்று கேட்டாள்.
“ஏய் பைத்தியமே. ம் முழுசா குடி.”
“நான் குடிக்கிறேன். ஆனா கதிர ஒன்னும் பண்ணிடாதீங்க.” முல்லை அந்த விஷத்தை முழுவதுமாக குடித்து முடிக்க, கண்கள் கிறங்கி வாயில் ரத்தத்துடன் கீழே சரிந்து விழுந்தாள்.
“டேய் ராஜா யாரோ கதவ தட்டுறாங்க பாரு.”
“யாரு இந்த நேரத்துல? டேய் தனா நான் இவள மறைவா இழுத்துட்டு போறேன். நீ யாருன்னு பாரு.”
“தனா நீ போ நான் பாக்குறேன்” என்று சேரன் சொன்னதும், ராஜா முல்லையை பக்கத்து ரூமுக்கு இழுத்து செல்ல, வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு சேரன் கதவை திறக்க, வாசலில் கோவமாக கதிர் நின்று இருந்தான்.
“நீங்க இங்க என்ன பண்றீங்க? என்ன பூச்சாண்டி காட்டுறிங்களா? கணக்கு பிள்ள நீங்க கிழ விழுந்து அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கீங்கன்னு சொன்னாரு. ஆனா நீங்க என்னடனா என் வீட்ல இருக்கீங்க?” என்று கேள்வி கேட்டான் கதிர்.
“உன்னை பாக்க தான் மாப்பிள்ள வந்தோம்” என்றார் தனா.
எனக்கு உங்கிட்ட பேச விருப்பமில்ல. மணி மணி... டேய் எங்கடா இருக்க? முல்லை முல்லை” என்று அழைக்க, முல்லை அனத்தும் சத்தம் கேட்டு கதிர் வேகமாக வீட்டுக்குள் இருக்கும் இன்னொரு அறைக்கு செல்ல, அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவன் மனைவியை பார்த்ததும் பதறி போய், அவள் அருகில் வந்தவன் அவளை தன் மடி மீது கிடத்தி கொண்டு, “முல்லை என்னடி ஆச்சு உனக்கு? ஐயோ! ஏய் என்னங்கடா பண்ணீங்க என் முல்லையை?” என்று கதறினான்.
“க...கதிர்... கதிர் வந்துட்டியா. உனக்கு ஒன்னும் ஆகல இல்ல.”
“என்னடி இது வாயில ரத்தம் எல்லாம் வருது. இங்க என்ன நடக்குது முல்லை?”
“கதிர் என்னை விட்டு போகாத. இவங்க எனக்கு விஷம் தந்துக் குடிக்க சொன்னாங்க. ரொம்ப கசக்குது சக்கரை கூட தரல” என்று புகாரளித்தாள்.
“டேய் உங்கள...” கதிர் கத்த,
சேரன் அருகில் இருந்த சேரை கொண்டு கதிர் தலையில் அடிக்க, அவன் நிலை தடுமாறி முல்லை அருகில் சரிந்து விழ,
“ஐயோ. என் கதிர ஒன்னும் பண்ணிடாதீங்க.”
“டேய் ராஜா இவன காருல தூக்கி போடுங்கடா.”
“முல்ல. டேய் விடுங்கடா என்னை” என்று கதிர் துள்ள,
“தனா நீ இவன கொண்டு போய் நம்ம பண்ண வீட்ல கட்டி போடு. அப்போ தான் கௌவரவத்துக்காக தன் மகனையே தண்டித்தான் இந்த சேரன், என்று நம்ம ஜாதி கார மக்கள் எல்லாம் என்மேல மதிப்பும், மரியாதையுடனும் நடந்துப்பாங்க. ம்... தூக்கிட்டு போங்க இவன. டேய் ராஜா நீ இவளை தூக்கி அந்த பேன்ல மாட்டுடா” என்று கட்டளையிட்டார்.
“முல்ல. டேய் என்னங்கடா பண்ணுறீங்க?”
“ம் தெரியலையா மகனே, இவள கௌவரவ கொலை பண்ணப்போறோம்.”
“கதிர்.... கதிர்...” அவள் அலற,
“முல்லை” என்று கதிர் தலையில் ரத்த காயத்துடன் முல்லையை கட்டி பிடித்து கொள்ள,
“கதிர் இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்க? ஜாதினா என்ன? நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் என்னை சாக சொல்றாங்க? கதிர் இங்க பாரு” எனவும், கதிர் முல்லையின் நெற்றியில் இதழ் பதித்தவன் கண்கள் கிறங்கி மூச்சு பேச்சு இல்லாமல் அவள் மடியில் சரிந்து விழுந்தான்.
“கதிர்” என்ற சொல்லை மட்டுமே இறுதியாக சொன்னவள் அவன் தோளில் கண்மூட,
“என்ன மாமா இது? ரெண்டு பேரும் போயிட்டாங்க போல?” என்றார் ராஜா.
“டேய் எப்ப இவன் கீழ் ஜாதி வீட்டு சட்டியில கஞ்சி குடிச்சானோ, அப்பவே என்னை பொறுத்த வர செத்துட்டான். அதனால இந்த ரெண்டு சடலத்தையும் சேர்த்து இந்த வீட்டை கொளுத்தி விடுங்கடா “என்று கதிரின் அப்பா சேரன் சொன்னதும் ராஜாவும், தனாவும் அவர் சொல்லுக்கு கட்டுபட்டனர்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top