• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 15, 2025
Messages
5
"காதல் சுகமானது"
IMG-20250217-WA0003.jpg


சென்னை ரயில் நிலையம்.

அந்த காலை வேளையிலேயே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சென்னை ரயில்வே நிலையம்.


ஹிந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் இன்னும் என்ன பாஷை என்று தெரியாத மொழிகளில் பேசியபடி மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ரயில்களின் ஒலியும், ரயில் கொம்பு (ஹாரன்) ஒலியும், அங்கே ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சத்தமும், நடந்தபடி பேசிக் கொண்டிருந்த மக்களின் சத்தமும் எதுவுமே நித்யாவின் காதில் விழவில்லை.


அவளுடைய எண்ணம் மொத்தமுமே தன் காதலன் கிருஷ்ணன் மேல் இருந்தது. இன்னும் இரண்டு நாளில் அவனுடன் திருமணம் பின்னர் அவனுடன் கொடுக்க போகும் முத்தங்கள் என்று எதை எதையோ யோசித்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அங்கே அவளை கடந்து போகிறவர்கள் யாரைக் கேட்டாலும் அவளை பார்த்தவுடனே கூறிவிடுவார்கள், அவள் காதல் வயப்பட்டு இருக்கிறாள் என்று. அவளுடைய சிரிப்பு காதலில் மூழ்கிய பெண்ணின் வெட்கம் கலந்த சிரிப்பு என்று.


தன் காதலனை நினைத்து, அவனுடன் பேசியவை, சிரித்தவை என அனைத்தையும் நினைத்துப் பார்த்து கொண்டிருந்தாள் நித்யா.

அப்போது ஒரு கை அவள் தோளைத் தொட்டது. தன்னுடைய யோசனை கலைந்தவளாய் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

அங்கே அவளுடைய தோழி புவனா நின்று கொண்டிருந்தாள்.

"புவி, எப்படி இருக்க டி? எவ்வளவு நாளாச்சு உன்னை நேரா பார்த்து " என்று சந்தோஷமாக சிரித்தபடி அவளை கட்டி கொண்டாள் நித்தியா.

"நித்யா, வா போகலாம் " என்று ஒரு சிறிய புன்னகையை மட்டும் சிந்தி நித்யாவை அழைத்துச் சென்றாள் புவனா.

' என்னாச்சு இவளுக்கு நான் வந்தது சந்தோஷம் இல்லையா? இரண்டு நாளா எப்ப வர எப்ப வரன்னு இவ தானே கேட்டுகிட்டு இருந்தா? இப்போ நேரா பார்த்ததும் சரியா பேசல, சிரிக்க கூட இல்ல. எப்படி இருக்கிறாய் என்று கூட கேட்கல ' என்று நினைத்துக் கொண்டாள் நித்யா.


புவனா தங்கிக் கொண்டிருக்கும் 'பணி பெண்கள் தங்கும்' விடுதிக்கு சென்ற பிறகு,

நித்யாவை காலைக் கடன்களை முடித்து விட்டு வரச் சொன்னாள் புவனா.

நித்யா குளித்துவிட்டு வந்த பிறகு, தான் ஏற்கனவே செய்து வைத்திருந்த இட்லி மற்றும் சாம்பாரை தட்டில் வைத்து எடுத்து வந்தாள் புவனா.

" இல்ல புவி, இப்ப எனக்கு பசிக்கல. நீ சாப்பிடு"

" எனக்கும் தான் எடுத்து வந்திருக்கேன். நீ முதல்ல சாப்பிடு அப்புறம் மத்தத பேசிக்கலாம் "

" உண்மையிலேயே எனக்கு பசிக்கல டி "

" சாப்பிட்டு முடி, நாம வெளியே போய் பேசலாம் "

" ஏன் என்னாச்சு? என்ன பேசனும்? அப்படியே இருந்தாலும் இங்கேயே பேசினால் என்ன? "

" இங்க ஸ்டே பண்ற ஒருத்தவங்க நைட் ஷிப்ட் முடிச்சுட்டு இப்போ வந்துடுவாங்க. சாப்பிட்டு விட்டு உடனே தூங்குவாங்க அதனால நம்ம இங்க பேச முடியாது"

" ஓகே புவி, எங்க போய் பேசலாம்? "

" அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன் நீ முதல்ல சாப்பிடு "


அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் புவனா கொடுத்த இட்டிலிகளை சாப்பிட்டு முடித்தாள் நித்தியா. புவனாவும் சாப்பிட்டாள்.

' நம்ம கிருஷ்ணன் பாம்பேல இருந்து வர வரைக்கும் ரெண்டு நாள் தானே தங்குவதற்கு இடம் கேட்டோம். அது கூட முடியாதுன்னு சொல்ல போறாளா? வெளிய கூட்டிட்டு போய் என்ன பேச போறா?' என்று நினைத்துக் கொண்டாள் நித்தியா.


சாப்பிட்ட உடன் தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து நித்யாவை அமர வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய வணிக வளாகத்திற்கு (ஷாப்பிங் மாலுக்கு) அழைத்துச் சென்றாள் புவனா.

அங்கே மூன்றாவது மாடிக்கு மின் தூக்கி படிக்கட்டில் (எஸ்கலேட்டரில்) ஏறிச் சென்று ஒரு பெரிய உணவு விடுதிகள் பிரிவின் (ஃபுட் கோர்டின்) ஓரமாக இருந்த மேசை மற்றும் இரண்டு நார்காலிகள் இருந்தது. நித்யாவை அழைத்துக் கொண்டு அங்கே சென்று அமர்ந்தாள் புவனா.

" இப்போ சொல்லு நித்யா "

" என்ன சொல்ல சொல்ற? "

" நீ எப்ப திரும்ப ஊருக்கு போக போற? "

"நினைச்சேன் புவி, நான் வந்தது உனக்கு பிடிக்கலை தானே? அதனால தானே இப்படி கேட்குற? "

" லூசு மாதிரி பேசாத நித்யா. நான் எப்போதாவது அப்படி நினைத்து இருக்கேனா? "

" பின்ன ஏன் இன்னைக்கு என்னை பார்த்த உடனே உனக்கு சந்தோஷமே இல்ல? "

" அதுக்கு காரணம் இருக்கு நான் அதை அப்புறமா சொல்றேன். நீ ஏன் ஊருக்கு போக மாட்டேன்னு சொல்ற? "

"நான்தான் உன்கிட்ட வீட்டில் இருந்து கிளம்பும்போதே சொல்லிட்டேனே. திரும்ப ஊருக்கு போற ஐடியா இல்லைன்னு. திரும்ப போனேன்னு வச்சுக்கோ என்னோட தாய் மாமா பையன் அரவிந்தை எனக்கு கட்டி வச்சிருவாங்க. என்னால கிருஷ்ணன மறந்துட்டு வேற யார் கூடவும் குடும்பம் நடத்த முடியாது "

" கிருஷ்ணன் என்ன சொன்னான்?, சாரி என்ன சொன்னாரு? "

" பரவாயில்ல டி, அவன் இவன் கூட சொல்லு ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அவருக்கு நம்ம வயசு தான் இருக்கும்" என்று வெட்கம் கலந்த சிரிப்புடன் கூறினாள் நித்யா.

"சரி, நீ சொல்லு "

" கிருஷ்ணன் முக்கியமான வேலையா பாம்பே போயிருக்காரு. இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவாரு. அதுக்கப்புறம் நாங்க கோவில்ல போய் கல்யாணம் பண்ணிப்போம். சட்டப்படி கல்யாணம் பண்றதுக்கு நிறைய விதி முறைகள் இருக்காம் அதனால அதுக்கு ஒரு மாசம் ஆகும். அதுக்கு தேவையான எல்லா சான்றுகளையும் எடுத்து கொண்டு வரச் சொன்னாரு. எல்லாம் ரெடியா எடுத்து வந்திட்டேன். இந்த ரெண்டு நாள் மட்டும் உன் கூட தங்குவதற்கு எனக்கு அனுமதி கொடு டி. பிளீஸ்"

" டேவிட்டை சாரி சாரி, கிருஷ்ணனை உனக்கு எப்படி தெரியும்? "

" என்ன டேவிட்டா? அது யாரு? "

" இல்ல தெரியாம சொல்லிட்டேன், நீ சொல்லு"


"நாங்க instagram ல தான் பிரெண்ட்ஸ் ஆனோம். அதுக்கப்புறம் ரெகுலரா அவர் பெண்கள் பத்தி போடும் ரீல்ஸ் எல்லாம் பார்த்துட்டு நான் அவர் கூட சாட் பண்ணுவேன். அவர் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வச்சிருக்காரு தெரியுமா? அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அதுக்கப்புறம் நம்பர் எக்ஸ்சேஞ்ச் பண்ணி பேச ஆரம்பிச்சோம். வீடியோ கால்ல கூட பேசுவோம். அப்புறம் எங்களுக்குள்ள காதல் வந்துடுச்சு"
என்று வெட்கத்துடன் பேசினாள் நித்தியா.

" எப்பவாவது உன்னோட முழு புகைப்படத்தை வீடியோ காலில் காட்டச் சொல்லிக் கேட்டு இருக்கானா? "

" ஆமாம் ஏன் கேட்குற? "

" சொல்றேன்"

" ஃபோன்ல ஏதாவது ஆபாசமாக பேசுவானா? "

" சீ சீ, நீ ஏதோ தப்பா நினைச்சுகிட்டு பேசுற.

கிருஷ்ணா அப்படியெல்லாம் இல்ல. ரொம்ப ரொம்ப நல்லவர். அவங்க அம்மாகிட்ட பேசி இருக்கேன். அவங்க தங்கச்சி கிட்ட பேசி இருக்கேன். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல "

விரக்தியாக சிரித்தாள் புவனா.

" என்னடி ஏன் இப்படி சிரிக்கிற"

" காரணத்தை அப்புறமா சொல்றேன்.
சரி இப்ப வீட்ல என்ன சொல்லிட்டு இங்க வந்திருக்க? "

" சென்னையில் ஒரு வேலைக்கு இன்டர்வியூக்கு போறேன்னு. அதுவும் நீ சென்னையில இருக்கவே தான் தைரியமா அனுப்பிச்சாங்க. இல்லனா அனுப்பி இருக்க மாட்டாங்க."

"நீ வருவது கிருஷ்ணாவுக்கு தெரியுமா?"

"இல்ல இரண்டு நாள் கழிச்சு பாம்பே வில் இருந்து வந்திடுவேன். அப்போது வா என்று தான் சொன்னாரு. நான் தான் கல்யாணம் என்று முடிவான பிறகு எதுக்கு இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வரணும். இப்பவே போகலாம். உன் கூடவும் இருக்கலாம். கல்யாணத்துக்கு தேவையான சில பொருட்களை உன்னோடு சேர்ந்து வாங்கலாம் என்று நினைச்சேன்"

" என்னடி இது கையில? " என்றாள் புவனா.
 
Last edited:
Joined
Feb 15, 2025
Messages
5
தன் வலது கை மணிக்கட்டில் புல்லாங்குழல் மற்றும் மயிலிறகு டாட்டூ போட்டு இருந்தாள் நித்யா.

" என்னோட லவ்வர் நேமை சிம்பாலிக்கா போட்டு இருக்கேன் " என்று சொல்லி வெட்கத்துடன் சிரித்தாள்.

புவனா சுடிதாரை சற்று பக்கவாட்டில் தள்ளி கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் போட்டிருந்த டாட்டூவை காண்பித்தாள்.

ஹார்ட் சிம்பலில் உள்ளே டேவிட் என்று எழுதி இருந்தது.

" ஏய் நீயும் லவ் பண்றியா சொல்லவே
இல்ல. யாரு டேவிட், உன் கூட ஒன்னா வேலை செய்றாரா? அவரை தான் லவ் பண்றீயா?"

" ஆமாம் ஒன்னா தான் வேலை செய்கிறான் "

என்று விரக்தியாக பேசினாள்.

" என்னடி பிரேக்கப்பா? ஏன் உன் கண்ணெல்லாம் கலங்குது" என்று சொல்லி தன் தோழியின் தோளைத் தடவினாள் நித்தியா.


கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டு, தன் ஃபோனில் இருந்து டேவிட் உடன் அவள் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை நித்யாவிற்கு காட்டினாள் புவனா.

அதைப் பார்த்ததும் நித்தியாவின் கண்கள் விரிந்தது. கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. கழுத்தில் சிலுவை டாலருடன் புவனாவின் தோளில் கைப்போட்டுக் கொண்டு சிரித்தபடி நித்யாவின் காதலன் கிருஷ்ணா இருந்தான்.

"நீ ட்ரெயின் ஏறிட்டு எனக்கு ஃபோன் பண்ணும் போது தானே நான் உன்கிட்ட கிருஷ்ணா ஓட ஃபோட்டோவை அனுப்ப சொன்னேன். நீ அனுப்பியதை பார்த்ததும் எனக்கும் அதிர்ச்சி. ஆறு மாதத்திற்கு முன்னால் என்னை ஏமாற்றியவன் இப்போது உன்னையும் ஏமாற்ற போகிறானே என்று நினைத்து பயந்தேன்.
நான் ஃபோன்லையே சொல்லி இருப்பேன். இருந்தாலும் நீ தப்பா புரிஞ்சிக்கிட்டேனா. அதான் நீ வந்ததும் உன்னை நேரா பார்த்து சொல்லலாம் என்று நினைத்தேன்.


நல்லவேளை அவன் இப்போ ஊர்ல இல்ல. அதுவும் இல்லாம நீ இன்னைக்கு சென்னைக்கு வரன்னு அவன் கிட்ட சொல்லல?"

"ஆமாம் கிருஷ்ணா பாம்பேவிலிருந்து வந்ததும், சர்ப்ரைஸா அவன் முன்னாடி போய் நிற்கலாம்னு நெனச்சேன் "

" நல்ல வேளை அதை நீ பண்ண, இல்லனா நீ வருவதை தெரிஞ்சுக்கிட்டு அம்மா தங்கச்சின்னு உன்கிட்ட வீடியோ கால்ல காட்டினானே அவங்க எல்லாம் தொழில் புரோக்கர்ஸ். அவங்கள வந்து உன்னை கூட்டிக்கிட்டு போக சொல்லி இருப்பான்.

உன்னை கல்யாணம் பண்ணிப்பான், அவனுக்கு சலிக்கிற வரைக்கும் உன் கூட குடும்பம் நடத்துவான். அதுக்கப்புறம் அவன் சொல் பேச்சைக் கேட்டு இங்கேயே தொழில் பண்றதுக்கு நீ ஒத்துக்கிட்டன்னா உன்னை விட்டுடுவான். ஆனால் 24 மணி நேரமும் அவனுடைய கட்டுப்பாட்டில் தான் வச்சுக்குவான். அவனுக்கு நம்பிக்கை வந்த பிறகு தான் தனியா வெளியே போக அனுமதிப்பான். நான் ஒரு மாசமா தான் தான் தனியா போகிறேன். அதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க போகிறதா இருந்தாலும் ஒரு ஆள் ஐந்து அடி தள்ளி கூடவே வருவான். நீ தொழில் பண்ண சம்மதிக்காம முரண்டு பிடிச்சா பாம்பேல கொண்டு போய் உன்னை வித்துடுவான்.


இப்ப ரூம்ல ஒருத்தவங்க நைட் ஷிப்ட் முடிச்சுட்டு வந்தாங்கன்னு சொன்னேனே. அவங்களும் அந்த வேலையைத்தான் செஞ்சுட்டு வந்தாங்க. எனக்கு இன்னைக்கு ராத்திரி நைட் ஷிஃப்ட்.

நீ கேட்கலாம் எதுக்கு அவன் சொல்றத கேட்டுக்கிட்டு இங்கே இருக்க வேண்டும் நம்மோட ஊருக்கு போயிடலாமேன்னு?

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே எங்க அப்பா அம்மாக்கு தெரியாது. அவன் கூட சேர்ந்து இருந்ததை வீடியோ எடுத்து வச்சு எங்க அப்பா அம்மா கிட்ட காட்டிடுவேன்னு மிரட்டுறான். நெட்டுல போட்டுடுவேன்னு பயமுறுத்தினான். அதுக்கு பயந்து தான் அவன் பேச்சைக் கேட்டு நானும் இந்த தொழிலில் இறங்கிட்டேன். உன்னை மாதிரி தான் நானும் பேஸ்புக்கில் பிரண்டா ஆனேன். நிறைய வீடியோ கால்ல பேசி இருக்கோம்.

அவன் நம்மள ஃபுல் போட்டோ காட்ட சொல்றது நம்மளை பாக்கிரத்துக்கு இல்லை. நம்ம உடம்பு ஸ்ட்ரக்சரா இருக்கா, நம்ம சரியான விலை போவோமா? என்பதை தெரிந்து கொள்வதற்கு தான். உன்னை மாதிரி தான் எனக்கும் அம்மா அக்கான்னு ரெண்டு பேரை இன்ட்ரடியூஸ் பண்ணான். அவனை நம்பி சர்ச்சில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஒரு மாசம் கழிச்சு ரெஜிஸ்டர் ஆஃபீஸில் கல்யாணம்னு சொன்னான் ஆனா அது பொய் வாக்குறுதி ன்னு அப்புறம் தான் தெரிஞ்சு கிட்டேன். நான் ஏமார்ந்த மாதிரி நீயும் ஏமார்ந்து விடாதே.

நம்ம அப்பா அம்மா ஒன்னு சொல்றாங்க நா அது நல்லதா தான் இருக்கும். உங்க அப்பா அம்மா சொல் பேச்சைக் கேட்டு உங்க மாமா பையன கல்யாணம் பண்ணிக்கோ. டேவிட் நல்லவன் இல்லை. இல்ல இல்ல உனக்கு புரியுர மாதிரி சொல்லனும்னா கிருஷ்ணா நல்லவன் கிடையாது" என்று புவனா பேசிக்கொண்டே சென்றாள்.

இதையெல்லாம் கேட்ட நித்யாவிற்கு தலை சுற்றுவது போல இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

" காதல் சுகமானது " நித்யா.

புனிதமான காதலை வியாபாரமாக ஆக்குற இந்த மாதிரி அயோக்கியனுங்க கிட்ட உண்மையான காதலைத் தேடக் கூடாது.

நம்ம ரெண்டு பேரும் பண்ண தப்பு எது தெரியுமா? நம்ம காதலிக்கிறவன் நல்லவன் தானான்னு என்று தெரியாமல் காதலிச்சுட்டோம். நம்ம காதல் உண்மையானது தான். ஆனா நம்ம காதலிச்சவன் தான் நல்லவன் இல்லை." என்றாள் புவனா.

"புவி, இப்ப என்ன பண்றது எனக்கு ஒண்ணுமே புரியல"

" நீ உன்னோட மாமா பையனை கல்யாணம் பண்ணிக்கிறியோ இல்லையோ அது உன்னோட விருப்பம். ஆனா முதல்ல ஊருக்கு கிளம்பி போ. அப்பா அம்மா கூட இருக்கிற வரைக்கும் தான் ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பு. ஃபோன் நம்பரை மாத்திடு. உன் ஊரைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு தெரியாதுன்னு சொல்லி இருக்க.

அதனால ஊருக்கு வந்து தேட மாட்டான். அப்படியே கண்டுபிடித்து வந்தாலும் நம்ம ஊருல உன்னை ஒன்னும் பண்ண முடியாது.

இன்னொரு விஷயம் என்ன தெரியுமா?
நம்ம கிட்ட பேசும்போது ரொம்ப நாகரிகமா நல்லவன் மாதிரி காட்டிக்கிறான். அதனால இவன ரொம்ப நல்லவன் என்று நம்பிடறோம். எனக்கு தெரிஞ்சு உன்னோட போட்டோஸ் வீடியோஸ் எதுவும் அவன் கிட்ட இருக்காது. ஏன்னா என்னோடதும் இல்லை. கல்யாணத்துக்கு பிறகு தான் மிரட்டுவதற்காக ஃபோட்டோ வீடியோ எடுத்து வச்சிக்கிறான். அப்படியே அவன் கிட்ட உன் ஃபோட்டோ வீடியோ இருந்தாலும் அவன் வந்த அப்புறம் நான் எப்படியாவது பார்த்து அதை டெலிட் பண்ணிடறேன். நீ கவலைப்படாதே பத்திரமா ஊருக்கு கிளம்பி போ "

" ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் புவி. நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கேன் உன்னை மாதிரி ஒரு பிரிண்ட்டு கிடைக்க. இன்னைக்கு ராத்திரியே எனக்கு ஊருக்கு பஸ் டிக்கெட் போட்டு கொடுடி. "


"லஞ்ச் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு போய் உன்னோட திங்ஸ் எடுத்துக்கிட்டு நானே உன்னை பஸ்ல ஏத்தி விடுறேன். அதுக்கப்புறம் நான் என் வேலைக்கு போகனும்" என்று சொல்லி கண்கள் கலங்கினாள்.

தன் தோழியை கட்டிப்பிடித்து சமாதானம் செய்ய முயற்சி செய்து தோற்று போனாள் நித்யா. பின்னர்

" தேங்க்ஸ் புவி" என்றாள் நித்தியா.


புவனா சொன்னது போலவே நித்யாவை பஸ் ஏற்றி விட்டு அவளுடைய நைட் டியூட்டிக்கு சென்றாள். மனதிற்குள் தன் தோழியை காப்பாற்றி விட்டோம் என்று சந்தோஷமாக தன் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றாள்.

'முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரை நம்பி போக இருந்தேனே! புவனா மட்டும் இல்லை என்றால் என் நிலைமை என்ன ஆகி இருக்கும்.' பஸ்ஸில் செல்லும்போது யோசித்துக் கொண்டே சென்றாள் நித்யா .

அப்போது ஃபோனில் கிருஷ்ணா காலிங் என்று வந்தது. ஊருக்குச் சென்று ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு பின்னர் நம்பரை மாற்றலாம் என்று நினைத்தவள் அவனுடைய நம்பரை பார்த்ததும் கட் செய்துவிட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்து சிம் கார்டை எடுத்து உடைத்து வெளியே தூக்கி போட்டாள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் ஃபோனை வாங்கி தன் அம்மாவிற்கு கால் செய்தாள்.

" அம்மா நான் நித்யா "

" சொல்லுமா இது யாரு நம்பர்? புவனா ஓடதா? "

" இல்லம்மா நான் பஸ்ல ஊருக்கு வந்துகிட்டு இருக்கேன். என் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு. இது பக்கத்துல உக்காந்துட்டு இருக்க ஒரு அக்கா கிட்ட இருந்து வாங்கி பேசுறேன்"

" என்னாச்சு இன்டர்வியூ நாளைக்குன்னு சொன்ன. இப்பவே கிளம்பி வர இன்டர்வியூ அட்டென்ட் பண்ணலையா? "

" இல்லம்மா எனக்கு அந்த வேலை செட் ஆகாதுன்னு நினைக்கிறேன். நான் நம்ம ஊரிலேயே ஏதாவது வேலை
பார்த்துகிறேன் "

" சரிம்மா "

"அம்மா"

" சொல்லுமா"

" நாளைக்கு அரவிந்த் அத்தானை வரச் சொல்லுங்க. நான் அவரை நேரா பார்த்து பேசி அதுக்கு அப்புறமா உங்க கிட்ட முடிவை சொல்றேன்"

" உண்மையிலேயே வா சொல்ற? ரொம்ப சந்தோஷமா " என்று சொல்லி ஃபோனை வைத்தார் நித்யாவின் அம்மா.


"தேங்க்ஸ் அக்கா" என்று சொல்லி ஃபோனை கொடுத்தாள் நித்தியா.

"காதல் சுகமானது " தான் ஆனால் நாம் யாரை தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான் முக்கியம் என்று புவனா சொன்னது நித்தியாவின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
 
Last edited:
Joined
Feb 15, 2025
Messages
5
மறுநாள் ஈவினிங் , நித்யாவின் அத்தானான அரவிந்தை அவள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு காஃபி ஷாப்பில் சந்தித்தாள்.

"நித்து, எப்படி இருக்க?" என்று சந்தோசமாக பேசினான் அரவிந்த்.

"நல்லா இருக்கேன் அத்தான். நீங்க எப்படி இருக்கீங்க?"

"அச்சோ, எவ்வளவு நாள் ஆச்சு உன் வாயால இந்த வார்த்தையை கேட்டு. இந்தா நித்து"

என்று சொல்லி ஒரு கிஃப்ட் கொடுத்தான்.

அதை பிரித்துப் பார்த்தாள் நித்யா.

உள்ளே ஒரு மொபைல் ஃபோனும் புதிய ஒரு சிம் கார்டும் இருந்தது.

" உன்னோட ஃபோன் தொலைந்து போயிடிச்சு , சிம் கார்டும் வொர்க் ஆகலைன்னு அத்தை சொன்னாங்க. அதனாலதான் உனக்கு புது ஃபோனும் ஃபேன்ஸி நம்பரும் உள்ள சிம் கார்டையும் வாங்கி வந்தேன்"

' சிம் கார்டை உடைத்துப் போட்டாலும், எங்கே செல்போனின் ஐஎம்ஈஐ நம்பரை வைத்து தன்னை கிருஷ்ணா கண்டுபிடித்து விடுவானோ' என்று பயந்து பஸ்ஸிலிருந்து இறங்கும்போது செல்ஃபோனை குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டாள் நித்யா.

" தேங்க்ஸ் அத்தான், உங்களுக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிக்கும்? "

"தெரியல நித்து, ஏன் எதுக்கு என்னன்னு எல்லாம் தெரியல. நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்"

"ஓகே அத்தான், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்"

" உனக்கும் என்னை பிடிக்குமா? நிஜமாகத்தான் சொல்றியா? "

" உண்மையாக தான் சொல்றேன். உங்களை எனக்கு பிடிக்கும் அத்தான். ஆனா உங்க மேல காதல் வந்துச்சான்னு கேட்டா, அதுக்கான பதில் எனக்கு தெரியல. ஆனா கண்டிப்பா உங்க கூட நல்லபடியா வாழ்க்கை நடத்துவேன். போக போக ஒரு நாள் கண்டிப்பா உங்க மேல எனக்கு காதல் வரும்"

"உனக்கு என் மேல காதல் வரும் வரை நான் காத்துக் கொண்டு இருப்பேன் நித்து. அதுக்கு பிறகு நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்"

ஒரு வருடமாக அரவிந்துடன் பேசி பழகி, அவனுடைய நற்குணங்களைப் பார்த்து நித்யாவிற்கு அவளையும் அறியாமல் அரவிந்த் மேல் காதல் வந்தது. பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கினார்கள்.

" காதல் சுகமானது " அதை தன் கணவன் அரவிந்திடம் உணர்ந்தாள் நித்யா.


முற்றும்.
அ. வைஷ்ணவி விஜயராகவன்.



ஆசிரியர் குறிப்பு:

நித்யாவின் வாழ்க்கை அரவிந்த் உடன் இனிதே அமைய நாமும் அவளுக்கு வாழ்த்துவோம்.

கிருஷ்ணா/டேவிட் பலமுறை நித்யாவின் நம்பருக்கு கால் செய்து கிடைக்காததால், அவளை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணிடம் தன் லீலைகளை ஆரம்பித்தான்.

புவனா போல இவ்வுலகில் உண்மையாகவே நிறைய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இன்னொரு புவனா உருவாகாமல் இருக்க வேண்டும் எனில் உண்மையான காதல் எது என்று புரிந்து கொள்ளும் பக்குவம் பெண்களுக்கு வர வேண்டும். அந்தப் பக்குவத்தை தர கடவுளை வேண்டிக் கொள்ளலாம்.


நன்றி,
வணக்கம்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
873
இந்தக்காலத்தில் காதல் எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என்ற ரீதியில் போயிட்டிருக்கு. பெற்றவர்கள் சொல்லும் அறிவுரை ஆளை விடுங்கடா சாமின்னு அலர்றாங்க. நம்பக்கூடாதவங்களை நம்பி ஏமாறுறாங்க.
காதல் சுகமானதுதான் சரியான துணை கிடைத்தால்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் வைஷ்ணவி விஜயராகவன் 💐💐💐
 
Joined
Feb 15, 2025
Messages
5
இந்தக்காலத்தில் காதல் எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என்ற ரீதியில் போயிட்டிருக்கு. பெற்றவர்கள் சொல்லும் அறிவுரை ஆளை விடுங்கடா சாமின்னு அலர்றாங்க. நம்பக்கூடாதவங்களை நம்பி ஏமாறுறாங்க.
காதல் சுகமானதுதான் சரியான துணை கிடைத்தால்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் வைஷ்ணவி விஜயராகவன் 💐💐💐
Thanks sister🙏🏻😊
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top