• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
18


நடந்ததைக் கேள்விப்பட்ட ஆனந்தன், அபிராமிக்கு என்ன சொல்வது? யாருக்காகப் பேசுவதென்று தெரியவில்லை. குழந்தையைச் சுமப்பவள் ஒருத்தி! குழந்தையாய் ஒருத்தி! பெரிய மருமகளைப் பார்த்து, சக மனிதரை அடிப்பது தவறு என்று முடிந்தளவு சொல்லி புரியவைத்து சின்ன மருமகளைத் தேடி வந்தார்.

கட்டிலில் யோசனையாய் அமர்ந்திருந்தவள் அருகில் அபிராமி அமர, அவர் அருகாமை உணர்ந்து அவர் தோள் சாய்ந்து கொண்ட மருமகளை அணைத்தாற்போல் பிடித்துக்கொண்டு, “எதுவும் கேட்கமாட்டியா?” என்றார்.

“என்ன கேட்கணும்?”

“சரிதான். நீ தெளிவாதான் இருக்க.”

“ம்... உங்க பையரும் தெளிவாதான் இருக்காப்ல” என்றவளுக்குக் கணவன் தன்னை சமாதானப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லைதான். இருந்தும் மனம் எதையோ எதிர்பார்க்கிறதோ!

“ஃபீலிங்கா?”

“ம்கூம்...” என தலையசைத்தவள், “ம்...” என தலையாட்டி, “லைட்டா. மத்த பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா எகிறிக் குதிச்சி சண்டை போடுறாங்க. இப்ப கட்டின பொண்டாட்டிக்கு ஒரு பிரச்சனைன்னதும், வீட்டைவிட்டு துரத்தப் பார்க்குறாங்க. உங்க பையரை ஹீரோ நினைச்சேன். ஆனா, ரொம்ப கெட்ட பையன்” என்று மூக்கைச் சுருக்கினாள்.

“அப்ப, எனக்குப் புரியாத பல விஷயங்கள் உனக்குப் புரியுது?”

“ஆங்... புரியுது புரியுது. ஹீரோ சப்ஜெக்ட் கதைகள் எத்தனை படிச்சிருக்கோம், பார்த்திருக்கோம். அதுல எல்லாம் ஹீரோஸ் அள்ளுவாங்க. ஆனா, நிஜம்?” என்றவளுக்கு அந்த நான்கு நாள் வாழ்க்கை நினைவு வர அமைதியாகிவிட்டாள்.

மருமகளின் மனதைப் புரிந்தாரோ! “மனைவியின் கண்பார்த்து, உடல்மொழி கண்டு, அவள் மனம் புரிஞ்சிக்குற ஆண்கள், நிஜத்திலும் இருக்காங்கதான அனுமா? அதான் உன் ஹீரோ” என்று அழுத்திச் சொன்னார்.

“என் ஹீரோவாம். ம்க்கும் இல்லை” என்று முறுக்க,

“அதான் அவன் என்ன நினைக்குறான்னு பார்வையிலேயே தெரிஞ்சிக்குறியா?” என்றார் கேலியாக.

“போதும் உங்க பையர் புராணம். முதல்ல ஷண்மதி அக்காவை கவுன்சிலிங் கூட்டிட்டுப் போங்க” என்றாள்.

“இன்னைக்கு மாதிரி தினமும் இங்க பிரச்சனை நடந்திருக்கு. அதை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட. ஏன் அனுமா? சொல்லியிருந்தா அதுக்கான தீர்வு எடுத்திருப்பேன்ல?”

“உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லலை. என்னால அவங்களை சமாளிச்சிக்க முடியும்னு நினைச்சேன். ஆனாலும், ஓவராதான் போறாங்க” என்றதோடு, “அத்தை அவங்க தாலி போட்டுருக்காங்களே. அது தப்பில்லையா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

சற்றே தடுமாறினாலும், “இதை அவள் வந்த அன்னைக்கே கேட்ப நினைச்சேன். ரொம்ப ஸ்லோவா இருக்கியே” என்று கிண்டல் செய்ய, “ம்க்கும்... நானே யூகிச்சுப்பேன். அப்புறம் ஏன் கேட்கணும்?”

“அதுதான் நானும் கேட்கிறேன். இப்ப ஏன் கேட்குற?”

“அது சும்...”

“அம்மா!” என்ற அறிவழகனின் குரலில் சும்மா நின்றுபோக, “சாப்பிட்டு வந்து படுங்க போங்க” என்று தாயை முறைத்து மனைவியிடம் திரும்பியவன், “வாக்கிங் போகணும். சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா” என்று அதட்டல் போட்டான்.

“அத்தை உங்க பையருக்கு நடிக்க வரலை. அப்பட்டமா தெரியுது இது திட்டு இல்லை அக்கறைன்னு” என்றாள் மெல்லிய குரலில்.

“இதைத்தான் நாங்க புரிதல்னு சொல்வோம். அப்ப உன் ஹீரோ என் பையர்தான?” என்று அவளைப்போலவே மெல்லிய குரலில் கிண்டலாக சொன்னார்.

“நான் எதுவும் பேசலை” என்றவாறு சட்டென்று எழுந்ததில் வயிற்றில் சுருக்கென்று வலிக்க, “ஆ...அம்மா” என்றாள் சத்தமாக.

அனுமா! என்னாச்சி?” என்ற அபிராமி அவளைப் பிடித்தார்.

“வேகமா எழுந்திரிக்காதன்னு எத்தனை தடவை சொல்லுறது?” என்று திட்டி, “ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிடல் போகலாமா?” என்றான் கனிவாக.

கணவன் திட்டியதில் கோவம் வர, எதுவும் பேசாது வெளியே சென்று சாப்பிட அமர, “ஏய்! வலிக்குதான்னு கேட்கிறேன்ல?” என்றவன் சத்தம்தான் அதிகமிருந்ததே தவிர அதில் அத்தனை தவிப்பு. அவனை இன்னும் தவிக்கவிடவென்று அமைதியைக் கடைபிடிக்க, “ப்ச்... இப்ப என்ன மிஸஸ்.அறிவழகன்?” என்றான் பொறுமையாக.

கணவனின் மிஸஸ்.அறிவழகனில் வந்த சிரிப்பை மறைத்து, “சாப்பிடுங்க. வாக்கிங் போகலாம்” என்றாள் சாதாரணமாக.

அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்கையில் உதட்டில் ஒளிந்திருந்த சிரிப்பை விழி வழி பார்க்க, “மிஸஸ்.அறிவழகனுக்கு சேர்க்கை சரியில்லை” என்று தாயைக் காண, “அஹான்! சேர்க்கை சரியில்லைன்னா, நீ சேர்த்துக்கோ. என்னைச் சொன்ன அவ்வளவுதான்” என்று மகனை எச்சரித்தார் அபிராமி.

“சேர்த்துக்க, கட்டிக்க, ஒட்டிக்க எல்லாம் நான் தயார்தான்” என்றதும் அனுரதிக்கு புரையேற, அவள் கையிலிருந்த தண்ணீரை வாங்கி வைத்துத் தலையில் லேசாகத் தட்டி, முதுகில் மெல்ல தட்டிக்கொடுத்து, “உணர்ச்சிவசப்படக்கூடாது சொன்னா கேட்குறதில்லையே மிஸஸ்.அறிவழகன். பாருங்க கட்டிக்கலை, ஒட்டிக்கலை, அப்படியிருந்தும்... போங்க” என்றான் அலம்பலை விடாது.

“போதும். நீங்க தெளிவுதான். ஆனா, நான் இன்னும் தெளிவாகலை. இப்ப தள்ளிப்போங்க” என்றதும்தான், தான் அவளை நெருங்கி நிற்பதும், அவள் உடல் அதிர்வும் புரிய சட்டென்று விலகியவன், “சரி கொஞ்ச நாளைக்குத் தள்ளி நிற்கிறேன்” எனவும் அவள் முறைக்க இவன் சிரிக்க என்றிருந்தார்கள்.

பகலெல்லாம் அறிவழகன் பார்வை எல்லையில், இரவில் நடைப்பயிற்சி என்று நாட்கள் செல்ல, சிற்சில மாற்றங்கள் அவளுள். புரிதல்கள் அதிகமானதோ!

வளைகாப்பு அன்று வந்து நின்றவனைப் பார்த்ததும் ஸ்தம்பித்து எழுந்துவிட்டாள் அனுரதி.

“அத்தை வளைகாப்பு முடிஞ்சா அனு அவங்க வீட்டுக்குப் போயிருவாதான?” என்ற ஷண்மதியின் கேள்விக்கு, “ஆமா மதிமா. குழந்தை பிறந்ததும்தான் திரும்பி வருவாங்க” என்றார் அபிராமி.

“இல்...” என முடிக்கும் முன், “அம்மா அத்தை உங்களைக் கூப்பிடுறாங்க” என்று தாயை ஷண்மதியிடமிருந்து விலக்கி அனுப்பினான்.

“அறிவு, அனு...” என ஆரம்பிக்க, “அனுவை இப்பக் கூட்டிட்டு வந்து மேடையில் உட்கார வச்சிருவாங்க அண்ணி. நீங்க சாப்பிட்டீங்களா? இல்லைன்னா போய் சாப்பிடுங்க. நான் இதோ வந்திடுறேன்” என்று நகர,

“அ...அறிவு...” ஷண்மதியின் அழைப்பு காற்றோடு போக, “ஷண்முமா இங்க ஏன் தனியா நிற்கிற? வா” என்று மகளை ஆனந்தன் அழைத்துச் சென்றார்.

மனைவியை அலங்கரிக்கும் அறைக்கு வந்தவன் அங்கிருந்தவர்களை போகச் சொல்லி, “அப்புறம் மிஸஸ்.அறிவழகன் அரேஞ்ச்மெண்ட் பிடிச்சிருக்கா? ஊரையே கூட்டி என் ஒய்ஃப்கு வளைகாப்பு வைக்கணும்னுதான் ஆசை. ப்ச்... நம்ம கல்யாணம் நம்ம குழந்தைக்கு ஐந்தாவது மாசம் இருந்தப்ப நடந்ததால, வளைகாப்புன்னு வெளியில் கூப்பிட்டா நிறைய கேள்வி வரும். அதான் நம்ம வீடுவரைக்கும் பண்றேன். உங்களுக்கு எதாவது சொல்லணுமா?” என்றான்.

“டாட்டா பை பைதான் சொல்லணும். வேறென்ன?” என்றாள் சாதாரணமாக.

“என்கிட்ட கேள்வி கேட்க, கோவப்பட, திட்ட எதுவுமே இல்லையா?” என்றான் மனம் கேளாது.

“நான் யார் உங்களைக் கேள்வி கேட்டு கோவத்துல திட்ட?”

“நீ யார்னு சொல்ல ஒரு நிமிடம் போதும். உனக்காகதான் அமைதியாயிருக்கேன்” என்றான் அறிவழகன்.

“ஒரு நிமிடத்துல அப்படி என்ன சார் நிரூபிப்பீங்க? எங்க நிரூபிங்க பார்க்கலாம்” என்று சற்றே திமிராக நிற்க, அத்திமிரை குலைத்தே தீருவேன் என்று அவளை நெருங்க, அமைதியாகவே அவனைப் பார்த்திருந்தவள், என்னவென்று புருவம் உயர்த்த, “இவ்வளவு பக்கத்துல வந்தும் திமிரா இருக்கீங்க மிஸஸ்.அறிவழகன். அப்படியே கொஞ்சம் அழகாகவும்” என்று அவளின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக அணைத்துக் கொண்டான்.

அவனின் செயலை எதிர்பாராதவள் உடல் நடுக்கம்கொள்ள, இதயத்துடிப்போ அதிகரிக்க, மனைவியின் காதோரம் சென்று ஏதோ சொல்ல, அவளோ புரியாது அவனைப் பார்க்க, “சீக்கிரமே புரியும்” என்றான் மறைமுகச் செய்தியாய்.

“அப்புறம் மிஸஸ்.அறிவழகன், துஷ்டனைக் கண்டால் தூரம் போகாது, மிதித்து நசுக்கி விடு பாப்பா” என்றான் பாரதியின் வார்த்தையை மாற்றியெழுதி.

“எதுக்கு இந்தப் புதுமொழி?”

“எப்பவாவது யூஸாகும்” என்றான் புன்னகைத்து. இன்னுமே கணவன் அணைப்பில், தான் இருப்பதை உணரவில்லை அவள். ஆரம்பத்தில் இருந்த உடல் நடுக்கம் இல்லவேயில்லை என்ற நிலை.

“எங்க உங்க வில்லன் அவதாரம்?”

“வில்லனா? ஹேய்! ஹலோ! நான் ஹீரோவாக்கும். அதுவும் இந்த ரதிப்பொண்ணு உனக்கே உனக்கான, உனக்கு மட்டுமே சொந்தமான ஹீரோ.”

“அப்படியா? ஹீரோவா என்ன செய்துட்டீங்களாம் எனக்கு?” என்று எகத்தாளமாய் கேட்க,

“எதுவும் செய்யலைதான். இனி முயற்சிக்கிறேன்” என்றான்.

“ஓ... அதுசரி புரியாத மொழியில் காதுகிட்ட என்னவோ உளறுனீங்களே அதென்ன?” என்று பேச்சை மாற்ற, “புரிய வரும்போது எல்லாம் தெளிவாகும். அப்புறம் மிஸஸ்.அறிவழகன் அழகாய் இருக்கிறாய். நேரமாக ஆக பயமாவும் இருக்கிறது” என்றான் கண்சிமிட்டி.

“புரியாமல் பேசுறதே உங்களுக்கு வேலையா போச்சி? இப்ப என்ன பயம்?”

“உணர்ச்சிவசப்பட்டு உங்க நெற்றியில் முத்தம் கொடுத்துட்டா” என்று கண்களால் சிரிக்க, அப்பொழுதுதான் தங்கள் நலை உணர்ந்தவள் அவனைத் தள்ளிவிட, “உஷாராகிட்டீங்க மிஸஸ்.அறிவழகன்” என சிரித்தபடியே விலகியவன், “ஒரு நிமிடம்தான் கேட்டேன். பத்து நிமிடம் தந்திருக்கீங்க தேங்க்ஸ் எ லாட் மிஸஸ்...”

“அறிவழகன்தான் கிளம்புங்க. இன்னும் இங்க நின்னு என்னை தர்மசங்கடப்படுத்தாதீங்க” என்று கடுகடுத்தவள் குரலில் தடுமாற்றம் நிறைய இருந்தது.

இதற்கு மேல் நின்றால், கண்டதையும் யோசித்துத் தன்னைத்தானே குழப்பிக் கொள்வாள் என்று கதவை நோக்கி நடந்தவன், திரும்பி வந்து வயிற்றின் மேல் கைவைக்க வர, விலகப்போனவளை, “நம்ம குழந்தையை உணரவிடு ரதிமா. அப்புறம் காலத்துக்கும் மனசுல அது உறுத்தும். ஒன் மினிட் ப்ளீஸ்” என்றான்.

“ம்க்கும். ஒரு நிமிஷம்னு சொல்லிதான் கொஞ்சம் முன்ன பத்து நிமிஷம் எடுத்துக்கிட்டான்” என முனக,


“அது உனக்கான நேரம். குழந்தைக்கு ஒரு நிமிடம் போதும்” என்று மனைவியின் வயிற்றில் கைவைத்து சில நொடிகள் கண்மூடி நிற்க, குழந்தையோ உள்ளே துள்ளிக்குதித்துத் தன் இருப்பை அவனுக்கு உணர்த்தியது. அவ்வுணர்வில் புன்னகையொன்று அவனுள் பரிணமிக்க, அதை ஆச்சர்யமாய் பார்த்திருந்த அந்நிமிடம், உடல் கணவனையும் உணர ஆரம்பித்ததோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
956
சின்னதாகப் பூத்த இதழ்ப் புன்னகையை மறைத்து, “டூ மினிட்ஸ் ஆகிருச்சி மேனேஜர் சார். டைம் ஓவர்” என்றாள்.

மெல்ல கண்திறந்தவன், “தேங்க்ஸ் ரதிமா. இதெல்லாம் லைஃப்ல அனுபவிக்க கொடுத்து வச்சிருக்கணும். இரண்டாம் முறை இந்த வாய்ப்பு எனக்குக் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்றான்.

“இரண்டாம் முறையா? அப்ப முதல்ல?” என்று திகைப்புடன் பார்க்க,

கதவருகே சென்றவன், “எதாவது சொன்னீங்களா மிஸஸ்.அறிவழகன்?” என்று நிற்க, இரு கை குவித்து பெரிய கும்பிடாகப் போட்டு, ‘போ’ என்பதாய் சைகை செய்து முறைத்தாள்.

சட்டென்று பற்கள் தெரிய சிரித்து அவன் செல்ல, இங்கே இவளுக்குள்ளோ மாயையாய் ஒரு மாயம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

“அனுமா போகலாமா?” என்று வந்த மாமியாருடன், வரவேற்பறையில் அலங்காரமாய் போடப்பட்டிருந்த மேடையில் உள்ள இருக்கையில் அமர வைக்கப்பட்டாள்.

வளையல் போட வயதில் மூத்தவர்கள் சிலருடன், மிகவும் பழக்கமான சிலரும் வந்திருக்க, அடுத்து இருவரின் தாய்மார்கள் வெள்ளி வளையல் போட்டுவிட, அரவிந்த் அனைத்தையும் புகைப்படமாக்கிக் கொண்டிருந்தான்.

அடுத்து ஷண்மதி, சாந்தி முடித்ததும், “அறிவு நீயும் போடு” என்றார் அபிராமி.

“ஆண்கள் போடலாமா அத்தை?” என்று சாரதாவிடம் கேட்ட அறிவழகனிடம், “போடலாமா? கூடாதான்ற கேள்விக்கு நான் வரலை. நீங்க போடுங்க. நல்ல மனதிருந்தால் போதும். அதுதான் பெண்ணுக்கான முதல் ஆசீர்வாதம்” என்றார்.

“அப்ப இதோ வர்றேன்” என்று வேகமாக மாடியேறியவன் அடுத்த நிமிடம் திரும்பி வந்து, “மிஸஸ்.அறிவழகன் வெள்ளி வளையல்தான் போடணும் சொன்னாங்க. தங்கம் என்ன தப்பு செஞ்சது? அதான் இரண்டையும் வாங்கிட்டு வந்துட்டேன். பிடிச்சிருக்கா?” என்று ஆவலாகக் கேட்டான்.

“யாரோ ஆண்கள் போடலாமா கேட்டாங்க. இது என்ன?” என்றாள்.

“கேட்கிற கேள்விக்கு நேரடி பதில் எப்பவும் வர்றதில்லை” என்று வளையல் போட்டு விட, இதழோரம் சிறு புன்னகை அவளுள். அடுத்து கை கன்னம் என்று சந்தனம் பூசி நெற்றியில் பொட்டிட்டு பன்னீர் தெளித்து அட்சதை தூவ, என்ன மாயமோ பளிச் புன்னகையுடன் அனுரதி கணவனைக் கண்டாள்.

முகமும் அகமும் பரவசத்துடன் அவளை நோக்கிக் குனிந்தவன் காதோரம் சென்று, “மிஸஸ்.அறிவழகன்” என ஹஸ்கியாய் மொழிந்து நிமிர்ந்தவன் கண்ணடித்து விலக, அவள் இதுவரை அறியாத இனம்புரியா உணர்வொன்று அவளை ஆட்கொள்ள, கண்கள் கணவனைச் சுற்றி மட்டுமே வட்டமிட்டது.

“ஹலோ மிஸஸ்.அறிவழகன் போதும் உங்க ஹீரோவை சைட்டடிச்சது” என்று மாலினி தோழியின் புறம் குனிந்து சொல்ல,

“இதுக்குப் பெயர்தான் சைட்டா மானி? நல்லாயிருக்கு இந்த ஃபீல்” என்றாள்.

“அதுதான் அனுமா லவ்” என்றாள்.

“ப்ச்... மானி. நல்ல மூடுல நான் இருக்கேன். நீ கண்ட வார்த்தையையும் சொல்லி என்னை டென்சன் படுத்தாத” என்று கடிந்தாள்.

“இந்த நேரம் ஞாபகப்படுத்தினதுக்கு சாரி அனுமா. ஆனா, நான் சொன்னது நிஜம். நீ அறிவழகன் சாரை லவ் பண்ணுற. ஒருநாள் இல்ல ஒருநாள் அதைப் புரிஞ்சிப்ப” என்றாள்.

“ஏய்! இப்படிப் பேசுறதாயிருந்தா இடத்தைக் காலி பண்ணு” என்று திட்ட,

“ஹ்ம்... நல்லது சொன்னா யார் கேட்குறீங்க. விடு காதலைப் பற்றிப் பேசலை. ஆனா, உன் ஹீரோ பற்றிப் பேசலாமே” என்றாள் அவளின் திட்டுகள் தன்னை எதுவும் செய்யாது என்பதாய்.

“அதையும் நானே பார்த்துக்குறேன். நீ போ” என்று விரட்ட, அதேநேரம் அறிவழகன் கீசி, ‘டாக்டர்.சுரேஷ்’ என்ற பெயரில் இசைக்க , எடுத்துப் பேசியவன் அதிர்ந்து நிற்கையில், அதைக் கூட்டும் விதமாக அவன் தோளில் ஒரு கை விழுந்தது. யாரென்று திரும்பிப் பார்த்தவன், “அண்ணா” என்று அழைத்தபடி தன் உடன்பிறப்பான மதியழகனைக் கண்டு உச்சபட்ச அதிர்வில் நின்றான்.

‘இப்பொழுதுதானே அண்ணனைக் கவனிக்கும் டாக்டர்.சுரேஷ், மதியழகன் கோமாவில் இருந்து இரவே வெளி வந்துவிட்டதாகவும், தான் சொல்ல நினைத்து வேலைப்பளுவில் மறந்ததையும் சொல்லி, காலையில் மதியழகன் யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டதையும் சேர்த்துச் சொன்னார். அவர் சொல்லி முடிய அவன் அண்ணன் அவனருகில், ‘அதற்குள் எப்படி?’ என்ற அதிர்வில் இருந்தவன், அங்கிருக்கும் சூழ்நிலை உணர்ந்த நிமிடம், சட்டென்று திரும்பி மனைவியைக் காண, ஏற்கனவே கணவனைச் சுற்றி வட்டமிட்டிருந்த கண்கள், அவன் பின்னால் உயிருடன் நின்றிருந்த மதியழகனைக் கண்டு தீச்சுட்டாற்போல் எழுந்துவிட்டாள்.

அவளின் அச்செயலைக் கண்டு குழப்பத்துடன் மற்றவர்கள் பார்வையும் திரும்ப, அபிராமி, ஆனந்தன் சட்டென்று மூண்ட கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து அனுரதியிடம் பார்வையைத் திருப்ப, “இப்படி எழக்கூடாது” என்று நடப்பு தெரியாத சாரதா மகளை உட்காரவைத்துக் கொண்டிருந்தார்.

“அம்மா! அ...அவர்” என்று கைநீட்டவும்,

“யார் அனுமா?” என்றார் புரியாது.

“அறிவழகன் அண்ணன்” என்றதில், “என்னது? அதெப்படி சாத்தியம்?” என்று அதிர்ந்தவர் மதியழகனைக் காண,

அதே நேரம் “மதி அத்தான்” என வேகமாக வந்து கணவனை அணைத்துக் கொண்டாள் ஷண்மதி.

சில நிமிடங்கள் அவளை அழவிட்டு, பின் ஆறுதலாக தலையை வருடிக் கொடுத்து தாயிடம் அழைத்து வர, மகனைக் கண்டதும் அபிராமி அழுதுவிட்டார்.

தாய், தாய்மாமன் என்று நலம் விசாரித்து, அதன்பின்னே மேடையைப் பார்த்து புருவம் சுருக்கியவன், “என்ன விசேஷம்?” என்பதாய் தாயிடம் கேட்க, வேகமாக அண்ணன் அருகில் வந்த அறிவழகன், அவனை மனைவியிடம் அழைத்துச் சென்று மனைவியின் தோள்மேல் கைபோட்டு, “என்னுடைய மனைவி அனுரதி. இது என்னுடைய அண்ணன் மதியழகன்” என்று இருவரையும் அறிமுகப்படுத்தினான்.

கைகூப்பி வணக்கம் வைத்த மதியழகனுக்கு, பதில் வணக்கம் வைக்க இயலாது மனம் பதைக்க, பயத்தில் உடலில் சிறு நடுக்கம் எழ நின்றிருந்தவளை, மதியழகன் வித்தியாசமாகப் பார்த்தான்.

அங்கிருந்தே தன் தாய்க்குக் கண்காண்பித்து அண்ணனவனை அழைத்துப்போக வைத்த அறிவழகன், மாமனிடம் அனைவரையும் சாப்பிட அழைத்துப்போகச் சொல்லி, சாரதாவிடம் வந்து, “அத்தை வளைகாப்பு முடிஞ்சதுன்னா சீக்கிரம் கிளம்புங்க” என்றான்.

“மருமகனே! உங்க அண்ணன்?”

“அத்தை! அதை அப்புறம் பேசலாம். இப்பப் பேச நேரம் கிடையாது. எதாவது சடங்கு இருந்தா செய்துட்டு சாப்பிட கூட்டிட்டு வாங்க” என்றவன் அரணாய் அங்கேயே நிற்க, வேறு வழியில்லாத சாரதா, சடங்குகளை முடித்து மகளை சாப்பிட அழைக்க, அவளோ முடியாதென்று தலையசைத்தாள்.

“சீக்கிரம் போய்ச் சாப்பிடு ரதிமா. நீ போனால்தான் சரியாயி...” அவன் முடிக்கக்கூட இல்லை விறுவிறுவென்று வெளிநடப்பு செய்திருந்தாள் அனுரதி.

‘நீ போனால்தான் சரியாயிருக்கும். அண்ணன், அடுத்து குழந்தை பேச்செடுத்து அண்ணி என்று, யாரும் எதுவும் பிரச்சனை செய்யாமல் பார்க்க வேண்டும். இன்னொன்று அண்ணன் முகம் பார்த்தால் உனக்கும் சங்கடம்’ என்று சொல்ல வந்தான். அதற்குள் முழுதாகக் கேட்காமல் கிளம்பியவளை இயலாமையுடன் பார்த்திருந்தான் அறிவழகன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top