• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 23, 2024
Messages
22
கதைப்போமா 4

அவளுடைய வார்த்தைகள் அவனையும் வலிக்கச் செய்தது. தன் தாய் அவள் உணர்வுகளை மட்டுமல்ல, அவளையே முழுவதுமாகக் காயப்படுத்தி விட்டார் என்று புரிந்தது.
“என்னங்க இது பேச்சு??, அவங்க வயசானவங்க வேற பிரச்சனையையும் இதுல சேர்த்து ஒண்ணா யோசிச்சு அப்படி பேசிட்டாங்க. உங்க மேல தப்பு இல்ல, அது எனக்குத் தெரிஞ்சது. இன்பாக்ட் நேத்தே எனக்குப் புரிஞ்சது. இருந்தாலும் நேத்து வீட்டுக்குப் போயிட்டு தரகர் கிட்டையும் பேசினேன். உங்க வீட்டு சிட்டுவேஷனை அவர் எனக்குக் கிளியரா சொன்னாரு. அவர்தான் மறைச்சதாகவும் சொன்னாரு. அதுவும் உங்கள நேர்ல பார்த்தா எங்களோட எண்ணம் மாறலாம் என்பதற்காகச் சொன்னதா சொன்னாரு” என்றான்.

அவள் தொண்டையில் தன் இரு விரல்களால் அழுத்திப் பிடித்து மன்னிப்பு யாசித்தாள். தரகரின் சார்பாக அவள் கேட்கிறாள் என்று புரிந்தது.

“அப்பத்தான் உங்களோட ஆக்சிடென்ட் பத்தியும் தெரிஞ்சுது. ஐ அம்சாரி அபௌட் யுவர் ஃபாதர். தாய் தந்தையோட இழப்பு எதையும் ஈடு கட்டாது. ஐ நோ வெரி வெல் அபௌட்.என் மகன் அவன் தாய பார்த்ததே இல்ல. ஆனா தாய்க்காக ஏங்குறான். இன்ஃபேக்ட் அவனுக்காகத் தான் நானும் மேரேஜ்கு ஒத்துக்கிட்டேன். என்னோட முதல் திருமணம் அரேஞ்ச்ட் மேரேஜா இருக்கலாம். நாங்க வாழ்ந்தது ஒரு வருஷமா இருக்கலாம். ஆனா நான் அவளை உண்மையா காதலிச்சேன். அவளுடைய இறப்பு என்பது தடுக்க முடியாதது. பிகாஸ் அவளுக்கு மேரேஜ்கு முன்னாடியே ஹாட் ப்ராப்ளம் இருந்து இருக்கு. அதை மறைச்சு மேரேஜ் பண்ணிட்டாங்க. அவள் சாகுற வரைக்கும் கூட எனக்கும் என் குடும்பத்துக்கும் அது எதுவுமே தெரியாது. பட் தேங்க் காட் அது ஜெனிடிக் டிசிஸ் இல்ல. இருந்திருந்தால் என் பையனுக்கும் சேர்ந்து வந்து இருக்கும்” என்று கூறி முடித்தான்.

அவர் தாய் பேசிய பேச்சுக்கள் எதனால் என்று இப்பொழுது அவளுக்குச் சிறிதேனும் புரிந்தது.

அவசரமாகப் பேப்பரில் எழுதி அவனிடம் காட்டினாள். “சாரி” என்று ஒற்றை வரி மட்டுமே இருந்தது. தன் மனைவியின் இறப்புக்காகக் கூறுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.

“நீங்க நின்னுகிட்டே இருக்கீங்களே, உங்களுக்குக் கால் வலிக்குல?. இது நம்ம வண்டி தான். இதுல ஜஸ்ட் சாஞ்சு ஒக்காந்துக்குறீங்களா? நீங்க லைட் வெயிட்டா தான் இருப்பீங்க. மேலே ஏறி உக்காந்தாலும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று கரிசனையாகக் கேட்டான்.

“பரவாயில்லை” என்று அவள் ஒற்றை வார்த்தையை முணுமுணுத்தபடி கூற அது அவனுக்குப் புரிந்தது.
“நேத்து என்னால எதுவும் பண்ண முடியல. சடனா எதிர்பார்க்காமல் நடந்ததனால அந்தச் சிட்டுவேஷன எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல. ஆனா இப்ப ரொம்ப யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கேன். அத முதல்ல உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு தான் இங்க வந்தேன். பிகாஸ் இது நான் மட்டும் தனியா எடுக்கிற முடிவு கிடையாது. அதனால உங்க கிட்ட கலந்து ஆலோசிக்க வேண்டி இருந்தது” என்றான் அபிமன்யு.
அவள் புருவம் இடுங்க என்னவென்பது போலப் பார்த்தாள்.

“எனக்கு அம்மா நிறைய வரன்ங்கள் பாத்தாங்க. ப்ரீத்தி இறக்கும்போது நான் திருமணம் பண்ணிக்கிற ஐடியாலையே இல்ல. ஆத்ரேஷோடவே என்னோட வாழ்க்கையை முடிச்சிடனும்னு நினைச்சேன். கடந்த இந்த ஆறு மாசமா என்னோட எண்ணங்களை மாத்தி அமைச்சான் என் மகன். ஏனா அவன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சான். ஸ்கூல்ல பிள்ளைகளை விடுறது பெரும்பாலும் அவங்கவங்க அம்மாவா இருந்தாங்க. அதுவே அவனுக்கு ஏக்கமா மாறிடுச்சு. நான் கூட்டிட்டு போனா இந்தப் பிரச்சனை வருதுன்னு. ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டேன். ஆனாலும் அவனோட அம்மா புராணம் நிக்கல. கண்டிப்பா அவனுக்கு ஒரு அம்மா வேணும்னு அழுது அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். எங்க அம்மாவும் அதுக்கு தூபம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மனசில்லனாளும் நான் ஒத்துக்கிட்டேன். ஆனா காட்டுன எந்தப் பெண்ணையும் எனக்குப் பிடிக்கல. உங்க பிரண்டு சொன்ன மாதிரி திருமணமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நினைச்சேன். அப்படியும் சில வரன்கள் பார்த்தோம். எங்க அம்மாவுக்கு அதுல சுத்தமா உடன்பாடில்ல. ஆனாலும் எனக்காக ஒத்துகிட்டு பார்த்தாங்க. அதிலும் சில பிரச்சனைகள் வந்துச்சு. எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லனும்னு தான் தோணுது”, என்று நிறுத்தியவன். “உங்க பிரண்டு ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க அதுவும் என்ன முறைச்சுக்கிட்டே வெயிட் பண்றாங்க”, என்றபடி அவன் ராதிகாவை பார்க்க. அவளும் ராதிகாவை பார்த்தாள். அவள் வா என்பது போல கைக்காட்ட. இன்னும் கொஞ்ச நேரம் என்று அவளுக்கு ஜாடை காட்டினாள் ஆராத்யா.

“இதுவரைக்கும் பொண்ணு பாக்க போனதெல்லாம் எங்க அம்மாவும் அக்காவும் தான். என் பையன் கூடச் சில பேருக்குப் போயிருக்கான். ஆனா உங்க போட்டோவ பார்த்ததுக்கப்புறம் உங்கள மேரேஜ் பண்ணிக்கலாம்னு மனசுக்குள்ள தோணுச்சு. அதுதான் நானும் பார்க்க வந்தேன்” என்று கூறியவன். தன் பர்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் தயக்கத்தோடு அதை வாங்கினாள். அதிர்ந்து நின்றாள்.

அதில் அவன் மனைவியின் புகைப்படம் இருக்க. அதன் அருகில் அவளுடைய புகைப்படமும் இருந்தது. மகனுடையதும் தந்தையுடையதும் மறுபுறம் இருந்தது. அவள் அதிர்ந்து அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“உங்க போட்டோவ பார்த்ததுமே உங்கள மேரேஜ் பண்ணிக்கணும்னு டிசைட் பண்ணிட்டேன். அது நீங்க என் மனைவியோட சாயல்ல இருக்கறதுனால மட்டுமில்ல, ஏதோ உங்கள பாத்ததும் எனக்குப் பிடிச்சிருச்சு. என் பையனுக்கும். உங்களுக்கு இது ஃபர்ஸ்ட் மேரேஜ் தான்னு கேள்விப்படும்போது கொஞ்சம் தயக்கமா தான் இருந்தது. எதுனாலும் நேர்ல பார்த்துப் பேசிக்கலாம்னு தான் நானும் சேர்ந்து வந்தேன். ஆனா நேத்து என்னென்னமோ நடந்துடுச்சு. என் அம்மா சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அந்த நேரத்துல நானும் ரியாக்ட் பண்ணல அதுக்காகவும் மன்னிப்பு கேட்கிறேன். அதிர்ச்சியினால திடீர்னு முடிவு எடுக்க முடியல. பட் உங்களோட அழுகை என்ன ரொம்ப அசைச்சுடுச்சு. ஏற்கனவே முடிவு பண்ண விஷயம் தான். ஆனா அதுக்கு உங்களோட சம்மதம் வேணும். உங்களோட முழு சம்மதம் இருந்தா மட்டும் தான் என்னால எங்க வீட்டுல பேசிட்டு உங்க அண்ணன் கிட்டயும் பேச முடியும். கண்டிப்பா அவர்கிட்டயும் உங்க அம்மா கிட்டையும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றான்.
அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. பேப்பரில் எழுதி அவனிடம் நீட்டினாள்.

“வேண்டாங்க உண்மையிலேயே உங்க அம்மா சொன்னதுக்கப்புறம் தான் எனக்கே புரிஞ்சது. என்னால ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஒன்னுனா அந்த குழந்தைக்காகப் போராட முடியாது பேச முடியாது. அவனுக்குச் சப்போர்ட்டா நிக்க முடியாது. படிப்பு மட்டும் இல்ல நல்ல ஒழுக்கங்களை கூட என்னால” என்று நிறுத்தி இருந்தாள்.
தன் கீழ் உதட்டை மடித்து கடித்து தன் அழுகையை கட்டுப்படுத்துகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் கண்ணீர் வந்துவிட்டது போலும், அதில் இரண்டு கண்ணீர் சொட்டுகள் பூமியை நனைத்து, அங்கிருந்த சூட்டை தணிக்க வல்லதாக இருந்தது. ஆனால் தன்னவளின் கண்ணீர் பூமியை குளிர்விக். அவன் மனதிற்கு உடன்பாடு இல்லை. அவள் கையில் இருந்த பேப்பரை வாங்கி படித்தான்.

“நீங்க எதெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்களோ அதெல்லாம் சொல்லிக் கொடுக்க நான் இருக்கேன். நான் ப்ரொபசர் பதினெட்டு வயசுல இருந்து இருபத்தி நான்கு வயசு வரைக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கிற எனக்கு, மூணு வயசு பையனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரியாதா??. படிப்பு சொல்லிக் கொடுக்கிறத நான் பாத்துக்குறேன். நல்லொழுக்கத்தையும் நானே கத்துக் கொடுத்துக்கிறேன்” என்றான்.
“நீங்க அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. என் மேல இருக்க சிம்பதியில, முக்கியமா நான் அழுததுனால இந்த முடிவெடுத்தருக்கீங்க. அது சரியா இருக்காது. இன்னைக்கு சரின்னு தோன்றது. நாளைக்கு தவறா தோணும். உங்க வீட்ல இருக்கவங்க யாருக்கும் இதுல விருப்பம் இல்ல. அதனால வேண்டாம்” என்று எழுதி இருந்தாள்.
 
New member
Joined
Dec 23, 2024
Messages
22
“நீங்க மனைவியாகப் போறது எனக்கு. தாயாகப் போறது என் மகனுக்கு. எங்க ரெண்டு பேருக்கும் உங்கள பிடிச்சிருக்கு. அவன் நேத்துல இருந்து இந்த அம்மாவை ஏன் வேணாம்னு பாட்டி சொல்றாங்கன்னு என்ன கேட்டுக்கிட்டே இருந்தான். எனக்குப் பதில் சொல்லத் தெரியல. நான் என் மனைவியைப் பெண் பார்க்கப் போனதுக்கப்புறமா உங்கள தான் பெண் பார்க்க வந்தேன். எனக்குப் பிடிச்சிருந்ததால மட்டும்தான் வந்தேன். அதுவும் உங்க கிட்ட சில விஷயங்கள் பேசி முடிவெடுக்கலாம்னு தான் வந்தேன். உங்க பிரண்டு சொல்ற மாதிரி இந்த சின்னக் குறைக்காக உங்களைப் போல ஒரு நல்ல பெண்ணை வேணான்னு சொல்றதுக்கு நான் முட்டாள் கிடையாது. உங்ககிட்ட இருக்கிறது குறைனா, என்கிட்டேயும் நிறைய குறைகள் இருக்கு. அதிகமா கோபம் வரும், இரண்டாவது திருமணம், உங்களுக்கும் எனக்கும் இருக்க வயசு வித்தியாசம். எனக்கு மூணு வயசுல ஒரு பையன் வேற இருக்கான். இதையும் தாண்டி நிறைய குறைகள் இருக்கு. இதெல்லாம் தாண்டி எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.என் மகனுக்கு ஒரு நல்ல அம்மாவா, எனக்கும் ஒரு நல்ல துணையா இருப்பீங்கன்னு உங்க போட்டோவ பார்க்கும்போதே எனக்குத் தோணுச்சு. கண்டிப்பா என் மனைவியோட சாயல்ல இருக்கறதுனால ஒத்துக்கிட்டே னோன்னு எனக்குள்ள ஒரு தயக்கமும் இருந்துச்சு. ஆனா நேத்து உங்களை நேரில் பார்த்ததுக்கப்புறம். இந்தப் பிரச்சனைகளுக்கப்புறம் நீங்கத் தான் என்னோட மனைவின்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அதுக்கு உங்க சம்மதம் வேணும் உங்களோட குறை சின்னது. என்னோட குறைகள் பெருசு. உங்களுக்கு இது முதல் திருமணம் எனக்கு இரண்டாவது. அதனால தயங்க வேண்டிய இடத்துல நீங்க இருக்கீங்க. உங்க பதிலுக்காகக் காத்திருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கேன்” என்று மிக மென்மையாகப் பேசினான். ஆசிரியன் அல்லவா அதனால் அவனுக்கு யாரும் பேசக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

நேற்று கர்ஜனையான அவன் குரலுக்கும், இன்று மென்மையான அவன் குரலுக்கும் அவ்வளவு வித்தியாசங்கள் இருந்தது. ஆனால் அவள் மட்டும் தனியாக இதில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஏற்கனவே தாய் தமையன் என்று இருவரையும் மீறித் தான் இந்தத் திருமணத்திற்கு அவள் சம்மதித்தது. ஆனால் எல்லாம் மாறி இருந்தது.

தன் முன்னால் நின்று கொண்டிருப்பவன் பேசப் பேச அவளுக்குப் பிடித்தது. முதலில் அவனுடைய மகனுக்காகத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டவளுக்கு, இப்பொழுது இவனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் தோன்றியது. கண்களைப் பார்த்து நேராகப் பேசுகிறான். இருவர் குடும்பத்திடமும் தவறு இல்லை என்றாலும் தன் தாய் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறான். இறங்கி வந்து பேசுகிறான். பணிவாகப் பேசுகிறான் அதில் பாசமும் நிறையவே இருந்தது. மனது நிறைவாக இருந்தாலும் சம்மதம் சொல்ல அவளால் முடியவில்லை.

அவர்கள் வீட்டிலும் பேசியது சற்று அதிக படி தான். ஆனால் இப்பொழுது இவர் சொல்வதைக் கேட்கும்போது முன்னமே அவர்களுக்கு இதுபோல ஒரு ஏமாற்று அனுபவம் இருப்பதினால். எதிர்பாராத அந்தச் சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் சற்று அதிகமாகவே பேசிவிட்டிருப்பது புரிந்தது. ஆனால் தமையனிடமும் தாயிடமும் பேசாமல் அவளால் சட்டென்று முடிவு சொல்ல முடியாது.

அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதை பார்த்தவன்.

“ஐ நோ நீங்க உங்க அண்ணன் கிட்டயும் உங்க அம்மாகிட்டயும் பேசிட்டு அதுக்கப்புறம் முடிவு சொல்லுங்க. இது என்னோட போன் நம்பர்” என்று அவனுடைய விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான்.

பர்ஸில் இருந்து அதை அவன் எடுக்கும்போது, மீண்டும் அவளுடைய புகைப்படத்தில் அவள் பார்வை சென்றது .

போட்டோவைச் சுட்டி காட்டி “அந்தப் போட்டோ” என்று ஒற்றை வார்த்தையாய் உதிர்க்க. காற்று மட்டும் தான் வெளியில் வந்தது. ஆனால் அவனால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு வார்த்தையாக அவள் உதிர்ப்பது ஆசிரியன் அவனுக்கு லிப் ரீடிங் மூலமாகப் புரிந்தது.

“நீங்க உங்க வீட்ல கேக்குற வரைக்கும். சம்மதம் வாங்குற வரைக்கும் நான் வெயிட் பண்றேன். நான் முடிவு பண்ணிட்டேங்க. நீங்கத் தான் என்னோட மனைவின்னு. உங்களுக்கு விருப்பம் இல்லனா மட்டும் நீங்கச் சொல்லலாம். உங்க வீட்ல இருக்கவங்களுக்கு விருப்பம் இல்லனா. அவங்க சம்மதிக்கிற வரைக்கும் நான் காத்துகிட்டு இருக்கேன்” என்று கூறியபடியே திரும்பிப் பார்த்தான். அவளுடைய தோழி அவளுக்காகக் காத்திருப்பது புரிந்தது.

“உங்க பிரண்டு உங்களுக்காக வெயிட் பண்றாங்க. தேங்க்யூ சோ மச். நான் கேட்டதுக்காக என்கிட்ட வந்து பேசுனதுக்கு. உங்க வீட்ல பேசிட்டு நீங்க எனக்குப்போன்பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன். உங்களோட நம்பர் என்கிட்ட இல்ல. ஆனா உங்களோட அழைப்புக்காகக் காத்துக்கிட்டு இருப்பேன்” என்று கூறியவன். ஸ்டைலாக வண்டியில் ஏறி அமர்ந்து சட்டையில் சொருகி இருந்த கூலிங் கிளாஸை எடுத்து அணிந்து கொண்டு. மீண்டும் அவளின் புறம் திரும்பிப் பார்த்துவிட்டு “போய் வருகிறேன்” என்ற சிறு தலை அசைப்புடன். வாகனத்தை உறுமி கொண்டு சென்று விட்டான்.
 
New member
Joined
May 9, 2025
Messages
19
It’s better to marry him than getting scolding from her sister in law. She can avoid her future mother in law if the husband is so supportive to her.
 
New member
Joined
Dec 23, 2024
Messages
22
It’s better to marry him than getting scolding from her sister in law. She can avoid her future mother in law if the husband is so supportive to her.
❤️🙏 நன்றி தோழி ♥️♥️
 
Top