New member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 22
- Thread Author
- #1
கதைப்போமா 4
அவளுடைய வார்த்தைகள் அவனையும் வலிக்கச் செய்தது. தன் தாய் அவள் உணர்வுகளை மட்டுமல்ல, அவளையே முழுவதுமாகக் காயப்படுத்தி விட்டார் என்று புரிந்தது.
“என்னங்க இது பேச்சு??, அவங்க வயசானவங்க வேற பிரச்சனையையும் இதுல சேர்த்து ஒண்ணா யோசிச்சு அப்படி பேசிட்டாங்க. உங்க மேல தப்பு இல்ல, அது எனக்குத் தெரிஞ்சது. இன்பாக்ட் நேத்தே எனக்குப் புரிஞ்சது. இருந்தாலும் நேத்து வீட்டுக்குப் போயிட்டு தரகர் கிட்டையும் பேசினேன். உங்க வீட்டு சிட்டுவேஷனை அவர் எனக்குக் கிளியரா சொன்னாரு. அவர்தான் மறைச்சதாகவும் சொன்னாரு. அதுவும் உங்கள நேர்ல பார்த்தா எங்களோட எண்ணம் மாறலாம் என்பதற்காகச் சொன்னதா சொன்னாரு” என்றான்.
அவள் தொண்டையில் தன் இரு விரல்களால் அழுத்திப் பிடித்து மன்னிப்பு யாசித்தாள். தரகரின் சார்பாக அவள் கேட்கிறாள் என்று புரிந்தது.
“அப்பத்தான் உங்களோட ஆக்சிடென்ட் பத்தியும் தெரிஞ்சுது. ஐ அம்சாரி அபௌட் யுவர் ஃபாதர். தாய் தந்தையோட இழப்பு எதையும் ஈடு கட்டாது. ஐ நோ வெரி வெல் அபௌட்.என் மகன் அவன் தாய பார்த்ததே இல்ல. ஆனா தாய்க்காக ஏங்குறான். இன்ஃபேக்ட் அவனுக்காகத் தான் நானும் மேரேஜ்கு ஒத்துக்கிட்டேன். என்னோட முதல் திருமணம் அரேஞ்ச்ட் மேரேஜா இருக்கலாம். நாங்க வாழ்ந்தது ஒரு வருஷமா இருக்கலாம். ஆனா நான் அவளை உண்மையா காதலிச்சேன். அவளுடைய இறப்பு என்பது தடுக்க முடியாதது. பிகாஸ் அவளுக்கு மேரேஜ்கு முன்னாடியே ஹாட் ப்ராப்ளம் இருந்து இருக்கு. அதை மறைச்சு மேரேஜ் பண்ணிட்டாங்க. அவள் சாகுற வரைக்கும் கூட எனக்கும் என் குடும்பத்துக்கும் அது எதுவுமே தெரியாது. பட் தேங்க் காட் அது ஜெனிடிக் டிசிஸ் இல்ல. இருந்திருந்தால் என் பையனுக்கும் சேர்ந்து வந்து இருக்கும்” என்று கூறி முடித்தான்.
அவர் தாய் பேசிய பேச்சுக்கள் எதனால் என்று இப்பொழுது அவளுக்குச் சிறிதேனும் புரிந்தது.
அவசரமாகப் பேப்பரில் எழுதி அவனிடம் காட்டினாள். “சாரி” என்று ஒற்றை வரி மட்டுமே இருந்தது. தன் மனைவியின் இறப்புக்காகக் கூறுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.
“நீங்க நின்னுகிட்டே இருக்கீங்களே, உங்களுக்குக் கால் வலிக்குல?. இது நம்ம வண்டி தான். இதுல ஜஸ்ட் சாஞ்சு ஒக்காந்துக்குறீங்களா? நீங்க லைட் வெயிட்டா தான் இருப்பீங்க. மேலே ஏறி உக்காந்தாலும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று கரிசனையாகக் கேட்டான்.
“பரவாயில்லை” என்று அவள் ஒற்றை வார்த்தையை முணுமுணுத்தபடி கூற அது அவனுக்குப் புரிந்தது.
“நேத்து என்னால எதுவும் பண்ண முடியல. சடனா எதிர்பார்க்காமல் நடந்ததனால அந்தச் சிட்டுவேஷன எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல. ஆனா இப்ப ரொம்ப யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கேன். அத முதல்ல உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு தான் இங்க வந்தேன். பிகாஸ் இது நான் மட்டும் தனியா எடுக்கிற முடிவு கிடையாது. அதனால உங்க கிட்ட கலந்து ஆலோசிக்க வேண்டி இருந்தது” என்றான் அபிமன்யு.
அவள் புருவம் இடுங்க என்னவென்பது போலப் பார்த்தாள்.
“எனக்கு அம்மா நிறைய வரன்ங்கள் பாத்தாங்க. ப்ரீத்தி இறக்கும்போது நான் திருமணம் பண்ணிக்கிற ஐடியாலையே இல்ல. ஆத்ரேஷோடவே என்னோட வாழ்க்கையை முடிச்சிடனும்னு நினைச்சேன். கடந்த இந்த ஆறு மாசமா என்னோட எண்ணங்களை மாத்தி அமைச்சான் என் மகன். ஏனா அவன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சான். ஸ்கூல்ல பிள்ளைகளை விடுறது பெரும்பாலும் அவங்கவங்க அம்மாவா இருந்தாங்க. அதுவே அவனுக்கு ஏக்கமா மாறிடுச்சு. நான் கூட்டிட்டு போனா இந்தப் பிரச்சனை வருதுன்னு. ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டேன். ஆனாலும் அவனோட அம்மா புராணம் நிக்கல. கண்டிப்பா அவனுக்கு ஒரு அம்மா வேணும்னு அழுது அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். எங்க அம்மாவும் அதுக்கு தூபம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மனசில்லனாளும் நான் ஒத்துக்கிட்டேன். ஆனா காட்டுன எந்தப் பெண்ணையும் எனக்குப் பிடிக்கல. உங்க பிரண்டு சொன்ன மாதிரி திருமணமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நினைச்சேன். அப்படியும் சில வரன்கள் பார்த்தோம். எங்க அம்மாவுக்கு அதுல சுத்தமா உடன்பாடில்ல. ஆனாலும் எனக்காக ஒத்துகிட்டு பார்த்தாங்க. அதிலும் சில பிரச்சனைகள் வந்துச்சு. எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லனும்னு தான் தோணுது”, என்று நிறுத்தியவன். “உங்க பிரண்டு ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க அதுவும் என்ன முறைச்சுக்கிட்டே வெயிட் பண்றாங்க”, என்றபடி அவன் ராதிகாவை பார்க்க. அவளும் ராதிகாவை பார்த்தாள். அவள் வா என்பது போல கைக்காட்ட. இன்னும் கொஞ்ச நேரம் என்று அவளுக்கு ஜாடை காட்டினாள் ஆராத்யா.
“இதுவரைக்கும் பொண்ணு பாக்க போனதெல்லாம் எங்க அம்மாவும் அக்காவும் தான். என் பையன் கூடச் சில பேருக்குப் போயிருக்கான். ஆனா உங்க போட்டோவ பார்த்ததுக்கப்புறம் உங்கள மேரேஜ் பண்ணிக்கலாம்னு மனசுக்குள்ள தோணுச்சு. அதுதான் நானும் பார்க்க வந்தேன்” என்று கூறியவன். தன் பர்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் தயக்கத்தோடு அதை வாங்கினாள். அதிர்ந்து நின்றாள்.
அதில் அவன் மனைவியின் புகைப்படம் இருக்க. அதன் அருகில் அவளுடைய புகைப்படமும் இருந்தது. மகனுடையதும் தந்தையுடையதும் மறுபுறம் இருந்தது. அவள் அதிர்ந்து அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“உங்க போட்டோவ பார்த்ததுமே உங்கள மேரேஜ் பண்ணிக்கணும்னு டிசைட் பண்ணிட்டேன். அது நீங்க என் மனைவியோட சாயல்ல இருக்கறதுனால மட்டுமில்ல, ஏதோ உங்கள பாத்ததும் எனக்குப் பிடிச்சிருச்சு. என் பையனுக்கும். உங்களுக்கு இது ஃபர்ஸ்ட் மேரேஜ் தான்னு கேள்விப்படும்போது கொஞ்சம் தயக்கமா தான் இருந்தது. எதுனாலும் நேர்ல பார்த்துப் பேசிக்கலாம்னு தான் நானும் சேர்ந்து வந்தேன். ஆனா நேத்து என்னென்னமோ நடந்துடுச்சு. என் அம்மா சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அந்த நேரத்துல நானும் ரியாக்ட் பண்ணல அதுக்காகவும் மன்னிப்பு கேட்கிறேன். அதிர்ச்சியினால திடீர்னு முடிவு எடுக்க முடியல. பட் உங்களோட அழுகை என்ன ரொம்ப அசைச்சுடுச்சு. ஏற்கனவே முடிவு பண்ண விஷயம் தான். ஆனா அதுக்கு உங்களோட சம்மதம் வேணும். உங்களோட முழு சம்மதம் இருந்தா மட்டும் தான் என்னால எங்க வீட்டுல பேசிட்டு உங்க அண்ணன் கிட்டயும் பேச முடியும். கண்டிப்பா அவர்கிட்டயும் உங்க அம்மா கிட்டையும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றான்.
அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. பேப்பரில் எழுதி அவனிடம் நீட்டினாள்.
“வேண்டாங்க உண்மையிலேயே உங்க அம்மா சொன்னதுக்கப்புறம் தான் எனக்கே புரிஞ்சது. என்னால ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஒன்னுனா அந்த குழந்தைக்காகப் போராட முடியாது பேச முடியாது. அவனுக்குச் சப்போர்ட்டா நிக்க முடியாது. படிப்பு மட்டும் இல்ல நல்ல ஒழுக்கங்களை கூட என்னால” என்று நிறுத்தி இருந்தாள்.
தன் கீழ் உதட்டை மடித்து கடித்து தன் அழுகையை கட்டுப்படுத்துகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் கண்ணீர் வந்துவிட்டது போலும், அதில் இரண்டு கண்ணீர் சொட்டுகள் பூமியை நனைத்து, அங்கிருந்த சூட்டை தணிக்க வல்லதாக இருந்தது. ஆனால் தன்னவளின் கண்ணீர் பூமியை குளிர்விக். அவன் மனதிற்கு உடன்பாடு இல்லை. அவள் கையில் இருந்த பேப்பரை வாங்கி படித்தான்.
“நீங்க எதெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்களோ அதெல்லாம் சொல்லிக் கொடுக்க நான் இருக்கேன். நான் ப்ரொபசர் பதினெட்டு வயசுல இருந்து இருபத்தி நான்கு வயசு வரைக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கிற எனக்கு, மூணு வயசு பையனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரியாதா??. படிப்பு சொல்லிக் கொடுக்கிறத நான் பாத்துக்குறேன். நல்லொழுக்கத்தையும் நானே கத்துக் கொடுத்துக்கிறேன்” என்றான்.
“நீங்க அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. என் மேல இருக்க சிம்பதியில, முக்கியமா நான் அழுததுனால இந்த முடிவெடுத்தருக்கீங்க. அது சரியா இருக்காது. இன்னைக்கு சரின்னு தோன்றது. நாளைக்கு தவறா தோணும். உங்க வீட்ல இருக்கவங்க யாருக்கும் இதுல விருப்பம் இல்ல. அதனால வேண்டாம்” என்று எழுதி இருந்தாள்.
அவளுடைய வார்த்தைகள் அவனையும் வலிக்கச் செய்தது. தன் தாய் அவள் உணர்வுகளை மட்டுமல்ல, அவளையே முழுவதுமாகக் காயப்படுத்தி விட்டார் என்று புரிந்தது.
“என்னங்க இது பேச்சு??, அவங்க வயசானவங்க வேற பிரச்சனையையும் இதுல சேர்த்து ஒண்ணா யோசிச்சு அப்படி பேசிட்டாங்க. உங்க மேல தப்பு இல்ல, அது எனக்குத் தெரிஞ்சது. இன்பாக்ட் நேத்தே எனக்குப் புரிஞ்சது. இருந்தாலும் நேத்து வீட்டுக்குப் போயிட்டு தரகர் கிட்டையும் பேசினேன். உங்க வீட்டு சிட்டுவேஷனை அவர் எனக்குக் கிளியரா சொன்னாரு. அவர்தான் மறைச்சதாகவும் சொன்னாரு. அதுவும் உங்கள நேர்ல பார்த்தா எங்களோட எண்ணம் மாறலாம் என்பதற்காகச் சொன்னதா சொன்னாரு” என்றான்.
அவள் தொண்டையில் தன் இரு விரல்களால் அழுத்திப் பிடித்து மன்னிப்பு யாசித்தாள். தரகரின் சார்பாக அவள் கேட்கிறாள் என்று புரிந்தது.
“அப்பத்தான் உங்களோட ஆக்சிடென்ட் பத்தியும் தெரிஞ்சுது. ஐ அம்சாரி அபௌட் யுவர் ஃபாதர். தாய் தந்தையோட இழப்பு எதையும் ஈடு கட்டாது. ஐ நோ வெரி வெல் அபௌட்.என் மகன் அவன் தாய பார்த்ததே இல்ல. ஆனா தாய்க்காக ஏங்குறான். இன்ஃபேக்ட் அவனுக்காகத் தான் நானும் மேரேஜ்கு ஒத்துக்கிட்டேன். என்னோட முதல் திருமணம் அரேஞ்ச்ட் மேரேஜா இருக்கலாம். நாங்க வாழ்ந்தது ஒரு வருஷமா இருக்கலாம். ஆனா நான் அவளை உண்மையா காதலிச்சேன். அவளுடைய இறப்பு என்பது தடுக்க முடியாதது. பிகாஸ் அவளுக்கு மேரேஜ்கு முன்னாடியே ஹாட் ப்ராப்ளம் இருந்து இருக்கு. அதை மறைச்சு மேரேஜ் பண்ணிட்டாங்க. அவள் சாகுற வரைக்கும் கூட எனக்கும் என் குடும்பத்துக்கும் அது எதுவுமே தெரியாது. பட் தேங்க் காட் அது ஜெனிடிக் டிசிஸ் இல்ல. இருந்திருந்தால் என் பையனுக்கும் சேர்ந்து வந்து இருக்கும்” என்று கூறி முடித்தான்.
அவர் தாய் பேசிய பேச்சுக்கள் எதனால் என்று இப்பொழுது அவளுக்குச் சிறிதேனும் புரிந்தது.
அவசரமாகப் பேப்பரில் எழுதி அவனிடம் காட்டினாள். “சாரி” என்று ஒற்றை வரி மட்டுமே இருந்தது. தன் மனைவியின் இறப்புக்காகக் கூறுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.
“நீங்க நின்னுகிட்டே இருக்கீங்களே, உங்களுக்குக் கால் வலிக்குல?. இது நம்ம வண்டி தான். இதுல ஜஸ்ட் சாஞ்சு ஒக்காந்துக்குறீங்களா? நீங்க லைட் வெயிட்டா தான் இருப்பீங்க. மேலே ஏறி உக்காந்தாலும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று கரிசனையாகக் கேட்டான்.
“பரவாயில்லை” என்று அவள் ஒற்றை வார்த்தையை முணுமுணுத்தபடி கூற அது அவனுக்குப் புரிந்தது.
“நேத்து என்னால எதுவும் பண்ண முடியல. சடனா எதிர்பார்க்காமல் நடந்ததனால அந்தச் சிட்டுவேஷன எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல. ஆனா இப்ப ரொம்ப யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கேன். அத முதல்ல உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணனும்னு தான் இங்க வந்தேன். பிகாஸ் இது நான் மட்டும் தனியா எடுக்கிற முடிவு கிடையாது. அதனால உங்க கிட்ட கலந்து ஆலோசிக்க வேண்டி இருந்தது” என்றான் அபிமன்யு.
அவள் புருவம் இடுங்க என்னவென்பது போலப் பார்த்தாள்.
“எனக்கு அம்மா நிறைய வரன்ங்கள் பாத்தாங்க. ப்ரீத்தி இறக்கும்போது நான் திருமணம் பண்ணிக்கிற ஐடியாலையே இல்ல. ஆத்ரேஷோடவே என்னோட வாழ்க்கையை முடிச்சிடனும்னு நினைச்சேன். கடந்த இந்த ஆறு மாசமா என்னோட எண்ணங்களை மாத்தி அமைச்சான் என் மகன். ஏனா அவன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சான். ஸ்கூல்ல பிள்ளைகளை விடுறது பெரும்பாலும் அவங்கவங்க அம்மாவா இருந்தாங்க. அதுவே அவனுக்கு ஏக்கமா மாறிடுச்சு. நான் கூட்டிட்டு போனா இந்தப் பிரச்சனை வருதுன்னு. ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டேன். ஆனாலும் அவனோட அம்மா புராணம் நிக்கல. கண்டிப்பா அவனுக்கு ஒரு அம்மா வேணும்னு அழுது அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். எங்க அம்மாவும் அதுக்கு தூபம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மனசில்லனாளும் நான் ஒத்துக்கிட்டேன். ஆனா காட்டுன எந்தப் பெண்ணையும் எனக்குப் பிடிக்கல. உங்க பிரண்டு சொன்ன மாதிரி திருமணமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நினைச்சேன். அப்படியும் சில வரன்கள் பார்த்தோம். எங்க அம்மாவுக்கு அதுல சுத்தமா உடன்பாடில்ல. ஆனாலும் எனக்காக ஒத்துகிட்டு பார்த்தாங்க. அதிலும் சில பிரச்சனைகள் வந்துச்சு. எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லனும்னு தான் தோணுது”, என்று நிறுத்தியவன். “உங்க பிரண்டு ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க அதுவும் என்ன முறைச்சுக்கிட்டே வெயிட் பண்றாங்க”, என்றபடி அவன் ராதிகாவை பார்க்க. அவளும் ராதிகாவை பார்த்தாள். அவள் வா என்பது போல கைக்காட்ட. இன்னும் கொஞ்ச நேரம் என்று அவளுக்கு ஜாடை காட்டினாள் ஆராத்யா.
“இதுவரைக்கும் பொண்ணு பாக்க போனதெல்லாம் எங்க அம்மாவும் அக்காவும் தான். என் பையன் கூடச் சில பேருக்குப் போயிருக்கான். ஆனா உங்க போட்டோவ பார்த்ததுக்கப்புறம் உங்கள மேரேஜ் பண்ணிக்கலாம்னு மனசுக்குள்ள தோணுச்சு. அதுதான் நானும் பார்க்க வந்தேன்” என்று கூறியவன். தன் பர்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் தயக்கத்தோடு அதை வாங்கினாள். அதிர்ந்து நின்றாள்.
அதில் அவன் மனைவியின் புகைப்படம் இருக்க. அதன் அருகில் அவளுடைய புகைப்படமும் இருந்தது. மகனுடையதும் தந்தையுடையதும் மறுபுறம் இருந்தது. அவள் அதிர்ந்து அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“உங்க போட்டோவ பார்த்ததுமே உங்கள மேரேஜ் பண்ணிக்கணும்னு டிசைட் பண்ணிட்டேன். அது நீங்க என் மனைவியோட சாயல்ல இருக்கறதுனால மட்டுமில்ல, ஏதோ உங்கள பாத்ததும் எனக்குப் பிடிச்சிருச்சு. என் பையனுக்கும். உங்களுக்கு இது ஃபர்ஸ்ட் மேரேஜ் தான்னு கேள்விப்படும்போது கொஞ்சம் தயக்கமா தான் இருந்தது. எதுனாலும் நேர்ல பார்த்துப் பேசிக்கலாம்னு தான் நானும் சேர்ந்து வந்தேன். ஆனா நேத்து என்னென்னமோ நடந்துடுச்சு. என் அம்மா சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அந்த நேரத்துல நானும் ரியாக்ட் பண்ணல அதுக்காகவும் மன்னிப்பு கேட்கிறேன். அதிர்ச்சியினால திடீர்னு முடிவு எடுக்க முடியல. பட் உங்களோட அழுகை என்ன ரொம்ப அசைச்சுடுச்சு. ஏற்கனவே முடிவு பண்ண விஷயம் தான். ஆனா அதுக்கு உங்களோட சம்மதம் வேணும். உங்களோட முழு சம்மதம் இருந்தா மட்டும் தான் என்னால எங்க வீட்டுல பேசிட்டு உங்க அண்ணன் கிட்டயும் பேச முடியும். கண்டிப்பா அவர்கிட்டயும் உங்க அம்மா கிட்டையும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றான்.
அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. பேப்பரில் எழுதி அவனிடம் நீட்டினாள்.
“வேண்டாங்க உண்மையிலேயே உங்க அம்மா சொன்னதுக்கப்புறம் தான் எனக்கே புரிஞ்சது. என்னால ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஒன்னுனா அந்த குழந்தைக்காகப் போராட முடியாது பேச முடியாது. அவனுக்குச் சப்போர்ட்டா நிக்க முடியாது. படிப்பு மட்டும் இல்ல நல்ல ஒழுக்கங்களை கூட என்னால” என்று நிறுத்தி இருந்தாள்.
தன் கீழ் உதட்டை மடித்து கடித்து தன் அழுகையை கட்டுப்படுத்துகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் கண்ணீர் வந்துவிட்டது போலும், அதில் இரண்டு கண்ணீர் சொட்டுகள் பூமியை நனைத்து, அங்கிருந்த சூட்டை தணிக்க வல்லதாக இருந்தது. ஆனால் தன்னவளின் கண்ணீர் பூமியை குளிர்விக். அவன் மனதிற்கு உடன்பாடு இல்லை. அவள் கையில் இருந்த பேப்பரை வாங்கி படித்தான்.
“நீங்க எதெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்களோ அதெல்லாம் சொல்லிக் கொடுக்க நான் இருக்கேன். நான் ப்ரொபசர் பதினெட்டு வயசுல இருந்து இருபத்தி நான்கு வயசு வரைக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கிற எனக்கு, மூணு வயசு பையனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரியாதா??. படிப்பு சொல்லிக் கொடுக்கிறத நான் பாத்துக்குறேன். நல்லொழுக்கத்தையும் நானே கத்துக் கொடுத்துக்கிறேன்” என்றான்.
“நீங்க அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. என் மேல இருக்க சிம்பதியில, முக்கியமா நான் அழுததுனால இந்த முடிவெடுத்தருக்கீங்க. அது சரியா இருக்காது. இன்னைக்கு சரின்னு தோன்றது. நாளைக்கு தவறா தோணும். உங்க வீட்ல இருக்கவங்க யாருக்கும் இதுல விருப்பம் இல்ல. அதனால வேண்டாம்” என்று எழுதி இருந்தாள்.