New member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 22
- Thread Author
- #1
கதைப்போமா 2
அந்தப் பெண்ணையே தான் பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.
அங்கிருந்த அசாதாரணமான சூழ்நிலையைக் கலைத்தது அம்பிகா தான். அபிமன்யுவின் தாயார்.
“என்னங்க விளையாடுறீங்களா?? ஆயிரம் பொய்ய சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னுவாங்க. நீங்க என்னன்னா இப்படி முழு பூசணிக்காவ சோத்துல மறைச்சிட்டீங்களே? “ என்றார்.
“அப்படியெல்லாம் இல்லங்க. நாங்க தரகர் கிட்ட எல்லாமே சொல்லித்தான் வைத்திருந்தோம். அவருக்குத் தெரியும்” என்றார் விசாலாட்சி தயங்கிய குரலில்.
“அப்ப நாங்க பொய் சொல்றோம்னு சொல்றீங்களா?, உண்மைய மறைக்கணும்னு நினைச்சு இருக்கீங்க” என்றார் அம்பிகா.
“எப்படிங்க இவ்வளவு பெரிய உண்மைய மறைக்க முடியும்?” பரிதவிப்பாகக் கேட்டார் விசாலாட்சி.
“நல்லா இருக்கு உங்க கதை. பொண்ணு அழகா இருக்கிறாள் தான். அதுக்காக ஒரு ஊமையை கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?” என்று அவர் பேசிய நொடி. அவள் கண்கள் கலங்கிவிட்டது.
அபிமன்யு, “அம்மா” என்று ஓங்கி குரல் கொடுத்தான்.
“நீ அமைதியா இருடா இப்படித்தான் ஒரு சீக்காளியை உன் தலையில கட்டிவச்சு அல்பாயிசுல போய்ச் சேர்ந்துட்டா. இப்ப இது வேறயா?? உனக்குன்னு வந்து வாய்கிறதெல்லாம் இப்படித்தான் இருக்கு. குழந்தைய பாத்துக்கணும்னு தான் இரண்டாவது கல்யாணம் பண்றோம். ஊமையை கட்டி வச்சா எப்படி அவனுக்குச் சொல்லிக் கொடுப்பாள், பாத்துப்பாள்?”, என்று அவர் பாட்டிற்கு படபடுத்துக் கொண்டிருக்க.
அந்தச் சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று அங்கிருந்த ஒருவருக்குமே புரியவில்லை.
“தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம். அந்தத் தரகருக்கு முதல்ல போன போடு” என்று கூறினார் செந்தாமரை.
அம்பிகாவின் ஆட்சிதான் அந்த வீட்டில் போல. அவர் தன் அலைபேசியில் தரகருக்கு அழைப்பு விடுத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.
விசாலாட்சி வாயில் புடவையைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்க கவிச்சந்திரன் தன் தங்கையைப் பார்த்தான். தலை கவிழ்ந்து இருந்தவள். சத்தமே இல்லாமல் அழுவது அவன் கண்ணிற்கு தெரிய.
“போதும் நிறுத்துங்க நாங்க எதையும் மறைத்துப் பண்ணல. அப்படி பண்ண வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அவளுக்கு ஒன்னும் பிறவியிலேயே இந்தப் பிரச்சனை வந்துடல. உங்களுக்குத் தெரியாம தான் வந்து இருக்கீங்கன்னு தெரியுது. அதுக்காக நீங்கப் பேசறது எல்லாம் பொறுத்துக்கணும்னு எங்களுக்கு அவசியமில்லை”, என்றவன் தங்கையிடம் திரும்பி, “ஆராத்யா நீ ரூம்குள்ள போ” என்றவன்.
“எங்கள மன்னிச்சிடுங்க” என்று கரம் குவித்து மன்னிப்பு கேட்டபடியே அந்த வீட்டின் ஆண் மகனாக அடுத்தடுத்து அவன் செய்ய வேண்டியவைகளை செய்துகொண்டிருந்தான். அந்த நொடி அபிமன்யுவுக்கு அவனைப் பிடித்தது. வீட்டிற்கு வந்தவர்களை அவமதிக்கவில்லை. அதே நேரத்தில் தங்கையையும் விட்டுக் கொடுக்கவில்லை. அவளின் கண்ணீருக்கு அவன் விடை தேடி இருந்தான்.
“வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்றீங்களா?” என்று அப்பொழுதும் அம்பிகா விடாப்பிடியாகச் சண்டையிட தயாராக இருந்தார் .
“நான் அப்படி எல்லாம் சொல்லல” என்று கவிச்சந்திரன் பவ்யமாகவே பேசினான்.
“அம்மா ரொம்ப அதிகமா பேசுறீங்க” என்று அபிமன்யுவும் தன் பங்கிற்கு பேசினான். அவனுடைய அத்தையும் தன் பங்கிற்கு ஏதேதோ பிதற்ற ஆரம்பிக்க. அந்த வீடு அசாதாரணமான சூழ்நிலையைக் கையாண்டு கொண்டிருந்தது. தாயின் துணையோடு தன் அறையின் உள்ளே சென்றவள். தாழை போட்டுவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள். அபிமன்யுவின் பார்வை அந்தக் கதவையும் அதன் நிலையையும் தொட்டுவிட்டு மீண்டது.
“இன்னும் என்ன உக்காந்துட்டு இருக்கீங்க?? எந்திரிங்க” என்று அனைவரையும் கிளப்பினார் அம்பிகா.
அபிமன்யுவின் மடியில் இருந்த மூன்று வயது பாலகன். “அப்பா அந்த அம்மா நல்லா இருக்காங்க. நம்ப அம்மா மாதிரியே இருக்காங்க. இந்தப் பாட்டி என்ன திட்டுற போலயே அந்த அம்மாவையும் திட்டுறாங்க. திட்ட வேணாம்னு சொல்லுங்கப்பா” என்றான்.
அவனுடைய தமக்கை தமக்கை கணவன் என்று யாரும் எதுவும் பேசவில்லை. அவனுக்கும் என்ன பேசுவது என்று புரியவில்லை. சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை.
“போதும் நிறுத்துங்கம்மா. விட்டா பேசிக்கிட்டே இருக்கீங்க. நீங்களும் ஒரு பொண்ணு தானே?? அவள் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிக்க மாட்டீங்களா??. இந்தத் திருமணத்துக்கு நான் உடன்படவேயில்ல, ஆனா என் தங்கச்சி தான் பரவால்லன்னு சொன்னாள். நீங்க என்னன்னா அவளை ஹர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று கவிச்சந்திரன் பொறுக்க முடியாமல் பேசிவிட்டான்.
அதற்கும் பொங்கி எழுந்து விட்டார் அவர். அதிலேயே அபிமன்யுவிற்கு புரிந்தது. வீட்டில் மற்றவர்களுக்கு இந்தத் திருமணத்தில், அதாவது இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று.
“ஊமை தங்கச்சிக்கு முதல் கல்யாணம் வேற கேட்குதா?” என்று அப்பொழுதும் அவனுடைய அத்தை எதையோ பேசினார்.
“நிறுத்துங்க எல்லாரும். முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்றான் அபிமன்யு கட்டளையான குரலில். இவர்கள் இப்படி மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்க அந்தப் பெண்ணின் மனதையும் தன் வீட்டினர் தேவை இல்லாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது. அவளுடைய அண்ணன் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறான் தான். அவன் ஒரு வார்த்தை பேச இவர்கள் மறுவார்த்தை பேச என்று இது வளர்ந்து கொண்டே போகும். தேவையில்லாத பிரச்சினை என்று முதலில் அனைவரையும் கிளப்ப எண்ணினான். மகன் கேட்ட கேள்விக்கு அபிமன்யு பதில் அளிக்கவில்லை. அளிக்கும் சூழ்நிலையும் அங்கு இல்லை.
“கிளம்பலாம் தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம்” என்று செந்தாமரையும் கூற.. மகனின் அதட்டலான பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் அமைதியாகக் கிளம்பினார்கள்.
விசாலாட்சியும் கவிச்சந்திரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டார். பிரச்சனை வேண்டாம் என்பது போல.
வெளியில் சென்று செருப்பை போடும்போது அந்தப் பெண் சென்ற அறையைப் பார்த்தான் அபிமன்யு . பிறகு திரும்பிப் பார்க்காமல் நடந்து விட்டான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரி போக வேண்டிய வேலையில்லை. நேராக வீட்டிற்கு வந்தவன் மகனுடன் தன்னறைக்குள் தஞ்சம் அடைந்தான்.
அவர்களது குடும்பம் கவிச்சந்திரனை விடச் சற்று அதிகப்படியான வசதி உடையவர்கள் தான். முதல் திருமணமாக இருந்தால் அந்த வீட்டிற்கு பெண் எடுக்கச் சென்று இருக்கவே மாட்டார் அம்பிகா. ஆண் அழகனான தன் மகனுக்கு அப்சருசையான பெண்ணைத் தேடினார். அது மட்டும் அல்லாமல் வசதி வாய்ப்பையும் சேர்த்து பார்த்தார். அந்தப் பெண்ணுக்கு இருதய நோய் இருந்ததை மறைத்து அவர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். தாம்பத்தியத்தில் அவளுக்கு அதிகப்படியான மூச்சு வாங்கள் இருக்கும். மருத்துவமனைக்கு அழைத்தும் அவள் வரமாட்டாள். அதனால் அவளை மெண்மையாகவே கையாண்டான் அபிமன்யு. பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றாலும் அவள்மீது உயிரையே வைத்திருந்தான் எனலாம். அவள் கர்ப்பவதியாக இருக்கும்போது அவ்வப்போது அவனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறான். இருந்தாலும் இது மட்டும் அவர்கள் பார்வைக்கு வரவே இல்லை. பிரசவ நேரத்தில் உயிர் பிரியும்போது தான். எதனால் என்று அறிக்கையில் தெரிந்தது. அவளுக்கு இருக்கும் பிரச்சினையைப் பார்த்து துவண்டு போய் விட்டான்.
எள்ளளவும் குறைவில்லாத காதலை கொடுத்து இருந்தால் அவளுடைய மனைவி பிரீத்தி. விசாலாட்சி விடவில்லை சம்மந்தி வீட்டினரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார். துவண்டு இருக்கும் மகனைப் பார்த்துத் தேம்பி தேம்பி அழுதார். ஆனால் அவன் தன்னை தேற்றிக்கொண்டு மனைவிக்கான எல்லா காரியங்களையும் செய்து முடித்தான். அவனிடமிருந்து இவ்வளவு பெரிய விஷயத்தை ப்ரீத்தியின் பெற்றோர்கள் மறைத்தது அவனுக்குக் குற்றமாகவே பட்டது.
அந்தப் பெண்ணையே தான் பார்த்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.
அங்கிருந்த அசாதாரணமான சூழ்நிலையைக் கலைத்தது அம்பிகா தான். அபிமன்யுவின் தாயார்.
“என்னங்க விளையாடுறீங்களா?? ஆயிரம் பொய்ய சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னுவாங்க. நீங்க என்னன்னா இப்படி முழு பூசணிக்காவ சோத்துல மறைச்சிட்டீங்களே? “ என்றார்.
“அப்படியெல்லாம் இல்லங்க. நாங்க தரகர் கிட்ட எல்லாமே சொல்லித்தான் வைத்திருந்தோம். அவருக்குத் தெரியும்” என்றார் விசாலாட்சி தயங்கிய குரலில்.
“அப்ப நாங்க பொய் சொல்றோம்னு சொல்றீங்களா?, உண்மைய மறைக்கணும்னு நினைச்சு இருக்கீங்க” என்றார் அம்பிகா.
“எப்படிங்க இவ்வளவு பெரிய உண்மைய மறைக்க முடியும்?” பரிதவிப்பாகக் கேட்டார் விசாலாட்சி.
“நல்லா இருக்கு உங்க கதை. பொண்ணு அழகா இருக்கிறாள் தான். அதுக்காக ஒரு ஊமையை கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?” என்று அவர் பேசிய நொடி. அவள் கண்கள் கலங்கிவிட்டது.
அபிமன்யு, “அம்மா” என்று ஓங்கி குரல் கொடுத்தான்.
“நீ அமைதியா இருடா இப்படித்தான் ஒரு சீக்காளியை உன் தலையில கட்டிவச்சு அல்பாயிசுல போய்ச் சேர்ந்துட்டா. இப்ப இது வேறயா?? உனக்குன்னு வந்து வாய்கிறதெல்லாம் இப்படித்தான் இருக்கு. குழந்தைய பாத்துக்கணும்னு தான் இரண்டாவது கல்யாணம் பண்றோம். ஊமையை கட்டி வச்சா எப்படி அவனுக்குச் சொல்லிக் கொடுப்பாள், பாத்துப்பாள்?”, என்று அவர் பாட்டிற்கு படபடுத்துக் கொண்டிருக்க.
அந்தச் சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று அங்கிருந்த ஒருவருக்குமே புரியவில்லை.
“தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம். அந்தத் தரகருக்கு முதல்ல போன போடு” என்று கூறினார் செந்தாமரை.
அம்பிகாவின் ஆட்சிதான் அந்த வீட்டில் போல. அவர் தன் அலைபேசியில் தரகருக்கு அழைப்பு விடுத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.
விசாலாட்சி வாயில் புடவையைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்க கவிச்சந்திரன் தன் தங்கையைப் பார்த்தான். தலை கவிழ்ந்து இருந்தவள். சத்தமே இல்லாமல் அழுவது அவன் கண்ணிற்கு தெரிய.
“போதும் நிறுத்துங்க நாங்க எதையும் மறைத்துப் பண்ணல. அப்படி பண்ண வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அவளுக்கு ஒன்னும் பிறவியிலேயே இந்தப் பிரச்சனை வந்துடல. உங்களுக்குத் தெரியாம தான் வந்து இருக்கீங்கன்னு தெரியுது. அதுக்காக நீங்கப் பேசறது எல்லாம் பொறுத்துக்கணும்னு எங்களுக்கு அவசியமில்லை”, என்றவன் தங்கையிடம் திரும்பி, “ஆராத்யா நீ ரூம்குள்ள போ” என்றவன்.
“எங்கள மன்னிச்சிடுங்க” என்று கரம் குவித்து மன்னிப்பு கேட்டபடியே அந்த வீட்டின் ஆண் மகனாக அடுத்தடுத்து அவன் செய்ய வேண்டியவைகளை செய்துகொண்டிருந்தான். அந்த நொடி அபிமன்யுவுக்கு அவனைப் பிடித்தது. வீட்டிற்கு வந்தவர்களை அவமதிக்கவில்லை. அதே நேரத்தில் தங்கையையும் விட்டுக் கொடுக்கவில்லை. அவளின் கண்ணீருக்கு அவன் விடை தேடி இருந்தான்.
“வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்றீங்களா?” என்று அப்பொழுதும் அம்பிகா விடாப்பிடியாகச் சண்டையிட தயாராக இருந்தார் .
“நான் அப்படி எல்லாம் சொல்லல” என்று கவிச்சந்திரன் பவ்யமாகவே பேசினான்.
“அம்மா ரொம்ப அதிகமா பேசுறீங்க” என்று அபிமன்யுவும் தன் பங்கிற்கு பேசினான். அவனுடைய அத்தையும் தன் பங்கிற்கு ஏதேதோ பிதற்ற ஆரம்பிக்க. அந்த வீடு அசாதாரணமான சூழ்நிலையைக் கையாண்டு கொண்டிருந்தது. தாயின் துணையோடு தன் அறையின் உள்ளே சென்றவள். தாழை போட்டுவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள். அபிமன்யுவின் பார்வை அந்தக் கதவையும் அதன் நிலையையும் தொட்டுவிட்டு மீண்டது.
“இன்னும் என்ன உக்காந்துட்டு இருக்கீங்க?? எந்திரிங்க” என்று அனைவரையும் கிளப்பினார் அம்பிகா.
அபிமன்யுவின் மடியில் இருந்த மூன்று வயது பாலகன். “அப்பா அந்த அம்மா நல்லா இருக்காங்க. நம்ப அம்மா மாதிரியே இருக்காங்க. இந்தப் பாட்டி என்ன திட்டுற போலயே அந்த அம்மாவையும் திட்டுறாங்க. திட்ட வேணாம்னு சொல்லுங்கப்பா” என்றான்.
அவனுடைய தமக்கை தமக்கை கணவன் என்று யாரும் எதுவும் பேசவில்லை. அவனுக்கும் என்ன பேசுவது என்று புரியவில்லை. சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை.
“போதும் நிறுத்துங்கம்மா. விட்டா பேசிக்கிட்டே இருக்கீங்க. நீங்களும் ஒரு பொண்ணு தானே?? அவள் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிக்க மாட்டீங்களா??. இந்தத் திருமணத்துக்கு நான் உடன்படவேயில்ல, ஆனா என் தங்கச்சி தான் பரவால்லன்னு சொன்னாள். நீங்க என்னன்னா அவளை ஹர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று கவிச்சந்திரன் பொறுக்க முடியாமல் பேசிவிட்டான்.
அதற்கும் பொங்கி எழுந்து விட்டார் அவர். அதிலேயே அபிமன்யுவிற்கு புரிந்தது. வீட்டில் மற்றவர்களுக்கு இந்தத் திருமணத்தில், அதாவது இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று.
“ஊமை தங்கச்சிக்கு முதல் கல்யாணம் வேற கேட்குதா?” என்று அப்பொழுதும் அவனுடைய அத்தை எதையோ பேசினார்.
“நிறுத்துங்க எல்லாரும். முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்றான் அபிமன்யு கட்டளையான குரலில். இவர்கள் இப்படி மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்க அந்தப் பெண்ணின் மனதையும் தன் வீட்டினர் தேவை இல்லாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது. அவளுடைய அண்ணன் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறான் தான். அவன் ஒரு வார்த்தை பேச இவர்கள் மறுவார்த்தை பேச என்று இது வளர்ந்து கொண்டே போகும். தேவையில்லாத பிரச்சினை என்று முதலில் அனைவரையும் கிளப்ப எண்ணினான். மகன் கேட்ட கேள்விக்கு அபிமன்யு பதில் அளிக்கவில்லை. அளிக்கும் சூழ்நிலையும் அங்கு இல்லை.
“கிளம்பலாம் தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம்” என்று செந்தாமரையும் கூற.. மகனின் அதட்டலான பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் அமைதியாகக் கிளம்பினார்கள்.
விசாலாட்சியும் கவிச்சந்திரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டார். பிரச்சனை வேண்டாம் என்பது போல.
வெளியில் சென்று செருப்பை போடும்போது அந்தப் பெண் சென்ற அறையைப் பார்த்தான் அபிமன்யு . பிறகு திரும்பிப் பார்க்காமல் நடந்து விட்டான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரி போக வேண்டிய வேலையில்லை. நேராக வீட்டிற்கு வந்தவன் மகனுடன் தன்னறைக்குள் தஞ்சம் அடைந்தான்.
அவர்களது குடும்பம் கவிச்சந்திரனை விடச் சற்று அதிகப்படியான வசதி உடையவர்கள் தான். முதல் திருமணமாக இருந்தால் அந்த வீட்டிற்கு பெண் எடுக்கச் சென்று இருக்கவே மாட்டார் அம்பிகா. ஆண் அழகனான தன் மகனுக்கு அப்சருசையான பெண்ணைத் தேடினார். அது மட்டும் அல்லாமல் வசதி வாய்ப்பையும் சேர்த்து பார்த்தார். அந்தப் பெண்ணுக்கு இருதய நோய் இருந்ததை மறைத்து அவர்கள் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். தாம்பத்தியத்தில் அவளுக்கு அதிகப்படியான மூச்சு வாங்கள் இருக்கும். மருத்துவமனைக்கு அழைத்தும் அவள் வரமாட்டாள். அதனால் அவளை மெண்மையாகவே கையாண்டான் அபிமன்யு. பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றாலும் அவள்மீது உயிரையே வைத்திருந்தான் எனலாம். அவள் கர்ப்பவதியாக இருக்கும்போது அவ்வப்போது அவனும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறான். இருந்தாலும் இது மட்டும் அவர்கள் பார்வைக்கு வரவே இல்லை. பிரசவ நேரத்தில் உயிர் பிரியும்போது தான். எதனால் என்று அறிக்கையில் தெரிந்தது. அவளுக்கு இருக்கும் பிரச்சினையைப் பார்த்து துவண்டு போய் விட்டான்.
எள்ளளவும் குறைவில்லாத காதலை கொடுத்து இருந்தால் அவளுடைய மனைவி பிரீத்தி. விசாலாட்சி விடவில்லை சம்மந்தி வீட்டினரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார். துவண்டு இருக்கும் மகனைப் பார்த்துத் தேம்பி தேம்பி அழுதார். ஆனால் அவன் தன்னை தேற்றிக்கொண்டு மனைவிக்கான எல்லா காரியங்களையும் செய்து முடித்தான். அவனிடமிருந்து இவ்வளவு பெரிய விஷயத்தை ப்ரீத்தியின் பெற்றோர்கள் மறைத்தது அவனுக்குக் குற்றமாகவே பட்டது.