Member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 67
- Thread Author
- #1
கதைப்போமா 14
அவள் பெயர் சந்திரிகா. அந்தக் கல்லூரியில் தான் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். முதல் வருடத்தில் அவனைப் பார்க்கும்போதே அவள் மனதில் இடம் பிடித்து விட்டான். ஆனாலும் பேராசிரியர் என்று அவள் அடங்கிப் போக அவள் மனம் அடங்க மறுத்தது.
அவனுக்கும் அத்தனை வயது போலத் தெரியவில்லை. அவள் பார்க்கும்போது கல்லூரி படிக்கும் மாணவன்போல தான் இருந்தான். முதலில் அவனை ஆசிரியர் என்றே அவள் நினைக்கவில்லை. பிறகு தான் தெரிந்தது.
அவளைப் போல இன்னும் பலரும் அவன்மீது மையலாக இருக்க. அனைவரையும் அவளே அடக்கி அமைதி படுத்தினாள். அதற்குள் ஒரு சிலர் அவருக்குத் திருமணமாகி விட்டது. அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். வெளியில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து இருக்கிறோம் என்று கூறி இருந்தனர். அப்பொழுதும் அவன்மீது வைத்த காதலை திரும்பி எடுக்காமல் முயற்சி செய்து கொண்டே இருந்தாள். அவளால் அது முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவள் மனம் சோர்ந்து விட்டது. ஆனாலும் அவனைவிட மனமில்லை.
அவள் அழகின் மீது இருக்கும் கர்வத்தினால் அபிமன்யுவை எப்படியும் தன் வலைக்குள் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தாள்.
காலமும் நேரமும் அவளுக்கு உறுதுணை செய்வது போல. அபிமன்யுவின் மனைவியும் இறந்துவிட. அவன் தனிமரம் ஆகினான். அதில் சந்தோஷப்பட்ட பலரில் அவளும் ஒருத்தி. இரண்டாம் தாரம் என்றெல்லாம் நினைக்கவில்லை. பரவாயில்லை என்று நினைத்து அவன் பின்னோடு இன்னும் சுற்ற ஆரம்பித்தாள்.
“உங்க பையன நான் என் பையன் போலப் பார்த்துப்பேன் சார். என்னோட காதல் உண்மையானது. அதனாலதான் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று கூறிய நொடி நின்று திரும்பி அவளை முறைத்து பார்த்தான்.
“மை லைஃப் இஸ் நாட் எ கேம். நான் ஒன்னும் பிளே கிரவுண்ட் இல்ல. யார் வேணா வந்து விளையாடிட்டு போகலாம்னு, நான் ஒன்னும் நேம் போட மாட்டல. ஸ்டே அவே ஃப்ரம் மி. இல்லனா மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லி உன் மேல ஆக்ஷன் எடுக்க வேண்டியது இருக்கும்” என்று அவனும் பல முறை அவளை மிரட்டி இருக்கிறான். ஆனால் சந்திரிகா அடங்க மறுத்துக் கொண்டே இருக்கிறாள்.
அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு பொருட்டே இல்லை. அவன் அந்த கல்லூரிக்குப் பேராசிரியராக வந்த நாளிலிருந்து அவளைப் போலப் பலரைக் கடந்து வந்து விட்டான். பத்தில் ஒன்றாகத் தான் அவளை அவன் நினைத்தான். பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யும்போதே மாணவர்களை மாணவர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று மனதளவில் சங்கல்பம் எடுத்துக்கொண்டு. உன்னதமான ஆசிரியர் தொழிலுக்கு வந்தவன் அவன். வயது கோளாறில் பிதற்றும் இதுபோல மாணவிகளை எச்சரிக்கையோடு கடந்து விடுவானே தவிர அவர்களை ஒரு பெரிய பொருட்டாக அவன் நினைக்கவில்லை.
ஆனால் அதேபோல அவளையும் நினைத்தது அவனுடைய தவறுதான். எல்லா விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை. அதேபோல எல்லா மாணவ மாணவிகளும் ஒன்று போல அமைவதில்லை. அவர்களின் செயல்பாடுகளும் ஒன்று போல இருப்பதில்லை. அவளும் மற்றவர்களைப் போல் அல்ல. தான் ஒன்று நினைத்து விட்டால். எப்படியாவது அது நடந்தே ஆக வேண்டும் என்று நினைப்பவள். அவளைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட நான்கு வருட காதல். முதல் மனைவியும் இறந்து இரண்டாவது வாய்ப்பு அவளுக்கு இருக்கிறது என்று நினைக்கும்போது. அவளை விடக் குறைவான(குறையுள்ள) ஒரு பெண்ணை அதுவும் ஊமையான ஒரு பெண்ணை அவளுக்கு போட்டியாகத் திருமணம் செய்து கொண்டு வந்ததை அவளால் சுத்தமாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சிறுத்தையின் சீற்றத்தோடு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய தோழிகள் அவளை ஆற்ற நினைத்தார்கள்.
ஆனாலும் எதுவும் பயனளிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
“ உனக்கு எதுக்குடி இரண்டாம் தாரம் எல்லாம்? நீ இருக்குற அழகுக்கும் அறிவுக்கும் பணத்துக்கும் நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வருவாங்கடி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு. இந்த ஆளை விட்டுத் தள்ளு. இதையே பிடிச்சிட்டு தொங்காத. இந்த ஆள் எல்லாம் ஒரு ஆளா?? பாக்குறதுக்கு வயசு தெரியலன்னா அதுக்குன்னு வயசு இல்லன்னு ஆயிடுமா?? அவர் வயசு என்ன? உன் வயசு என்ன?? நீ இன்னும் ஸ்வீட் சிக்ஸ்டீன் போலத் தான் இருக்க. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தைக்குத் தாயாக போறியா?? உன்ன அறிவாளின்னு நினைச்சேன் முட்டாள்தனமா யோசிக்கிற” என்று ஏதேதோ மாறி மாறிக் கூறினாலும். யார் பேச்சும் அவள் காதில் விழவே இல்லை.
தன் நிலை இலவு காத்த கிளிபோல ஆகிவிட்டது. தன் காதலனை நேற்று வந்தவள் பறித்துக் கொண்டு செல்வதா??. தான் காத்திருக்கிறேன் என்று தெரிந்தும் இன்னொருத்தியை திருமணம் செய்த இவனைச் சும்மா விடுவதா?? என்று மனது வன்மத்தை தேக்கி நிறுத்தி வைத்துக் கொண்டது.
தோழிகள் கூறிய அறிவுரைகள் எல்லாம் அவள் காதில் கூட ஏறவில்லை என்றால், எப்படி அது மூளையை சென்று அடையும்??. அவள் ஒரு தனி உலகத்தில் அவன்மீது காதலை சுமந்து கொண்டு இருந்தவள். இப்பொழுது வன்மத்தை சுமக்க ஆரம்பித்தாள். சம்பந்தமே இல்லாமல் அபிமன்யுவை திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணின் மீதும் அவளுடைய வன்மம் திரும்பியது. தன்னை கஷ்டப்படுத்தி விட்டு இவர்கள் சந்தோஷமாக இருப்பதா??. இல்லை இவர்களை ஏதாவது செய்தாக வேண்டும். தன்னை அவமானப்படுத்தி புறக்கணித்தவனை பழி வாங்க வேண்டும். அது மட்டுமே அவள் மனதில் ரீங்காரமாக ஓடிக்கொண்டிருக்க. மாலை அவனை தனியாகச் சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ மற்ற ஆசிரியர்களோடு சேர்ந்து வாகனம் எடுக்கச் செல்ல. காலை உதறி கொண்டவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அவனைப் பின் தொடர ஆரம்பித்தாள்.
வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு அலைபேசி வர அது தன் மகனிடமிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டவனின் முகத்தில் மகனின் நினைவில் புன்னகை அரும்பியது. மகனிடம் கதைப்பது என்பது அவனுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று. அமைதியாக வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு. அதை ஏற்றான். “அப்பா வரும்போது எனக்கும் அம்மாவுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரீங்களா?” என்று கேட்டான் ஆத்ரேஷ்.
“இத அம்மா கேட்டாங்களா, இல்ல ஆத்ரேச் குட்டி கேக்குறீங்களா??, எங்க உங்க போன அம்மா பக்கம் திருப்புங்க” என்று அபிமன்யு கூற . குழந்தை தாயின் பக்கம் திருப்பிக் காட்டினான்.
அவள் முகத்தில் கலவையான உணர்வுகள். அதில் வெட்கமும் சேர்த்து இருந்தது. “நான் சொல்லல. ஆத்ரேஷுக்கு தான் தேவை” என்று உதட்டசைத்து காட்டினாள்.
“அப்பா எனக்குத் தான் தேவை. ஆனா அம்மாவை விட்டுட்டு நான் சாப்பிட மாட்டேன் சோ அம்மாவுக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க. அம்மாவுக்கு என்ன ப்லேபர் பிடிக்கும்னு கேட்டு அது வாங்கிட்டு வாங்க” என்று கூறிய மகனைக் கர்வமாக அபிமன்யு பார்க்க. அன்பாக ஆராதியா பார்த்தாள்.
அதற்குள் தன் வாகனத்தை யாரோ தட்டுவது தெரிய. அவன் கவனம் அலைபேசியிலிருந்து வாகனத்தின் வெளியே பார்த்தது. சந்திரிகாவை பார்த்ததும் புருவம் இடுங்கியது
அவள் பெயர் சந்திரிகா. அந்தக் கல்லூரியில் தான் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். முதல் வருடத்தில் அவனைப் பார்க்கும்போதே அவள் மனதில் இடம் பிடித்து விட்டான். ஆனாலும் பேராசிரியர் என்று அவள் அடங்கிப் போக அவள் மனம் அடங்க மறுத்தது.
அவனுக்கும் அத்தனை வயது போலத் தெரியவில்லை. அவள் பார்க்கும்போது கல்லூரி படிக்கும் மாணவன்போல தான் இருந்தான். முதலில் அவனை ஆசிரியர் என்றே அவள் நினைக்கவில்லை. பிறகு தான் தெரிந்தது.
அவளைப் போல இன்னும் பலரும் அவன்மீது மையலாக இருக்க. அனைவரையும் அவளே அடக்கி அமைதி படுத்தினாள். அதற்குள் ஒரு சிலர் அவருக்குத் திருமணமாகி விட்டது. அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். வெளியில் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து இருக்கிறோம் என்று கூறி இருந்தனர். அப்பொழுதும் அவன்மீது வைத்த காதலை திரும்பி எடுக்காமல் முயற்சி செய்து கொண்டே இருந்தாள். அவளால் அது முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவள் மனம் சோர்ந்து விட்டது. ஆனாலும் அவனைவிட மனமில்லை.
அவள் அழகின் மீது இருக்கும் கர்வத்தினால் அபிமன்யுவை எப்படியும் தன் வலைக்குள் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தாள்.
காலமும் நேரமும் அவளுக்கு உறுதுணை செய்வது போல. அபிமன்யுவின் மனைவியும் இறந்துவிட. அவன் தனிமரம் ஆகினான். அதில் சந்தோஷப்பட்ட பலரில் அவளும் ஒருத்தி. இரண்டாம் தாரம் என்றெல்லாம் நினைக்கவில்லை. பரவாயில்லை என்று நினைத்து அவன் பின்னோடு இன்னும் சுற்ற ஆரம்பித்தாள்.
“உங்க பையன நான் என் பையன் போலப் பார்த்துப்பேன் சார். என்னோட காதல் உண்மையானது. அதனாலதான் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று கூறிய நொடி நின்று திரும்பி அவளை முறைத்து பார்த்தான்.
“மை லைஃப் இஸ் நாட் எ கேம். நான் ஒன்னும் பிளே கிரவுண்ட் இல்ல. யார் வேணா வந்து விளையாடிட்டு போகலாம்னு, நான் ஒன்னும் நேம் போட மாட்டல. ஸ்டே அவே ஃப்ரம் மி. இல்லனா மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லி உன் மேல ஆக்ஷன் எடுக்க வேண்டியது இருக்கும்” என்று அவனும் பல முறை அவளை மிரட்டி இருக்கிறான். ஆனால் சந்திரிகா அடங்க மறுத்துக் கொண்டே இருக்கிறாள்.
அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு பொருட்டே இல்லை. அவன் அந்த கல்லூரிக்குப் பேராசிரியராக வந்த நாளிலிருந்து அவளைப் போலப் பலரைக் கடந்து வந்து விட்டான். பத்தில் ஒன்றாகத் தான் அவளை அவன் நினைத்தான். பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யும்போதே மாணவர்களை மாணவர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று மனதளவில் சங்கல்பம் எடுத்துக்கொண்டு. உன்னதமான ஆசிரியர் தொழிலுக்கு வந்தவன் அவன். வயது கோளாறில் பிதற்றும் இதுபோல மாணவிகளை எச்சரிக்கையோடு கடந்து விடுவானே தவிர அவர்களை ஒரு பெரிய பொருட்டாக அவன் நினைக்கவில்லை.
ஆனால் அதேபோல அவளையும் நினைத்தது அவனுடைய தவறுதான். எல்லா விரல்களும் ஒன்று போல இருப்பதில்லை. அதேபோல எல்லா மாணவ மாணவிகளும் ஒன்று போல அமைவதில்லை. அவர்களின் செயல்பாடுகளும் ஒன்று போல இருப்பதில்லை. அவளும் மற்றவர்களைப் போல் அல்ல. தான் ஒன்று நினைத்து விட்டால். எப்படியாவது அது நடந்தே ஆக வேண்டும் என்று நினைப்பவள். அவளைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட நான்கு வருட காதல். முதல் மனைவியும் இறந்து இரண்டாவது வாய்ப்பு அவளுக்கு இருக்கிறது என்று நினைக்கும்போது. அவளை விடக் குறைவான(குறையுள்ள) ஒரு பெண்ணை அதுவும் ஊமையான ஒரு பெண்ணை அவளுக்கு போட்டியாகத் திருமணம் செய்து கொண்டு வந்ததை அவளால் சுத்தமாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சிறுத்தையின் சீற்றத்தோடு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய தோழிகள் அவளை ஆற்ற நினைத்தார்கள்.
ஆனாலும் எதுவும் பயனளிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
“ உனக்கு எதுக்குடி இரண்டாம் தாரம் எல்லாம்? நீ இருக்குற அழகுக்கும் அறிவுக்கும் பணத்துக்கும் நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வருவாங்கடி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு. இந்த ஆளை விட்டுத் தள்ளு. இதையே பிடிச்சிட்டு தொங்காத. இந்த ஆள் எல்லாம் ஒரு ஆளா?? பாக்குறதுக்கு வயசு தெரியலன்னா அதுக்குன்னு வயசு இல்லன்னு ஆயிடுமா?? அவர் வயசு என்ன? உன் வயசு என்ன?? நீ இன்னும் ஸ்வீட் சிக்ஸ்டீன் போலத் தான் இருக்க. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தைக்குத் தாயாக போறியா?? உன்ன அறிவாளின்னு நினைச்சேன் முட்டாள்தனமா யோசிக்கிற” என்று ஏதேதோ மாறி மாறிக் கூறினாலும். யார் பேச்சும் அவள் காதில் விழவே இல்லை.
தன் நிலை இலவு காத்த கிளிபோல ஆகிவிட்டது. தன் காதலனை நேற்று வந்தவள் பறித்துக் கொண்டு செல்வதா??. தான் காத்திருக்கிறேன் என்று தெரிந்தும் இன்னொருத்தியை திருமணம் செய்த இவனைச் சும்மா விடுவதா?? என்று மனது வன்மத்தை தேக்கி நிறுத்தி வைத்துக் கொண்டது.
தோழிகள் கூறிய அறிவுரைகள் எல்லாம் அவள் காதில் கூட ஏறவில்லை என்றால், எப்படி அது மூளையை சென்று அடையும்??. அவள் ஒரு தனி உலகத்தில் அவன்மீது காதலை சுமந்து கொண்டு இருந்தவள். இப்பொழுது வன்மத்தை சுமக்க ஆரம்பித்தாள். சம்பந்தமே இல்லாமல் அபிமன்யுவை திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணின் மீதும் அவளுடைய வன்மம் திரும்பியது. தன்னை கஷ்டப்படுத்தி விட்டு இவர்கள் சந்தோஷமாக இருப்பதா??. இல்லை இவர்களை ஏதாவது செய்தாக வேண்டும். தன்னை அவமானப்படுத்தி புறக்கணித்தவனை பழி வாங்க வேண்டும். அது மட்டுமே அவள் மனதில் ரீங்காரமாக ஓடிக்கொண்டிருக்க. மாலை அவனை தனியாகச் சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ மற்ற ஆசிரியர்களோடு சேர்ந்து வாகனம் எடுக்கச் செல்ல. காலை உதறி கொண்டவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அவனைப் பின் தொடர ஆரம்பித்தாள்.
வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு அலைபேசி வர அது தன் மகனிடமிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டவனின் முகத்தில் மகனின் நினைவில் புன்னகை அரும்பியது. மகனிடம் கதைப்பது என்பது அவனுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று. அமைதியாக வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு. அதை ஏற்றான். “அப்பா வரும்போது எனக்கும் அம்மாவுக்கும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரீங்களா?” என்று கேட்டான் ஆத்ரேஷ்.
“இத அம்மா கேட்டாங்களா, இல்ல ஆத்ரேச் குட்டி கேக்குறீங்களா??, எங்க உங்க போன அம்மா பக்கம் திருப்புங்க” என்று அபிமன்யு கூற . குழந்தை தாயின் பக்கம் திருப்பிக் காட்டினான்.
அவள் முகத்தில் கலவையான உணர்வுகள். அதில் வெட்கமும் சேர்த்து இருந்தது. “நான் சொல்லல. ஆத்ரேஷுக்கு தான் தேவை” என்று உதட்டசைத்து காட்டினாள்.
“அப்பா எனக்குத் தான் தேவை. ஆனா அம்மாவை விட்டுட்டு நான் சாப்பிட மாட்டேன் சோ அம்மாவுக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க. அம்மாவுக்கு என்ன ப்லேபர் பிடிக்கும்னு கேட்டு அது வாங்கிட்டு வாங்க” என்று கூறிய மகனைக் கர்வமாக அபிமன்யு பார்க்க. அன்பாக ஆராதியா பார்த்தாள்.
அதற்குள் தன் வாகனத்தை யாரோ தட்டுவது தெரிய. அவன் கவனம் அலைபேசியிலிருந்து வாகனத்தின் வெளியே பார்த்தது. சந்திரிகாவை பார்த்ததும் புருவம் இடுங்கியது