Member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 67
- Thread Author
- #1
கதைப்போமா 13
ஏனோ முதல் நாள் போலச் சரஸ்வதி அவளை வறுத்தெடுக்கவில்லை. மகனே வந்து சொல்லிவிட்டு சென்றதாலோ என்னவோ??. அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்களைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டனர். அதன் பிறகு அவன் அமைதியாகச் சொல்லிவிட்டு மனைவியையும் விட்டுவிட்டு சென்று விட்டான். ரிதன்யாவும் அங்கே இருக்க. பார்வையாளேயே பார்த்துக் கொள்ள சொல்லியும் கூறினான்.
மகளும் இருப்பதால் அமைதியாக இருந்தாரோ, அல்லது அன்று வேலைகள் அதிகமாக இருந்ததோ?? அவரும் அமைதியாக வேலை செய்து கொண்டிருக்க. ரிதன்யாவுடன் நின்று கொண்டு இவளும் ஒத்தாசை செய்துகொண்டிருந்தாள். அன்றும் நிறைய பேர் இருப்பதால், அவர்களுக்குக் கஷ்டம் இருக்கக் கூடாது என்று அன்றைய உணவையும் அவன் வெளியிலேயே சொல்லிவிட்டான். ஆனாலும் அத்தனை பேருக்கும் அதைப் பிரிப்பது, எடுப்பது, பரிமாறுவது என்று வேலை பளு அதிகமாகவே இருந்தது. புதுமணப்பெண்ணும்
அவர்களுக்கு ஒத்தாசை செய்ய, மற்றவர்களுக்கும் அதில் திருப்திதான். முதல் நாள் அவளை வறுத்தெடுத்தவர்கள் கூட. இப்பொழுது பரவாயில்லையே என்ற ரீதியில் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.
அம்பிகா அவளிடம் அவ்வளவாகப் பேசவில்லை. எதுவென்றாலும் ரிதன்யாவிடம் கூறி அவளையும் வேலை வாங்க பெரிதாக அன்று எந்தக் கலவரமும் நடக்கவில்லை. செந்தாமரையும் தன் பங்கிற்கு இரவில் தனிமையில் அம்பிகாவுக்கு அறிவுரை கூறினார்.
அன்றும் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டு ஊருக்குக் கிளம்ப. வீடும் பரபரப்பாகவே இருந்தது.
அன்று மதிய உணவிற்கே கவிச்சந்திரன் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து இருக்க. அன்று சில முக்கியமான உறவினர்கள் வீட்டிற்கு கிளம்புவதால் இரவு விருந்திற்கு வருவதாக அபிமன்யு கூறிவிட்டான். அதைத் தாய் தந்தையிடம் கூறிவிட்டு மாலை மனைவி மகனை அழைத்துக்கொண்டு கவிச்சந்திரன் வீட்டிற்கும் சென்றான்.
மூவருமே வாயார வரவேற்றனர். அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டு வந்தபிறகு குழலிக்கூட வாயெல்லாம் பல்லாகத் தான் வரவேற்றாள் எனலாம்.
அதுவரை தன் சொந்த வீடாக இருந்தது இப்பொழுது அந்நிய வீடாக மாறி இருந்தது. ஒவ்வொரு பெண்ணின் நிலையம் இதுதான் என்றாலும். அவளுக்கு அவள் சொந்த வீடே அந்நியமாக மாறி வருடங்கள் ஆகிவிட்டது. பெண்களைப் பொறுத்தவரை எந்த வீடுமே அவர்களுக்குச் சொந்த வீடு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஒன்று தாய் வீடு. மற்றொன்று கணவன் வீடு அல்லது மாமியார் வீடு என்போம். நமது, எனது, என்ற பேச்சுக்கே அவர்களுக்கு இடம் இல்லாமல் தான் போய்விட்டது. கண்டிப்பாக அதை மாற்றி அமைக்கத் தான் வேண்டும். அவளால் மாற்றி அமைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்தால் அதை மாற்றி அமைக்க முடியும்.
விருந்தோம்பல் மட்டும் இல்லை விருந்தும் நன்றாகவே இருந்தது. தாயின் கைவண்ணம் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவனும் சாப்பிட்டுவிட்டு மனமார வாய்விட்டுப் பாராட்டினான் “அத்தை ஒவ்வொரு டிஷ்ஷும் செம சூப்பர். எங்க அம்மாவோட கைப்பக்குவம் வேற, ஆனா உங்களுடையது வேற லெவல். உங்க பொண்ணோடையதும் உங்க கைப்பக்குவத்துல இருக்குமா?“ என்று கேட்டுக் கொண்டே, தன் மனைவியை ஓரப்பார்வை பார்த்தான்.
அந்த வார்த்தையில் அவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆராத்யா. அவன் தாயையும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறான் என்று தோன்றியது.
“என்ன மாமா இன்னும் தங்கச்சி உங்களுக்குச் செஞ்சு கொடுக்கலையா??. எங்க அம்மாவோட கைப்பக்குவம் ஒரு டேஸ்ட்டுனா என் தங்கச்சியோட கைப்பக்குவம் வேற லெவலா இருக்கும். அதுக்கு நீங்க அடிமை சாசனமே எழுதிக் கொடுக்கலாம். நானெல்லாம் எப்பயோ எழுதிக் கொடுத்துட்டேன்” என்று கவிச்சந்திரன் தங்கையை விட்டுக் கொடுக்காமல் பேச. குழலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“பரவால்ல கவி உனக்குச் செய்யறதுக்கு மூணு பேர் இருக்காங்க. எனக்கு ஒருத்தர் தான் இருந்தாங்க. இப்ப ரெண்டு பேர் வந்துட்டாங்க. உன் தங்கச்சி நல்லா செய்வான்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவள் கை டேஸ்ட் பார்க்கக் காத்துகிட்டு இருக்கேன்” என்று வாய் தவறி கூறிவிட்டு. கண்ணை மூடி நாக்கை கடித்துக் கொண்டான்.
அனைவரும் திகைத்து விழிக்க. “அவள் கையால டேஸ்ட் பாக்குறதுக்கு காத்துகிட்டு இருக்கேன்” என்று அதை திருத்திக் கூறினான்.
ஆராத்யாவின் முகத்தில் வெட்கம் படர்ந்தது. தாயும் தமையனும் மனதிருப்தியோட அதைப் பார்க்க. ஒருத்தி மட்டும் மனதில் குமைந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன்னைவிட அழகாக இருக்கும் ஆராத்யாவின் மீது குழலிக்கு எப்போதுமே பொறாமை தான். திருமணத்திற்கு முன்னால் அது பெரிதாகத் தெரியவில்லை திருமணம் ஆகி வந்தபிறகு. அது பூதாகரமாகத் தெரிந்தது. எல்லா பெண்களைப் போலத் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தன்னுடைய கணவன் என்று அவளும் நினைத்தாள். ஆனால் தாயும் தங்கையும் கூட அவனை நம்பி தானே இருக்கிறார்கள் என்பதை மறந்து போனாள். அவள் குடும்பம் என்பது அவள் கணவன் குழந்தையோடு முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் எக்ஸ்ட்ரா பிட்னஸ் என்று அவள் நினைத்து விட்டாள். அதனால் அவள் மனதில் மட்டுமல்லாமல் வார்த்தைகளிலும் வெறுப்பை உமிழ தொடங்கி இருந்தாள்.
தன் கணவனைவிட அவள் கணவன் அழகாக இருப்பதும். தங்களை விட அவர்கள் வசதியில் உயர்ந்திருப்பதும். ஏற்கனவே அவள் வயிற்றில் அமிலத்தை ஊற்றிக் கொண்டிருக்க. இப்பொழுது என்னவென்றால் அவள் கணவனை விடவும் ஆராத்யாவின் கணவன் மற்றவரின் முன்பு மனைவியை மனமார பாராட்டுவது இல்லாமல், ரொமான்டிக்காகவே பேசித் தொலைகிறான். வெட்கம் இல்லாமல் இவர்கள் இருவரும் அதை நினைத்து ரசித்துச் சிரிக்கிறார்கள். ஏற்கனவே இருந்த பொறாமை உணர்வு இப்பொழுது மலை அளவு பெருகி விஸ்வரூபம் எடுத்து நின்றது.
ஆராதியாவின் பார்வையோ மகனின் புறமும் தமையனின் மகளின் புறமும் சென்றது. தன்னிடம் வராத தமையனின் மகள். தன் மகனிடம் பேசுவதும் பழகுவதும் சிரிப்பதும் அவளுக்கு மனதளவில் சந்தோஷத்தைக் கொடுத்து இருந்தது. தன் வீட்டில் அவளுக்குக் கவுரவமான வரவேற்பு. இது எல்லாம் சாத்தியமானது இவனால் தான் என்று இப்பொழுது கணவனின் புறமும் பார்வை சென்றது.
அவன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், பார்வை என்னமோ மனைவியின் புறம் அவ்வப்போது தொட்டு விட்டு மீல.
அவளுடைய இப்போதைய பார்வையை உணர்ந்து புருவங்களை ஏற்றி இறக்கி என்ன என்று கேட்டான். அவள் முகம் மலர்ந்த புன்னகையுடன் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள். அவளும் மகனைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.
குழந்தைகள் தானே அவர்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. சின்னக் குழந்தைகள் தன் போல இருக்கும் இன்னொரு குழந்தை என்ற ரீதியில் தான் பழகத் தொடங்கி இருக்கிறது. ஆனால் உறவுமுறை என்று வரும்போது இருவருக்கும் முறை வருமே என்று அவன் மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டிருக்க. மற்றவர்களுக்கு அந்தச் சிந்தனை எல்லாம் இல்லை.
இரவு உணவை முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு தாமதம் தான் ஆனது. ஆனால் தாமதம் ஆவதை தாயிடம் அலைபேசி மூலமாகக் கூறிவிட்டான். இல்லையென்றால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பார் அவர்.
காரில் வரும்போது அவள் கையையும் வாயையும் அசைத்து எதையோ கூற வர. அது அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
தான் புரியவில்லை என்று சொன்னால். அவள் மனது வருத்தப்படுமோ என்று சிந்தித்தவன். அவளை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முக பாவனை பார்த்து உணர்ந்து கொண்டவள். அவள் தலையில் தட்டிக் கொண்டு டைப் செய்து அவன் முன்னால் காட்டினாள்.
“என் வீட்டுக்கு நான் வர்றது அந்நியமா இருந்தாலும். உங்க கூட வர்றது கௌரவமா இருக்கு. ஒவ்வொரு பெண்ணும் சிறந்த கணவன் கிடைக்கணும்னு நினைப்பாங்க. எனக்குக் கிடைச்சிருக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவள் டைப் செய்திருக்க. அதை படித்துவிட்டு அவளைப் பார்க்கும்போது அவள் மகனை அணைத்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுடைய சந்தோஷம் அவள் முகத்தில் மட்டுமல்லாமல் மகனை அணைத்திருப்பதிலும் தெரிந்தது.
“ஒவ்வொரு கணவனும் தனக்கு வரப்போற மனைவி குணவதியா இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா எனக்கு ரெண்டு எதிர்பார்ப்புகள் இருந்தது. இரண்டிலுமே நீ சிறந்து இருக்க. அதை நான் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்” என்று மலர்ந்தமுகமாக அவனும் கூறினான்.
இருவருமே தாலி பிரித்துக் கோர்ப்பதை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். வெளியில் செல்லும் பயணமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். அதனால் மூன்று நாள் விடுப்பு எடுத்து விட்டு. நான்காவது நாளிலிருந்து அவன் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டான். அவள் ஐந்து நாள் விடுப்பு எடுத்து இருந்தாள். அதனால் அவள் வீட்டில் தான் இருந்தாள். அதனாலேயே மகனுக்கும் ஐந்து நாட்கள் விடுப்பு கொடுத்துவிட்டு அவனையும் மனைவியோடு இருக்க செய்திருந்தான் அபிமன்யு.
அவன் கல்லூரியில் இருந்தாலும், அவள் நினைவுகளோடு இருக்க. அவள் மகனுடன் வீட்டில் இருந்தாலும், கணவனுடைய நினைவுகளோடு இருந்தாள். ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்த அவளுடைய வாழ்க்கையும், இப்பொழுது இருக்கும் அவளுடைய வாழ்க்கையும் மாறி இருக்கிறதே. அதை மாற்றி அமைத்திருக்கிறான். அது நல்லபடியாக மாறியதில் அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.
ஏனோ முதல் நாள் போலச் சரஸ்வதி அவளை வறுத்தெடுக்கவில்லை. மகனே வந்து சொல்லிவிட்டு சென்றதாலோ என்னவோ??. அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்களைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டனர். அதன் பிறகு அவன் அமைதியாகச் சொல்லிவிட்டு மனைவியையும் விட்டுவிட்டு சென்று விட்டான். ரிதன்யாவும் அங்கே இருக்க. பார்வையாளேயே பார்த்துக் கொள்ள சொல்லியும் கூறினான்.
மகளும் இருப்பதால் அமைதியாக இருந்தாரோ, அல்லது அன்று வேலைகள் அதிகமாக இருந்ததோ?? அவரும் அமைதியாக வேலை செய்து கொண்டிருக்க. ரிதன்யாவுடன் நின்று கொண்டு இவளும் ஒத்தாசை செய்துகொண்டிருந்தாள். அன்றும் நிறைய பேர் இருப்பதால், அவர்களுக்குக் கஷ்டம் இருக்கக் கூடாது என்று அன்றைய உணவையும் அவன் வெளியிலேயே சொல்லிவிட்டான். ஆனாலும் அத்தனை பேருக்கும் அதைப் பிரிப்பது, எடுப்பது, பரிமாறுவது என்று வேலை பளு அதிகமாகவே இருந்தது. புதுமணப்பெண்ணும்
அவர்களுக்கு ஒத்தாசை செய்ய, மற்றவர்களுக்கும் அதில் திருப்திதான். முதல் நாள் அவளை வறுத்தெடுத்தவர்கள் கூட. இப்பொழுது பரவாயில்லையே என்ற ரீதியில் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.
அம்பிகா அவளிடம் அவ்வளவாகப் பேசவில்லை. எதுவென்றாலும் ரிதன்யாவிடம் கூறி அவளையும் வேலை வாங்க பெரிதாக அன்று எந்தக் கலவரமும் நடக்கவில்லை. செந்தாமரையும் தன் பங்கிற்கு இரவில் தனிமையில் அம்பிகாவுக்கு அறிவுரை கூறினார்.
அன்றும் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டு ஊருக்குக் கிளம்ப. வீடும் பரபரப்பாகவே இருந்தது.
அன்று மதிய உணவிற்கே கவிச்சந்திரன் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து இருக்க. அன்று சில முக்கியமான உறவினர்கள் வீட்டிற்கு கிளம்புவதால் இரவு விருந்திற்கு வருவதாக அபிமன்யு கூறிவிட்டான். அதைத் தாய் தந்தையிடம் கூறிவிட்டு மாலை மனைவி மகனை அழைத்துக்கொண்டு கவிச்சந்திரன் வீட்டிற்கும் சென்றான்.
மூவருமே வாயார வரவேற்றனர். அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டு வந்தபிறகு குழலிக்கூட வாயெல்லாம் பல்லாகத் தான் வரவேற்றாள் எனலாம்.
அதுவரை தன் சொந்த வீடாக இருந்தது இப்பொழுது அந்நிய வீடாக மாறி இருந்தது. ஒவ்வொரு பெண்ணின் நிலையம் இதுதான் என்றாலும். அவளுக்கு அவள் சொந்த வீடே அந்நியமாக மாறி வருடங்கள் ஆகிவிட்டது. பெண்களைப் பொறுத்தவரை எந்த வீடுமே அவர்களுக்குச் சொந்த வீடு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஒன்று தாய் வீடு. மற்றொன்று கணவன் வீடு அல்லது மாமியார் வீடு என்போம். நமது, எனது, என்ற பேச்சுக்கே அவர்களுக்கு இடம் இல்லாமல் தான் போய்விட்டது. கண்டிப்பாக அதை மாற்றி அமைக்கத் தான் வேண்டும். அவளால் மாற்றி அமைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்தால் அதை மாற்றி அமைக்க முடியும்.
விருந்தோம்பல் மட்டும் இல்லை விருந்தும் நன்றாகவே இருந்தது. தாயின் கைவண்ணம் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவனும் சாப்பிட்டுவிட்டு மனமார வாய்விட்டுப் பாராட்டினான் “அத்தை ஒவ்வொரு டிஷ்ஷும் செம சூப்பர். எங்க அம்மாவோட கைப்பக்குவம் வேற, ஆனா உங்களுடையது வேற லெவல். உங்க பொண்ணோடையதும் உங்க கைப்பக்குவத்துல இருக்குமா?“ என்று கேட்டுக் கொண்டே, தன் மனைவியை ஓரப்பார்வை பார்த்தான்.
அந்த வார்த்தையில் அவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆராத்யா. அவன் தாயையும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறான் என்று தோன்றியது.
“என்ன மாமா இன்னும் தங்கச்சி உங்களுக்குச் செஞ்சு கொடுக்கலையா??. எங்க அம்மாவோட கைப்பக்குவம் ஒரு டேஸ்ட்டுனா என் தங்கச்சியோட கைப்பக்குவம் வேற லெவலா இருக்கும். அதுக்கு நீங்க அடிமை சாசனமே எழுதிக் கொடுக்கலாம். நானெல்லாம் எப்பயோ எழுதிக் கொடுத்துட்டேன்” என்று கவிச்சந்திரன் தங்கையை விட்டுக் கொடுக்காமல் பேச. குழலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“பரவால்ல கவி உனக்குச் செய்யறதுக்கு மூணு பேர் இருக்காங்க. எனக்கு ஒருத்தர் தான் இருந்தாங்க. இப்ப ரெண்டு பேர் வந்துட்டாங்க. உன் தங்கச்சி நல்லா செய்வான்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவள் கை டேஸ்ட் பார்க்கக் காத்துகிட்டு இருக்கேன்” என்று வாய் தவறி கூறிவிட்டு. கண்ணை மூடி நாக்கை கடித்துக் கொண்டான்.
அனைவரும் திகைத்து விழிக்க. “அவள் கையால டேஸ்ட் பாக்குறதுக்கு காத்துகிட்டு இருக்கேன்” என்று அதை திருத்திக் கூறினான்.
ஆராத்யாவின் முகத்தில் வெட்கம் படர்ந்தது. தாயும் தமையனும் மனதிருப்தியோட அதைப் பார்க்க. ஒருத்தி மட்டும் மனதில் குமைந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன்னைவிட அழகாக இருக்கும் ஆராத்யாவின் மீது குழலிக்கு எப்போதுமே பொறாமை தான். திருமணத்திற்கு முன்னால் அது பெரிதாகத் தெரியவில்லை திருமணம் ஆகி வந்தபிறகு. அது பூதாகரமாகத் தெரிந்தது. எல்லா பெண்களைப் போலத் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தன்னுடைய கணவன் என்று அவளும் நினைத்தாள். ஆனால் தாயும் தங்கையும் கூட அவனை நம்பி தானே இருக்கிறார்கள் என்பதை மறந்து போனாள். அவள் குடும்பம் என்பது அவள் கணவன் குழந்தையோடு முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் எக்ஸ்ட்ரா பிட்னஸ் என்று அவள் நினைத்து விட்டாள். அதனால் அவள் மனதில் மட்டுமல்லாமல் வார்த்தைகளிலும் வெறுப்பை உமிழ தொடங்கி இருந்தாள்.
தன் கணவனைவிட அவள் கணவன் அழகாக இருப்பதும். தங்களை விட அவர்கள் வசதியில் உயர்ந்திருப்பதும். ஏற்கனவே அவள் வயிற்றில் அமிலத்தை ஊற்றிக் கொண்டிருக்க. இப்பொழுது என்னவென்றால் அவள் கணவனை விடவும் ஆராத்யாவின் கணவன் மற்றவரின் முன்பு மனைவியை மனமார பாராட்டுவது இல்லாமல், ரொமான்டிக்காகவே பேசித் தொலைகிறான். வெட்கம் இல்லாமல் இவர்கள் இருவரும் அதை நினைத்து ரசித்துச் சிரிக்கிறார்கள். ஏற்கனவே இருந்த பொறாமை உணர்வு இப்பொழுது மலை அளவு பெருகி விஸ்வரூபம் எடுத்து நின்றது.
ஆராதியாவின் பார்வையோ மகனின் புறமும் தமையனின் மகளின் புறமும் சென்றது. தன்னிடம் வராத தமையனின் மகள். தன் மகனிடம் பேசுவதும் பழகுவதும் சிரிப்பதும் அவளுக்கு மனதளவில் சந்தோஷத்தைக் கொடுத்து இருந்தது. தன் வீட்டில் அவளுக்குக் கவுரவமான வரவேற்பு. இது எல்லாம் சாத்தியமானது இவனால் தான் என்று இப்பொழுது கணவனின் புறமும் பார்வை சென்றது.
அவன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், பார்வை என்னமோ மனைவியின் புறம் அவ்வப்போது தொட்டு விட்டு மீல.
அவளுடைய இப்போதைய பார்வையை உணர்ந்து புருவங்களை ஏற்றி இறக்கி என்ன என்று கேட்டான். அவள் முகம் மலர்ந்த புன்னகையுடன் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள். அவளும் மகனைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.
குழந்தைகள் தானே அவர்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. சின்னக் குழந்தைகள் தன் போல இருக்கும் இன்னொரு குழந்தை என்ற ரீதியில் தான் பழகத் தொடங்கி இருக்கிறது. ஆனால் உறவுமுறை என்று வரும்போது இருவருக்கும் முறை வருமே என்று அவன் மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டிருக்க. மற்றவர்களுக்கு அந்தச் சிந்தனை எல்லாம் இல்லை.
இரவு உணவை முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு தாமதம் தான் ஆனது. ஆனால் தாமதம் ஆவதை தாயிடம் அலைபேசி மூலமாகக் கூறிவிட்டான். இல்லையென்றால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பார் அவர்.
காரில் வரும்போது அவள் கையையும் வாயையும் அசைத்து எதையோ கூற வர. அது அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
தான் புரியவில்லை என்று சொன்னால். அவள் மனது வருத்தப்படுமோ என்று சிந்தித்தவன். அவளை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முக பாவனை பார்த்து உணர்ந்து கொண்டவள். அவள் தலையில் தட்டிக் கொண்டு டைப் செய்து அவன் முன்னால் காட்டினாள்.
“என் வீட்டுக்கு நான் வர்றது அந்நியமா இருந்தாலும். உங்க கூட வர்றது கௌரவமா இருக்கு. ஒவ்வொரு பெண்ணும் சிறந்த கணவன் கிடைக்கணும்னு நினைப்பாங்க. எனக்குக் கிடைச்சிருக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவள் டைப் செய்திருக்க. அதை படித்துவிட்டு அவளைப் பார்க்கும்போது அவள் மகனை அணைத்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுடைய சந்தோஷம் அவள் முகத்தில் மட்டுமல்லாமல் மகனை அணைத்திருப்பதிலும் தெரிந்தது.
“ஒவ்வொரு கணவனும் தனக்கு வரப்போற மனைவி குணவதியா இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா எனக்கு ரெண்டு எதிர்பார்ப்புகள் இருந்தது. இரண்டிலுமே நீ சிறந்து இருக்க. அதை நான் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்” என்று மலர்ந்தமுகமாக அவனும் கூறினான்.
இருவருமே தாலி பிரித்துக் கோர்ப்பதை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். வெளியில் செல்லும் பயணமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். அதனால் மூன்று நாள் விடுப்பு எடுத்து விட்டு. நான்காவது நாளிலிருந்து அவன் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டான். அவள் ஐந்து நாள் விடுப்பு எடுத்து இருந்தாள். அதனால் அவள் வீட்டில் தான் இருந்தாள். அதனாலேயே மகனுக்கும் ஐந்து நாட்கள் விடுப்பு கொடுத்துவிட்டு அவனையும் மனைவியோடு இருக்க செய்திருந்தான் அபிமன்யு.
அவன் கல்லூரியில் இருந்தாலும், அவள் நினைவுகளோடு இருக்க. அவள் மகனுடன் வீட்டில் இருந்தாலும், கணவனுடைய நினைவுகளோடு இருந்தாள். ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்த அவளுடைய வாழ்க்கையும், இப்பொழுது இருக்கும் அவளுடைய வாழ்க்கையும் மாறி இருக்கிறதே. அதை மாற்றி அமைத்திருக்கிறான். அது நல்லபடியாக மாறியதில் அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.