• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 21, 2025
Messages
3
WhatsApp Image 2025-03-21 at 15.18.07_0e6ffee6.jpg


“ஹலோ… ஹலோ போலிஸ் ஸ்டேசனா? சார் இங்க யாருன்னே தெரியாத ஒருத்தன் எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர தாண்டிக் குதிச்சி உள்ள வந்துட்டான் சார்...” சோபாவிற்கு பின் ஒளிந்து இருந்தவாறே ஒரு பெண் உச்சக்கட்ட படபடப்புடன் தனது கைப்பேசியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வியர்க்க விறுவிறுத்து ஊன் நடுங்க, அடிக்கடி தலை தூக்கி பார்த்தவன்னமே இவள் கைப்பேசியில் கதறிக் கொண்டிருக்க, மறுபக்கம் பேசிய போலிஸோ, “யாரும்மா நீ? உன் பேர் என்ன?” சர்வ நிதானமாக விவரம் கேட்டார்.

“என் பேரு… ரவீனா சார்… நான்…” என இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “டம்… டமார்…” என கதவைத் தட்டும் சத்தம் இவளது காதைக் கிழித்தது.

மறுபக்கம் பேசியவர், “ஹலோ மேடம்… கொஞ்சம் சத்தமா பேசுங்க.” என கத்தினார்.

அதில் இவளது இமைகளோ படபடக்க, உச்சக்கட்ட பதற்றத்தில் தன்னையும் அறியாமல் தனது கைப்பேசியை தவறவிட, அதுவோ அவளின் கன்னம் வழியாக நழுவி கீழே விழுந்தது.

ஒருபக்கம், “டம் டம்…” என கதவு உடைப்படும் சத்தம்.

மறுபக்கம், “ஹலோ ஹலோ… யாராவது இருக்கீங்களா?” என போலிஸ் கத்தும் சத்தம்.

இதற்கிடையில் சிக்கிய இவளோ, “ஐயோ… ஃபோன்…” என்று பதறித் தரையோட தரையாக முகம் புதைத்துத் தனது கைப்பேசியை தேட, அதுவோ சோபாவிற்கு கீழ் கிடந்தது.
அதிலிருந்து “ஹலோ… ஹலோ…” என போலிஸ் கத்தும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

சோபாவிற்கு கீழ் இருக்கும் கைப்பேசியை எடுக்க வேண்டி, நாலு இஞ்சு இடைவெளியில் தனது விரலை மட்டும் விட்டு இவள் துழாவ, சில நொடி போராட்டத்திற்கு பின் கைப்பேசியோ அவளின் நடுவிரலில் பட்டது.
அதைச் சுரண்டியபடியே “ஹப்பாடா” என இவள் பெருமூச்சு விட்ட சமயம், அவளது வீட்டின் தாழ்ப்பாளோ, “டங்…” என்ற சத்தத்துடன் அவளுக்கு முன்னால் வந்து விழுந்தது.

அந்த அதீத சத்தத்தில் இவளின் இதயமோ படபடவெனத் துடித்திட, கண்களோ அதிர்ந்து விரிய, அந்த அறைக்குள் ஓர் ஆடவன் வருவதை கண்டு, “ஆஆஆ…” என அலறப் போனவள், பின் என்ன நினைத்தாளோ சட்டென்று இரு கையால் தனது வாயை இறுக மூடிக் கொண்டாள்.

பய பந்து வயிற்றுக்குள் உருள, நடுங்கியபடியே தவழ்ந்து தனது அறைக்குள் இவள் ஓட, அவனோ சுற்றும் முற்றும் இவளைத் தேடிய படியே, “பேபி… எங்க இருக்கீங்க?” என உதடு வளைத்தான்.

அவனது கணீர் குரல் இவளுக்கோ பீதியை கிளப்ப, படபடக்கும் இதயத்தை ஒரு கையால் பற்றியவாறே படுக்கையறைக்குள் இருக்கும் அலமாரிக்குள் புகுந்துக் கொண்டாள்.

மனமோ “திக் திக்…” என்றது.

தொண்டை குழியோ பயத்தில் ஏறி இறங்கின.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அலமாரிக்குள் இருக்கும் துவாரம் வழியாக இவள் அவனை எட்டிப்பார்க்க, அவனோ சத்தம் கேட்டு அந்த அறைப்பக்கம் தனது முகத்தைத் திருப்பினான்.

குறுகிய இடம் ஆதலால் உடலோ குப்பென்று வியர்த்துவிட, பச்சை தண்ணீரை ஊற்றியது போல அவளின் உடையோ தொப்பலாக நனைந்துவிட, சர்வத்தையும் அடக்கி ஒடுக்கி மூச்சுக்கூட விடாமல் இவள் இருக்க, அவனோ “பேபி எங்க இருக்க? கம்… கம்… லெட்ஸ் ஹேவ் எ ஃபன்.” பரிகாச சிரிப்புடன் கோணல் நடையில் அந்த அறைக்குள் நுழைந்தான்.

தலையில் குடுமியுடன், வயிறு ஒட்டி மெலிந்த தேகம் கொண்டவனை மதியம் தான் பல்பொருள் அங்காடியில் பார்த்ததாக அவளுக்கு ஞாபகம்.

‘இவ… இவன் எப்படி இங்க வந்தான்? அதுவும் நான் தனியா இருக்கிறதை எப்படி தெரிஞ்சுக்கிட்டான்?’ என்று கேள்வி சடுதியில் அவளது மூளைக்குள் தோன்றிட, ‘இப்ப இது முக்கியம் இல்ல… எப்படியாவது இங்கிருந்து தப்பிக்கனும்.” தேவையற்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, உறுதியுடன் அவனைத் தாக்கும் பொருளைத் தனது விரலால் அந்த அலமாரிக்குள் தேடிட, கையில் சிக்கியது என்னமோ துவைத்து வைத்த உடை தான்.

அதையே இறுக்கமாக இவள் பிடித்தபடி அவனைப் பார்க்க, அவனோ அவளை விழிகளால் அங்கும் இங்கும் தேடியபடியே, “ஹைய்ட் அண்ட் சீக்கா? ஹாஹா… ஐ லைக் இட், லைக் இட்… ம்ம்… சொல்லுங்க எங்க இருக்கீங்க? ஹாஹா… இங்கையா?” கேட்டபடியே படுக்கைக்குக் கீழ் குனிந்துப் பார்த்தான்.

அவள் அங்கே இல்லாமல் போக, “ஓஹ் அங்க இருக்கீங்களா?” யோசனை வந்தவனாகச் சொடக்கிட்டவன் குளியலறை நோக்கி நடக்க, இவளோ மெல்ல அந்த அலமாரியிலிருந்து வெளியே வருவதற்கு எட்டிப் பார்த்தாள்.

“லுக்கிங் ஹியர்… லுக்கிங் த்தேர்… லுக்கிங் எவ்ரிவேர்…” நாராசமான குரலில் பாட்டு பாடியபடியே மீண்டும் அந்த அறைக்குள் அவன் நுழைய, பயத்தில் இவளோ நீட்டிய தலையை வெடுக்கென உள்ளித்துக் கொண்டாள்.

“சட்…” என மெளிதாய் கேட்ட அந்தச் சத்தத்தில் அவனோ பட்டென்று தனது முகத்தை அந்த அலமாரியில் பதிக்க, இவளுக்கோ உள்ளங்கை நனைந்து உடல் சூடானது.

விழிகள் மிரள, துவாரத்தில் விழி பதித்து இவள் அவனைப் பார்த்திட, அவனோ தாடையை தடவியபடியே யோசனையுடன் அந்த அலமாரியின் முன் தனது முதுகை காட்டி நின்றான்.

அங்கும் இங்கும் பார்க்கும் அவனின் பின்னாலிருந்து எழுந்த ரவீனாவோ, கண் இமைக்கும் நேரத்திற்குள் அவனது முகத்தைத் துணியால் மூடித் தாக்கத் துவங்கினாள்.

அதில் அவன் நிலை தடுமாறி, கைகளால் பின்னால் இருப்பவளை பிடிக்க முற்பட, இவளோ இன்னுமே அழுத்தமாக மூடி அவனுக்கு மூச்சடைக்க செய்தாள்.

தேகம் மெளிதாய் இருப்பினும் அவனை அடக்க இவள் அரும்பாடுப்பட, அவனது உடலோ வெட்டப்பட்ட கோழியாக இவளது கையில் துடித்துப் பின் அடங்கியது.

அவனது கால்கள் நழுவ, உடல் தளர்ந்து தலையோ தொங்கிட, அவனது இதயத்துடிப்பு குறைந்து போனதை உணர்ந்து, “ஹப்பா…” ஒரு பெருமூச்சுடன் அவனது தலையைச் சுற்றி இருந்த துணியை இவள் அகற்ற, பக்கென்று இவளது கரத்தைப் பிடித்தான் அவன்.


அதில் மிரண்ட, “ஆஆஆ…” என இவள் அலற, “ஹாஹா… வாவ்… ஐ லைக் யுவர் யெல்லிங்…” என்றவன் பேய் சிரிப்பு சிரிக்க, இவளோ அவனது கரத்தில் துள்ளினாள்.

“ஆஆ… விடு… என்ன விடு.” என்று இவள் கத்த, “ஹாஹா… பேபி லெட்ஸ் ஹேவ் எ ஃபன்.” என்றவாறே அவன் கட்டியணைக்க, “ஆஆ… ஐயோ எ… என்ன விடு.” கத்தியபடியே தனது ஒட்டு மொத்த பலத்தையும் ஒன்று திரண்டி அவனைக் கீழே தள்ளினாள், ரவீனா.

அது மிகவும் கடினமான செயல் தான் இருப்பினும் எப்படியோ செய்துவிட்டு இவள் தப்பித்து ஓட, அவனோ இவளது வலது காலை இடறிவிட்டான்.

அதில் நிலை தடுமாறி இவள் பொத்தென்று தரையில் விழ, “ஹாஹா…” கைத்தட்டி அவனோ பரிகாசமாகச் சிரிக்க, இவளுக்கோ பயத்தில் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.

“வே… வேணாம்… விட்டுடு…” கண்ணீர் மல்கக் கதறியபடியே பின்னால் நகன்றாள், ரவீனா.

அவனோ சிரித்தபடி இவளை நோக்கி நடக்க, “டக் டக்…” என்ற அவனது காலடி ஓசைக்கு இணையாக இவளது இதயமோ “லப் டப் லப் டப்.” என்று அடித்துக் கொண்டது

உடல் நடுங்க, விழிகள் கலங்க, பின்னால் நகர்ந்தவளின் கைகள் ஆயுதங்களைத் தேடின.

தேடிய அவளது கரத்தில் அவள் சற்று நேரத்திற்கு முன் குடித்து வைத்த பெப்சி பொத்தல் சிக்கிட, சட்டென்று எடுத்து அவனது முகத்தில் எறிந்தாள், ரவீனா.

எறிந்த வேகத்தில் அந்தப் பொத்தலோ அவனது நெற்றியை பதம் பார்த்தன.

இருப்பினும் அவனோ சிறிதும் அசையாமல் அசராமல், கண்களைக் கூடச் சிமிட்டாமல் அவளை நோக்கித் தனது வேகத்தைக் கூட்டினான்.

“இ… இல்ல… வேணாம் பிளீஸ்… வி… விட்டுடு.” பின்னால் நகன்றபடியே எழுந்தவள் கையில் சிக்கிய பொருட்களை எல்லாம் தூக்கி அவன்மேல் எரிந்தவாறே ஓட, அவனோ சில பொருட்களைத் தடுத்தும் சில பொருட்களால் அடி வாங்கியபடியும் அவளை விடாமல் துறத்தினான்.

நிதானமின்றி ஓடியவளை, உணவு மேசையின் அருகே மடக்கிப் பிடிந்தான், அந்தக் கொடியவன்.

“வி… விடு… விடு என்ன.” என்று திமிறியவளை மேசைமேல் வைத்து அழுத்தியவாறே அவளது கீழ் ஆடையை அவன் கிழித்திட, பயத்தில் அரண்டு மிரண்டாள், ரவீனா.

“இல்லை… பிளீஸ்… பிளீஸ்… எ… என்ன விட்டுட்டு.” மேசையை இரு கையால் தட்டியபடியே இவள் அவனிடமிருந்து போராட, அவனோ அவளது தலையை மேசையோட மேசையாக வைத்து அழுத்தியபடியே தனது பேன்ட் ஜிப்பை கழட்டினான்.

“ஆஆஆ…அம்மா… பிளீஸ்… என்ன விட்டுடு…” என இவள் கத்தினாள், கதறினாள், கையிலிருந்த தங்க வளையல் நொறுங்கும் மட்டும் மேசையை அடித்துப் போராடினாள்.

எவ்வளவோ போராடி பார்த்தும் முடியாமல் போக, சோர்வில் விழிகள் சொறுகியது அவளுக்கு.

இவள் அலற அலற, அவனோ கலகலவெனச் சிரித்து வெறியாட்டம் போட்டான்.

கத்தி கதறி இவள் அடங்கவும் முன்னால் திருப்பிப்போட்டு வந்தவேலை அவன் கவனிக்க, “வே… வேண்டாம் வி… விட்டுடு…” முணங்கியபடியே மயங்கிச் சரிந்தாள், ரவீனா.

அவள் மயங்கிய பின்பும் அவளை விடவில்லை அந்தக் கொடிய அரக்கன்.

சக்கையாய் புளிந்துவிட்டே அவன் இவளைவிட, நைந்து உடையாய் தரையில் சரிந்தாள், ரவீனா.

கீழே கிடந்தவளை கேலியாகப் பார்த்து, “பிரிட்டி கேர்ள்.” என உதடு வளைத்தவன் வெளியே செல்ல எத்தனிக்க, அந்நேரம் பார்த்து “வ்வா… வ்வா…” என்ற போலிஸ் ஜீப்பின் சைரன் சத்தம் கேட்டது.

“அச்சச்சோ…” பயந்து அதிர்ந்த முகமாய் ஜன்னல் ஊடாக இவன் எட்டிப்பார்க்க, வெளியே காவலர்களோ அந்த வீட்டைச் சுற்றி வளைத்திருந்தனர்.

“ஓ… சிட்…” முகம் சுளித்து கத்தியவன் அந்த வீட்டிலிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை விழிகளால் தேடினான்.

ஒரு வாசல் கொண்ட வீடு என்பதால் அவனால் அந்த வீட்டை விட்டுத் தப்பிக்க முடியவில்லை.

ஜன்னல் கூடச் சிறியதாக இருக்க, கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தையாய் தன்னை உணர்ந்தவன் குடுகுடுவென அந்த வீட்டின் படுக்கையறைக்குள் புகுந்து உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டவன் அவளது அலமாரியிலிருந்து ஒரு குர்தியை எடுத்து அணிந்துக் கொண்டான்.

அவளது கண்ணாடி பேழையிலிருக்கும் அலங்கார பொருட்களை அவன் எடுக்க, காவல் அதிகாரிகளோ அதிரடியாய் அந்த வீட்டிற்குள் புகுந்தனர்.

“ம்ம்… அவளைப் பிடிங்க.” கட்டளையிட்டுவிட்ட போலிஸ் உயர் அதிகாரியோ, ரவீனாவின் உடலைப் பார்த்து வருந்தினார்.

இருண்ட முகமாய் அவளின் உடலைப் பார்த்து இவர் தனது தொப்பியைக் கழட்ட, ஏனைய காவலர்கள் அவன் இருக்கும் அறையின் கதவைப் பலமாகத் தட்டினர்.
 
Last edited:
New member
Joined
Mar 21, 2025
Messages
3
“டொக் டொக்…” என இவர்கள் தட்ட, அவனோ பொறுமையாக அவளது அழகு சாதன பொருட்களான
பவுண்டேசன் முதற்கொண்டு மஸ்காரா வரை நிதானமாகத் தனது முகத்தில் போட்ட ஆரம்பித்தான்.

இறுதியாக லிப் ஸ்டிக்கை பூசிவிட்டு இரு இதழையும் உள்ளிழுத்து அதைச் சீர் செய்தும் கொண்டான்.

வளையல் குழுங்க, அச்சு அசல் பெண்போல் தன்னை உருவாக்கிக் கொண்டவன் நளினமாய் நடந்து அந்த அறையின் கதவைத் திறந்திட,
பெண்போல் வந்து நிற்பவனை பார்த்து, காவலர்களோ அதிர்ச்சியில் வாய் பிளந்தனர்.

மிரண்டு விழிப்பவர்களை பார்த்து, “என்ன அங்க வேடிக்கை அரஸ்ட் பண்ணுங்க.” என்ற உயர் அதிகாரியின் கட்டளைக்கு பின் நிதானத்திற்கு வந்தவர்கள் அவனை உடனே கைதும் செய்தனர்.

“பத்துக்கும் மேற்பட்ட பெண்களைக் கற்பழித்து கொலை செய்த கொலைக்காரனை போலிஸார் மடக்கி பிடித்தனர்” என்று அடுத்தநாள் காலை வந்த தினசரி நாளிதழில் இச்செய்தி கொட்டை எழுதில் போடப்பட்டிருக்க, காவல்துறையினரோ அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சர்வ அலங்காரத்துடன் பெண் உடையில் நிற்பவனை ஏற இறங்க பார்த்துவிட்டு வழக்கை விசாரித்தார், நீதிபதி.

அரசு தரப்பு வழக்கறிஞரோ அவனிடம் அவனது பெயர் கேட்க, “ஷில்பா…” என பெண் காட்டும் முக பாவனைகளுடன் பதில் கொடுத்தான் அவன்.

“வாட்? ஆனா ஆதார் கார்டுல உங்க பேரு அரவிந்த்ல இருக்கு?” என வழக்கறிஞர் கேட்க, “நான் இப்ப என்ன பெண்ணாகத் தான் உணர்கிறேன் அதனால என்ன ஷில்பான்னு கூப்பிடனும்.” என்றான் இவன் முன்னால் விழுந்த கூந்தலை சீர் செய்தபடியே.

“அது எப்படி…” என்று அரசு வழக்கறிஞர் ஏதோ பேச வர, “இது மனித உரிமை மீறல். ஏன் எல்லோரும் ஹோமோஃபோபியாவா இருக்கீங்க?” என எதிர்வாதம் புரிய வந்தார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.

எளிதில் அணுக முடியாத அந்த மூத்த வழக்கறிஞர் எப்படி இவனுக்காக ஆஜராக வந்தார் என்ற யோசனையில்
நீதிபதியும், அரசு தரப்பு வழக்கறிஞரும் வாய் பிளக்க, குற்றவாளி கூண்டில் இருக்கும் அரவிந்தனுக்குமே இது ஆனந்த அதிர்ச்சி தான்.

முதலில் புருவம் இடுக்கியவன் பின் ஏதோ புரிந்தவனாக மெல்ல சிரித்துக் கொண்டான்.

“க்கும்.. இங்க பாருப்பா?” தொண்டையை கனைத்துக் கொண்டு நீதிபதி அரவிந்தனை பார்க்க, “சார் பிளீஸ்.. என்ன அப்பான்னு கூப்பிடாதீங்க எனக்கு ஹர்ட் ஆகுது. பிளீஸ் என்ன பெண்ணாவே பாவிங்க.” என பதில் கொடுத்தான், அரவிந்த்.

“ஆமாம் யுவர் ஹானர். அவர் தன்னை பெண்ணா பாவிக்கும்போது நீங்களும் அவரைப் பெண்ணா தான் பார்க்கனும். சோ அவரை மிஸ் என்றோ மேடம் என்றோ கூப்பிடுங்க.” என வாக்காளத்து வாங்கினார், அவன் தரப்பு வழக்கறிஞர்.

அதைக் கேட்டு மிரண்ட நீதிபதியோ, “ஹாங்.. சொல்லுங்கம்மா ஏன் அந்தப் பொண்ண கொன்னீங்க?” என கேட்டார் பவ்வியமாக.

உடனே கண் கலங்கிய அரவிந்தனோ, “நோ சார். நா.. நான் அவளைக் கொல்லல்ல. இரண்டு பேரும் ஒன்னா இருக்கும்போது ஏதோ தப்பு நடந்திருச்சு. இ..இது கொலை இல்ல ஜஸ்ட் எ அக்ஸிடண்ட்…” என நீலிக் கண்ணீர் வடித்தான்.

“அது எப்படி? நீங்க… உங்களைப் பொண்ணா உணருவதா சொல்றீங்க. பட் நீங்க ஒரு பொண்ணு கூட ஒன்னா இருந்திருக்கிறீங்க?” என அரசு தரப்பு வழக்கறிஞர் ஆரம்பிக்க, “இட்ஸ் எ வெரி அஃபன்சிவ் கொஸ்டீன். நீங்க அப்ப ஹோமோ செக்ஸ் தப்புன்னு சொல்றீங்களா?” சட்டென்று குறுக்கே வந்தார், இவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்.

அரசு வழக்கறிஞரோ பதில் பேச முடியாமல் திணற, அது சரி பட்டு வராது என நினைத்து, “போலிஸ் கொடுத்த ஜார்ஜ் சீட் எங்க?” என்று வினவினார், நீதிபதி.

“இதோ இங்க இருக்கு யுவர் ஹானர்.” என்று போலிஸ் உயர் அதிகாரி ஜார்ஜ் சீட்டை நீதிபதியிடம் ஒப்படைக்க, விரித்துப் பார்த்து ஆராய்ந்த நீதிபதியோ, “டோர் உடைக்கப்பட்டிருக்கு. வீட்டுல இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்திருக்கு. போதாக்குறைக்கு அவங்க போலிஸுக்கு ஃபோன் வேற பண்ணி, யாரோ அவங்க வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிச்சு உள்ள வர டிரை பண்றதா சொல்லிருக்காங்க. இதை எல்லாம் வச்சுப் பார்க்கும்போது நடந்தது விபத்து இல்ல கொலை தான் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. அதனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷில்பா என்கிற அரவிந்த் தான் இந்தக் கொலையைச் செய்தார் எனவும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனவும் நான்...” என்று இவர் முடிக்கும் முன், “சார்.. சார்.. நான் செய்யாத குற்றத்தைச் செய்ததா சொல்றீங்க. ஓகே பரவாயில்ல சார். ஆனா பிளீஸ் என்ன ஆம்பிள்ளைங்க இருக்கிற செயில போட்டுடாதீங்க. நான் பொண்ணு, சோ பெண்ணுங்க இருக்கிற செயில தான் போடணும். பிளீஸ்...” கண்ணீருடன் அவன் கதற, “ஹாங்.. அது எப்படி முடியும்?” என புருவம் இடுங்கினார், நீதிபதி.

“யுவர் ஹானர் ஒரு ஜட்ஜா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி சொல்லலாமா? அவர் தன்னை ஒரு பெண்ணா உணரும்போது நீங்க அவர பெண்ணா தான ட்ரீட் பண்ணனும்.” தீர்ப்புக்கு நடுவில் இவனது வழக்கறிஞர் வர, மிரண்டு விழித்தார், நீதிபதி.

பயத்தில் உடனே நாக்கு வரண்டுவிட, அருகில் இருந்த நீரை எடுத்து அருந்திவிட்டு, “ஷில்பா அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவரைப் பெண்கள் சிறையில் அடைக்கும் படி காவல்துறைக்கு கட்டளையிடுகிறேன்.” என தீர்ப்பு வழக்கிவிட்டு இவர் பேனா முனையை உடைத்திட, பற்களுக்கு இடையில் சிரிப்பை அடக்கிவிட்டு நகர்ந்தான், அரவிந்த்.

“நீ எதுக்குய்யா இந்த கேஸுல அதுவும் அவனுக்காக வாதாடின? நீ எப்பவும் இந்த மாதிரியான சில்லறைங்க கேஸெல்லாம் பார்க்க மாட்டியே” தனியாக அரவிந்தனுக்காக வாதாடிய வழக்கறிஞர் அழைத்து நீதிபதி விசாரிக்க, “நான் என்ன சார் பண்ணுவேன்? அந்த வானவில் கம்யூனிட்டிக்கு பன்ட் பண்ற பெரிய கம்பெனி தான் இந்த கேஸ என்ன பார்க்கச் சொல்லிப் பணம் கொடுத்தது. அதுவும் ரொக்கமா பத்து கோடி பணம் கொடுக்கும்போது நான் எப்படி செய்யாம இருக்கிறது?” என்றவர் மறுமொழி கொடுக்க, நீதிபதியின் கண்களோ அதிர்ந்து விரிந்தன.

இந்த வழக்குபற்றிய விவரங்களைச் செய்தி ஊடகங்கள் தொடர்ந்து பேசிப் பரபரப்பாகிட, மிகப் பெரிய ஊடகம் ஒன்று இதுபற்றிய விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் மூவர் கலந்துக் கொண்டு அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன சார் இது அநியாயமா இருக்கு? கற்பழிச்ச குற்றவாளிய கொண்டுப்போய் பெண்கள் சிறையில் அடைப்பாங்களா?” என்று ஒருவர் வினவ, “அவர் அவரை ஒரு பெண்ணா தானே உணருகிறார். பெண்ணைப் பெண்கள் சிறையில் அடைக்காமல் வேற எங்க அடைக்கிறது?” பதிலுக்கு வினவினார் வேறொருவர்.

“இதனால அங்கிருக்கிற பெண்களுக்கு யாரு பாதுக்காப்பு கொடுப்பா? இப்படி தான் ஒருத்தன் பேரு கூட தாமஸ். நான் ஒரு பெண்ணாய் உணர்கிறேன்னு சொல்லிப் பெண்கள் விளையாடுற நீச்சல் போட்டியில கலந்துக்கிட்டு பரிசு வாங்கினான். இப்ப இங்க ஒருத்தன் நான் பெண்ணாய் உணர்கிறேன்னு சொல்லி லேடீஸ் செயிலுக்குள்ள போயிருக்கான். பாலினம் என்பது மூணு தானே இதுல இவன் யார்? இப்படியே போச்சுன்னா பெண்களுக்குக் கிடைக்கிற சலுகைகள் அவங்களுக்கு சரியா போகுமா? இல்லை நிம்மதியா ஒரு பொது கழிப்பிடத்தையாவது உபயோகப்படுத்த முடியுமா?” என்று மற்றொருவர் பேச, நெறியாளரோ “இத்துடன் இந்த நிகழ்ச்சி முடிகிறது.” என கூறி அந்த நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

அதை தனது கைப்பேசியில் கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்த பெண் சிறை அதிகாரியிடம் அரக்கப் பறக்க ஓடி வந்தார், அவரின் உதவியாளர்.

“என்ன?” என்று இவர் புருவம் உயர்த்த, “மேடம்.. மேடம்.. அங்க அங்க..” பதிலுக்கு உதவியாளரோ திக்கி திணறினார்.

உதவியாளரின் பதற்றத்தை கண்ட அதிகாரியோ சிசிடிவி காட்சியைப் பார்க்க வேண்டி, உடனே தனது பார்வையை மடிக்கணினியில் செலுத்திட, சிறைவாசிகள் பலர் தங்களது சிறைக்குள் அலறிட, அரவிந்த் இருந்த சிறையோ இரத்தகளறியானது.

அவனுடன் இருக்கும் மூன்று பெண்களை இவன் பலவந்தப்படுத்த, “ஏய்.. ஏய்.. போய் அவளைப் பிடி.” என கத்தினார், சிறை அதிகாரி.


அவரின் கட்டளைபடி உதவியாளரும் அவ்விடம் நோக்கி விரைந்துச் செல்ல, உயரதிகாரியின் பார்வையோ மறுபடியும் மடிகணினியிடம் சென்றது.

அந்த மூன்று விழிகளும் கண்ணீரில் கரைந்திட, சிறைக்கம்பியைப் பிடித்தபடியே ஒரு பெண், “ஐயோ.. மேடம்.. பிளீஸ்.. எங்களைக் காப்பாத்துக்க. இவ.. இவன் எங்ககிட்ட தப்பா நடந்துக்க பார்க்கிறான்.” உதவி கேட்டுக் கத்தி கதற, மற்ற இருவரோ, “பிளீஸ்… பிளீஸ்.. எங்களை விட்டுட்டு.” என்று கெஞ்சினர்.

அவனோ, “ஹாஹா.. பேப்ஸ் என்ன விட்டு எங்க போறீங்க? லெட்ஸ் ஹேவ் எ ஃபன்.” என கூறி இருவரில் ஒரு பெண்ணைச் சிட்டுக்குருவியை பிடிப்பது போல் பக்கென்று பிடித்துச் சுவரோட சுவராய் நிறுத்தி அவளின் உடையைப் பிய்த்து எறிய, மற்ற பெண்களோ பயத்தில் அரண்டு நடுங்கினர்.

அந்த பெண், “விடு டா பிளீஸ் என்ன விடு டா.” என்று கத்தி முன்னாலிருக்கும் சுவற்றை கை வலிக்க வலிக்கத் தட்டி தட்டி தனது எதிர்ப்பைக் காட்டிட, “ஏய் அவள விடு.. விடு டா ****.” என மற்ற இரு பெண்களோ அவனை அடித்து அவளைக் காக்க போராடினர்.

அதில் எரிச்சலான அந்த அரக்கனோ கையில் சிக்கி இருந்தவளை கீழே தள்ளி அவளின் நெஞ்சின் மேல் ஒரு கால் வைத்து, மற்ற இரு பெண்களின் கழுத்தை பிடித்து நெறித்திட, காவல்துறை உதவியாளரோ, “ஏய்.. ஏய்..” என கத்தி அந்தச் சிறையின் கதவைத் திறந்தார்.

அவரோடு சேர்த்து மூன்று பெண்காவலர்கள் உள்ளே நுழைய, ஆறு பெண்களையும் ஒரு கையால் சமாளித்து அவர்களையும் வன்புணர்வுக்கு ஆளாக்கினான் அந்த அரக்கன்.

அதை பார்த்துப் பதறிய உயர் அதிகாரியோ உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தார்.

“டிரிங்.. டிரிங்…” என்ற தொலைப்பேசியின் சத்தத்திற்கு ஈடு இணையாக இவரின் இதயமும், “லப் டப்.. லப் டப்..” என துடித்தது.

சிசிடிவயை பார்த்தபடியே, “பிக் அப் பிக் அப்…” என இவர் முணுமுணுத்திட, மறுமுனையில், “ஹலோ…” என்றது ஓர் ஆணின் குரல்.

“ஹப்பா..” என்ற பெருமூச்சுடன், “சார்…” என இவர் ஆரம்பிக்க, அவரின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தான், ஷில்பா என்கிற அரவிந்த்.


நன்றி வணக்கம்
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் யாஷ் கார்முகில் 💐 💐 💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top