- Joined
- Aug 31, 2024
- Messages
- 916
- Thread Author
- #1
மூடுபனியும், முன்னூறு நிலவும்
ஒன்று சேர்ந்து - முக்கோடித் தேவர்கள்
ஆசீர்வதித்துத் தந்த வரம்போல்
மலராய், மலர் தேடும்
வண்ணத்துப் பூச்சியாய்!
வண்ணத்துப் பூச்சியின் வண்ணமாய்!
வண்ணங்கள் ஒன்று சேர்த்து சமைத்த,
வானவில்லின் வடிவாய் வந்த
பூந்தளிரென கண்டேனே
என் தேவதையை!
என் கண்களுள் உனை நிரப்பி,
காதல் காவியம் படைக்க
மனம் விளைகிறது!
நான் கண்ட பெண்களிலே
எனை எனக்கே
அறிமுகம் செய்வித்தவள் நீயே!
உனைக் கண்ட அந்த நொடி,
என் மனம் உனைச்சேர்ந்து
உயிர் கலந்ததடி!
ஒன்று சேர்ந்து - முக்கோடித் தேவர்கள்
ஆசீர்வதித்துத் தந்த வரம்போல்
மலராய், மலர் தேடும்
வண்ணத்துப் பூச்சியாய்!
வண்ணத்துப் பூச்சியின் வண்ணமாய்!
வண்ணங்கள் ஒன்று சேர்த்து சமைத்த,
வானவில்லின் வடிவாய் வந்த
பூந்தளிரென கண்டேனே
என் தேவதையை!
என் கண்களுள் உனை நிரப்பி,
காதல் காவியம் படைக்க
மனம் விளைகிறது!
நான் கண்ட பெண்களிலே
எனை எனக்கே
அறிமுகம் செய்வித்தவள் நீயே!
உனைக் கண்ட அந்த நொடி,
என் மனம் உனைச்சேர்ந்து
உயிர் கலந்ததடி!