New member
- Joined
- Feb 12, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
காலை பரபரப்பில் அந்த வீட்டு மக்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். சமையலறையில் தாளிப்பு சத்தத்துடனும் கலவைக் கருவியின் சத்தத்துடனும் சுழன்று கொண்டிருந்தாள் கவிதா. அவ்வப்போது நேரத்தைப் பார்த்துக் கொள்வதும் அவளது வழக்கம். பள்ளிக்கு செல்ல வேண்டும் அல்லவா? ஆசிரியர் பணி வேறு உண்டு அவளுக்கு.
ஹாலில் தனது மகன்களின் பள்ளிச் சீருடையை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணு. வீட்டில் சமையலைத் தவிர, அனைத்து வேலைகளையும் பார்க்கும் அப்பாவி ஜீவன் அவன்தான். அரசு வழக்கறிஞர் அவன். ஆனால் மனைவின் முன் வாதாட தெரியாத அப்பாவி வழக்கறிஞர். அப்படி சொன்னால் கோபம் கொள்ளும், அவளது அன்பு மனையாள்.
மூத்தவன் அறையில் கிளம்பிக் கொண்டிருக்க, அடுத்தவன் அப்போது தான் குளித்துவிட்டு துண்டுடன் அறைக்குள் வந்தான்.
"விஜய் கேட்போமாடா?" என ரகசியம் போல கேட்டான்.
"அம்மா திட்டுவாங்கடா... ஸ்கூலுக்கு கிளம்பும் போது அம்மா டென்ஷனா இருப்பாங்க, தெரியும்ல? வேண்டாம்டா..." இவன் பதற,
"பச்... வேற எப்போ தான் கேக்குறது?" இவனும் சலித்துக் கொண்டான் இளையவன்.
"இன்னைக்கி ஈவினிங் கேட்கலாமா?" என மூத்தவன் விஜய் தள்ளிப்போட நினைக்க,
இளையவன் அஜயோ, "இப்படி சொல்லி சொல்லி ஒரு வாரம் தள்ளிப் போட வச்சிட்ட. இன்னைக்கே, இப்போவே கண்டிப்பா கேட்டே ஆகணும்." என்று தீர்மானமாக சொல்ல, சமையல் வேலையை முடித்த கவிதா சரியாக அறைக்குள் நுழைய, இருவர் சம்பாசனையையும் அரைகுறையாக கேட்டு விட்டு,
"என்ன அஜய் கேக்கணும் உனக்கு? நைட்டே எதுவா இருந்தாலும் கேளு, காலையில வந்து அவசரப்படுத்தாதனு சொல்லி இருக்கேன்ல உனக்கு?" என்று கிளம்பும் அவசரத்தில் எதையாவது, 'வேண்டும்' என்று கேட்டு விடுவானோ என்ற பதற்றத்தில், அவனைக் கடிந்து கொண்டாள் கவிதா. அவர்கள் இருவரும் பயந்து எச்சிலை விழுங்கினார்கள்.
"சொல்லுடா, என்ன கேட்கணும்? உனக்கு என்ன வேணும்?" எனக் கத்திவிட,
"ம்மா! எதுவும் எங்களுக்கு வேணாம். ஒரு டவுட் மட்டும் இருக்கு, அதுக்கு நீங்க பதில் சொல்லணும்." என்றான்.
அவன் பேசும் நேரம், அடுக்கி வைத்திருந்த சேலைகளில் ஒரு சேலையைத் தேர்வு செய்து அதை உருவியவள், தேவையான இதர ஆடைகளை எடுத்துக் கொண்ட பின்னே மகனின் பேச்சுக்கு பதில் அளித்தாள்.
"என்ன டவுட் அஜய்? டவுட்ட நைட்டே கேட்க மாட்டீயா? சொல்லு, என்ன டவுட்?" என்று கேட்டபடியே அவன் அருகே வர,
"என் டவுட் அப்பா இருக்கும் போது தான் கேட்க முடியும். நீங்க குளிச்சிட்டு ரெடியாகிட்டு வாங்க, கேக்குறேன்." என்றான்.
இவளோ நேரம் விரைகின்ற அவசரத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே குளிக்கச் சென்றாள்.
இவர்கள் சம்பாசனையை கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணு, இளைய மகனிடம் பள்ளி சீருடையை நீட்டி விட்டு, "என்ன டவுட் அஜய் உனக்கு?" என அவனும் கேட்க,
"அம்மா வரட்டும்பா, டவுட் என்னன்னு சொல்றேன்." என அவனும் ஆடையை வாங்கிக் கொண்டு கிளம்ப தயாராகச் சென்றான்.
அதற்குள் விஷ்ணு, தனது இரு மகன்கள் மற்றும் மனைவிக்கு சேர்த்து உணவை கொள்கலனில் அதக்கி வைத்து விட்டு, உணவு பையில் வைத்தவன் மூவருக்கும் தோசை சுட ஆரம்பித்தான்.
இரண்டு தோசையை மனைவிக்கு கொள்கலனில் வைத்து சட்னியை ஊற்றி அதையும் சேர்த்து பையில் வைத்தவன், அடுத்ததாக மகன்கள் இருவருக்கும் தோசையை ஊற்றி தட்டில் வைத்தான்.
இருவரும் தயாராகி வந்தவர்கள் நீள்விருக்கையில் அமர்ந்து அதை எடுத்து வந்து சாப்பிட்டனர்.
விஷ்ணுவும் அவர்கள் முன்னே அமர்ந்து ஷூவிற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகே கவிதாவும் அமர்ந்து தனது கைப்பையை சரி செய்தவாறு, "அஜய், ஏதோ கேட்கணும் சொன்னீயே கேளு." என்றாள்.
அஜயோ விஜய்யைப் பார்த்து விட்டு தன் அன்னையிடம், "அம்மா நீங்க அப்பாவுக்கு கிஸ் குடுப்பீங்களாமா?" என்று கேட்டு இருவரையும் அதிர வைத்திருந்தான்.
கவிதா பக்கத்திலிருக்கும் தன் கணவனைப் பார்த்து விட்டு, "இதான் உன் டவுட்டா?" என சந்தேகமாக கேட்டாள்.
"ம்... நீங்க எங்க இரண்டு பேரையும் கிஸ் பண்ணிருக்கீங்க. ஆனா அப்பாவை கிஸ் பண்ணி பார்த்ததே இல்ல. அதான் நீங்க அப்பாவை கிஸ் பண்ணுவீங்களானு எங்களுக்கு சந்தேகம்." என்றான்.
"உனக்குமாடா?" என்று விஜய்யைப் பார்த்து கேட்டவள் தன் கணவனைப் பார்க்க, அவனோ உதடு கடித்து சிரிப்பை அடக்கியபடி தன் வேலையைப் பார்த்தான்.
'கேள்வி என்கிட்டனதும் மனுஷன் சிரிப்ப பாரு...' என உள்ளுக்குள் கடிந்து கொண்டவள்,
"உங்க அப்பாவையும் கிஸ் பண்ணுவேன்டா." என்றாள், அடுத்து அவர்கள் சொல்லப் போவதை அறியாது.
"அப்படியா? அப்ப அப்பா கன்னத்துல கிஸ் பண்ணுங்க." என்றான் பட்டென்று.
ஆனால் கவிதாவோ அவர்களிடம் எதையும் பெரிதாக காட்டிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக, "கிஸ் தானே? பண்ணிட்டா போச்சு..." என்று சட்டென விஷ்ணுவின் கன்னத்தைப் பற்றி முத்தம் வைத்தாள்.
மனைவியிடம் இதை எதிர்பாராதவன், அவளை ஆச்சரியத்தோடு பார்க்க, ‘என்ன?’ என புருவம் உயர்த்திக் கேட்டாள். வெட்கத்தை மறைத்துக் கொண்டவன், சாதாரணமாக மகன்கள் முன் அவர்களது ஷூவை வைத்தான்.
"அம்மா..." என்று அஜய் மீண்டும் அழைக்க,
"இப்போ என்ன, அப்பா கிஸ் பண்ணுவாரானு கேட்க போறியா? நீ சந்தேகம் கேட்டதெல்லாம் போதும், சீக்கிரம் ஷூவை போட்டு வாடா." என்று, அங்கிருந்து அடுத்து என்ன செய்ய சொல்வார்களோ என்ற பீதியில் வேகமாக வாசலுக்கு வந்தவள், தன் வாகனத்தை வெளியே எடுத்து உதைக்க ஆரம்பித்தாள்.
அவசரமாக வெளியே செல்லும் மனைவியின் எண்ணவோட்டத்தை அறிந்து இவன் வாய் விட்டே சிரித்தான்.
மூத்தவன் சைக்கிளில் சென்று விட, இளையவனை மட்டும் கவிதா அழைத்துச் செல்வாள். மகன் கொண்டு வந்த பையை முன்னே வைத்தவள் அவனை பின்னே அமர சொன்னாள்.
விஷ்ணு வாசலில் நின்றவாறே செடிகளுக்கு நீர் பாய்ச்சியபடி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஜய் பின்னே அமராமல் கவிதாவிடம் நின்றபடி, "அம்மா, ஆக்சுவலா எங்க டவுட் என்னன்னா, நீங்க அப்பாவ லிப்ஸ்ல கிஸ் பண்ணுவீங்களான்னு தான். அப்புறம்தான் வேணாம்னு கன்னத்துல மாத்திக்கிட்டோம்." என்று அவன் விளக்கம் கொடுக்க,
'எது லிபிஸ்லயா?' என அதிர்ந்தவள், "வெசம்... வெசம்... பயபுள்ள..." என்று மண்டையில் பட்டும் படாமல் கொட்டிவிட்டு கணவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ வழக்கம் போல உதடு கடித்து சிரிப்பை அடக்க முயன்றான். அவனை முறைத்து விட்டுச் சென்றாள்.
மகனின் கேள்வி மிக எளிமையானது தான். ஆனால் அவர்களுக்குள் பட்டும் படாமல் மறைத்து வைத்திருந்த காதலை அது வெளிக் கொண்டு வந்து விட்டது.
இரு மகன்களைப் பெற்ற பின்னும் மெத்தையில் அவர்களுக்கான நெருக்கத்தில், இடைவெளி சிறிது சிறிதாய் உட்புகுந்து இன்று மகன்களின் வயதைக் காரணம் காட்டி பெரிதான இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர். உடலளவு மட்டுமே, மனதளவில் இல்லை.
நெஞ்சம் முழுக்க காதல் இருப்பினும் அதை அவர்களுக்காக பார்த்து பார்த்து செய்வதில் காட்டிக் கொள்வார்களேத் தவிர, தொட்டு பேசி, கட்டிக் கொண்டு, முத்தமிட்டு பகிர்ந்து கொள்வதில்லை. இதுதான் அவர்களின் வாழ்க்கைமுறை என மாறி விட்டது.
மகனது இன்றைய கேள்வியால் அவர்களுக்குள் பதுங்கி இருந்த காதல் பூதம் இன்று விழித்துக் கொண்டதைப் போல, அதன் காதல் பசிக்கு தனது தீனியாக பழைய காதல் நாட்களை அசைப்போட ஆரம்பித்தது.
பள்ளியில் தனது வேலையில் கவனம் இருந்தாலும், மகனின் கேள்வியும் கணவனின் முகமும் வந்து போகாமல் இல்லை.
இங்கே விஷ்ணுவிற்கு அத்திபூத்தாற் போல எப்போவாவது, கவிதாவிடம் இதுபோல எதிர்பாராத முத்தம் கிடைப்பது உண்டு. ஆனால் கொஞ்ச நாட்களாக அதுவும் கிட்டவில்லை.
உள்ளுக்குள் மனைவியின் அருகாமையையும் அணைப்பையும் முத்தத்தையும் எதிர்பார்த்து ஏங்கி போயிருக்கிறான். அதை தனக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். ஆனாலும் சில நேரங்களில் எதார்த்தமாக வெளிப்படும் ஏக்கத்தை அவளிடம் காட்ட நினைத்தாலும், குழந்தைகளை காரணம் காட்டிவிட்டு ஒதுங்கி விடுவாள். சில நேரங்களில் மனைவியின் நிலையைக் கண்டு தானாக ஒதுங்கி கொள்வதும் உண்டு. இப்படியே தான் அவர்கள் நாட்களும் சென்று விட்டன.
ஹாலில் தனது மகன்களின் பள்ளிச் சீருடையை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணு. வீட்டில் சமையலைத் தவிர, அனைத்து வேலைகளையும் பார்க்கும் அப்பாவி ஜீவன் அவன்தான். அரசு வழக்கறிஞர் அவன். ஆனால் மனைவின் முன் வாதாட தெரியாத அப்பாவி வழக்கறிஞர். அப்படி சொன்னால் கோபம் கொள்ளும், அவளது அன்பு மனையாள்.
மூத்தவன் அறையில் கிளம்பிக் கொண்டிருக்க, அடுத்தவன் அப்போது தான் குளித்துவிட்டு துண்டுடன் அறைக்குள் வந்தான்.
"விஜய் கேட்போமாடா?" என ரகசியம் போல கேட்டான்.
"அம்மா திட்டுவாங்கடா... ஸ்கூலுக்கு கிளம்பும் போது அம்மா டென்ஷனா இருப்பாங்க, தெரியும்ல? வேண்டாம்டா..." இவன் பதற,
"பச்... வேற எப்போ தான் கேக்குறது?" இவனும் சலித்துக் கொண்டான் இளையவன்.
"இன்னைக்கி ஈவினிங் கேட்கலாமா?" என மூத்தவன் விஜய் தள்ளிப்போட நினைக்க,
இளையவன் அஜயோ, "இப்படி சொல்லி சொல்லி ஒரு வாரம் தள்ளிப் போட வச்சிட்ட. இன்னைக்கே, இப்போவே கண்டிப்பா கேட்டே ஆகணும்." என்று தீர்மானமாக சொல்ல, சமையல் வேலையை முடித்த கவிதா சரியாக அறைக்குள் நுழைய, இருவர் சம்பாசனையையும் அரைகுறையாக கேட்டு விட்டு,
"என்ன அஜய் கேக்கணும் உனக்கு? நைட்டே எதுவா இருந்தாலும் கேளு, காலையில வந்து அவசரப்படுத்தாதனு சொல்லி இருக்கேன்ல உனக்கு?" என்று கிளம்பும் அவசரத்தில் எதையாவது, 'வேண்டும்' என்று கேட்டு விடுவானோ என்ற பதற்றத்தில், அவனைக் கடிந்து கொண்டாள் கவிதா. அவர்கள் இருவரும் பயந்து எச்சிலை விழுங்கினார்கள்.
"சொல்லுடா, என்ன கேட்கணும்? உனக்கு என்ன வேணும்?" எனக் கத்திவிட,
"ம்மா! எதுவும் எங்களுக்கு வேணாம். ஒரு டவுட் மட்டும் இருக்கு, அதுக்கு நீங்க பதில் சொல்லணும்." என்றான்.
அவன் பேசும் நேரம், அடுக்கி வைத்திருந்த சேலைகளில் ஒரு சேலையைத் தேர்வு செய்து அதை உருவியவள், தேவையான இதர ஆடைகளை எடுத்துக் கொண்ட பின்னே மகனின் பேச்சுக்கு பதில் அளித்தாள்.
"என்ன டவுட் அஜய்? டவுட்ட நைட்டே கேட்க மாட்டீயா? சொல்லு, என்ன டவுட்?" என்று கேட்டபடியே அவன் அருகே வர,
"என் டவுட் அப்பா இருக்கும் போது தான் கேட்க முடியும். நீங்க குளிச்சிட்டு ரெடியாகிட்டு வாங்க, கேக்குறேன்." என்றான்.
இவளோ நேரம் விரைகின்ற அவசரத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளே குளிக்கச் சென்றாள்.
இவர்கள் சம்பாசனையை கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணு, இளைய மகனிடம் பள்ளி சீருடையை நீட்டி விட்டு, "என்ன டவுட் அஜய் உனக்கு?" என அவனும் கேட்க,
"அம்மா வரட்டும்பா, டவுட் என்னன்னு சொல்றேன்." என அவனும் ஆடையை வாங்கிக் கொண்டு கிளம்ப தயாராகச் சென்றான்.
அதற்குள் விஷ்ணு, தனது இரு மகன்கள் மற்றும் மனைவிக்கு சேர்த்து உணவை கொள்கலனில் அதக்கி வைத்து விட்டு, உணவு பையில் வைத்தவன் மூவருக்கும் தோசை சுட ஆரம்பித்தான்.
இரண்டு தோசையை மனைவிக்கு கொள்கலனில் வைத்து சட்னியை ஊற்றி அதையும் சேர்த்து பையில் வைத்தவன், அடுத்ததாக மகன்கள் இருவருக்கும் தோசையை ஊற்றி தட்டில் வைத்தான்.
இருவரும் தயாராகி வந்தவர்கள் நீள்விருக்கையில் அமர்ந்து அதை எடுத்து வந்து சாப்பிட்டனர்.
விஷ்ணுவும் அவர்கள் முன்னே அமர்ந்து ஷூவிற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான். அவன் அருகே கவிதாவும் அமர்ந்து தனது கைப்பையை சரி செய்தவாறு, "அஜய், ஏதோ கேட்கணும் சொன்னீயே கேளு." என்றாள்.
அஜயோ விஜய்யைப் பார்த்து விட்டு தன் அன்னையிடம், "அம்மா நீங்க அப்பாவுக்கு கிஸ் குடுப்பீங்களாமா?" என்று கேட்டு இருவரையும் அதிர வைத்திருந்தான்.
கவிதா பக்கத்திலிருக்கும் தன் கணவனைப் பார்த்து விட்டு, "இதான் உன் டவுட்டா?" என சந்தேகமாக கேட்டாள்.
"ம்... நீங்க எங்க இரண்டு பேரையும் கிஸ் பண்ணிருக்கீங்க. ஆனா அப்பாவை கிஸ் பண்ணி பார்த்ததே இல்ல. அதான் நீங்க அப்பாவை கிஸ் பண்ணுவீங்களானு எங்களுக்கு சந்தேகம்." என்றான்.
"உனக்குமாடா?" என்று விஜய்யைப் பார்த்து கேட்டவள் தன் கணவனைப் பார்க்க, அவனோ உதடு கடித்து சிரிப்பை அடக்கியபடி தன் வேலையைப் பார்த்தான்.
'கேள்வி என்கிட்டனதும் மனுஷன் சிரிப்ப பாரு...' என உள்ளுக்குள் கடிந்து கொண்டவள்,
"உங்க அப்பாவையும் கிஸ் பண்ணுவேன்டா." என்றாள், அடுத்து அவர்கள் சொல்லப் போவதை அறியாது.
"அப்படியா? அப்ப அப்பா கன்னத்துல கிஸ் பண்ணுங்க." என்றான் பட்டென்று.
ஆனால் கவிதாவோ அவர்களிடம் எதையும் பெரிதாக காட்டிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக, "கிஸ் தானே? பண்ணிட்டா போச்சு..." என்று சட்டென விஷ்ணுவின் கன்னத்தைப் பற்றி முத்தம் வைத்தாள்.
மனைவியிடம் இதை எதிர்பாராதவன், அவளை ஆச்சரியத்தோடு பார்க்க, ‘என்ன?’ என புருவம் உயர்த்திக் கேட்டாள். வெட்கத்தை மறைத்துக் கொண்டவன், சாதாரணமாக மகன்கள் முன் அவர்களது ஷூவை வைத்தான்.
"அம்மா..." என்று அஜய் மீண்டும் அழைக்க,
"இப்போ என்ன, அப்பா கிஸ் பண்ணுவாரானு கேட்க போறியா? நீ சந்தேகம் கேட்டதெல்லாம் போதும், சீக்கிரம் ஷூவை போட்டு வாடா." என்று, அங்கிருந்து அடுத்து என்ன செய்ய சொல்வார்களோ என்ற பீதியில் வேகமாக வாசலுக்கு வந்தவள், தன் வாகனத்தை வெளியே எடுத்து உதைக்க ஆரம்பித்தாள்.
அவசரமாக வெளியே செல்லும் மனைவியின் எண்ணவோட்டத்தை அறிந்து இவன் வாய் விட்டே சிரித்தான்.
மூத்தவன் சைக்கிளில் சென்று விட, இளையவனை மட்டும் கவிதா அழைத்துச் செல்வாள். மகன் கொண்டு வந்த பையை முன்னே வைத்தவள் அவனை பின்னே அமர சொன்னாள்.
விஷ்ணு வாசலில் நின்றவாறே செடிகளுக்கு நீர் பாய்ச்சியபடி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஜய் பின்னே அமராமல் கவிதாவிடம் நின்றபடி, "அம்மா, ஆக்சுவலா எங்க டவுட் என்னன்னா, நீங்க அப்பாவ லிப்ஸ்ல கிஸ் பண்ணுவீங்களான்னு தான். அப்புறம்தான் வேணாம்னு கன்னத்துல மாத்திக்கிட்டோம்." என்று அவன் விளக்கம் கொடுக்க,
'எது லிபிஸ்லயா?' என அதிர்ந்தவள், "வெசம்... வெசம்... பயபுள்ள..." என்று மண்டையில் பட்டும் படாமல் கொட்டிவிட்டு கணவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ வழக்கம் போல உதடு கடித்து சிரிப்பை அடக்க முயன்றான். அவனை முறைத்து விட்டுச் சென்றாள்.
மகனின் கேள்வி மிக எளிமையானது தான். ஆனால் அவர்களுக்குள் பட்டும் படாமல் மறைத்து வைத்திருந்த காதலை அது வெளிக் கொண்டு வந்து விட்டது.
இரு மகன்களைப் பெற்ற பின்னும் மெத்தையில் அவர்களுக்கான நெருக்கத்தில், இடைவெளி சிறிது சிறிதாய் உட்புகுந்து இன்று மகன்களின் வயதைக் காரணம் காட்டி பெரிதான இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர். உடலளவு மட்டுமே, மனதளவில் இல்லை.
நெஞ்சம் முழுக்க காதல் இருப்பினும் அதை அவர்களுக்காக பார்த்து பார்த்து செய்வதில் காட்டிக் கொள்வார்களேத் தவிர, தொட்டு பேசி, கட்டிக் கொண்டு, முத்தமிட்டு பகிர்ந்து கொள்வதில்லை. இதுதான் அவர்களின் வாழ்க்கைமுறை என மாறி விட்டது.
மகனது இன்றைய கேள்வியால் அவர்களுக்குள் பதுங்கி இருந்த காதல் பூதம் இன்று விழித்துக் கொண்டதைப் போல, அதன் காதல் பசிக்கு தனது தீனியாக பழைய காதல் நாட்களை அசைப்போட ஆரம்பித்தது.
பள்ளியில் தனது வேலையில் கவனம் இருந்தாலும், மகனின் கேள்வியும் கணவனின் முகமும் வந்து போகாமல் இல்லை.
இங்கே விஷ்ணுவிற்கு அத்திபூத்தாற் போல எப்போவாவது, கவிதாவிடம் இதுபோல எதிர்பாராத முத்தம் கிடைப்பது உண்டு. ஆனால் கொஞ்ச நாட்களாக அதுவும் கிட்டவில்லை.
உள்ளுக்குள் மனைவியின் அருகாமையையும் அணைப்பையும் முத்தத்தையும் எதிர்பார்த்து ஏங்கி போயிருக்கிறான். அதை தனக்குள் மறைத்து வைத்துக் கொண்டான். ஆனாலும் சில நேரங்களில் எதார்த்தமாக வெளிப்படும் ஏக்கத்தை அவளிடம் காட்ட நினைத்தாலும், குழந்தைகளை காரணம் காட்டிவிட்டு ஒதுங்கி விடுவாள். சில நேரங்களில் மனைவியின் நிலையைக் கண்டு தானாக ஒதுங்கி கொள்வதும் உண்டு. இப்படியே தான் அவர்கள் நாட்களும் சென்று விட்டன.