Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
தேவி வீடு!
"காலையிலிருந்தே தேவி உம்மென்று இருப்பதை வீட்டில் இருக்கும் அவளின் அம்மா வசந்தி,அப்பா கண்ணன், அண்ணன் தேவ்,மூவரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.ஆனால் யாரும் ஒரு வார்த்தை அவளிடம் காரணம் கேட்கவில்லை.
"மூவரின் எண்ணமோ,திருமணம் பற்றி பேசுவதால் தான் இப்படி இருக்கிறாள் என்று.சாப்ட வாம்மா என மகளை வசந்தி கூப்பிட,நிமிர்ந்து பார்த்தவள், அங்கிருந்து எழுந்து போய், கண்ணன் உட்கார்ந்திருக்கும் சேரின் அருகில் வந்து நின்றாள்.
"மகனிடம் பேசிக்கொண்டிருந்த கண்ணன்,தலையை உயர்த்தி மகளை பார்த்தவர்,சொல்லுமா என்க, அப்பா,எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று வழக்கம் போலவே சொல்ல,அது தான் தெரியுமே என்றார்.
"அதற்கு அவளோ,எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருக்குப்பா என பட்டென்று சொல்ல,என்னடி தலையில இடிய போடுற? என்று வசந்தி கேட்க,தங்கையின் அருகில் எழுந்து வந்த தேவ்,என்ன சொன்ன? என கோவமாக கேட்டான்.
"மகனின் கோவ குணம் தெரிந்த கண்ணனோ,கொஞ்சம் இரு பா என்று சொல்லி விட்டு,யார் அவன்? என்க,கதிர் மாமா என்றாள்.அந்த பெயரை கேட்டவருக்கு சந்தோஷம் தாண்டவம் ஆடியது உள்ளுக்குள்.என்ன சொல்ற நீ? என மீண்டும் கேட்ட கண்ணனுக்கு, மாமாவை தான் எனக்கு புடிச்சிருக்கு.
"கல்யாணம் பண்ணுனால் அவர் கூடத்தான் கல்யாணம் பண்ணுவேன். இல்லை என்றால் எனக்கு கடைசி வரைக்கும் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லியவள்,தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
"என்னங்க இது?,கவிதா வீட்ல பொண்ணு இருக்கும் போது, இவ கதிர் மேல ஆசைப்படுவது எப்படி சரி வருமென்று வசந்தி கேட்க,எல்லாம் எனக்கு தெரியும்,உன் வேலையை பார்த்துட்டு போ என்று மனைவியை வழக்கம் போல அதட்டி உள்ளே அனுப்பியவர்,மகனை கண்ணை காட்டி மேலே வரச் சொன்னார்.
"மாடிக்கு வந்தவன்,என்னப்பா விளையாடுறாளா?, இவளோட குணத்துக்கு கதிர் சரி வர மாட்டான்.பொறுமை எந்த கடையில விக்குதுனு கேக்குறவள் உங்க பொண்ணு என்ற மகனுக்கு,நீயே உன் தங்கச்சிய பற்றி இப்படி பேசிறியே பா என்றவர்,செல்லமா வளர்ந்திட்ட புள்ளை,அதனால் தான் இப்படி.
"யாரோ,தெரியாத ஒருத்தனுக்கு கட்டி கொடுத்து என்ன ஆகுமோனு கவலை படுறதை விட,நம்ப கண் முன் வளர்ந்த பையன்,நல்ல குடும்பம்.அவனுக்கு கட்டி கொடுத்தா உன் தங்கச்சி நல்லா இருப்பா பா.
"என்னமோ சொல்றீங்க,இவளை கதிருக்கு கட்டி வைக்க,எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லைப்பா என சொல்லி விட்டு கீழே சென்று விட்டான் தேவ்.கண்ணனோ மனதிற்குள் பல கணக்கு போட்டார்.
"மகள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்குமென்று அவர் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.பொண்ணை குடுத்து சம்பந்தி ஆகிட்டால் நம்ப கை ஓங்கி விடுமென்று சந்தோஷப்பட்டவரின் நினைவுக்குள் கடந்த காலம் வந்து சென்றது.
"தலையசைத்து அந்த நினைவை கலைத்து விட்டு,இனி ஆக வேண்டிய வேலையை உடனே பார்க்கனும், நேரத்தை வளர்க்க கூடாதென்று சொல்லிக்கொண்டே கீழே வந்தவர், வசந்தி,ஏய் வசந்தி...எங்கே போய் தொலைஞ்சா இவ? என்று வீட்டின் உள்ளே மனைவியை தேட,மகள் அறையில் அவர் பேசும் குரல் கேட்டது.
கதவை திறந்து உள்ளே வந்தவரோ, ஏண்டி, தொண்டை கிழிய கூப்புடுறனே மகாராணி காதில விழலையோ?
கதவு சாத்திருக்கும் போது எப்படி காதில் விழுங்க என்கும் வசந்தியின் மேல் கோவப்பார்வை ஒன்றை வீசி விட்டு,போய் சாப்பாடு எடுத்து வை டி.
"அப்புறம்,காலையில் பெருமாள் வீட்டுக்கு தேவி விஷயமாக பேச போகணும் என்றவரின் வார்த்தையை கேட்ட தேவியோ,அப்பாஆஆஆ என்று எழுந்து போய் அவர் தோளில் சாய,உன் சந்தோஷமே எனக்கு பெருசு மா.
"இருவரையும் பார்த்த வசந்தி, இரண்டு பேர் குணமும் அப்படியே ஒன்னா இருக்கே கடவுளே, இந்த சம்பந்தம் கூடி வரக்கூடாது என மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.
மனைவியின் முகத்தை பார்த்த கண்ணன்,என்ன வேடிக்கை பாக்குற, சொன்னது காதுல விழுந்துச்சா?, இல்லையா? என்க, ம்ம் போறேங்க என சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.
"அப்பா எங்க நீங்க இதுக்கு ஒத்துக்க மாட்டீங்களோனு தான் இத்தனை வருஷமும் மனசுக்குள்ளேயே வச்சுட்டு பயந்துட்டே இருந்தேன்பா, மாமாவை நினைச்சிக்கிட்டு,எப்படி பா வேற கல்யாணம் பண்ணிக்க மனசு வரும்?,அதனால தான் கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே இருந்தேன் என்று தேவி சொல்ல,அட கிறுக்கு பயபுள்ளயே, கதிர் வேண்டும்னு முன்னாடியே சொல்லி இருந்தாக்க இவ்வளவு நேரம் பேரப்பிள்ளை தூக்கி இருப்பேன்.
"சரி...அதனால்,இப்பயும் ஒன்னு கெட்டு போகலை,இந்த அப்பா உசுரோட இருக்குற வரைக்கும் உன் ஆசையை நிறைவேற்ற வேண்டியது என்னோட கடமை என்று சொல்லி, மகளின் தலையை வாஞ்சையாக தடவி விட்டவர்,வா,அம்மா சாப்பாடு எடுத்து வச்சிருப்பா, சாப்பிட்டு நிம்மதியா தூங்கு. காலையில் நான் போய் நல்லபடியா பேசிட்டு வரேன் என்று சொல்லி,மகளை கையோடு அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றார்.
"கணவர் பிள்ளைகளுக்கு வசந்தி பரிமாற,எதிரே அமர்ந்திருக்கும் மகனிடம், நாளை காலை கதிர் வீட்டுக்கு போகணும் ரெடியாகுப்பா என்று கண்ணன் சொல்ல,தந்தையை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும் பதில் சொல்லாமல் கீழே குனிந்து கொண்டான்.
கதிர் வீடு..
மறுநாள் நடவுக்கு தேவையான அத்தனை நாற்றுக்கட்டுகளையும் வயலில் இறக்கி வைக்கவே சாயந்திரம் ஆனது.வேலையாட்கள் கலைந்து செல்லவும், தாத்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான் வளவன்.
வந்த இருவரிடமும் நிலவன் பற்றி கதிர் சொல்ல அவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
சம்பளம் வாங்குவதற்காக,வயலில் வேலை செய்தவர்கள் திண்ணையில் வந்து அமர்வது தெரிந்து,அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கதிர் சென்றான்.
நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் என்றார் வள்ளி பாட்டி.ம்ம்,மகாராணி சொல்லிட்டா அதை கேளுடா பேரான்டி என்று பிரகாசம் சொல்லி சிரிக்க,கிழவனுக்கு குசும்போ என்றார் வள்ளி பாட்டி.
இவ இன்னும் கட்டிக்கிட்டு வந்ததில் இருந்து பன்னிரெண்டு வயசு குமரியாவே இருக்காள்,நான் தான் கிழவனாகிட்டேன்னு சொல்லிக்கொண்டே கிணற்றடியை நோக்கி குளிக்க சென்றார்.
வளவனோ,அப்பாயி,உன் வாய் இருக்கே வாய்.... அய்யோஓஓஓஓ,எப்படி தான் என் தாத்தா உங்கூட காலத்தை தள்ளுனாரோ என்று சொல்லி விட்டு படியில் ஏறி தனது ரூமிற்கு சென்றான்.
ஆமாடா....ஊர் உலகத்துல இருக்கவளுங்க எல்லாம் ஊமச்சிங்க, எனக்கு மட்டும் தான் வாய் இருக்கு பாரென்று சொல்லி,தனது வலது பக்க தோள் பட்டையில், தன் தாவங்கட்டையை இடித்துக் காட்டினார்.
"தினமும் இப்படி நடப்பது அந்த வீட்டில் வழக்கம் என்பதால்,என்றைக்கு தான் இதுங்க திருந்த போகுதோ என்றாள் அங்கிருந்த செல்வி.அடியேய் சீமை சிங்காரி என்ன குறுக்கு சாலு ஓட்டுரியாக்கும், பிராக்கு பாக்காம புஸ்தகத்தை படிக்கிற வேலைய பாருடி என்று சொல்லியபடியே வெத்தலை வாயில் போட்டு மெல்ல தொடங்கினார்.
தன் செங்கதிரை உலகிற்கு காட்டிக்கொண்டு கிழக்கே உதயமானான் ஆதவன்.இன்னுமா கிளம்புறீங்க? என பெருமாள் கேட்க, இதோ வந்துட்டோம்ப்பானு சொல்லிக்கொண்டே பூஜைக்கான பொருட்கள் இருக்கும் பிரம்பு கூடையோடு செல்வி வர,அவளுக்கு பின்னாடி,சீதாவும்,ராதாவும் வந்தார்கள்.
"நேரம் போகுதும்மா,எவ்வளவு நேரம் தான் சீவி சிங்காரிப்பிங்களோ என்றவர்,வெளியே சென்று கூண்டு வண்டியின் முன் பக்கம் அமர,மூவரும் வண்டியில் ஏறி உள்ளே அமர்ந்து கொண்டு போகலாம் என்றார்கள்.
"முதல் நடவு நாளில்,முதல் நாற்று முடியை வள்ளி பாட்டியும், அவரது இரண்டு மருமகளுங்களும் ஆதவனை வணங்கி விட்டு நடவை தொடங்கி வைப்பார்கள்.காலம் காலமாக இந்த வழக்கத்தை கைப்பிடித்து வருகின்றனர்.
அரைமணி நேர பயணத்தில்,வயலுக்கு செல்லும் வழியில் வந்து கூண்டு வண்டி நிற்க,மூவரும் இறங்கி அங்கிருந்த கவனையை தாண்டி வரப்பில் நடந்து சென்றனர்.பெருமாளும் மாடுகளை அவிழ்த்து, அங்கிருந்த மரத்தில் கட்டி விட்டு அவரும் நடவு வயலை நோக்கி சென்றார்.
"நடவு வயலின் வரப்பின் மேலே இவர்களுக்காக அனைவரும் காத்திருப்பது தெரிந்து,வேகமாக எட்டி நடையை போடு செல்வி என்றார் ராதா. இரும்மா,சறுக்கி விழுந்தா என் புது துணிலாம் சேறாகிடும் என்றவள், கொஞ்சம் வேகமாக நடக்க,மூவரும் சிறிது நிமிடத்தில் அவர்களிடம் வந்து சேர்ந்தனர்.
"பேத்தியிடமிருந்து கூடையை வாங்கிய பாட்டியோ,வழக்கமாக படைக்கும் வரப்பின் மேலே,வாழை இலையை விரித்து வைத்து,அதன் மேல் வீட்டில் செய்து எடுத்து வந்த சக்கரை பொங்கல், தேங்கா வாழைப்பழத்தையும் வைத்து விட்டு தாம்பூலத்தட்டில் சூடத்தை பிரித்து வைத்து தீக்குச்சியால் நெருப்பை மூட்டி சூடத்தில் காட்ட,அதும் பற்றிக்கொண்டு எரிய தொடங்க, தாம்பூலத்தட்டை உயர்த்தி சூரியனுக்கு காட்டி விட்டு,பின் வயலுக்கும் காட்டி விட்டு,மற்றவர்களுக்கு காட்ட அவர்கள் ஆரத்தி எடுத்து கொண்டனர்.
"நடவு வயலில் இறங்கியவர் கையில் நாற்று முடியை எடுத்து, இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி,சூரிய பகவானே எல்லாரையும் காப்பாத்துப்பானு சொல்லி விட்டு,நடவை தொடங்கி வைக்க,அவர் கூடவே சீதாவும் ராதாவும் வயலில் இறங்கியவர்களேம் ,சூரியனிடம் வேண்டி விட்டு,மாமியாரோடு சேர்ந்து நட ஆரம்பித்தனர்,மூவரும் ஆளுக்கு ஒரு முடியை நட்டு விட்டு கரையில் ஏற, வேலையாட்களும் வயலில் இறங்கி அவர்கள் வேலையை தொடர்ந்தார்கள்.
"பின்னர்,வயலில் இறங்கிய கதிரவன்,முத்து,பெருமாள் மூவரும் நடவாளுக்கு தேவையான நாற்றை எடுத்து போட்டுக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு வளவனோடு பெண்கள் மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.பாட்டியோ நடவு முடிந்த பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.
"வேலையாட்களில் ஒருவர் வள்ளியத்தை ஒரு பாட்டு பாடுங்கள் என்று சொல்ல,பாடுற காலம் போய்விட்டு டி ஆத்தா என்றார்.அட பாடுங்க சும்மா,களைப்பு தெரியாம இருக்குறதுக்கு தானே என்றார் இன்னொரு பெண்மணி.
"இப்படி சும்மா உக்காந்துகிட்டு பாட மனசு வரல டி ஆத்தா என்றவர்,வரப்பிலிருந்து சேற்றில் இறங்கி ஆட்களோடு நாற்று நட்டுக்கொண்டே கிராமத்து பாட்டை பாடத் தொடங்கினார்.பாட்டியின் பாடலை கேட்டுக்கொண்டே உற்சாகமாக வேலை செய்தனர் அவர்களும்.
"வீட்டிற்கு வந்த பெண்களோ வேலை ஆட்களுக்கும் சேர்த்து உணவை சமைக்க தொடங்கினார்கள். எப்பொழுதும் முதல் நாள் நடவு ஆரம்பித்தால்,அத்தனை பேருக்கும் அவர்கள் வீட்டில் தான் மதிய சாப்பாடு. செல்வியும் கூட மாட இருவருக்கும் உதவி செய்து கொண்டிருந்தாள்.
"அப்பொழுது மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக் கொண்டே கண்ணன் உள்ளே வந்தார் மனைவியோடு. அவரின் குரல் கேட்டு,வெளியே வந்தவர்கள் இருவரையும் பார்த்து வாங்கண்ணா,வாங்க அண்ணி என்றனர் சீதாவும் ராதாவும்.
வரோம்மா என்றபடி அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டு,எங்கம்மா மாப்பிள்ளை இல்லையா? என்று கண்ணன் கேட்க, இன்னைக்குதான் நடவு ஆரம்பிச்சிருக்கு வயல்ல என்று ராதா சொல்ல,ஓ அப்படியா என்றவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார், அப்போ பெருமாள் வீட்டுக்கு வர. சாயந்திரம் ஆயிடுமே என்று.
"மாப்பிள்ளை கிட்ட விஷயம் ஒன்று பேசிட்டு போலாம்னு தான் ரெண்டு பேரும் வந்தோம் மா என்றவர் சிறிது நேரம் அவர்களோடு பேசியிருந்து விட்டு ஏமாற்றத்தை வெளியே காட்டிக்காமல் வரோம் மா என்று அங்கிருந்து தன் மனைவியோடு வெளியே சென்றார்.
"காலையிலிருந்தே தேவி உம்மென்று இருப்பதை வீட்டில் இருக்கும் அவளின் அம்மா வசந்தி,அப்பா கண்ணன், அண்ணன் தேவ்,மூவரும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.ஆனால் யாரும் ஒரு வார்த்தை அவளிடம் காரணம் கேட்கவில்லை.
"மூவரின் எண்ணமோ,திருமணம் பற்றி பேசுவதால் தான் இப்படி இருக்கிறாள் என்று.சாப்ட வாம்மா என மகளை வசந்தி கூப்பிட,நிமிர்ந்து பார்த்தவள், அங்கிருந்து எழுந்து போய், கண்ணன் உட்கார்ந்திருக்கும் சேரின் அருகில் வந்து நின்றாள்.
"மகனிடம் பேசிக்கொண்டிருந்த கண்ணன்,தலையை உயர்த்தி மகளை பார்த்தவர்,சொல்லுமா என்க, அப்பா,எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று வழக்கம் போலவே சொல்ல,அது தான் தெரியுமே என்றார்.
"அதற்கு அவளோ,எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருக்குப்பா என பட்டென்று சொல்ல,என்னடி தலையில இடிய போடுற? என்று வசந்தி கேட்க,தங்கையின் அருகில் எழுந்து வந்த தேவ்,என்ன சொன்ன? என கோவமாக கேட்டான்.
"மகனின் கோவ குணம் தெரிந்த கண்ணனோ,கொஞ்சம் இரு பா என்று சொல்லி விட்டு,யார் அவன்? என்க,கதிர் மாமா என்றாள்.அந்த பெயரை கேட்டவருக்கு சந்தோஷம் தாண்டவம் ஆடியது உள்ளுக்குள்.என்ன சொல்ற நீ? என மீண்டும் கேட்ட கண்ணனுக்கு, மாமாவை தான் எனக்கு புடிச்சிருக்கு.
"கல்யாணம் பண்ணுனால் அவர் கூடத்தான் கல்யாணம் பண்ணுவேன். இல்லை என்றால் எனக்கு கடைசி வரைக்கும் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லியவள்,தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
"என்னங்க இது?,கவிதா வீட்ல பொண்ணு இருக்கும் போது, இவ கதிர் மேல ஆசைப்படுவது எப்படி சரி வருமென்று வசந்தி கேட்க,எல்லாம் எனக்கு தெரியும்,உன் வேலையை பார்த்துட்டு போ என்று மனைவியை வழக்கம் போல அதட்டி உள்ளே அனுப்பியவர்,மகனை கண்ணை காட்டி மேலே வரச் சொன்னார்.
"மாடிக்கு வந்தவன்,என்னப்பா விளையாடுறாளா?, இவளோட குணத்துக்கு கதிர் சரி வர மாட்டான்.பொறுமை எந்த கடையில விக்குதுனு கேக்குறவள் உங்க பொண்ணு என்ற மகனுக்கு,நீயே உன் தங்கச்சிய பற்றி இப்படி பேசிறியே பா என்றவர்,செல்லமா வளர்ந்திட்ட புள்ளை,அதனால் தான் இப்படி.
"யாரோ,தெரியாத ஒருத்தனுக்கு கட்டி கொடுத்து என்ன ஆகுமோனு கவலை படுறதை விட,நம்ப கண் முன் வளர்ந்த பையன்,நல்ல குடும்பம்.அவனுக்கு கட்டி கொடுத்தா உன் தங்கச்சி நல்லா இருப்பா பா.
"என்னமோ சொல்றீங்க,இவளை கதிருக்கு கட்டி வைக்க,எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லைப்பா என சொல்லி விட்டு கீழே சென்று விட்டான் தேவ்.கண்ணனோ மனதிற்குள் பல கணக்கு போட்டார்.
"மகள் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்குமென்று அவர் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.பொண்ணை குடுத்து சம்பந்தி ஆகிட்டால் நம்ப கை ஓங்கி விடுமென்று சந்தோஷப்பட்டவரின் நினைவுக்குள் கடந்த காலம் வந்து சென்றது.
"தலையசைத்து அந்த நினைவை கலைத்து விட்டு,இனி ஆக வேண்டிய வேலையை உடனே பார்க்கனும், நேரத்தை வளர்க்க கூடாதென்று சொல்லிக்கொண்டே கீழே வந்தவர், வசந்தி,ஏய் வசந்தி...எங்கே போய் தொலைஞ்சா இவ? என்று வீட்டின் உள்ளே மனைவியை தேட,மகள் அறையில் அவர் பேசும் குரல் கேட்டது.
கதவை திறந்து உள்ளே வந்தவரோ, ஏண்டி, தொண்டை கிழிய கூப்புடுறனே மகாராணி காதில விழலையோ?
கதவு சாத்திருக்கும் போது எப்படி காதில் விழுங்க என்கும் வசந்தியின் மேல் கோவப்பார்வை ஒன்றை வீசி விட்டு,போய் சாப்பாடு எடுத்து வை டி.
"அப்புறம்,காலையில் பெருமாள் வீட்டுக்கு தேவி விஷயமாக பேச போகணும் என்றவரின் வார்த்தையை கேட்ட தேவியோ,அப்பாஆஆஆ என்று எழுந்து போய் அவர் தோளில் சாய,உன் சந்தோஷமே எனக்கு பெருசு மா.
"இருவரையும் பார்த்த வசந்தி, இரண்டு பேர் குணமும் அப்படியே ஒன்னா இருக்கே கடவுளே, இந்த சம்பந்தம் கூடி வரக்கூடாது என மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.
மனைவியின் முகத்தை பார்த்த கண்ணன்,என்ன வேடிக்கை பாக்குற, சொன்னது காதுல விழுந்துச்சா?, இல்லையா? என்க, ம்ம் போறேங்க என சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.
"அப்பா எங்க நீங்க இதுக்கு ஒத்துக்க மாட்டீங்களோனு தான் இத்தனை வருஷமும் மனசுக்குள்ளேயே வச்சுட்டு பயந்துட்டே இருந்தேன்பா, மாமாவை நினைச்சிக்கிட்டு,எப்படி பா வேற கல்யாணம் பண்ணிக்க மனசு வரும்?,அதனால தான் கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டே இருந்தேன் என்று தேவி சொல்ல,அட கிறுக்கு பயபுள்ளயே, கதிர் வேண்டும்னு முன்னாடியே சொல்லி இருந்தாக்க இவ்வளவு நேரம் பேரப்பிள்ளை தூக்கி இருப்பேன்.
"சரி...அதனால்,இப்பயும் ஒன்னு கெட்டு போகலை,இந்த அப்பா உசுரோட இருக்குற வரைக்கும் உன் ஆசையை நிறைவேற்ற வேண்டியது என்னோட கடமை என்று சொல்லி, மகளின் தலையை வாஞ்சையாக தடவி விட்டவர்,வா,அம்மா சாப்பாடு எடுத்து வச்சிருப்பா, சாப்பிட்டு நிம்மதியா தூங்கு. காலையில் நான் போய் நல்லபடியா பேசிட்டு வரேன் என்று சொல்லி,மகளை கையோடு அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றார்.
"கணவர் பிள்ளைகளுக்கு வசந்தி பரிமாற,எதிரே அமர்ந்திருக்கும் மகனிடம், நாளை காலை கதிர் வீட்டுக்கு போகணும் ரெடியாகுப்பா என்று கண்ணன் சொல்ல,தந்தையை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும் பதில் சொல்லாமல் கீழே குனிந்து கொண்டான்.
கதிர் வீடு..
மறுநாள் நடவுக்கு தேவையான அத்தனை நாற்றுக்கட்டுகளையும் வயலில் இறக்கி வைக்கவே சாயந்திரம் ஆனது.வேலையாட்கள் கலைந்து செல்லவும், தாத்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான் வளவன்.
வந்த இருவரிடமும் நிலவன் பற்றி கதிர் சொல்ல அவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
சம்பளம் வாங்குவதற்காக,வயலில் வேலை செய்தவர்கள் திண்ணையில் வந்து அமர்வது தெரிந்து,அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கதிர் சென்றான்.
நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் என்றார் வள்ளி பாட்டி.ம்ம்,மகாராணி சொல்லிட்டா அதை கேளுடா பேரான்டி என்று பிரகாசம் சொல்லி சிரிக்க,கிழவனுக்கு குசும்போ என்றார் வள்ளி பாட்டி.
இவ இன்னும் கட்டிக்கிட்டு வந்ததில் இருந்து பன்னிரெண்டு வயசு குமரியாவே இருக்காள்,நான் தான் கிழவனாகிட்டேன்னு சொல்லிக்கொண்டே கிணற்றடியை நோக்கி குளிக்க சென்றார்.
வளவனோ,அப்பாயி,உன் வாய் இருக்கே வாய்.... அய்யோஓஓஓஓ,எப்படி தான் என் தாத்தா உங்கூட காலத்தை தள்ளுனாரோ என்று சொல்லி விட்டு படியில் ஏறி தனது ரூமிற்கு சென்றான்.
ஆமாடா....ஊர் உலகத்துல இருக்கவளுங்க எல்லாம் ஊமச்சிங்க, எனக்கு மட்டும் தான் வாய் இருக்கு பாரென்று சொல்லி,தனது வலது பக்க தோள் பட்டையில், தன் தாவங்கட்டையை இடித்துக் காட்டினார்.
"தினமும் இப்படி நடப்பது அந்த வீட்டில் வழக்கம் என்பதால்,என்றைக்கு தான் இதுங்க திருந்த போகுதோ என்றாள் அங்கிருந்த செல்வி.அடியேய் சீமை சிங்காரி என்ன குறுக்கு சாலு ஓட்டுரியாக்கும், பிராக்கு பாக்காம புஸ்தகத்தை படிக்கிற வேலைய பாருடி என்று சொல்லியபடியே வெத்தலை வாயில் போட்டு மெல்ல தொடங்கினார்.
தன் செங்கதிரை உலகிற்கு காட்டிக்கொண்டு கிழக்கே உதயமானான் ஆதவன்.இன்னுமா கிளம்புறீங்க? என பெருமாள் கேட்க, இதோ வந்துட்டோம்ப்பானு சொல்லிக்கொண்டே பூஜைக்கான பொருட்கள் இருக்கும் பிரம்பு கூடையோடு செல்வி வர,அவளுக்கு பின்னாடி,சீதாவும்,ராதாவும் வந்தார்கள்.
"நேரம் போகுதும்மா,எவ்வளவு நேரம் தான் சீவி சிங்காரிப்பிங்களோ என்றவர்,வெளியே சென்று கூண்டு வண்டியின் முன் பக்கம் அமர,மூவரும் வண்டியில் ஏறி உள்ளே அமர்ந்து கொண்டு போகலாம் என்றார்கள்.
"முதல் நடவு நாளில்,முதல் நாற்று முடியை வள்ளி பாட்டியும், அவரது இரண்டு மருமகளுங்களும் ஆதவனை வணங்கி விட்டு நடவை தொடங்கி வைப்பார்கள்.காலம் காலமாக இந்த வழக்கத்தை கைப்பிடித்து வருகின்றனர்.
அரைமணி நேர பயணத்தில்,வயலுக்கு செல்லும் வழியில் வந்து கூண்டு வண்டி நிற்க,மூவரும் இறங்கி அங்கிருந்த கவனையை தாண்டி வரப்பில் நடந்து சென்றனர்.பெருமாளும் மாடுகளை அவிழ்த்து, அங்கிருந்த மரத்தில் கட்டி விட்டு அவரும் நடவு வயலை நோக்கி சென்றார்.
"நடவு வயலின் வரப்பின் மேலே இவர்களுக்காக அனைவரும் காத்திருப்பது தெரிந்து,வேகமாக எட்டி நடையை போடு செல்வி என்றார் ராதா. இரும்மா,சறுக்கி விழுந்தா என் புது துணிலாம் சேறாகிடும் என்றவள், கொஞ்சம் வேகமாக நடக்க,மூவரும் சிறிது நிமிடத்தில் அவர்களிடம் வந்து சேர்ந்தனர்.
"பேத்தியிடமிருந்து கூடையை வாங்கிய பாட்டியோ,வழக்கமாக படைக்கும் வரப்பின் மேலே,வாழை இலையை விரித்து வைத்து,அதன் மேல் வீட்டில் செய்து எடுத்து வந்த சக்கரை பொங்கல், தேங்கா வாழைப்பழத்தையும் வைத்து விட்டு தாம்பூலத்தட்டில் சூடத்தை பிரித்து வைத்து தீக்குச்சியால் நெருப்பை மூட்டி சூடத்தில் காட்ட,அதும் பற்றிக்கொண்டு எரிய தொடங்க, தாம்பூலத்தட்டை உயர்த்தி சூரியனுக்கு காட்டி விட்டு,பின் வயலுக்கும் காட்டி விட்டு,மற்றவர்களுக்கு காட்ட அவர்கள் ஆரத்தி எடுத்து கொண்டனர்.
"நடவு வயலில் இறங்கியவர் கையில் நாற்று முடியை எடுத்து, இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி,சூரிய பகவானே எல்லாரையும் காப்பாத்துப்பானு சொல்லி விட்டு,நடவை தொடங்கி வைக்க,அவர் கூடவே சீதாவும் ராதாவும் வயலில் இறங்கியவர்களேம் ,சூரியனிடம் வேண்டி விட்டு,மாமியாரோடு சேர்ந்து நட ஆரம்பித்தனர்,மூவரும் ஆளுக்கு ஒரு முடியை நட்டு விட்டு கரையில் ஏற, வேலையாட்களும் வயலில் இறங்கி அவர்கள் வேலையை தொடர்ந்தார்கள்.
"பின்னர்,வயலில் இறங்கிய கதிரவன்,முத்து,பெருமாள் மூவரும் நடவாளுக்கு தேவையான நாற்றை எடுத்து போட்டுக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு வளவனோடு பெண்கள் மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.பாட்டியோ நடவு முடிந்த பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.
"வேலையாட்களில் ஒருவர் வள்ளியத்தை ஒரு பாட்டு பாடுங்கள் என்று சொல்ல,பாடுற காலம் போய்விட்டு டி ஆத்தா என்றார்.அட பாடுங்க சும்மா,களைப்பு தெரியாம இருக்குறதுக்கு தானே என்றார் இன்னொரு பெண்மணி.
"இப்படி சும்மா உக்காந்துகிட்டு பாட மனசு வரல டி ஆத்தா என்றவர்,வரப்பிலிருந்து சேற்றில் இறங்கி ஆட்களோடு நாற்று நட்டுக்கொண்டே கிராமத்து பாட்டை பாடத் தொடங்கினார்.பாட்டியின் பாடலை கேட்டுக்கொண்டே உற்சாகமாக வேலை செய்தனர் அவர்களும்.
"வீட்டிற்கு வந்த பெண்களோ வேலை ஆட்களுக்கும் சேர்த்து உணவை சமைக்க தொடங்கினார்கள். எப்பொழுதும் முதல் நாள் நடவு ஆரம்பித்தால்,அத்தனை பேருக்கும் அவர்கள் வீட்டில் தான் மதிய சாப்பாடு. செல்வியும் கூட மாட இருவருக்கும் உதவி செய்து கொண்டிருந்தாள்.
"அப்பொழுது மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக் கொண்டே கண்ணன் உள்ளே வந்தார் மனைவியோடு. அவரின் குரல் கேட்டு,வெளியே வந்தவர்கள் இருவரையும் பார்த்து வாங்கண்ணா,வாங்க அண்ணி என்றனர் சீதாவும் ராதாவும்.
வரோம்மா என்றபடி அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டு,எங்கம்மா மாப்பிள்ளை இல்லையா? என்று கண்ணன் கேட்க, இன்னைக்குதான் நடவு ஆரம்பிச்சிருக்கு வயல்ல என்று ராதா சொல்ல,ஓ அப்படியா என்றவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார், அப்போ பெருமாள் வீட்டுக்கு வர. சாயந்திரம் ஆயிடுமே என்று.
"மாப்பிள்ளை கிட்ட விஷயம் ஒன்று பேசிட்டு போலாம்னு தான் ரெண்டு பேரும் வந்தோம் மா என்றவர் சிறிது நேரம் அவர்களோடு பேசியிருந்து விட்டு ஏமாற்றத்தை வெளியே காட்டிக்காமல் வரோம் மா என்று அங்கிருந்து தன் மனைவியோடு வெளியே சென்றார்.