• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

பதறி எழுந்தவளை பார்த்த மாறன் ஹேய் ரிலாக்ஸ்,ரிலாக்ஸ்.நான் தான்.எதுக்கு இவ்வளவு பதற்றம்?.

இல்ல படிக்க ஆரம்பிச்சதும் புக்கில் ஆழ்ந்து போயிட்டேன். திடீர்னு குரல் கேட்டதும் அதிர்ந்துட்டேன் என்றவள், கீழே விழுந்த புக்கை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்தவள், டேபிளின் மேலஇருந்த ஃபைலையும், ஹேண்ட் பேகையும் எடுத்துக்கொண்டு, போகலாம் என்றாள்.

ஓகே என்றவன் முன்னாடி நடக்க, வெளியே வந்தவள் அங்கும் இங்கும் சுற்றி பார்க்க யாருமே அங்கு இருக்கிற சுவடில்லை.அப்பொழுது தான் ரொம்ப நேரம் ஆகி விட்டது என்பது புரிந்தது.

பின்னர் காரில் ஏறி இருவரும் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சிறிது நிமிடம் வரையில் இருவரும் மௌனமாகவே காரில் சென்று கொண்டிருக்கும் போது, உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் என்றாள்?

ம்ம் கேளுங்க தாமரைனு மாறன் சொல்ல, நீங்க தான் எம். டி. என்பதை ஏன் சொல்லவில்லை?.

எதற்கு சொல்லனும்? என்று மாறன் கேட்க,வாஸ்தவம் தான் என்றாள்.

ஹம் என்றவன்... அடுத்து எதாவது கேள்வி இருக்கா? என்க, நத்திங் என்றவள் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

முன்னாடி இருக்கும் கண்ணாடி வழியாக பின்னாடி இருப்பவளை, கார் ஓட்டிக்கொண்டே பார்த்தவனுக்கு அந்த பயணம் புதுவிதமான அனுபவமாக இருந்தது.

எத்தனையோ வருடங்களாக இதே வழியில் தனியாக காரை ஓட்டிக்கொண்டு,இரவு நேரத்தில் பயணம் செய்திருக்கின்றான்.ஆனால் எந்த பெண்ணையும் அவனோடு இதுவரை கூப்பிட்டு போனதில்லை.ஏன் தனது தங்கையான லீனாவையுமே அழைத்து சென்றதில்லை.

தனது கம்பெனி இருக்கும் ஏரியாவில் இருந்து,வீட்டிற்கு செல்லும் வழிகளின் இரண்டு புறமும் காடுகளும்,மலைகளும் சூழ்ந்திருப்பதே அதற்கு காரணம்.

எந்த நேரத்தில் என்ன அசம்பாவிதம் நடக்குமென்று யாருக்கும் தெரியாது.தான் ஆண்மகனாக இருப்பதால்,ஏதோ ஒரு விதத்தில் போராடி தப்பித்துக்கொள்ளலாம்.

அதே பெண் பிள்ளைகளென்றால் நாட்டில் நடப்பதை வைத்து எதையும் சொல்ல வழியில்லை என்பதால், முடிந்த அளவிற்கு, லீனாவை கம்பெனிக்கு வர அனுமதிக்க மாட்டான்.

அப்படி வந்தாலும் மாலை ஆரம்பிப்பதற்குள்ளே வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டே மற்ற வேலையை பார்ப்பது.இன்று யாரென்று தெரியாத ஒரு பெண்ணை, தங்கை சொன்னாள் என்ற ஒரு வார்த்தைக்கா, அவளை வீட்டில் தங்க வைத்திருக்கின்றான்.

இப்படி பலவிதமான யோசனைகளோடு வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்தியவன், அவள் இறங்குவாளென்று பார்க்க, அதற்கான எந்த அறிகுறியும் இருப்பது போல தெரியவில்லை.

காரை ஆப் பண்ணி விட்டு பின்னாடி திரும்பி பார்க்க, தாமாரை நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.

இவ என்ன இப்படி தூங்குறாளென மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், தாமரை, தாமரை என்று கூப்பிட அவளோ கண்விழிக்கவில்லை.

ம்கும்...முழிச்சிட்டு இருக்கும் போது கூப்பிட்டாலே காது கேட்காத ரகம், இப்போ தூங்கிட்டு இருக்காள். நல்லா விழுமென்று முணுமுணுத்தவன், கார் ஷெட்டின் கதவை திறந்து விட வெளியே வந்த பூரணியை பார்த்தவன், என்னை காக்க வந்த மாதாஜியே நீ வாழ்க.

மகனின் வார்த்தைகளை கேட்டு என்னடா படுவா கிண்டலா என்க,அய்யோ அம்மா சீக்கிரமா இங்கே வா .

இதோ கண்ணா என்றவறே கார் ஷெட்டின் கதவை திறந்து விட்டவர் மகனின் அருகில் வந்து சொல்லு கண்ணா,என்ன விஷயம்?.

பின் சீட்டை போய் பாரும்மா என்றான்.

என்ன கண்ணா விளையாட்டு?, தாமரை எங்கேப்பா?. ஆளை காணும், நீ மட்டும் வந்திருக்கனு யோசனையாய் கேட்டுக்கொண்டே, மாறன் சொல்லியது போல, காரின் பின் கதவை திறந்து பார்க்க, உள்ளே தாமரை தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.

பாவம் புள்ளை... ரொம்ப சோர்வாகிட்டாள் போல,அதான் தூங்கிட்டாளென்றவர்,தாமரை தாமரையென்று அவளின் தோளை தட்டி எழுப்பவும் பட்டென்று கண் விழித்தாள்..

வாம்மா வீடு வந்து விட்டதென்று பூரணி சொல்ல,சும்மா கண்ணை மூடினேன் மா அப்படியே தூங்கிட்டேன் போலனு காரில் இருந்து கீழே இறங்கியவள்,அவரோடு வீட்டிற்குள் சென்றாள்.

இருவரும் பேசிக்கொண்டே போவதை பார்த்தவன், இவளுக்கு நம்ப கிட்ட தான் பேச்சு வராது போலனு காரை ஷெட்டுக்குள் நிறுத்தி விட்டு, கதவையெல்லாம் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.

அம்மா மேல என்னோட ரூமிற்குள் போய்க்கிறேன்னு பூரணியிடம் சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.

நீ மட்டும் மேலே தனியா ஏன்மா தங்கனும், அதான் லீனாவோட ரூம் இருக்கிறதே என்கவும்,இல்லைங்கம்மா, வொர்க் விஷயமா தூங்க நள்ளிரவுக்கு மேல ஆகும்.அதனால் நான் மேலேயே இருக்கேன்னு ஒருவழியாக பூரணியை சம்மதிக்க வைத்தாள்.

பின்னர் தனது டிராலி பேகை எடுத்தவள், ரூம் சாவிமா?,அப்போ சாப்பாடு இங்கே தான் அதுக்கு சம்மதம் சொல்லென்றார்.அவர் டீலிங்கில் சிரித்தவள், நிச்சயமா வீட்டில் இருக்கும் போதெல்லாம் நானே உங்களுக்கு சமைத்து தரேன்.மற்ற நேரமெல்லாம் சேர்ந்தே சமைக்கலாம்மா என்றாள்.

தாமரையின் சொல்லை கேட்டவர், போய்ட்டு ஃப்ரஷ் ஆகி சீக்கிரமா வா, டிபன் எடுத்து வைக்குறேன்.

சரிங்கம்மானு படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு வந்தவள், தன்னிடமிருந்த சாவியைக்கொண்டு கதவை திறந்து உள்ளே வந்தவளை, எங்கும் இருந்த இருட்டே வரவேற்றது.

பின்னர் தனது ஃபோனில் இருந்த லைட்டை ஆன் பண்ணியவள், சுவிட்ச் பாக்ஸை தேடி உள்ளே இருக்கும் லைட்டை போட்டு அறையை பார்க்க, திகைத்து நின்றாள்.

கலை நயத்தோடு அவ்வளவு அழகாக இருந்தது. பின்னர் அங்கிருந்த கபோர்டில் தனது பேகை வைத்து விட்டு, முன் கதவை தாழிட்டவள்,ரெஸ்ட் ரூம் உள்ளே சென்று, ஃப்ரஷ் ஆகி வேறு உடையை மாற்றிக்கொண்டு, ஃபோனை சார்ஜிங்கில் போட்டு விட்டு கீழே வந்தாள்.

தாமரை உள்ளே வரும் போது தான் மாறனும் வெளியே வந்தான். இருவரும் வந்து உட்கார பூரணியும் பரிமாறினார்.

நீங்க சாப்டீங்களா என்க,ஆச்சு தாமரை நீ சாப்பிடுமா.

பின்னர் சாப்பிட்டு முடித்ததும் அந்த பாத்திரங்களையெல்லாம் சிங்கில் வாஷ் பண்ணி வைத்தவள், காலையில் என்ன சமைக்கணும்னு பூரணியிடம் கேட்கும் போது, பீட்ரூட் சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் வந்தான் மாறன்.

அவன் சொன்னதை கேட்டவள்,ஓகே சார் செய்து விட்டால் போச்சு என்றவள்,ஏங்கமா இதை அங்கிள் சாப்பிடுவாங்களா?.

அதெல்லாம் எது செய்து கொடுத்தாலும் அவர் சாப்பிடுவார் என்கவும்,இருவரிடம் குட் நைட் சொல்லிக்கொண்டு மேலே இருக்கும் தனது அறைக்கு வந்தவள், லேப்டாப்பை ஆன் பண்ணி வி.விக்கு மெயில் பண்ணினாள்.

நல்லபடியாக சதாராவில் இருக்கும் லீனா வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், மாறனின் கம்பெனியில் டிசைனிங் செக்க்ஷனில் வேலை கிடைத்ததையும் அனுப்பினாள்.

சிறிது நிமிடங்கள் சென்று கங்கிராஜுலேசன் ஏஞ்ஜல்னு வி.வி.யிடம் இருந்து மெயில் வந்தது .

எனக்கு ஒரு டவுட் என்று தாமரை பதில் மெயில் அனுப்ப, என்ன சந்தேகம் ஏஞ்சல்?.உனக்கு என்ன தெரியனும் கேளு?.

ஓகே என்றவள்,மாறனின் கம்பெனியில் இதே போல் மனிதர்கள் உருவத்தை தானே வரைய சொல்லி கேட்கிறார்கள். இது நம்ம ப்ராஜெக்ட் விஷயத்தில் எதாவது இடைஞ்சலாக வருமானு கேட்க, அதற்கு ஒரு ஸ்மைலி இமோஜியை அனுப்பி இருந்தார்.

இதுக்கு என்ன அர்த்தமென்று? தாமரை கேட்க, எம் டி டெக்ஸ்டைல்ஸில் நார்த் இந்தியன் பெண்கள் கட்டும் புடவை தான் தயாரிக்கிறார்கள்.அதும் எம்பிராய்டரி மற்றும் ஸ்டோன் வைத்த மாடல்களில் மட்டுமே.

ஆனால்,நாம ரெடி பண்ண போற ப்ராஜெக்ட் பட்டுப்புடவையில், தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கோயில் சிற்பங்கள்.அதனால் கவலைப்படாமல் கிடைத்த வேலையில் முழு ஈடுபாட்டை காட்டு.நேரம் கிடைக்கும் போது நான் சொன்ன ப்ராஜெக்டை கம்ப்ளீட் பண்ணு ஏஞ்சல்.
அப்புறம் ஒரு விஷயம், வேதா கால் பண்ணி உன்னை பத்தி விசாரித்தார். எனக்கு தெரியாதென்று சொல்லிவிட்டேன்.

உடம்பை பார்த்துக்கொள். பாய் ஏஞ்சலென்று தாமரைக்கு மெயில் அனுப்பிவிட்டு, ஆப் லைனுக்கு சென்று விட்டார் வி. வி.

மெயிலை படித்தவளுக்கு வேதா எப்படி இருக்கின்றாரோ என்று நினைக்க கண்கள் கலங்கியது.

சீமக்கரை...

பெருமாள் பண்ணியதை பற்றி தான் நீ பேசுறியா வளவானு திரும்பவும் கேட்க, ஆமாம் மாமா என்றவன், போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து பார்க்கலாமா என்றான்.

அதைக்கேட்ட கலா அப்பாயி, அய்யோஓஓஓ , வேண்டாம் அப்பு. போலிஸுகாரனுங்க வரைக்கும் எம் பேத்தி காணாம போனது தெரிந்தால், ஊர்ல இருக்கவளுங்க நாக்கு மேல பல்லை போட்டு பேசிடுவாங்கப்பு.
கோவத்தில போனவள் திரும்பி வருவாள். அதுவரை வெளியே தெரியாமல் தேடுங்க.

அம்மா சொல்றதும் சரி தான் வளவா என்கவும்,சரி மாமா தெரிஞ்சவங்க எல்லார்கிட்டையும் விசாரிச்சிடலாம்.நான் வீட்டுக்கு கிளம்புறேன்.தாமரை பற்றி எதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்க என்றபடி அங்கிருந்து சென்றான்.

அத்தை பசிக்கிதுனு சொன்னேனென்று வேலு சொல்ல, இதோ சாமி என்றவர் சமையல் கட்டுக்குள் சென்று விட்டார்.

சீதாவின் கேள்வியில் மூவரும் தலை குனிந்து நிற்பதை பார்த்த பிரகாசம் தாத்தா, உப்பை திண்ணால் தண்ணீர் குடிச்சி தான் ஆகனும்.இப்போதைக்கு ஏதோ நம்ப குடும்பத்துக்கு கஷ்ட காலம்னு நினைச்சிப்போம்.நடக்குறதை எல்லாம் அந்த அய்யனார் பாத்துட்டு தான் இருக்கார். இந்த விஷயத்தை இதோட விடுங்களென்றார்.

அப்பொழுது வீட்டிற்கு வந்த வளவன் வேதா வந்திருக்கும் விஷயத்தை சொல்லியதை கேட்டு, அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

என்னப்பா சொல்ற?,வேதா வந்திருக்காளானு வள்ளி அப்பாயி கேட்க,ஆமா அப்பாயி. இப்பதான் பார்த்து பேசிட்டு வரேன்.தாமரையை காணவில்லைனு ஃபோன் பண்ணி சொல்லிருக்காங்க போல..

அடேய் அது என்ன யாரோ போல அவங்க? இவங்கனு?, ஏன் வேதாவை அம்மானு சொல்ல முடியலையானு பிரகாசம் தாத்தா கோவமாக கேட்க,வளவனோ தனது மனதுக்குள் குதூகலித்தான்.

நான் போய் வேதாவை பார்த்துட்டு வரேனென்று சொல்லிக்கொண்டு வள்ளி அப்பாயி அங்கிருந்து கிளம்ப, அம்மா நானும் வரேனென்றார் பார்வதி சொல்ல,சரி வாம்மா என்கவும்,அத்தை கொஞ்ச நேரம் இருங்களேன், சமையலை முடிச்சிட்டு நாங்களும் வரோமென்று சமையலறை வாசலில் நின்று சீதா சொல்ல, ம்ம் முடிச்சிட்டு வாங்கம்மா என்றார்.

முத்துவிற்கோ, வேதாவை பார்க்க வேண்டுமென்று உள்ளம் துடித்தது.

என்னை மறந்திருப்பாளா?, இல்லை ஞாபகம் வச்சிருப்பாளா?, கழுத்துல இன்னும் நான் கட்டிய தாலிய போட்டுக்கிட்டு, என்னோட பொண்டாட்டியா தான் இருக்காளானு பல கேள்விகள் முத்துவின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ஊருக்குள் வேகமாக வந்த இன்னோவா கார், கதிர் வீட்டின் முன்பு வந்து நின்றது.அந்த காரிலிருந்து இறங்கி வந்த இருவரும், கதிர், கதிர் என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தனர்.

வர்ஷன் குரல் போல இருக்கென்று அவர்கள் திரும்பி பார்க்க, தனது கம்பீர நடையோடு நண்பன் மித்ரனோடு உள்ளே வந்தான் ரிதுவர்ஷன்.

இருவரையும் பார்த்தவர்கள் வாங்கப்பா, வாங்க என வரவேற்று அங்கிருந்த ஷோஃபாவில் உட்கார வைத்தனர்.

நிலவா மேல போய் அண்ணனுங்களை கூப்பிட்டு வாயென்ற பெருமாள், பார்வதி புள்ளைங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வா என்றார்.

வாங்கப்பு, வூட்ல எல்லாரும் நல்லா இருக்காக தானே என்றனர் பிரகாசம் தம்பதியினர்.

நல்லா இருக்காங்க தாத்தா, நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா? என்க, உசுரோட இருக்கோம்பா என்றார் வள்ளி அப்பாயி.

அப்பொழுது மாடிப்படியில் இருந்து கதிர், வேலு, ஜான் மூவரும் வேகமாக கீழே இறங்கி வந்தனர்.

அங்கிருந்த ரிதுவர்ஷனையும், மித்ரனையும் பார்த்த மூவரும் அதிர்ந்து நின்றனர்.

அண்ணா என்று வேலு சொல்ல, அவனருகில் சென்ற மித்ரன் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,வேலுவை விடாமல் அடிக்க, என்னடா நடக்குதென்று ஜானும் முழித்துக்கொண்டிருந்தான்.

அடேய் தடிமாடுங்களா காப்பாத்துங்கடா என்று வேலு கத்த,எவனாது தடுத்திங்க பிச்சி எடுத்துடுத்துடுவேன் என்றான் மித்ரன்.

ஏன் டா எருமைங்களா, கோடிக்கணக்கான பிஸ்னஸ் டா, கடந்த 5 நாட்களாக காய்கறி லோடும் வரலை, கொடுத்தனுப்பிய பணத்தையும் வாங்கலை, ஃபோனையும் அட்டென் பண்ணலைனா என்ன அர்த்தம் டா?.

கால் தான் எடுக்கலையேனு, என்னாச்சினு இந்த எருமை மாட்டுக்கு மெசேஜ் அனுப்பினால், லாரி டமால் டிரைவர் பனால்னு அனுப்புறான்டானு சொல்லி,இன்னும் நாலு அடி வேலுவின் முதுகில் போட்டான்.

என்ன பிரச்சினைனு சொன்னால் தானே தெரியும் என்று,கதிருக்கும் முதுகில் ரெண்டு வைக்க, மித்து போதும் விடுடா என்றான் ரித்து.

கையில் மோரோடு வந்த பார்வதி, இருவரையும் எடுத்துக்குங்கப்பா என்றவர்,மித்து கண்ணா கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? என்க.நல்லா போகுதும்மா..

ஷாலினியும் புள்ளைங்களும் நல்லா இருக்காங்களா அப்பு? என்று, ரிதுவிடம் கேட்க,சேட்டை தாங்க முடியலத்தை.
போதாததுக்கு உங்க மகள் அக்கப்போரு தான் அம்புட்டு என்று ரித்து சொல்லும் போது,உள்ளே வந்த செல்வமும் அங்கிருந்த இருவரையும் கண்டு அதிர்ந்தார்.

நீலகிரி...

கதவை திறந்து உள்ளே வந்த மருது, அங்கிருப்பவளின் கோலம் கண்டு, பட்டென்று திரும்பிக்கொண்டவன், சாரி பவி என்றவாறே வெளியே வந்தவன், ஹாலில் இருந்த சேரில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

தண்ணீர் குடிக்கும் போது அவள் போட்டிருந்த சுடிதார் மேல் ஈரம் பட, டாப்ஸை கழட்டி விட்டு, டவளை கட்டிக்கொண்டு வேறு உடை எடுத்துக்கொண்டிருந்தவளை பார்த்து தான் வெளியே ஓடி வந்து விட்டான்.

சிறிது நிமிடங்கள் கடக்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், கதவை தட்டி விட்டு உள்ளே வர, பவியோ ஜன்னலருகில் உட்கார்ந்திருந்தாள்.

பவி என்று மருது கூப்பிட அந்த குரலில் திரும்பி பார்த்தவள், பின்னர் வழக்கம் போல ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.

அவளருகில் சென்றவன், பவி என்று அவள் தலையில் கை வைக்க,எதுவும் பேசாமல், அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

என்னடி ஆச்சு?, ஏன்டி இப்படி இருக்க?, மனசு விட்டு அழுடி, உன்னோட வளர்ந்த மாடு வந்துருக்கேன்டி என்று கண்ணீரோடு, அவள் தோளை குலுக்க, பவியிடமோ எந்த ரியாக்க்ஷனும் இல்லை.அம்மா... அம்மானு கத்த, என்னப்பா என்று பதறி அங்கே ஓடி வந்தார் மயிலா.

என்னம்மா இவ இப்படி இருக்காள்?.

எதுவுமா பேசமாட்டுறாளே?

இன்னைக்கு தான் பவிய பற்றிய கவலை வந்துச்சாடா என்க

தாய் கேட்ட வார்த்தை கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. தப்பு பண்ணிட்டனேனு தலையில் அடித்துக் கொண்டவன், அவளை இழுத்து தன்னோடு அணைத்து, அழுதுடுடி,மனசு விட்டு அழுடி எல்லாம் சரியாகிவிடும் என்றவன் கண்ணிலிருந்து நீர் கொட்டியது.

தன் நெற்றியில் விழுந்த நீரால் பவியும் நிமிர்ந்து பார்க்க, மருது அழுவது தெரிந்து, எதுவும் பேசாமல், அவன் கண்ணீரை துடைத்தாள். பவியிடமிருந்து இந்த செயலை மருதுவும் அவன் அம்மா மயிலாவும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அம்மா, சாயந்திரம் இவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறேன்.
மதிய சாப்பாடு இவளுக்கு கொடுத்து ரெடி பண்ணு என்றவன், தன் அணைப்பிலிருந்து பவியை விலக்கி நிறுத்தி விட்டு வெளியே சென்றான்.

மருது போன திசையையே பவி பார்த்துக்கொண்டிருக்க, வாம்மா பவி சாப்பிடலாமென, ஹாலிற்கு கூப்பிட்டு வந்தவர், அங்கிருந்த ஷோஃபாவில் அவளை உட்கார வைத்து விட்டு கிச்சனிற்குள் சென்றார்.

சமைத்த உணவையெல்லாம் பவியின் அப்பா, அம்மா ஃபோட்டோவிற்கு முன்பு போட்ட இலையில் பரிமாறியவர், சூடத்தை ஏற்றி ஃபோட்டோவிற்கு காட்டி விட்டு,பவியிடம் வந்தவர் விபூதி எடுத்து அவள் நெற்றியில் பூசி விட்டு, அவரும் பூச்சிக்கொண்டார்.

பின்னர் சின்னதாக அறுத்திருந்த மற்றொரு இலையில், படைத்த உணவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து வைத்து, வாசலுக்கு வந்து காக்காவை கா கா கா என்று கூப்பிட, காகங்கள் பறந்து வந்தது.

வெளியே இருந்த கல் சுவற்றின் மேல் இலையை வைத்து விட்டு உள்ளே வந்தவர்,இலையில் உள்ள உணவுகளை பவியை சாப்பிட வைத்தார்.

அப்பொழுது உள்ளே வந்த மருது,அம்மா நீ சாப்பிடலையா என்க, இல்லப்பா அங்க அப்பா சாப்பிட்டாரா என்னன்னு தெரியலையே?,நான் போய் பாத்துட்டு வரேன்.நீ பவிய பாத்துக்கப்பானு மயிலா சொல்ல, நானும் அப்பாவும் சாப்பிட்டோம். நீ சாப்பிட்டுட்டே போய்ட்டு வாம்மா.

அப்படியாப்பா, அப்போ சரினு வேகமாக சாப்பிட்டவர், எல்லாத்தையும் எடுத்து சமையலறையில் வைத்து விட்டு,வீட்டை நோக்கி சென்றார்.

பவியின் அருகில் வந்து உட்கார்ந்தவன், இன்னும் எத்தனை நாளைக்கு எல்லார்கிட்டயும் நடிக்க போறடி என்றான்.

அவன் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, சொல்லு எதுக்கு இப்படி மௌனமா இருக்க?.இல்லை, இல்லை,மௌனமாய் இருக்கிற போல எதுக்கு நடிச்சிக்கிட்டு இருக்க?.

ஓஓஓ... கண்டு பிடிச்சிட்டியா என்றவள், யாரை கேட்டுடா என் கழுத்தில் தாலியை கட்டுனயென்று மாறி, மாறி மருதுவின் கன்னத்தில் அறைந்தவள்,அவன் மேலேயே சாய்ந்து கதறி அழுதாள்.

அவள் அழட்டும் என்று அமைதியாக இருந்தான்.

ஒரு வழியாக அழுது ஓய்ந்தவள், இத்தனை வருஷமா தாமரையை காதலிச்சிட்டு, என் கழுத்தில் எப்படிடா உன்னால் தாலி கட்ட முடிஞ்சிது?.
உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? .

விரக்தியாக சிரித்தவன், உன் அம்மாவோட கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, என்னோட ஆசைக்கு, சமாதி கட்டிட்டாங்க எங்க அம்மா.சரி அது இருக்கட்டும், எப்போ நீ நார்மலானாய்?.

நான் எப்பவுமே நார்மலா தான் இருக்கிறேன். எனக்கு என்ன வியாதியா? என்றாள்.

அதற்கு ஓஓ என்றவன்,சரி அப்புறம் எதுக்கு உங்க அப்பா அம்மா பாடிக்கு முன்னாடி நீ அழவே இல்லை?.

எதுக்கு அழுகணும்?,என்னை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இரண்டு பேரும் விட்டுட்டு போயிட்டாங்க.
சாகுறதுக்கு முன்னாடி அவங்க ஆசை நிறைவேற்றிக்கிட்டாங்க. என்னோட விருப்பம் யாருக்குமே முக்கியமா தெரியலை.

ஏன்,உனக்கும், உங்க அம்மாவுக்கும் தெரியலையே, ஒரு வார்த்தை என்னை கேட்டீங்களா?, சம்மதமா, இல்லையானு?.உன்கிட்ட அந்த செயலை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

தாமரை தாமரைன்னு அவ பின்னாடியே விழுந்து கிடந்திய, ஏன் இப்போ எங்கே போய்விட்டாள் உன் தாமரை?.

இப்பொழுது தான் பவியின் உண்மையான குணம் மருதுக்கும், இவ்வளவு நேரம் வாசலில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிற மயிலாவிற்கும் புரிந்தது.

தாமரை இந்த ஊருக்கு வரும் வரை பவி பவினு என் கூட தானே இருப்பாய். என்னைக்கு அவள் வந்தாளோ, அப்போதிலிருந்து உனக்கு அவளை தான் பிடிச்சிருக்கு.என்னை ஒரு பொருட்டா கூட நீ மதிக்கிறது கிடையாது என்றாள்.

இப்படி எல்லாம் பேசுறியே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா?.என்னைக்காவது நீ வேற, தாமரை வேற என்று நான் பிரிச்சு பார்த்துருக்கேனாடி?, சொல்லுடி என்று மருது கேட்க, அப்போ நானும் அவளும் ஒன்னு என்றால், என் மேல் வராத காதல், அவள் மேல மட்டும் எப்படி வந்தது? என்று,ஆங்காரமாக அவன் சட்டையை பிடித்து குலுக்கி கேட்டாள்.

ஏய் காதல் என்ன விளையாட்டா, யார் மேல வேண்டுமானாலும் வருவதற்கு.
உன் கிட்ட நல்ல தோழியா மட்டும் தான் நினைத்து என்னால் பழக முடிந்தது.

ஆனால் தாமரைய அப்படி என்னால் நினைக்க முடியலைடி?, அவள் என் உசுருனு எனக்கு சொல்லிட்டு இருந்துச்சி.இருவரோடு பழகினாலும் நட்பை மீறி உன் மேல எனக்கு எந்த எண்ணமும் வரலைடி.உன் கையை எத்தனை முறை கையை பிடித்திருக்கேன் அப்போதெல்லாம் எனக்கு எந்த உணர்வும் வந்தது இல்லைடி.

தாமரை கிட்ட வந்தாலே எனக்கு மின்சாரம் தாக்குற போல ஒரு உணர்வு வரும்.அதை வார்த்தையில் என்னால சொல்ல முடியாது.உண்மையான காதலை உன்னால் ஒரு பொழுதும் புரிஞ்சிக்க முடியாது. ஏனென்றால் உன் மனசுக்குள்ள இருக்கிறது பொறாமை என்னும் நெருப்பு.அது எப்போ உன்கிட்ட இருந்து அழியுதோ, அப்பதான் நீ நல்ல மனுஷியா இருப்பாய்.

நீ நடிக்கிறதை எப்படி கண்டுபிடிச்சேன் தெரியுமானு பவியிடம் கேட்க, கீழே குனிந்து கொண்டாள்.

நான் கதவை திறந்து உள்ளே வரும் போது, மேலே ட்ரெஸ் இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கிட்டு இருந்த பாரு, அப்போ கதவு திறக்கும் சத்தம் கேட்டு, உன் ரெண்டு கையால் உன்னை மறைச்சிக்கிட்டியே அப்பதான் புரிஞ்சிகிட்டேன்,நீ சுயநினைவோட தான் இருக்கிறேன்னு.

அதற்கு பிறகு என் கற்பனையோனு தான் உன்னை கட்டி பிடிச்சேன், அப்போ உன் உடம்பை குறுக்குன பாரு அதில் இன்னும் உறுதியாகிட்டு.

ஆனால், உன் கிட்ட இப்படி ஒரு நாடகத்தை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை பவி
என்றவன், என்ன தோணுதோ தாராளமா பண்ணுனு சொல்லி விட்டு வெளியே வந்தவன், அங்கிருந்து அம்மாவை பார்த்து அதிர்ந்து நின்றான்.

கண்ணீரோடு நின்ற மயிலா, மகனை நோக்கி கையை கூப்பி மன்னிப்பு கேட்டு சத்தமின்றி அழுதவாறு உள்ளே வந்தவர், உன் நடிப்புக்கு பெரிய அவார்டு கொடுக்கலாம்மானு சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பவிக்கோ தனது குட்டு இவ்வளவு சீக்கிரம் இருவரிடமும் வெளிப்படுமென, சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது, அவள் அதிர்ச்சியில் நிற்பதை வைத்தே புரிந்தது.


கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top