• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சீமக்கரை....

கதிர் வீடு...

தேர்தல்ல நிற்க போவதை பற்றி, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை?.என் தங்கச்சி குடும்பத்துல தான்,வழிவழியா தலைவரா இருக்காங்கனு உனக்கு தெரியுமா?,தெரியாதா?.

என் தாத்தன் காலத்திலிருந்து இந்த பதினாறு ஊருக்கும் தலைவரா இருந்திருக்காங்க.அப்படி இருக்கும் போது,உனக்கு எதுக்கு இந்த வேலை?.

சரி,பதவி மேல ஆச வந்துச்சே,அதை நீ எங்ககிட்ட சொல்லியிருந்தால், அன்புவை வாபஸ் வாங்க வச்சிருப்பேனே.ஏன்னா,அன்புக்கு தேர்தல்ல நிற்க கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.

ஊர் மக்கள் எல்லாரும் என்கிட்டயும், சிவசாமி மச்சான்கிட்டையும் பிடிவாதமா கேட்டு கிட்ட பிறகு தான், என் மருமவன் தேர்தல்ல நின்னுச்சினு தெரியுமானு கேள்விகளால் மகனை துளைத்தெடுத்த பிரகாசம், பதில் சொல்லு பெரியவனே என்க.

பெருமாளோ,தந்தையின் கேள்வியில் நிலை குலைந்து நின்றார்.நீ இப்படி வாய மூடி கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?.

அமைதியா இருப்பது நல்லதில்லைனு பிரகாசம் சொல்ல,அப்பொழுது முத்துவோ,அப்பா, நம்ப குடும்பம் பிரியிறதுக்கும், கதிர் இப்படி நடந்து கொண்டதுக்கும் மூல காரணிகளே, அந்த கண்ணனும்,அவன் பொண்ணு தேவியும் தான்.

என்னா என்று அனைவரும் அதிர்ந்தனர்.

ஆமாப்பா,அந்த ஆள் தானென்று பெருமாளும் சொல்லத் தொடங்கினார்.

பள்ளிக்கூடத்திலிருந்தே கண்ணன் எங்க கிட்ட சரியா பேச மாட்டான்.தானா போய் பேசுவோம், ஆனாலும் அவன் எங்களை பெருசா எடுத்துக்கவில்லை.பிறகு அவனை கண்டுக்காம விட்டுட்டோம்.கல்யாணம் ஆன பிறகு, கண்ணன் என் கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சான்.

எல்லா விஷயத்திலும் என்னை உயர்த்தி பேசுவான்.அதுலாம் சேர்த்து அவன் மேல எனக்கு நம்பிக்கையை விதைச்சிட்டு.எல்லா நல்லது கெட்டதுக்கும்,என் கிட்ட எல்லாரும் ஆலோசனை கேட்கும் போதெல்லாம்
சாதாரண மனுஷனா இருக்கும் போதே நீ நல்ல முடிவு எடுக்குற. பதவி இருந்தால் இன்னும் நல்லா இருக்குமென்க,அந்த ஆசையெல்லாம் இல்லைனு நானும் சொல்லிட்டேன்.

ஆனால், எனக்கே தெரியாமல் எனக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா, அந்த ஆசைய வளர்த்து கிட்டு இருந்திருக்கான்.ஒரு கட்டத்தில்,அந்த பதவி இருந்தால் பெருமையா இருக்குமேனு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

வழக்கமா உங்க அத்தை வீட்டில் தானே ஜெயிக்கிறாங்க,இந்த முறை நீ நில்லு அப்படின்னு கண்ணன் தான் எனக்கு ஏத்தி விட்டான்.

"அன்பழகன் அமைதியானவன்".

நல்லது கெட்டதுங்களுக்கெல்லாம் அதிரடியான முடிவெடுக்க மாட்டான்.
நீயோ நேர்மையா பட்டுனு ஒடைச்சு சொல்லிவிடுவாய்.உனக்கு தான் இந்த பதவி சரியா வரும்னு எனக்கு கொம்பு சீவி கிட்டே இருந்தான்.நானும் கண்ணனோட பேச்சைக் கேட்டு ஆட ஆரம்பிச்சிட்டேன்.

அப்போ வேட்பாளரா அன்பு நின்னான். நீங்க எல்லாரும் அவனுக்கு சப்போர்ட்டா இருந்தது, எனக்கு கோபம் தான் வந்துச்சு.

நம்ம வீட்ல யாரும் ஒரு வார்த்தை கூட நீ தேர்தலில் கலந்துக்குறியானு கேட்கலையேனு நான் வருத்தப்பட,கண்ணன் தான் என்னை சமாதானப்படுத்தி,பேர் குடுக்க சொன்னான்.

எல்லார்கிட்டையும் நாங்க ஓட்டு கேட்டு போகும் போதெல்லாம் எங்களுக்கு முன்ன அன்புவும், கவிதாவும் அவங்க கூட பேசிட்டு போய்க்கொண்டு இருந்தாங்க.

இது எதார்த்தமா நடக்குல,உன் மச்சான் வேண்டும்னு பண்ணுறான்னு கண்ணன் என் கிட்ட சொல்லிட்டே இருந்தான்.

எலெக்சனுக்கு முதல் நாள், நாங்க வந்துட்டு இருக்கும்போது, ரெண்டு மூணு பேருக்கு அன்புவும், கவிதாவும் பணம் கொடுக்கறதை பார்த்தோம்.

அப்பொழுது கண்ணன் என்கிட்ட சொன்னது என்னவென்றால், எல்லாரும் அன்புக்கே ஓட்டு போடணும்னு பணம் கொடுத்துட்டு இருக்கிறான்.

இது ஒரு வாரமா நடக்குது.நான் சொன்னால் நீ நம்ப மாட்ட.இப்போ நேரிலே பாருன்னு..அதை பார்த்ததும் எனக்கு பயங்கர கோவம் வந்துச்சு.
பதவிக்காக என்ன வேணாலும் உன் மச்சான் பண்ணுவான்.

பொண்டாட்டியோட அண்ணன் நீ, முதல் முறையா தேர்தல்ல நிக்கிற, உனக்காக ஏன் அந்த பதவியை விட்டு கொடுக்க கூடாதுனு கண்ணன் என் கிட்ட கேட்டான்.எனக்கும் அது தான் தோனுச்சி.

மக்கள் மேல உள்ள நம்பிக்கையில் ஜெயித்த பின்னர்,அன்பு கிட்ட இதை பற்றி சண்டை போடனும்னு அமைதியா இருந்துட்டேன்.

அதேப்போல எலக்சன் முடிஞ்சி,ரிசல்டும் வந்தது.

அன்பு தான் தேர்தல்ல ஜெயிச்சான்னு மைக்கில் சொன்னதை கேட்டதும்,நான் தான் அப்பவே சொன்னேன் இல்லையா.
அன்புக்கு பதவி ஆசை வந்துட்டுனு.

பணத்தை கொடுத்து ஜெயிச்சிட்டான் பாருனு கண்ணன் என்கிட்ட சொன்னதை கேட்டு, எனக்கு தேர்தல்ல தோற்ற அவமானமும், அன்பு ஜெயித்ததும், கண்ணன் குத்தி காட்டி பேசுனதும் சேர்த்து ரொம்ப ஆத்திரம் வந்துட்டு.

இப்பவே எல்லாருக்கு முன்ன போய் நீ கேளு, அப்போ தான் உனக்கு நியாயம் கிடைக்கும்னு கண்ணன் சொன்னதை கேட்டு, நானும் அன்பு கிட்ட போனேன்.

அப்போ எல்லாரும் அன்புவை வாழ்த்திட்டு இருந்தாங்க.அதைப் பார்த்ததும் இன்னும் எனக்கு ஆத்திரம் வந்துருச்சு.பணத்தை கொடுத்து ஜெயிச்சிட்டு, என்ன தோற்கடித்த பெருமையாடானு நான் தான் அன்புவை முதல்ல அரைஞ்சேன்.

என்ன மச்சான் சொல்லுறா?, நீ சொல்றது எனக்கு ஒன்னும் புரியலைனு அன்பு கேட்க,தெரியாத போல நடிக்கிறியாடானு சொல்லிட்டு, ஆத்திரத்துல பணத்துக்காக உன் பொண்டாட்டி, புள்ளைய கூட அனுப்புவடானு கேட்டுட்டேன்.

அதை கேட்டு அன்புக்கு கோவம் வந்துச்சி, பிறகு தான் என்னை அடிச்சான்.அன்றைக்கு எல்லாருக்கும் முன்பு என்னை அடிச்சது மட்டும் தான் எனக்கு மனசுல இருந்துச்சி.கோவத்துல நான் பேசுனதை மறந்துட்டேன்.

கண்ணன் இத்தனை வருஷமா என்னை பகடைக்காயா பயன்படுத்தி குளிர் காஞ்சிருக்கான்னு நேற்று தான் தெரியும். கதிரும், சீதாவும் நேற்று கேள்வி கேட்ட போது, என்னால் பதில் சொல்ல முடியலை.

சரி கோயில்ல போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலானு போகும் போது, கண்ணன் வீட்டுல வேலை செய்யும் குப்பன், குடியில பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்.

அதாவது கதிருக்கு கள்ளுல போதைய கலந்து கொடுத்து, தேவிய பற்றி பேச சொல்லிருக்கு அந்த புள்ளை.

ஆனால் குப்பனோ அன்பு என்னை அடிச்சதையும், தாமைரைக்கு வேற பையன் கூட கல்யாணம் கட்ட போறதை பற்றி, பேசிருக்கான்.

இதுக்கு கண்ணனோட மவள் காசு குடுத்ததுனு சொன்னதையெல்லாம் நான் கேட்டு, தேவி கிட்ட ஏன் இப்படி பண்ணுனனு கேட்பதற்காக, கண்ணன் வீட்டுக்கு போயிருந்த போது தான், எனக்கு இந்த உண்மை தெரிஞ்சிது.

கண்ணன் அவன் மகன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்க, வெளியே நின்ற நானும், என்னை தேடிட்டு வந்த முத்துவும் கேட்டான்.

உன்னால தான்டா எங்க குடும்பம் பிரிஞ்சிதுனு முத்து அடிக்க போக, தேவும் நானும் தான் தடுத்தோம், கண்ணன் முகத்தை கூட எனக்கு பாக்க புடிக்கலை.

தம்பிய கூட்டிட்டு வந்துட்டேன் என்று தனக்கு தெரிந்தவற்றை பெருமாளும் சொல்லி முடித்தார்.

வள்ளி, முத்து, பெருமாள் மூவரும் இதுவரை சொல்லியதையெல்லாம் கேட்டவர்கள், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தனர்.

என்னைக்கு கவிதாவ அத்தனை பேருக்கு முன்னால் தப்பா பேசுனேனோ, அன்று இருந்து சீதா என் கிட்ட பேசுறது இல்லை.

அவ கையால எனக்கு பச்சை தண்ணி கூட தருவதில்லை என்று சொல்லியவர், பதவி ஆசையும், கேட்பார் பேச்சை கேட்டு அறிவிழந்து போய்ட்டேன்.

அநியாயமா வேதாவோட வாழ்க்கை என்னாலே போய்ட்டே, இந்த பாவத்தை எங்கு போய் தீர்ப்பேனென்று கதறி அழுதார்.

கதிரு உண்மை என்னனு தெரிஞ்சிட்டு இல்லை. இதுக்கு என்ன பண்ண போற?.

சொல்லு?...

எல்லாரையும் போல தானே உன்னை வளர்த்தேன்?, உன் மனசுல இவ்வளவு விஷம் இருக்குனு தெரியாம போய்ட்டே? என்றார் வள்ளி அப்பாயி.

அப்பாயி நான் தப்பா புரிஞ்சிக்கிட்டு தான் இப்படி பண்ணிட்டேனென்று கதிர் சொல்ல, ம்கும், உன் அப்பன் என் மவளையும், மருமவனையும் அசிங்க படுத்துனான்.

உன் சித்தப்பன், என் நாத்தனார் பொண்ணு வாழ்க்கையை கெடுத்தான்.

நீ என் பேத்தி வாழ்க்கையை கெடுத்த...

எவ்வளவு நல்ல காரியம் பண்ணிருக்கீங்க மூன்று பேரும்..

நல்லவனே உன் கேள்விக்கு பதில் தெரிஞ்சிட்டு தானே என்று வளவனை பார்த்து பெருமாள் கேட்க,வீட்டினரை ஒரு பார்வை பார்த்தவன் ச்சை என்று வெளியே சென்று விட்டான்.

செல்வம் தான் மற்றவர்களை போய் வேலைய பாருங்க என்று அனுப்பி வைத்தார்.

பார்வதி போய் டீய போட்டுக்கொடு.

மாமா எவ்வளவு நேரமா பட்னியா கிடக்க?, போய் வேலைய பாரு என்றவர், எலேய் என்ன வேடிக்கை?.

காத்தாட வெளியே போய்ட்டு வாங்க என்று கதிரை காட்டி ஜானிடம் சொல்ல, சரி மாமா என்றவன், வேலுவையும், கதிரையும் இரு கையில் பிடித்துக்கொண்டு, ஏரிக்கரையை நோக்கிச்சென்றான்.

செல்வி, இதையெல்லாம் மனசுல வச்சிக்க கூடாது, போய் உன் அத்தைக்கு கூட மாட எதாவது செய் என்றவர், நிலவா நீ வா மாட்டுக்கு தீவனம் வச்சிட்டு வரலாம் என்று சொல்லி, அனைவரையும் அந்த சூழலில் இருந்து அழாகாய் வெளியே கொண்டு வந்தார் செல்வம்.

மாமா என்றான் நிலவன்.

சொல்லு மாப்பிள்ளை என்றவாறே, ஊற வச்சிருந்த புண்ணாக்கை கரைத்து, மாடுகளுக்கு வைத்துக்கொண்டிருந்தார்.

இப்போ வேதாம்மா எங்கே இருக்காங்க மாமா?.

அவன் கேள்வியில் ஒரு நிமிடம் செய்த வேலையை நிறுத்தியவர், பின்னர் நீலகிரில என்று சொல்லி மற்ற மாடுகளுக்கு தீவனத்தை வைத்து விட்டு, கிணற்றில் இருந்து நீரை இறைத்து கையை கழுவினார்.

ஏன் மாமா, அண்ணி எங்க போயிருப்பாங்க? என்று மீண்டும் நிலவன் கேட்க,தெரியலையே சாமி. நான் தூக்கி வளர்த்த புள்ளைடா தாமரை...ஏழு வயசு வரை இந்த நெஞ்சில தான் தூங்கும், ராவுக்கு மட்டும் தான் கவிதா கூட படுக்கும்.

பெத்தது வேண்டுமானால் கவிதாவா இருக்கலாம், முக்கால் வாசி நேரம் என்கிட்டயும், உன் அத்தை கிட்ட தான் இருக்கும்.

பகலெல்லாம் உன் அத்தைக்காரி போய் தூக்கிட்டு வந்துருவாள், பொழுது சாய்ந்து தூங்குன பிறகு தான் கொண்டு போய் விட்டு வருவாள்.

தாமரைய பார்வதிக்கு ரொம்ப புடிக்க காரணம் சிந்துவைப்போலவே இருப்பதால் தான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர்,இப்போ எம் புள்ளை எங்க இருக்குனே தெரியலையே மாப்பிள்ளைனு செல்வமும் கண் கலங்கினார்.

செல்வத்தின் கண்ணீரை பார்த்தவன்,ஏன் மாமா இப்படி?.இவ்வளவு நேரம் எங்க எல்லாருக்கும் ஆறுதல் சொல்லி விட்டு, இப்போ நீ கண் கலங்குறியே, இது சரியா?.

இது ஏதோ சோதனைக்காலம் போல மாமா.கூடிய சீக்கிரம் நம்ப அய்யனார் புண்ணியத்தில் எல்லா பிரச்சினையும் தீர்ந்து, நல்லதே நடக்கும் மாமா நம்பிக்கையோட இருப்போம்.

அவன் வார்தையை கேட்ட செல்வம், உன் வாய் வார்தை போலவே ஆகட்டும் மாப்பிள்ளையென்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ஏரிக்கரைக்கு வந்த நண்பர்கள் மூவரும், அங்கிருந்த படித்துறையின் அருகில் சென்று ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்தனர்.இந்த ஏரிக்கரை பல நினைவுகளை கொண்டது.மூவருக்கும் இங்கு தான் பிரகாசம் தாத்தா நீச்சல் கற்றுக்கொடுத்தார்.

நண்பர்கள் மூவரும் போட்டி போட்டுக்கொண்டு,நீச்சலடித்து அக்கரையை தொட்டு வருவார்கள்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கதிர், அப்பொழுது தான் வாயை திறந்து நண்பர்களிடம் பேசத்தொடங்கினான்.

கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்யுனு சொல்லுவதை புரிந்து கொள்ளாமல், பெரிய தப்பு பண்ணிட்டேன் டா.அவள் யாருனு தெரியாத வரைக்கும் என் மனசுக்குள்ள காதல் இருந்துச்சி.எப்படியாவது அவளை பார்த்திடனும்னு மனசு துடிச்சிட்டு தான் இருந்துச்சி.

எப்போ உன் சித்தி மகள்னு தெரிஞ்சிதோ, அப்போ இருந்து என் மனசு குழம்ப ஆரம்பிச்சிட்டு டா.

அப்பாவை அத்தனை பேருக்கு முன்னால் ரோட்டுல அடிச்சது மட்டும் தான் எனக்கு நினைவு வந்துட்டே இருந்துச்சி.அவ வேண்டானு மனசை எவ்வளவோ கட்டுப்படுத்தி பார்த்தேன்.
ஆனால்,வளவன் அவளை கட்டிக்கிறேன்னு சொன்னதும் என்னால் தாங்க முடியலை.

என் பொண்டாட்டிய போய் தம்பிகாரன் கட்டிக்க ஆசை படுறானேனு,அவனை அடிக்க தோனுச்சி.இந்த நேரத்தில் தான் அவளுக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பார்த்திருக்காங்கனு அம்மாகிட்டயும், அப்பாயிகிட்டயும் வளவன் சொல்லிட்டு இருந்தான்.இவன் யாருடா புதுசா இன்னொருத்தன்னு,மேலும் கொலை வெறி.இனியும் அமைதியா இருந்தால் நல்லா இருக்காதுனு மனசாட்சி சொல்லிக்கிட்டே இருந்துச்சி.

எப்படியாவது அவள் முகத்தை பார்த்தே தீரனும்னு பொங்கல் அன்றைக்கு முடிவு பண்ணுனேன்.அதேப்போல வந்தாள்.
அவளை தவிர வேற யாரையும் எனக்கு தெரியலைடா.அவள் உருவம் உள்ள ஆழமா பதிஞ்சிட்டு.வளவனோடு அவ சிரிச்சி பேசிட்டு போனதை பார்த்து, எரிமலை தான் எனக்குள்ள.எவ்வளவோ யோசித்து பார்த்தேன், வளவன் ஆசப்படுறானே, அவனுக்கே கட்டி வைக்காலானு.

ஆனால், நான் மனசார தொட்டவள எப்படி என் தம்பிக்கு கட்டி வைக்க முடியும்?.சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு எடுக்கனும்னு யோசிச்சிக்கிட்டே வயலுக்கு போகும் போது,தேவ் வீட்டுல வேலை செய்யும் குப்பன் என்னை கூப்பிட்டார்.

இவரு ஏன் நம்மை கூப்பிடுறாருனு அங்க போனப்ப,இப்ப தான் மரத்துல இறக்குன கள்ளு.குடுச்சி பாரு கதிருனு சொன்னாரு.நான் வேண்டானு சொன்னேன் டா.

அட... வருஷம் முழுவதுமா கிடைக்குது. குடி தம்பினு அவர் பிடிவாதமா சொன்னதும், சரி குடுணானு வாங்கி, ஒரு வாய் குடிக்கும் போதே அந்த சுவை எனக்கு வித்தியாசமா தெரிஞ்சிது.

அப்போது தென்னந்தோப்பில் ஏதோ சத்தம் கேட்க,நான் பார்த்துட்டு வரேன் தம்பினு குப்பன் போனதும், என் கையில இருந்த கள்ளு பானைய கீழ வச்சிட்டு, அங்க இருந்ததை நான் எடுத்துக்கிட்டேன்.அதை குடித்து பார்க்க சாதாரணமா நாம சாப்டுவது போல இருந்துச்சி.

சம்பந்தம் இல்லாமல் நம்மை கூப்பிட்டு கள்ளு குடுக்க என்ன காரணம்னு மண்டைக்குள் கேள்வி குடைய,அதுக்கு குப்பன் தான் பதில் சொல்லனும்னு புரிஞ்சி கிட்டேன்.

சரி வரட்டும் என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கலானு, பானையில் இருந்த கள்ளை எட்டி ஊத்திட்டு, குடிச்சிட்டு போதையில் இருக்குறது போல நின்னுட்டு இருந்தேன்.தேங்காய் குலையோட விழுந்துடிச்சி தம்பினு சொல்லிக்கிட்டே வந்தார்.

கள்ளு வித்யாசமா இருக்கேணா நல்லா இருக்குனு போதையில் சொல்லுற போல சொன்னதும், அவர் சிரிச்சார். அது எங்கள் சின்னம்மா பண்ணிய வேலை தம்பினு சொல்ல,எனக்கு திடுக்குனு ஆச்சிடா.

என்னணா சொல்லுறனு கேட்க,ஆமா தம்பி, உனக்கு போதை மாத்திரை கலந்து கொடுத்து, அந்த புள்ளை கிட்ட சில்மிஷம் பண்ணுற போல எல்லாரையும் நம்ப வச்சி, உன்னையே கட்டிக்குற போல சொல்லுச்சி.

பணமும் நிறைய குடுத்துச்சி தம்பி...

அதும் இல்லாம உங்க அப்பாவ அத்தனை ஊர்காரவங்களுக்கு முன்னாடி அன்பு அண்ணன் அடிச்சதால,அந்த ஊட்ல பொண்ணு கட்ட வாய்ப்பு இல்லையாம்.ஆனால் வளவன் தம்பிக்கு அன்பு அண்ணன் பெரிய புள்ளைய குடுத்தாலும் குடுப்பாங்கனு சின்னம்மா சொல்லுச்சி.

உன்னை விட இளைய பையனுக்கு பொண்ணு தரும் போது, உனக்கு தர மாட்டாங்கன்னு சொல்லி சிரிச்சிது.

நல்லவிதமா கல்யாணம் கட்டிக்க வேண்டியதானேனு நான் கேட்க, நீ ஒத்துக்கல, நீ இல்லைனா செத்து போய்டுவேன்னு சொல்லி அழுதிச்சிப்பா.பொட்ட புள்ளை உசுரு தான் பெருசா இருந்துச்சி.

அவங்க வீட்டு சோத்த தின்னு வளர்ந்தவன், தேவியம்மா சொன்னதை செஞ்சிட்டேனென்று, நான் போதையில இருக்கனு நினைச்சிக்கிட்டு அவரு எல்லாத்தையும் சொல்லிட்டாருடா.

இத்தனை வருஷம் ஆன பிறகும், எங்கப்பாவ அடிச்சதை இவங்களெல்லாம் சொல்லி காட்டுறதை கேட்டு ஆத்திரம் வந்துடுச்சிடா.

எங்கப்பா போல அந்த தாமரையோட அப்பனும், மகள் வாழ்க்கையை நினைச்சி ஊருக்கு முன்னாடி கூனி குறுகி நிக்கனும்னு முடிவு பண்ணிட்டு,உடனே கீழே இருந்த கள்ளை எடுத்து குடிச்சிட்டேன்.

அவர் கிட்ட சொல்லிட்டு நம்ம குலதெய்வ கோயிலுக்கு போயி, போன வருஷம் தாலி தோஷத்துக்காக மரத்தில் கட்டியிருந்த, நம்ப வீட்டு தாலியை எடுத்துக்கிட்டு தெருவுக்கு வரும் போது, எதிரில் தாமரையே ஓடி வந்து மோதினாள்.இது தான் நல்ல சந்தர்ப்பம்னு அவ கழுத்துல கட்டிட்டேன் டா.ஆனால் நான் அங்க எதிர் பார்க்காதது, அவள் தாலியை கழட்டி என் மூஞ்சில தூக்கி எறிஞ்சதை தான்டா.

நான் உசுரோட கண்ணு முன்னாடி இருக்கும் போது, ஊர்காரவங்களுக்கு முன்னாடி அவள் பண்ணிய செயலால் அப்பவே செத்துட்டேன்.

கோவப்படுவாள்னு எதிர் பார்த்தேன்.
கொஞ்ச நாள் போனதும், வீட்ல பேசி அவளை ஊர் அறிய மருமகளா கூப்பிட்டு போலானு தான் அவ கழுத்துல தாலிய கட்டுனேன்.

ஆனால், அவள் அந்த நிமிஷமே உறவை முறிச்சிட்டாளேயென்று, மனதில் உள்ளதை எல்லாம் நண்பர்கள் இருவரிடமும் சொல்லி முடித்தான்.

இவ்வளவு நேரம் நண்பன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜானுக்கும், வேலுக்கும், கதிரின் மேல் கோபம் வந்தது.

அவனுக்கு எதிரில் உள்ள சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்திருந்த ஜானோ எழுந்து வந்தவன், தன் முன்னால் இருந்த நண்பனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.

மனுஷனாடா நீ?.

எவளோ பண்ணிய தப்புக்கு, எந்த பாவமும் அறியாத பொண்ணு வாழ்க்கையில போய் விளையாண்டுருக்கியே?, நம்ப வீட்லயும் பொண்ணு இருக்குனு மறந்துட்டியா?.

சரி நீ சொல்ற போலவே வச்சிப்போம், சித்தப்பனை அடிச்சதுக்காக வேலு இதை பண்ணிருந்தா சும்மா இருந்திருப்பியா?.இல்லை, சிவாவும் உன்னைப்போல செல்விக்கு பண்ணிருந்தால்,சும்மா விட்டுருப்போமா?, பதில் சொல்லுடா என்று கத்தினான் .

ஜானின் கேள்வியில் உள்ள நியாயத்தில்,கதிருக்கு எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.

சதாரா....

அதிகாலையிலே எழுந்து பழக்கமென்பதால், தூங்கி எழுந்த தாமரை, ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஃப்ரஷ் ஆகி வெளியே வர, ஜாகிங் உடையில் தயாராகி வந்தவன் மீது இடித்துக்கொண்டாள்.

ஸ்ஸ்...சாரி என்று இருவரும் சொல்லிக்கொண்டனர்.

பின்னர், கதவை திறந்து மாறன் வெளியே செல்ல, வீட்டை சுற்றி பார்க்க,அந்த அதிகாலை நேரத்தில், பூஜையறையில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது.

கிச்சனிற்குள்ளிருந்து சத்தம் கேட்டு அங்கு போய் பார்க்க, பில்டர் காஃபியை ரெடி பண்ணிக்கொண்டிருந்தார் பூரணி.

காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர் வாமா, நல்லா தூங்குனியா,ம்ம் மா என்பவளிடம் செத்த நாழி இரு, காஃபி ஆகிடும்.

சரிங்கம்மானு வெளியே வந்தவள், அங்கிருந்து வாசலுக்கு சென்று, கூட்டி பெருக்கி, அழகாய் கோலம் போட்டு உள்ளே வர, அவள் கையில் சூடான காஃபி டம்ளரை கொடுத்து விட்டு, வாசல் பெருக்க பூரணி போக, அங்கே கூட்டி, கோலம் போட்டிருப்பதை பார்த்தவர்,யாரா இருக்கும்னு முணு முணுக்க,நான் தான் மா போட்டேன்,தப்பா எடுக்காதீங்க.

நம்ப வீட்டில் போட்டு பழக்கம்னு தாமரை சொல்ல,அச்சோ,அதுக்கு தான் பொண்ணு வேண்டும்னு சொல்லுறதென்று, அவள் கன்னம் கிள்ளி முத்தம் கொடுக்க, பூரணி என்ற கம்பீரமான குரல் கேட்டது.

இதோங்க என்றவர் காஃபியை எடுத்துக்கொண்டு, சத்தம் வந்த அறையை நோக்கி சென்றார்.

தாமரையும் தனது அறைக்குள் வந்தவள், காஃபியை குடித்து விட்டு,ரெஸ்ட் ரூமிற்குள் சென்று, குளித்து வெளியே வந்தவள், பெட்டியில் இருந்த டிரஸை போட்டுக்கொண்டு, தலை சீவி, பொட்டு வைத்து வெளியே வர, நன்கு விடிந்திருந்தது.

பின்னர், கிச்சனிலிருந்த பூரணியோடு காலை உணவை தயாரித்தவள், சமைத்த உணவுகளை டேபிளின் மீது எடுத்து வந்து வைக்க, வாம்மா என்ற கணீர் குரல் கேட்டு திரும்ப, விஸ்வம் நின்று கொண்டிருந்தார்.

அவரின் தோற்றத்தை பார்த்து,தானாக கை கூப்பி வணக்கம் என்றாள்.

பதிலுக்கு மெல்லியதாக சிரித்தவர், பூஜையறைக்குள் சென்று, ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார்.

மாறனும் வாக்கிங் போய் விட்டு வீட்டிற்குள் வந்தவன், அம்மா காஃபி என்றான்.

இதோ கண்ணானு மகனுக்கு காஃபியை எடுத்து வந்து கொடுக்க,தனது அறைக்குள் சென்று விட்டான்.

தாமரையோ விஸ்வத்தின் குரலில் மெய் மறந்து, பூஜையறையின் வாசலில் போய் நின்றவள், கை கூப்பி கண்ணை மூட, விஸ்வத்தின் குரலில் ஒலித்த பாடலில் மூடிய கண்ணிலிருந்து நீர் கசிந்தது.விஸ்வநாதன் பாடிய பாடலின் அர்த்தமோ, யாரோ ஒருவரிடம் மன்னிப்பு வேண்டி பாடுவது.

நீலகிரியில் பள்ளியில் படிக்கும் போது, கர்நாடிக் சங்கீதம் கற்றுக்கொண்டாள் தாமரை.ஆனால்,அது பவியை தவிர யாருக்கும் தெரியாது.ஏனென்றால் பாட்டு டீச்சர் வீட்டிற்கு பள்ளியிலிருந்து இருபது நிமிடம் தூரம்.போகும் வழியோ கொஞ்சம் காடு போல இருக்கும்.

அது தெரிந்தால் வேதா பயத்தில் விட மாட்டார் என்பதால், ஸ்பெஷல் கிளாஸென்று சொல்லி விட்டு, பவியோடு அங்கு போய் கற்றுக்கொண்டாள்.

பூஜையை முடித்த விஸ்வம், ஒரு கையால் மணியடித்துக்கொண்டு, இன்னொரு கையால் சாமிக்கு தீபாரதனையை காட்ட, மணி சத்தத்தில், பூரணியும் வந்து நின்றார்.

சாமிக்கு தீபாரதனையை காட்டி முடித்தவர், மனைவிக்கு எடுத்து வர, அங்கு கண்ணில் நீர் கசிய கை கூப்பி சாமி கும்பிட்டுக்கொண்டு நிற்ப்பவளை பார்த்தவர், அவளுக்கு முன்பு சென்று, தன் கையாலே ஆரத்தியை தொட்டு அவள் தலையில் வைத்து, தட்டில் இருந்த குங்குமத்தையும், விபூதியையும் தாமரையின் நெற்றியில் பூசி விட்டார்.

கண்ணை மூடி மெய் மறந்து நின்றவள், தனக்கு விபூதி பூசியது யாரென்று கண் திறந்து பார்க்க, அங்கே விஸ்வம் இருந்ததை பார்த்து திகைத்தாள்.

எல்லாம் நல்லதே நடக்கும் என்றவர், மனைவியிடம் ஆரத்தியை காட்டி விட்டு உள்ளே போய், ஆரத்தி தட்டை வைத்து விட்டு தனது நெற்றியிலும் விபூதி குங்குமத்தை பூசிக்கொண்டு வெளியே வந்தார்.


கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top