Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
"நிஜமாக தானா என்றாள் தாமரை?".
இதுல என்ன சந்தேகம்?அய்யா மப்டில இருக்காரு, அதான்,மும்பை சிட்டி கமிஷ்னர் மிஸ்டர் ருத்ர சிம்மன் இந்த கொய்யா தானென்று மேலும் இடியை தூக்கி தாமரையின் தலையில் போட்டாள்.
அய்யையோனு தாமரை பதற, தங்கச்சி இவ கடக்கா,நீ பயப்படாதடா.ஏய் வாலு வாய மூடுடி என்றவன், சீக்கிரம் சாப்டுங்க என்று சொல்லி விட்டு, தனது ஃபோனில் எதையோ செக் பண்ணிக்கொண்டிருந்தான்.
மூவரும் ஆர்டர் செய்த உணவுகள் மேஜைக்கு வந்தது.பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க,யோவ் மீசை, பில் பே பண்ணு என்றாள் ஜெனி.
ஏன், நீ பண்ணினால் ஆகாதாடி?.
இருவரும் மாற்றி,மாற்றி பேசுவதை பார்த்து, அய்யா சாமிங்களா, நானே பே பண்றேன் என்று சொல்லிக்கொண்டு தாமரை செல்ல, ஹேய் லோட்டஸ் சும்மா ஃபன் தான் என்றவள், நாங்க வெளியே இருக்கோம்னு சொல்லிக்கொண்டு, தாமரையோடு வெளியே வந்தாள்.
உன் நொண்ணன், என் மேல கோவமா இருக்காரு.அவரை கூல் பண்ண தான் இப்படினு ஜெனியும் சிரித்தாள்.
போலிஸ் வேலை பற்றி உனக்கு தெரியும் தானே?, எங்களுக்கு மேரேஜ் ஆகி பைவ் இயர்ஸ் ஆகுது லோட்டஸ்.
அம்மா, அப்பா ரெண்டு பேரும்,குழந்தைய கேட்டு இம்சை பண்ணுறாங்க.
இந்த கேஸ் முடிஞ்சதும் வேலைய விட்டு விட்டு, ஃபுல் டைம் ஹவுஸ் வொய்பா இருக்கேனு சொல்றேன், உன் நொண்ணன் வெலங்காதவன் கேட்க மாட்றான்.ஆசைப்பட்டு சேர்ந்த வேலையைப்போய், எதுக்குடி விடுறனு? கேட்க்குறார்.
அவர் ஆம்பிளை வெளியே போய்டுறார்.
நான் அப்படியா?, எதாவது நல்லது கெட்டதுக்கு போனால், குழந்தை இல்லையானு கேட்குறது, எனக்கு எவ்வளவு வலியா இருக்குமென்று, அந்த மனுஷனுக்கு புரியமாட்டேங்குது? என்று சொல்லி ஜெனி கண் கலங்கினாள்.
பில் பே பண்ணிட்டு வந்தவனோ, மனைவி சொல்வதையெல்லாம் சில அடி தொலைவிலிருந்து கேட்டான்.
உடனே தன் ஃபோனில் இருந்து மேலிடத்திற்கு கால் பண்ணிய ருத்ரன்,ஜெனி எடுக்க போகும் கேஸை வேறு யாரிடமாவது கொடுக்க சொல்லியவன், மனைவி அவளோட வேலையை ராஜினாமா பண்ணுவதாக சொன்னான்.
அவனுக்கு உயரதிகாரியானவரோ, என்ன மேன் விளையாடுறியா?, இரு, அவசரப்பட வேண்டாம்.
ஜெனிய இந்த ஆப்ரேஷன்ல செலக்ட் பண்ணியது நீ தானே மேன்?, பிறகு என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு?.
அதுவும் இல்லாமல் ஜெனி போல, இன்டலிஜென்ட் போலிஸை நம்ப அரசாங்கம் இழக்க விரும்பலை என்றார்.
சார்... கொஞ்சம் பர்சனல்.. எனக்கும் திரீ மந்த் லீவ் வேண்டும் என்று கேட்க,ஓஹோ, பிளான் பண்ணிட்டு தான் பேசுறியா??என்றார்.
குடும்பம் தழைக்கனுமே என்று ருத்ரன் சொல்லி சிரிக்க, ஓகே புரிஞ்சிட்டு என்றவர், சென்னையில் நீங்க ரிப்போர்ட் பண்ணிடுங்க ருத்ரன், நான் லீவ் கொடுத்துடுறேன்.
ஆல் த பெஸ்ட் யங் மேன், அப்பாவா புரமோட் ஆகிட்டு, சந்தோஷமா திரும்பி வந்து வேலையில் ஜாயின் பண்ணுங்க.
தேங்க்யூ சார் என்று கட் பண்ணிய ருத்ரன், அடியேய் சண்ட கோழி என்றபடியே அவர்களிடம் வந்தான்.
கிளம்பலாமா என்க, அண்ணா ஒன்னு கேட்கனும் என்றாள்.
எதுவாக இருந்தாலும் காரில் போகும் போது கேளுடானு சொல்லிக்கொண்டே, கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான். ருத்ரனின் பின்னால் இருவரும் நடந்து சென்றனர்.
நீங்க ரெண்டு பேரும் காரில் இருங்க, 5 மினிட்ஸ்ல நான் வந்துடுறேன் என்றவன், டிக்கியில் இருந்த பேகை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றான்.
நாம சென்னை போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமென்று? தாமரை கேட்க, எப்படியும் நாலிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும்.
பின்னர் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்தவனை ஒருத்தி ரசித்து பார்க்க, இன்னொருத்தியோ அதிர்ந்தாள்.
கதவை திறந்து உள்ளே உட்கார்ந்தவனை பேயறைந்தது போல பார்த்துக்கொண்டிருந்த தாமரையை தட்டியவள், என்ன தாமரை ஷாக்கா இருக்கா?.
இவ்வளவு நேரம் ஏதோ நாற்பது வயதுக்கு மேல உள்ள ஆள் போல இருந்த மனுஷன், இப்போ ஜம்முனு வந்துருக்காரே என்றுதானே..
உன் அண்ணனோட நிஜ தோற்றம் இது தானென்றவள் எதுக்கு இந்த வேஷமென்று? கணவனை ரசித்துக்கொண்டே கேட்டாள்.
சும்மா என்றவன், உன் சந்தேகம் தீர்ந்துட்டா டா?என்க.ம்ம் என தஞ்சாவூர் பொம்மை போல தாமரையும் தலையசைக்க, அதை பார்த்த கணவன் மனைவி இருவருக்கும் சிரிப்பு வந்தது. இனி வண்டி எங்கும் நிக்காது.நேராக மீனம்பாக்கம் ஏர்போர்டிற்கு போய் தான் நிப்பாட்டுவேன் சொல்லிட்டேன்.
ரெண்டு பேரும் சீட் பெல்டை போடுங்கள் என்று சொல்லிக்கொண்டே, காரை ஸ்டார்ட் பண்ணினான்.
சில அடி தொலைவு பொறுமையாக சென்ற கார், பின்னர் அசுர வேகத்தில், ருத்ரனின் கட்டுப்பாட்டில் பறக்க ஆரம்பித்தது.அண்ணா, ஏன் இவ்வளவு வேகம், பொறுமையா போங்களென்றாள்.
அவளுக்கு நேர்மறையாக, கமான் மாமா கமான், உங்களால் முடியுமென்று ஜெனி என்கரேஜ் பண்ணிக்கொண்டிருந்தாள்.
என்ன போலிஸு, சார் ரொம்ப குஷி மூடுல இருக்கீங்க போல?.
ஏன்டி ரொம்ப நாளைக்கு பிறகு கார் டிரைவிங், அதும் நம்ப சென்னையில், அதனால் மனுஷன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்.அது பொறுக்கலையாடி உனக்கு?.
உங்க அப்பாயி ஒரு பழமொழி சொல்லும். "சோழியும் குடுமியும் சும்மா ஆடாதுனு" என்றாள் ஜெனி.
மனைவியின் சாதூர்ய பேச்சை கேட்டவன், கண்ணாடியில் தெரியும், மனைவியின் உருவத்தை பார்த்துக் கொண்டுஅய்யாக்கு மூனு மாசம் லீவ் கிடைச்சிருக்குடி.இனி முக்கியமான வேலை எல்லாம் இருக்கு.அதை எல்லாம் முடிக்கணும்டி.
அதற்கு ஜெனியோ,ஓ என்றாள் சுரத்தே இல்லாமல்.எஸ்சுடி எஸ் என்றவன், மேலும் சில விஷயங்களை சொல்லி, மனைவியை வெறுப்பேத்திக்கொண்டே வந்தான்.
அசுர வேகத்தில் வந்த காரும், மீனம்பாக்கம் ஏர்போர்டினுள் நுழைந்து, வாயில் புறம் போய் நின்றது.
தாமரை, நான் கார்லே இருக்கேன் டா.
மும்பை கமிஷ்னர் சென்னை ஏர்போர்டில் இரண்டு பெண்களோடு ஜாலி டிரிப், அது இதுனு பத்திரிக்கையில் இஷ்டத்திற்கு எழுதி தள்ளுவாங்கடா.அதுக்கு இடம் கொடுக்க எனக்கு இஷ்டம் இல்லை.
ஜெனி உன்கிட்ட நம்பர் தருவாள்.
உனக்கு எப்போ, என்னவா இருந்தாலும் உடனே கால் பண்ணு.அண்ணன் எங்கிருந்தாலும் வந்துடுவேன்.
வெறும் எட்டு மணி நேர பழக்கத்தில், இவ்வளவு அன்பாக நடந்து கொள்ளும் அண்ணனை சந்தித்ததில்,அவளுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது.
கவனத்தை வேலையில் மட்டும் போகஸ் பண்ணுடா.பார்த்து பத்ரமா போய்ட்டு வா.
சரிணா என்றவள், காரிலிருந்து கீழே இறங்கிப்போய், டிக்கியில் இருந்த டிராலியை எடுத்துக்கொண்டு, ஜெனியோடு உள்ளே செல்ல,ருத்ரனோ தனது முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு, கார் பார்க்கிங்கிற்கு சென்றான்.
ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து விட்டு, பெண்கள் இருவரும் பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது, தாமரை செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வந்தது.
ஜெனியை கட்டி அணைத்தவள், இதுவரை செய்ததற்கு நன்றியேன்க,அவளோ முறைத்து பார்த்தவள் அந்த மீசக்காரனை மட்டும் அண்ணனா ஏத்துக்கிட்ட,என்ன இல்லை போல என்க.அச்சோ, அண்ணனின் சரி பாதி அண்ணியார் தானே என்றவள், நேரம் கிடைக்கும் போது பேசு ஜெனி.
கண்டிப்பா தாமரை, விரைவில் நாம சந்திக்கலாம் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தவள், வெளியே வந்து, ருத்ரனுக்கு கால் பண்ண,சிறிது நிமிடத்தில் ருத்ரனின் காரும் அவள் முன்பு வந்து நின்றது.
பின் கதவை திறந்து ஏறப்போனவளை பார்த்தவன், ஏய் நான் என்ன உனக்கு டிரைவரா?.வந்து முன்னாடி உட்காருடி சண்டக்கோழி.
ஏன்,வரும் போது பின்னடி தானே உக்காந்துட்டு வந்தேன்.அப்போ கண்ணு தெரியலையா?.
அடியேய், கூறுகெட்டவளே, கூட தங்கச்சி இருக்கும் போது எப்படி நாம ஒன்னா உட்கார?.கீர் மாத்தும் போதுலாம், உன் மேல என் கையப்படும்.அப்போலாம் சில பல ரொமான்ஸ் எல்லாம் நடக்கும்.
இதெல்லாம் தங்கச்சி பார்த்தால் நல்லாவா இருக்கும்?.அதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு உனக்கு எங்கே அறிவு இருக்க போகுது,மரியாதையா முன்னாடி உட்கார்டி என்று கர்ஜித்தான்.
" கணவனின் குரலில் எதுவும் பேசாமல்,முன் கதவை திறந்து, சீட்டில் உட்காந்து விட்டு, கதவை சாத்த, ஜெனியின் நம்பருக்கு கால் வந்தது".
எடுத்து யார் என்று பார்க்க, அவளின் அம்மா தான் பண்ணியிருந்தார்கள்.
சில பல வழக்கமான நல விசாரிப்புகள், முடிந்த பின் அவர் போனை வைக்க, கிளம்பலாமா என்றான்.ம்ம் போலாம் என்றவள், கண்ணை மூடி சீட்டில் சாய,சிறிது நிமிடத்தில் உறங்கி விட்டாள்.
தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க, மனைவியோடு நீண்ட பயணத்தை தொடங்கினான் ருத்ர வீர சிம்மன்.
சீமக்கரை கண்ணன் வீடு...
தந்தை போனதிலிருந்து வாசலையே எட்டி, எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.எப்படியும் அவர்களிடம் சம்மதம் வாங்கிட்டு தான் வருவாரென்று, மலை அளவு நம்பி இருந்தவன் பார்வதி என்று சொல்லி கண்ணை மூட, அவளின் அழகு முகம் வந்து சென்றது.
இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மாமா உன் கழுத்துல மூணு முடிச்சு போட்டு ஊரறியே என் பொண்டாட்டியாக்கிப்பேன்டி என்று மனதிற்குள் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டான்.
வாசலில் கேட்டு திறக்கும் சத்தம் கேட்க, உள்ளேயிருந்த மரச்சேரில் உட்கார்ந்திருந்தவன்,எழுந்து வந்து பார்க்க,வேலுச்சாமி வந்து கொண்டிருந்தார்.
உள்ளே வந்தவர், அங்கிருந்து பெஞ்சில் உட்கார்ந்து கண்ணை மூட, அப்பாவே வாயை திறக்கட்டும் என்று, கண்ணனும்
அமைதியாக அவரை பார்த்து நின்றான்.
இந்தாங்க தண்ணியென்று மனைவியின் குரல் கேட்டு கண்ணை திறந்தவர்,அவர் கையில் இருந்த சொம்பை தட்டி விட்டு,இது ஒன்னு தான் இப்போ குறைச்சல்.
என்னாச்சுங்க?, எதுக்கு இவ்வளவு கோவமென்றார் சரோஜா.
வேற என்னடி பண்ண சொல்லுற?.
தன்னோட ரெண்டு மகளுக்கும், உள்ளூரிலே மாப்பிள்ளைய பேசி முடிச்சிட்டோம்னு, அந்த வள்ளி பொண்ணு ஆணித்தரமா சொல்லுது.
நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன், ஒரு புண்ணியமும் இல்லை.
பொண்ண கட்டி உள்ள பூந்து நாம உசரத்துல இருக்கலானு நான் கனவு கண்டா, அந்த வள்ளி பொண்ணு எல்லாத்தையும் தரமட்டமாக்கிட்டு என்றார் வேலுச்சாமி.
அப்பா, நெஜமா நீ சொல்றது? என்று கண்ணன் கேட்க, ஆமாடா.பார்வதிக்கு பொன்னுரங்கன் மகன் செல்வத்தையும், கவிதாவுக்கு தம்புசாமி மகன் அன்பழகனையும் பேசிட்டாங்க. அதுவுமில்லாமல், ஏனாதில பொண்ணு அமைஞ்சிருக்கு பெருமாளுக்கு.
எப்படியும் மூன்று கல்யாணமும் ஒன்னா தான் நடக்குமென்று சொல்லியவர், எதுக்கும் லாயக்கு இல்லாத புள்ளைய பெத்து வச்சிருக்கியேடி.
ஆசப்பட்டவனுக்கு அந்த பொண்ணையே வளைக்க துப்பு இல்லையென்று, தன் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், மகனையும் வேலுச்சாமி கடிந்து கொண்டார்.
இதுல என்ன சந்தேகம்?அய்யா மப்டில இருக்காரு, அதான்,மும்பை சிட்டி கமிஷ்னர் மிஸ்டர் ருத்ர சிம்மன் இந்த கொய்யா தானென்று மேலும் இடியை தூக்கி தாமரையின் தலையில் போட்டாள்.
அய்யையோனு தாமரை பதற, தங்கச்சி இவ கடக்கா,நீ பயப்படாதடா.ஏய் வாலு வாய மூடுடி என்றவன், சீக்கிரம் சாப்டுங்க என்று சொல்லி விட்டு, தனது ஃபோனில் எதையோ செக் பண்ணிக்கொண்டிருந்தான்.
மூவரும் ஆர்டர் செய்த உணவுகள் மேஜைக்கு வந்தது.பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க,யோவ் மீசை, பில் பே பண்ணு என்றாள் ஜெனி.
ஏன், நீ பண்ணினால் ஆகாதாடி?.
இருவரும் மாற்றி,மாற்றி பேசுவதை பார்த்து, அய்யா சாமிங்களா, நானே பே பண்றேன் என்று சொல்லிக்கொண்டு தாமரை செல்ல, ஹேய் லோட்டஸ் சும்மா ஃபன் தான் என்றவள், நாங்க வெளியே இருக்கோம்னு சொல்லிக்கொண்டு, தாமரையோடு வெளியே வந்தாள்.
உன் நொண்ணன், என் மேல கோவமா இருக்காரு.அவரை கூல் பண்ண தான் இப்படினு ஜெனியும் சிரித்தாள்.
போலிஸ் வேலை பற்றி உனக்கு தெரியும் தானே?, எங்களுக்கு மேரேஜ் ஆகி பைவ் இயர்ஸ் ஆகுது லோட்டஸ்.
அம்மா, அப்பா ரெண்டு பேரும்,குழந்தைய கேட்டு இம்சை பண்ணுறாங்க.
இந்த கேஸ் முடிஞ்சதும் வேலைய விட்டு விட்டு, ஃபுல் டைம் ஹவுஸ் வொய்பா இருக்கேனு சொல்றேன், உன் நொண்ணன் வெலங்காதவன் கேட்க மாட்றான்.ஆசைப்பட்டு சேர்ந்த வேலையைப்போய், எதுக்குடி விடுறனு? கேட்க்குறார்.
அவர் ஆம்பிளை வெளியே போய்டுறார்.
நான் அப்படியா?, எதாவது நல்லது கெட்டதுக்கு போனால், குழந்தை இல்லையானு கேட்குறது, எனக்கு எவ்வளவு வலியா இருக்குமென்று, அந்த மனுஷனுக்கு புரியமாட்டேங்குது? என்று சொல்லி ஜெனி கண் கலங்கினாள்.
பில் பே பண்ணிட்டு வந்தவனோ, மனைவி சொல்வதையெல்லாம் சில அடி தொலைவிலிருந்து கேட்டான்.
உடனே தன் ஃபோனில் இருந்து மேலிடத்திற்கு கால் பண்ணிய ருத்ரன்,ஜெனி எடுக்க போகும் கேஸை வேறு யாரிடமாவது கொடுக்க சொல்லியவன், மனைவி அவளோட வேலையை ராஜினாமா பண்ணுவதாக சொன்னான்.
அவனுக்கு உயரதிகாரியானவரோ, என்ன மேன் விளையாடுறியா?, இரு, அவசரப்பட வேண்டாம்.
ஜெனிய இந்த ஆப்ரேஷன்ல செலக்ட் பண்ணியது நீ தானே மேன்?, பிறகு என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு?.
அதுவும் இல்லாமல் ஜெனி போல, இன்டலிஜென்ட் போலிஸை நம்ப அரசாங்கம் இழக்க விரும்பலை என்றார்.
சார்... கொஞ்சம் பர்சனல்.. எனக்கும் திரீ மந்த் லீவ் வேண்டும் என்று கேட்க,ஓஹோ, பிளான் பண்ணிட்டு தான் பேசுறியா??என்றார்.
குடும்பம் தழைக்கனுமே என்று ருத்ரன் சொல்லி சிரிக்க, ஓகே புரிஞ்சிட்டு என்றவர், சென்னையில் நீங்க ரிப்போர்ட் பண்ணிடுங்க ருத்ரன், நான் லீவ் கொடுத்துடுறேன்.
ஆல் த பெஸ்ட் யங் மேன், அப்பாவா புரமோட் ஆகிட்டு, சந்தோஷமா திரும்பி வந்து வேலையில் ஜாயின் பண்ணுங்க.
தேங்க்யூ சார் என்று கட் பண்ணிய ருத்ரன், அடியேய் சண்ட கோழி என்றபடியே அவர்களிடம் வந்தான்.
கிளம்பலாமா என்க, அண்ணா ஒன்னு கேட்கனும் என்றாள்.
எதுவாக இருந்தாலும் காரில் போகும் போது கேளுடானு சொல்லிக்கொண்டே, கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான். ருத்ரனின் பின்னால் இருவரும் நடந்து சென்றனர்.
நீங்க ரெண்டு பேரும் காரில் இருங்க, 5 மினிட்ஸ்ல நான் வந்துடுறேன் என்றவன், டிக்கியில் இருந்த பேகை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றான்.
நாம சென்னை போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமென்று? தாமரை கேட்க, எப்படியும் நாலிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும்.
பின்னர் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்தவனை ஒருத்தி ரசித்து பார்க்க, இன்னொருத்தியோ அதிர்ந்தாள்.
கதவை திறந்து உள்ளே உட்கார்ந்தவனை பேயறைந்தது போல பார்த்துக்கொண்டிருந்த தாமரையை தட்டியவள், என்ன தாமரை ஷாக்கா இருக்கா?.
இவ்வளவு நேரம் ஏதோ நாற்பது வயதுக்கு மேல உள்ள ஆள் போல இருந்த மனுஷன், இப்போ ஜம்முனு வந்துருக்காரே என்றுதானே..
உன் அண்ணனோட நிஜ தோற்றம் இது தானென்றவள் எதுக்கு இந்த வேஷமென்று? கணவனை ரசித்துக்கொண்டே கேட்டாள்.
சும்மா என்றவன், உன் சந்தேகம் தீர்ந்துட்டா டா?என்க.ம்ம் என தஞ்சாவூர் பொம்மை போல தாமரையும் தலையசைக்க, அதை பார்த்த கணவன் மனைவி இருவருக்கும் சிரிப்பு வந்தது. இனி வண்டி எங்கும் நிக்காது.நேராக மீனம்பாக்கம் ஏர்போர்டிற்கு போய் தான் நிப்பாட்டுவேன் சொல்லிட்டேன்.
ரெண்டு பேரும் சீட் பெல்டை போடுங்கள் என்று சொல்லிக்கொண்டே, காரை ஸ்டார்ட் பண்ணினான்.
சில அடி தொலைவு பொறுமையாக சென்ற கார், பின்னர் அசுர வேகத்தில், ருத்ரனின் கட்டுப்பாட்டில் பறக்க ஆரம்பித்தது.அண்ணா, ஏன் இவ்வளவு வேகம், பொறுமையா போங்களென்றாள்.
அவளுக்கு நேர்மறையாக, கமான் மாமா கமான், உங்களால் முடியுமென்று ஜெனி என்கரேஜ் பண்ணிக்கொண்டிருந்தாள்.
என்ன போலிஸு, சார் ரொம்ப குஷி மூடுல இருக்கீங்க போல?.
ஏன்டி ரொம்ப நாளைக்கு பிறகு கார் டிரைவிங், அதும் நம்ப சென்னையில், அதனால் மனுஷன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்.அது பொறுக்கலையாடி உனக்கு?.
உங்க அப்பாயி ஒரு பழமொழி சொல்லும். "சோழியும் குடுமியும் சும்மா ஆடாதுனு" என்றாள் ஜெனி.
மனைவியின் சாதூர்ய பேச்சை கேட்டவன், கண்ணாடியில் தெரியும், மனைவியின் உருவத்தை பார்த்துக் கொண்டுஅய்யாக்கு மூனு மாசம் லீவ் கிடைச்சிருக்குடி.இனி முக்கியமான வேலை எல்லாம் இருக்கு.அதை எல்லாம் முடிக்கணும்டி.
அதற்கு ஜெனியோ,ஓ என்றாள் சுரத்தே இல்லாமல்.எஸ்சுடி எஸ் என்றவன், மேலும் சில விஷயங்களை சொல்லி, மனைவியை வெறுப்பேத்திக்கொண்டே வந்தான்.
அசுர வேகத்தில் வந்த காரும், மீனம்பாக்கம் ஏர்போர்டினுள் நுழைந்து, வாயில் புறம் போய் நின்றது.
தாமரை, நான் கார்லே இருக்கேன் டா.
மும்பை கமிஷ்னர் சென்னை ஏர்போர்டில் இரண்டு பெண்களோடு ஜாலி டிரிப், அது இதுனு பத்திரிக்கையில் இஷ்டத்திற்கு எழுதி தள்ளுவாங்கடா.அதுக்கு இடம் கொடுக்க எனக்கு இஷ்டம் இல்லை.
ஜெனி உன்கிட்ட நம்பர் தருவாள்.
உனக்கு எப்போ, என்னவா இருந்தாலும் உடனே கால் பண்ணு.அண்ணன் எங்கிருந்தாலும் வந்துடுவேன்.
வெறும் எட்டு மணி நேர பழக்கத்தில், இவ்வளவு அன்பாக நடந்து கொள்ளும் அண்ணனை சந்தித்ததில்,அவளுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது.
கவனத்தை வேலையில் மட்டும் போகஸ் பண்ணுடா.பார்த்து பத்ரமா போய்ட்டு வா.
சரிணா என்றவள், காரிலிருந்து கீழே இறங்கிப்போய், டிக்கியில் இருந்த டிராலியை எடுத்துக்கொண்டு, ஜெனியோடு உள்ளே செல்ல,ருத்ரனோ தனது முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு, கார் பார்க்கிங்கிற்கு சென்றான்.
ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து விட்டு, பெண்கள் இருவரும் பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது, தாமரை செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வந்தது.
ஜெனியை கட்டி அணைத்தவள், இதுவரை செய்ததற்கு நன்றியேன்க,அவளோ முறைத்து பார்த்தவள் அந்த மீசக்காரனை மட்டும் அண்ணனா ஏத்துக்கிட்ட,என்ன இல்லை போல என்க.அச்சோ, அண்ணனின் சரி பாதி அண்ணியார் தானே என்றவள், நேரம் கிடைக்கும் போது பேசு ஜெனி.
கண்டிப்பா தாமரை, விரைவில் நாம சந்திக்கலாம் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தவள், வெளியே வந்து, ருத்ரனுக்கு கால் பண்ண,சிறிது நிமிடத்தில் ருத்ரனின் காரும் அவள் முன்பு வந்து நின்றது.
பின் கதவை திறந்து ஏறப்போனவளை பார்த்தவன், ஏய் நான் என்ன உனக்கு டிரைவரா?.வந்து முன்னாடி உட்காருடி சண்டக்கோழி.
ஏன்,வரும் போது பின்னடி தானே உக்காந்துட்டு வந்தேன்.அப்போ கண்ணு தெரியலையா?.
அடியேய், கூறுகெட்டவளே, கூட தங்கச்சி இருக்கும் போது எப்படி நாம ஒன்னா உட்கார?.கீர் மாத்தும் போதுலாம், உன் மேல என் கையப்படும்.அப்போலாம் சில பல ரொமான்ஸ் எல்லாம் நடக்கும்.
இதெல்லாம் தங்கச்சி பார்த்தால் நல்லாவா இருக்கும்?.அதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு உனக்கு எங்கே அறிவு இருக்க போகுது,மரியாதையா முன்னாடி உட்கார்டி என்று கர்ஜித்தான்.
" கணவனின் குரலில் எதுவும் பேசாமல்,முன் கதவை திறந்து, சீட்டில் உட்காந்து விட்டு, கதவை சாத்த, ஜெனியின் நம்பருக்கு கால் வந்தது".
எடுத்து யார் என்று பார்க்க, அவளின் அம்மா தான் பண்ணியிருந்தார்கள்.
சில பல வழக்கமான நல விசாரிப்புகள், முடிந்த பின் அவர் போனை வைக்க, கிளம்பலாமா என்றான்.ம்ம் போலாம் என்றவள், கண்ணை மூடி சீட்டில் சாய,சிறிது நிமிடத்தில் உறங்கி விட்டாள்.
தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க, மனைவியோடு நீண்ட பயணத்தை தொடங்கினான் ருத்ர வீர சிம்மன்.
சீமக்கரை கண்ணன் வீடு...
தந்தை போனதிலிருந்து வாசலையே எட்டி, எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.எப்படியும் அவர்களிடம் சம்மதம் வாங்கிட்டு தான் வருவாரென்று, மலை அளவு நம்பி இருந்தவன் பார்வதி என்று சொல்லி கண்ணை மூட, அவளின் அழகு முகம் வந்து சென்றது.
இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மாமா உன் கழுத்துல மூணு முடிச்சு போட்டு ஊரறியே என் பொண்டாட்டியாக்கிப்பேன்டி என்று மனதிற்குள் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டான்.
வாசலில் கேட்டு திறக்கும் சத்தம் கேட்க, உள்ளேயிருந்த மரச்சேரில் உட்கார்ந்திருந்தவன்,எழுந்து வந்து பார்க்க,வேலுச்சாமி வந்து கொண்டிருந்தார்.
உள்ளே வந்தவர், அங்கிருந்து பெஞ்சில் உட்கார்ந்து கண்ணை மூட, அப்பாவே வாயை திறக்கட்டும் என்று, கண்ணனும்
அமைதியாக அவரை பார்த்து நின்றான்.
இந்தாங்க தண்ணியென்று மனைவியின் குரல் கேட்டு கண்ணை திறந்தவர்,அவர் கையில் இருந்த சொம்பை தட்டி விட்டு,இது ஒன்னு தான் இப்போ குறைச்சல்.
என்னாச்சுங்க?, எதுக்கு இவ்வளவு கோவமென்றார் சரோஜா.
வேற என்னடி பண்ண சொல்லுற?.
தன்னோட ரெண்டு மகளுக்கும், உள்ளூரிலே மாப்பிள்ளைய பேசி முடிச்சிட்டோம்னு, அந்த வள்ளி பொண்ணு ஆணித்தரமா சொல்லுது.
நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன், ஒரு புண்ணியமும் இல்லை.
பொண்ண கட்டி உள்ள பூந்து நாம உசரத்துல இருக்கலானு நான் கனவு கண்டா, அந்த வள்ளி பொண்ணு எல்லாத்தையும் தரமட்டமாக்கிட்டு என்றார் வேலுச்சாமி.
அப்பா, நெஜமா நீ சொல்றது? என்று கண்ணன் கேட்க, ஆமாடா.பார்வதிக்கு பொன்னுரங்கன் மகன் செல்வத்தையும், கவிதாவுக்கு தம்புசாமி மகன் அன்பழகனையும் பேசிட்டாங்க. அதுவுமில்லாமல், ஏனாதில பொண்ணு அமைஞ்சிருக்கு பெருமாளுக்கு.
எப்படியும் மூன்று கல்யாணமும் ஒன்னா தான் நடக்குமென்று சொல்லியவர், எதுக்கும் லாயக்கு இல்லாத புள்ளைய பெத்து வச்சிருக்கியேடி.
ஆசப்பட்டவனுக்கு அந்த பொண்ணையே வளைக்க துப்பு இல்லையென்று, தன் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், மகனையும் வேலுச்சாமி கடிந்து கொண்டார்.