Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
நீலகிரி:
மயிலா...எங்கே மருதுனு வேதா கேட்க, என் பையன் ஆசைய நானே இன்றைக்கு உயிரோட புதைச்சிட்டேனே நர்சம்மா என்று தலையில் அடித்துக்கொண்டு கதறியவர் என்னை மன்னிஞ்சிடுங்கம்மா.அந்த நேரத்தில் உயிர் போகுற நிலமையில் இருந்த ஜீவனுக்கு,"என் மனசாட்சி படி அதை தான் செய்ய தோன்றியதுங்கம்மா".
என் பையனோட ஆசைகள்,விருப்பம், எதுவும் எனக்கு அப்போ பெருசா தெரியலைங்கம்மா.இப்போ தான் நான் செய்தது புரிகிறது.
மயிலா,மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நீ எந்த தப்பையும் பண்ணலை.நீ சொல்லவில்லை என்றாலும்,அந்த சூழலை பார்த்து,"நானும் இதை தான் சொல்லிருப்பேன்" என்றவர்,வா முதல்ல மருதுவை போய் பார்க்கலாம்.
பின்னர் இருவரும் அழுது வடியும் முகத்தோடு வருவதை, அங்கிருப்பவர்கள் பார்த்துக்கொண்டே சென்றனர்.
வெளியே நிற்கின்ற பவி தந்தையோட சொந்தங்களிடம் வந்தவர்,அடுத்து ஆக வேண்டியது என்னவென்று கேட்டார் வேதா?.
தூரத்தில் அமர்ந்திருந்த பவியின் தாத்தாவை கையைக்காட்ட,அவரிடம் சென்ற வேதா,தான் யாரென்று சுருக்கமாக சொல்ல,அதைக்கேட்டவர், தனது கையை தூக்கி கும்பிட்டார்.
அய்யோஓஓ...என்ன காரியம் பண்ணுறீங்கனு பதறிய வேதா,அவரின் கையை பிடித்து கீழே இறக்கியவர், உங்கள் வயது என்ன,என்னை போய் இப்படி என்றார்.
அம்மாடி வேதா...என்று கதறி அழுதவர், உன்னை பற்றி பதினைந்து வருஷத்திற்கு முன்னவே என் மகன் சொல்லிருக்கான் மா.அவன் அம்மாகாரி தான் பணம்,பேராசையால் மகனையும், மருமகளையும் ஏத்துக்கவில்லை.
ஆனால் என் பையனையும், மருமகளையும்,நான் தெரியாம வந்து பார்த்துட்டு தான்மா இருந்தேன்.
ஒரு நாள் நான் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்ததை என் மகன் பார்த்துட்டான்.அப்போ தான் உங்க எல்லாரையும் பற்றி சொன்னான்.
அதற்கு பிறகு நான் நீலகிரிக்கு வரலைமா.என் மகன் குடும்பத்தையும் பார்க்கவில்லை.
காலம் கடந்த பிறகு என் மனைவிக்கு எது வாழ்க்கைக்கு தேவைனு புரிய, இப்போ போய் இந்த ஆண்டவன் இப்படி எம் புள்ளைய பறிச்சிக்கிட்டானேமானு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதவர்,எம்மாடி மருமவளையாவது காப்பாத்திடலாம் தானே?.
அந்த மகராசியும் போய் சேர்ந்துட்டாங்கைய்யானு மயிலா அழ,அய்யோ என்று இன்னும் கதறி அழுதார்.அவர் அழட்டுமென இருவரும் அமைதியாக இருந்தனர்".
ஓரளவுக்கு அவரின் அழுகை குறைந்திருப்பதை பார்த்து விட்டு, அய்யா,"அடுத்து,ஆக வேண்டியதை பார்க்கனுமென்க,புரியுதுமா என்றவர் பேத்திய நினைச்சா தான் வேதனையா இருக்குமா.
இப்படி ஆத்தாளும்,அப்பனும் ஒரே நாளிலா போகணும்.அம்மாடி, இத்தனை வருஷம் அவங்க வாழ்ந்த இடத்துக்கே கூப்பிட்டு போய்டலாம் மா.
இன்னும் என் பொண்டாட்டிக்கு விஷயம் தெரியாதுனு அழுது கொண்டே சொன்னவர்,இனி பவி என் பொறுப்பு என்க...
அய்யா....இன்றிலிருந்து பவி என் மருமகளென்று மயிலா சொல்லவும், என்னம்மா சொல்லுறனு அதிர,உள்ளே நடந்ததை பற்றி சொல்லவும்,அம்மாடி வயசுல சின்னவங்களா இருந்தாலும், உன் கால்ல விழுறேனென்ற பெரியவர் மயிலா காலில் விழப்போனார்.
அய்யோ....இவ்வளவு பெரிய பாவத்தை என் தலையில சுமக்க வைக்காதீங்கய்யா என மயிலாவும் கண்ணீரோடு சொன்னார்.
டாக்டர் கிட்ட பேசலாம்னு வேதா சொல்ல,ம்ம் என்றவாறு இருவரும் வேதாவோடு ஹாஸ்பிட்டல் உள்ளே சென்றனர்.
ஃபார்மாலிட்டிஸ் முடிந்து இருவரின் பாடியை இவர்களிடம் கொடுக்க மணி மாலை ஆறு ஆனது.
"ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றி விட", அவர்களுக்கு நீலகிரி அட்ரஸை வேதா சொல்லி,பணத்தையும் கொஞ்சம் கொடுத்தார்.அதுவரை தூரமா இருந்து இவர்களை பார்த்துக்கொண்டிருந்த மருதுவோ இவர்களிடம் வந்தான்.
நாமும் கிளம்பலாமென வேதாவிடம் சொல்ல",சரிப்பா என்றவர்,மயிலா பவிய கூப்பிட்டு வா என்றார்.தாய் இறந்த அதிர்ச்சியில் மௌனமானவள் தான்,இதுவரை வாயை திறக்கவில்லை.
சித்த பிரம்மை பிடித்த போல பார்வையை நேராக வைத்துக்கொண்டு, சுற்றம் நினைவு இல்லாமல்,ஹாஸ்பிட்டல் வராண்டாவில் உட்கார்ந்திருந்த பவியிடம் வந்தவர், அவள் கையை பிடித்து எழுப்ப, பொம்மை போல அவரோடு வந்தாள்.
"பேத்தியை பார்த்த தாத்தாவோ சத்தமில்லாமல் அழ",அதிர்ச்சியில் இருக்காள்.சரியாகிடுமென்ற வேதாவோ வேன் கதவை திறந்து உள்ளே சென்று உட்கார,பவியும் அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
மயிலா அவளுக்கு அருகில் அமர, தாத்தா மருதுவின் அருகில் அமர, மற்றவர்கள் தாங்கள் வந்த வண்டியிலே வந்து விடுகிறோம் என்றனர்.
வேனை அங்கிருந்து ஸ்டார்ட் பண்ணியவன்,இரவு ஒன்பது மணிக்கு நீலகிரியில் உள்ள பவியின் வீட்டிற்கு முன்பு வந்து நிறுத்தினான்.
அங்கு மூக்கையனும் அனைத்தையும் தயாராக செய்து வைத்திருக்க, இருவரின் உடலை சுமந்த ஆம்புலன்ஸூம் வந்து சேர்ந்தது.
அங்கிருந்த மலை வாழ்மக்கள், அவர்களோடு எஸ்டேட்டில் வேலை செய்பவர்களெல்லாரும்,இருவரின் உடலை இறக்கி கண்ணாடி பெட்டிக்குள் வைப்பதை பார்த்து கதறி அழுதனர்.
பவியோ இங்குள்ள சூழலுக்கும் எனக்கும்,எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போலவிட்டத்தை பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
சீமக்கரை..கதிர் வீடு...
நண்பர்களும் தூங்கி எழுவதற்கு காலை எட்டு மணி ஆனது.என்ன இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமென்று இருவரும் பேசிக்கொண்டே ப்ரஷ் ஆகி கீழே வந்தனர்.
இன்றைக்கு மாட்டுக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்பதால்,வீட்டில் வேலைகள் பர பரப்பாக நடந்து கொண்டிருந்தது.
செல்வியோ கீழே வந்த இருவருக்கும் டீயை கொடுத்துச் சென்றாள்.
அப்பு...சாமி வீடு வரைக்கும் போயிருக்கான்னு அப்பாயி சொல்ல, ம்ம் என்றவன்,சரி எத்தனை மணிக்கு படைக்கனும் என்கவும் சமையல் ஆனதும் நேரத்தை பார்த்து ஆரம்பிச்சிட வேண்டியது தானென்றார் வள்ளி அப்பாயி.
சரிடா...நான் போய் பார்வதி அத்தைக்கு வாங்கிட்டு வந்ததை கொடுத்துட்டு வரேன் என்றவாரே அப்பாயின் அறைக்குள் சென்ற ஜான்,அங்கிருந்த கவரை எடுத்துக்கொண்டு,வேலு வீட்டிற்கு சென்றான்.
எங்க அப்பாயி தாத்தா? என்று கதிர் கேட்க,பின்னாடி நல்லவனோடு மாட்டு கொட்டாயில் இருக்கார்பா.அப்படியா என்ற கதிர் தோட்டத்தை நோக்கி சென்றான்.
அங்கே பிரகாசமும், வளவனும் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருக்க, நிலவன் அவைகளுக்கு தீவனம் கலந்து வைத்துக் கொண்டிருந்தான்.
அவர்களிடம் வந்த கதிர், தாத்தா மாடுங்களுக்கு கயிறை மாற்றி விடலாமா? என்க,சொல்லி அனுப்பிருக்கேன் அப்பு.
சரி தாத்தா என்றவன்,வீட்டின் உள்ளே சென்று,மாடுகளுக்காக வாங்கி வந்த புது கயிறுகளையும்,ஐய்யனாரிடம் வைத்து படைத்த சங்கையும் எடுத்து வந்தான்.அப்பொழுது பூசாரியும் வந்து விட,வா ணா என்றான்.
வரேன்டா தம்பினு கதிரிடமிருந்த கயிறுகளை வாங்கியவர்,கழுத்தில் கட்டும் கயிறுகளில் சங்கை கோர்த்து முடிச்சு போட்டார்.காளை மாடு இரண்டிற்கும் சங்கை கோர்த்தவர், கதிரு மாட்ட ஓட்டிட்டு வாடா என்க, இதோணா என்று கவனையின் அருகில் சென்றவன் முதலில் பசுக்களுக்கு கயிற்றை கட்டிக்கலாமாணா என்கவும் சரிடா.ஓட்டிட்டு வா என்றவர்,அங்கிருந்த கயிற்றை எடுத்து,கையால் அளவு எடுத்து மூக்குக்கும்,கழுத்துக்கும் தனியாக எடுத்துக்கொண்டவர், பெரியப்பா என்று குரல் கொடுக்க, வரேன் வரேன் என்றார் பிரகாசம் தாத்தா.
பின்னர் அனைத்து மாடுகளுக்கும், புதுக்கயிறை மாற்றி முடிக்கவே போதும், போதும் என்றானது.
வேலு வீடு...
வாசலின் ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு,அத்தை என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தவனிடம் வாப்பா என்றார்.எங்கே மாமாவையும், இவனையும் காணும்? என்க, பக்கத்து வீட்டு பையன் எதோ மிஷின் வேலையா கூப்பிட்டானு போயிருக்கான் கண்ணா. கை கழுவிட்டு வா சாப்டலாம் என்க, ம்ம் என்றான்.
பின்னர் ஜான் சாப்பிட உட்காரவும், வேலுவும் அங்கு வந்து சேர்ந்தான். இருவருக்கும் சூடான டிபனை பரிமாறானார்.
எத்தனை வருஷம் ஆகிட்டு உன் சமையலை சாப்பிட்டு என்றவாரே ஜான் சாப்பிட,எனக்கு தான் மருமகனே அதுல இருந்து இன்னும் விடுதலை கிடைக்கலை என்றாவாரே உள்ளே வந்தார் செல்வம்.
ம்கூம்...என முகத்தை நொடித்து காட்டியவர்,சாப்பாடு எடுத்து வைக்கட்டுமானு கணவரிடம் கேட்க, அந்த கல்லை( இட்லி? அவனுங்களுக்கே குடு.
எனக்கு ரெண்டு தோசைய மட்டும் சுட்டு குடு என்றவர்,வராண்டாவில் இருந்த தண்ணீரில் கையை கழுவிட்டு வர,சிறிது நிமிடத்தில் சூடான இரண்டு தோசையோடு வந்த பார்வதி, கணவரின் முன்பு தட்டை வைத்து சென்றார்.
இரண்டு நிமிடங்கள் சென்றும் தொட்டுக்கொள்ள எதுவும் எடுத்து வராமலிருக்கும் மனைவியை கண்டு, அடியேய் வெறும் தோசைய எப்படி டி மனுஷன் சாப்டுவான்?.
நீங்க தானே தோசை மட்டும் சுட்டு தானு சொன்னீங்க என்று சமையல் கட்டிலிருந்து குரல் கொடுக்க, உங்கப்பன் மவளே வந்தேன் என்ன நடக்கும்னு தெரியாது என்றார்.
இருவரின் பேச்சுகளை கேட்டு இவனுங்களோ சிரித்துக்கொண்டே சாப்பிட்டனர்.
போதாத குறைக்கு எம்மா...அந்த மல்லி சட்னிய எடுத்தாயேன்னு வேலு தந்தையை பார்த்து சொல்ல, ஆத்தாளும்,மவனும் நக்கல் புடுச்சதுங்கனு முறைத்தார்.
பின்னர் சாம்பாரையும்,மல்லி சட்னியையும் எடுத்து வந்து கணவருக்கு பார்வதி பரிமாறிக்கொண்டே இன்னும் ரெண்டு சுடட்டுமானு பார்வதி கேட்க, போதும் நீ சாப்டு என்றானுங்கள்.
ஏன் டி.... இங்க ஒருத்தன் இருக்கனே என்கவும்,அம்மா.அந்த பழையது மீந்துச்சினு சொன்னியே, எடுத்து வந்து கொடு என்றான்.
ஆமாடி... எடுத்து வந்து உன் மவன் தலையிலே கொட்டு.பெத்துவச்சிருக்கா பாரு புள்ளைய.ச்சை என்றவரை பார்த்த வேலுவோ, என்னப்பா அம்மாவ என்னமோ சொல்ற போல இருக்கே?.
அடேய்.... இந்த நாரதர் வேலையை அவ கிட்ட வச்சிக்க என்றவாறு,பார்வதினு குரல் கொடுக்க, சூடான இரண்டு தோசைகளோடு வந்தவர், இந்தாங்க என்று கணவரின் தட்டில் வைத்து சென்றார்.
மயிலா...எங்கே மருதுனு வேதா கேட்க, என் பையன் ஆசைய நானே இன்றைக்கு உயிரோட புதைச்சிட்டேனே நர்சம்மா என்று தலையில் அடித்துக்கொண்டு கதறியவர் என்னை மன்னிஞ்சிடுங்கம்மா.அந்த நேரத்தில் உயிர் போகுற நிலமையில் இருந்த ஜீவனுக்கு,"என் மனசாட்சி படி அதை தான் செய்ய தோன்றியதுங்கம்மா".
என் பையனோட ஆசைகள்,விருப்பம், எதுவும் எனக்கு அப்போ பெருசா தெரியலைங்கம்மா.இப்போ தான் நான் செய்தது புரிகிறது.
மயிலா,மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நீ எந்த தப்பையும் பண்ணலை.நீ சொல்லவில்லை என்றாலும்,அந்த சூழலை பார்த்து,"நானும் இதை தான் சொல்லிருப்பேன்" என்றவர்,வா முதல்ல மருதுவை போய் பார்க்கலாம்.
பின்னர் இருவரும் அழுது வடியும் முகத்தோடு வருவதை, அங்கிருப்பவர்கள் பார்த்துக்கொண்டே சென்றனர்.
வெளியே நிற்கின்ற பவி தந்தையோட சொந்தங்களிடம் வந்தவர்,அடுத்து ஆக வேண்டியது என்னவென்று கேட்டார் வேதா?.
தூரத்தில் அமர்ந்திருந்த பவியின் தாத்தாவை கையைக்காட்ட,அவரிடம் சென்ற வேதா,தான் யாரென்று சுருக்கமாக சொல்ல,அதைக்கேட்டவர், தனது கையை தூக்கி கும்பிட்டார்.
அய்யோஓஓ...என்ன காரியம் பண்ணுறீங்கனு பதறிய வேதா,அவரின் கையை பிடித்து கீழே இறக்கியவர், உங்கள் வயது என்ன,என்னை போய் இப்படி என்றார்.
அம்மாடி வேதா...என்று கதறி அழுதவர், உன்னை பற்றி பதினைந்து வருஷத்திற்கு முன்னவே என் மகன் சொல்லிருக்கான் மா.அவன் அம்மாகாரி தான் பணம்,பேராசையால் மகனையும், மருமகளையும் ஏத்துக்கவில்லை.
ஆனால் என் பையனையும், மருமகளையும்,நான் தெரியாம வந்து பார்த்துட்டு தான்மா இருந்தேன்.
ஒரு நாள் நான் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்ததை என் மகன் பார்த்துட்டான்.அப்போ தான் உங்க எல்லாரையும் பற்றி சொன்னான்.
அதற்கு பிறகு நான் நீலகிரிக்கு வரலைமா.என் மகன் குடும்பத்தையும் பார்க்கவில்லை.
காலம் கடந்த பிறகு என் மனைவிக்கு எது வாழ்க்கைக்கு தேவைனு புரிய, இப்போ போய் இந்த ஆண்டவன் இப்படி எம் புள்ளைய பறிச்சிக்கிட்டானேமானு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதவர்,எம்மாடி மருமவளையாவது காப்பாத்திடலாம் தானே?.
அந்த மகராசியும் போய் சேர்ந்துட்டாங்கைய்யானு மயிலா அழ,அய்யோ என்று இன்னும் கதறி அழுதார்.அவர் அழட்டுமென இருவரும் அமைதியாக இருந்தனர்".
ஓரளவுக்கு அவரின் அழுகை குறைந்திருப்பதை பார்த்து விட்டு, அய்யா,"அடுத்து,ஆக வேண்டியதை பார்க்கனுமென்க,புரியுதுமா என்றவர் பேத்திய நினைச்சா தான் வேதனையா இருக்குமா.
இப்படி ஆத்தாளும்,அப்பனும் ஒரே நாளிலா போகணும்.அம்மாடி, இத்தனை வருஷம் அவங்க வாழ்ந்த இடத்துக்கே கூப்பிட்டு போய்டலாம் மா.
இன்னும் என் பொண்டாட்டிக்கு விஷயம் தெரியாதுனு அழுது கொண்டே சொன்னவர்,இனி பவி என் பொறுப்பு என்க...
அய்யா....இன்றிலிருந்து பவி என் மருமகளென்று மயிலா சொல்லவும், என்னம்மா சொல்லுறனு அதிர,உள்ளே நடந்ததை பற்றி சொல்லவும்,அம்மாடி வயசுல சின்னவங்களா இருந்தாலும், உன் கால்ல விழுறேனென்ற பெரியவர் மயிலா காலில் விழப்போனார்.
அய்யோ....இவ்வளவு பெரிய பாவத்தை என் தலையில சுமக்க வைக்காதீங்கய்யா என மயிலாவும் கண்ணீரோடு சொன்னார்.
டாக்டர் கிட்ட பேசலாம்னு வேதா சொல்ல,ம்ம் என்றவாறு இருவரும் வேதாவோடு ஹாஸ்பிட்டல் உள்ளே சென்றனர்.
ஃபார்மாலிட்டிஸ் முடிந்து இருவரின் பாடியை இவர்களிடம் கொடுக்க மணி மாலை ஆறு ஆனது.
"ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றி விட", அவர்களுக்கு நீலகிரி அட்ரஸை வேதா சொல்லி,பணத்தையும் கொஞ்சம் கொடுத்தார்.அதுவரை தூரமா இருந்து இவர்களை பார்த்துக்கொண்டிருந்த மருதுவோ இவர்களிடம் வந்தான்.
நாமும் கிளம்பலாமென வேதாவிடம் சொல்ல",சரிப்பா என்றவர்,மயிலா பவிய கூப்பிட்டு வா என்றார்.தாய் இறந்த அதிர்ச்சியில் மௌனமானவள் தான்,இதுவரை வாயை திறக்கவில்லை.
சித்த பிரம்மை பிடித்த போல பார்வையை நேராக வைத்துக்கொண்டு, சுற்றம் நினைவு இல்லாமல்,ஹாஸ்பிட்டல் வராண்டாவில் உட்கார்ந்திருந்த பவியிடம் வந்தவர், அவள் கையை பிடித்து எழுப்ப, பொம்மை போல அவரோடு வந்தாள்.
"பேத்தியை பார்த்த தாத்தாவோ சத்தமில்லாமல் அழ",அதிர்ச்சியில் இருக்காள்.சரியாகிடுமென்ற வேதாவோ வேன் கதவை திறந்து உள்ளே சென்று உட்கார,பவியும் அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
மயிலா அவளுக்கு அருகில் அமர, தாத்தா மருதுவின் அருகில் அமர, மற்றவர்கள் தாங்கள் வந்த வண்டியிலே வந்து விடுகிறோம் என்றனர்.
வேனை அங்கிருந்து ஸ்டார்ட் பண்ணியவன்,இரவு ஒன்பது மணிக்கு நீலகிரியில் உள்ள பவியின் வீட்டிற்கு முன்பு வந்து நிறுத்தினான்.
அங்கு மூக்கையனும் அனைத்தையும் தயாராக செய்து வைத்திருக்க, இருவரின் உடலை சுமந்த ஆம்புலன்ஸூம் வந்து சேர்ந்தது.
அங்கிருந்த மலை வாழ்மக்கள், அவர்களோடு எஸ்டேட்டில் வேலை செய்பவர்களெல்லாரும்,இருவரின் உடலை இறக்கி கண்ணாடி பெட்டிக்குள் வைப்பதை பார்த்து கதறி அழுதனர்.
பவியோ இங்குள்ள சூழலுக்கும் எனக்கும்,எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போலவிட்டத்தை பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
சீமக்கரை..கதிர் வீடு...
நண்பர்களும் தூங்கி எழுவதற்கு காலை எட்டு மணி ஆனது.என்ன இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமென்று இருவரும் பேசிக்கொண்டே ப்ரஷ் ஆகி கீழே வந்தனர்.
இன்றைக்கு மாட்டுக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்பதால்,வீட்டில் வேலைகள் பர பரப்பாக நடந்து கொண்டிருந்தது.
செல்வியோ கீழே வந்த இருவருக்கும் டீயை கொடுத்துச் சென்றாள்.
அப்பு...சாமி வீடு வரைக்கும் போயிருக்கான்னு அப்பாயி சொல்ல, ம்ம் என்றவன்,சரி எத்தனை மணிக்கு படைக்கனும் என்கவும் சமையல் ஆனதும் நேரத்தை பார்த்து ஆரம்பிச்சிட வேண்டியது தானென்றார் வள்ளி அப்பாயி.
சரிடா...நான் போய் பார்வதி அத்தைக்கு வாங்கிட்டு வந்ததை கொடுத்துட்டு வரேன் என்றவாரே அப்பாயின் அறைக்குள் சென்ற ஜான்,அங்கிருந்த கவரை எடுத்துக்கொண்டு,வேலு வீட்டிற்கு சென்றான்.
எங்க அப்பாயி தாத்தா? என்று கதிர் கேட்க,பின்னாடி நல்லவனோடு மாட்டு கொட்டாயில் இருக்கார்பா.அப்படியா என்ற கதிர் தோட்டத்தை நோக்கி சென்றான்.
அங்கே பிரகாசமும், வளவனும் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருக்க, நிலவன் அவைகளுக்கு தீவனம் கலந்து வைத்துக் கொண்டிருந்தான்.
அவர்களிடம் வந்த கதிர், தாத்தா மாடுங்களுக்கு கயிறை மாற்றி விடலாமா? என்க,சொல்லி அனுப்பிருக்கேன் அப்பு.
சரி தாத்தா என்றவன்,வீட்டின் உள்ளே சென்று,மாடுகளுக்காக வாங்கி வந்த புது கயிறுகளையும்,ஐய்யனாரிடம் வைத்து படைத்த சங்கையும் எடுத்து வந்தான்.அப்பொழுது பூசாரியும் வந்து விட,வா ணா என்றான்.
வரேன்டா தம்பினு கதிரிடமிருந்த கயிறுகளை வாங்கியவர்,கழுத்தில் கட்டும் கயிறுகளில் சங்கை கோர்த்து முடிச்சு போட்டார்.காளை மாடு இரண்டிற்கும் சங்கை கோர்த்தவர், கதிரு மாட்ட ஓட்டிட்டு வாடா என்க, இதோணா என்று கவனையின் அருகில் சென்றவன் முதலில் பசுக்களுக்கு கயிற்றை கட்டிக்கலாமாணா என்கவும் சரிடா.ஓட்டிட்டு வா என்றவர்,அங்கிருந்த கயிற்றை எடுத்து,கையால் அளவு எடுத்து மூக்குக்கும்,கழுத்துக்கும் தனியாக எடுத்துக்கொண்டவர், பெரியப்பா என்று குரல் கொடுக்க, வரேன் வரேன் என்றார் பிரகாசம் தாத்தா.
பின்னர் அனைத்து மாடுகளுக்கும், புதுக்கயிறை மாற்றி முடிக்கவே போதும், போதும் என்றானது.
வேலு வீடு...
வாசலின் ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு,அத்தை என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தவனிடம் வாப்பா என்றார்.எங்கே மாமாவையும், இவனையும் காணும்? என்க, பக்கத்து வீட்டு பையன் எதோ மிஷின் வேலையா கூப்பிட்டானு போயிருக்கான் கண்ணா. கை கழுவிட்டு வா சாப்டலாம் என்க, ம்ம் என்றான்.
பின்னர் ஜான் சாப்பிட உட்காரவும், வேலுவும் அங்கு வந்து சேர்ந்தான். இருவருக்கும் சூடான டிபனை பரிமாறானார்.
எத்தனை வருஷம் ஆகிட்டு உன் சமையலை சாப்பிட்டு என்றவாரே ஜான் சாப்பிட,எனக்கு தான் மருமகனே அதுல இருந்து இன்னும் விடுதலை கிடைக்கலை என்றாவாரே உள்ளே வந்தார் செல்வம்.
ம்கூம்...என முகத்தை நொடித்து காட்டியவர்,சாப்பாடு எடுத்து வைக்கட்டுமானு கணவரிடம் கேட்க, அந்த கல்லை( இட்லி? அவனுங்களுக்கே குடு.
எனக்கு ரெண்டு தோசைய மட்டும் சுட்டு குடு என்றவர்,வராண்டாவில் இருந்த தண்ணீரில் கையை கழுவிட்டு வர,சிறிது நிமிடத்தில் சூடான இரண்டு தோசையோடு வந்த பார்வதி, கணவரின் முன்பு தட்டை வைத்து சென்றார்.
இரண்டு நிமிடங்கள் சென்றும் தொட்டுக்கொள்ள எதுவும் எடுத்து வராமலிருக்கும் மனைவியை கண்டு, அடியேய் வெறும் தோசைய எப்படி டி மனுஷன் சாப்டுவான்?.
நீங்க தானே தோசை மட்டும் சுட்டு தானு சொன்னீங்க என்று சமையல் கட்டிலிருந்து குரல் கொடுக்க, உங்கப்பன் மவளே வந்தேன் என்ன நடக்கும்னு தெரியாது என்றார்.
இருவரின் பேச்சுகளை கேட்டு இவனுங்களோ சிரித்துக்கொண்டே சாப்பிட்டனர்.
போதாத குறைக்கு எம்மா...அந்த மல்லி சட்னிய எடுத்தாயேன்னு வேலு தந்தையை பார்த்து சொல்ல, ஆத்தாளும்,மவனும் நக்கல் புடுச்சதுங்கனு முறைத்தார்.
பின்னர் சாம்பாரையும்,மல்லி சட்னியையும் எடுத்து வந்து கணவருக்கு பார்வதி பரிமாறிக்கொண்டே இன்னும் ரெண்டு சுடட்டுமானு பார்வதி கேட்க, போதும் நீ சாப்டு என்றானுங்கள்.
ஏன் டி.... இங்க ஒருத்தன் இருக்கனே என்கவும்,அம்மா.அந்த பழையது மீந்துச்சினு சொன்னியே, எடுத்து வந்து கொடு என்றான்.
ஆமாடி... எடுத்து வந்து உன் மவன் தலையிலே கொட்டு.பெத்துவச்சிருக்கா பாரு புள்ளைய.ச்சை என்றவரை பார்த்த வேலுவோ, என்னப்பா அம்மாவ என்னமோ சொல்ற போல இருக்கே?.
அடேய்.... இந்த நாரதர் வேலையை அவ கிட்ட வச்சிக்க என்றவாறு,பார்வதினு குரல் கொடுக்க, சூடான இரண்டு தோசைகளோடு வந்தவர், இந்தாங்க என்று கணவரின் தட்டில் வைத்து சென்றார்.