Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
நீலகிரி....
இதுவரை தன் அம்மா சொன்னதையெல்லாம் கேட்டவனுக்கு தன்னை மறுப்பதற்கு இனத்தை தவிர வேறு எதுவும் பெரிதாக காரணங்கள் இருக்காதென்பது புரிந்தது.
தம்பி.....என்ன நடக்கும்னு இருக்கோ அந்த மலையம்மன் புண்ணியத்தில் அது தான் பா நடக்கும்.வீணா மனச போட்டு குழப்பிக்காதப்பா என்றவர், மதியத்துக்கான உணவை சமைக்க தொடங்கினார்.
" மேய்சலுக்கு ஆடு,மாடுகளை கூப்பிட்டு போயிருந்த மருதுவின் தந்தை மூக்கையனோ சாப்பிட வந்தவர் ஏட்டி...சோறு ஆக்கிட்டியா?
செத்த இருங்களென்றவர், சமைத்தவைகளை வேதாவிற்கு எடுத்து வைத்து விட்டு,மருதுவையும் கூப்பிட, காலையில் சாப்பிட்டதே செரிக்காத போல இருக்குமா,பிறகு சாப்டுறேன் என்றவன் மரத்து நிழலில் இருக்கும் கட்டிலில் படுத்து விட்டான்.
கணவருக்கு உணவை பரிமாறியவர், நடந்த விஷயத்தை சொல்ல,கல்யாணத்திற்காவது ஆத்தாளும் மவனும் கூப்பிடுவீங்களா?, இல்லையா?.
ஏஞ்சாமி....இப்படி என்று மயிலா பதற, அட சும்மா கேட்டேன்டி.தாமரையோ, இல்லை பவியோ இரண்டு பேர்ல யாரு நம்ம ஊட்டுக்கு மருமவளா வந்தாலும், இல்லை இரண்டு பேருமே வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் புள்ளனு தனது மனதில் இருப்பதை சொன்னார்.
ஏதேஏஏஏஏ...ரெண்டு பேருமா!
ஆஹான் அய்யா மனசுல இப்படி வேற எண்ணமிருக்கோனு கோவமாக கேட்க, ஏட்டி...சும்மா சொன்னேன் டி.இனி தான் எனக்கு மருமவள் புதுசா பொறக்க போறது இல்லை.
"அதனால்....பாரத்தை ஆத்தா மேல போடு.அவளுக்கு எதை குடுக்கனும்னு தெரியும்"என்றவர்,நான் போய்டு வரேன் புள்ளனு அங்கிருந்து சென்றார்.
வேதாவுக்கு எடுத்து வைத்த உணவு கூடையோடு வெளியே வந்தவருக்கு, மருத்துவமனையின் வாசலில் வண்டி நிற்பது தெரிய,அப்போ வேதாம்மா அங்க தான் இருப்பாங்க என நினைத்துக்கொண்டு அங்கே செல்ல, வேதாவும் இன்னொரு செவிலியரும் வந்திருந்த மருந்துகள் சரியாக இருக்கா என்று லிஸ்டில் செக் பண்ணி கொண்டிருந்தனர்.
"நர்சம்மா என்று ஜன்னல் வழியாக மயிலா கூப்பிட,வேலையில் கவனமாக இருந்தவர் குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க,அங்கே மயிலா நிற்பது தெரிந்து,உள்ளே வா என்று சைகை காட்ட,ம்ம் என்று தலையசைத்து அங்கிருந்து முன் பக்க வாசல் வழியாக உள்ளே வந்தவர்,சாப்பாடு கொண்டு வந்தேன்.
தனது பேகில் இருந்த வீட்டு சாவியை எடுத்து மயிலாவிடம் கொடுத்து தலையசைத்தார்.
வேலையில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் எந்த பேச்சையும் வேதா வைத்துக்கொள்ள மாட்டார் கவனம் சிதறும் என்ற எண்ணம் தான்.சாவியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வேதா வீட்டிற்கு சென்றவர்,எடுத்து வந்த உணவுகளை ஹாட் பேக்கில் மாற்றி வைத்து விட்டு,அந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கே போய் சாவியை கொடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
"மகனின் அருகில் வந்தவருக்கு அவன் தூங்க வில்லை என்பது தெரிய,உள்ளே சென்றவர்,மகனுக்கு பிடித்த மல்லி டீயை போட்டு எடுத்து வந்தவர்,அய்யா மருது என்க,கண்ணை திறந்தவனிடம் இதை குடிப்பா.
"கட்டில் மேலிருந்து எழுந்து அமர்ந்தவன் தாயின் கையிலிருந்த டம்ளரை வாங்கி குடிக்க,அதன் சுவை வழக்கம் போல அவன் மனநிலையை இயல்பாக்கியது. அம்மா...அங்கேயும் இந்த பொடி தீர்ந்துடிச்சிமா.அதுக்கு என்னப்பா, அரைச்சிட்டா போகுது.
" தம்பி... என்க,சொல்லும்மா.பின் மூக்கையனிடம் சொன்னதையும், அதற்கு அவர் சொன்ன பதிலையும் கேட்டவன் ஹாஹாஹா...என மனம் விட்டு சிரித்தவன்,உன் புருஷனுக்கு குசும்பு பாறேன் மா.
ஒருத்திக்கே வழியில்லையாம்,இந்த லட்சணத்தில் ரெண்டா... அய்யோஓஓ அய்யோ என்றவன்,ம்மா...உன் புருஷற் சொன்னதை மறந்தும் அந்த சண்டகோழி கிட்ட சொல்லிடாதே, அவ்வளவு தான் சாமியாடிடுவாள்.
மகன் சொன்னதை கேட்டு மயிலாவிற்கும் சிரிப்பு வந்தது.காலையில் விளையாட போன சின்ன மகன் இப்பொழுது தான் வீட்டிற்கு வருவதை பார்த்தவர் எழுந்து வீட்டிற்குள் சென்று, தட்டில் சாப்பாடு போட,அம்மா பசிக்குது என்று சின்னவனும் வீட்டிற்குள் வந்தான்.
" ஏம்பா...எப்போ போனவன் நீ, இவ்வளவு நேரம் இல்லாமல் இப்போ தான் பசி கண்டுது போலனு சொல்லிக்கொண்டே அவனுக்கான சாப்பாட்டு தட்டை கொடுக்க, வாங்கியவன் வேக வேகமாக அள்ளி சாப்பிட புரையேறியது.
"பார்த்துடா என்றபடியே உள்ளே வந்தவன் தம்பி தலையில் ஓங்கி தட்ட, படுபாவி பயலே,இதான் சாக்குனு எப்படி அடிக்கிறான் பாரென்று உள்ளுக்குள் அண்ணனை திட்டிக்கொண்டான்.
தாமரை வீடு....
கணவர் சாப்பிட்டு முடித்த பிறகு கவிதாவும் அமர்ந்து சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்தவர்,பூப்பறிக்கும் கூடையோடு தோட்டத்திற்குள் சென்று,அங்கே பந்தலில் பூத்துக்குலுங்கும் மல்லிகை பூவை பறித்து எடுத்து வந்து பூ கட்டிக்கொண்டே டீவி பார்த்தார்.
நேரம் ஐந்து ஆகி விட்டது என்பது கடிகாரத்தில் உள்ள மணி சத்தத்தில் தெரிய,கட்டிய பூக்களை கவரில் போட்டு முடிந்தவர்,அதை ஃப்ரிஜ் மேல் வைத்து விட்டு,டீ போட, தாமரையும் தூங்கி எழுந்து வெளியே வந்தாள்.
அதைப்போல கடலை மேட்டில் இருந்த நால்வரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும் சேர்த்தே டீ வைத்ததால் அனைவருக்கும் டம்ளரில் ஊற்றியவர், எடுத்து வந்து கொடுத்தார்.
அப்பொழுது... அத்தை...என கவிதா கூப்பிட சொல்லுத்தா என்றார் கலா அப்பாயி.நம்ப தாமரைக்கு ஒரு வரன் வந்துருக்குனு வேதா சொல்லுச்சி.
அதைக்கேட்ட நால்வருக்கும் மகிழ்ச்சியாக,என்னத்தா சொல்லுற?
தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள், அம்மாஆஆ என்க,நம்ப மருதுக்கு தான் பொண்ணு கேட்டுறுக்காங்க.என்னா மருதுக்கா என்று மீண்டும் அதிர்ந்தவள், என்னம்மா சொல்லுற நீ?.
பின்னர் வேதா போன் பண்ணியதை பற்றி சொல்லி முடிக்க,நல்ல பையன் தான்.நீங்களாம் சொன்னதை வைத்து குடும்பமும் நல்லதாக தான் தெரியுது என்று சிவசாமியும்,கலாவும் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.
சிவாவிற்கும்,அல்லிக்கும் மருதுவை தெரியும் என்பதால் எங்களுக்கும் ஓகே என்று சொல்ல,நீ என்னம்மா சொல்லுற என்றார் அன்பு?.தந்தை அப்படி கேட்டதும் அவளுக்கு சற்று முன்பு ஏரியில் நடந்ததும்,அன்று இரவு மோதி விழுந்தது நினைவு வந்தது.
உனக்கு புடிக்கலைனா நீ தாராளமாக சொல்லுடா என கவிதா கேட்க,அத்தை என்ன சொன்னாங்கம்மா?
வேதாக்கும் சம்மதம் தானாம் உன் விருப்பமே இறுதினு சொல்லிடுச்சிமா என்றார் அன்பு.
மகள் முகத்தில் உள்ள குழப்பத்தை கண்டவர்,எதா இருந்தாலும் சொல்லுமானு அன்பு கேட்க, உங்களுக்குப்பா?
எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு தாமரை,இருந்தாலும் உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது.
உடனே பதில் சொல்லனும் என அவசியம் இல்லை,யோசித்தே சொல்லுத்தா என்றார் கலா அப்பாயி.
மீண்டும் முகம் தெரியாதவனை பற்றி யோசித்தவளுக்கு பெரிதாக எந்த எண்ணமும் தோன்றவில்லை.பின்னர் வீட்டில் இருப்பவர்களின் முகத்தை பார்க்க,அவர்கள் இவள் என்ன சொல்ல போகிறாளோ என ஆர்வமாக பார்ப்பது தெரிய,அத்தை கிட்ட பேசிட்டு வரேன் என்று உள்ளே சென்றாள்.
"தனது போனை எடுத்தவள் வேதாவிற்கு கால் பண்ண,அட்டென்ட் பண்ணியவர் சொல்லுடா என்க, அத்தம்மா என்றாள்.எப்போது அவள் குழப்ப நிலையில் இருந்தாளும் அவள் வாயிலிருந்து வரும் அழைப்பு அத்தம்மா என்பதால்,என்ன விஷயம் என்பது வேதாவிற்கு புரிந்து விட்டது.
"தாமரை உன் மனசுக்கு என்ன தோணுதோ நீ அதை தாராளமா சொல்லலாம்.உன்னை யாரும் இங்கே பிடிவாதம் பண்ணலை என்று நேரடியாக விஷயத்திற்கு வர,உங்களுக்கும் விருப்பமா என தயக்கத்தோடு தாமரை கேட்க எனக்கு விருப்பம் இருக்கிறது பிறகு இருக்கட்டும்,வாழப் போறது நீ. உன் விருப்பம் தான் எங்களுக்கு பெருசு வேண்டாம் என்றால் நேரடியா நீ சொல்லிடுடா.
"அத்தை.... இதுவரை என் விருப்பம் தான் உங்களுக்கும் என்பது எனக்கு நல்லா தெரியும்.உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடித்து இருக்கு என நீங்க சொல்லாமலே எனக்கு புரியுது உங்கள் குரலிலே என்ற தாமரைக்கு,சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வேதா.அதை விடு நீ யோசித்தே சொல்லு என்றார்.
ஒரு நொடி கண்ணை மூடி தனது இஷ்ட தெய்வத்தை நினைத்தவள் எனக்கு சம்மதம் அத்தை என்க,குட்டி... நிஜமாகவா என்று ஆச்சர்யபட்டார் வேதா.ஆமாம் என்று தாமரை சொல்ல, இதில் மாற்றமில்லையே? என்க, நிச்சயமாக இல்லைங்கத்தை.
எனக்கு எது நல்லது கெட்டது என்று பார்த்து பார்த்து செய்தவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் இது எனக்கு சரி வருமா வராதா என்பது.அதுவும் இல்லாமல் என் விஷயத்தில் நீங்க எந்த ரிஸ்கையும் எடுக்க மாட்டீங்க.
மருமகள் சொல்வதைக் கேட்டு சிரித்தவர்,ஆஹான்...அப்படியா என்க, ஏன் உங்களுக்கு தெரியாதா?என அவள் கேட்டதுக்கு சிரித்தவர். பின்,சரிங்கத்தை நான் போனை வைக்கிறேன் என்று சொல்லி கட் பண்ண,இவ்வளவு நேரம் அக்கா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அல்லியோ ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
"அக்கா எங்க நீ சம்மதிக்க மாட்டியோனு எனக்கு கவலையா இருந்துட்டு தெரியுமா?,மருது அண்ணா ரொம்ப நல்லவங்க அவங்க அம்மாவும் தான். நம்ம அங்க போய் இருக்கும் போது எவ்வளவு பாசமா பழகுவாங்க இல்லை என்று சொல்ல ஆமா என்றாள் தாமரை.
பிறகு தனது தந்தையிடம் வந்த தாமரையோ அப்பா இந்த சம்பந்தத்தில் எனக்கு சம்மதம் தான்.ஆனால்,இப்பொழுது என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது என் கனவு நிறைவேறிய பிறகு தான் அடுத்தது பற்றி நான் யோசிக்க முடியும்.
"இதை நீங்க தெளிவாக அவங்க வீட்டுல பேசிடுங்கள் என்று சொல்ல, கண்டிப்பாகம்மா,உன் கனவை கலைப்பதற்கு அந்த தம்பியும் விரும்பாது அது எனக்கு நல்லா தெரியும்.நீ அதை பற்றி கவலைப்படாத நான் பேசுறேன்.
இதுவரை தன் அம்மா சொன்னதையெல்லாம் கேட்டவனுக்கு தன்னை மறுப்பதற்கு இனத்தை தவிர வேறு எதுவும் பெரிதாக காரணங்கள் இருக்காதென்பது புரிந்தது.
தம்பி.....என்ன நடக்கும்னு இருக்கோ அந்த மலையம்மன் புண்ணியத்தில் அது தான் பா நடக்கும்.வீணா மனச போட்டு குழப்பிக்காதப்பா என்றவர், மதியத்துக்கான உணவை சமைக்க தொடங்கினார்.
" மேய்சலுக்கு ஆடு,மாடுகளை கூப்பிட்டு போயிருந்த மருதுவின் தந்தை மூக்கையனோ சாப்பிட வந்தவர் ஏட்டி...சோறு ஆக்கிட்டியா?
செத்த இருங்களென்றவர், சமைத்தவைகளை வேதாவிற்கு எடுத்து வைத்து விட்டு,மருதுவையும் கூப்பிட, காலையில் சாப்பிட்டதே செரிக்காத போல இருக்குமா,பிறகு சாப்டுறேன் என்றவன் மரத்து நிழலில் இருக்கும் கட்டிலில் படுத்து விட்டான்.
கணவருக்கு உணவை பரிமாறியவர், நடந்த விஷயத்தை சொல்ல,கல்யாணத்திற்காவது ஆத்தாளும் மவனும் கூப்பிடுவீங்களா?, இல்லையா?.
ஏஞ்சாமி....இப்படி என்று மயிலா பதற, அட சும்மா கேட்டேன்டி.தாமரையோ, இல்லை பவியோ இரண்டு பேர்ல யாரு நம்ம ஊட்டுக்கு மருமவளா வந்தாலும், இல்லை இரண்டு பேருமே வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் புள்ளனு தனது மனதில் இருப்பதை சொன்னார்.
ஏதேஏஏஏஏ...ரெண்டு பேருமா!
ஆஹான் அய்யா மனசுல இப்படி வேற எண்ணமிருக்கோனு கோவமாக கேட்க, ஏட்டி...சும்மா சொன்னேன் டி.இனி தான் எனக்கு மருமவள் புதுசா பொறக்க போறது இல்லை.
"அதனால்....பாரத்தை ஆத்தா மேல போடு.அவளுக்கு எதை குடுக்கனும்னு தெரியும்"என்றவர்,நான் போய்டு வரேன் புள்ளனு அங்கிருந்து சென்றார்.
வேதாவுக்கு எடுத்து வைத்த உணவு கூடையோடு வெளியே வந்தவருக்கு, மருத்துவமனையின் வாசலில் வண்டி நிற்பது தெரிய,அப்போ வேதாம்மா அங்க தான் இருப்பாங்க என நினைத்துக்கொண்டு அங்கே செல்ல, வேதாவும் இன்னொரு செவிலியரும் வந்திருந்த மருந்துகள் சரியாக இருக்கா என்று லிஸ்டில் செக் பண்ணி கொண்டிருந்தனர்.
"நர்சம்மா என்று ஜன்னல் வழியாக மயிலா கூப்பிட,வேலையில் கவனமாக இருந்தவர் குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க,அங்கே மயிலா நிற்பது தெரிந்து,உள்ளே வா என்று சைகை காட்ட,ம்ம் என்று தலையசைத்து அங்கிருந்து முன் பக்க வாசல் வழியாக உள்ளே வந்தவர்,சாப்பாடு கொண்டு வந்தேன்.
தனது பேகில் இருந்த வீட்டு சாவியை எடுத்து மயிலாவிடம் கொடுத்து தலையசைத்தார்.
வேலையில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் எந்த பேச்சையும் வேதா வைத்துக்கொள்ள மாட்டார் கவனம் சிதறும் என்ற எண்ணம் தான்.சாவியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வேதா வீட்டிற்கு சென்றவர்,எடுத்து வந்த உணவுகளை ஹாட் பேக்கில் மாற்றி வைத்து விட்டு,அந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் அங்கே போய் சாவியை கொடுத்து விட்டு தனது வீட்டிற்கு சென்றார்.
"மகனின் அருகில் வந்தவருக்கு அவன் தூங்க வில்லை என்பது தெரிய,உள்ளே சென்றவர்,மகனுக்கு பிடித்த மல்லி டீயை போட்டு எடுத்து வந்தவர்,அய்யா மருது என்க,கண்ணை திறந்தவனிடம் இதை குடிப்பா.
"கட்டில் மேலிருந்து எழுந்து அமர்ந்தவன் தாயின் கையிலிருந்த டம்ளரை வாங்கி குடிக்க,அதன் சுவை வழக்கம் போல அவன் மனநிலையை இயல்பாக்கியது. அம்மா...அங்கேயும் இந்த பொடி தீர்ந்துடிச்சிமா.அதுக்கு என்னப்பா, அரைச்சிட்டா போகுது.
" தம்பி... என்க,சொல்லும்மா.பின் மூக்கையனிடம் சொன்னதையும், அதற்கு அவர் சொன்ன பதிலையும் கேட்டவன் ஹாஹாஹா...என மனம் விட்டு சிரித்தவன்,உன் புருஷனுக்கு குசும்பு பாறேன் மா.
ஒருத்திக்கே வழியில்லையாம்,இந்த லட்சணத்தில் ரெண்டா... அய்யோஓஓ அய்யோ என்றவன்,ம்மா...உன் புருஷற் சொன்னதை மறந்தும் அந்த சண்டகோழி கிட்ட சொல்லிடாதே, அவ்வளவு தான் சாமியாடிடுவாள்.
மகன் சொன்னதை கேட்டு மயிலாவிற்கும் சிரிப்பு வந்தது.காலையில் விளையாட போன சின்ன மகன் இப்பொழுது தான் வீட்டிற்கு வருவதை பார்த்தவர் எழுந்து வீட்டிற்குள் சென்று, தட்டில் சாப்பாடு போட,அம்மா பசிக்குது என்று சின்னவனும் வீட்டிற்குள் வந்தான்.
" ஏம்பா...எப்போ போனவன் நீ, இவ்வளவு நேரம் இல்லாமல் இப்போ தான் பசி கண்டுது போலனு சொல்லிக்கொண்டே அவனுக்கான சாப்பாட்டு தட்டை கொடுக்க, வாங்கியவன் வேக வேகமாக அள்ளி சாப்பிட புரையேறியது.
"பார்த்துடா என்றபடியே உள்ளே வந்தவன் தம்பி தலையில் ஓங்கி தட்ட, படுபாவி பயலே,இதான் சாக்குனு எப்படி அடிக்கிறான் பாரென்று உள்ளுக்குள் அண்ணனை திட்டிக்கொண்டான்.
தாமரை வீடு....
கணவர் சாப்பிட்டு முடித்த பிறகு கவிதாவும் அமர்ந்து சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்தவர்,பூப்பறிக்கும் கூடையோடு தோட்டத்திற்குள் சென்று,அங்கே பந்தலில் பூத்துக்குலுங்கும் மல்லிகை பூவை பறித்து எடுத்து வந்து பூ கட்டிக்கொண்டே டீவி பார்த்தார்.
நேரம் ஐந்து ஆகி விட்டது என்பது கடிகாரத்தில் உள்ள மணி சத்தத்தில் தெரிய,கட்டிய பூக்களை கவரில் போட்டு முடிந்தவர்,அதை ஃப்ரிஜ் மேல் வைத்து விட்டு,டீ போட, தாமரையும் தூங்கி எழுந்து வெளியே வந்தாள்.
அதைப்போல கடலை மேட்டில் இருந்த நால்வரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கும் சேர்த்தே டீ வைத்ததால் அனைவருக்கும் டம்ளரில் ஊற்றியவர், எடுத்து வந்து கொடுத்தார்.
அப்பொழுது... அத்தை...என கவிதா கூப்பிட சொல்லுத்தா என்றார் கலா அப்பாயி.நம்ப தாமரைக்கு ஒரு வரன் வந்துருக்குனு வேதா சொல்லுச்சி.
அதைக்கேட்ட நால்வருக்கும் மகிழ்ச்சியாக,என்னத்தா சொல்லுற?
தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள், அம்மாஆஆ என்க,நம்ப மருதுக்கு தான் பொண்ணு கேட்டுறுக்காங்க.என்னா மருதுக்கா என்று மீண்டும் அதிர்ந்தவள், என்னம்மா சொல்லுற நீ?.
பின்னர் வேதா போன் பண்ணியதை பற்றி சொல்லி முடிக்க,நல்ல பையன் தான்.நீங்களாம் சொன்னதை வைத்து குடும்பமும் நல்லதாக தான் தெரியுது என்று சிவசாமியும்,கலாவும் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.
சிவாவிற்கும்,அல்லிக்கும் மருதுவை தெரியும் என்பதால் எங்களுக்கும் ஓகே என்று சொல்ல,நீ என்னம்மா சொல்லுற என்றார் அன்பு?.தந்தை அப்படி கேட்டதும் அவளுக்கு சற்று முன்பு ஏரியில் நடந்ததும்,அன்று இரவு மோதி விழுந்தது நினைவு வந்தது.
உனக்கு புடிக்கலைனா நீ தாராளமாக சொல்லுடா என கவிதா கேட்க,அத்தை என்ன சொன்னாங்கம்மா?
வேதாக்கும் சம்மதம் தானாம் உன் விருப்பமே இறுதினு சொல்லிடுச்சிமா என்றார் அன்பு.
மகள் முகத்தில் உள்ள குழப்பத்தை கண்டவர்,எதா இருந்தாலும் சொல்லுமானு அன்பு கேட்க, உங்களுக்குப்பா?
எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு தாமரை,இருந்தாலும் உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது.
உடனே பதில் சொல்லனும் என அவசியம் இல்லை,யோசித்தே சொல்லுத்தா என்றார் கலா அப்பாயி.
மீண்டும் முகம் தெரியாதவனை பற்றி யோசித்தவளுக்கு பெரிதாக எந்த எண்ணமும் தோன்றவில்லை.பின்னர் வீட்டில் இருப்பவர்களின் முகத்தை பார்க்க,அவர்கள் இவள் என்ன சொல்ல போகிறாளோ என ஆர்வமாக பார்ப்பது தெரிய,அத்தை கிட்ட பேசிட்டு வரேன் என்று உள்ளே சென்றாள்.
"தனது போனை எடுத்தவள் வேதாவிற்கு கால் பண்ண,அட்டென்ட் பண்ணியவர் சொல்லுடா என்க, அத்தம்மா என்றாள்.எப்போது அவள் குழப்ப நிலையில் இருந்தாளும் அவள் வாயிலிருந்து வரும் அழைப்பு அத்தம்மா என்பதால்,என்ன விஷயம் என்பது வேதாவிற்கு புரிந்து விட்டது.
"தாமரை உன் மனசுக்கு என்ன தோணுதோ நீ அதை தாராளமா சொல்லலாம்.உன்னை யாரும் இங்கே பிடிவாதம் பண்ணலை என்று நேரடியாக விஷயத்திற்கு வர,உங்களுக்கும் விருப்பமா என தயக்கத்தோடு தாமரை கேட்க எனக்கு விருப்பம் இருக்கிறது பிறகு இருக்கட்டும்,வாழப் போறது நீ. உன் விருப்பம் தான் எங்களுக்கு பெருசு வேண்டாம் என்றால் நேரடியா நீ சொல்லிடுடா.
"அத்தை.... இதுவரை என் விருப்பம் தான் உங்களுக்கும் என்பது எனக்கு நல்லா தெரியும்.உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடித்து இருக்கு என நீங்க சொல்லாமலே எனக்கு புரியுது உங்கள் குரலிலே என்ற தாமரைக்கு,சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வேதா.அதை விடு நீ யோசித்தே சொல்லு என்றார்.
ஒரு நொடி கண்ணை மூடி தனது இஷ்ட தெய்வத்தை நினைத்தவள் எனக்கு சம்மதம் அத்தை என்க,குட்டி... நிஜமாகவா என்று ஆச்சர்யபட்டார் வேதா.ஆமாம் என்று தாமரை சொல்ல, இதில் மாற்றமில்லையே? என்க, நிச்சயமாக இல்லைங்கத்தை.
எனக்கு எது நல்லது கெட்டது என்று பார்த்து பார்த்து செய்தவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் இது எனக்கு சரி வருமா வராதா என்பது.அதுவும் இல்லாமல் என் விஷயத்தில் நீங்க எந்த ரிஸ்கையும் எடுக்க மாட்டீங்க.
மருமகள் சொல்வதைக் கேட்டு சிரித்தவர்,ஆஹான்...அப்படியா என்க, ஏன் உங்களுக்கு தெரியாதா?என அவள் கேட்டதுக்கு சிரித்தவர். பின்,சரிங்கத்தை நான் போனை வைக்கிறேன் என்று சொல்லி கட் பண்ண,இவ்வளவு நேரம் அக்கா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அல்லியோ ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
"அக்கா எங்க நீ சம்மதிக்க மாட்டியோனு எனக்கு கவலையா இருந்துட்டு தெரியுமா?,மருது அண்ணா ரொம்ப நல்லவங்க அவங்க அம்மாவும் தான். நம்ம அங்க போய் இருக்கும் போது எவ்வளவு பாசமா பழகுவாங்க இல்லை என்று சொல்ல ஆமா என்றாள் தாமரை.
பிறகு தனது தந்தையிடம் வந்த தாமரையோ அப்பா இந்த சம்பந்தத்தில் எனக்கு சம்மதம் தான்.ஆனால்,இப்பொழுது என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது என் கனவு நிறைவேறிய பிறகு தான் அடுத்தது பற்றி நான் யோசிக்க முடியும்.
"இதை நீங்க தெளிவாக அவங்க வீட்டுல பேசிடுங்கள் என்று சொல்ல, கண்டிப்பாகம்மா,உன் கனவை கலைப்பதற்கு அந்த தம்பியும் விரும்பாது அது எனக்கு நல்லா தெரியும்.நீ அதை பற்றி கவலைப்படாத நான் பேசுறேன்.