- Thread Author
- #1
இரவின் கடைசி சாட்சி
ஹலோ ஃப்ரெண்ட்ஸ் வணக்கம்
இது என்னுடைய டிக் டிக் சிறுகதை போட்டிக்கான முதல் சிறுகதை.படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று தயவு செஞ்சு விமர்சனம் சொல்லுங்கள்.ஓகே இப்போ நம்ம கதைக்கு போலாம்
ஆதவ் (இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் )எங்க இருக்கீங்க ?
உங்கள நாங்க ரொம்ப ரீச் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கோம்.ஆனா உங்க கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும்மே வரலையே,இந்த கேஸ்ல நீங்க என்ன தான் பண்றீங்க?
சீக்கிரமா சொல்லுங்க ,நீங்க சொல்றத வச்சு தான் நாங்க எதுனாலும் ரிப்போர்ட் ரெடி பண்ணனும் என்று ஆதவ் வர்மாவிடம் அவரது அதிகாரி பேசிக் கொண்டிருக்க
மித்ரா (இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்) “என்ன தான் பண்றாங்க உங்க ஆபிசர் ஆதவ் வர்மா, கொலை நடந்து எவ்ளோ நேரம் ஆச்சு . இன்னும் அது எப்படி நடந்தது யார் பண்ணாங்கனு எதுமே தெரியலன்னு சொல்றீங்க, இவ்வளவு தானா ஒரு பெரிய அரசியல்வாதிக்கு எந்த பாதுகாப்பும் இல்லையானு எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேக்காங்க எதுனாலும் சீக்கிரமா ரிப்போர்ட் கொடுக்க சொல்லுங்க” என்று மித்ரா உயர் அதிகாரியிடம் சொல்ல
மித்ரா இங்க பாருங்க நாங்களும் எல்லாத்தையும் விசாரிச்சுட்டுத்தான் இருக்கோம். அது எப்படி இவ்வளவு பெரிய பரபரப்பான அரசியல் தலைவர் கொலை செய்றதுக்கு அந்த விருந்தினர் மாளிகைக்கே வருவாங்களா?
இப்போ ஆதவ் வர்மா போயிருக்கிறது அங்க இருக்குற எல்லாம் கலெக்ட் பண்றதுக்கு தான், கண்டிப்பா அத கலெக்ட் பண்ணிட்டு வந்துருவாங்க என்று அவர் சொல்லி முடிக்கும் முன் “சார் நீங்க எல்லாருமே இந்த இடத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வாங்க” என்று ஆதவிடம் இருந்து போன் வரவும்
அனைவரும் கிளம்பி செல்ல,
என்னாச்சு என்னத்த கண்டுபிடிச்ச மாதிரி எங்கள இப்போ வர சொன்னீங்க என்று ரிப்போர்ட்டர் மித்ரா கேக்க
இவ்ளோ நேரம்நான் எல்லாத்தையுமே வாட்ச் பண்ண இங்க பாருங்க கொலை நடந்துச்சு சொல்ற அவங்க வொய்ஃப் தான் எப்படி கொலை நடந்துச்சுன்னு கேட்டா எதுமே தெரியாதுன்னு சொல்றாங்க ,அவங்களுக்கு ஏதோ ஃபோன் வந்துச்சு அதுல இந்தமாதிரி அவங்க ஹஸ்பண்டு இறந்துட்டாங்க ஆனா அது என்ன நம்பர் யாருன்னு எதுமே தெரியல. அவங்க ஃபோன்ல எந்த ஹிஸ்டரியும் இல்ல ,எல்லா டெலீட் ஆயிருக்கு
சரி வீட்டுக்குள்ள இருக்குற தலைவர் எப்புடி காணாம போவாங்கன்னு சிசிடிவி கேமரா எல்லாம் பாத்தா லாஸ்ட் 24 ஹவர்ல எல்லாமே டெலீட் ஆயிருக்கு, தடயம் இல்லாம யாரோ பிளான் பண்ணி தலைவர தூக்கிட்டாங்களா என்று ஆதாவ் சொல்லிக்கொண்டு இருக்க
அவன் அதிகாரி அர்ஜூன் “ஓகே அந்த சிசிடிவி கேமரா ப்ளே பண்ணுங்க ,என்னதான் அந்த ஃபுட் ஏஜ்ல இருக்கு நம்ம செக் பண்ணிரலாம்” என்று சொல்லவும்
அவர்கள் சிசிடிவி ஃபுட்டேஜை செக் பண்ண அந்த இடத்தில் வெறும் வெள்ளித்திரை மட்டும் தெரிகிறது. வேற எதுவும் இல்லாமல் இருக்க எப்படி இது நடந்த அன்னைக்கு நைட் ல ஒரு கேமரா கூட வொர்க் ஆகலையா என்று கேட்க
“எல்லா கேமராவை ஹக் பண்ணி இருக்காங்க, அதனால தான் அந்த நேரத்துல எந்த கேமரா வீடியோ எதுமே ஒர்க் ஆகாம இருக்கு . தலைவர் வொய்ஃப் கிட்ட போன் எப்ப வந்துச்சு என்னன்னு கேளுங்க” என்று மித்ரா சொல்லவும்
கொஞ்ச நேரத்தில் மித்ராவின் போனில் ஒரு மெசேஜ் வீடியோவாக வர ,அதில் அந்த அரசியல் தலைவர் போல் யாரோ ஒருவர் தூரத்தில் பிணமாக கிடக்கும் நிலையில் மட்டும் தெரிகிறது. அதோடு ஒரு நிழல் தெரிகிறது அந்த நிழல் யார்?
அவர் கொலையாளியா?
அல்லது கொலையின் உண்மையான சாட்சியா என்று எதுவும் புரியாமல் குழம்பிக்கொண்டு இருக்க
அவள் அந்த வீடியோ ஆதாரத்தை அனைத்தையும் அந்த ஆபிசர் இடம் காட்ட
எஸ் இது தலைவரோட பாடி தான் . யாரோ கொலை பண்ணிருக்காங்க, ஆனா யாரோ நடந்து போற மாதிரி தெரியுது. அப்ப அவர்தான் கொலை பண்ணி இருக்கணும் அது யாருனு கண்டுபிடிக்கணும் என்று ஆதவ் வர்மா சொல்ல
கொஞ்ச நேரத்தில் அந்த தலைவரின் மனைவிக்கு போன் வரவும்,அவள் பயந்து கொண்டே போனை அர்ஜுன் இடம் கொடுக்க
“ நீங்க சைலன்ட்டா இருங்க ஃபோன் ஸ்பீக்கர் ல போடுறேன் . நீங்க எதுவும் பேசாதீங்க அதே நபர் தான் நாங்க டரேஸ் பண்ணிக்கிறோம்” என்று அவர் சொல்லவும்
உடனே போனை ஸ்பீக்கரில் போட்டு எல்லாரும் அமைதியாக இருக்க
“என்ன ஒரு அரசியல் தலைவர் செத்து 2 மணி நேரம் ஆகுது இன்னும் நீங்க எதுவும் கண்டுபிடிக்கலயே, ஒரு தலைவருக்கு இப்படினா பொதுமக்களுக்குலாம் நீங்க என்னத்த பாதுகாப்பு கொடுப்பீங்க” என்று ஒரு குரல் கேட்கவும்
ஹூ ஆர் யூ மேன்?
உனக்கு என்ன வேணும் எதுக்கு அந்த மாதிரிலாம் பண்றா?
நீ புடிச்சுருக்குறது யார்னு தெரியுமா, இப்ப அவர நீ உயிரோட எங்ககிட்ட விடு உனக்கு என்ன வேணாலும் நாங்க பண்றோம் என்று ஆதவ் பேசிக்கொண்டு இருக்கும் போதே
என்னது உயிரோட கொடுக்கவா ?போய் நீங்க பட்டர்ஃப்ளை ப்ரிட்ஜ்க்கு கீழ போய் பாருங்க அங்க பிணம் இருக்கும் என்று சொல்லிவிட்டு போனை வைக்க
இவன் சொன்ன செய்தி உண்மைதானா என்று ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அனைவரும் வீட்டில் இருந்து கிளம்ப” மேடம் நீங்க மட்டும் அங்க வராதீங்க, நீங்க இங்கேயே இருங்க உங்க ஹஸ்பண்ட்க்கு சேஃப்டி இல்ல இதுல நீங்களும் வந்தீங்கன்னா எங்களால உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. நீங்க வீட்லையே இருங்க” என்று சொல்லி அவள் மனைவியை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு இவர்கள் மூவரும் கிளம்ப
மித்ரா உங்க போன்ல இருக்குற வீடியோவை மட்டும் நீங்க பத்திரமா வச்சுக்கோங்க. இப்ப நம்ம போயிட்டு அந்த இடத்துல என்னன்னு பார்த்தோம்னா அதுக்கப்புறம் இந்த வீடியோ வச்சு தான் நாம யாருன்னு கண்டுபிடிக்கணும் என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் கார்ல போய் அந்த இடத்தை நெருங்க அங்கே ஒரே கூட்டமாக இருக்க
உடனே ஆதவ் வர்மா வேகமாக இறங்கி ஓடி வர “சார் ஃபேஸ் புல்லா டேமேஜ் ஆ இருக்கு ,ஏதோ ஆசிட் ஊத்தி இருக்காங்க முகமே தெரியல செதஞ்சு போயிருக்கு. இது நம்ம தலைவர்தான நமக்கு தெரியலையே எத வச்சு நம்ம கண்டுபிடிக்க” என்று சொல்ல
அப்ப வேற வழி இல்ல ,இந்த இடத்துக்கு நாம அவங்க வொய்ஃப வர வச்சு ஆகணும். அவங்கள தான் அடையாளம் சொல்ல முடியும் என்று அர்ஜூன் சொல்லவும்
ஆமா “எங்க மித்ரா எங்க போயிட்டாங்க நம்ம கூட தான வந்தாங்க “என்று ஆதவ் தேடவும்
எப்படி நம்ம கூட வந்த பொண்ணு காணாம போகும் என்ன நடக்குது இங்க என்று கோபமாக அர்ஜூன் கேக்க
அய்யோ சார் இப்போ கொல நடந்ததுக்கான ஒரே எவிடன்ஸ் மித்ராவோட போன்ல இருக்குற அந்த வீடியோ தான் . அந்த வீடியோல யாரு இருக்கா பாத்து தான் கொலை எப்படி நடந்தது?
யார் பண்ணாங்க நம்ம எதுவும் கண்டுபிடிக்க முடியும். இப்ப என்னா அவங்களே காணுமே ,அவங்க உயிருக்கு ஆபத்து வர கூடாது . அய்யோ வீட்ல வேற தலைவரோட வொய்ஃப் தனியா விட்டு வந்துருக்குமே என்று ஆதவ் சொல்ல
நீங்க உடனே வீட்டுக்கு கிளம்பி அவங்களா கூப்பிட்டு வாங்க மித்ராவ பாத்துக்கலாம் . போலீஸ் விட்டு தேட சொல்ற இங்க கூட்டம் கூடாமல் கொஞ்சம் பாத்துக்கோங்க என்று ஆபிசர் அர்ஜூன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “இது நம்ம தலைவரு தான் நம்ம தலைவர் கைய பாரு அவரு கட்சி சின்னத்தை தான் அவர் மோதிரமா போட்டுப்பாரு.நம்ம தலைவர் யார் இப்படி பண்ணா தலைவா உன்னை கொன்னது யாரா இருந்தாலும் நாங்க சும்மா விட மாட்டோம்”என்று ஒரே கூட்டம் கூட
இங்க பாருங்க இந்த இடத்துல யாரும் நிற்கக்கூடாது எல்லாரும் தயவு செஞ்சு கிளம்பி போங்க என்று கூட்டத்தை கலைத்து விட்டு ஆதவ் வேகமாக வண்டியில் ஏறிசெல்ல
ஆதவ் வண்டியில் போகும் போதே எப்படி தலைவர் இறந்தாங்கன்னு தெரியலையே..
இது என்ன ஒருவேளை அரசியல் சதியா ?
அந்த வீடியோல யாரோ நம்ம தலைவர் மாதிரி தான் இருந்துச்சு கொலை செஞ்சுட்டு நடந்து போற மாதிரி இருந்தது .அப்ப நம்ம தலைவர் யார் கொன்னா ?
இப்ப மித்ரா எங்க போயிட்டாங்க?
அய்யோ இதுக்கெல்லாம் யார் காரணம் ?
தலைவரோட வீட்டில ஃபுடேஜ் எதுமே இல்ல எல்லா வீடியோவில் டெலிட் ஆயிடுச்சு என்று யோசித்துக் கொண்டே காரில் செல்ல,அவனுக்கு ஒரு மாதிரி தலை சுற்றுவது போல் இருக்க கொஞ்ச நேரத்தில் அவன் ஒரு கடையில் இறங்கி ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு யோசித்துக் கொண்டிருந்த அவன் சற்றும் எதிர்பார்க்காத விதமாக அவனது கார் டமால் என்று வெடிக்க
ஆதவ் அப்படியே ஒரு கணம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாட்டர் பாட்டிலை இருக்க பிடித்தவன் “யாரோ இப்ப நம்மலையும் கொலை பண்ண பார்த்துருக்காங்க “இதுக்கு பின்னாடி யார் இருக்காங்க நான் கண்டிப்பா கண்டுபிடிக்காம விட மாட்டேன் என்று நினைத்துக்கொண்டே இருக்கும் வேளையில் அவனது மொபைல்க்கு திரும்ப ஒரு வீடியோ வந்தது.
அந்த வீடியோவில் “தேவையில்லாம நீ இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகாத. உயிர் மேல உனக்கு ஆசை இருந்துச்சுன்னா இந்த கேஸை விட்டுட்டு திரும்பி பாக்காம ஓடிரு”என்று ஒரு நிழல் மட்டும் அவனுக்கு சொல்வது போலிருந்தது
இந்த கேஸ் இவ்வளவு சீரியசாகும் நான் நினைக்கவே இல்லை என்று தன் மனத்தில் நினைத்தவன் வேகமாக வேறொரு காரை வரவழைத்து அந்த அரசியல்வாதியின் மாளிகைக்கு சென்று அவரது மனைவியை சந்திக்க
மேடம் நீங்க என் கூட கொஞ்சம் வரமுடியுமா என்று அவன் கேட்க
என்னாச்சு சார் என்று அவ கேக்க
ஒரு பாடி கெடக்சி இருக்கு அது உங்க ஹஸ்பண்ட் மாதிரி தான் தெரியுது.யாரோ முகம் தெரியாத மாதிரி செதச்சு இருக்காங்க .நீங்க கொஞ்சம் வந்து எனக்கு கன்ஃபாம் பண்ண முடியுமா என்று அவன் சொல்லும் போதே
“அய்யோ என்னாச்சு அவருக்கு” என்று அவள் அழவும்
மேடம் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க இங்க என்னமோ எங்கள சுத்தி நடக்குது கொஞ்சம் நீங்க வந்து கன்பார்ம் பண்ணுங்க என்று சொல்லி அவன் காரில் தலைவர் மனைவியை அழைத்து செல்ல
மீண்டும் ஒரு நம்பரில் இருந்து அவனுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் வந்தது. “இந்த கேஸ் விட்டு திரும்பி பக்கமா போன்னு சொன்னா இன்னும் இந்த கேஸ்ல தான் சுத்திட்டு இருக்கியா. கண்டிப்பா மித்ரா உயிரோட கிடைக்க மாட்டாங்க.இப்போ தலைவருக்கான மாதிரி அடுத்து மித்ராக்கு ஆக “போது என்று மெசேஜ் கேட்டவன்
அப்படியே முகமெல்லாம் வேர்த்து வேகமாக "அர்ஜூன் சார் எனக்கு இந்த மாதிரி ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வருது.அது ட்ரெஸ் பண்ண முடியல சீக்கிரமா மித்ரா கண்டுபிடிங்க. அப்ப தான் நமக்கு அதுல இருக்குற வீடியோ என்னனு தெரியும்" என்று அவன் சொல்லிக்கொண்டு நான் இப்போ ஸ்பாட்டுக்கு வந்துட்டு இருக்கேன் என்று சொல்லி போனை வைத்தான்.