• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 26, 2025
Messages
6

இரவின் கடைசி சாட்சி​



ஹலோ ஃப்ரெண்ட்ஸ் வணக்கம்

இது என்னுடைய டிக் டிக் சிறுகதை போட்டிக்கான முதல் சிறுகதை.படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று தயவு செஞ்சு விமர்சனம் சொல்லுங்கள்.ஓகே இப்போ நம்ம கதைக்கு போலாம்

ஆதவ் (இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் )எங்க இருக்கீங்க ?

உங்கள நாங்க ரொம்ப ரீச் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கோம்.ஆனா உங்க கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும்மே வரலையே,இந்த கேஸ்ல நீங்க என்ன தான் பண்றீங்க?

சீக்கிரமா சொல்லுங்க ,நீங்க சொல்றத வச்சு தான் நாங்க எதுனாலும் ரிப்போர்ட் ரெடி பண்ணனும் என்று ஆதவ் வர்மாவிடம் அவரது அதிகாரி பேசிக் கொண்டிருக்க

மித்ரா (இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்) “என்ன தான் பண்றாங்க உங்க ஆபிசர் ஆதவ் வர்மா, கொலை நடந்து எவ்ளோ நேரம் ஆச்சு . இன்னும் அது எப்படி நடந்தது யார் பண்ணாங்கனு எதுமே தெரியலன்னு சொல்றீங்க, இவ்வளவு தானா ஒரு பெரிய அரசியல்வாதிக்கு எந்த பாதுகாப்பும் இல்லையானு எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேக்காங்க எதுனாலும் சீக்கிரமா ரிப்போர்ட் கொடுக்க சொல்லுங்க” என்று மித்ரா உயர் அதிகாரியிடம் சொல்ல

மித்ரா இங்க பாருங்க நாங்களும் எல்லாத்தையும் விசாரிச்சுட்டுத்தான் இருக்கோம். அது எப்படி இவ்வளவு பெரிய பரபரப்பான அரசியல் தலைவர் கொலை செய்றதுக்கு அந்த விருந்தினர் மாளிகைக்கே வருவாங்களா?

இப்போ ஆதவ் வர்மா போயிருக்கிறது அங்க இருக்குற எல்லாம் கலெக்ட் பண்றதுக்கு தான், கண்டிப்பா அத கலெக்ட் பண்ணிட்டு வந்துருவாங்க என்று அவர் சொல்லி முடிக்கும் முன் “சார் நீங்க எல்லாருமே இந்த இடத்துக்கு கொஞ்சம் சீக்கிரமா வாங்க” என்று ஆதவிடம் இருந்து போன் வரவும்

அனைவரும் கிளம்பி செல்ல,

என்னாச்சு என்னத்த கண்டுபிடிச்ச மாதிரி எங்கள இப்போ வர சொன்னீங்க என்று ரிப்போர்ட்டர் மித்ரா கேக்க

இவ்ளோ நேரம்நான் எல்லாத்தையுமே வாட்ச் பண்ண இங்க பாருங்க கொலை நடந்துச்சு சொல்ற அவங்க வொய்ஃப் தான் எப்படி கொலை நடந்துச்சுன்னு கேட்டா எதுமே தெரியாதுன்னு சொல்றாங்க ,அவங்களுக்கு ஏதோ ஃபோன் வந்துச்சு அதுல இந்தமாதிரி அவங்க ஹஸ்பண்டு இறந்துட்டாங்க ஆனா அது என்ன நம்பர் யாருன்னு எதுமே தெரியல. அவங்க ஃபோன்ல எந்த ஹிஸ்டரியும் இல்ல ,எல்லா டெலீட் ஆயிருக்கு

சரி வீட்டுக்குள்ள இருக்குற தலைவர் எப்புடி காணாம போவாங்கன்னு சிசிடிவி கேமரா எல்லாம் பாத்தா லாஸ்ட் 24 ஹவர்ல எல்லாமே டெலீட் ஆயிருக்கு, தடயம் இல்லாம யாரோ பிளான் பண்ணி தலைவர தூக்கிட்டாங்களா என்று ஆதாவ் சொல்லிக்கொண்டு இருக்க

அவன் அதிகாரி அர்ஜூன் “ஓகே அந்த சிசிடிவி கேமரா ப்ளே பண்ணுங்க ,என்னதான் அந்த ஃபுட் ஏஜ்ல இருக்கு நம்ம செக் பண்ணிரலாம்” என்று சொல்லவும்

அவர்கள் சிசிடிவி ஃபுட்டேஜை செக் பண்ண அந்த இடத்தில் வெறும் வெள்ளித்திரை மட்டும் தெரிகிறது. வேற எதுவும் இல்லாமல் இருக்க எப்படி இது நடந்த அன்னைக்கு நைட் ல ஒரு கேமரா கூட வொர்க் ஆகலையா என்று கேட்க

“எல்லா கேமராவை ஹக் பண்ணி இருக்காங்க, அதனால தான் அந்த நேரத்துல எந்த கேமரா வீடியோ எதுமே ஒர்க் ஆகாம இருக்கு . தலைவர் வொய்ஃப் கிட்ட போன் எப்ப வந்துச்சு என்னன்னு கேளுங்க” என்று மித்ரா சொல்லவும்

கொஞ்ச நேரத்தில் மித்ராவின் போனில் ஒரு மெசேஜ் வீடியோவாக வர ,அதில் அந்த அரசியல் தலைவர் போல் யாரோ ஒருவர் தூரத்தில் பிணமாக கிடக்கும் நிலையில் மட்டும் தெரிகிறது. அதோடு ஒரு நிழல் தெரிகிறது அந்த நிழல் யார்?

அவர் கொலையாளியா?

அல்லது கொலையின் உண்மையான சாட்சியா என்று எதுவும் புரியாமல் குழம்பிக்கொண்டு இருக்க

அவள் அந்த வீடியோ ஆதாரத்தை அனைத்தையும் அந்த ஆபிசர் இடம் காட்ட

எஸ் இது தலைவரோட பாடி தான் . யாரோ கொலை பண்ணிருக்காங்க, ஆனா யாரோ நடந்து போற மாதிரி தெரியுது. அப்ப அவர்தான் கொலை பண்ணி இருக்கணும் அது யாருனு கண்டுபிடிக்கணும் என்று ஆதவ் வர்மா சொல்ல

கொஞ்ச நேரத்தில் அந்த தலைவரின் மனைவிக்கு போன் வரவும்,அவள் பயந்து கொண்டே போனை அர்ஜுன் இடம் கொடுக்க

“ நீங்க சைலன்ட்டா இருங்க ஃபோன் ஸ்பீக்கர் ல போடுறேன் . நீங்க எதுவும் பேசாதீங்க அதே நபர் தான் நாங்க டரேஸ் பண்ணிக்கிறோம்” என்று அவர் சொல்லவும்

உடனே போனை ஸ்பீக்கரில் போட்டு எல்லாரும் அமைதியாக இருக்க

“என்ன ஒரு அரசியல் தலைவர் செத்து 2 மணி நேரம் ஆகுது இன்னும் நீங்க எதுவும் கண்டுபிடிக்கலயே, ஒரு தலைவருக்கு இப்படினா பொதுமக்களுக்குலாம் நீங்க என்னத்த பாதுகாப்பு கொடுப்பீங்க” என்று ஒரு குரல் கேட்கவும்

ஹூ ஆர் யூ மேன்?
உனக்கு என்ன வேணும் எதுக்கு அந்த மாதிரிலாம் பண்றா?

நீ புடிச்சுருக்குறது யார்னு தெரியுமா, இப்ப அவர நீ உயிரோட எங்ககிட்ட விடு உனக்கு என்ன வேணாலும் நாங்க பண்றோம் என்று ஆதவ் பேசிக்கொண்டு இருக்கும் போதே

என்னது உயிரோட கொடுக்கவா ?போய் நீங்க பட்டர்ஃப்ளை ப்ரிட்ஜ்க்கு கீழ போய் பாருங்க அங்க பிணம் இருக்கும் என்று சொல்லிவிட்டு போனை வைக்க

இவன் சொன்ன செய்தி உண்மைதானா என்று ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அனைவரும் வீட்டில் இருந்து கிளம்ப” மேடம் நீங்க மட்டும் அங்க வராதீங்க, நீங்க இங்கேயே இருங்க உங்க ஹஸ்பண்ட்க்கு சேஃப்டி இல்ல இதுல நீங்களும் வந்தீங்கன்னா எங்களால உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. நீங்க வீட்லையே இருங்க” என்று சொல்லி அவள் மனைவியை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு இவர்கள் மூவரும் கிளம்ப

மித்ரா உங்க போன்ல இருக்குற வீடியோவை மட்டும் நீங்க பத்திரமா வச்சுக்கோங்க. இப்ப நம்ம போயிட்டு அந்த இடத்துல என்னன்னு பார்த்தோம்னா அதுக்கப்புறம் இந்த வீடியோ வச்சு தான் நாம யாருன்னு கண்டுபிடிக்கணும் என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் கார்ல போய் அந்த இடத்தை நெருங்க அங்கே ஒரே கூட்டமாக இருக்க

உடனே ஆதவ் வர்மா வேகமாக இறங்கி ஓடி வர “சார் ஃபேஸ் புல்லா டேமேஜ் ஆ இருக்கு ,ஏதோ ஆசிட் ஊத்தி இருக்காங்க முகமே தெரியல செதஞ்சு போயிருக்கு. இது நம்ம தலைவர்தான நமக்கு தெரியலையே எத வச்சு நம்ம கண்டுபிடிக்க” என்று சொல்ல

அப்ப வேற வழி இல்ல ,இந்த இடத்துக்கு நாம அவங்க வொய்ஃப வர வச்சு ஆகணும். அவங்கள தான் அடையாளம் சொல்ல முடியும் என்று அர்ஜூன் சொல்லவும்

ஆமா “எங்க மித்ரா எங்க போயிட்டாங்க நம்ம கூட தான வந்தாங்க “என்று ஆதவ் தேடவும்

எப்படி நம்ம கூட வந்த பொண்ணு காணாம போகும் என்ன நடக்குது இங்க என்று கோபமாக அர்ஜூன் கேக்க

அய்யோ சார் இப்போ கொல நடந்ததுக்கான ஒரே எவிடன்ஸ் மித்ராவோட போன்ல இருக்குற அந்த வீடியோ தான் . அந்த வீடியோல யாரு இருக்கா பாத்து தான் கொலை எப்படி நடந்தது?

யார் பண்ணாங்க நம்ம எதுவும் கண்டுபிடிக்க முடியும். இப்ப என்னா அவங்களே காணுமே ,அவங்க உயிருக்கு ஆபத்து வர கூடாது . அய்யோ வீட்ல வேற தலைவரோட வொய்ஃப் தனியா விட்டு வந்துருக்குமே என்று ஆதவ் சொல்ல

நீங்க உடனே வீட்டுக்கு கிளம்பி அவங்களா கூப்பிட்டு வாங்க மித்ராவ பாத்துக்கலாம் . போலீஸ் விட்டு தேட சொல்ற இங்க கூட்டம் கூடாமல் கொஞ்சம் பாத்துக்கோங்க என்று ஆபிசர் அர்ஜூன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “இது நம்ம தலைவரு தான் நம்ம தலைவர் கைய பாரு அவரு கட்சி சின்னத்தை தான் அவர் மோதிரமா போட்டுப்பாரு.நம்ம தலைவர் யார் இப்படி பண்ணா தலைவா உன்னை கொன்னது யாரா இருந்தாலும் நாங்க சும்மா விட மாட்டோம்”என்று ஒரே கூட்டம் கூட

இங்க பாருங்க இந்த இடத்துல யாரும் நிற்கக்கூடாது எல்லாரும் தயவு செஞ்சு கிளம்பி போங்க என்று கூட்டத்தை கலைத்து விட்டு ஆதவ் வேகமாக வண்டியில் ஏறிசெல்ல

ஆதவ் வண்டியில் போகும் போதே எப்படி தலைவர் இறந்தாங்கன்னு தெரியலையே..

இது என்ன ஒருவேளை அரசியல் சதியா ?

அந்த வீடியோல யாரோ நம்ம தலைவர் மாதிரி தான் இருந்துச்சு கொலை செஞ்சுட்டு நடந்து போற மாதிரி இருந்தது .அப்ப நம்ம தலைவர் யார் கொன்னா ?
இப்ப மித்ரா எங்க போயிட்டாங்க?

அய்யோ இதுக்கெல்லாம் யார் காரணம் ?

தலைவரோட வீட்டில ஃபுடேஜ் எதுமே இல்ல எல்லா வீடியோவில் டெலிட் ஆயிடுச்சு என்று யோசித்துக் கொண்டே காரில் செல்ல,அவனுக்கு ஒரு மாதிரி தலை சுற்றுவது போல் இருக்க கொஞ்ச நேரத்தில் அவன் ஒரு கடையில் இறங்கி ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு யோசித்துக் கொண்டிருந்த அவன் சற்றும் எதிர்பார்க்காத விதமாக அவனது கார் டமால் என்று வெடிக்க

ஆதவ் அப்படியே ஒரு கணம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாட்டர் பாட்டிலை இருக்க பிடித்தவன் “யாரோ இப்ப நம்மலையும் கொலை பண்ண பார்த்துருக்காங்க “இதுக்கு பின்னாடி யார் இருக்காங்க நான் கண்டிப்பா கண்டுபிடிக்காம விட மாட்டேன் என்று நினைத்துக்கொண்டே இருக்கும் வேளையில் அவனது மொபைல்க்கு திரும்ப ஒரு வீடியோ வந்தது.

அந்த வீடியோவில் “தேவையில்லாம நீ இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகாத. உயிர் மேல உனக்கு ஆசை இருந்துச்சுன்னா இந்த கேஸை விட்டுட்டு திரும்பி பாக்காம ஓடிரு”என்று ஒரு நிழல் மட்டும் அவனுக்கு சொல்வது போலிருந்தது

இந்த கேஸ் இவ்வளவு சீரியசாகும் நான் நினைக்கவே இல்லை என்று தன் மனத்தில் நினைத்தவன் வேகமாக வேறொரு காரை வரவழைத்து அந்த அரசியல்வாதியின் மாளிகைக்கு சென்று அவரது மனைவியை சந்திக்க

மேடம் நீங்க என் கூட கொஞ்சம் வரமுடியுமா என்று அவன் கேட்க

என்னாச்சு சார் என்று அவ கேக்க

ஒரு பாடி கெடக்சி இருக்கு அது உங்க ஹஸ்பண்ட் மாதிரி தான் தெரியுது.யாரோ முகம் தெரியாத மாதிரி செதச்சு இருக்காங்க .நீங்க கொஞ்சம் வந்து எனக்கு கன்ஃபாம் பண்ண முடியுமா என்று அவன் சொல்லும் போதே

“அய்யோ என்னாச்சு அவருக்கு” என்று அவள் அழவும்

மேடம் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க இங்க என்னமோ எங்கள சுத்தி நடக்குது கொஞ்சம் நீங்க வந்து கன்பார்ம் பண்ணுங்க என்று சொல்லி அவன் காரில் தலைவர் மனைவியை அழைத்து செல்ல

மீண்டும் ஒரு நம்பரில் இருந்து அவனுக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் வந்தது. “இந்த கேஸ் விட்டு திரும்பி பக்கமா போன்னு சொன்னா இன்னும் இந்த கேஸ்ல தான் சுத்திட்டு இருக்கியா. கண்டிப்பா மித்ரா உயிரோட கிடைக்க மாட்டாங்க.இப்போ தலைவருக்கான மாதிரி அடுத்து மித்ராக்கு ஆக “போது என்று மெசேஜ் கேட்டவன்

அப்படியே முகமெல்லாம் வேர்த்து வேகமாக "அர்ஜூன் சார் எனக்கு இந்த மாதிரி ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வருது.அது ட்ரெஸ் பண்ண முடியல சீக்கிரமா மித்ரா கண்டுபிடிங்க. அப்ப தான் நமக்கு அதுல இருக்குற வீடியோ என்னனு தெரியும்" என்று அவன் சொல்லிக்கொண்டு நான் இப்போ ஸ்பாட்டுக்கு வந்துட்டு இருக்கேன் என்று சொல்லி போனை வைத்தான்.
 
New member
Joined
Mar 26, 2025
Messages
6
கொஞ்ச நேரத்தில் அவன் அங்கே வர போலீஸ் பாதுகாப்புடன் அவள் இறங்கி கீழே வர “கொஞ்சம் பாத்து சொல்லுங்க மேடம் “என்று அவள் சொல்லவும்

என்னங்க என்று அந்த உருவத்தைப் பார்த்து அழ ஆரம்பிக்கவும்

இது கண்டிப்பா என்னோட ஹஸ்பண்ட் தான் அவங்களுக்கு வலதுகை மணிக்கட்டுல ஒரு மச்சம் இருக்கும் பாருங்க அதை அப்படியே இருக்கு. இப்ப யாரு இந்தமாதிரிலாம் பண்ணா நீங்க கண்டுபிடிக்காம இந்த இடத்தை விட்டு வரமாட்டேன் என்று அவள் அந்த இடத்தில் கூச்சலிட

மேடம் புரிஞ்சிக்கோங்க இப்போ சிட்சுவேஷன் கொஞ்சம் சரியில்ல,நீங்களும் இந்த மாதிரிலாம் பண்ணாதீங்க.நீங்க கெளம்பி வீட்டுக்கு போங்க என்று ஆதவ் சொல்ல

இல்ல நான் இங்கிருந்து போக மாட்டேன் யாருன்னு தெரிஞ்சா தான் நான் இங்கிருந்து போவ இல்லனா இந்த இடத்துலயே நானும் செத்துடுவேன் என்று அவள் சொல்லவும்

செய்யவேண்டிய பார்மாலிட்டீஸ்லாம் செஞ்சுட்டு தலைவரோட பாடி வீட்டுக்கு வரும். நீங்க கொஞ்சம் சிட்சுவேஷன் புரிஞ்சிக்கோங்க மேடம் இங்க என்னென்னமோ நடக்குது ,இப்ப உங்க உயிருக்கும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும் என்று அவன் அவளிடம் சொல்ல

அவள் அப்படியே பித்து பிடித்தவள் போல் காரில் உட்கார்ந்து கொண்டு அந்த மிரரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்

மேடம் சார்க்கு எதாவது எதிரின்னு இருக்காங்களா என்று அவன் கேட்க

என்ன சொல்றீங்க அரசியல்வாதிக்கு எதிரி இல்லாம இருப்பாங்களா ?

நீங்க கேக்கற கேள்வியா பாத்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு உங்க மேல என்று அவள் சொல்ல

இப்போ நா மித்ரா முதல்ல எங்க இருக்காங்கனு கண்டுபிடிக்கணும் என்று தன் மனத்தில் நினைத்துக்கொண்டு “சாரி மேடம் உங்கள இந்த நேரத்துல கஷ்டப்படுத்திட்டேன் “என்று சொல்லி அவளை வீட்டில் விட்டு அவன் வெளியே வர

திரும்பவும் அர்ஜூன் ஃபோன் பண்ணி “அங்க நீங்க அவங்களுக்கு பாதுகாப்பா அங்கேயே இருங்க” என்று சொல்ல

அவனும் அப்படியே வெளியே நின்று கொண்டிருக்க திடீரென்று ஒரு வீடியோ அதில் மித்ராவின் வாயில் கை காலெல்லாம் கட்டிப்போட்டு அவள் கண்ணையும் கட்டி வாயில் துணி வைத்து ஒரு வீடியோ வரம”நான் சொல்ற இடத்துக்கு நீ இப்ப வந்தா உங்க ரிப்போர்ட் ஃப் உயிரோட வருவாங்க இல்லனா வெறும் பிணமா தான் பார்ப்ப என்று சொல்லவும்

அவன் வேகமாக அங்கிருந்து கிளம்ப..

அங்கிருந்து கிளம்பி காரை ஓட்டிக்கொண்டே வரும்போது “ஐயோ இப்பவும் தலைவரோட வொய்ஃப் தனியா விட்டுட்டு வந்துட்டமே” என்று மனதில் எண்ணியவன் சரி மித்ரா கண்டுபிடிக்கலாம் என்று நினைத்து விட்டு வேகமாக சென்றான்

அவன் அங்கே செல்லும் நேரத்தில் அங்கே யாரும் இல்லாமல் ஒரு அறையில் மித்ரா மட்டும் ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு இருப்பதை பார்த்த ஆதவ் வேகமாக போய் அவளின் கைகளை அவிழ்த்துவிட்டு வாயில் இருக்கும் துணிய எடுத்து “எப்படி நீங்க இந்த இடத்துக்கு வந்தீங்க “என்று கேட்க

உங்க கூட கார்ல இருந்து இறங்கும்போது யாரோ அந்த இடத்துல என்னையே பின்னாடி கூப்பிட்டு ஸ்ப்ரே அடிச்சாங்க,கண்ணு முழிச்சு பாத்தா இங்க இருக்கேன் ஆனா இங்க யாருமே இல்ல ரொம்ப நேரமா நான் மட்டும்தான் இருக்கேன் என்று அவள் சொல்லவும்


சரி சீக்கிரமா வாங்க இந்த இடத்துல நீங்க இதுக்கு மேல இருக்கிறது ஆபத்து என்று சொல்லி அவளை கூப்பிட்டு கொண்டுவரவும் அர்ஜுனிடம் இருந்துதிரும்பவும் போன் வர

எங்க இருக்கீங்க நீங்க தலைவர் வீட்ல தான் இருக்கீங்களா என்று கேட்க


“சார் மித்ராவ கண்டுபிடிக்க வந்தேன் .இப்ப அவங்க என் கூட தான் இருக்காங்க. ஆனா அவங்க போன் காணும்,ஃபோன்ல எவிடன்ஸ் இருந்துச்சு “என்று அவன் சொல்லவும்

அவங்கள பத்திரமா கூப்பிட்டு தலைவரோட வீட்ல இருங்க வேற எங்கயும் போகாதீங்க என்று சொல்லவும்

உடனே கொஞ்ச நேரத்தில் ஆதவும் மித்ராவும் தலைவரின் வீட்டில் வந்து இருக்க அங்கே அவள் மனைவி மற்றும் கட்சியில் இருக்கக்கூடிய உறுப்பினர்களை எல்லாம் நின்று கொண்டு இருக்க

உடனே மேடம் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா என்று கேட்க , அவள் கிச்சனுக்குள் சென்று தண்ணீர் எடுத்து கொண்டு வந்து மித்ராவிடம் கொடுக்க

கொஞ்சம் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கலாமா என்று மித்ரா கேட்டு வேகமாக ரெஸ்ட் ரூம் செல்ல

அங்கு பக்கத்தில் ஒரு அறை ரொம்ப நேரமாக பூட்டி இருப்பதை பார்த்தவள் வெளிப்பக்கமாக பூட்டி இருக்கு ஒரு வேல உள்ள யாராவது இருக்காங்களா என்று சந்தேகத்தை வரவழைத்து கொண்டு அதை திறந்து உள்ளே போக மாடியிலிருந்து எட்டிப்பார்க்க அவளை யாரும் கண்டுக் காமல் இருக்கவும்

உடனே அவள் உள்ளே போய் பாக்க அங்க எதுவுமில்லாததால் அப்படியே சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் திடீரென அவள் காலில் ஏதோ தட்டுப் படுவது போல் இருந்தது. அதை குனிந்து எடுத்தவள்க்கு அதிர்ச்சி

ஏனென்றால் அது அவளின் மொபைல்

என்னோட மொபைல் எப்படிங்க வந்துச்ச என்று தன் மனத்திற்குள் கேள்விகளை வரவழைத்துக் கொண்டு வேகமாக “மிஸ்டர் ஆதவ் கொஞ்சம் மேல வாங்க “என்று அவள் சொல்ல

மேடம் நீங்க ரெஸ்ட் ரூம் தான போறன்னு சொன்னீங்க எதுக்கு மேலபோனீங்க என்று அவர் மனைவி கேட்கவும்

மிஸ்டர் ஆதவ இங்க பாருங்க என்னோட மொபைல் இந்த ரூம் ல இருக்கு அப்போ இவங்களுக்கும் தலைவர் செத்தத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு நினைக்க இவங்கள விசாரிங்க என்று அவள் சொல்ல

உடனே அப்படியே பயத்தை உள்ளே வைத்துக்கொண்டு” என்ன சொல்றாங்க உங்க ஃபோன் எப்படிங்க இங்க வருமென்று” கேட்க

நல்லா பாருங்க இந்த வீடியோல கூட உருவம் தெரியுது அதே அவங்க தான் நினைக்கிறேன். இவங்க தான் எதோ பண்ணி இருக்காங்க என்று மித்ரா சொல்ல

உடனே வேகமாக ஆதவ் தலைவரின் மனைவியைப் பிடித்து விசாரிக்க அவள் வாயிலிருந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்

கொஞ்ச நேரத்தில் அர்ஜுனும் வர “இப்போ நீங்க கண்டிப்பா உண்மைய சொல்லியே ஆகணும் இல்லனா இங்க நடக்கறதே வேற” என்று அவளை ஒரு ரூமுக்குள் பூட்டி வைத்து அவளிடம் கேட்க

“என்ன மன்னிச்சிருங்க நான் தான் அவர கொல பண்ண ஆள் வச்சு,அது மட்டும் இல்லாம இந்த கேஸ்ல நீங்க எல்லாரும் இருக்கிங்கன்னு தான் மித்ராவ கடத்துன உங்களுக்கும் பயம் வரணும் தான் நீங்க வந்த கார பாம் வச்சு வெடிக்க வச்சேன் “என்று அவள் சொல்ல

இதெல்லா நீங்க எதுக்காக செஞ்சீங்க என்று கேட்க

அவள் வாய் திறக்காமல் இருக்கு

உடனே மித்ரா அவள் கன்னத்தில் ஒரு அடி அடிக்க

என்னைய தலைவர் கட்டாயப்படுத்தி கல்யாணம் முடிச்சுட்டாங்க எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல அவருக்கும் எனக்கும் 15 வயசு வித்தியாசம் .அதனால நான் எங்கேயும் போகக்கூடாது வரக்கூடாதுன்னு என்னை அவர் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருந்தாரு. எனக்கு இதெல்லா புடிக்கல அதனால தான் நான் இந்த மாதிரிலாம் பண்ண என்று அவள் சொல்ல

இப்போ நீங்க பண்ணது உங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?

போலீஸ் சும்மாவே விடாது என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே

கொஞ்ச நேரத்தில் ஒரே சலசலப்பு அவர்கள் வீட்டில் என்னவென்று அனைவரும் மேல இருந்து கீழ வந்து பார்க்க அங்கே தலைவர் நின்று கொண்டு இருக்க

“தலைவர் இருக்காங்க அப்போ செத்தது யாரு” என்று ஆதவ் கேட்க

உடனே தலைவர் என்னையா என் வொய்ப் கொலை பண்ண பாக்குறான்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் அதுனால தான் அவ எதுக்காக என்ன சொல்றான்னு இந்த மாதிரிலாம் பிளே பண்ண. அது ஆல்ரெடி கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல செத்துப்போன பாடி வாங்கி முகத்த அந்த மாதிரி பண்ணி பொது இடத்துல போட்டேன் . ஆனா அதையெல்லாம் என் மனைவி ஆள் வச்சி பண்ண சொன்னா ஆள் முலமாவே தான் நானும் பண்ண. எதுக்காக இப்படியெல்லாம் பண்றா ஒருவேளை அவளுக்கு வேற யாருக்கும் தொடர்பு இருக்கு அதுனால தான் கொல்ல பாக்குறாரு தப்பா நெனச்சிட்டேன் .ஆனா நான் என் மேல தப்பு வச்சு அவள எவ்வளோ கொடுமைப்படுத்தி இருக்க . என்ன ரொம்ப மன்னிச்சிடு ஒன்னு விரும்பி தானா கட்டிக்கிட்ட , ஆனா உன்னோட விருப்பம் என்னன்னு கேக்காம விட்டுட்டேன்.இனிமேல் உன் வாழ்க்கைல நான்\இல்ல என்று அவர் பேச

அவர் மனைவி அனிதா அவர் காலில் விழுந்து என்ன மன்னிச்சிடுங்க நான் அனுபவிக்கிறது எல்லாமே உங்க சொத்து. ஆனா உங்களையே கொலை பண்ண நினைச்சி இருக்கேன் எனக்குலாம் மன்னிப்பே கிடையாது. இனிமே உங்களுக்கு புடிச்ச மாதிரினா கண்டிப்பா நடந்துப்பேன் என்று சொல்லி அழுதாள்.

ஆதவ் “தேங்க் யு மிஸ்மித்ரா நீங்க இல்லனா என்னால கண்டுபிடிக்கவே முடியாது" என்று அவளின் கையைப் பிடித்துக் குலுக்க

போதும் மிஸ்டர் ஆதவ் கொஞ்சம் கைய விட்டா நல்லாருக்கும் என்று சொல்லி சிரித்தாள்..

சுபம்
 
Last edited:
Joined
Mar 17, 2025
Messages
30
சூப்பர் சூப்பர் தங்கச்சி ✍️

விறுவிறுப்பான கதை.

யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

தலைவர் தன் தவறை உணர்ந்து விட்டார்.
 
New member
Joined
Mar 26, 2025
Messages
6
சூப்பர் சூப்பர் தங்கச்சி ✍️

விறுவிறுப்பான கதை.

யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

தலைவர் தன் தவறை உணர்ந்து விட்டார்.
மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா 🙏
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top