New member
- Joined
- Feb 20, 2025
- Messages
- 10
- Thread Author
- #1
இனியவனே! இளையவனே !
கதிரவனின் கதிர்கள் அந்த தெப்ப குளத்தின் நீர் அலைகளில் புகுந்து வெள்ளி நிற முத்துக்கள் போல் மின்னின. அங்கு கன்னத்திற்கு கை கொடுத்தபடி நீரில் மீன்களால் ஏற்படும் அலைகளையும், துள்ளிக் குதிக்கும் மீன்களையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மீரா. அந்த அழகிய முகத்தில் சோகம் குடிகொண்டு, அது எதிரில் இருந்த நீரிலும் பிரதிபலித்தது.
அப்போது வயதான தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்தபடி தெப்ப குளத்தின் படிகளில் இறங்க ஆரம்பித்தனர்.
“நல்லா பிடிச்சுக்கோங்க.”
“நான் நல்லா பிடிச்சிருக்கேன் ரமணிம்மா. பார்த்து கால வையுங்க.”
“நீங்களும் பார்த்து வையுங்க.”
இருவரும் பேசியபடி படிகளில் இறங்கினர். ரமணி என்ற அந்த பெண்மணி பையில் வைத்திருந்த நெகிழிப் பையை எடுத்து அதில் இருக்கும் பொரியை மீன்களுக்கு தூவினார்.
இருவரும் வயோதிகம் காரணமாகப் படியில் அமர்ந்து கொண்டனர்.
“இப்ப தாங்க ரொம்ப நிம்மதியாக இருக்கு. ரொம்ப நாள் ஆசை அந்த கோயிலுக்கு வரணும்னு. உங்க கூட முதல் தடவை வந்தது ரொம்ப சந்தோஷம்.”
“எனிதிங் ஃபார் யூ ரமணிம்மா. அந்த பிரசாதத்தை எடுங்க சாப்பிடுவோம்.”
நெய்யில் குளித்து முந்திரியையும், திராட்சையும், ஆபரணங்களாக அணிந்திருந்த பொங்கலை தொன்னையிலிருந்து எடுத்த ரமணிம்மா முதல் கைப்பிடியை எடுத்தவர் தன் கணவருக்கு நீட்டினார்.
மீராவுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த இவர்களின் மீது அவள் கவனம் பதியவில்லை. தம்பதிகள் இருவரும் உண்டு முடித்தவர்கள் அப்போதுதான் அந்த பெண்ணை கவனித்தனர்.
“பாருங்க அந்த பொண்ணு ரொம்ப நேரமா அப்படியே உட்கார்ந்து இருக்கு. சோகமாக இருக்கிற மாதிரி இருக்கு.பேசலாம்ங்க.”
இருவரும் மீராவின் அருகில் சென்று நின்றனர்.
“ பாப்பா இந்தாப் பிரசாதம். சாப்பிடு.”
புன்னகைத்தபடி ரமணியம்மா இன்னொரு தொன்னையில் இருந்த பொங்கலை நீட்டினார்.
அவர் குரலில் நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
சாந்தமும் புன்னகையும் தவழும் முகமாக, இளம் பச்சை வண்ண பருத்திப் புடவையுடன், நரையோடிய கூந்தலுமாக நின்று கொண்டிருந்தார் அந்த மூதாட்டி. அவர் அருகே வெள்ளை நிற வேட்டி சட்டையில் தலை முழுவதும் நரைத்த பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
அவர்கள் அன்பை மீராவால் மறுக்க முடியவில்லை.
“தேங்க்ஸ் பாட்டி.”
என்று நன்றி கூறினாள்.
“கேட்கிறேனு தப்பா நினைக்காதப் பாப்பா. ஏன் இப்படி கோயில்ல வந்து சோகமாக உட்கார்ந்து இருக்க? சாப்பிட்டியா?”
அவள் முகத்தில் மீண்டும் சோகமான புன்னகை.
“நீங்க கொடுத்து இருக்கீங்க.
சாப்பிட்டுருவேன்.”
“ எங்க வீடு இங்க பக்கத்துல தான். அங்க வந்து சாப்பிட்டு போ. பயப்பட வேண்டாம். நாங்க இந்த ஊரு தான். உன்னைப் பார்த்தா இந்த ஊரு மாதிரி தெரியல.”
“நான் பக்கத்து தாலுகா.”
“ஓ அப்படியா! வீட்டுக்கு வாம்மா.”
அந்த முதியவரும் அழைத்தார். அவர்களைப் பார்த்ததும் மனதில் ஒரு நேர்மறை எண்ணம் மீராவுக்கு. அவர்கள் அழைத்ததும் மறுக்க தோணவில்லை.
“சரி போலாம் பாட்டி.”
ஏனோ அவர்கள் சாப்பிட அழைக்கையில் அவன் நினைவு தானாக எழுந்ததது. மீராவும் எழுந்து அவர்களுடன் நடந்தாள்.
“உன் பேர் என்னமா? படிச்சிட்டு இருக்கியா? வேலைக்கு போயிட்டு இருக்கியா?”
“பேரு மீரா. வேலைக்கு போயிட்டு இருக்கேன்.”
“ஓ சரி சரி.”
கதிரவனின் கதிர்கள் அந்த தெப்ப குளத்தின் நீர் அலைகளில் புகுந்து வெள்ளி நிற முத்துக்கள் போல் மின்னின. அங்கு கன்னத்திற்கு கை கொடுத்தபடி நீரில் மீன்களால் ஏற்படும் அலைகளையும், துள்ளிக் குதிக்கும் மீன்களையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மீரா. அந்த அழகிய முகத்தில் சோகம் குடிகொண்டு, அது எதிரில் இருந்த நீரிலும் பிரதிபலித்தது.
அப்போது வயதான தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்தபடி தெப்ப குளத்தின் படிகளில் இறங்க ஆரம்பித்தனர்.
“நல்லா பிடிச்சுக்கோங்க.”
“நான் நல்லா பிடிச்சிருக்கேன் ரமணிம்மா. பார்த்து கால வையுங்க.”
“நீங்களும் பார்த்து வையுங்க.”
இருவரும் பேசியபடி படிகளில் இறங்கினர். ரமணி என்ற அந்த பெண்மணி பையில் வைத்திருந்த நெகிழிப் பையை எடுத்து அதில் இருக்கும் பொரியை மீன்களுக்கு தூவினார்.
இருவரும் வயோதிகம் காரணமாகப் படியில் அமர்ந்து கொண்டனர்.
“இப்ப தாங்க ரொம்ப நிம்மதியாக இருக்கு. ரொம்ப நாள் ஆசை அந்த கோயிலுக்கு வரணும்னு. உங்க கூட முதல் தடவை வந்தது ரொம்ப சந்தோஷம்.”
“எனிதிங் ஃபார் யூ ரமணிம்மா. அந்த பிரசாதத்தை எடுங்க சாப்பிடுவோம்.”
நெய்யில் குளித்து முந்திரியையும், திராட்சையும், ஆபரணங்களாக அணிந்திருந்த பொங்கலை தொன்னையிலிருந்து எடுத்த ரமணிம்மா முதல் கைப்பிடியை எடுத்தவர் தன் கணவருக்கு நீட்டினார்.
மீராவுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த இவர்களின் மீது அவள் கவனம் பதியவில்லை. தம்பதிகள் இருவரும் உண்டு முடித்தவர்கள் அப்போதுதான் அந்த பெண்ணை கவனித்தனர்.
“பாருங்க அந்த பொண்ணு ரொம்ப நேரமா அப்படியே உட்கார்ந்து இருக்கு. சோகமாக இருக்கிற மாதிரி இருக்கு.பேசலாம்ங்க.”
இருவரும் மீராவின் அருகில் சென்று நின்றனர்.
“ பாப்பா இந்தாப் பிரசாதம். சாப்பிடு.”
புன்னகைத்தபடி ரமணியம்மா இன்னொரு தொன்னையில் இருந்த பொங்கலை நீட்டினார்.
அவர் குரலில் நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
சாந்தமும் புன்னகையும் தவழும் முகமாக, இளம் பச்சை வண்ண பருத்திப் புடவையுடன், நரையோடிய கூந்தலுமாக நின்று கொண்டிருந்தார் அந்த மூதாட்டி. அவர் அருகே வெள்ளை நிற வேட்டி சட்டையில் தலை முழுவதும் நரைத்த பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
அவர்கள் அன்பை மீராவால் மறுக்க முடியவில்லை.
“தேங்க்ஸ் பாட்டி.”
என்று நன்றி கூறினாள்.
“கேட்கிறேனு தப்பா நினைக்காதப் பாப்பா. ஏன் இப்படி கோயில்ல வந்து சோகமாக உட்கார்ந்து இருக்க? சாப்பிட்டியா?”
அவள் முகத்தில் மீண்டும் சோகமான புன்னகை.
“நீங்க கொடுத்து இருக்கீங்க.
சாப்பிட்டுருவேன்.”
“ எங்க வீடு இங்க பக்கத்துல தான். அங்க வந்து சாப்பிட்டு போ. பயப்பட வேண்டாம். நாங்க இந்த ஊரு தான். உன்னைப் பார்த்தா இந்த ஊரு மாதிரி தெரியல.”
“நான் பக்கத்து தாலுகா.”
“ஓ அப்படியா! வீட்டுக்கு வாம்மா.”
அந்த முதியவரும் அழைத்தார். அவர்களைப் பார்த்ததும் மனதில் ஒரு நேர்மறை எண்ணம் மீராவுக்கு. அவர்கள் அழைத்ததும் மறுக்க தோணவில்லை.
“சரி போலாம் பாட்டி.”
ஏனோ அவர்கள் சாப்பிட அழைக்கையில் அவன் நினைவு தானாக எழுந்ததது. மீராவும் எழுந்து அவர்களுடன் நடந்தாள்.
“உன் பேர் என்னமா? படிச்சிட்டு இருக்கியா? வேலைக்கு போயிட்டு இருக்கியா?”
“பேரு மீரா. வேலைக்கு போயிட்டு இருக்கேன்.”
“ஓ சரி சரி.”
Last edited: