New member
- Joined
- May 20, 2025
- Messages
- 18
- Thread Author
- #1
"இந்த ஜீன்ஸ் டாப் உனக்கு நல்லாருக்கும் வள்ளி. இதை ட்ரையல் பார்த்துட்டு வா" என்று அவளின் கையினில் துணிகளைக் கொடுக்க,
"நான் காலேஜ் படிக்கும் போது தான் இதெல்லாம் போட்டிருக்கேன் கார்த்தி. அப்ப இருந்த உடம்புக்கு ஓகே. இப்ப கொஞ்சம் குண்டாகிட்டேன் எனக்குச் செட் ஆகாது கார்த்தி" என்று தயங்கியவாறு நின்றாள் வள்ளி.
தேனிலவுக்கென அவளுக்கான உடுப்புகள் வாங்க ஜவுளிக் கடைக்கு அழைத்து வந்திருந்தான் கார்த்திகேயன்.
"யாரு? நீ குண்டா? சரி தான்! உன்னை விட உடம்பு அதிகமா இருக்கிறவங்கலாம் போடும் போது உனக்கென்ன? உடம்பை இறுக்கி பிடிக்காத டாப் குர்தி போடும் போது குண்டா இருந்தாலும் அசிங்கமா தெரியாது. நான் உனக்கு அப்படித் தான் செலக்ட் செஞ்சி கொடுத்திருக்கேன். போய் டிரையல் பாரு" என்று அவளை அறைக்குள் தள்ளினான்.
அவன் கொடுத்த துணிகளை ஒவ்வொன்றாய் போட்டு அவனுக்குக் காண்பிக்க, "உனக்கு இந்த மாதிரி டிரஸ்லாம் சூப்பரா இருக்கு வள்ளி. அடிக்கடி உனக்குப் போட கம்ஃபர்டபுளா இல்லைனாலும் வேகேஷனுக்கு எங்கேயாவது போகும் போது போட்டுக்கோ" தனது விருப்பத்தைத் திணிக்காமல் அதே சமயம் அவளுக்கேற்ற வகையில் அவன் உரைத்திருந்த விதத்தை எண்ணி மெச்சிக் கொண்டாள்.
தனக்கும் சில துணிகளை எடுத்துக் கொண்டு அவளுடன் கிளம்பினான்.
காலை உணவை முடித்துக் கொண்டு பன்னிரண்டு மணியளவில் தேனிலவுப் பயணத்துக்குத் தேவையானவைகளை வாங்கவெனத் தி நகருக்கு வந்திருந்தனர் இருவரும்.
உடைகளை வாங்கி விட்டு அங்கேயே மதிய உணவை முடித்தவர்கள், அதன் பிறகு பெட்டி, காலணிகள் போன்ற பொருள்களை வாங்கவெனச் சுற்றினர்.
இப்படியே நேரம் நான்கை கடந்து விட, இதற்கு மேல் தாமதித்தால் செல்ல வேண்டிய விமானத்தைத் தவிர விட்டு விடுவார்கள் என்று பயந்தவர்களாய் அங்கிருந்து அவசர அவசரமாகக் கிளம்பியிருந்தனர்.
தி நகரிலிருந்து மகிழுந்தை கார்த்திகேயன் ஓட்டத் தொடங்கியதும், "கார்த்திப் போகும் போது அப்பா அம்மாவைப் பார்த்துட்டு போலாமா? நாம ஊருக்குப் போய்ட்டு வர எப்படியும் அஞ்சு நாள் ஆகும்ல. இப்பவே அவங்களைப் பார்த்துட்டு போய்ட்டா மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்" என்றாள்.
நேரத்தைப் பார்த்தவனாய் யோசித்தவன், "ஹனிமூன் போகும் போதே மூட் அவுட் ஆகிட்டு போகனுமா வள்ளி! அவங்களைப் பார்த்தா கண்டிப்பா உன்னைத் திட்டுவாங்க. நமக்கு நேரம் வேற இல்லை" என்றவன் சொன்னதும், "ஆமா திட்டுவாங்க தான். ஆனா திட்டுவாங்கனு அப்படியே விட்டுட முடியாதுல கார்த்தி" என்றாள்.
"ஹ்ம்ம் ஹனிமூன் போய்ட்டு வந்ததும் கண்டிப்பா உங்க வீட்டுக்குப் போகலாம்" என்று சமாதானம் செய்தான்.
சரியெனத் தலையசைந்தாலும் அவளின் மனத்தில் ஏதோ நெருடல்.
பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்ததினால் அவளால் முழுமையாக இந்த வாழ்வை மகிழ்வுடன் ஏற்க முடியவில்லை. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரைத் தனியாகத் தவிக்க விட்டு வந்து விட்டோமே, சுயநலமாய் முடிவெடுத்து விட்டோமே, தன்னைச் சீரும் சிறப்புமாய் வளர்த்த பெற்றோரை சுற்றத்தினரின் இழிப்பேச்சுக்கு ஆளாக்கி விட்டோமே என உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள் வள்ளி. அதனாலேயே எவ்வாறேனும் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றிட வேண்டும், அல்லது அவர்கள் தன்னிடம் முகம் கொடுத்து பேசுமளவாவது மாற வேண்டும் அதன் பிறகே தன்னால் இந்தத் திருமண வாழ்வில் முழு மகிழ்ச்சியுடன் பயணிக்க முடியும் என்று நம்பினாள். தேனிலவில் இருந்து வந்த பிறகு இதற்கு ஏதேனும் வழி செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.
அன்றிரவு விமான நிலையத்திற்குச் சென்றதுமே அவளுடன் இணைந்து நிறையத் தற்படங்கள் எடுத்தான் கார்த்திகேயன். இருவரின் உள்ளமும் மிகுதியான மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.
விமானம் ஏறியதும் அவளுடன் சில தற்படங்கள் எடுத்தவன், விமானம் பறக்கவும் கண்ணாடி வழியாக மின்சாரத்தினால் இருளில் ஒளிர்ந்த பூமியை படம் எடுத்து தனது இன்ஸ்டாவில், "First Flight travel with Wife" என்று குறிப்பிட்டுப் பதிவேற்றினான். அவளின் கவிதைப் பக்கத்
தினையும் டேக் செய்திருந்தான்.
"நான் காலேஜ் படிக்கும் போது தான் இதெல்லாம் போட்டிருக்கேன் கார்த்தி. அப்ப இருந்த உடம்புக்கு ஓகே. இப்ப கொஞ்சம் குண்டாகிட்டேன் எனக்குச் செட் ஆகாது கார்த்தி" என்று தயங்கியவாறு நின்றாள் வள்ளி.
தேனிலவுக்கென அவளுக்கான உடுப்புகள் வாங்க ஜவுளிக் கடைக்கு அழைத்து வந்திருந்தான் கார்த்திகேயன்.
"யாரு? நீ குண்டா? சரி தான்! உன்னை விட உடம்பு அதிகமா இருக்கிறவங்கலாம் போடும் போது உனக்கென்ன? உடம்பை இறுக்கி பிடிக்காத டாப் குர்தி போடும் போது குண்டா இருந்தாலும் அசிங்கமா தெரியாது. நான் உனக்கு அப்படித் தான் செலக்ட் செஞ்சி கொடுத்திருக்கேன். போய் டிரையல் பாரு" என்று அவளை அறைக்குள் தள்ளினான்.
அவன் கொடுத்த துணிகளை ஒவ்வொன்றாய் போட்டு அவனுக்குக் காண்பிக்க, "உனக்கு இந்த மாதிரி டிரஸ்லாம் சூப்பரா இருக்கு வள்ளி. அடிக்கடி உனக்குப் போட கம்ஃபர்டபுளா இல்லைனாலும் வேகேஷனுக்கு எங்கேயாவது போகும் போது போட்டுக்கோ" தனது விருப்பத்தைத் திணிக்காமல் அதே சமயம் அவளுக்கேற்ற வகையில் அவன் உரைத்திருந்த விதத்தை எண்ணி மெச்சிக் கொண்டாள்.
தனக்கும் சில துணிகளை எடுத்துக் கொண்டு அவளுடன் கிளம்பினான்.
காலை உணவை முடித்துக் கொண்டு பன்னிரண்டு மணியளவில் தேனிலவுப் பயணத்துக்குத் தேவையானவைகளை வாங்கவெனத் தி நகருக்கு வந்திருந்தனர் இருவரும்.
உடைகளை வாங்கி விட்டு அங்கேயே மதிய உணவை முடித்தவர்கள், அதன் பிறகு பெட்டி, காலணிகள் போன்ற பொருள்களை வாங்கவெனச் சுற்றினர்.
இப்படியே நேரம் நான்கை கடந்து விட, இதற்கு மேல் தாமதித்தால் செல்ல வேண்டிய விமானத்தைத் தவிர விட்டு விடுவார்கள் என்று பயந்தவர்களாய் அங்கிருந்து அவசர அவசரமாகக் கிளம்பியிருந்தனர்.
தி நகரிலிருந்து மகிழுந்தை கார்த்திகேயன் ஓட்டத் தொடங்கியதும், "கார்த்திப் போகும் போது அப்பா அம்மாவைப் பார்த்துட்டு போலாமா? நாம ஊருக்குப் போய்ட்டு வர எப்படியும் அஞ்சு நாள் ஆகும்ல. இப்பவே அவங்களைப் பார்த்துட்டு போய்ட்டா மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்" என்றாள்.
நேரத்தைப் பார்த்தவனாய் யோசித்தவன், "ஹனிமூன் போகும் போதே மூட் அவுட் ஆகிட்டு போகனுமா வள்ளி! அவங்களைப் பார்த்தா கண்டிப்பா உன்னைத் திட்டுவாங்க. நமக்கு நேரம் வேற இல்லை" என்றவன் சொன்னதும், "ஆமா திட்டுவாங்க தான். ஆனா திட்டுவாங்கனு அப்படியே விட்டுட முடியாதுல கார்த்தி" என்றாள்.
"ஹ்ம்ம் ஹனிமூன் போய்ட்டு வந்ததும் கண்டிப்பா உங்க வீட்டுக்குப் போகலாம்" என்று சமாதானம் செய்தான்.
சரியெனத் தலையசைந்தாலும் அவளின் மனத்தில் ஏதோ நெருடல்.
பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்ததினால் அவளால் முழுமையாக இந்த வாழ்வை மகிழ்வுடன் ஏற்க முடியவில்லை. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரைத் தனியாகத் தவிக்க விட்டு வந்து விட்டோமே, சுயநலமாய் முடிவெடுத்து விட்டோமே, தன்னைச் சீரும் சிறப்புமாய் வளர்த்த பெற்றோரை சுற்றத்தினரின் இழிப்பேச்சுக்கு ஆளாக்கி விட்டோமே என உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள் வள்ளி. அதனாலேயே எவ்வாறேனும் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றிட வேண்டும், அல்லது அவர்கள் தன்னிடம் முகம் கொடுத்து பேசுமளவாவது மாற வேண்டும் அதன் பிறகே தன்னால் இந்தத் திருமண வாழ்வில் முழு மகிழ்ச்சியுடன் பயணிக்க முடியும் என்று நம்பினாள். தேனிலவில் இருந்து வந்த பிறகு இதற்கு ஏதேனும் வழி செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.
அன்றிரவு விமான நிலையத்திற்குச் சென்றதுமே அவளுடன் இணைந்து நிறையத் தற்படங்கள் எடுத்தான் கார்த்திகேயன். இருவரின் உள்ளமும் மிகுதியான மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.
விமானம் ஏறியதும் அவளுடன் சில தற்படங்கள் எடுத்தவன், விமானம் பறக்கவும் கண்ணாடி வழியாக மின்சாரத்தினால் இருளில் ஒளிர்ந்த பூமியை படம் எடுத்து தனது இன்ஸ்டாவில், "First Flight travel with Wife" என்று குறிப்பிட்டுப் பதிவேற்றினான். அவளின் கவிதைப் பக்கத்
தினையும் டேக் செய்திருந்தான்.