• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 20, 2025
Messages
18
"வெள்ளைத் தோலைப் பார்த்து மயங்கிட்டியாடி! அதான் ஆத்தா அப்பன் கூட வேணாம்னு கண்டவன் கையைப் பிடிச்சிட்டு வந்து நிக்கிற" எனக் கத்தியிருந்தார் முத்துலட்சுமி.

திருத்தணியில் திருமணம் முடிந்ததும் முருகனை வணங்கச் சென்ற பொழுது, "அப்பா அம்மா ஆசிர்வாதம் இல்லாம எனக்குக் கல்யாணம் நடக்கும்னு கனவுல கூட நான் நினைக்கலையே முருகா" என்று வள்ளி கலங்கி அழுததைப் பார்த்த கார்த்திகேயன், அங்குச் சம்பிரதாயங்கள் அனைத்தும் நிறைவுறவும், தனது பெற்றோரை வாடகை மகிழுந்தில் வீட்டிற்கு அனுப்பி விட்டு, வள்ளியுடன் தனது மகிழுந்தில் அவளது வீட்டிற்கு வந்திருந்தான்.

இவர்களின் கடை மூடப்பட்டிருக்க, திறந்திருந்த வீட்டினுள்ளே இருவரும் தம்பதியாய் சென்று நிற்கவும் தான் முத்துலட்சுமி இவ்வாறு திட்டியிருந்தார். செல்வகுமார் ஏதும் பேசாது அமைதியாக அமர்ந்திருக்க, "ப்பாஅஅ கார்த்தி நல்லவருப்பா. என்னை நல்லா வச்சி பார்த்துப்பாருப்பா. சாதியைத் தவிர வேற என்ன காரணம் சொல்லிருந்தாலும் நான் என் மனசை மாத்த முயற்சி செஞ்சிருப்பேன்ப்பா" தன்னிலை விளக்கமாக அவள் பேசிக் கொண்டே போக,

"எங்களுக்குப் பொறந்த பொண்ணு செத்து போய்ட்டானு நாங்க முடிவு செஞ்சி ரொம்ப நேரம் ஆகுது" அமைதியான குரலில் உரைத்திருந்தார் செல்வகுமார்.

இதற்கு மேல் இங்கே நிற்பது சரி வராது என்று எண்ணியவனாய், "இப்ப நீங்க கோபத்துல பேசுறீங்க மாமா. உங்களுக்காக எங்க வீட்டுக் கதவு எப்பவும் திறந்து தான் இருக்கும். எங்களைத் திட்டுறதுக்காக நீங்க வரனும்னு நினைச்சாலும் வரலாம். உங்களுக்காக நாங்க காத்துக்கிட்டு இருப்போம்" என்றவன் கண்களில் நீர் வழிய நின்றிருந்த வள்ளியின் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தான் கார்த்திகேயன்.

வள்ளியின் கரத்தினில் நடுக்கத்தை உணர்ந்தவனாய் அவளைப் பார்க்க, சோர்ந்து வீங்கிய கண்களுடன் அழுதிருந்தாள் அவள். அவனுக்கு அவளின் தோற்றமும் அழுகையும் குற்றவுணர்வை அளித்தது.

அவளைத் திருமணம் செய்யவென அழைத்துச் சென்ற நேரத்திலிருந்து இப்படித் தான் அழுதுக் கொண்டிருக்கிறாள்.

மகிழுந்தில் முன்னிருக்கையில் அமர்ந்தவளின் அருகே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனாய், "எதுக்கு இப்படி அழுற வள்ளி? இப்படிலாம் நடக்கும்னு நாம எதிர்பார்த்தது தானே! என்னமோ நான் உன்னைக் கம்பெல் செஞ்சி லவ் செய்ய வச்ச மாதிரி ஃபீல் செய்ய வைக்கிற வள்ளி" சற்று கடுப்புடனே அவன் உரைக்கவும், விருட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ஜன்னலின் வெளியே பார்வையைச் செலுத்தினாள்.

அழுகை நின்றும் விசும்பல் நில்லாமல் தொடர, "நான் அழலை. நீங்க வண்டியை எடுங்க" விசும்பலுடனேயே உரைத்தாள் அவள்.

அவளின் இந்த முகத்திருப்பலும் விசம்பலும் அவனின் மனத்தைத் தைத்தது.

ம்ப்ச் எனத் தலையைக் கோதிக் கொண்டவனாய் தன்னை நிலைப்படுத்தியவன், வண்டியை இயக்கினான்.

அவளின் விசும்பல் நில்லாமல் தொடரவும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், "காதல் கல்யாணத்துல அப்பா அம்மா இப்படி ரியாக்ட் செய்றது சகஜம் தானே வள்ளி. உங்கப்பா அம்மாகிட்ட வாழ்ந்து காட்டுறேன் பாருங்கனு சவால் விட்டு வராம, இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? இல்ல நாம நல்லா வாழுவோம்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?" எனக் கேட்டான்.

அவன் வார்த்தையில் இருந்த கோபமும் அழுத்தமும் அவளுக்குப் புரிந்த போதும், தன்னிலையைப் புரிந்து கொள்ளாமல் கோபப்படும் அவன் மேல் கோபம் மூண்டது இவளுக்கு.

அழுகையைக் கோபம் வென்றுவிட, அவன் கேள்விகளுக்குப் பதிலிறுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவளின் அழுகையும் விசும்பலும் முற்றிலுமாய் நின்றிருந்தன.

அவள் பதிலிறுக்காத போதும் அவளின் அழுகை நின்றதில் சற்று ஆசுவாசமானது அவன் உள்ளம்.

அடுத்து இருவரும் தம்பதியாய் அடுக்ககத்தில் இருக்கும் கார்த்திகேயனின் இல்லத்திற்குச் சென்றனர்.

அங்கே இருவரும் ஒன்றாகப் படியினில் ஏறியிருந்த பொழுது கார்த்திகேயன் வேட்டி சட்டையில் புது மாப்பிள்ளை களையுடன் வருவதைப் பார்த்த அவனின் அண்டை வீட்டு அம்மா, "என்ன கார்த்தி? சொன்ன மாதிரியே பொண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டியா? எங்ககிட்டலாம் சொல்லவே இல்ல" என்று ஆச்சரியத்துடன் வினவ,

"ஆமா ஆன்டி. சத்தமா சொல்லாதீங்க. மைனர் பொண்ணு வேற! அப்புறம் போலீஸ் என்னைத் தூக்கிட்டு போய் டின்னு கட்டிருவாங்க" என்று சிரிப்புடன் கூறியவாறு அவளுடன் சென்றவனைப் பார்த்து,

"எப்பவும் விளையாட்டு தான்டா உனக்கு" என்று கூறியவாறு சென்றிருந்தார் அவர்.

இருவரும் வீட்டை அடைந்ததும் ஆர்த்தி எடுத்தவராய் இருவரையும் உள்ளே போகச் சொன்னார் பார்வதி.

"வாழ்த்துகள்டா மவனே" என்று தாமோதரன் மகனை அழைத்து மகிழ்வுடன் வாழ்த்தினார்.
 
New member
Joined
May 20, 2025
Messages
18
மருமகளின் சோர்ந்த முகத்தைக் கண்டு, "அப்பா அம்மா இல்லாம கல்யாணம் நடந்துடுச்சேனு கவலைப்படாதமா. நாங்க உனக்கு அப்பா அம்மாவா இருப்போம்" என்று பார்வதி அவளின் கைப்பற்றி ஆறுதல் உரைக்கவும் கண்ணில் பெருகிய நீரைத் துடைத்தாள் வள்ளி.

முகப்பறையிலேயே மரத்தினாலான பெரிய பூஜையறை செய்து வைத்திருந்த இடத்தினில் வள்ளியை அழைத்துச் சென்ற பார்வதி, சாமிக்கு விளக்கேற்ற கூறினார்.

விளக்கையேற்றி விட்டு நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் வள்ளி தெய்வானையுடன் முருகன் நடுநாயகமாகப் பெரிய படமாக அந்தச் சாமியறையில் இருப்பதைப் பார்த்ததும், மனத்தில் இருந்த அலைபுறுதல் எல்லாம் சற்று மட்டுப்பட, 'இன்னிக்குத் தொடங்கியிருக்க எங்க பந்தம் ஆயுளுக்கும் நீண்டு இருக்கனும். நானும் கார்த்தியும் ஆத்மார்த்தமான தம்பதியா வாழனும். அதுக்கு நீங்க அருள் புரியனும் முருகா' கண்களை மூடி மனதார அவள் வேண்டுதல் வைத்து நிற்க, அவளின் உச்சியில் குங்குமம் வைத்தான் கார்த்திகேயன்.

அவனின் தொடுகை உணர்வில் கண்களைத் திறந்தவளுக்கு, முருகனே தனது வேண்டுதலுக்குச் செவி சாய்த்த உணர்வு எழ, புன்சிரிப்புடன் முருகரின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.

"ஹப்ப்பாஆஆ இப்ப தான் என் பொண்டாட்டி முகத்துல லேசா சிரிப்பு வருது. நன்றி முருகா" என்று சிரித்தான் கார்த்திகேயன்.

அதன் பிறகு மதிய உணவை உண்டு விட்டு பார்வதியின் அறையில் படுத்தவளாய் நன்றாக உறங்கிப் போனாள் வள்ளி. கார்த்திகேயனும் தொடர் அலைச்சலில் களைப்புற்று அவனது அறையில் உறங்கியிருந்தான்.

மாலை வேளையில் பார்வதியுடன் சமையல் வேலையில் வள்ளி ஈடுபட, இரவு எட்டு மணியளவில் தான் எழுந்தான் கார்த்திகேயன்.

இரவுணவை முடித்து விட்டு பார்வதியும் தாமோதரனும் அவர்களின் அறைக்குச் சென்றுவிட, வள்ளி கார்த்திகேயனின் அறைக்குள் சென்றாள்.

தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் சில நிமிடங்கள் கழித்து அறைக்குச் சென்றான்.

ஜன்னல் வழியாக வானில் தெரிந்த நட்சத்திரங்களைக் கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்த வள்ளி, கார்த்திகேயனின் அரவம் கேட்டு விறுவிறுவெனக் கண்களைத் துடைத்தாள்.

'இன்னும் இந்த அழுகையை நிறுத்தலையா நீ?' என்று கேட்டு விடுவானோ என்று பயந்து போனாள் வள்ளி.

அவள் அவ்வாறு பயந்து கண்களைத் துடைத்துக் கொண்டதை கண்டவன் அவளருகில் சென்று, "அந்தப் பயம் இருக்கட்டும்" என்று விளையாட்டாய் கூற,

"எனக்கு இங்கே அழ கூட உரிமை இல்லாம போச்சு" என்று கோபமாய் உரைக்க முயன்று அழுகையில் தழுதழுத்த குரலில் உரைத்தவளாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வள்ளி.

அவளின் தாடையைப் பற்றியவாறு முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி, கண்களைத் துடைத்து விட்டு மெல்ல அணைத்துக் கொண்டவனாய், "உன்னை ஹர்ட் செஞ்சிருந்தா சாரி" என்றவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுத்து மீண்டுமாய் உற்பத்தியாக, அவனை இறுக அணைத்து மார்போடு தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அவளின் கண்ணீர் அவனது சட்டையை நனைத்து நெஞ்சை சுட்டது.

அவளின் உச்சந்தலையில் தனது தாடையை வைத்தவனாய் முதுகை வருடியவன், "அம்மா அப்பாவை சீக்கிரம் சமாதானம் செஞ்சி பேச வச்சிடலாம்டா வள்ளி. உன் புருஷனைக் கொஞ்சம் நம்புடா" கண்களைச் சுருக்கிக் கெஞ்சியவாறு உரைத்தான்.

"நிஜமா?" தவிப்புடன் அவன் கண்களை நோக்கியவாறு அவள் கேட்க, "முருகர் மேல சத்தியமா, உன் அப்பா அம்மாவை உன்கூடக் கொண்டு வந்து சேர்க்க என்னாலான எல்லா முயற்சியும் செய்வேன்" என்றான்.

"தேங்க்யூ கார்த்தி" மனம் நெகிழ அவனை இறுக அணைத்தாள். முதல் முறையாக உணரும் ஆணின் அணைப்பில் அவள் உடலில் உணரப்படும் அவனுடலின் வெம்மை அவளுள் சிலிர்ப்பையும் பரவச உணர்வையும் அளிக்க,

அவளின் கழுத்தில் முகம் புதைத்தவனாய், "நீயா என்னை அணைக்குற முதல் அணைப்பு இது வள்ளி" என்றவன் அவளின் கழுத்தில் இதழால் வருட, அவளின் அங்கமெல்லாம் சிலிர்த்து அடங்கியது.

அவளின் முகத்தை நிமிர்த்திக் கண்களுக்குள் ஊடுருவியவனாய்,

அனைத்திலும் முதல் என்பது சிறப்பு வாய்ந்ததாமே!
காதல்
அணைப்பு
முத்தம்
காமமென
என்னுடைய
அனைத்து முதலும்
உன்னுடன் மட்டுமே
இருக்க வேண்டுமெனக்
காத்திருக்கிறேன் நான்?
என்று வருவாயோ நீ?

அவளின் கவிதையை அவளிடமே உரைத்து அவன் கண்களைச் சிமிட்ட, இவளின் விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன.

"இந்தளவுக்கு என் கவிதை உங்களுக்கு மனப்பாடமா?" ஆச்சரியம் விலகாத குரலில் அவள் கேட்க,

புன்சிரிப்புடன் அவளது விரிந்த விழிகளில் முத்தமிட்டவன், அவளைக் கைகளில் தூக்க முற்பட, "அய்யோ" என்று நொடி நேரத்தில் பதறியவளாய் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அவனது கண்களைப் பார்த்தவளாய், "வெயிட்டா இல்லையா நானு" என்றவள் கேட்க,

இல்லையெனத் தலையசைத்தவன், "கையில் மதிக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ" என்று பாட வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.

படுக்கையில் அவளைக் கிடத்தியவன் தனது சட்டையைக் கழற்ற, அவனது வெற்றுடலைக் காணத் தயங்கி வெட்கத்துடன் முகத்தைத் தாழ்த்தினாள் வள்ளி.

அவளருகில் படுத்தவனாய் அவளின் கையை எடுத்துத் தன்னை வளைத்துப் போட்டு கொண்டவன், "என்னைப் பாரு வள்ளி" அவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தினான்.

இமைக்க மறந்து அவன் முகத்தையே பார்த்தவள், "நீங்க ரொம்ப அழகு" என்றாள்.

மனைவியின் பாராட்டில் அவன் முகம் விகசிக்க, அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

"ஆனா நான் உங்களைப் போல இல்லை தானே" என்று அவள் கேட்கவும்,

அவளை மேலிருந்து கீழே வரை அவனின் கண்கள் வலம் வர, அவனின் பார்வையில் இவளுக்குக் கூச்சம் உண்டாக, "அய்யோ என்ன செய்றீங்க?" என்று சிணுங்கினாள்.

"இல்ல நீ என்னைப் போல இருக்கியானு பார்த்தேன்! என்னை மாதிரி இல்லையே" என்று கண்ணடித்து அவன் வேறு பொருளில் உரைத்ததைக் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டவளாய்,

"அய்யோ தெரியாம கேட்டுட்டேன்" என்றவளின் முகமே சிவந்து போக, வாய்விட்டுச் சிரித்தவனாய், "இப்படிலாம் கேள்வி கேட்குற இந்த உதட்டை..." என்று அவளின் உதட்டைப் பிடித்து இழுத்தவன் மெல்ல முத்தமிட்டு அவளின் இதழுக்குள் மூழ்கிப் போனான்.

இருவரும் சில மணித்துளிகள் தன்னிலை மறந்து வானத்தில் பறந்து தரையிறங்கிய போது பெரும் போதையாய் உணர்ந்தான் அவன். வெட்கத்துடன் அவனின் கழுத்தினில் அவள் முகத்தைப் புதைத்துக் கொள்ள,

தேறலும் தேனுமாய்
இனித்து மயக்குமாமே
முத்தமும் மோகமும்!
முத்த மழைப் பொழிந்து
உன்னுள் மோகமாய் மூழ்கி
காதலெனும்
முத்தெடுத்து வாழ
காத்திருக்கிறேன் நானும்
என்று வருவாயோ நீ?

அவள் எழுதிய கவிதையை அவனுரைத்த நொடி இன்ப அதிர்வுடன் நிமிர்ந்து பார்த்தவளிடம், "முத்தம் எப்படித் தேனா இனிச்சிச்சா? இல்ல தேறலா மயங்க வச்சிச்சா?" என்று புருவத்தை உயர்த்தியவாறு குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.

"எப்படிக் கார்த்தி? என்னோட ஒவ்வொரு உணர்வையும் தாங்கியிருக்க ஒவ்வொரு கவிதையையும் எப்படி இவ்வளோ ஞாபகமா வச்சிருக்கீங்க கார்த்தி" ஆச்சரியம் தாளாது அவள் கேட்க,

"அந்தக் கவிதை அளவுக்கு, அந்தக் கவிதைல உணர்வாய் இருக்க உன்னையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் வள்ளி. அதனால தானா மைண்ட்குள்ள மனப்பாடமாகிடுச்சு" என்று சிரித்தவனை ஆனந்த கண்ணீருடன் பார்த்தவளாய், அவன் முகமெங்கும் முத்தமழைப் பொழிந்தாள் வள்ளி.

அவளின் முத்த மழை ஓய்ந்த நேரம் இவன் அவளிடம் முத்த மழைப் பொழிய, முத்த மழை மோக மழையாகி இருவரும் மற்றவருள் கரையத் தொடங்கினார்.

அவளின் உணர்வுகளை உள்வாங்கி ஒவ்வொன்றாய் திருடிக் கொண்டு வந்தவன் அவளை மொத்தமாய்க் களவாட, விரும்பியே களவுக் கொடுத்தாள் அவள். இருவரின் மனங்களும் காதலின் உணர்வில் திளைத்து ஓருடலாய்க் கலந்திருந்த வேளையில், "லவ் யூடா வள்ளி" என்றவனாய் நெற்றியில் முத்தமிட்டு அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.

அவனின் மார்பை வருடியவளாய் சாய்ந்திருந்தவள், "ஆர் யூ ஹேப்பி கார்த்தி?" எனக் கேட்கவும்,

சட்டெனக் குனிந்து அவள் முகம் பார்த்தவன், "என்ன? நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்குற?" எனக் குழப்பத்துடன் கேட்டான்.

"இல்ல நான் உங்க அளவுக்கு அழகில்..." என்று தட்டு தடுமாறி கூற வந்தவளின் இதழை தனது இதழினால் மூடியவன் அவளின் முகத்தை நிமிர்த்தித் தனது கண்களைக் காண வைத்தவனாய், "நான் உன்னோட சேரும் போது என் கண்ணுல, என் தொடுகைல உணர்வுல காதலை உணர்ந்தியா வள்ளி?" எனக் கேட்டான்.

அவனின் காதலை அவள் கண்களில் தேக்கி பூரிப்புடன் ஆமெனத் தலையசைக்க, "என்னுடைய காமத்துக்கும் மோகத்துக்கும் இந்தக் காதல் தான் பிரதானம் வள்ளி. காதல் இல்லாத காமம் தான் அழகு நிறமெல்லாம் எதிர்பார்க்கும். அது வெறும் உடலோட உராய்வு தானே தவிர அது தாம்பத்தியம் கிடையாது. இனி இப்படிலாம் என்னைக் கேட்காத வள்ளி. எனக்குக் கஷ்டமாயிருக்கு. நான் எவ்ளோ ஹேப்பியா இருந்தேன் தெரியுமா! நீ ஸ்பாயில் செஞ்சிட்ட" என்று அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

அவனின் காதலான பேச்சில் நெகிழ்ந்தவள், "அச்சோ சாரி சாரி" என்று அவனின் கன்னத்தைப் பிடித்து ஆட்டியவளாய் இதழில் முத்தமிட்டவளை நோக்கித் திரும்பியவன், "இந்தச் சாரிலாம் ஒத்துக்கப்பட மாட்டாது. திரும்பவும் ஹேப்பியா ஆகுற மாதிரி முதல்லருந்து வருவோமா?" கண் சிமிட்டியவாறு குறும்புச் சிரிப்புடன் அவன் கேட்கவும்,

அது வரை அவனின் கோபம் உண்மையென எண்ணி மருங்கியவள், "அடேய் கள்ளா" என்றவளாய் வாய்விட்டுச் சிரித்தவாறு அவனுள் மீண்டுமாய் விரும்பியே கரைந்து போனாள்.
 
Top