New member
- Joined
- May 20, 2025
- Messages
- 18
- Thread Author
- #1
"வெள்ளைத் தோலைப் பார்த்து மயங்கிட்டியாடி! அதான் ஆத்தா அப்பன் கூட வேணாம்னு கண்டவன் கையைப் பிடிச்சிட்டு வந்து நிக்கிற" எனக் கத்தியிருந்தார் முத்துலட்சுமி.
திருத்தணியில் திருமணம் முடிந்ததும் முருகனை வணங்கச் சென்ற பொழுது, "அப்பா அம்மா ஆசிர்வாதம் இல்லாம எனக்குக் கல்யாணம் நடக்கும்னு கனவுல கூட நான் நினைக்கலையே முருகா" என்று வள்ளி கலங்கி அழுததைப் பார்த்த கார்த்திகேயன், அங்குச் சம்பிரதாயங்கள் அனைத்தும் நிறைவுறவும், தனது பெற்றோரை வாடகை மகிழுந்தில் வீட்டிற்கு அனுப்பி விட்டு, வள்ளியுடன் தனது மகிழுந்தில் அவளது வீட்டிற்கு வந்திருந்தான்.
இவர்களின் கடை மூடப்பட்டிருக்க, திறந்திருந்த வீட்டினுள்ளே இருவரும் தம்பதியாய் சென்று நிற்கவும் தான் முத்துலட்சுமி இவ்வாறு திட்டியிருந்தார். செல்வகுமார் ஏதும் பேசாது அமைதியாக அமர்ந்திருக்க, "ப்பாஅஅ கார்த்தி நல்லவருப்பா. என்னை நல்லா வச்சி பார்த்துப்பாருப்பா. சாதியைத் தவிர வேற என்ன காரணம் சொல்லிருந்தாலும் நான் என் மனசை மாத்த முயற்சி செஞ்சிருப்பேன்ப்பா" தன்னிலை விளக்கமாக அவள் பேசிக் கொண்டே போக,
"எங்களுக்குப் பொறந்த பொண்ணு செத்து போய்ட்டானு நாங்க முடிவு செஞ்சி ரொம்ப நேரம் ஆகுது" அமைதியான குரலில் உரைத்திருந்தார் செல்வகுமார்.
இதற்கு மேல் இங்கே நிற்பது சரி வராது என்று எண்ணியவனாய், "இப்ப நீங்க கோபத்துல பேசுறீங்க மாமா. உங்களுக்காக எங்க வீட்டுக் கதவு எப்பவும் திறந்து தான் இருக்கும். எங்களைத் திட்டுறதுக்காக நீங்க வரனும்னு நினைச்சாலும் வரலாம். உங்களுக்காக நாங்க காத்துக்கிட்டு இருப்போம்" என்றவன் கண்களில் நீர் வழிய நின்றிருந்த வள்ளியின் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தான் கார்த்திகேயன்.
வள்ளியின் கரத்தினில் நடுக்கத்தை உணர்ந்தவனாய் அவளைப் பார்க்க, சோர்ந்து வீங்கிய கண்களுடன் அழுதிருந்தாள் அவள். அவனுக்கு அவளின் தோற்றமும் அழுகையும் குற்றவுணர்வை அளித்தது.
அவளைத் திருமணம் செய்யவென அழைத்துச் சென்ற நேரத்திலிருந்து இப்படித் தான் அழுதுக் கொண்டிருக்கிறாள்.
மகிழுந்தில் முன்னிருக்கையில் அமர்ந்தவளின் அருகே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனாய், "எதுக்கு இப்படி அழுற வள்ளி? இப்படிலாம் நடக்கும்னு நாம எதிர்பார்த்தது தானே! என்னமோ நான் உன்னைக் கம்பெல் செஞ்சி லவ் செய்ய வச்ச மாதிரி ஃபீல் செய்ய வைக்கிற வள்ளி" சற்று கடுப்புடனே அவன் உரைக்கவும், விருட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ஜன்னலின் வெளியே பார்வையைச் செலுத்தினாள்.
அழுகை நின்றும் விசும்பல் நில்லாமல் தொடர, "நான் அழலை. நீங்க வண்டியை எடுங்க" விசும்பலுடனேயே உரைத்தாள் அவள்.
அவளின் இந்த முகத்திருப்பலும் விசம்பலும் அவனின் மனத்தைத் தைத்தது.
ம்ப்ச் எனத் தலையைக் கோதிக் கொண்டவனாய் தன்னை நிலைப்படுத்தியவன், வண்டியை இயக்கினான்.
அவளின் விசும்பல் நில்லாமல் தொடரவும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், "காதல் கல்யாணத்துல அப்பா அம்மா இப்படி ரியாக்ட் செய்றது சகஜம் தானே வள்ளி. உங்கப்பா அம்மாகிட்ட வாழ்ந்து காட்டுறேன் பாருங்கனு சவால் விட்டு வராம, இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? இல்ல நாம நல்லா வாழுவோம்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?" எனக் கேட்டான்.
அவன் வார்த்தையில் இருந்த கோபமும் அழுத்தமும் அவளுக்குப் புரிந்த போதும், தன்னிலையைப் புரிந்து கொள்ளாமல் கோபப்படும் அவன் மேல் கோபம் மூண்டது இவளுக்கு.
அழுகையைக் கோபம் வென்றுவிட, அவன் கேள்விகளுக்குப் பதிலிறுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவளின் அழுகையும் விசும்பலும் முற்றிலுமாய் நின்றிருந்தன.
அவள் பதிலிறுக்காத போதும் அவளின் அழுகை நின்றதில் சற்று ஆசுவாசமானது அவன் உள்ளம்.
அடுத்து இருவரும் தம்பதியாய் அடுக்ககத்தில் இருக்கும் கார்த்திகேயனின் இல்லத்திற்குச் சென்றனர்.
அங்கே இருவரும் ஒன்றாகப் படியினில் ஏறியிருந்த பொழுது கார்த்திகேயன் வேட்டி சட்டையில் புது மாப்பிள்ளை களையுடன் வருவதைப் பார்த்த அவனின் அண்டை வீட்டு அம்மா, "என்ன கார்த்தி? சொன்ன மாதிரியே பொண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டியா? எங்ககிட்டலாம் சொல்லவே இல்ல" என்று ஆச்சரியத்துடன் வினவ,
"ஆமா ஆன்டி. சத்தமா சொல்லாதீங்க. மைனர் பொண்ணு வேற! அப்புறம் போலீஸ் என்னைத் தூக்கிட்டு போய் டின்னு கட்டிருவாங்க" என்று சிரிப்புடன் கூறியவாறு அவளுடன் சென்றவனைப் பார்த்து,
"எப்பவும் விளையாட்டு தான்டா உனக்கு" என்று கூறியவாறு சென்றிருந்தார் அவர்.
இருவரும் வீட்டை அடைந்ததும் ஆர்த்தி எடுத்தவராய் இருவரையும் உள்ளே போகச் சொன்னார் பார்வதி.
"வாழ்த்துகள்டா மவனே" என்று தாமோதரன் மகனை அழைத்து மகிழ்வுடன் வாழ்த்தினார்.
திருத்தணியில் திருமணம் முடிந்ததும் முருகனை வணங்கச் சென்ற பொழுது, "அப்பா அம்மா ஆசிர்வாதம் இல்லாம எனக்குக் கல்யாணம் நடக்கும்னு கனவுல கூட நான் நினைக்கலையே முருகா" என்று வள்ளி கலங்கி அழுததைப் பார்த்த கார்த்திகேயன், அங்குச் சம்பிரதாயங்கள் அனைத்தும் நிறைவுறவும், தனது பெற்றோரை வாடகை மகிழுந்தில் வீட்டிற்கு அனுப்பி விட்டு, வள்ளியுடன் தனது மகிழுந்தில் அவளது வீட்டிற்கு வந்திருந்தான்.
இவர்களின் கடை மூடப்பட்டிருக்க, திறந்திருந்த வீட்டினுள்ளே இருவரும் தம்பதியாய் சென்று நிற்கவும் தான் முத்துலட்சுமி இவ்வாறு திட்டியிருந்தார். செல்வகுமார் ஏதும் பேசாது அமைதியாக அமர்ந்திருக்க, "ப்பாஅஅ கார்த்தி நல்லவருப்பா. என்னை நல்லா வச்சி பார்த்துப்பாருப்பா. சாதியைத் தவிர வேற என்ன காரணம் சொல்லிருந்தாலும் நான் என் மனசை மாத்த முயற்சி செஞ்சிருப்பேன்ப்பா" தன்னிலை விளக்கமாக அவள் பேசிக் கொண்டே போக,
"எங்களுக்குப் பொறந்த பொண்ணு செத்து போய்ட்டானு நாங்க முடிவு செஞ்சி ரொம்ப நேரம் ஆகுது" அமைதியான குரலில் உரைத்திருந்தார் செல்வகுமார்.
இதற்கு மேல் இங்கே நிற்பது சரி வராது என்று எண்ணியவனாய், "இப்ப நீங்க கோபத்துல பேசுறீங்க மாமா. உங்களுக்காக எங்க வீட்டுக் கதவு எப்பவும் திறந்து தான் இருக்கும். எங்களைத் திட்டுறதுக்காக நீங்க வரனும்னு நினைச்சாலும் வரலாம். உங்களுக்காக நாங்க காத்துக்கிட்டு இருப்போம்" என்றவன் கண்களில் நீர் வழிய நின்றிருந்த வள்ளியின் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தான் கார்த்திகேயன்.
வள்ளியின் கரத்தினில் நடுக்கத்தை உணர்ந்தவனாய் அவளைப் பார்க்க, சோர்ந்து வீங்கிய கண்களுடன் அழுதிருந்தாள் அவள். அவனுக்கு அவளின் தோற்றமும் அழுகையும் குற்றவுணர்வை அளித்தது.
அவளைத் திருமணம் செய்யவென அழைத்துச் சென்ற நேரத்திலிருந்து இப்படித் தான் அழுதுக் கொண்டிருக்கிறாள்.
மகிழுந்தில் முன்னிருக்கையில் அமர்ந்தவளின் அருகே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனாய், "எதுக்கு இப்படி அழுற வள்ளி? இப்படிலாம் நடக்கும்னு நாம எதிர்பார்த்தது தானே! என்னமோ நான் உன்னைக் கம்பெல் செஞ்சி லவ் செய்ய வச்ச மாதிரி ஃபீல் செய்ய வைக்கிற வள்ளி" சற்று கடுப்புடனே அவன் உரைக்கவும், விருட்டென அவனைத் திரும்பிப் பார்த்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு ஜன்னலின் வெளியே பார்வையைச் செலுத்தினாள்.
அழுகை நின்றும் விசும்பல் நில்லாமல் தொடர, "நான் அழலை. நீங்க வண்டியை எடுங்க" விசும்பலுடனேயே உரைத்தாள் அவள்.
அவளின் இந்த முகத்திருப்பலும் விசம்பலும் அவனின் மனத்தைத் தைத்தது.
ம்ப்ச் எனத் தலையைக் கோதிக் கொண்டவனாய் தன்னை நிலைப்படுத்தியவன், வண்டியை இயக்கினான்.
அவளின் விசும்பல் நில்லாமல் தொடரவும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், "காதல் கல்யாணத்துல அப்பா அம்மா இப்படி ரியாக்ட் செய்றது சகஜம் தானே வள்ளி. உங்கப்பா அம்மாகிட்ட வாழ்ந்து காட்டுறேன் பாருங்கனு சவால் விட்டு வராம, இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? இல்ல நாம நல்லா வாழுவோம்னு உனக்கு நம்பிக்கை இல்லையா?" எனக் கேட்டான்.
அவன் வார்த்தையில் இருந்த கோபமும் அழுத்தமும் அவளுக்குப் புரிந்த போதும், தன்னிலையைப் புரிந்து கொள்ளாமல் கோபப்படும் அவன் மேல் கோபம் மூண்டது இவளுக்கு.
அழுகையைக் கோபம் வென்றுவிட, அவன் கேள்விகளுக்குப் பதிலிறுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவளின் அழுகையும் விசும்பலும் முற்றிலுமாய் நின்றிருந்தன.
அவள் பதிலிறுக்காத போதும் அவளின் அழுகை நின்றதில் சற்று ஆசுவாசமானது அவன் உள்ளம்.
அடுத்து இருவரும் தம்பதியாய் அடுக்ககத்தில் இருக்கும் கார்த்திகேயனின் இல்லத்திற்குச் சென்றனர்.
அங்கே இருவரும் ஒன்றாகப் படியினில் ஏறியிருந்த பொழுது கார்த்திகேயன் வேட்டி சட்டையில் புது மாப்பிள்ளை களையுடன் வருவதைப் பார்த்த அவனின் அண்டை வீட்டு அம்மா, "என்ன கார்த்தி? சொன்ன மாதிரியே பொண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டியா? எங்ககிட்டலாம் சொல்லவே இல்ல" என்று ஆச்சரியத்துடன் வினவ,
"ஆமா ஆன்டி. சத்தமா சொல்லாதீங்க. மைனர் பொண்ணு வேற! அப்புறம் போலீஸ் என்னைத் தூக்கிட்டு போய் டின்னு கட்டிருவாங்க" என்று சிரிப்புடன் கூறியவாறு அவளுடன் சென்றவனைப் பார்த்து,
"எப்பவும் விளையாட்டு தான்டா உனக்கு" என்று கூறியவாறு சென்றிருந்தார் அவர்.
இருவரும் வீட்டை அடைந்ததும் ஆர்த்தி எடுத்தவராய் இருவரையும் உள்ளே போகச் சொன்னார் பார்வதி.
"வாழ்த்துகள்டா மவனே" என்று தாமோதரன் மகனை அழைத்து மகிழ்வுடன் வாழ்த்தினார்.