New member
- Joined
- May 20, 2025
- Messages
- 18
- Thread Author
- #1
திருத்தணி முருகன் கோவிலினுள்ளே அமைந்திருந்த மண்டபத்தில் எளிமையாய் நடந்தேறியது வள்ளி கார்த்திகேயனின் திருமணம்.
வள்ளியின் கழுத்தில் கார்த்திகேயன் தாலியைக் கட்டியவாறே அவளின் காதினுள், "இந்த முருகன் வள்ளியோட காதல் வாழ்வு மாதிரியே நம்மளோட வாழ்வும் என்னிக்குமே காதல் நிறைஞ்ச வாழ்க்கையா தான் இருக்கும் வள்ளி. லவ் யூ வள்ளி" என்று உரைத்தான்.
கலக்கமான மனநிலையில் அதீத வேதனையுடன் அமர்ந்திருந்தவளின் மனத்தை அவனின் சொற்கள் குளிர்விக்க, அவளது கண்களில் இருந்து வழிந்தது கண்ணீர்.
அவளின் கண்ணீரைத் துடைத்து நெற்றியில் குங்குமம் வைத்த கார்த்திகேயன், உன்னோடு நான் இருக்கிறேன் எனும் விதமாய் அவளின் தோளோடு கையைப் போட்டு ஆற்றுப்படுத்தினான்.
திருமணச் சடங்குகள் நிறைவடையத் தம்பதியராய் கார்த்திகேயனின் தந்தை தாமோதரன் மற்றும் அன்னை பார்வதியின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
"இரண்டு பேரும் தீர்க்காயுளோட குடும்பமா சந்தோஷமா நீடூடி வாழனும்" என்று அவர்கள் ஆசி வழங்கவும், எழுந்து நின்ற வள்ளியின் தலையை ஆதூரமாய்க் கோதிய பார்வதியின் ஸ்பரிசத்தில் தாயின் கனிவை உணர்ந்தவளின் உள்ளம், தாய் தந்தையரை எண்ணிக் கலங்கியது.
தனது தாய் தந்தையர் சம்மதம் இல்லாதொரு திருமணம் தனக்கு நடக்குமென அவள் கனவினிலும் நினைத்ததில்லையே. ஆனால் வாழ்வின் நிகழ்வுகள் அவளை இங்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தன.
"ம்மாஅஅஅ நாளைக்கே போய் வள்ளி வீட்டுல பொண்ணு கேளுங்கமா! அவளுக்கு ஏதோ பிரச்சனை போலமா. ஃபோன் செஞ்சி அழுறாமா! முடிஞ்சா இன்னிக்கே கூட அவளைப் போய்ப் பாருங்கமா" என்ற மகனின் தவிப்பான பேச்சில் அன்றே வள்ளியை அவள் வீட்டினில் அருகில் இருந்த பூங்காவில் சென்று சந்தித்திருந்தார் பார்வதி.
பளிச்சென்ற நிறத்தில் குங்குமப் பொட்டுடன் பழங்கால நடிகைகளின் வயதான தோற்றம் போன்று இருந்தவரைப் பார்த்ததும், 'இவரால தான் கார்த்தி அவ்ளோ கலரா அழகா இருக்காரா' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டாள் வள்ளி.
வள்ளியைப் பார்த்ததுமே பிடித்து விட்டது பார்வதிக்கு.
"களையான முகம்மா உனக்கு! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்க. நீ நல்ல குணவதியா தான் இருப்பனு உன் முகம் சொல்லுதே! என் மகனுக்கு உன்னைப் பிடிச்சதுல ஆச்சரியம் இல்லை" என்றவர் சொன்னதும்,
"ஆனா அவருக்கு எப்படி என்னைப் பிடிச்சிதுனு எனக்கு ஆச்சரியமா இருக்கு அத்தை. இது வரைக்கும் என்னைப் பொண்ணு பார்த்துட்டு போனவங்கள்ல சாதாரணமான லுக்ல கடை வச்சி வியாபாரம் செய்றவங்கலருந்து கவர்மெண்ட் ஆபிசர், ஐடி வேலை செய்றவங்க வரைக்கும் யாருக்குமே என்னைப் பிடிக்காம போனப்ப, பெரிய ஆபிசர் மாதிரி அழகா டீசன்ட்டா நுனி நாக்குல ஆங்கிலம் பேசிக்கிட்டு எப்பவுமே பெண்கள் புடைச்சூழ கலரான கண்ணனா வலம் வர்ற இவருக்கு எப்படி என்னைப் பிடிச்சிதுனு இப்ப வரைக்கும் எனக்குப் புரியலை அத்தை" கண்களை உருட்டியவாறு ஆச்சரிய பாவனையில் உரைத்திருந்த வள்ளியைப் பார்த்து, "கலரான கண்ணன்! நல்ல அடைமொழி தான்" எனக் கூறி சிரித்தார் பார்வதி.
"அத்தை நீங்க நிறையப் புத்தகம் வாசிப்பீங்களா? நல்ல தமிழ் பேசுறீங்களே!" குதூகலமான குரலில் கேட்டாள்.
"ஆமா வள்ளி. என்கிட்ட இருந்து தான் புத்தகம் வாசிக்கிற பழக்கம் அவனுக்கு வந்துச்சு! உன் கவிதையைப் பிடிச்சி போய்த் தான் உன்னைக் காதலிச்சதா என்கிட்டயும் சொன்னான். என்னோட ரசனை அவன்கிட்ட ஒட்டுக்கிட்டனால தான் உன்னை அவனுக்குப் பிடிச்சிருக்குனாலும் அவன் முருகப் பக்தன் மா. இந்த உடலும் அழகும் நிரந்தரமில்லைனு உணர்ந்தவன் அவன்" என்றவர் சொன்னதும் வியந்தவளாய்,
"அப்படியா? ஆனா அவர் திருநீறு வச்சி கூடப் பார்த்ததில்லையே! முருகானு சொல்லி கூடக் கேட்டதில்லையே" ஆச்சரியத்துடன் உரைக்க,
"ஆமா அது வேற உலகம்மானு சொல்வான். இந்த வாழ்க்கை வேற அந்த வாழ்க்கை வேறனு சொல்லுவான். அவனோட முருகப் பக்தியை பழனி பாத யாத்திரை போகும் போது பார்க்கலாம். நடந்தே தான் போவான். அப்படி இருக்கிறவங்களுக்குத் தான் உன்னை மாதிரி பொண்ணுங்களோட அருமைத் தெரியும்" கனிவுடன் உரைத்தார்.
இப்படித் திடீரென ஒருவனை நம்பி திருமணம் செய்யுமளவு மனத்தில் இடம் கொடுத்து பேசச் சொல்லி விட்டோமே என மனத்தின் ஓரத்தில் ஓர் உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது வள்ளிக்கு.
இப்பொழுது பார்வதி கூறிய விடயத்தில் அந்த உறுத்தல்கள் எல்லாம் காணாமல் போயின. தன்னை போலவே தன்னவனும் முருகரின் பக்தன் என அறிந்ததும் முருகனின் அருளை எண்ணி நெகிழ்ந்து போனது அவளின் நெஞ்சம்.
மறுநாள் கணவனுடன் வந்து பெண் கேட்பதாய் உரைத்து விட்டு விடைபெற்றவர் மறுநாள் அவ்வாறே வந்து நின்றார்.
"உங்க மகளைப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம்" என்று வந்து நின்றவர்களை அமர வைத்து பேசிய சில நிமிடங்களிலேயே, வள்ளியின் பிடித்தத்தின் பேரில் இவர்கள் வந்திருப்பது புரிந்தது வள்ளியின் தந்தைக்கு.
"எங்க பொண்ணை என்னோட அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுக்க முடிவு செஞ்சிட்டோம்" என்று கூறி விட்டார் செல்வகுமார்.
அதற்கு மேல் ஏதும் பேச முடியாமல் தாமோதரனும் பார்வதியும் இயலாமையுடன் அமர்ந்திருப்பதைக் காணப் பொறுக்காமல், அவர்கள் முன் வந்து நின்றவளாய், "நான் கார்த்தியைத் தான் கட்டிப்பேன்ப்பா" என்று உரைத்து விட்டாள் வள்ளி.
இது நாள் வரை மகளின் கல்வி மற்றும் பணி வளர்ச்சியிலும் தங்களை மதித்து நடக்கும் அவளின் பண்பிலும் பெருமை கொண்ட பெற்றோராய் வலம் வந்திருந்த செல்வகுமாருக்கு மகளின் இந்தப் பேச்சு பேரதிர்ச்சியை அளித்தது.
மெல்ல நெஞ்சை நீவிக் கொண்டவராய் வள்ளியைப் பார்த்தவர், "வள்ளி உள்ளே போ" என்றார்.
"அப்பா" என்று தயக்கத்துடன் அவள் நிற்க,
"முத்து அவளை உள்ளே அழைச்சிட்டு போ" என மனைவிக்கு ஆணையிட்டு அவளை உள்ளே அனுப்பியவர், இவர்களிடம் கிளம்புமாறு உரைத்தார்.
அதற்கு மேல் வேறு வழியே இல்லாது அவர்கள் கிளம்பிச் சென்றனர். கார்த்திகேயன் சிங்கப்பூரில் இருந்து வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர்.
"அப்பாஅஅஅ... நான் உதயாவைக் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்" கோபமாய் உரைத்திருந்தாள் வள்ளி.
"நீ வயசுக்கு வந்தப்பவே உதயாவுக்குத் தான் உன்னைக் கட்டி வைக்கனும்னு முடிவு செஞ்சிட்டேன் வள்ளி. ஆனா உதயா உன்னைக் கருப்பா இருக்கனு வேணாம்னு சொல்லவும், பொண்ணு தேடி அலையும் போது இங்கே தானே அவன் வந்து நிக்கனும் அப்ப பார்த்துக்கலாம்னு தான் விட்டுட்டேன். அக்கா இறந்தப்பவே உதயாகிட்ட பேசனும்னு தான் நினைச்சேன் ஆனா கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்துட்டேன். இப்ப என்னோட நெஞ்சு வலியைக் காரணமா வச்சி அவனை என் வழிக்குக் கொண்டு வந்து கட்டி வைக்கலாம்னு பார்த்தா எவனையோ காதலிக்கிறேன்னு வந்து நிக்கிற நீ! கண்ட சாதிப் பயலுவனுக்கு உன்னைக் கட்டிக் கொடுப்பேன்னு எப்படி நினைச்ச? ஊரு மாறி வந்தா சாதி சனம் விட்டுப் போய்டுமா என்ன?" என்றவராய் அவளை முறைத்தார் அவர்.
தந்தையின் இந்தப் பேச்சில் அதிர்ந்து பார்த்தவளாய், "சாதிவெறி பிடிச்ச ஆளாப்பா நீங்க?" எனக் கேட்டு விட்டாள்.
கோபத்துடன் எழுந்தவராய் அவளை அறைய கை ஓங்கி விட்டார் செல்வகுமார்.
"யாரைப் பார்த்து சாதி வெறிப் பிடிச்சவன்னு சொன்ன? நமக்கு ஒன்னுன்னா நம்ம சாதி சனம் தான் வந்து நிக்கும். நான் ஆஸ்பத்திரில படுத்து கிடந்தப்ப, என்னோட சொந்தகாரன் தான் வந்து காப்பாத்தினான். இங்கே இருக்க அக்கம் பக்கத்து வூட்டுகாரன் வரலை. எல்லாரும் பழக இனிப்பா தான் இருப்பாங்க. கடைசி வரைக்கும் சாதியும் சொந்தமும் தான் கூட வரும்" என்று கொந்தளிப்புடன் பேசினார்.
பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவராய்,
"அப்பா சொல்றதைக் கேளுமா! அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத் தான்மா செய்வேன். நீ உதயாவைக் கட்டிக்கிட்டா எங்கப்பா எனக்கும் எங்க அக்காவுக்கும் பிரிச்சி கொடுத்த சொத்து முழுக்க உனக்கு வந்துடும். நம்மளோட சொந்த ஊருல இருக்க பரம்பரை வீட்டுலயே நாம செட்டில் ஆகிடலாம்மா. கடைசிக் காலத்துல நாங்களும் நிம்மதியா இருப்போம். இது என்னோட பல நாள் கனவுமா. அதுக்காகவாவது இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோமா" என்றவர் உரைத்ததைக் கேட்டு உள்ளம் கொதித்தது வள்ளிக்கு.
"பொண்ணோட ஆசையை விடச் சொத்துப் பெரிசா போய்டுச்சாப்பா உங்களுக்கு. அதே சொத்தை நான் சம்பாதிச்சு உங்களுக்கு வாங்கித் தரேன்ப்பா. உதயா எனக்கு வேண்டாம்ப்பா" என்று ஆத்திரமும் அழுகையும் பொங்க உரைத்தவளாய் அறைக்குள் சென்று கதவைச் சாற்றியவளை எவ்வாறு வழிக்குக் கொண்டு வருவது என்று தான் சிந்தித்தார் செல்வகுமார்.
எப்பொழுதும் கணவனின் பேச்சையே தெய்வ வாக்காய் ஏற்று நடக்கும் வள்ளியின் அன்னை முத்துலட்சுமிக்கு மகளின் மீது தான் கோபம் வந்தது.
"காதலிக்கிற அளவுக்கு எங்கிருந்து வந்துச்சுடி தைரியம் உனக்கு" என்று நாள் முழுவதும் அவளைத் திட்டித் தீர்த்தார் அவர்.
அடுத்து வந்த நாள்களில் செல்வகுமார் உதயனிடம் பேசி இவர்களுக்கான திருமணத்தை ஏற்பாடு செய்ய, வள்ளி உதயாவிடமே நேரடியாகத் தனது காதலை உரைத்து அவன் மூலமாகவே அந்தத் திருமணத்தை நிறுத்த வைத்திருந்தாள்.
இதனால் கோபமுற்ற செல்வகுமார் அவளை அறைந்து விட்டார்.
சிறு வயதில் இருந்து தன் மீது அன்பைச் செலுத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்த்த தந்தையின் இந்த ருத்ர அவதாரத்தில் அரண்டு போனாள் வள்ளி. அந்நொடியில் தான் வீட்டை விட்டு வெளியேறியாவது கார்த்திகேயனை மணந்து கொள்வது எனும் முடிவிற்கு வந்தாள்.
கார்த்திகேயனிடம் அலைபேசியில் அழைத்து நடந்தவைகளை உரைத்து அவள் அழுதிட, தான் இந்தியா வந்ததும் திருமணத்தை நடத்திவிடலாம் என்றவன் அதற்கான வேலையில் இறங்கினான்.
இந்தியா வந்த கார்த்திகேயன் விமான நிலையத்திலிருந்து நேராக வள்ளியின் இல்லத்திற்குத் தான் சென்றிருந்தான்.
அவன் அங்கே சென்ற சில நிமிடங்களில் காவலர் ஒருவரும் வந்து விட்டார். ஏதேனும் கைக்கலப்போ அல்லது வாய் தகராறோ நிகழாமல் தடுப்பதற்காகவும் தங்களது பாதுகாப்பிற்காகவும் தந்தையின் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து காவலரைப் பாதுகாப்பிற்காக உடன் வைத்திருக்க ஏற்பாடு செய்து விட்டு தான் இங்கு வந்திருந்தான் கார்த்திகேயன்.
வள்ளியின் கையைப் பற்றியவனாய், "எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க" என்று செல்வகுமார் மற்றும் முத்துலட்சுமியின் காலில் விழுந்து வணங்கினான். இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
தங்களை மீறி மகள் செல்வாள் என்று கனவிலும் நினையாதவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது அவளின் இச்செயல்.
"வள்ளி மேஜர் மாமா. தான் யாரை கல்யாணம் செய்யனும்னு அவளே முடிவு எடுக்கலாம்னு சட்டம் சொல்லுது. அதனால எங்க கல்யாணம் சட்டப்படி நடக்கும் மாமா. எனக்கோ வள்ளிக்கோ எங்க கல்யாணத்துக்குப் பிறகு எந்த ஆபத்து வந்தாலும் போலீஸ் வந்து உங்களைத் தான் கைது செய்யும் மாமா. அதனால அவ்ளோ தூரம் போக மாட்டீங்கனு நம்புறேன்" என்றவனாய் அவளின் வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தவன் நேரே திருத்தணிக்கு தான் அவளை அழைத்துச் சென்றிருந்தான்.
அங்கு ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி முருகனின் அருளாசியுடன் இனிதே நடந்தேறியது அவர்களின் திருமணம்.
தாய் தந்தையை மீறி செய்த திருமணத்தினால் குற்றவுணர்வில் தத்தளித்த வள்ளியின் வாழ்வில் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவளை மேலும் குற்றயுணர்வுக்குள் தள்ளியிருந்தன.
வள்ளியின் கழுத்தில் கார்த்திகேயன் தாலியைக் கட்டியவாறே அவளின் காதினுள், "இந்த முருகன் வள்ளியோட காதல் வாழ்வு மாதிரியே நம்மளோட வாழ்வும் என்னிக்குமே காதல் நிறைஞ்ச வாழ்க்கையா தான் இருக்கும் வள்ளி. லவ் யூ வள்ளி" என்று உரைத்தான்.
கலக்கமான மனநிலையில் அதீத வேதனையுடன் அமர்ந்திருந்தவளின் மனத்தை அவனின் சொற்கள் குளிர்விக்க, அவளது கண்களில் இருந்து வழிந்தது கண்ணீர்.
அவளின் கண்ணீரைத் துடைத்து நெற்றியில் குங்குமம் வைத்த கார்த்திகேயன், உன்னோடு நான் இருக்கிறேன் எனும் விதமாய் அவளின் தோளோடு கையைப் போட்டு ஆற்றுப்படுத்தினான்.
திருமணச் சடங்குகள் நிறைவடையத் தம்பதியராய் கார்த்திகேயனின் தந்தை தாமோதரன் மற்றும் அன்னை பார்வதியின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
"இரண்டு பேரும் தீர்க்காயுளோட குடும்பமா சந்தோஷமா நீடூடி வாழனும்" என்று அவர்கள் ஆசி வழங்கவும், எழுந்து நின்ற வள்ளியின் தலையை ஆதூரமாய்க் கோதிய பார்வதியின் ஸ்பரிசத்தில் தாயின் கனிவை உணர்ந்தவளின் உள்ளம், தாய் தந்தையரை எண்ணிக் கலங்கியது.
தனது தாய் தந்தையர் சம்மதம் இல்லாதொரு திருமணம் தனக்கு நடக்குமென அவள் கனவினிலும் நினைத்ததில்லையே. ஆனால் வாழ்வின் நிகழ்வுகள் அவளை இங்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தன.
"ம்மாஅஅஅ நாளைக்கே போய் வள்ளி வீட்டுல பொண்ணு கேளுங்கமா! அவளுக்கு ஏதோ பிரச்சனை போலமா. ஃபோன் செஞ்சி அழுறாமா! முடிஞ்சா இன்னிக்கே கூட அவளைப் போய்ப் பாருங்கமா" என்ற மகனின் தவிப்பான பேச்சில் அன்றே வள்ளியை அவள் வீட்டினில் அருகில் இருந்த பூங்காவில் சென்று சந்தித்திருந்தார் பார்வதி.
பளிச்சென்ற நிறத்தில் குங்குமப் பொட்டுடன் பழங்கால நடிகைகளின் வயதான தோற்றம் போன்று இருந்தவரைப் பார்த்ததும், 'இவரால தான் கார்த்தி அவ்ளோ கலரா அழகா இருக்காரா' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டாள் வள்ளி.
வள்ளியைப் பார்த்ததுமே பிடித்து விட்டது பார்வதிக்கு.
"களையான முகம்மா உனக்கு! அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லுவாங்க. நீ நல்ல குணவதியா தான் இருப்பனு உன் முகம் சொல்லுதே! என் மகனுக்கு உன்னைப் பிடிச்சதுல ஆச்சரியம் இல்லை" என்றவர் சொன்னதும்,
"ஆனா அவருக்கு எப்படி என்னைப் பிடிச்சிதுனு எனக்கு ஆச்சரியமா இருக்கு அத்தை. இது வரைக்கும் என்னைப் பொண்ணு பார்த்துட்டு போனவங்கள்ல சாதாரணமான லுக்ல கடை வச்சி வியாபாரம் செய்றவங்கலருந்து கவர்மெண்ட் ஆபிசர், ஐடி வேலை செய்றவங்க வரைக்கும் யாருக்குமே என்னைப் பிடிக்காம போனப்ப, பெரிய ஆபிசர் மாதிரி அழகா டீசன்ட்டா நுனி நாக்குல ஆங்கிலம் பேசிக்கிட்டு எப்பவுமே பெண்கள் புடைச்சூழ கலரான கண்ணனா வலம் வர்ற இவருக்கு எப்படி என்னைப் பிடிச்சிதுனு இப்ப வரைக்கும் எனக்குப் புரியலை அத்தை" கண்களை உருட்டியவாறு ஆச்சரிய பாவனையில் உரைத்திருந்த வள்ளியைப் பார்த்து, "கலரான கண்ணன்! நல்ல அடைமொழி தான்" எனக் கூறி சிரித்தார் பார்வதி.
"அத்தை நீங்க நிறையப் புத்தகம் வாசிப்பீங்களா? நல்ல தமிழ் பேசுறீங்களே!" குதூகலமான குரலில் கேட்டாள்.
"ஆமா வள்ளி. என்கிட்ட இருந்து தான் புத்தகம் வாசிக்கிற பழக்கம் அவனுக்கு வந்துச்சு! உன் கவிதையைப் பிடிச்சி போய்த் தான் உன்னைக் காதலிச்சதா என்கிட்டயும் சொன்னான். என்னோட ரசனை அவன்கிட்ட ஒட்டுக்கிட்டனால தான் உன்னை அவனுக்குப் பிடிச்சிருக்குனாலும் அவன் முருகப் பக்தன் மா. இந்த உடலும் அழகும் நிரந்தரமில்லைனு உணர்ந்தவன் அவன்" என்றவர் சொன்னதும் வியந்தவளாய்,
"அப்படியா? ஆனா அவர் திருநீறு வச்சி கூடப் பார்த்ததில்லையே! முருகானு சொல்லி கூடக் கேட்டதில்லையே" ஆச்சரியத்துடன் உரைக்க,
"ஆமா அது வேற உலகம்மானு சொல்வான். இந்த வாழ்க்கை வேற அந்த வாழ்க்கை வேறனு சொல்லுவான். அவனோட முருகப் பக்தியை பழனி பாத யாத்திரை போகும் போது பார்க்கலாம். நடந்தே தான் போவான். அப்படி இருக்கிறவங்களுக்குத் தான் உன்னை மாதிரி பொண்ணுங்களோட அருமைத் தெரியும்" கனிவுடன் உரைத்தார்.
இப்படித் திடீரென ஒருவனை நம்பி திருமணம் செய்யுமளவு மனத்தில் இடம் கொடுத்து பேசச் சொல்லி விட்டோமே என மனத்தின் ஓரத்தில் ஓர் உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது வள்ளிக்கு.
இப்பொழுது பார்வதி கூறிய விடயத்தில் அந்த உறுத்தல்கள் எல்லாம் காணாமல் போயின. தன்னை போலவே தன்னவனும் முருகரின் பக்தன் என அறிந்ததும் முருகனின் அருளை எண்ணி நெகிழ்ந்து போனது அவளின் நெஞ்சம்.
மறுநாள் கணவனுடன் வந்து பெண் கேட்பதாய் உரைத்து விட்டு விடைபெற்றவர் மறுநாள் அவ்வாறே வந்து நின்றார்.
"உங்க மகளைப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம்" என்று வந்து நின்றவர்களை அமர வைத்து பேசிய சில நிமிடங்களிலேயே, வள்ளியின் பிடித்தத்தின் பேரில் இவர்கள் வந்திருப்பது புரிந்தது வள்ளியின் தந்தைக்கு.
"எங்க பொண்ணை என்னோட அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுக்க முடிவு செஞ்சிட்டோம்" என்று கூறி விட்டார் செல்வகுமார்.
அதற்கு மேல் ஏதும் பேச முடியாமல் தாமோதரனும் பார்வதியும் இயலாமையுடன் அமர்ந்திருப்பதைக் காணப் பொறுக்காமல், அவர்கள் முன் வந்து நின்றவளாய், "நான் கார்த்தியைத் தான் கட்டிப்பேன்ப்பா" என்று உரைத்து விட்டாள் வள்ளி.
இது நாள் வரை மகளின் கல்வி மற்றும் பணி வளர்ச்சியிலும் தங்களை மதித்து நடக்கும் அவளின் பண்பிலும் பெருமை கொண்ட பெற்றோராய் வலம் வந்திருந்த செல்வகுமாருக்கு மகளின் இந்தப் பேச்சு பேரதிர்ச்சியை அளித்தது.
மெல்ல நெஞ்சை நீவிக் கொண்டவராய் வள்ளியைப் பார்த்தவர், "வள்ளி உள்ளே போ" என்றார்.
"அப்பா" என்று தயக்கத்துடன் அவள் நிற்க,
"முத்து அவளை உள்ளே அழைச்சிட்டு போ" என மனைவிக்கு ஆணையிட்டு அவளை உள்ளே அனுப்பியவர், இவர்களிடம் கிளம்புமாறு உரைத்தார்.
அதற்கு மேல் வேறு வழியே இல்லாது அவர்கள் கிளம்பிச் சென்றனர். கார்த்திகேயன் சிங்கப்பூரில் இருந்து வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர்.
"அப்பாஅஅஅ... நான் உதயாவைக் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்" கோபமாய் உரைத்திருந்தாள் வள்ளி.
"நீ வயசுக்கு வந்தப்பவே உதயாவுக்குத் தான் உன்னைக் கட்டி வைக்கனும்னு முடிவு செஞ்சிட்டேன் வள்ளி. ஆனா உதயா உன்னைக் கருப்பா இருக்கனு வேணாம்னு சொல்லவும், பொண்ணு தேடி அலையும் போது இங்கே தானே அவன் வந்து நிக்கனும் அப்ப பார்த்துக்கலாம்னு தான் விட்டுட்டேன். அக்கா இறந்தப்பவே உதயாகிட்ட பேசனும்னு தான் நினைச்சேன் ஆனா கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்துட்டேன். இப்ப என்னோட நெஞ்சு வலியைக் காரணமா வச்சி அவனை என் வழிக்குக் கொண்டு வந்து கட்டி வைக்கலாம்னு பார்த்தா எவனையோ காதலிக்கிறேன்னு வந்து நிக்கிற நீ! கண்ட சாதிப் பயலுவனுக்கு உன்னைக் கட்டிக் கொடுப்பேன்னு எப்படி நினைச்ச? ஊரு மாறி வந்தா சாதி சனம் விட்டுப் போய்டுமா என்ன?" என்றவராய் அவளை முறைத்தார் அவர்.
தந்தையின் இந்தப் பேச்சில் அதிர்ந்து பார்த்தவளாய், "சாதிவெறி பிடிச்ச ஆளாப்பா நீங்க?" எனக் கேட்டு விட்டாள்.
கோபத்துடன் எழுந்தவராய் அவளை அறைய கை ஓங்கி விட்டார் செல்வகுமார்.
"யாரைப் பார்த்து சாதி வெறிப் பிடிச்சவன்னு சொன்ன? நமக்கு ஒன்னுன்னா நம்ம சாதி சனம் தான் வந்து நிக்கும். நான் ஆஸ்பத்திரில படுத்து கிடந்தப்ப, என்னோட சொந்தகாரன் தான் வந்து காப்பாத்தினான். இங்கே இருக்க அக்கம் பக்கத்து வூட்டுகாரன் வரலை. எல்லாரும் பழக இனிப்பா தான் இருப்பாங்க. கடைசி வரைக்கும் சாதியும் சொந்தமும் தான் கூட வரும்" என்று கொந்தளிப்புடன் பேசினார்.
பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவராய்,
"அப்பா சொல்றதைக் கேளுமா! அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத் தான்மா செய்வேன். நீ உதயாவைக் கட்டிக்கிட்டா எங்கப்பா எனக்கும் எங்க அக்காவுக்கும் பிரிச்சி கொடுத்த சொத்து முழுக்க உனக்கு வந்துடும். நம்மளோட சொந்த ஊருல இருக்க பரம்பரை வீட்டுலயே நாம செட்டில் ஆகிடலாம்மா. கடைசிக் காலத்துல நாங்களும் நிம்மதியா இருப்போம். இது என்னோட பல நாள் கனவுமா. அதுக்காகவாவது இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோமா" என்றவர் உரைத்ததைக் கேட்டு உள்ளம் கொதித்தது வள்ளிக்கு.
"பொண்ணோட ஆசையை விடச் சொத்துப் பெரிசா போய்டுச்சாப்பா உங்களுக்கு. அதே சொத்தை நான் சம்பாதிச்சு உங்களுக்கு வாங்கித் தரேன்ப்பா. உதயா எனக்கு வேண்டாம்ப்பா" என்று ஆத்திரமும் அழுகையும் பொங்க உரைத்தவளாய் அறைக்குள் சென்று கதவைச் சாற்றியவளை எவ்வாறு வழிக்குக் கொண்டு வருவது என்று தான் சிந்தித்தார் செல்வகுமார்.
எப்பொழுதும் கணவனின் பேச்சையே தெய்வ வாக்காய் ஏற்று நடக்கும் வள்ளியின் அன்னை முத்துலட்சுமிக்கு மகளின் மீது தான் கோபம் வந்தது.
"காதலிக்கிற அளவுக்கு எங்கிருந்து வந்துச்சுடி தைரியம் உனக்கு" என்று நாள் முழுவதும் அவளைத் திட்டித் தீர்த்தார் அவர்.
அடுத்து வந்த நாள்களில் செல்வகுமார் உதயனிடம் பேசி இவர்களுக்கான திருமணத்தை ஏற்பாடு செய்ய, வள்ளி உதயாவிடமே நேரடியாகத் தனது காதலை உரைத்து அவன் மூலமாகவே அந்தத் திருமணத்தை நிறுத்த வைத்திருந்தாள்.
இதனால் கோபமுற்ற செல்வகுமார் அவளை அறைந்து விட்டார்.
சிறு வயதில் இருந்து தன் மீது அன்பைச் செலுத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்த்த தந்தையின் இந்த ருத்ர அவதாரத்தில் அரண்டு போனாள் வள்ளி. அந்நொடியில் தான் வீட்டை விட்டு வெளியேறியாவது கார்த்திகேயனை மணந்து கொள்வது எனும் முடிவிற்கு வந்தாள்.
கார்த்திகேயனிடம் அலைபேசியில் அழைத்து நடந்தவைகளை உரைத்து அவள் அழுதிட, தான் இந்தியா வந்ததும் திருமணத்தை நடத்திவிடலாம் என்றவன் அதற்கான வேலையில் இறங்கினான்.
இந்தியா வந்த கார்த்திகேயன் விமான நிலையத்திலிருந்து நேராக வள்ளியின் இல்லத்திற்குத் தான் சென்றிருந்தான்.
அவன் அங்கே சென்ற சில நிமிடங்களில் காவலர் ஒருவரும் வந்து விட்டார். ஏதேனும் கைக்கலப்போ அல்லது வாய் தகராறோ நிகழாமல் தடுப்பதற்காகவும் தங்களது பாதுகாப்பிற்காகவும் தந்தையின் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து காவலரைப் பாதுகாப்பிற்காக உடன் வைத்திருக்க ஏற்பாடு செய்து விட்டு தான் இங்கு வந்திருந்தான் கார்த்திகேயன்.
வள்ளியின் கையைப் பற்றியவனாய், "எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க" என்று செல்வகுமார் மற்றும் முத்துலட்சுமியின் காலில் விழுந்து வணங்கினான். இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
தங்களை மீறி மகள் செல்வாள் என்று கனவிலும் நினையாதவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது அவளின் இச்செயல்.
"வள்ளி மேஜர் மாமா. தான் யாரை கல்யாணம் செய்யனும்னு அவளே முடிவு எடுக்கலாம்னு சட்டம் சொல்லுது. அதனால எங்க கல்யாணம் சட்டப்படி நடக்கும் மாமா. எனக்கோ வள்ளிக்கோ எங்க கல்யாணத்துக்குப் பிறகு எந்த ஆபத்து வந்தாலும் போலீஸ் வந்து உங்களைத் தான் கைது செய்யும் மாமா. அதனால அவ்ளோ தூரம் போக மாட்டீங்கனு நம்புறேன்" என்றவனாய் அவளின் வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தவன் நேரே திருத்தணிக்கு தான் அவளை அழைத்துச் சென்றிருந்தான்.
அங்கு ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி முருகனின் அருளாசியுடன் இனிதே நடந்தேறியது அவர்களின் திருமணம்.
தாய் தந்தையை மீறி செய்த திருமணத்தினால் குற்றவுணர்வில் தத்தளித்த வள்ளியின் வாழ்வில் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவளை மேலும் குற்றயுணர்வுக்குள் தள்ளியிருந்தன.