New member
- Joined
- May 20, 2025
- Messages
- 5
- Thread Author
- #1
தன்னுடைய இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக ஒருவன் தன்னைப் பிடித்திருப்பதாக உரைத்திருக்கிறான் என்பதே வள்ளிக்கு மகிழ்வளித்திருந்தது. ஆனால் அதே சமயம், அவனுக்கானவன் தான் இல்லை என்றும் நம்பினாள் வள்ளி.
மறுநாள் துள்ளலான மனநிலையில் தான் அலுவலகம் சென்றிருந்தாள் வள்ளி. அவனைக் காணும் ஆவல் எழுந்தது அவளுள். ஆனால் அவனுக்கு வேலை இருப்பதாகக் கூறி மதிய உணவு இடைவேளையின் போது வரவில்லை அவன்.
எப்பொழுதும் மதிய உணவிற்கு மட்டுமே இவர்களுடன் சேர்ந்து கொள்வான். மாலை தேநீர் இடைவேளையில் சத்யாவும் வள்ளியும் மட்டுமே சந்தித்துக் கொள்வர்.
மாலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரை ஆறாம் மாடியிலிருக்கும் பால்கனி போன்ற இடத்தின் கதவை பணியாளர்களின் இளைப்பாறலுக்காகவும் தேநீர் நேரத்திற்காகவும் அந்த அலுவலகத்தில் திறந்து வைப்பர். எப்பொழுதும் அந்நேரம் வள்ளிக்கு ஏதேனும் மீட்டிங் இருக்கும் என்பதால் சத்யாவும் வள்ளியும் அங்குச் செல்லாமல் உணவுக்கூடத்திலேயே தேநீர் அருந்துவார்கள்.
இன்று வள்ளிக்கு அந்த நேரத்தில் நடக்கவிருந்த மீட்டிங் ரத்து ஆகிவிட, சத்யாவுடன் அந்த இடத்திற்குச் சென்றாள் வள்ளி.
அங்கு அந்தப் பால்கனியை ஒட்டியவாறு அமைக்கப்பெற்ற திட்டில், இருபுறமும் இரு பெண்கள் இருக்க நடுவே அவர்களுடன் சிரித்துப் பேசியவாறு அமர்ந்திருந்த கார்த்திகேயனைக் கண்டு நின்று விட்டாள் வள்ளி.
அப்பெண்கள் அனைவருமே விரிந்த கூந்தலுடன் ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து காலையில் தாங்கள் போட்டிருந்த முகப்பூச்சு அலங்காரம் கலையாத வகையில் பளபளவெனக் கார்த்திக்கு இணையான அழகுடனும் நிறத்துடனும் இருந்தனர். எவ்வித முகப்பூச்சும் போடாது இயல்பான அலங்காரத்துடன் காலை அலுவலகத்திற்கு வந்த நேரம் முதல் இப்பொழுது வரை கண்ணாடியைக் கூடப் பார்க்காது இருக்கும் தனது முகத்தின் நிலை இப்பொழுது எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தவளுக்கு, 'கரிகட்டையா தானே இப்ப நம்ம மூஞ்சி இருக்கும்' என்று தான் தோன்றியது.
"என்னடி நின்னுட்ட?" என்றவளாய் வள்ளியின் பார்வை சென்ற திசை நோக்கிப் பார்த்த சத்யா, அங்கே கார்த்திகேயன் இருப்பதைக் கண்டு, "கார்த்தியைப் பார்த்து நின்னுட்டியா? கார்த்தித் தினமும் இந்த டைமுக்கு இங்கே தான் இருப்பான்டி" என்றவளாய் அவன் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்று, "ஹாய் கார்த்தி" என்றாள்.
அவளைக் கண்டதும், "தனியாவா வந்த?" எனக் கேட்டவனின் பார்வை பின்னாடி வள்ளியைத் தேடிச் செல்ல, "இல்லையே! வள்ளி வந்தாளே" என்றவளாய் பின்னே பார்த்தாள் சத்யா.
வள்ளியோ இவர்கள் இருக்கும் திசைக்கு எதிர்ப்புறம் இருந்த சிமெண்ட் திட்டிற்குச் சென்று அமர்ந்திருந்தாள்.
"அவ ஏன் தனியா போய் உட்கார்ந்திருக்கா? இங்கே வரச் சொல்ல வேண்டியது தானே" என்ற கார்த்திகேயன், "சரி நீ உட்காரு. நான் போய்க் கூட்டிட்டு வரேன்" என்று சென்றான்.
'நாம சேர்த்து வைக்க வேண்டிய அவசியமே இல்லாம அவங்களே சேர்ந்துப்பாங்க போலயே' என்று மனத்தோடு நினைத்தவளாய் ஆர்வமாய்ச் செல்லும் கார்த்திகேயனைப் பார்த்திருந்தாள் சத்யா.
வள்ளி அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றவனாய், "என்ன வள்ளி தனியா வந்து உட்கார்ந்துட்ட?" எனக் கேட்டவாறு அவளருகே அமர்ந்தான் கார்த்திகேயன்.
அவனின் கேள்விக்குப் பதிலளிக்காது, "நமக்குள்ள செட் ஆகாது கார்த்தி. என்னைக் கல்யாணம் செஞ்சிக்கனும்ன்ற உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க" என்றாள் வள்ளி.
திடீரென்ற எதிர்பாராத இவளின் இந்தப் பதிலில் உள்ளுக்குள் அதிர்ந்த போதும் வெளியே காட்டிக் கொள்ளாதவனாய், "வள்ளிக்கு என் மேல என்ன கோவம்?" எனச் சிரித்தவாறு கேட்டான்.
"நான் யாரு உங்க மேல கோவப்படுறதுக்கு? எனக்கென்ன உரிமை இருக்கு?" என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
"என் மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்குனு தான் நான் சொல்றேன். நீ தான் அதை ஏத்துக்காம இருக்க" என்றான் அவன்.
"அதே உரிமையை இது வரைக்கும் எத்தனை பொண்ணுங்களுக்குக் கொடுத்தீங்களோ" என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டாள் வள்ளி.
கார்த்திகேயனுக்கு இவ்வாறு பெண் தோழமைகள் இருப்பதை அறிந்திருந்த போதும், மனத்திற்குள் புதிதாய் முளைத்திருந்த உரிமை உணர்வு அவளுள் கோபத்தை விளைவிக்கத் தன்னை மீறியே இவ்வாறு உரைத்திருந்தாள் வள்ளி.
அவளின் பேச்சில் கோபம் வந்த போதும் அமைதியாய், "இது வரைக்கும் இந்த அளவுக்கு யார்கிட்டயும் இறங்கி வந்து பேசினது இல்ல வள்ளி. வேண்டாம்னு ஒரு பொண்ணு சொல்லிட்டா, அதுக்குப் பிறகு அவங்கப் பின்னாடி நான் போனதில்லை. ஆனா உன்னோட மனசுக்குள்ள எனக்கொரு இடம் கிடைக்கிறதுக்காக எவ்ளோனாலும் இறங்கி வருவேன்" என்றான்.
"ஏன் கார்த்தி? என்கிட்ட நீங்க எதிர்பார்க்கிற எதுவுமே இல்லை கார்த்தி. நாளைக்கு என்னை விட அழகான பொண்ணை நீங்க ரசிச்சா கூட நான் நொறுங்கிப் போய்டுவேன் கார்த்தி. நான் ரொம்பப் பொசசிவ் கார்த்தி. எனக்கு ஒருத்தங்களைப் பிடிச்சிட்டா, என்னைத் தவிர அவங்க வேற யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் எனக்குக் கோபம் வந்துடும். அதனாலேயே யார்கிட்டேயும் நெருங்கிப் பழகாம தள்ளியே இருப்பேன். எனக்கு ஃப்ரண்ட்ஸ்னு கூட யாரையும் நான் அதான் க்லோஸா வச்சிக்கிட்டது இல்லை. நான் அந்தளவுக்கு உங்க மேல அன்பு வச்ச பிறகு, நீங்க வேற யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் என்னால தாங்கிக்க முடியாது கார்த்தி" தனது மன உணர்வுகளை அப்படியே உரைத்திருந்தாள் வள்ளி.
தான் அவள் மீது வைத்திருக்கும் அன்பை எந்தப் பெண்ணிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று நினைத்து தவிக்கிறாள் எனப் புரிந்தது கார்த்திகேயனுக்கு.
இந்தப் பரிதவிப்பிற்கும் கலக்கத்திற்குமான காரணம் தன்னை அவள் அவளவனாய் உணரத் தொடங்கிவிட்டாள் என்பது தானே!
'என் வள்ளிக்கு என்னைப் பிடிச்சிருக்கு ஆனா எனக்கு ஏத்தவளா அவ இல்லனு நினைச்சு கலங்குறா!' அவன் முகமும் மனமும் காதலில் கனிந்து போனது.
"லவ் யூ வள்ளி" என்றான்.
'இவன் என்ன லூசா? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். இவன் என்ன சொல்றான்?' என்பது போல் தான் அவனைப் பார்த்தாள் வள்ளி.
ஆனால் அவளின் அடியாழ மனத்தில் பட்டாம்பூச்சி பரவசத்தைத் தோற்றுவித்துத் தித்திப்பாய் உள்ளிறங்கி இருந்தது அவனின் காதல் மொழி.
அவளின் விழியை நிறைத்திருந்த நீரைக் கண்டதும், "என்னாச்சுடா?" என்றவனாய் மேஜை மீதிருந்த அவளது கரத்தின் மீது தனது கரத்தினை வைத்து அவன் தட்டிக் கொடுக்க,
"நான் உங்களுக்கு வேண்டாம் கார்த்தி" கண்ணீர் வெளியேற தழுதழுத்த குரலில் அவள் உரைத்த நொடி, அவளின் உள்ளங்கையோடு தனது கையைக் கோர்த்தவனாய், "டேக் யுவர் டைம் மா! இப்ப நீ எதுவும் சொல்ல வேண்டாம். ஐ வில் வெயிட் ஃபார் யூ" என்று எழுந்தவன், அவள் என்னவென்று உணரும் முன்பே அமர்ந்திருந்தவளின் தோளோடு சேர்த்து மெல்ல அணைத்து தட்டிக் கொடுத்தவனாய் விலகிச் சென்றிருந்தான்.
'என்னடா நடக்குது இங்க' என்று சத்யா குழப்பத்துடன் இவர்கள் இருவரையும் மாறிப் மாறிப் பார்த்திருந்தாள்.
அடுத்து வந்த நாள்கள் எல்லாம் வள்ளிக்குக் கார்த்திகேயனைப் பற்றிய குழப்பமும் நெகிழ்தலுமாய்ச் சென்றிருக்க, கார்த்திகேயனோ இவளைப் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தான். அதுவே அவளை மேலும் அவனைத் தேடவும் வைத்திருந்தது. அவனை நினைக்கவே கூடாது என்று கடிவாளம் போட்டப் போது தான் மனம் அவனையே நித்தம் நினைக்க வைத்த வண்ணம் அவளைக் காதலில் தவிக்கவிட்டது.
அன்றாடம் சத்யாவிடம் வேண்டுமென்றே கார்த்திகேயனைப் பற்றி நிரம்பப் பேசினாள் வள்ளி. அவனைக் கண்ணால் காண முடியாத தவிப்பைப் பேசித் தீர்த்துக் கொண்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் உள்ளம் கார்த்திகேயனை நோக்கிச் சாய்ந்திருந்த வேளையில் தனக்கு ஆன்சைட் பிராஜக்ட் கிடைத்திருப்பதாக உரைத்து அவள் முன் வந்து நின்றான் கார்த்திகேயன்.
"வாவ் சூப்பர்டா! கங்கிராட்ஸ்" என்றவளாய் சத்யா மகிழ்வுடன் அவனை வாழ்த்தியிருக்க, இத்தனை நாளாய் அவனைக் காணாது தவித்திருந்த ஏக்கத்தைத் தீர்ப்பது போல் கண் சிமிட்டாது அவனைப் பார்த்திருந்தவள் அவன் கூறிய இந்த ஆண்சைட் செய்தியில் மனம் கலங்கிப் போனாள்.
"என்ன வள்ளி? உனக்குச் சந்தோஷம் இல்லயா?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
அதற்கு ஏதும் பதில் கூறாது, "எப்ப போறீங்க கார்த்தி? எப்ப திரும்பி வருவீங்க?" எனக் கேட்டாள்.
"ஒரு வாரத்துல கிளம்பிடுவேன் வள்ளி. இங்கே திரும்பி வர ஒரு வருஷம் ஆகும்" அவளின் கண்களை ஊடுருவியவனாய் சொன்ன நொடி,
"ஒரு வருஷமா?" கண்களை விரித்து அதிர்ச்சியுடன் கேட்டவளின் முகத்தில் கவலை ரேகைகள்.
அதைத் திருப்தியுடன் பார்த்தவனாய், "சும்மா சொன்னேன் வள்ளி. ஒரு மாசத்துல வந்துடுவேன். நான் திரும்பி வரும் போது உன்கிட்ட நல்ல செய்தியை எதிர்பார்த்து தான் வருவேன்" என்று உரைத்தான்.
'இப்பவே சொல்லிடு! அவன்கிட்ட இப்பவே சொல்லிடு' என்று அவளின் மனம் அவளை உந்தித் தள்ள, 'அப்பா அம்மாகிட்டே பேசாம எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என்று தனக்குத் தானே கூறி மனத்தைக் கட்டி வைத்தவளாய் எதையும் வெளிக்காட்டாது அமைதியாக இருந்தாள் வள்ளி.
அடுத்த ஒரு வாரத்தில் அவன் சிங்கப்பூர் சென்று விட, இங்கே இவள் பிரிவின் ஏக்கத்தில் தவித்துப் போனாள்.
அதற்கடுத்த வாரத்தில் வள்ளியின் தந்தை செல்வக்குமாருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தனக்கு ஏதேனும் ஆவதற்கு முன் மகளின் திருமணத்தை முடிக்க நினைத்தவராய் தனது அக்கா மகனை மணந்து கொள்ளுமாறு மகளிடம் வேண்டினார் செல்வக்குமார்.
மறுநாள் துள்ளலான மனநிலையில் தான் அலுவலகம் சென்றிருந்தாள் வள்ளி. அவனைக் காணும் ஆவல் எழுந்தது அவளுள். ஆனால் அவனுக்கு வேலை இருப்பதாகக் கூறி மதிய உணவு இடைவேளையின் போது வரவில்லை அவன்.
எப்பொழுதும் மதிய உணவிற்கு மட்டுமே இவர்களுடன் சேர்ந்து கொள்வான். மாலை தேநீர் இடைவேளையில் சத்யாவும் வள்ளியும் மட்டுமே சந்தித்துக் கொள்வர்.
மாலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரை ஆறாம் மாடியிலிருக்கும் பால்கனி போன்ற இடத்தின் கதவை பணியாளர்களின் இளைப்பாறலுக்காகவும் தேநீர் நேரத்திற்காகவும் அந்த அலுவலகத்தில் திறந்து வைப்பர். எப்பொழுதும் அந்நேரம் வள்ளிக்கு ஏதேனும் மீட்டிங் இருக்கும் என்பதால் சத்யாவும் வள்ளியும் அங்குச் செல்லாமல் உணவுக்கூடத்திலேயே தேநீர் அருந்துவார்கள்.
இன்று வள்ளிக்கு அந்த நேரத்தில் நடக்கவிருந்த மீட்டிங் ரத்து ஆகிவிட, சத்யாவுடன் அந்த இடத்திற்குச் சென்றாள் வள்ளி.
அங்கு அந்தப் பால்கனியை ஒட்டியவாறு அமைக்கப்பெற்ற திட்டில், இருபுறமும் இரு பெண்கள் இருக்க நடுவே அவர்களுடன் சிரித்துப் பேசியவாறு அமர்ந்திருந்த கார்த்திகேயனைக் கண்டு நின்று விட்டாள் வள்ளி.
அப்பெண்கள் அனைவருமே விரிந்த கூந்தலுடன் ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து காலையில் தாங்கள் போட்டிருந்த முகப்பூச்சு அலங்காரம் கலையாத வகையில் பளபளவெனக் கார்த்திக்கு இணையான அழகுடனும் நிறத்துடனும் இருந்தனர். எவ்வித முகப்பூச்சும் போடாது இயல்பான அலங்காரத்துடன் காலை அலுவலகத்திற்கு வந்த நேரம் முதல் இப்பொழுது வரை கண்ணாடியைக் கூடப் பார்க்காது இருக்கும் தனது முகத்தின் நிலை இப்பொழுது எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தவளுக்கு, 'கரிகட்டையா தானே இப்ப நம்ம மூஞ்சி இருக்கும்' என்று தான் தோன்றியது.
"என்னடி நின்னுட்ட?" என்றவளாய் வள்ளியின் பார்வை சென்ற திசை நோக்கிப் பார்த்த சத்யா, அங்கே கார்த்திகேயன் இருப்பதைக் கண்டு, "கார்த்தியைப் பார்த்து நின்னுட்டியா? கார்த்தித் தினமும் இந்த டைமுக்கு இங்கே தான் இருப்பான்டி" என்றவளாய் அவன் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்று, "ஹாய் கார்த்தி" என்றாள்.
அவளைக் கண்டதும், "தனியாவா வந்த?" எனக் கேட்டவனின் பார்வை பின்னாடி வள்ளியைத் தேடிச் செல்ல, "இல்லையே! வள்ளி வந்தாளே" என்றவளாய் பின்னே பார்த்தாள் சத்யா.
வள்ளியோ இவர்கள் இருக்கும் திசைக்கு எதிர்ப்புறம் இருந்த சிமெண்ட் திட்டிற்குச் சென்று அமர்ந்திருந்தாள்.
"அவ ஏன் தனியா போய் உட்கார்ந்திருக்கா? இங்கே வரச் சொல்ல வேண்டியது தானே" என்ற கார்த்திகேயன், "சரி நீ உட்காரு. நான் போய்க் கூட்டிட்டு வரேன்" என்று சென்றான்.
'நாம சேர்த்து வைக்க வேண்டிய அவசியமே இல்லாம அவங்களே சேர்ந்துப்பாங்க போலயே' என்று மனத்தோடு நினைத்தவளாய் ஆர்வமாய்ச் செல்லும் கார்த்திகேயனைப் பார்த்திருந்தாள் சத்யா.
வள்ளி அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றவனாய், "என்ன வள்ளி தனியா வந்து உட்கார்ந்துட்ட?" எனக் கேட்டவாறு அவளருகே அமர்ந்தான் கார்த்திகேயன்.
அவனின் கேள்விக்குப் பதிலளிக்காது, "நமக்குள்ள செட் ஆகாது கார்த்தி. என்னைக் கல்யாணம் செஞ்சிக்கனும்ன்ற உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க" என்றாள் வள்ளி.
திடீரென்ற எதிர்பாராத இவளின் இந்தப் பதிலில் உள்ளுக்குள் அதிர்ந்த போதும் வெளியே காட்டிக் கொள்ளாதவனாய், "வள்ளிக்கு என் மேல என்ன கோவம்?" எனச் சிரித்தவாறு கேட்டான்.
"நான் யாரு உங்க மேல கோவப்படுறதுக்கு? எனக்கென்ன உரிமை இருக்கு?" என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
"என் மேல உனக்கு எல்லா உரிமையும் இருக்குனு தான் நான் சொல்றேன். நீ தான் அதை ஏத்துக்காம இருக்க" என்றான் அவன்.
"அதே உரிமையை இது வரைக்கும் எத்தனை பொண்ணுங்களுக்குக் கொடுத்தீங்களோ" என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டாள் வள்ளி.
கார்த்திகேயனுக்கு இவ்வாறு பெண் தோழமைகள் இருப்பதை அறிந்திருந்த போதும், மனத்திற்குள் புதிதாய் முளைத்திருந்த உரிமை உணர்வு அவளுள் கோபத்தை விளைவிக்கத் தன்னை மீறியே இவ்வாறு உரைத்திருந்தாள் வள்ளி.
அவளின் பேச்சில் கோபம் வந்த போதும் அமைதியாய், "இது வரைக்கும் இந்த அளவுக்கு யார்கிட்டயும் இறங்கி வந்து பேசினது இல்ல வள்ளி. வேண்டாம்னு ஒரு பொண்ணு சொல்லிட்டா, அதுக்குப் பிறகு அவங்கப் பின்னாடி நான் போனதில்லை. ஆனா உன்னோட மனசுக்குள்ள எனக்கொரு இடம் கிடைக்கிறதுக்காக எவ்ளோனாலும் இறங்கி வருவேன்" என்றான்.
"ஏன் கார்த்தி? என்கிட்ட நீங்க எதிர்பார்க்கிற எதுவுமே இல்லை கார்த்தி. நாளைக்கு என்னை விட அழகான பொண்ணை நீங்க ரசிச்சா கூட நான் நொறுங்கிப் போய்டுவேன் கார்த்தி. நான் ரொம்பப் பொசசிவ் கார்த்தி. எனக்கு ஒருத்தங்களைப் பிடிச்சிட்டா, என்னைத் தவிர அவங்க வேற யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் எனக்குக் கோபம் வந்துடும். அதனாலேயே யார்கிட்டேயும் நெருங்கிப் பழகாம தள்ளியே இருப்பேன். எனக்கு ஃப்ரண்ட்ஸ்னு கூட யாரையும் நான் அதான் க்லோஸா வச்சிக்கிட்டது இல்லை. நான் அந்தளவுக்கு உங்க மேல அன்பு வச்ச பிறகு, நீங்க வேற யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் என்னால தாங்கிக்க முடியாது கார்த்தி" தனது மன உணர்வுகளை அப்படியே உரைத்திருந்தாள் வள்ளி.
தான் அவள் மீது வைத்திருக்கும் அன்பை எந்தப் பெண்ணிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று நினைத்து தவிக்கிறாள் எனப் புரிந்தது கார்த்திகேயனுக்கு.
இந்தப் பரிதவிப்பிற்கும் கலக்கத்திற்குமான காரணம் தன்னை அவள் அவளவனாய் உணரத் தொடங்கிவிட்டாள் என்பது தானே!
'என் வள்ளிக்கு என்னைப் பிடிச்சிருக்கு ஆனா எனக்கு ஏத்தவளா அவ இல்லனு நினைச்சு கலங்குறா!' அவன் முகமும் மனமும் காதலில் கனிந்து போனது.
"லவ் யூ வள்ளி" என்றான்.
'இவன் என்ன லூசா? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். இவன் என்ன சொல்றான்?' என்பது போல் தான் அவனைப் பார்த்தாள் வள்ளி.
ஆனால் அவளின் அடியாழ மனத்தில் பட்டாம்பூச்சி பரவசத்தைத் தோற்றுவித்துத் தித்திப்பாய் உள்ளிறங்கி இருந்தது அவனின் காதல் மொழி.
அவளின் விழியை நிறைத்திருந்த நீரைக் கண்டதும், "என்னாச்சுடா?" என்றவனாய் மேஜை மீதிருந்த அவளது கரத்தின் மீது தனது கரத்தினை வைத்து அவன் தட்டிக் கொடுக்க,
"நான் உங்களுக்கு வேண்டாம் கார்த்தி" கண்ணீர் வெளியேற தழுதழுத்த குரலில் அவள் உரைத்த நொடி, அவளின் உள்ளங்கையோடு தனது கையைக் கோர்த்தவனாய், "டேக் யுவர் டைம் மா! இப்ப நீ எதுவும் சொல்ல வேண்டாம். ஐ வில் வெயிட் ஃபார் யூ" என்று எழுந்தவன், அவள் என்னவென்று உணரும் முன்பே அமர்ந்திருந்தவளின் தோளோடு சேர்த்து மெல்ல அணைத்து தட்டிக் கொடுத்தவனாய் விலகிச் சென்றிருந்தான்.
'என்னடா நடக்குது இங்க' என்று சத்யா குழப்பத்துடன் இவர்கள் இருவரையும் மாறிப் மாறிப் பார்த்திருந்தாள்.
அடுத்து வந்த நாள்கள் எல்லாம் வள்ளிக்குக் கார்த்திகேயனைப் பற்றிய குழப்பமும் நெகிழ்தலுமாய்ச் சென்றிருக்க, கார்த்திகேயனோ இவளைப் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தான். அதுவே அவளை மேலும் அவனைத் தேடவும் வைத்திருந்தது. அவனை நினைக்கவே கூடாது என்று கடிவாளம் போட்டப் போது தான் மனம் அவனையே நித்தம் நினைக்க வைத்த வண்ணம் அவளைக் காதலில் தவிக்கவிட்டது.
அன்றாடம் சத்யாவிடம் வேண்டுமென்றே கார்த்திகேயனைப் பற்றி நிரம்பப் பேசினாள் வள்ளி. அவனைக் கண்ணால் காண முடியாத தவிப்பைப் பேசித் தீர்த்துக் கொண்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் உள்ளம் கார்த்திகேயனை நோக்கிச் சாய்ந்திருந்த வேளையில் தனக்கு ஆன்சைட் பிராஜக்ட் கிடைத்திருப்பதாக உரைத்து அவள் முன் வந்து நின்றான் கார்த்திகேயன்.
"வாவ் சூப்பர்டா! கங்கிராட்ஸ்" என்றவளாய் சத்யா மகிழ்வுடன் அவனை வாழ்த்தியிருக்க, இத்தனை நாளாய் அவனைக் காணாது தவித்திருந்த ஏக்கத்தைத் தீர்ப்பது போல் கண் சிமிட்டாது அவனைப் பார்த்திருந்தவள் அவன் கூறிய இந்த ஆண்சைட் செய்தியில் மனம் கலங்கிப் போனாள்.
"என்ன வள்ளி? உனக்குச் சந்தோஷம் இல்லயா?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
அதற்கு ஏதும் பதில் கூறாது, "எப்ப போறீங்க கார்த்தி? எப்ப திரும்பி வருவீங்க?" எனக் கேட்டாள்.
"ஒரு வாரத்துல கிளம்பிடுவேன் வள்ளி. இங்கே திரும்பி வர ஒரு வருஷம் ஆகும்" அவளின் கண்களை ஊடுருவியவனாய் சொன்ன நொடி,
"ஒரு வருஷமா?" கண்களை விரித்து அதிர்ச்சியுடன் கேட்டவளின் முகத்தில் கவலை ரேகைகள்.
அதைத் திருப்தியுடன் பார்த்தவனாய், "சும்மா சொன்னேன் வள்ளி. ஒரு மாசத்துல வந்துடுவேன். நான் திரும்பி வரும் போது உன்கிட்ட நல்ல செய்தியை எதிர்பார்த்து தான் வருவேன்" என்று உரைத்தான்.
'இப்பவே சொல்லிடு! அவன்கிட்ட இப்பவே சொல்லிடு' என்று அவளின் மனம் அவளை உந்தித் தள்ள, 'அப்பா அம்மாகிட்டே பேசாம எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என்று தனக்குத் தானே கூறி மனத்தைக் கட்டி வைத்தவளாய் எதையும் வெளிக்காட்டாது அமைதியாக இருந்தாள் வள்ளி.
அடுத்த ஒரு வாரத்தில் அவன் சிங்கப்பூர் சென்று விட, இங்கே இவள் பிரிவின் ஏக்கத்தில் தவித்துப் போனாள்.
அதற்கடுத்த வாரத்தில் வள்ளியின் தந்தை செல்வக்குமாருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தனக்கு ஏதேனும் ஆவதற்கு முன் மகளின் திருமணத்தை முடிக்க நினைத்தவராய் தனது அக்கா மகனை மணந்து கொள்ளுமாறு மகளிடம் வேண்டினார் செல்வக்குமார்.