Member
- Joined
- May 20, 2025
- Messages
- 54
- Thread Author
- #1
சில வருடங்களுக்குப் பிறகு...
கார்த்திகேயன் வள்ளியின் இரண்டு வயது மகனான கதிர்வேலன், வள்ளியின் அருகே அவள் மீது ஒரு காலையும் கையையும் போட்டுப் படுத்திருக்க, அவர்களின் இரண்டு வயது மகளான மரகதமயில் தந்தையின் மார்பு மீது கவிழ்ந்து படுத்திருந்தாள்.
மகளைத் தட்டிக் கொடுத்தவனாய் கண் மூடிப் படுத்திருந்த கார்த்திகேயன், "என்னவாம்? என் பொண்டாட்டி என்னைச் சைட் அடிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கே. என் வள்ளிக்கு நான் வேணுமா?" கண் மூடிய நிலையிலேயே வள்ளியின் பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்து சிரிப்புடன் கேட்டிருந்தான்.
பக்கத்தில் ஒருகளித்துப் படுத்திருந்தவளின் கண்கள் கணவனையும் மகளையும் தான் பார்த்திருந்தன. அதனைக் கணவன் கண்டு கொண்டதில் ஆச்சரியம் கொண்டவளாய், "எப்படிப்பா?" என்று வினவினாள்.
கண்விழித்து அவளைப் பார்த்துச் சிரித்தவனாய், "என் வள்ளி தான் என் உசுருக்குள்ள ஊடுருவி இருக்காளே. அவளோட பார்வை எனக்கு எப்படித் தெரியாம போகும்" என்றான்.
"அடடடா.. தினமும் கவிதை போஸ்ட் செய்றேன்னு என்னை எழுத வச்சி எழுத வச்சி இப்ப நீங்க பேசினாலே கவிதையா கொட்டுதே" என்று சிரித்தாள் வள்ளி.
"அடிப்பாவி உண்மையைச் சொன்னா, கவிதைக்குப் பொய் அழகுனு நான் பொய் சொல்றேன்னு எவ்ளோ நேக்கா சொல்ற நீ" என்று அவளின் மண்டையில் முட்டினான்.
ஹா ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தவள், "நீங்களோ நானோ எழுதுற கவிதை எதுவுமே பொய் கிடையாது கார்த்தி. ஏன்னா அது நம்ம வாழ்வியலோட கலந்த உணர்வை வச்சி எழுதுற கவிதைகள். அதனால தான் எல்லாராலயும் நம்ம கவிதையை அவங்க வாழ்க்கையோட ஒப்பிட்டுப் பார்த்து உணர முடியுது. அப்புறம் அதனால தான் யூ டியூப்ல சில்வர் பட்டன் வாங்குற அளவுக்கு டெவலப் ஆகி இருக்கோம்" என்று கண் சிமிட்டினாள்.
"ஹ்ம்ம் சரி தான்" என்று மகளைத் தூக்கியவாறு எழுந்தவன், மகனும் மகளும் படுக்கவென அருகில் தொட்டில் போன்று போட்டிருந்த சிறிய கட்டிலில் மகளைப் படுக்க வைத்தான்.
வள்ளியின் அருகில் இருந்த மகனையும் தூக்கி வந்து படுக்க வைக்க, உடனே சிணுங்கினான் மகன். அவனின் சிணுங்கலில் அருகில் இருந்த மகளும் சிணுங்க, 'அய்யய்யோ முழிச்சிடக் கூடாதே' என்று மெல்ல அலறியவனாய் வள்ளியைப் பார்க்க வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.
"என் பொழைப்பு உனக்குச் சிரிப்பா இருக்கா?" சின்னக் குரலில் கேட்டவன், குழந்தைகளின் அருகில் மெத்தையில் அமர்ந்து இருவரையும் சிறிது நேரம் மெல்ல தட்டிக் கொடுத்தான்.
அவர்கள் ஆழ்ந்து உறங்கி விட்டார்களா என்று ஊர்ஜிதம் செய்த பிறகு எழுந்து மனைவியினருகே வந்தான்.
தங்களது குழந்தைகளைக் கணவன் உறங்க வைக்கும் பாங்கை ரசிப்புடன் பார்த்திருந்த வள்ளி, தன்னருகே கணவன் வந்ததும் அவன் மார்பில் முகம் புதைத்தவளாய், "இது என் இடமாக்கும்" என்று கூறி முத்தமிட்டாள்.
"அடிப்பாவி பெத்த பொண்ணுக்கிட்ட போய் உரிமைச் சண்டை போட்டுட்டு இருக்க நீ" என்று சிரித்தான்.
"பின்ன அவளைத் தான் இப்பலாம் கொஞ்சுறீங்க நீங்க. என்னைக் கண்டுகிறதே இல்லை" என்று அவள் குற்றம் சாட்ட,
"யாரு கண்டுக்கலை? நான் கண்டுக்காம தான், என் பொண்டாட்டிக்கு நான் வேணுமானு கேட்டு இப்படி ஒட்டிக்கிட்டு இருக்கேனா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
அவனின் கேள்வியில் அவளுக்கு வெட்கமாகிப் போக, 'அய்யோ உங்க வாய் இருக்கே' என்றவளாய் நாணத்துடன் தலைக் கவிழ, அவளின் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தவன் அவளின் இதழை வருடியவனாய், "இந்த வாய்க்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதே" எனக் கேட்டு அவளை முத்த பாடம் எடுக்க வைத்தான்.
அன்பின் ஆழமாய்க் கரைந்திருந்த நொடிகளில் அவளுள் மூழ்கி, தன்னுள் கரைய செய்திருந்தான் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் வள்ளியின் இரண்டு வயது மகனான கதிர்வேலன், வள்ளியின் அருகே அவள் மீது ஒரு காலையும் கையையும் போட்டுப் படுத்திருக்க, அவர்களின் இரண்டு வயது மகளான மரகதமயில் தந்தையின் மார்பு மீது கவிழ்ந்து படுத்திருந்தாள்.
மகளைத் தட்டிக் கொடுத்தவனாய் கண் மூடிப் படுத்திருந்த கார்த்திகேயன், "என்னவாம்? என் பொண்டாட்டி என்னைச் சைட் அடிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கே. என் வள்ளிக்கு நான் வேணுமா?" கண் மூடிய நிலையிலேயே வள்ளியின் பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்து சிரிப்புடன் கேட்டிருந்தான்.
பக்கத்தில் ஒருகளித்துப் படுத்திருந்தவளின் கண்கள் கணவனையும் மகளையும் தான் பார்த்திருந்தன. அதனைக் கணவன் கண்டு கொண்டதில் ஆச்சரியம் கொண்டவளாய், "எப்படிப்பா?" என்று வினவினாள்.
கண்விழித்து அவளைப் பார்த்துச் சிரித்தவனாய், "என் வள்ளி தான் என் உசுருக்குள்ள ஊடுருவி இருக்காளே. அவளோட பார்வை எனக்கு எப்படித் தெரியாம போகும்" என்றான்.
"அடடடா.. தினமும் கவிதை போஸ்ட் செய்றேன்னு என்னை எழுத வச்சி எழுத வச்சி இப்ப நீங்க பேசினாலே கவிதையா கொட்டுதே" என்று சிரித்தாள் வள்ளி.
"அடிப்பாவி உண்மையைச் சொன்னா, கவிதைக்குப் பொய் அழகுனு நான் பொய் சொல்றேன்னு எவ்ளோ நேக்கா சொல்ற நீ" என்று அவளின் மண்டையில் முட்டினான்.
ஹா ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தவள், "நீங்களோ நானோ எழுதுற கவிதை எதுவுமே பொய் கிடையாது கார்த்தி. ஏன்னா அது நம்ம வாழ்வியலோட கலந்த உணர்வை வச்சி எழுதுற கவிதைகள். அதனால தான் எல்லாராலயும் நம்ம கவிதையை அவங்க வாழ்க்கையோட ஒப்பிட்டுப் பார்த்து உணர முடியுது. அப்புறம் அதனால தான் யூ டியூப்ல சில்வர் பட்டன் வாங்குற அளவுக்கு டெவலப் ஆகி இருக்கோம்" என்று கண் சிமிட்டினாள்.
"ஹ்ம்ம் சரி தான்" என்று மகளைத் தூக்கியவாறு எழுந்தவன், மகனும் மகளும் படுக்கவென அருகில் தொட்டில் போன்று போட்டிருந்த சிறிய கட்டிலில் மகளைப் படுக்க வைத்தான்.
வள்ளியின் அருகில் இருந்த மகனையும் தூக்கி வந்து படுக்க வைக்க, உடனே சிணுங்கினான் மகன். அவனின் சிணுங்கலில் அருகில் இருந்த மகளும் சிணுங்க, 'அய்யய்யோ முழிச்சிடக் கூடாதே' என்று மெல்ல அலறியவனாய் வள்ளியைப் பார்க்க வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.
"என் பொழைப்பு உனக்குச் சிரிப்பா இருக்கா?" சின்னக் குரலில் கேட்டவன், குழந்தைகளின் அருகில் மெத்தையில் அமர்ந்து இருவரையும் சிறிது நேரம் மெல்ல தட்டிக் கொடுத்தான்.
அவர்கள் ஆழ்ந்து உறங்கி விட்டார்களா என்று ஊர்ஜிதம் செய்த பிறகு எழுந்து மனைவியினருகே வந்தான்.
தங்களது குழந்தைகளைக் கணவன் உறங்க வைக்கும் பாங்கை ரசிப்புடன் பார்த்திருந்த வள்ளி, தன்னருகே கணவன் வந்ததும் அவன் மார்பில் முகம் புதைத்தவளாய், "இது என் இடமாக்கும்" என்று கூறி முத்தமிட்டாள்.
"அடிப்பாவி பெத்த பொண்ணுக்கிட்ட போய் உரிமைச் சண்டை போட்டுட்டு இருக்க நீ" என்று சிரித்தான்.
"பின்ன அவளைத் தான் இப்பலாம் கொஞ்சுறீங்க நீங்க. என்னைக் கண்டுகிறதே இல்லை" என்று அவள் குற்றம் சாட்ட,
"யாரு கண்டுக்கலை? நான் கண்டுக்காம தான், என் பொண்டாட்டிக்கு நான் வேணுமானு கேட்டு இப்படி ஒட்டிக்கிட்டு இருக்கேனா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
அவனின் கேள்வியில் அவளுக்கு வெட்கமாகிப் போக, 'அய்யோ உங்க வாய் இருக்கே' என்றவளாய் நாணத்துடன் தலைக் கவிழ, அவளின் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தவன் அவளின் இதழை வருடியவனாய், "இந்த வாய்க்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதே" எனக் கேட்டு அவளை முத்த பாடம் எடுக்க வைத்தான்.
அன்பின் ஆழமாய்க் கரைந்திருந்த நொடிகளில் அவளுள் மூழ்கி, தன்னுள் கரைய செய்திருந்தான் கார்த்திகேயன்.