Member
- Joined
- May 20, 2025
- Messages
- 54
- Thread Author
- #1
ஒரு புறம் காதல் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் ஏற்பாட்டுத் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தனர்.
கார்த்திகேயன் கலராக மார்டனாக ஸ்டைலிஷ் பையனாகத் தெரிய, அருகிலே பின்னிய நீண்ட கூந்தலுடன் சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு குடும்பக் குத்து விளக்கு போன்று இருந்தாள் வள்ளி. மிகவும் அரிதாகவே இவர்கள் போன்ற ஜோடிகள் காணக் கிடைப்பார்கள் என்பதால் அனைவரது பார்வைகளும் இவர்கள் மீது சுவாரஸ்யமாகப் படிந்தன.
முதலில் அவரவர் திருமணம் எவ்வாறு நடந்தது என்ற கதையைக் கேட்டார் நெறியாளர்.
அக்கேள்விக்குத் தம்பதியரில் யாரேனும் ஒருவர் பேசலாம் என்று கூறி விட்டதால், பெரும்பாலும் ஆண்களே இதற்குப் பதிலிறுத்திருந்த போது, கார்த்திகேயன் வள்ளியிடம் பேசுமாறு கூறி ஒலிபெருக்கியை (மைக்) அவள் கரத்தினில் கொடுக்க, அவள் மைக்கை வாங்காது, முடியாது என்று கண்களாலேயே உரைக்க, இவன் பேசு என்று கண்களால் உரைத்து அவள் கையினில் மைக்கை திணிக்க, இவர்களின் இந்தப் பரிபாஷையைச் சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்த நெறியாளர், "என்ன கண்ணுலயே பேசிக்கிறீங்க" என்று சிரிக்க, மற்றவர்களும் சிரித்திருந்தனர்.
அனைவரும் சிரித்ததில் இவர்கள் இருவருமே சிரித்து விட்டனர்.
வள்ளி பேசத் தொடங்கினாள்.
"எனக்குக் காதல் கல்யாணம் நடக்கும்னுலாம் நான் கனவுல கூட நினைச்சது இல்ல சார். இவர் தான் பிரபோஸ் செஞ்சாரு. முதல்ல நான் ஒத்துக்கலை. அப்புறம் இவரோட நல்ல குணங்கள் பார்த்துப் பிடிச்சிருச்சு. எங்க வீட்டுல செம்ம எதிர்ப்பு. இவரோட வீட்டுல ஒத்துக்கிட்டாங்க. நான் வீட்டை விட்டுப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்.
இன்னிக்கு நான் நானாக இருக்கிறது காரணம் என் கணவர் தான் சார். எனக்கு ஆங்சைட்டி பிரச்சனை இருக்கு சார். எல்லாத்துக்கும் பயந்து பதட்டமாகி, வேண்டாம்னு அந்த இடத்தை விட்டு ஓடத் தான் பார்ப்பேன் சார். அவ்ளோ பயத்துலயும் வேலையை எப்பவும் விட்டுடக் கூடாதுங்கிற வைராக்கியம் இருந்தனால தாக்குப் பிடிச்சிட்டு இருந்தேன். நான் மட்டும் இவரை மேரேஜ் செய்யாம அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனை மேரேஜ் செஞ்சிருந்தா இவ்வளோ பயம் பதட்டத்தோட எதுக்கு நீ வேலைச் செய்யனும்னு என்னை வேலை விட்டு நிறுத்த தான் செஞ்சிருப்பாங்க. எங்கேயோ கிராமத்துல வீட்டு வேலைச் செஞ்சிட்டு இருந்திருப்பேன் சார்.
ஆனா என் கணவர் என்னோட பிரச்சினையைச் சரி செய்ய அவராலான முயற்சி எல்லாம் எடுத்தாரு. எனக்குத் தைரியம் கொடுத்து என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்திருக்கிறது இவரோட காதல் தான் சார்" என்று அவனைக் காதலாய் பார்த்தவாறு உரைத்தாள் வள்ளி.
அந்த ஒட்டு மொத்த நிகழ்ச்சியில் கார்த்திகேயன் பேசியது எதுவுமே வரவில்லை. வள்ளி பேசிய இந்தக் காட்சி மட்டும் இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சி நெடுகிலும் அவ்வப்போது இருவரும் கண்களின் வழியாய் பேசிக் கொள்வது காண்பிக்கப் பட்டது.
வள்ளி பேசிய இக்காட்சியையே நிகழ்ச்சியின் முன்னோட்டத்திலும் போட்டிருந்தனர்.
கார்த்திகேயன் வள்ளிக்கென ஒரு ரசிகர் கூட்டமே இணையத்தில் சேர்ந்திருந்தனர். கார்த்திகேயனின் இன்ஸ்டா பக்கத்திற்கும் வள்ளியின் கவிதைப் பக்கத்திற்கும் ஃபாலோவர்ஸ் வந்து குவிந்தனர்.
கார்த்திகேயனும் வள்ளியும் நெஞ்சம் நிறைந்த மகிழ்வில் இருந்த போது, அவளுக்கு அழைத்த அவளின் அன்னை, "உன்னைப் பெத்து வளர்த்ததுக்கு எங்களுக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்திருக்க" என்று வறுத்து எடுத்து விட்டார்.
ஆனால் அவளின் தந்தையோ அதற்கு நேரெதிராக, "நீ இவ்வளோ மனசு விட்டு பேசுற மாதிரி உன் புருஷன் உன்னைக் கவனிச்சிக்கிறதுல எனக்குச் சந்தோஷம் தான்மா" என்று விட்டார்.
தாயின் பேச்சில் வருத்தமுற்ற வள்ளிக்கு தந்தையின் பேச்சு நெஞ்சில் பாலை வார்த்தது.
"வள்ளி நாம யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாமா? இப்ப ஆரம்பிச்சா உடனே சப்ஸ்க்ரைபர்ஸ் சேர்ந்துடுவாங்க" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"என்ன மாதிரி சேனல் ஆரம்பிக்கலாம்னு சொல்றீங்க?" எனக் கேட்டாள் வள்ளி.
"நீ தான் விலாக்(vlog)லாம் வேண்டாம்னு சொல்லிட்டியே" என்று குறையாய் அவன் கூற,
"பின்ன, நம்ம வீட்டுல என்ன நடக்குதுனு ஊருக்குலாம் போட்டுக் காமிக்கிறது நல்லாவா இருக்கும். பிரைவசினு ஒன்னு இல்லாமலே போய்டும்ப்பா. யூ டியூப் ஆரம்பிக்கலாம். ஆனா வேற என்ன கண்டென்ட் போடலாம்னு யோசிங்க" என்று விட்டாள் வள்ளி.
ஒரு நாள் முழுக்க மண்டையைப் போட்டு குடைந்தவன், "உன்னோட எழுத்துக்காக ஒரு சேனல் ஆரம்பிக்கலாம் வள்ளி. தினம் ஒரு கவிதை ஷார்ட்ஸ் மாதிரி போடலாம். வாரத்துல ஒரு நாள் ஏதாவது ஒரு டாபிக் நீயும் நானும் சேர்ந்து பேசுற மாதிரி ஒரு வீடியோ போடலாம்" என்றான்.
"ஏங்க நம்ம முகத்தைக் காண்பிக்காம எதுவும் போட முடியாதா?" முகத்தைச் சுருக்கியவாறு கேட்டாள் வள்ளி.
"நம்மளை ஜோடியா பார்க்கத் தான் மக்கள் சப்ஸ்க்ரைப் செய்வாங்க வள்ளி. அதனால கண்டிப்பா ஒரு வீடியோ நாம சேர்ந்து பேசுற மாதிரி போடனும். போகப் போக நாம எங்கேயாவது டிராவல் பண்றதுலாம் டிராவல் விலாக் மாதிரி போடலாம். வாரத்துல ஒரு நாள் நம்மளோட எக்ஸ்பீரியன்ஸ் நாலெட்ஜ் எல்லாம் மக்களுக்குப் பயன்படுற மாதிரி ஏதாவது டாபிக் செலக்ட் செஞ்சி பேசுவோம். உன்னோட பயத்தை எப்படி நீ ஓவர்கம் செஞ்சனுலாம் சொல்லலாம். ஆரம்பிச்சா போகப் போக டாபிக் ஐடியா கிடைக்கும்" என்று விட்டான்.
அடுத்து வந்த வாரத்தில் யூடியூப் சேனல் துவங்கியவன், அன்றாடம் அவளை நச்சரித்து ஒரு கவிதையை வாங்கிப் பதிவிட்டு விடுவான்.
வாரம் முழுவதும் இன்ஸ்டாவிலும் யூ டியூப்பிலும் பின்னூட்டத்தில் வரும் கேள்விகளைக் குறித்து வைத்துக் கொண்டு இருவருமாய்ச் சேர்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் பதில் உரைப்பது போல் சனிக்கிழமை காணொளி தயாரித்து ஞாயிற்றுக்கிழமை பதிவிடுவர்.
இவ்வாறு வாராவாரம் பேசுவது வள்ளிக்கு அவளது பயப் பிரச்சினையைக் குறைத்திருந்தது. அலுவலகத்திலும் மீட்டிங்கை தைரியத்துடன் கையாளத் துவங்கியிருந்தாள்.
கார்த்திகேயன் கலராக மார்டனாக ஸ்டைலிஷ் பையனாகத் தெரிய, அருகிலே பின்னிய நீண்ட கூந்தலுடன் சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு குடும்பக் குத்து விளக்கு போன்று இருந்தாள் வள்ளி. மிகவும் அரிதாகவே இவர்கள் போன்ற ஜோடிகள் காணக் கிடைப்பார்கள் என்பதால் அனைவரது பார்வைகளும் இவர்கள் மீது சுவாரஸ்யமாகப் படிந்தன.
முதலில் அவரவர் திருமணம் எவ்வாறு நடந்தது என்ற கதையைக் கேட்டார் நெறியாளர்.
அக்கேள்விக்குத் தம்பதியரில் யாரேனும் ஒருவர் பேசலாம் என்று கூறி விட்டதால், பெரும்பாலும் ஆண்களே இதற்குப் பதிலிறுத்திருந்த போது, கார்த்திகேயன் வள்ளியிடம் பேசுமாறு கூறி ஒலிபெருக்கியை (மைக்) அவள் கரத்தினில் கொடுக்க, அவள் மைக்கை வாங்காது, முடியாது என்று கண்களாலேயே உரைக்க, இவன் பேசு என்று கண்களால் உரைத்து அவள் கையினில் மைக்கை திணிக்க, இவர்களின் இந்தப் பரிபாஷையைச் சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்த நெறியாளர், "என்ன கண்ணுலயே பேசிக்கிறீங்க" என்று சிரிக்க, மற்றவர்களும் சிரித்திருந்தனர்.
அனைவரும் சிரித்ததில் இவர்கள் இருவருமே சிரித்து விட்டனர்.
வள்ளி பேசத் தொடங்கினாள்.
"எனக்குக் காதல் கல்யாணம் நடக்கும்னுலாம் நான் கனவுல கூட நினைச்சது இல்ல சார். இவர் தான் பிரபோஸ் செஞ்சாரு. முதல்ல நான் ஒத்துக்கலை. அப்புறம் இவரோட நல்ல குணங்கள் பார்த்துப் பிடிச்சிருச்சு. எங்க வீட்டுல செம்ம எதிர்ப்பு. இவரோட வீட்டுல ஒத்துக்கிட்டாங்க. நான் வீட்டை விட்டுப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்.
இன்னிக்கு நான் நானாக இருக்கிறது காரணம் என் கணவர் தான் சார். எனக்கு ஆங்சைட்டி பிரச்சனை இருக்கு சார். எல்லாத்துக்கும் பயந்து பதட்டமாகி, வேண்டாம்னு அந்த இடத்தை விட்டு ஓடத் தான் பார்ப்பேன் சார். அவ்ளோ பயத்துலயும் வேலையை எப்பவும் விட்டுடக் கூடாதுங்கிற வைராக்கியம் இருந்தனால தாக்குப் பிடிச்சிட்டு இருந்தேன். நான் மட்டும் இவரை மேரேஜ் செய்யாம அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனை மேரேஜ் செஞ்சிருந்தா இவ்வளோ பயம் பதட்டத்தோட எதுக்கு நீ வேலைச் செய்யனும்னு என்னை வேலை விட்டு நிறுத்த தான் செஞ்சிருப்பாங்க. எங்கேயோ கிராமத்துல வீட்டு வேலைச் செஞ்சிட்டு இருந்திருப்பேன் சார்.
ஆனா என் கணவர் என்னோட பிரச்சினையைச் சரி செய்ய அவராலான முயற்சி எல்லாம் எடுத்தாரு. எனக்குத் தைரியம் கொடுத்து என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்திருக்கிறது இவரோட காதல் தான் சார்" என்று அவனைக் காதலாய் பார்த்தவாறு உரைத்தாள் வள்ளி.
அந்த ஒட்டு மொத்த நிகழ்ச்சியில் கார்த்திகேயன் பேசியது எதுவுமே வரவில்லை. வள்ளி பேசிய இந்தக் காட்சி மட்டும் இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சி நெடுகிலும் அவ்வப்போது இருவரும் கண்களின் வழியாய் பேசிக் கொள்வது காண்பிக்கப் பட்டது.
வள்ளி பேசிய இக்காட்சியையே நிகழ்ச்சியின் முன்னோட்டத்திலும் போட்டிருந்தனர்.
கார்த்திகேயன் வள்ளிக்கென ஒரு ரசிகர் கூட்டமே இணையத்தில் சேர்ந்திருந்தனர். கார்த்திகேயனின் இன்ஸ்டா பக்கத்திற்கும் வள்ளியின் கவிதைப் பக்கத்திற்கும் ஃபாலோவர்ஸ் வந்து குவிந்தனர்.
கார்த்திகேயனும் வள்ளியும் நெஞ்சம் நிறைந்த மகிழ்வில் இருந்த போது, அவளுக்கு அழைத்த அவளின் அன்னை, "உன்னைப் பெத்து வளர்த்ததுக்கு எங்களுக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்திருக்க" என்று வறுத்து எடுத்து விட்டார்.
ஆனால் அவளின் தந்தையோ அதற்கு நேரெதிராக, "நீ இவ்வளோ மனசு விட்டு பேசுற மாதிரி உன் புருஷன் உன்னைக் கவனிச்சிக்கிறதுல எனக்குச் சந்தோஷம் தான்மா" என்று விட்டார்.
தாயின் பேச்சில் வருத்தமுற்ற வள்ளிக்கு தந்தையின் பேச்சு நெஞ்சில் பாலை வார்த்தது.
"வள்ளி நாம யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாமா? இப்ப ஆரம்பிச்சா உடனே சப்ஸ்க்ரைபர்ஸ் சேர்ந்துடுவாங்க" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"என்ன மாதிரி சேனல் ஆரம்பிக்கலாம்னு சொல்றீங்க?" எனக் கேட்டாள் வள்ளி.
"நீ தான் விலாக்(vlog)லாம் வேண்டாம்னு சொல்லிட்டியே" என்று குறையாய் அவன் கூற,
"பின்ன, நம்ம வீட்டுல என்ன நடக்குதுனு ஊருக்குலாம் போட்டுக் காமிக்கிறது நல்லாவா இருக்கும். பிரைவசினு ஒன்னு இல்லாமலே போய்டும்ப்பா. யூ டியூப் ஆரம்பிக்கலாம். ஆனா வேற என்ன கண்டென்ட் போடலாம்னு யோசிங்க" என்று விட்டாள் வள்ளி.
ஒரு நாள் முழுக்க மண்டையைப் போட்டு குடைந்தவன், "உன்னோட எழுத்துக்காக ஒரு சேனல் ஆரம்பிக்கலாம் வள்ளி. தினம் ஒரு கவிதை ஷார்ட்ஸ் மாதிரி போடலாம். வாரத்துல ஒரு நாள் ஏதாவது ஒரு டாபிக் நீயும் நானும் சேர்ந்து பேசுற மாதிரி ஒரு வீடியோ போடலாம்" என்றான்.
"ஏங்க நம்ம முகத்தைக் காண்பிக்காம எதுவும் போட முடியாதா?" முகத்தைச் சுருக்கியவாறு கேட்டாள் வள்ளி.
"நம்மளை ஜோடியா பார்க்கத் தான் மக்கள் சப்ஸ்க்ரைப் செய்வாங்க வள்ளி. அதனால கண்டிப்பா ஒரு வீடியோ நாம சேர்ந்து பேசுற மாதிரி போடனும். போகப் போக நாம எங்கேயாவது டிராவல் பண்றதுலாம் டிராவல் விலாக் மாதிரி போடலாம். வாரத்துல ஒரு நாள் நம்மளோட எக்ஸ்பீரியன்ஸ் நாலெட்ஜ் எல்லாம் மக்களுக்குப் பயன்படுற மாதிரி ஏதாவது டாபிக் செலக்ட் செஞ்சி பேசுவோம். உன்னோட பயத்தை எப்படி நீ ஓவர்கம் செஞ்சனுலாம் சொல்லலாம். ஆரம்பிச்சா போகப் போக டாபிக் ஐடியா கிடைக்கும்" என்று விட்டான்.
அடுத்து வந்த வாரத்தில் யூடியூப் சேனல் துவங்கியவன், அன்றாடம் அவளை நச்சரித்து ஒரு கவிதையை வாங்கிப் பதிவிட்டு விடுவான்.
வாரம் முழுவதும் இன்ஸ்டாவிலும் யூ டியூப்பிலும் பின்னூட்டத்தில் வரும் கேள்விகளைக் குறித்து வைத்துக் கொண்டு இருவருமாய்ச் சேர்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் பதில் உரைப்பது போல் சனிக்கிழமை காணொளி தயாரித்து ஞாயிற்றுக்கிழமை பதிவிடுவர்.
இவ்வாறு வாராவாரம் பேசுவது வள்ளிக்கு அவளது பயப் பிரச்சினையைக் குறைத்திருந்தது. அலுவலகத்திலும் மீட்டிங்கை தைரியத்துடன் கையாளத் துவங்கியிருந்தாள்.