New member
- Joined
- May 20, 2025
- Messages
- 5
- Thread Author
- #1
"உன்னோட அழகுக்கும் கலருக்கும் உனக்குலாம் சுமாரான பையன் தான் அமைவாங்க வள்ளி" என்று கூறிய சத்யா, வள்ளியின் எதிரே அமர்ந்திருந்த கார்த்திகேயனைப் பார்த்தாள்.
சத்யா கூறியதைக் கேட்டு வள்ளி வாயைத் திறக்கும் முன்பே, "ஏன் அப்படிச் சொல்ற சத்யா? வள்ளிக்கு என்ன குறைச்சல்? கருப்பா இருந்தாலும் கலைவாணினு பேரு வைக்கிற அளவுக்குக் களையான முகம் அவளுக்கு" எனப் பொங்கிக் கொண்டு உரைத்திருந்தான் கார்த்திகேயன்.
சுவாரசியப் பாவனையுடன் கார்த்திகேயனைப் பார்த்தவளாய், "கருப்பா இருக்கப் பொண்ணை ஐடில வேலைச் செய்ற பசங்களுக்குலாம் பிடிக்காது கார்த்தி. நீயே சொல்லு என்னை மாதிரி செமி மார்டனா டிரஸ் செய்ற பொண்ணை ஐடி பசங்களுக்குப் பிடிக்குமா இல்ல இவளை மாதிரி பின் பண்ண துப்பட்டாவோட சுடிதார் போட்டுக்கிட்டு தலையைப் பின்னிக்கிட்டு வர்ற பொண்ணுங்களைப் பிடிக்குமா?" எனக் கேட்டிருந்தாள் சத்யா.
வள்ளியும் சத்யாவும் ஒரே பொறியியல் கல்லூரியில் பயின்றிருந்தாலும், இந்த நிறுவனத்தில் ஒன்றாகப் பணியில் சேர்ந்த பின்பு தான் தோழிகளாயினர். ஆறு வருடங்களாக ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிராஜக்ட்டில் வேலைச் செய்து கொண்டிருந்த போதிலும், மதிய உணவு இடைவேளையில் ஒன்றாகவே உண்ணுவர் இருவரும். கார்த்திகேயனும் இவர்களின் கல்லூரியில் வேறு பிரிவில் படித்தவன் தான் ஆயினும் வேறு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவன் சென்ற வருடம் தான் இந்த அலுவலகத்தில் சேர்ந்தான். கல்லூரியில் ஏற்கனவே சத்யாவும் கார்த்திகேயனும் அறிமுகமானவர்கள் என்பதால் சத்யாவின் மூலமாக வள்ளிக்கு அறிமுகமானான் கார்த்திகேயன். அன்றிலிருந்து இவர்களுடன் தான் உணவு உண்ணும் நேரத்தை கழிப்பான்.
சத்யாவிற்குத் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழுந்தையும் இருக்க, வள்ளிக்கு இன்னும் மணமாகவில்லை. இருபத்தேழு வயதான வள்ளிக்கு கடந்த ஐந்து வருடங்களாக மாப்பிள்ளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் அவளின் பெற்றோர்.
இந்நிலையில் முந்தைய நாள் வந்த மணமகன் வீட்டார் வள்ளியைப் பிடிக்கவில்லை என்று சென்றிருக்க, இதனைக் கேட்டதும் தான் இவ்வாறு உரைத்திருந்தாள் சத்யா.
கார்த்திகேயனுக்கு வள்ளியின் மேல் ஈர்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் சத்யாவிற்குள் கடந்த சில நாள்களாக இருக்க, அதன் பொருட்டே இவ்வாறு கேட்டிருந்தாள் சத்யா.
சத்யாவின் கேள்வியில் அவளை முறைத்தாள் வள்ளி.
"உண்மையைச் சொல்லனும்னா எனக்கு மார்டன் பொண்ணுங்களை விட வள்ளி மாதிரி இருக்கப் பொண்ணுங்களைத் தான் பிடிக்கும் சத்யா" என்றான் கார்த்திகேயன்.
வள்ளி நிஜமாவா என்பது போன்ற அதிர்ந்த பார்வையுடன் கார்த்திகேயனைப் பார்த்திருக்க, "வள்ளி மாதிரி இருக்கப் பொண்ணையா? இல்ல வள்ளியவே பிடிக்குமா?" என்று சத்யா மேலும் தூண்டிலிட்டுக் கேட்க,
"ஹலோ.. ஹலோ" வராத அழைப்பு வந்திருப்பதாய் உரைத்து அங்கிருந்து சென்றிருந்தான் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் சென்ற மறுநிமிடம் சத்யாவின் கையில் கிள்ளியவளாய், "என்ன வேலைடி பார்த்துட்டு இருக்க? என்னை அவர் கூடக் கோர்த்து விடுற ஐடியா இருந்தா இதோட விட்டுடு. இல்லனா இனி நான் உன் கூட லன்ச்க்கு வர மாட்டேன் சொல்லிட்டேன்" என்று கோபமாக உரைத்தாள் வள்ளி.
"கார்த்திக்கு உன்னைப் பிடிக்குமோனு ஒரு சந்தேகம் இருந்துச்சுடி. அதான் அவர் வாயாலயே சொல்ல வைக்கலாம்னு பார்த்தேன். பேசாம நீயேன் கார்த்திக்கையே கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது வள்ளி" எனக் கேட்டாள் சத்யா.
சத்யாவின் மண்டையில் நங்கெனக் குட்டியவளாய், "அவருக்காவது என்னைப் பிடிக்கிறதாவது! அவர் கலருக்கும் என் கலருக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அதெல்லாம் சரி வராது சத்யா. நான் அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனைத் தான் கட்டிப்பேன்" என்ற வள்ளி, "டைம் ஆயிடுச்சு. நான் வேலையைப் பார்க்கப் போறேன்" என்று கிளம்பியிருந்தாள்.
"ஹ்ம்ம் இதுங்களை எப்படிச் சேர்த்து வைக்கிறது?" என்று யோசனையுடன் வேலையைப் பார்க்கலானாள் சத்யா.
மாலை ஆறு மணியளவில் வீட்டை அடைந்த வள்ளி தன்னைச் சுத்தம் செய்து கொண்டவளாய் தாய் முத்துலட்சுமி கொடுத்த தேநீருடன் வீட்டினை ஒட்டினார் போல் இருந்த காய்கறிக் கடைக்குள் நுழைந்தாள்.
கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த தந்தை செல்வகுமார் குடிக்கத் தேநீர் அளித்தவள், "நீங்க போய் ரெஸ்ட் எடுங்கப்பா! நான் கொஞ்சம் நேரம் கடையைப் பார்த்துக்கிறேன்" என்று தந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
வள்ளியின் தாய் தந்தையர் தூத்துக்குடியைப் பூர்வீகமாய்க் கொண்டவர்கள். திருமணமான பின்பு சென்னைக்கு வந்து காய்கறி வியாபாரம் செய்து தங்களின் ஒரே மகளைப் படிக்க வைத்து, இந்தச் சொந்த வீட்டையும் வாங்கிக் கட்டியிருந்தனர்.
பெற்றோரின் கடும் உழைப்பைப் பார்த்து வளர்ந்ததினால் வள்ளிக்கு தான் படித்துப் பெரிய பணியில் சேர்ந்து பெற்றோருக்கு நிம்மதியான வாழ்க்கையைத் தர வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. அதற்கேற்ப படித்து முடித்த உடனே மென்பொருள் துறையில் வேலையும் கிடைத்தது அவளுக்கு. நிம்மதியாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்வில் தள்ளிப் போகும் இவளின் திருமணமே இப்பொழுது அவளின் பெற்றோருக்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.
இவள் கடையில் அமர்ந்து கல்லா கணக்கை பார்த்திருக்க, "அந்தக் கத்திரிக்காய் எவ்ளோ?" என்று காதில் விழுந்த குரலில் திடுமென நிமிர்ந்து பார்த்தாள் வள்ளி.
"கார்த்தி" என்று அதிர்ச்சியுடன் அவளின் வாய் உச்சரிக்க,
"என்ன கார்த்தி? இந்தப் பக்கம்? என் வீடு எப்படி உங்களுக்குத் தெரியும்? எப்படிச் சரியா கண்டுபிடிச்சு வந்தீங்க?" எனக் கேட்டாள்.
"நானும் இந்த ஏரியால தானே இருக்கேன். உன்னை ஆபிஸ்ல பார்க்கிறதுக்கு முன்னாடியே இந்தக் கடைல இரண்டு மூனு நேரம் பார்த்திருக்கேன் வள்ளி. காலேஜூல உன்னைப் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனா எங்கேயோ உன்னைப் பார்த்திருக்கேனேனு அப்ப நினைச்சிருக்கேன். அப்புறமா வேலைக்குச் சேர்ந்த பிறகு தான் சத்யா மூலமா உன்னை ஏற்கனவே காலேஜ்ல பார்த்திருக்கேன்னு புரிஞ்சிது" என்றான்.
சென்னை முகப்பேருலேயே வள்ளியின் வீட்டிலிருந்து சில தெருக்கள் தள்ளி தொலைவினில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் இருக்கிறான் கார்த்திகேயன்.
ஆண்களுக்கேற்ற உயரத்தில் அளவான மீசையுடன், முட்டி வரை ஷார்ட்ஸூம் பனியனுமாய் இது வரை அவனைப் பார்த்திராத உடுப்பில் சுண்டி விட்டால் சிவந்துவிடும் வெளீர் நிறத்தில் அழகனாய்த் தெரிந்தான் அவன்.
'இவனுக்குப் போய் எப்படி என்னைப் பிடிக்கும்னு இந்தச் சத்யா நினைக்கிறா?' என்று மனத்தோடு நினைத்தவளாய் இவள் நின்றிருக்க,
"வீட்டுக்குக் கூப்பிட மாட்டியா வள்ளி?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"ஓ சாரி! வாங்க வீட்டுக்குப் போகலாம்" என்று இவள் எழும்பவும்,
"பரவாயில்ல வள்ளி. உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். ஆபிஸ் சரி வராதுனு தான் இங்கே வந்தேன். இங்கேயே பேசலாமா? இல்ல பக்கத்துல பார்க்ல போய்ப் பேசலாமா?" எனக் கேட்டான்.
'என்ன பேசப் போறாரு?' இவளின் இதயம் தாறுமாறாய்த் துடித்திருந்தது.
தந்தையை அழைத்து கார்த்திகேயனை அறிமுகம் செய்து வைத்தவள், "அப்பா ஆபிஸ் விஷயமா அவர்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்துடுறேன்" என்றவளாய் தனது இருச்சக்கர வாகனத்தில் முன்னே செல்ல, இவன் தனது புல்லட் வாகனத்தில் அவளின் பின்னே சென்றிருந்தான்.
பூங்காவில் ஆங்காங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, முதியோர்கள் மென்நடையிட்டிருந்தனர்.
கொஞ்சம் ஆள்களின் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் மரத்தின் கீழே அமர்ந்தான் கார்த்திகேயன்.
"சொல்லுங்க கார்த்தி! என்ன பேசனும்?" அவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்தவளாய் கேட்டாள் வள்ளி.
"நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா வள்ளி?" என நேரடியாகக் கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
நம்ப முடியாத அதிர்வுடன் அவனைப் பார்த்திருந்தாள் வள்ளி.
சத்யா கூறியதைக் கேட்டு வள்ளி வாயைத் திறக்கும் முன்பே, "ஏன் அப்படிச் சொல்ற சத்யா? வள்ளிக்கு என்ன குறைச்சல்? கருப்பா இருந்தாலும் கலைவாணினு பேரு வைக்கிற அளவுக்குக் களையான முகம் அவளுக்கு" எனப் பொங்கிக் கொண்டு உரைத்திருந்தான் கார்த்திகேயன்.
சுவாரசியப் பாவனையுடன் கார்த்திகேயனைப் பார்த்தவளாய், "கருப்பா இருக்கப் பொண்ணை ஐடில வேலைச் செய்ற பசங்களுக்குலாம் பிடிக்காது கார்த்தி. நீயே சொல்லு என்னை மாதிரி செமி மார்டனா டிரஸ் செய்ற பொண்ணை ஐடி பசங்களுக்குப் பிடிக்குமா இல்ல இவளை மாதிரி பின் பண்ண துப்பட்டாவோட சுடிதார் போட்டுக்கிட்டு தலையைப் பின்னிக்கிட்டு வர்ற பொண்ணுங்களைப் பிடிக்குமா?" எனக் கேட்டிருந்தாள் சத்யா.
வள்ளியும் சத்யாவும் ஒரே பொறியியல் கல்லூரியில் பயின்றிருந்தாலும், இந்த நிறுவனத்தில் ஒன்றாகப் பணியில் சேர்ந்த பின்பு தான் தோழிகளாயினர். ஆறு வருடங்களாக ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிராஜக்ட்டில் வேலைச் செய்து கொண்டிருந்த போதிலும், மதிய உணவு இடைவேளையில் ஒன்றாகவே உண்ணுவர் இருவரும். கார்த்திகேயனும் இவர்களின் கல்லூரியில் வேறு பிரிவில் படித்தவன் தான் ஆயினும் வேறு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவன் சென்ற வருடம் தான் இந்த அலுவலகத்தில் சேர்ந்தான். கல்லூரியில் ஏற்கனவே சத்யாவும் கார்த்திகேயனும் அறிமுகமானவர்கள் என்பதால் சத்யாவின் மூலமாக வள்ளிக்கு அறிமுகமானான் கார்த்திகேயன். அன்றிலிருந்து இவர்களுடன் தான் உணவு உண்ணும் நேரத்தை கழிப்பான்.
சத்யாவிற்குத் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழுந்தையும் இருக்க, வள்ளிக்கு இன்னும் மணமாகவில்லை. இருபத்தேழு வயதான வள்ளிக்கு கடந்த ஐந்து வருடங்களாக மாப்பிள்ளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் அவளின் பெற்றோர்.
இந்நிலையில் முந்தைய நாள் வந்த மணமகன் வீட்டார் வள்ளியைப் பிடிக்கவில்லை என்று சென்றிருக்க, இதனைக் கேட்டதும் தான் இவ்வாறு உரைத்திருந்தாள் சத்யா.
கார்த்திகேயனுக்கு வள்ளியின் மேல் ஈர்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் சத்யாவிற்குள் கடந்த சில நாள்களாக இருக்க, அதன் பொருட்டே இவ்வாறு கேட்டிருந்தாள் சத்யா.
சத்யாவின் கேள்வியில் அவளை முறைத்தாள் வள்ளி.
"உண்மையைச் சொல்லனும்னா எனக்கு மார்டன் பொண்ணுங்களை விட வள்ளி மாதிரி இருக்கப் பொண்ணுங்களைத் தான் பிடிக்கும் சத்யா" என்றான் கார்த்திகேயன்.
வள்ளி நிஜமாவா என்பது போன்ற அதிர்ந்த பார்வையுடன் கார்த்திகேயனைப் பார்த்திருக்க, "வள்ளி மாதிரி இருக்கப் பொண்ணையா? இல்ல வள்ளியவே பிடிக்குமா?" என்று சத்யா மேலும் தூண்டிலிட்டுக் கேட்க,
"ஹலோ.. ஹலோ" வராத அழைப்பு வந்திருப்பதாய் உரைத்து அங்கிருந்து சென்றிருந்தான் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் சென்ற மறுநிமிடம் சத்யாவின் கையில் கிள்ளியவளாய், "என்ன வேலைடி பார்த்துட்டு இருக்க? என்னை அவர் கூடக் கோர்த்து விடுற ஐடியா இருந்தா இதோட விட்டுடு. இல்லனா இனி நான் உன் கூட லன்ச்க்கு வர மாட்டேன் சொல்லிட்டேன்" என்று கோபமாக உரைத்தாள் வள்ளி.
"கார்த்திக்கு உன்னைப் பிடிக்குமோனு ஒரு சந்தேகம் இருந்துச்சுடி. அதான் அவர் வாயாலயே சொல்ல வைக்கலாம்னு பார்த்தேன். பேசாம நீயேன் கார்த்திக்கையே கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது வள்ளி" எனக் கேட்டாள் சத்யா.
சத்யாவின் மண்டையில் நங்கெனக் குட்டியவளாய், "அவருக்காவது என்னைப் பிடிக்கிறதாவது! அவர் கலருக்கும் என் கலருக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அதெல்லாம் சரி வராது சத்யா. நான் அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனைத் தான் கட்டிப்பேன்" என்ற வள்ளி, "டைம் ஆயிடுச்சு. நான் வேலையைப் பார்க்கப் போறேன்" என்று கிளம்பியிருந்தாள்.
"ஹ்ம்ம் இதுங்களை எப்படிச் சேர்த்து வைக்கிறது?" என்று யோசனையுடன் வேலையைப் பார்க்கலானாள் சத்யா.
மாலை ஆறு மணியளவில் வீட்டை அடைந்த வள்ளி தன்னைச் சுத்தம் செய்து கொண்டவளாய் தாய் முத்துலட்சுமி கொடுத்த தேநீருடன் வீட்டினை ஒட்டினார் போல் இருந்த காய்கறிக் கடைக்குள் நுழைந்தாள்.
கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த தந்தை செல்வகுமார் குடிக்கத் தேநீர் அளித்தவள், "நீங்க போய் ரெஸ்ட் எடுங்கப்பா! நான் கொஞ்சம் நேரம் கடையைப் பார்த்துக்கிறேன்" என்று தந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
வள்ளியின் தாய் தந்தையர் தூத்துக்குடியைப் பூர்வீகமாய்க் கொண்டவர்கள். திருமணமான பின்பு சென்னைக்கு வந்து காய்கறி வியாபாரம் செய்து தங்களின் ஒரே மகளைப் படிக்க வைத்து, இந்தச் சொந்த வீட்டையும் வாங்கிக் கட்டியிருந்தனர்.
பெற்றோரின் கடும் உழைப்பைப் பார்த்து வளர்ந்ததினால் வள்ளிக்கு தான் படித்துப் பெரிய பணியில் சேர்ந்து பெற்றோருக்கு நிம்மதியான வாழ்க்கையைத் தர வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. அதற்கேற்ப படித்து முடித்த உடனே மென்பொருள் துறையில் வேலையும் கிடைத்தது அவளுக்கு. நிம்மதியாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்வில் தள்ளிப் போகும் இவளின் திருமணமே இப்பொழுது அவளின் பெற்றோருக்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.
இவள் கடையில் அமர்ந்து கல்லா கணக்கை பார்த்திருக்க, "அந்தக் கத்திரிக்காய் எவ்ளோ?" என்று காதில் விழுந்த குரலில் திடுமென நிமிர்ந்து பார்த்தாள் வள்ளி.
"கார்த்தி" என்று அதிர்ச்சியுடன் அவளின் வாய் உச்சரிக்க,
"என்ன கார்த்தி? இந்தப் பக்கம்? என் வீடு எப்படி உங்களுக்குத் தெரியும்? எப்படிச் சரியா கண்டுபிடிச்சு வந்தீங்க?" எனக் கேட்டாள்.
"நானும் இந்த ஏரியால தானே இருக்கேன். உன்னை ஆபிஸ்ல பார்க்கிறதுக்கு முன்னாடியே இந்தக் கடைல இரண்டு மூனு நேரம் பார்த்திருக்கேன் வள்ளி. காலேஜூல உன்னைப் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனா எங்கேயோ உன்னைப் பார்த்திருக்கேனேனு அப்ப நினைச்சிருக்கேன். அப்புறமா வேலைக்குச் சேர்ந்த பிறகு தான் சத்யா மூலமா உன்னை ஏற்கனவே காலேஜ்ல பார்த்திருக்கேன்னு புரிஞ்சிது" என்றான்.
சென்னை முகப்பேருலேயே வள்ளியின் வீட்டிலிருந்து சில தெருக்கள் தள்ளி தொலைவினில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் இருக்கிறான் கார்த்திகேயன்.
ஆண்களுக்கேற்ற உயரத்தில் அளவான மீசையுடன், முட்டி வரை ஷார்ட்ஸூம் பனியனுமாய் இது வரை அவனைப் பார்த்திராத உடுப்பில் சுண்டி விட்டால் சிவந்துவிடும் வெளீர் நிறத்தில் அழகனாய்த் தெரிந்தான் அவன்.
'இவனுக்குப் போய் எப்படி என்னைப் பிடிக்கும்னு இந்தச் சத்யா நினைக்கிறா?' என்று மனத்தோடு நினைத்தவளாய் இவள் நின்றிருக்க,
"வீட்டுக்குக் கூப்பிட மாட்டியா வள்ளி?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"ஓ சாரி! வாங்க வீட்டுக்குப் போகலாம்" என்று இவள் எழும்பவும்,
"பரவாயில்ல வள்ளி. உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். ஆபிஸ் சரி வராதுனு தான் இங்கே வந்தேன். இங்கேயே பேசலாமா? இல்ல பக்கத்துல பார்க்ல போய்ப் பேசலாமா?" எனக் கேட்டான்.
'என்ன பேசப் போறாரு?' இவளின் இதயம் தாறுமாறாய்த் துடித்திருந்தது.
தந்தையை அழைத்து கார்த்திகேயனை அறிமுகம் செய்து வைத்தவள், "அப்பா ஆபிஸ் விஷயமா அவர்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்துடுறேன்" என்றவளாய் தனது இருச்சக்கர வாகனத்தில் முன்னே செல்ல, இவன் தனது புல்லட் வாகனத்தில் அவளின் பின்னே சென்றிருந்தான்.
பூங்காவில் ஆங்காங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, முதியோர்கள் மென்நடையிட்டிருந்தனர்.
கொஞ்சம் ஆள்களின் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடத்தில் மரத்தின் கீழே அமர்ந்தான் கார்த்திகேயன்.
"சொல்லுங்க கார்த்தி! என்ன பேசனும்?" அவனருகில் சற்றுத் தள்ளி அமர்ந்தவளாய் கேட்டாள் வள்ளி.
"நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா வள்ளி?" என நேரடியாகக் கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
நம்ப முடியாத அதிர்வுடன் அவனைப் பார்த்திருந்தாள் வள்ளி.
Last edited: