• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 20, 2025
Messages
10
என்னை மாற்றும் காதலே -2


சூர்யா : ஸ்கூல் கேட்க்கு வெளியே பைக் ஸ்டாப் பண்ணினான். அபிமன்யுவ தூக்கிட்டு அவன் பேக் எடுத்துக்கிட்டு உள்ள போனான்.

அபிமன்யு :அப்பா இதுதான் நான் படிக்கப் போற ஸ்கூலா.

( ஸ்கூல் சுத்தி மரங்கள், ப்ளே கிரௌண்ட்ஸ், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு மரம் எல்லாம் இருந்தது ).

சூர்யா :ஆமா நல்லா இருக்கா.

அபிமன்யு :சூப்பரா இருக்கு.

சூர்யா: அபிமன்யுவ அவன் கிளாசுக்கு அழச்சிட்டு போனான்.

யுகேஜி ஏ1 ( அபிமனுக்கு நான்கு வயசு அதனால யுகேஜி ல சேத்துட்டாங்க ).

சூர்யா :மேம்.

மிஸ் :வாங்க சார் உள்ள வாங்க.

சூர்யா: மேம் இன்னைக்கு தான் உனக்கு முதல் நாள் கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க அழுதால் கால் பண்ணுங்க நான் வந்துடுறேன் ( அவன் போன் நம்பர் கொடுத்தான் ).

மேம் :ஓகே சார் இவங்க கிளாஸ் மிஸ் நான் இல்ல அவங்க வந்தது நான் சொல்லிடுறேன். இன்னைக்கு முதல் நாள் சோ மதியம் வந்து அழச்சிட்டு போயிடுங்க.

சூர்யா: ஓகே மேம் பையன் கிட்ட கொஞ்சம் பேசிட்டு போறேன்.

மேம்: ஓகே சார்.

சூர்யா: அபி குட்டி அழகா சமத்தா இரு அப்பா வந்து உன்ன மதியம் அழச்சிட்டு போயிடுறேன். எல்லார் கூடையும் பிரண்ட்லியா பேசு சரியா.

அபி:சரி பா (அழகாக தலையை ஆட்டி சொன்னான் ).

சூர்யா :அப்புறம் அவன் ஆபிஸ்க்கு கிளம்பிட்டான்.

அபி :ஒரு பிளேஸ்ல போய் உட்கார்ந்தான்.

கொஞ்ச நேரத்துல அந்த மேம் போனதும் அவங்க கிளாஸ் மிஸ் வந்தாங்க.

பசங்க எல்லாரும் எழுந்து விஷ் பண்றாங்க.

ஷாலினி:( இவங்க தான் நம்ம ஸ்டோரியோட ஹீரோயின் அபிமன்யு கிளாஸ் டீச்சர் ) நார்மல் ஹைட்,நல்ல கலர், லாங் ஹேர் கொஞ்சம் குண்டா கொழு கொழுன்னு அழகா இருப்பா.

ஷாலினி: குட் மார்னிங் சிட் டௌவுன் ஸ்டுடென்ட்ஸ். நம்ம கிளாசுக்கு யாரோ புதுசா வந்து இருக்காங்க போல.

அபி :எழுந்து நின்னான்.

ஷாலினி : இங்க வாங்க.

அபி : அவ கிட்ட போனான்.

ஷாலினி : ( அவன் சைசக்கு மண்டி போட்டு உட்கார்ந்தா ) உங்க பெயர் என்ன.

அபி : அபிமன்யு.

ஷாலினி : எங்க இருந்து வரிங்க.

அபி : மதுரைல இருந்து இரண்டு நாள் முன்னாடி தான் இங்க வந்தோம், இனிமேல் சென்னையில் தான் இருப்போம்.

ஷாலினி : அபி குட்டி அழகா பேசுறிங்களே.

அபி : தேங்க்ஸ் மிஸ்.

ஷாலினி : அப்பா, அம்மா என்ன பண்ணுறாங்க.

அபி : எனக்கு அம்மா இல்ல அப்பா மட்டும் தான். அப்பா ஒரு கம்பனில TL ல ஒர்க் பண்ணுறாங்க.

ஷாலினி : ஓகே செல்லம் போய் உங்க பிளேஸ் ல உக்காருங்க.

அப்படியே மதியம் ஆகிருச்சி கிளாஸ் டீச்சர் எப்பவும் அவங்க கிளாஸ் பசங்க கூட தான் உட்கார்ந்து சாப்பிடணும்,சோ ஷாலினி அவ கிளாஸ்க்கு வந்தா.

எல்லா பசங்களும் வரிசையாக கீழ உட்கர்ந்தாங்க.

ஷாலினி : சில பசங்களுக்கு டிபன் பாக்ஸ் ஓபன் பண்ண தெரியாது அவங்களுக்கு எல்லாம் ஓபன் பண்ணி கொடுத்து சாப்பிட சொல்லி கொடுத்தா.

அபி : தனியா உட்கார்ந்து இருந்தான்.

ஷாலினி : அபி குட்டி சாப்பிடலையா.

அபி : நான் சப்பாடு கொண்டு வரல மிஸ் அப்பா மதியம் வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க ஆனா இன்னும் வரல.

ஷாலினி: அப்போ என்னோட சாப்பாட்டை நம்ம ரெண்டு பேரும் சேர் பண்ணிக்கலாம் சரியா.

அபி :அச்சோ அப்புறம் உங்களுக்கு பத்தாதே ( கண்ணை சுருக்கி அழகாக சொன்னான் ).

ஷாலினி :அம்மா எனக்கு நிறைய சாப்பாடு வைப்பாங்க அதுல பாதி தான் நான் சாப்பிடுவேன். பாதி அப்படியே நான் வீட்டுக்கு கொண்டு போய் விடுவேன். சோ இப்ப நாம இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டால் சரியாக இருக்கும்.

அபி: ஏன் மிஸ் இப்படி இருக்கீங்க சாப்பாட்டை வீணாக்க கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்காங்க அதனால நாளைல இருந்து உங்களுக்கு தேவையானதை மட்டும் கொண்டு வாங்க.

ஷாலினி:( இவனை சாப்பிட வைக்க ஒரு பொய் சொன்னா இவன் நமக்கே அட்வைஸ் பண்றானே ) நாளிலிருந்து தேவையான சாப்பாடு மட்டும் நான் கொண்டு வரேன் இப்ப ஷேர் பண்ணிக்கலாம் சரியா.

அபி: சரி மிஸ்.

ஷாலினி :அவனுக்கு பிளேட்டுல வச்சுட்டு இவ பாக்ஸ்ல இருந்துத சாப்பிட்டா.

இரண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சாங்க.

அபி: மிஸ் சாப்பாடு சூப்பரா இருக்கு நான் உங்க அம்மா கிட்ட பாராட்டினேன்னு சொல்லுங்க.

ஷாலினி :அப்படியே ஆகட்டும் மகாராஜா.

அபி :சரிங்க அமைச்சரே.

ஷாலினி : ஏய் வாலு (அவன் கன்னத்தை பிடிச்சு கிள்ளினா ).

அபி : மிஸ் கிள்ளாதீங்க.

ஷாலினி : உன் பொசு பொசு கன்னத்தை பார்க்கும் போது கடிச்சு சாப்பிடணும் போல இருக்கு.

அபி :( அவன் இரண்டு கன்னதுலயும் கை வச்சான் )நோ மிஸ்.

ஷாலினி : ( இவரோட முகச்சாடை இவனோட குறும்பு தனம் எல்லாத்தையும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா எங்கன்னு தான் ஞாபகம் வரல ) சும்மா சொன்னேன் கைய. எடு.

அபி : அதோ அப்பா வந்துட்டாங்க எழுந்து ஓடினான்.

ஷாலினி: திரும்பி பார்த்தா.

அபி: ஓடிப்போய் சூர்யா மேல தாவிக்கிட்டான்.

சூர்யா: அவனை தூக்கிட்டு ஷாலினி கிட்ட வந்தான்.

ஷாலினி: அதே அதிர்ச்சி மாறாம அப்படியே நின்னா.

சூர்யா :ஹாய் ஷாலு நீ இங்க என்ன பண்ற.

ஷாலினி: சீனியர் நீங்க தான் அபி அப்பாவா.

சூர்யா: ஆமா நீ இங்க என்ன பண்ற.

ஷாலினி :நான் தான் அபி கிளாஸ் மிஸ்.

சூர்யா: அப்படி யா டீச்சர் அம்மா.

ஷாலினி: சீனியர்( சினுங்குனா ).

சூர்யா: சரி சரி சும்மா சொன்னேன்.

ஷாலினி : ம்ம்ம்... அபி அம்மா இல்லன்னு சொன்னான் சுஜி அக்காவுக்கு என்ன ஆச்சு.

சூர்யா:( ஒரு நிமிஷம் அபிய கிளாஸ் உள்ள உக்கார வச்சுட்டு வெளியே வந்தான் ) அவ அபி பிறக்கும் போதே இறந்துட்டா.

ஷாலினி :அழுதா.

சூர்யா: அவ இறந்தது தாங்க முடியாம ரொம்பவே கஷ்டப் பட்டேன் அபி வேற பசியில் அழுவான் என்ன பண்றதுன்னு தெரியல.

சுஜி சாகறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் என் தங்கச்சிக்கும் குழந்தை பிறந்து எங்க வீட்ல இருந்தா. அவ என் வீட்ல இருந்த மூணு மாசமும் என் குழந்தைக்கு அவ குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுத்தா.

அதனால எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது, அபி வளர அவனுக்கு ஒரு அம்மா வேணும்னு என்னை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க.

என் குழந்தைக்கு அம்மா,அப்பா எல்லாமே நான் மட்டும் தான் அதனால தான் அவனை இங்க தூக்கிட்டு வந்துட்டேன்.

ஷாலினி : கண்ணுல கண்ணீர் வந்தது.

சூர்யா: சாரி ஷாலு என் கஷ்டத்தை சொல்லி உன்னை அழ வச்சுட்டேன்.

ஷாலினி :பரவாயில்ல சீனியர் இனி அபி என் பொறுப்பு அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

சூர்யா : தேங்க்ஸ் மா இன்னைக்கு முதல் நாள்னு அபிய மதியமே அழச்சிட்டு போக சொல்லிட்டாங்க. சோ நான் இப்ப அவனை அழச்சிட்டு போறேன்.

ஷாலினி : ஓகே சீனியர்.

சூர்யா : அபிமன்யு வ தூக்கிட்டு வந்தான்.

அபி : பாய் மிஸ்.

ஷாலினி : பாய் அபி.

அவங்க போய்ட்டாங்க.

ஷாலினி :அவங்களே பார்த்துகிட்டு இருந்தா. (M. V) இப்பதான் புரியுது அபியை பார்க்க சீனியர் மாதிரியே இருக்கான். அப்புறம் சுஜி அக்காவோட குறும்பு தான் அப்படியே அவங்க கிட்ட இருக்கு.

ஆனா சுஜி அக்கா இப்ப உயிரோடு இல்லன்னு நினைக்கிறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.

அப்புறம் அவ கிளாசுக்கு போயிட்டா.

(சூர்யா சுஜாதா (சுஜி ) காலேஜ் படிக்கும் போது கிளாஸ்மேட்ஸ் அண்டு ஆல்சோ லவர்ஸ் ஷாலினி அவங்களோட ஜூனியர் ) இப்போதைக்கு இது போதும் காலேஜ்ல நடந்ததை எல்லாம் பிளாஷ்பேக்ல சொல்லும் போது தெளிவா சொல்றேன் ஃபிரண்ட்ஸ்.


தொடரும்....
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top