• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 20, 2025
Messages
15
அபி : அப்பான்னு கத்தி கிட்டே கீழ விழுந்தான்.

ஷாலினி : அபி ( கத்திகிட்டே அவண்ட ஓடினா ).

அபி :(வலது பக்கமா கீழ விழுந்ததுல வலது கை முட்டி கிட்ட தோள் தேஞ்சி ரத்தம் வந்தது, நெத்தில லைட்டா அடி ) அப்பா.

ஷாலினி : அபி (அவன தூக்கினா ).

அபி :அப்பா வலிக்குது அப்பா கிட்ட போகணும்.

ஷாலினி : அபிய தூக்கிட்டு வெளிய ஓடினா.

அதுக்குள்ள சப்ஜெக்ட் மிஸ் வந்துட்டாங்க.

மிஸ் : மிஸ் அபிக்கு என்ன ஆச்சு.

ஷாலினி : அடிப்பட்டுட்டு கீழே அழைச்சிட்டு போய் பஸ்ட் அய்ட் பண்ணுறேன் நீங்க கிளாஸ் பார்த்துக்கங்க.

மிஸ் : ஓகே மிஸ்.

ஷாலினி: அவன கீழ ஆபீஸ் ரூம் அழைச்சிட்டு போயி நெத்தியில பேண்டேஜ் போட்டு கைல கட்டு போட்டு விட்டா.

அபி : அப்பா கிட்ட போகணும்.

ஷாலினி : அபி அழாத டா.

அபி : அப்பா அப்பா ( தேம்பி, தேம்பி அழுதான் ).

ஷாலினி : ( அவனை அவ தோளில் சாய்த்து தட்டி கொடுத்தா ) அபி குட்டி அப்பா வந்துடுவாங்க அழாத டா.

அபி : அப்பா.

ஷாலினி : இரு அப்பாவுக்கு கால் பண்ணலாம் ( அவன் ஐடி கார்டில் உள்ள சூர்யாவின் நம்பருக்கு கால் பண்ணினாள்).

அபி: அப்பவும் அழுதுகிட்டு தான் இருந்தான்.

சூர்யா:( அப்பதான் காபி ஷாப்ல இருந்து ஆபீஸ் குள்ள போய்கிட்டு இருந்தான் )( போன் ரிங் ஆச்சு )ச்ச யார் இது இருக்கிற டென்ஷன் வேற பத்தாதுன்னு இவங்க வேற( போன் கட் பண்ணிட்டான் ).

ஷாலினி: அய்யோ கட் பண்றாரு( திரும்ப பண்ணினா ).

சூர்யா:( கோபமா அட்டன் பண்ணான் )
ஹலோ யார் அது கட் பண்ணா அதோட விட மாட்டிங்களா.

ஷாலினி : சீனியர்.

சூர்யா: ஷாலு நீயா (அபி அழுகிற சத்தம் கேட்டது ).

அபி : அப்பா, அப்பா.

சூர்யா : (டென்ஷன் ஆகிவிட்டான்) ஹலோ அபி ஏன்டா அழுவுற அபி. ஷாலு அபிக்கு என்ன ஆச்சு.

ஷாலினி : சீனியர் சீக்கிரமா ஸ்கூலுக்கு வாங்க ப்ளீஸ்.

சூர்யா: இதோ உடனே வரேன் ( மேனேஜர் கிட்ட ஹால்ப் டே லீவ் கேட்டு பைக் எடுத்துட்டு உடனே கிளம்பினான் ).

சூர்யா: ஸ்கூல் கேட் கிட்ட பைக் ஸ்டாண்ட் கூட போடல அப்படியே கீழ போட்டுட்டு ஓடினான். அரை மணி நேரம் வர வேண்டிய ஸ்கூலுக்கு 15 நிமிடத்தில் வந்து விட்டான்.

ஷாலினி: அவளுக்கு மதியம் ஃபர்ஸ்ட் அவர் பிரீ தான் சோ அபி கூடவே இருந்தா.

அபிய அவ தோல்ல போட்டு தட்டி கொடுத்துக்கிட்டு இருந்தா.

சூர்யா :(அவ கிட்ட ஓடினான்) அபி.

அபி:( திரும்பினான் )அப்பா.

சூர்யா:( அவன தூக்கிட்டான்) என்ன ஆச்சுடா கையில வேற கட்டு போட்டு இருக்க தலைல வேற அடிபட்டு இருக்கு.

அபி :அப்பா நவீன் தள்ளி விட்டுட்டான்.

ஷாலினி: சீனியர்.

சூர்யா: இதுதான் நீ குழந்தைங்களை பாத்துக்கிற லட்சணம்மா எப்படி அடிபட்டு இருக்கு பாரு. உங்களை நம்பி தானே பசங்களை அனுப்புறோம் இப்படி தான் பார்த்துக்கொள்வீர்களா.

ஷாலினி: இல்ல சீனியர் அது வந்து.

சூர்யா: எதுவும் பேசாத இப்ப நான் இவனை அழைச்சிட்டு போலாம்னு தான.

ஷாலினி:ம்ம்ம் இந்தாங்க (அபி ஓட பேக் லஞ்ச் பேக் எடுத்து கொடுத்தா) .

சூர்யா: வாங்கிட்டு அபிய தூக்கிட்டு போயிட்டான்.

ஷாலினி: அவங்களே பார்த்துகிட்டு இருந்தா.

ராகுல்: அபியை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனான் .

டாக்டர்: கட்டை பிரித்து பார்த்துட்டு சின்ன அடி தான் பெருசா ஒன்னும் இல்ல ஏற்கனவே ப்ராப்பர் ஃபர்ஸ்ட் அய்ட் தான் பண்ணி இருக்காங்க. அதனால சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லி கட்டு போட்டுவிட்டு டிடி இன்ஜெக்சன் ஒன்னு போட்டு விட்டார்.

சூர்யா: அபிய தூக்கிட்டு கிளம்பிட்டான்.

அபி: சூர்யா தோள்ல சாய்ந்து படுத்து இருந்தான்.

சூர்யா : ச்ச அபி மேல உள்ள பாசத்துல ஷாலினியை திட்டிட்டோமே கால் பண்ணி சாரி கேட்போம் ( மொபைல் எடுத்தான் )
வேண்டா கிளாஸ்ல இருப்பா ஈவினிங் கால் பண்ணி பேசலாம்.( அபியை தூக்கிட்டு வீட்டுக்கு போனான்).

கதிரேசன் : வெளில சேர்ல உக்கார்ந்து இருந்தாரு.

சூர்யா : கேட் ஓபன் பண்ணிட்டு உள்ள வந்தான்.

கதிரேசன் : என்னப்பா அதுக்குள்ள வந்துட்டீங்க, அச்சோ அபிக்கு என்ன ஆச்சு.

அபி: தாத்தா( அவர் கிட்ட தாவினான் ).

கண்ணன்: (தூக்கிகிட்டாரு) சூர்யா என்னப்பா ஆச்சு.

சூர்யா: உள்ள தூக்கிட்டு போங்கப்பா நான் போய் மேலே பேக் எல்லாம் வச்சிட்டு வந்துடறேன்.

கதிரேசன்: சரி( அபிய தூக்கிட்டு உள்ள போனாரு).

சூர்யா: மேல போய் பேக் வச்சுட்டு வந்தான்.

அபி: லட்சுமி மடியில் உட்கார்ந்து இருந்தான்.

கதிரேசன்: என்னப்பா ஆச்சு.

சூர்யா: ஸ்கூல்ல யாரோ ஒரு பையன் கீழே தள்ளி விட்டானாம் அப்பா. ரொம்ப அழுதுகிட்டே இருந்தான் அதான் வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன்.

லட்சுமி: பாவம் புள்ள முகமே வாடி போச்சு எவ்வளவு குஷியா தாத்தா,லெட்சு அப்படின்னு ஓடி வருவான்.இப்போ பாரு புள்ள முகமே சரி இல்லை.

சூர்யா : அதான்மா எனக்கும் கஸ்ட்மா இருக்கு.இதுக்கு முன்னாடி இவன் இப்படி அழுததே இல்லை. இன்னைக்கு ரொம்ப அழுதுட்டான்.

கதிரேசன் : லட்சுமி முதல்ல புள்ளைக்கு சுத்தி போடு. எல்லார் கண்ணும் பேரன் மேல தான் பட்டு இருக்கும்.

லட்சுமி: ஆமாங்க (அபிய கீழ உட்கார வைத்து விட்டு உள்ள போய் உப்பு மிளகாய் எடுத்துட்டு வந்தாங்க).

கதிரேசன்: சூர்யா நீயும் அபி கூட சேர்ந்து உட்காருப்பா.

சூர்யா: சரி பா.

லட்சுமி: இரண்டு பேரையும் உட்கார வைத்து சுத்தி போட்டாங்க.

அப்புறம் அபி ய கொஞ்சமா சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்தாங்க. அவனும் கொஞ்ச நேரத்திலேயே தூங்கிட்டான்.

சூர்யா: அவன தூக்கிட்டு போய் பெட்ல படுக்க வைத்து அவனும் பக்கத்துல படுத்து தூங்கிட்டான்.


தொடரும்....
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top