• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 20, 2025
Messages
15
என்னை மாற்றும் காதலே

அபி : அப்பா ப்ளீஸ் ஷாலினி மிஸ்ஸயும் அழச்சிட்டு போகலாம் ப்ளீஸ் (ராகுல், தாடையை பிடிச்சு கெஞ்சினான் )

ஷாலினி: வேண்டாம் அபி நான் ஆட்டோல வந்துடுறேன் நீங்க போங்க.

அபி: வேண்டாம் மிஸ் நீங்க இதிலேயே வாங்க.அப்பா நீங்க கூப்பிடுங்க.

சூர்யா: அபி அதான் ஆட்டோல போறேன்னு சொல்றாங்களே விடேன் டா.

அபி :அப்பா நீ என்ன அவங்கள கூப்பிடாம என்ன தடுக்கிற.

சூர்யா: (கொஞ்ச நேரம் யோசித்தான்) சரி வா ஷாலு.

ஷாலினி:( அப்போ அந்த வழியா அவங்க ஸ்கூல்ல வேலை பார்க்கிற இன்னொரு மிஸ்ஸை பார்த்தா) கவிதா மிஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க ( அவங்களோட போனா).

கவிதா : என்ன மிஸ் ஆச்சி ஏன் இங்க நினைக்கிறீங்க.

ஷாலினி: ஸ்கூட்டி பஞ்சர் நானும் உங்க கூட வரவா.

கவிதா : ம்ம்ம்ம்ம்ம் வாங்க.

ஷாலினி :(ஒரு நிமிஷம் சூர்யா கிட்ட போனா) சீனியர் உங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீங்க சுஜி அக்காவை தவிர வேற யாரையும் பைக்ல ஏத்துனது இல்ல. உங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தான் நான் உங்க கூட வரலைன்னு சொன்னேன். அபி பாவம் சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான் அவனுக்காக நான் உன்கிட்ட சாரி கேட்டுக்குறேன். சீக்கிரம் வாங்க நான் அவங்க கூட போறேன்.

அபி குட்டி உங்க அப்பா ரொம்ப ஸ்லோவா வண்டி ஓட்டுவாரு நான் அதான் வரலைன்னு சொல்லிட்டேன். இப்போ நான் அந்த மேடம் கூட ஸ்பீடா போக போறேன் பாய் ( அவள் பேக் எடுத்துட்டு ஓடிட்டா ).

சூர்யா:(mv) நம்ம உணர்வுக்கு முயற்சி கொடுத்து அபியையும் ஈஸியா சமாளிச்சுட்டு போறாளே.( அவளையே பார்த்துக்கிட்டு இருந்தான்).

அபி: அப்பா மிஸ் எப்படி சொல்றாங்க பாரு, நாம அவங்களுக்கு முன்னாடி ஸ்கூல்ல இருக்கணும்.

சூர்யா :சரி டா குட்டி ஸ்பீடா போகலாமா.

அபி: போகலாம் போகலாம்.

சூர்யா: சொன்ன மாதிரி ஷாலினிக்கு முன்னாடி ஸ்கூலுக்கு போயிட்டான்.

ஷாலினி :அப்போதான் பார்க்கிங்ல இருந்து வந்தா.

அபி:ஐஐஐ நாங்க தான் ஜெயிச்சோம் நாங்க தான் ஜெயிச்சோம்( கைதட்டி குதிச்சுகிட்டே சிரிச்சான்).

ஷாலினி:( அவன் சைசுக்கு முட்டி போட்டா )அச்சோ நான் தோத்துட்டேனே (முகத்த சோகமா வச்சுக்கிட்டா ).

அபி : (அவ கன்னத்துல கிஸ் பண்ணினான்)நமக்கு பிடிச்சவங்க சோகமா இருந்தா கிஸ் பண்ணனும்னு அப்பா சொல்லுவாங்க.

ஷாலினி : (அவளும் திருப்பி கிஸ் பண்ணிணா)அபி ஆல்வேஸ் குட் பாய்.

அபி : தேங்க்ஸ் மிஸ்.

சூர்யா: இது எல்லாத்தையும் பார்த்துட்டு தான் நின்னான்.

ஷாலினி : சீனியர் நீங்க போங்க நான் கிளாஸ்க்கு அழச்சிட்டு போறேன்.

சூர்யா : ஓகே பாய் அபி.

அபி : பாய் பா.

சூர்யா கிளம்புனதும் ஷாலினி, அபிமன்யு கிளாஸ்க்கு போய்ட்டாங்க.

அன்னைக்கு மதியம் சூர்யா அவன் ஆபீஸ் கேன்டீன்ல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தான்.

சூர்யா அம்மா காலிங் சூர்யா.

சூர்யா :( அட்டன் செய்தான் ) சொல்லு மா.

சூர்யா அம்மா: என்னப்பா பண்ற சாப்டியா.

சூர்யா: இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன் சொல்லுங்க அம்மா.

சூர்யா அம்மா: சூர்யா அம்மா ஒரு விஷயம் சொல்றேன் அதை நீ கண்டிப்பா கேட்பியா.

சூர்யா : என்ன விஷயம்ன்னு சொல்லுங்க முதல்ல.

சூர்யா அம்மா :நாங்க உனக்கு ஒரு பொண்ணு பார்த்து இருக்கோம்.அவளும் சென்னை தான் இன்னைக்கு உண்ண பார்த்து பேசணும்னு சொன்னா நானும் உன் ஆபீஸ் அட்ரஸ் சொன்னேன்.உன் ஆபிஸ் பக்கத்துல இருக்கிற காபி ஷாப்ல மீட் பண்ணி பேசுறதா சொன்னா கொஞ்சம் போய் பார்த்து பேசிட்டு வந்திடுறியா.

சூர்யா: அம்மா பேசி முடிச்சிட்டியா நானும் எத்தனை முறை தான் சொல்றது கல்யாணம் வேண்டாம்ன்னு ஏன் புரிஞ்சுக்க மாட்ற.

சூர்யா அப்பா:( போன் வாங்கி பேசினாரு )சூர்யா.

சூர்யா :அப்பா.

சூர்யா அப்பா: உன்னை இப்பவே அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்னு நாங்க சொல்லவே இல்ல போய் பேசி பாரு உனக்கு புடிச்சிருந்தா தான் கல்யாணம் இல்லைனா நாங்க உன்ன கம்பல் பண்ண மாட்டோம்.

சூர்யா:( அவங்க அப்பா சொல்லவும் அவனால மீற முடியல) சரி நான் போறேன்.

சூர்யா அப்பா : சரி போய் பேசி பாரு ( கால் கட் ).

சூர்யா : லஞ்ச் முடிய இன்னும் நேரம் இருந்தது.அதுக்குள்ள பேசிட்டு வந்துடலாம்னு பக்கத்துல உள்ள காபி ஷாப்ல போய் ஒரு டேபில்ல உட்கார்ந்தான்.

கொஞ்ச நேரத்துல ஒரு பொண்ணு அவன் எதிரில வந்து உட்கார்ந்தா.

:நீங்க தான சூர்யா

சூர்யா:ஆமா.

: ஹாய் சூர்யா ஐ எம் தியா ( அவன் முன்னாடி கையை நீட்டினா ).

சூர்யா: (இரு கை கூப்பி வணக்கம் சொன்னான்) வணக்கம்.

தியா:(ஸ்மார்ட்) போட்டோல பார்த்ததை விட நேர்ல செம்ம ஹண்ட்ஸம்மா இருக்கீங்க.

சூர்யா :தேங்க்ஸ்.

இரண்டு பேரும் காப்பி ஆர்டர் பண்றாங்க.

சூர்யா: ஏற்கனவே எனக்கு மேரேஜ் ஆகி ஒரு பையன் இருக்கான் தெரியும் தான.

தியா: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியும் அது ஒன்னும் பிரச்சனை இல்ல எனக்கு சம்மதம் தான்.

சூர்யா: எனக்கு என் பையன் தான் முதல அப்புறம் தான் யாரா இருந்தாலும் சொன்னது புரியும்னு நினைக்கிறேன்.

தியா: ம்ம்ம் புரியுது ஆனா ஒரு கண்டிஷன்

சூர்யா: என்ன.

தியா: நாம முதல்ல அவன் ஒரு நல்ல ஹாஸ்டல்ல சேர்த்து விடலாம். ஒரு இரண்டு வருஷம் நாம சந்தோஷமா இருக்கலாம். அப்புறம் நமக்குன்னு ஒரு குழந்தை வந்த பிறகு அவனும் அழச்சிட்டு வந்து பார்த்துக்கலாம். அதுவரை அவன் ஹாஸ்டல்ல இருக்கட்டும்.

சூர்யா:ஹே (டேபிளை தட்டி எழுந்தான்).

தியா: பயந்து அவளும் எழுந்தா.

சூர்யா: எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே என் பையன ஹாஸ்டல்ல சேர்க்கணும்னு சொல்லுவ, ஒரு பொண்ணு மேல கை வைக்க கூடாதுன்னு பாக்குறேன் இல்லனா உன் கண்ணம் பழுத்துரும் ஒழுங்கா ஓடிப் போயிடு ( கண்ணு சிவக்க செம கோவத்துல கத்தினான்).

தியா: அவ பயந்து ஓடி போயிட்டா.

சூர்யா :அவ மேல இருந்த கோபத்தை அவங்க அம்மாவுக்கு கால் பண்ணி திட்டிட்டான்.

சூர்யா அம்மா : என்கிட்ட அப்படியே போடுங்க என் பையன் மாதிரி நான் பத்திரமா பார்த்து பேனு சொன்னதுனால தான் பா உன்னை சந்தித்து நாங்க பேச சொன்னோம். உன்கிட்ட ஏன் இப்படி பேசினானு எனக்கு தெரியல பா.

சூர்யா : போதும் மா இனிமேல் எனக்கு பொண்ணு பாத்து இருக்கேன் அப்படின்னு கால் பண்ணாதீங்க ( கால் கட் பண்ணிட்டான் ).

பள்ளி

லஞ்ச் முடிஞ்சதும் பசங்க எல்லாரும் அவங்க பிலேஸ்ல உக்காந்து விளையாடிகிட்டு இருந்தாங்க.

சப்ஜெக்ட் மிஸ் வர வரைக்கும் ஷாலினி அவ கிளாஸ் ரூம்ல இருந்தாகணும் சோ டெஸ்ட் நோட் கரெக்ஷன் பாத்துகிட்டு இருந்தா.

அபி: அவன் டிராயிங் புக்ஸ்ல கிரையான்ஸ் வச்சு கலர் பண்ணிக்கிட்டு இருந்தான் .

அந்த கிரையான்சை பக்கத்துல உள்ள ஒரு பையன் புடுங்கிட்டான்.

அபி: நவீன் அது என்னோட கிரையான்ஸ் கொடு ஒழுங்கா.

நவீன்: முடியாது (அவன் பின்னாடி மறைத்து வைத்துக் கொண்டான் ).

அபி: கொடு டா (அதை வாங்கப் பார்த்தான்).

நவீன்: போ டா (அவனை பிடிச்சு தள்ளினான் ).

அபி கார்னர் சீட்ல உக்காந்து இருக்கவும் நவீன் தள்ளவும் கீழே விழுந்துட்டான்.

அபி: அப்பா (காத்திக்கிட்டே கீழே விழுந்தான் ).

ஷாலினி:அபி (அவன் கிட்ட ஓடினா).


தொடரும்....
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top