• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 17, 2025
Messages
6
ஏக்கங்கள் தீராது...




மாலை ஆறுமணி கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.கண்களில் நீர் வழிய, கடல் அலைகளை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் பிரகல்யா...


அவள் அருகில் அமர்ந்து மணலில் வீடு கட்டி விளையாண்டு கொண்டிருந்தான் அவளின் மகன் ஆதித்.

அவளின் மனதுக்குள் அத்தனை ஏக்கங்கள், ஏதேதோ எண்ணங்கள்... பெற்றோரை விட்டு வந்து தான் காதலித்த சர்வேஷை திருமணம் செய்து கொண்டவள். இப்போது வரை அவளையும் அவர்கள் மகனை தங்கமாய் தாங்கும் தாயுமானவன்.

ஆயினும் அவளுக்கு ஒரு ஏக்கம், அவன் தனக்காக நேரம் கொடுக்கவில்லை, அவர்களுக்கான நேரத்தை அவனுடன் செலவிட முடியவில்லை என்று...

அதுவும் அவர்களுக்காக தான் அவன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறான் என்று ஏனோ அனைத்தும் புரிந்தாலும் அவன் அருகாமைக்காக மனது ஏங்கதான் செய்கிறது அதன் வெளிப்பாடே இந்த கண்ணீர். அதோடு இன்று அவர்களுக்கான நாள் அது கூட அவனின் நினைவில் இல்லை.

கணவனின் கடமை அவர்களை பார்த்துக்கொள்வதும் தேவையானதை வாங்கி தருவதும் மட்டும் இல்லையே என்பது அவளின் எண்ணம்...

"இப்போ என்னடி பிரச்சினை உனக்கு சொன்னா தானே தெரியும். எனக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா? பத்து தடவை கால் பண்ணிட்ட ஏதோ அவசரம் போலன்னு வீட்டுக்கு வந்தா பீச்சுக்கு வரணும்னு சொன்ன அதான் கூட்டிட்டு வந்துட்டேன் இல்ல இப்போ எதுக்காக இப்படி அழுதுட்டு இருக்க?"என்று கத்தியவனுக்கும் அவளின் கண்ணீரை கண்டு வலிக்கத்தான் செய்தது..

"இப்போ கூட உனக்கு வேலை தானா சர்வா, அப்போ எங்களுக்கு ஏதாச்சும் ஆனா தான் நீ வருவியா"என்றவளின் கேள்வியில் ஒரு நிமிடம் துடித்து போனவன் "என்னடி பைத்தியம் மாறி பேசிட்டு இருக்க, நான் என்ன கேக்குறேன். நீ என்ன சொல்லிட்டு இருக்க"என்று கத்தியவனைக் கை காட்டி இடை மறித்தாள்.

"இன்னிக்கு என்ன நாள் சர்வா"என்றவளை ஆயாசமாக பார்த்தவன் "இப்போ அதை கேக்க தான் இங்க கூட்டிட்டு வந்தியா? உனக்கு உடம்பு நல்லா தானே இருக்கு"என்றவன் நெற்றியில் கைவைத்து பார்க்க...

"உடம்புக்கு ஒண்ணும் இல்லை, ஆனால் என் மனசு அதுக்கு தான் சர்வா பிரச்சினை. என்னமோ ஆகிடுச்சு, என்னென்னவோ யோசிக்க சொல்லுது, சீக்கிரமா பைத்தியம் ஆகிடுவேன்னோனு பயமா இருக்கு"என்று கண்ணீர் வழிய கூறியவளை கண்டு அதிர்ந்து தான் போனான்.

புரியாத பார்வை பார்த்தவனை கண்டு கண்களை துடைத்துக்கொண்டவள் "இதெல்லாம் எப்போ சர்வா மாறும்"...

சர்வேஷ் "எதெல்லாம் மாறனும், எனக்கு புரியல"என்று புருவம் உயர்த்தி கேட்க...

"உனக்கு புரியும் சர்வேஷ், நல்லா யோசிச்சு பாரு "...

சர்வேஷ் "பேசணும்னு முடிவு செஞ்சு தானே இங்க கூட்டிட்டு வந்துருக்க, தெளிவா சொல்லு என்ன பேசணும்... இப்போவே எல்லாம் பேசி முடிச்சுரு, நீ நார்மலா இல்ல எனக்கு பயமா இருக்கு "என்று கூறியவனை வெறுமையாக பார்த்தாள்.

கண்களை துடைத்தவள் "நம்ம நமக்காக எப்போ வாழ்வோம் சர்வா, எப்போ நீ எங்களுக்காக நேரம் ஒதுக்குவ... பழைய படி என்னோட சர்வா எனக்கு எப்போ கிடைப்பான் இது மட்டும் சொல்லிடு "என்றவள் முடிக்குமுன்னே கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது...

அதில் பதறியவன் அவளின் முன் மண்டியிட்டு அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் "நான் உங்க கூட தானே டா எப்போவும் இருக்கேன். எனக்கு நீ, ஆதி உங்க ரெண்டு பேரை விட வேற யார் இருக்காங்க... நீங்க ரெண்டு பேர் தான் என்னோட உயிர் "...

பிரகல்யா "அப்போ எங்களுக்காக நீ என்ன செஞ்சுருக்க அதை சொல்லு"என்றவளின் கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தவன் "நான் சம்பாதிக்கிற எல்லாமே உங்களுக்கு தானே டா, நீ கேட்ட எல்லாம் வாங்கி தந்துருக்கேன். ஆதித் குட்டிக்கும் அவன் விரும்பற எல்லாம் " என்றவனின் பார்வை மகனை ஆசையுடன் வருடி சென்றது...


"அப்போ நீ வாங்கி குடுக்குற துணி, நகை, சாக்லெட்ஸ் இது மட்டும் எங்களுக்கு சந்தோசத்தை குடுத்துருமா? அதுக்காகவா நாங்க உன்னோட இருக்கோம், அப்போ பணத்துக்காக உன்னோட இருக்கோமா"...

அதில் கோபம் கொண்டவன் "இதுக்கு மேல நீ ஏதாச்சும் பேசின அவ்ளோ தான் சொல்லிட்டேன். உங்களுக்காக தானே டி இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்குறேன். நீ என்ன நினைக்குற எப்போவும் உன் காலையே சுத்தி வரணும்னா, இல்லை காதலிச்சப்ப காலேஜ், பஸ் ஸ்டாப்ன்னு சுத்திட்டு உன் பின்னாடியே வருவேனே அப்படியா? நீ ஒண்ணும் குழந்தையில்லை பிரகா, கொஞ்சமாச்சும் யோசிச்சு பாரு , நம்மள நாம தான் பாத்துக்கணும். உன் சைடுலயும் சரி என் சைடுலயும் சரி நமக்கு ஹெல்ப் பண்ண யாரும் இல்லை. நம்மளா முன்னேறுனா மட்டும் தான் உண்டு"...


"என்னை நம்பி நீ இருக்க, ஆதி இருக்கான், இன்னும் ஆறு மாசத்துல நமக்கு இன்னொரு குட்டி வரப்போறாங்க உங்க எல்லாருக்கும் நான் சம்பாதிக்கணும், சேர்த்து வைக்கணும்".

"அடுத்து நமக்கு பொறக்க போறது பெண் குழந்தையா இருந்தா அவளுக்கு சேர்த்து வைக்கணும் எனக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு. அதுக்கு பணம் வேணும்... பணம் இல்லாம இந்த உலகத்துல சர்வைவ் பண்றது எவ்ளோ கஷ்டம்னு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை"...

"நம்ம கல்யாணம் பண்ணப்போ நம்ம கைல எவ்ளோ காசு இருந்துச்சு, என்ன பண்ணோம். நினைச்சு பாரு, எவ்ளோ நாள் காசில்லாம சாப்பிடாம தூங்கிருப்போம். அந்த நிலைமை நாளைக்கு நமக்கு வர கூடாதுனு நினைக்குறேன் அதுக்காக தான் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறேன்"...

"எதிர்பார்ப்புகள் நமக்கான காதலை குறைச்சிரும், அது நடக்க கூடாதுனு தான் நானும் முடிஞ்சவரை உங்களுக்காக நேரத்தை செலவிட முயற்சி பண்றேன் "என்றவனின் குரல் நைந்து போய் ஒலிக்க...


"ஒண்ணு மட்டும் நியாபகம் வச்சுக்கோ உன்னுடைய எதிர்பார்ப்புகளால் நமக்குள்ள எந்த பிரிவும் வர கூடாது. அது நம்ம உறவையே உலுக்கிரும்"...

பிரகல்யா "நீ இப்போ என்னை வார்ன் பண்றியா சர்வா? எதையும் நீ எதிர்பார்ப்புனு சொல்ற, நான் ஒண்ணும் குழந்தை இல்லை. நீ சொல்ற அந்த எதிர்பார்ப்புகள் எனக்கு இதுவரை ஏமாற்றத்தை மட்டுமே தந்துருக்கு, நான் கேக்குறது உன்கிட்ட இருக்கான என்னோட காதலையும் அதுக்கான நேரத்தையும் தான். நீ எப்படி உன்னோட வேலைக்கும் அங்க இருக்கவங்களுக்கும் நேரத்தை ஒதுக்குறியோ அதுல ஒரு பத்து பெர்சென்ட்டேஜ் எங்களுக்காக செலவு பண்ணு.. இடைல ஜஸ்ட் ஒரு மெசேஜ், ஒரு கால்... சாப்டியான்னு கேக்குற ஒரு வார்த்தை "என்றவள் பேச பேச அவனுக்கு அவள் புரிதலும் பேச்சும் எரிச்சலாய் இருந்தது.


"நைட் எப்போவும் உன் கூட தானே இருக்கேன்.உன்னை பார்க்காமலோ ஆதித் குட்டிய கொஞ்சாமலோ என்னோட நாள் எப்போவும் முடிஞ்சதில்லையே... நீ சொல்றது எல்லாம் குழந்தை தனமா இருக்கு. நான் உன் மேல வச்சிருக்க லவ் விட அந்த ஒரு மெசேஜ், கால் உனக்கு அவ்ளோ சந்தோசத்தை குடுக்குதா?"...

"ஜஸ்ட் னு எவ்ளோ ஈஸியா நீ சொல்லிட்ட அதை கூட உன்னால எங்களுக்கு தர முடியல தானே "...

"நீ சொல்ற மாறி நாள் முழுசும் உன் கூடவே இருந்தா பிச்சை தான் எடுக்கணும். நல்லா இருக்கனும், வசதியா வாழனும், யார்கிட்டயும் கையேந்த கூடாது, மத்தவங்க முன்னாடி நாம குறைவா தெரிய கூடாது. நம்மளை பேசினவங்க முன்னாடி நாம நல்லா வாழ்ந்து காட்டணும்."


"மத்தவங்க மத்தவங்கனு அவங்களுக்காக நாம ஏன் வாழனும். இது நம்ம லைப். இருக்கறதை வச்சுக்கோ வாழ ஆசைப்படணும் சர்வா. நாளைக்காகவும் அடுத்த நாளைக்காகவும் இன்னைக்கே சாப்பிட முடியாதுல"...

"எதை எதோட சேர்க்கிற நீ, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் கேள்விப்பட்டதில, என் உடம்புல எவ்வளவு நாளைக்கு இந்த வலு இருக்க போகுது பத்து வருஷமோ இருபது வருஷமோ அதுக்குள்ள வேணுங்கறதை சேர்த்துக்கணும்"...


அதை எதுவும் காதில் வாங்காதவள் "இன்னிக்கு என்ன நாள் சர்வா ?"என்றவளை அவன் யோசனையாக பார்க்க...

"நியாபகம் வரல, இன்னிக்கு தேதி யோசிச்சும் எதுவும் உனக்கு நியாபகம் இல்லை... அப்போ உன்கிட்ட என்னோட இடம் எது சர்வா? இதான் இதை தான் நான் உங்கிட்ட இவ்வளவு நேரம் சொன்னேன். இன்னிக்கு நம்மளோட கல்யாண நாள்... நாலு வருஷம் ஆகிடுச்சு அதுவும் உனக்கு நியாபகம் இருக்காது"என்றவள் மீண்டும் கண்களில் வழிந்த நீரை துடைக்க...


அதில் தன்னையே நொந்து கொண்டவன் "ப்ளீஸ் டி அழாத என்னோட தப்பு தான். நான் வேணும்னே எதுவும் பண்ணல, என்னோட ஒர்க் பிஸி, என்னால ஹேண்டில் பண்ண முடில...நீயாச்சும் எனக்கு நியாபக படுத்தி இருக்கலாமில்ல என்றவன் அவளின் பார்வையை உணர்ந்து

போது விடு இதோட இதை முடிச்சிக்கலாம்.
என்னால முடிஞ்சவரை இனி நான் எதையும் மறக்க மாட்டேன் ரிமைண்டர் போட்டுக்குறேன் "என்றவனை முறைக்க அவளின் முறைப்பில் மீண்டு தலையில் கைவைத்தவன் "சாரி டா சாரி... வா கோவில் போகலாம் "என்றவன் அவளை கெஞ்சி கொஞ்சி அழைத்து செல்ல, கோவிலுக்கு சென்று விட்டு ஹோட்டலுக்கு அழைத்து சென்று மனைவிக்கும் மகனுக்கும் பிடித்ததை வாங்கி குடுத்து அவர்களுடன் நேரத்தை செலவிட "அய்யா ப்பா ஜாயா இக்கு"என்ற மகனின் மகிழ்விலும் மனைவியின் முகத்திலும் கண்ட மகிழ்வை கண்டு தானும் மகிழ்ந்தவன் இரவு வெகுநேரம் கழித்தே வீட்டுக்கு செல்ல, குழந்தை அப்போதே உறங்கி விட்டிருந்தான்.


பிரகல்யா தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து கட்டிலில் அமர, மகனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தவன்"இந்த கொஞ்ச நேரம் நான் இவன் கூட இருந்ததுல எவ்ளோ சந்தோசமா இருந்தான். இதுக்கு முன்னாடி இவ்ளோ சந்தோசமா நான் அவனை பாக்கவே இல்லை. குழந்தைக்கே இவ்ளோ ஏக்கம் இருக்கும் போது, உனக்கு என்கிட்ட எவ்ளோ ஏக்கம் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன் என்னை மன்னிச்சிரு"என்றவனின் நெற்றியில் முட்டி சிரித்தவளுக்கு அத்தனை நிறைவாய் இருந்தது.

ஆனால் அவளின் மகிழ்வுக்கு ஆயுள் என்னவோ அந்த இரவு மட்டுமே...
 
Last edited:
Joined
Feb 17, 2025
Messages
6
காலை ஆறுமணி அடிக்கும் போதே காலிங் பெல் சத்தம் கேட்க, நேற்றைய அலைச்சலின் காரணமாக மூவரும் தங்களை மறந்து உறங்கி கொண்டிருக்க, அழைப்புமணி விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.

முதலில் கண் விழித்தவளோ எழுந்து கொள்ள பார்க்க, சோர்வாக இருந்தது. அவளுக்கு ஒரு மாதமாகவே அதிகமாக சோர்வாய் இருந்தது.

அவளுக்கு அருகில் சர்வேஷும் ஆதித்தும் அணைத்துக் கொண்டு உறங்க அவர்களை காணக் காண தெவிட்டவில்லை அவளுக்கு...

இருவரின் தலையையும் கோதியவள் நெற்றியில் முத்தம் வைத்து விலக, சர்வேஷ் அவளை இழுத்து அனைத்துக்கும் கொண்டான்.

"சர்வா ப்ளீஸ் விடேன், யாரோ ரொம்ப நேரமா பெல் அடிக்கிறாங்க" என்று விலகப் போக...

அவனோ "பால் கார அண்ணாவா இருக்கும் டி, நீ தூங்கு"என்று கூற, இப்போது மீண்டும் அழைப்பு மணி அலற தொடங்கியது.

அவனிடம் இருந்து விலகியவளோ "அவரா இருந்தா நான் வரலைனா பக்கத்து வீட்டுல தந்துட்டு போய்டுவாரு, இவ்ளோ நேரம் அடிக்க மாட்டாங்க" என்று கூறியவள் வேகமாக செல்ல போக, அப்போது கதவு பட பட வென்று தட்டப்பட்டது.

அதில் பயந்து போனவள் சர்வாவை பார்க்க, அவனுக்குமே சற்று கலவரமாக இருந்தது. பிரகாவுக்கு முன்பாக அவன் முன்னேறி சென்று கதவைத் திறக்க, சர்வாவுக்கு இன்ப சாரல் வீச, அவளுக்கு நெஞ்சு வலி வராதது மட்டுமே குறை.பின்ன அவர்கள் திருமணம் செய்து அவர்கள் வீட்டுக்கு சென்ற போது ஆடிய ஆட்டம் என்ன இப்போதும் அவளுக்கு தேகம் சிலிர்த்தது.


அங்கே எரிச்சலுடன் நின்று இருந்தார் சர்வாவின் அன்னை அம்பிகா.

அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவர் "எவ்ளோ நேரமா பெல் அடிக்குறேன். கதவை திறக்க இவ்ளோ நேரமா, ஒரு குடும்ப பொண்ணு காலங்காத்தால எழுந்திருக்குறது இல்ல, வெளியே போய் பாருங்க மார்கழி மாசம் எல்லார் வீட்டு வாசலையும் வாச தெளிச்சு கோலம் போட்டு இங்க தண்ணியே தெளிக்காம இருந்தா எப்படி மகாலக்ஷ்மி வீட்டுல வந்து விளக்கேத்த, தரித்திரம் தான் வந்து சேரும் "என்று கடைசி வார்த்தை அவளை பார்த்து கூறியவர் வாரியலையும் வாளியையும் எடுத்து சென்று வாசல் தெளித்து கோலம் போட்டு உள்ளே வர, அவர் பேசியது எல்லாம் அவனுக்கு பெரிதாய் தெரியவே இல்லை.

ஐந்து வருடங்களுக்கு பின் தாயை அதுவும் தன் வீட்டில் கண்டது அவனுக்கு எல்லை இல்லாத மகிழ்வை குடுத்தது.

அவர்களின் வீட்டு வாசலில் ஒரு பெண்ணை கண்டதும் பக்கத்து வீட்டு பெண்ணோ வந்து பேசிவிட்டு பாலையும் கொடுத்துச் செல்ல, அதை வாங்கி கொண்டவர் நேராய் உள்ளே வர, அவர் பேசியதிலே அரண்டு போய் நின்று இருந்தவள் வந்து அவர் கையில் இருந்த பாலை வாங்க முற்பட இலாவகமாக நகர்ந்து சென்றவர் சமையலறைக்குள் தட்டுத் தடுமாறி தேவையானதை எடுத்து காபி கலக்கியவர் வெளியே வர அதுவரை அவன் தாயை மட்டுமே பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.

இருவருக்கும் காபியை கையில் தர, அவனோ அதை வாங்காமல் "அம்மா சாரி மா"என்று கூற...

அவனை பொறுமையாய் நிமிர்ந்து பார்த்தவர் "அஞ்சு வருஷம் அப்புறம் அம்மாவை பாக்குற அப்போ உனக்கு சாரி தன் சொல்ல தோணுதா அப்போ நீ தப்பு தான் பண்ணிட்டேன்னு உனக்கு தெரியுது தானே"என்றவரின் கேள்வியில் அவன் தலைகுனிய அவளுக்கு நேற்று இருந்த சந்தோஷமும் நிறைவும் சுத்தமாய் துடைத்தது போல் ஆனது.

அவளின் முக மாற்றத்தை கவனித்த அம்பிகா "ஏய் பொண்ணே நீயும் வந்து உக்காரு"என்று அவளை அழைக்க, அதற்கு மேல் நிற்பதற்கு அவள் உடலும் இடம் கொடுக்காமல் போக, சர்வாவின் அருகில் வந்து அமர...

அம்பிகா "உனக்கு மன்னிப்பு கொடுக்கவோ உன்னை மன்னிப்பை ஏத்துக்கவோ நான் வரல, எனக்கு உன்னை பாக்கணும்னு தோணுச்சு அதோட சந்தியாவுக்கு கல்யாணம் வச்சிருக்கோம் அடுத்த வாரம்"அவர் முடிப்பதற்குள் "நம்ம சந்தியாவுக்கு கல்யாணமா அவ குழந்தைமா, அதுக்குள்ள என்ன பொறுமையா பண்ணலாம்ல"...

"அவளுக்கு இருபத்திரண்டு வயசு ஆகுது, உன் பொண்டாட்டிய விட ரெண்டு வயசு தான் கம்மி. இவ இப்போவே இடுப்புல ஒண்ணு வயித்துல ஒண்ணு வச்சிட்டு இருக்கா,அவளுக்கு இப்போ செஞ்சா தான் சரியா இருக்கும். நல்ல இடம் வரும் போதே கல்யாணத்தை பன்னி அனுப்பிடணும். இதுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாம் பொண்ணோட கூட பிறந்தவன் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டானாமே அப்போ உங்க பொண்ணும் அப்டி தான் இருப்பான்னு நாலஞ்சு சம்மந்தம் தட்டி போயிருச்சு. இதுக்கு மேலையும் விட்டா நீ செஞ்ச வேலையால என் பொண்ணுக்கு ஒரு நல்லதும் நடக்காம போயிரும்னு பயமா இருக்கு. அதான் உங்கப்பா உன்னையும் இந்த பொண்ணையும் வர சொன்னாங்க"என்று நீண்ட உரையை முடிக்க...

"அப்புறம் வரும் போது சும்மா வந்து நிக்காத, நல்லா தானே சம்பாதிக்குற உன் தங்கச்சிக்கு அஞ்சு பவுன் ஆச்சும் போடணும். அதுக்கேத்த மாதிரி வந்துருங்க... அப்புறம் பத்திரிக்கை இதோ இந்த பைல இருக்கு எடுத்து அட்ரஸ் பாத்துக்கோங்க, நேரா வீட்டுக்கு வந்து சொந்தக்காரங்க முன்னாடி என் மானத்தை வாங்காம மண்டபத்துக்கு வந்து செய்முறையை செஞ்சிட்டு போய்டு"என்றவர் பெயருக்கு கூட அவனிடம் பத்திரிகையை எடுத்து கையில் தராமல், அவன் செய்யப்போகும் சீருக்கு அவர் போட்ட கோலமும் காபியும் ஈடு என்பது போல சென்று விட்டார்.

சர்வாவுக்கு மொத்தமும் புரிந்து போனது ஆக தன்னை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு தான் வந்துள்ளார் என்று...

அமைதியாய் மனைவியை பார்த்து தலையாட்டி விட்டு கண்களை மூடியவனின் கரங்களில் அவன் அவளின் பிறந்தநாளுக்கு வாங்கி கொடுத்த ஆறுபவுன் நெக்லஸ் இருந்தது.

வேகமாய் திரும்பி மனைவியை நோக்க, அவளோ இத பத்தி யோசிக்க வேணாம். கல்யாணத்துக்கு போகலாம் இது உன்னோட கடமை சர்வா அவங்களோட எதிர்பார்ப்பு இல்லை புரிஞ்சுதா?" என்றவளின் கேள்விக்கு மனம் தெளிந்த நிறைவான புன்னகையே பதிலாய் கிடைத்தது.


ஏக்கங்கள் தீரும்..
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
பணம் சேர்ந்தாலே பிடிக்கவில்லை என்றாலும் சொந்தம் தன்னைப்போல் வந்து சேரும். காதல் மனம் புரிந்தவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் சர்வா போல்தான் உள்ளது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் பவித்ரா💐💐💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top