Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
சிவரஞ்சனியும் அவனை காதலித்தாள்.
தீபாவளி அன்று எல்லோரும் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் .பட்டாசு வெடித்து, புதுத் துணிகள் உடுத்தி சந்தோசமாக இருப்பார்கள். ஒவ்வொரு வீடுகளில் கறி எடுத்து சமைத்து குழந்தை குட்டிகளோடு மகிழ்ச்சியுடன் இருப்பபார்கள்.தீபாவளி அன்று சிவமணி என்று விடியற்காலையில் அஞ்சு மணிக்கு எல்லாம் மூணாறு பேருந்து ஏறி விட்டான். சிவமணி எதற்காக ஏறினான்,என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இரவு முழுவதும் சிவமணி தூங்கவில்லை. ஏனென்றால் சிவரஞ்சனிடம் இருந்து அப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஒரே முடிவாகிவிட்டது. அவளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று சிவரஞ்சனி என்ன சொல்லி இருப்பாள். சிவமணி மூணாறு சென்றால் தான் தெரியும். விடியற்காலை மூணு மணிக்கு எல்லாம் எழுந்து குளித்துவிட்டு தனக்கு பிடித்தமான சட்டைக்கு தகுந்தாற் போல் பேண்ட் அணிந்து கொண்டு பல்லடம் பேருந்து நிலையத்தில் உடுமலை பேருந்துக்காக காத்திருந்தான்.மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. பேருந்து நிலையத்தின் மஞ்சள் நிற விளக்கின் ஒளி பிரகாசமாய் பேருந்தை பிரவேசித்துக் கொண்டிருக்கிறது.கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் பத்து நிமிடங்களுக்கு ஒவ்வொரு முறை வந்து கொண்டிருக்கின்றன. பொள்ளாச்சி பேருந்தும் அடிக்கடி வந்து போகின்றன. ஆனால் உடுமலை பேருந்து வரவே இல்லை. உடுமலை சென்றால் தான் மூணாறு செல்ல அங்கிருந்து பேருந்து ஏற முடியும். சிவமணி தன் கையில் கட்டி இருக்கும் கருப்பு நிற கை கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொள்கிறான். தனது பாக்கெட்டில் இருக்கும் செல்போனை எடுத்து வாட்ஸ் அப் பக்கம் சென்று நொண்டி கொண்டு நின்று கொண்டிருக்கிறான். சரியாக நாலு மணிக்கு உடுமலை பேருந்து வரும் என்று ஆட்டோக்காரர்கள் சொல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏறி பின்செட்டில் அமர்ந்து கொண்டான்.. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிவரஞ்சினியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியதுதானே ஏன் ! இவ்வளவு நாள் கழித்து இந்த பதிலை சொல்கிறாள் என்று சிவமணி நினைத்துக் கொண்டே வந்தான். கண்டக்டரிடம் உடுமலை செல்ல எவ்வளவு நேரமாகும் என்று கேட்க ஒரு மணி நேரத்தில் சென்று விடும் என்று அவர் சொன்னார். பொழுது விடியும் சமயம். அஞ்சு முப்பதுக்கு மணிக்கு சிவமணி உடுமலை வந்து விட்டான். அவளை பார்த்தே தீர வேண்டும் என்று ஒரே முடிவு தான். சிவமணிக்கு முப்பது வயது . இது நாள் வரை மூணாறு சென்றதில்லை முதன்முதலாக சிவரஞ்சனிக்காக மூணாறு செல்கிறான். பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டான். பத்து நிமிடத்திற்கு பின் பேருந்து குறிஞ்சிக்கோட்டையை தாண்டி சென்று கொண்டிருக்க உயரமான மலைகள் தெரிய ஆரம்பித்தன….. மூணாறு சென்று அவள் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என்ற ஒரே யோசனை இன்னைக்கு வேற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ன செய்வது. ஏது! செய்வது என்ற ஒரே யோசனையில் அமைதியாக யோசித்தான். யோசித்துக் கொண்டே இருந்தான். ஏற்கனவே அவள் அனுப்பிய முகவரி அவனிடம் பத்திரமாக இருந்தது, அது அவன் தம்பி வேலை செய்யும் கம்பெனி முகவரி. எது எப்படிவேண்டுமானலும் இருக்கட்டும். மூணாறு சென்று பார்த்துக் கொள்ளலாம் ,இன்று எப்படியாவது அவளை பார்த்தே தீர வேண்டும். என்ற ஒரே நம்பிக்கை தான்..உயரமான மலைகள்.மலைகளை சூழ்ந்து
உயரமான நெடிய மரங்கள்.. பேருந்து சின்னாறு தாண்டி சென்று கொண்டிருக்க…சிவரஞ்சனி கிட்டத்தட்ட பத்து மாதங்களாக சிவமணியுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் முன்பு அவனை வர சொல்லி பார்த்து விட்டு தான் செல்வாள். மூன்று மாதங்களாக விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் முன் அவள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஒதுக்கி கொண்டே வந்தாள்.சிவரஞ்சனி. கேரளாவில் விக்டோரியா கல்லூரியில் முதுகலைத் தமிழ் இரண்டமாண்டு படித்து வருகிறாள்.
விடுமுறைக்கு வரும் போதெல்லாம் இருவரும்அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். பொள்ளாச்சியில் அவளுக்காக காத்திருப்பான் சிவமணி. ஒரு நாள் அப்படி காத்திருக்கும் பொழுது அவள் பேருந்தை விட்டு இறங்கியவுடன் நேராக ஜவுளி கடைக்கு சென்று அவளுக்கு அழகிய ,அவளுக்கு பிடித்த நேரத்தில் சேலை எடுத்துக் கொடுத்தான். மறுநாளே அந்த சேலையை கட்டி சிவமணிக்கு போட்டோ அனுப்பினாள். போட்டோவை பார்த்து அழகா இருக்க ஐ லவ் யூ என்றான்.
சிவரஞ்சினியும் பதிலுக்கு என்ற பதிலை வாட்ஸ் அப்பில் அனுப்பினாள்.
மலைகளுக்கிடையே பேருந்து சென்று கொண்டே இருக்கிறது. சிவமணிக்கு மூணாறு போய் எப்படி அவளை கண்டுபிடிப்பது என்ற ஒரே ஓசனையில் பேருந்தில் அமர்ந்திருந்தான்.
அவளிடம் போய் என்ன சொல்வது! எப்படி பார்ப்பது !அவளை வீட்டில் பார்த்ததுமே எப்படி பேசுவது !என்ன பேசுவது !அவள் வீட்டில் அனைவருமே இருப்பார்கள். என்ற பயம் வேற சிவமணிக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. என்ன ஆனாலும் சரி அவளை பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தான் பயணித்துக் கொண்டிருக்கிறான் சிவமணி.சிவமணியிடம் சிவரஞ்சனி அவருடைய பழைய வாழ்க்கையின் கதைகளை சொல்லியும் இருக்கிறாள். இருந்தாலும் பரவாயில்லை நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்று மனப்பூர்வமாக உறுதியளித்தான் சிவமணி.
நாலு பக்கமும் உயர்ந்த மலைகளுக்கு இடையே பேருந்து நின்றது. பக்கத்தில் இருந்தவரிடம் இதுதான் மூணாற என்று கேட்டான். பதிலுக்கு அவர் ஆமா இதுதான் என்றார். பேருந்தை விட்டு இறங்கி சுற்றிலும் முற்றிலும் பார்த்தான். இவள் அனுப்பிய முகவரியை செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தான். நேராக ஆட்டோக்காரர்களிடம் சென்று முகவரியை காண்பித்து இது எங்க இருக்கு என்று கேட்டான் சிவமணி.
ஆட்டோக்காரர் வயது சற்று குறைந்தவர் அதனால் முகவரி சரியாக தெரியவில்லை பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரருடன் கேட்க அவர் அவனுக்கு புரியிற மாதிரி பதிலும் சொன்னார். சாலை ஓரத்தில் கார்கள் தென் பட்டன அவை சுற்றுலா பயணிகளுக்கான வாகனம் என்பது தூரத்தில் இருந்து பார்க்கும் போதே சிவமணிக்கு தெரிந்தது. ஆட்டோக்காரரிடம் எவ்வளவு என்று கேட்டான் சிவமணி. இருபது ரூபாய் பதிலை சொல்ல ஆட்டோக்காரர் சரி என்றான் சிவமணி. ஏறுங்கனே என்றான் ஆட்டோக்காரர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான் .அங்கு ஒரு டீ டெலிவிஷன் இருக்குது அங்க வந்து பெரும்பாலும் ஊனமுற்றவர்கள் தான் வேலை செய்றாங்க அவங்க தங்கறதுக்கு அங்கே பக்கத்துல இடம் இல்ல வேறொரு பக்கத்தில் இடம் இருக்குது சொல்லி கொண்டு வந்தான் ஆட்டோகாரன். சிவமணிக்கு ஒண்ணுமே புரியவில்லை! சரி என்ன ஆனாலும் போங்க பார்க்கலாம் என்று ஒரு முடிவு தான் இருந்தான்.
அண்ணே இன்னொன்னு டி டெலிவிஷன் இருக்குது. எங்க போலாம்னு நீங்க சொல்ற இடம்அதுவாகதான் இருக்கும் என்று சொன்னான் ஆட்டோக்காரன்.
ஆட்டோவை திருப்பிஅந்த இடத்திற்கு ஓட்டினான் ஆட்டோக்காரன்.
அண்ணே நீங்க தமிழ்நாடா என்றான் ஆட்டோக்காரன்.ஆமா என்றான் சிவமணி.
எந்த ஊரு அண்ணே..
நான் மதுரப்பா என்றான் சிவமணி.
ஆட்டோ சென்று கொண்டே இருந்தது டீ டெலிவிஷன் கம்பெனியில் இறங்கி வாட்ச்மேனிடம் கேட்டுப் பார்க்கலாம் அண்ணே என்று ஆட்டோவைவிட்டு இருவரும் இறங்கினார்கள். சிவமணி நேராக வாட்ச்மேனிடம் முகவரியை காண்பித்தான்.
இது பிரகாஷ் வீடு தானே இங்கே தான் அவர் சேலரி அக்கவுண்ட்ல வேலை பாக்குறாரு அந்த தெரியுது பாருங்க மேல மல அதுல இருந்து இரண்டாவது வீடு.
வேணுமுன்னா ஆபீஸ்ல அவரு போன் நம்பர் கேட்டு வாங்கிக்கோங்க என்று சொன்னார் வாட்ச்மேன். சிவமணி வேண்டாம் சார் நான் நேர்ல போய் பாத்துக்குறேன் என்றான்.
சிவமணி செல்போனில் படம் பிடித்து உயர்ந்த மலைகள் சிவரஞ்சனிக்கு அனுப்பினான் . அவள் வாட்ஸ் அப்பை பார்த்துவிட்டு my husband come in my come சிவமணிக்கு அனுப்பினாள். சிவரஞ்சனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சிவமணி எதிர்பார்க்கவே இல்லை. ஆட்டோ மேல மல பக்கத்தில் போய் நின்றது. இங்கு பிரகாஷ் வீடு என்று கேட்டான் வெளியே இருந்த வீட்டுக்காரரிடம் சிவமணி. ஓ அதுவா வேலை இரண்டாவது வீடு என்று சொன்னார் அந்த வீட்டுக்காரர்.
ஆட்டோக்காரனிடம் இருபது ரூபாய் எடுத்து நீட்டினான் சிவமணி. உன்னைய ரொம்ப தூரம் அண்ணே.. நூறு ரூபா குடுங்க அட்ரஸ் ரொம்ப கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சி இருக்கு. என்ன செய்வது என்று தெரியவில்லை .தனது சட்டை பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்து ஆட்டோக்காரனிடம் நீட்டினான்.
பிரகாஷ் என்ற பெயரை சொன்னால் இரண்டு மூன்று பேர் வீட்டுக்காரர்கள் பெயர் அதுவாக இருக்கும் என்று நினைத்தான் சிவமணி. அதனால் சிவரஞ்சனியின் அப்பா பெயரையும் அம்மா பெயரையும் சொன்னவுடன் வீட்டைத் தெளிவாக சொன்னார்கள் பக்கத்தில் இருந்தவர்கள்.கதவைத் தட்டினான் சிவமணி. இரண்டு மூணு முறை தட்டினான் .
தகரம் போட்டோ வீடு .வெளியில் ஒரு பப்பி நாய் ஒன்று ஓடிக்கொண்டு கத்தி கொண்டு இருந்தது. வீடு தாழிட்டு இருந்தது. வாசற்படியில் செருப்பல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாசலுக்கு முன் ரோஜா செடிகள் ,தேயிலை செடிகள் ,டேலியா பூ செடிகள் வளர்ந்து பூக்களோடு பூவாக நிமிர்ந்து நின்று பசுமையாக இருந்தது.சிவமணி கதவை தட்டி கொண்டே இருந்தான். இருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் கதவை திறந்தான்.
யாரு? என்று கேட்டான் அந்த இளைஞன்.
சிவரஞ்சனி இருக்காங்களா என்றான் சிவமணி.
அவன் மேலேயும் கீழேயும் சிவமணியை பார்த்தான்.
அதான்பா சிவரஞ்சனி கூட பனிமலரும், கவி மலரும் ரெண்டு பேர் இருக்காங்க..
அவங்க குழந்தைங்க என்றான் சிவமணி.
இல்ல மாதிரி பதிலே சொன்னான் அந்த இளைஞன்.வீட்டிற்கு
உள்ளே போய் திரும்பி வந்தான் இளைஞன்.
சிறிது நேரத்தில் சிவரஞ்சனி வெளியே வந்தாள். வாங்க வாங்க.. என்றால் சிவமணியை பார்த்து
அவளுக்கு பிடித்தமான பிங்க் கலர் நைட்டியுடன் இருந்தாள். காலில் அதே கலரில் நகத்துக்கு நக பாலிஷ் தீட்டு இருந்தாள். தெரிந்துவிட்டு இறங்கி நேராக பேக்கரிக்கு சென்று வாங்கிய ஸ்வீட் டை சிவரஞ்சனியின் மகளான பணிமலரிடம் தீபாவளி நல்வாழ்த்துகள் என்று சொல்லி கொடுத்தான்.
பனி மலரும் வாங்கிக்கொண்டு சிவமணியே பார்த்துக்கொண்டு நின்றாள். வா என்று கூப்பிட்டான் சிவமணி அவள் சிவமணியை பார்த்துக் கொண்டிருந்தாள். சிவரஞ்சனி பயப்படுற கொஞ்சம் என்று சொன்னாள்.
எங்க அக்கா என்றான் சிவமணி.
பனிமலர் பதில் சொல்ல வில்லை.
சிவரஞ்சனி இருக்கா என்றாள்.பனிமலர் அஞ்சாம் வகுப்பும், கவிமலர் ஆறாம் வகுப்பும் மூணாறில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள்.
சிவமணி வீட்டை சுற்றி சுற்றி பார்த்தான். இரண்டு பெட்ரூம் .ஒரு பெரிய கிச்சன் ரூம்.பேசிக்கொண்டு இருக்கும்போது சிவரஞ்சனி அம்மா உள்ளே இருந்து வர..அம்மா இவரு..
ஈரோடுல வேலை பாக்குறாரு பூம்பாறை வரை வந்தாரா அதுதான் பாத்துட்டு போலாம்னு வந்திருக்கிறார் என்று அம்மாவிடம் சிவரஞ்சனி கூற சரி சரி ... டீ ஏதும் போட்டு கொடு என்று சொல்லிக் கொண்டு கட்டைப்பை எடுத்துக்கொண்டு வெளியே …நீயும் வந்துரு என்று சொல்லிவிட்டு வேக வேகமாக நடக்க தொடங்கினாள். சிவரஞ்சனி அம்மா.பிரகாஷ் அவரது மனைவியும் இப்பொழுதுதான் எழுந்து வந்திருந்தார்கள்.
இது அண்ணா இது அண்ணனோட மனைவி சிவமணியை பார்த்து சிவரஞ்சனி சொன்னாள்.
பிரகாஷ் சிவமணிக்கு எதிராக உட்கார்ந்தார்.
எந்த கிளாஸ் எடுக்குறீங்க என்று கேட்டார் பிரகாஷ். லெவன்த் ,டூவத் என்றான் சிவமணி.
சிவரஞ்சனி டீயும், தட்டில் பணியாரமும் போட்டுக் கொண்டு வந்தாள்.
கொடுத்துவிட்டு ரூமுக்கு சென்று விட்டாள்.
பத்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விட்டான் சிவமணி. சரி நான் கிளம்புறேன் என்றான் சிவமணி.
கிளம்பும் முன் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு சரி நான் கிளம்புறேன்.. சொல்லி பணி மலருக்கும், கவி மலருக்கும் பாய் பாய்…என்று கையை காட்டினான். சிவரஞ்சனி சிவமணியே பார்த்துக்கொண்டு நின்றாள்.
தனது ரூமுக்கு சென்று சிவ மணி எடுத்துக் கொடுத்த, சேலகளை எடுத்துப் பார்த்தாள்.
சிவரஞ்சனி அறியாமலே கண்ணீர் துளிகள் சேலையை நனைத்திருந்தன.
-- கோம்பை மா.மணிகண்டன்.