New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 14
- Thread Author
- #1
நேரம் காலை 11:00 மணி
அன்று வியாழக்கிழமை அந்த ஊரில் வார சந்தை நடைபெறும் என்பதனால் அன்று பிச்சைகாரர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
எப்படி ஒரு கடைக்கு ரெகுலர் கஸ்டமர் இருப்பார்களோ அதே போன்று தான் அன்றைய தினம் அந்த பிச்சைக்காரர்கள் அந்த ஊருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அவர்களுக்காக அனைத்து கடைகளிலும் சில்லறை தனியாக எடுத்து வைப்பது வழக்கம், அப்படி வருபவர்களில் சிலர் இன்முகமும், சிலர் வன்முகமும் கொண்டிருப்பர்.
பிச்சைக்காரர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிச்சை இடும் கடைக்காரர்களும் இந்த இருமுகத்தினுள் அடங்குவார்கள்....
சில இன்முக கடைக்காரர்கள் இன்முக பிச்சைக்காரர்களிடம் பேசி பழகுவது வழக்கம். அந்த வழக்கம் அவர்களை நல்ல நண்பர்களைப் போலவும் ஆக்கிவிடும் அப்படிப்பட்ட இரண்டு இன்முக நண்பர்களுக்கு இடையேயான இடைப்பட்ட நாள் சந்திப்பு தான் இந்த பதிவு.
அன்று அந்த கடைக்காரன் அருகில் இருக்கும் கடைக்கு செல்லும் வழியில் வாரம் தவறாமல் தனது கடைக்கு வந்து தர்மம் வாங்கி செல்லும் அந்த பிச்சைக்கார பெண்மணியை பார்க்கிறான், பொதுவாகவே அவரிடம் சற்று நகைச்சுவையாக பேசி பழக்கம் இருப்பதனால் அவரிடம் சாதாரணமாக தனது பேச்சை தொடங்கினான் கடைக்காரன்,
" எக்கா என்ன இன்னைக்கும் இந்த பக்கம் தலையை காட்டுன மாதிரி இருக்கு "
பதிலுக்கு அந்த பிச்சைக்கார பெண்மணியிடம் சிரிப்பு மட்டும்.
" என்னக்கா சிரிக்கிறீங்க இந்த வாரம் கலெக்ஷன் பத்தலையோ திரும்ப இன்னொரு ரவுண்டு வந்துடலாம்னு வந்துட்டீங்களா என்ன? "
" ம்ம் ஆமா யா " சிறு புன்னகையோடு இரத்தின சுருக்கமாக முடித்து கொண்டாள் அந்த பிச்சைக்காரி.
இவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அந்த பிச்சைக்காரியிடம்,
" சரி கா " என்று சொல்லி விடை பெற்று கொண்டதை போல் அவனது வேலையை பார்க்க கிளம்பினான் .
நேரம் மெதுவாக கடந்தது மணி இப்போது மதியம் 3:30 ஆகியிருந்தது,
அந்த கடைக்காரன் அந்த பக்கம் மீண்டும் வர பிச்சைக்காரி அங்கேயே அமர்ந்து இருந்தாள், அவளை கடந்து வேகமாக நடந்த கால்கள் அவளை பார்க்கவும் தனது வேகத்தை நிறுத்தி கொண்டது , அவனது கண்கள் பிச்சைக்காரியை நோட்டம் பார்த்தது.... பார்த்ததும் தெரிந்தது அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒரு துயர் நிறைந்த உணர்வு அதை கண்ட பின் அவளை அப்படியே கடந்து செல்வதில் ஏனோ அவனுக்கு உடன்பாடு இல்லை அதனால் அவளிடம் என்ன ஏது என்று விஷயத்தை கேட்டுவிடலாம் என்ற தீர்க்கமான முடிவோடு அவளின் அருகில் சென்றான்....
" அக்கா "
" ..................... "
" எக்கா " சற்றே குரல் உசந்திருந்தது
" ம்ம் என்ன தம்பி " தனது சிந்தனை கலைத்து கேட்டாள் பிச்சைக்காரி
" என்ன கா ரொம்ப நேரமா இங்கையே உட்கார்ந்து இருக்க முகம் வேற ஒரு மாதிரி இருக்கு? "
" அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி "
" எக்கா உன் முகமே சொல்லுது ஏதோ பிரச்சனை இருக்குன்னு ஆனா நீ ஏன் ஒன்னும் இல்லன்னு சொல்லுற "
" அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பா "
அவன் விடுவதாக இல்லை காரணம் அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று அவனது ஆழ்மனம் அடித்து கூறியது. தன்னால் முடிந்த உதவியை அவளுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவளது மனதை தொடும் வண்ணம் அடுத்த கேள்வியை அவளை நோக்கி வீசினான்,
" அக்கா உனக்கு ஒருவேளை சாப்பாடு போட்டவன் என்கிற முறையில, அந்த உரிமையில கேக்குறேன் நீ என்கிட்ட உண்மையை சொல்லு. "
அவளிடம் மௌனம்.
" உனக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு நல்லா தெரியுது அதை நீ மறைக்கிறன்னும் தெரியுது,, தயவு செஞ்சு என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லு கா என்னால முடிஞ்ச உதவிய உனக்கு கண்டிப்பா பண்றேன் "
அவனது பேச்சில் அக்கறை மிகுந்து இருந்தது ஆனால் அவளுக்கு தான் அதை முழுமையாக நம்ப முடியவில்லை அதற்கு காரணம் அவளது கடந்த காலமாக கூட இருக்கலாம்.
ஏன் இன்று இவள் இப்படி வந்து அமர்ந்திருக்க காரணமும் இவனைப் போன்று யாராவது ஒருவர் கொடுத்த பொய்யான நம்பிக்கையாக கூட இருக்கலாம், அதன் காரணமாக
அவள் அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவளது அமைதி அவனுக்கு எதையோ உணர்த்தியதை போல் உணர்ந்தான் அதற்கு மேல் அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை பேசவும் இல்லை அமைதியாக அவளிடமிருந்து சிறிது இடைவெளி விட்டு அவனும் அமர்ந்து கொண்டான்....
' நீ சொல் என்று நான் வற்புறுத்த போவதில்லை. ஆனால் நீ சொல்லாமல், உன்னிடம் என்ன பிரச்சனை என்று தெரியாமல் இங்கிருந்து நான் நகரமாட்டேன் என்பதை அவளுக்கு குறிப்பால் உணர்த்தும் பொருட்டு அவன் அப்படியாக அவளின் அருகில் அமர்ந்திருந்தான். '
நேரம் மெதுவாக கரைந்து கொண்டிருந்தது அவளும் எதுவும் பேசவில்லை அவனும் அப்படியே அமர்ந்து இருந்தான்.
அந்த மௌன நேரம் அவளை, அவனது செயலை பற்றி சற்று சிந்திக்க வைத்தது,
' யார் இவன்??
எதுக்காக நம்ம கிட்ட வந்து உட்கார்ந்து நம்ம பிரச்சனையை பத்தி கேட்குறான்??
இவனுக்கு அதை பத்தி என்ன அக்கறை?
நம்ம பிரச்னை பத்தி சொன்னா இவன் என்ன தீர்த்தா வைக்க போறான்??
ஒருவேளை இவன் நல்லவனா இருப்பானா??
அதெப்படி அப்படி இருப்பான் இவனும் மனுஷன் தான, கொஞ்சம் நேரம் பாவம் பாக்குற மனுஷன் ஜென்மம் அடுத்த கொஞ்சம் நேரத்தில தன்னோட சுய நலத்தை பார்த்துட்டு போயிடும் என்று என்னும் போதே அவளது இதழ் ஏளன புன்னகை ஒன்றை உதிர்த்தது.'
அவளது மனம் அவனை நம்ப மறுத்தது... அதனால் அவன் இருக்கும் திசையை கூட அவள் பார்க்கவில்லை... ஆனாலும் மனித மனம் அத்தனை எளிதில் நம்மை விட்டு விடாதே நமக்கு அருகில் இருப்பவர்கள் நமக்கே தெரியாமல் நம்மை பார்த்தாலும் நமது உள்ளுணர்வு காட்டி கொடுத்து அவன் உன்னை பார்க்கிறான் என்று எச்சரிக்கை செய்து நம்மையும் அவர்களது பக்கம் திருப்பி விடும் அதுபோல நமக்காகத்தான் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான் என்று தெரியும் பொழுது அவன் நம்மளை எந்த கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள அவர்களின் பால் நம் மனம் நம் கண்களை அணிச்சையாகவே திருப்பிவிடும் அப்படித்தான் பிச்சைக்காரியின் கண்களும் கடைக்காரன் பக்கம் திரும்பியது,
அவன் அதே நிலையில் அப்படியே அமர்ந்திருக்க இப்போது கடைக்காரன் மீது அவளுக்கு வெறுப்பு தான் வந்தது அதன் வெளிப்பாடாய் அவளது சிந்தனை,
' யாருக்கு என்ன வந்தா இவனுக்கு என்ன?
இவன் வேலைய பாத்துட்டு போக வேண்டியது தானே.
சம்பந்தமில்லாம அடுத்தவங்க பிரச்சனையில மூக்கை நுழைக்க நினைச்சு இப்படி வந்து உக்காந்து நம்மள இங்க இருந்து கிளம்ப வச்சிட்டானே ' என்று மனதில் மீண்டும் எண்ணம் கொண்டு அந்த இடத்திலிருந்து நகர ஆரம்பித்தாள் அந்த பிச்சைக்காரி....
' தான் இத்தனை கேட்டும் அவளுக்கு அருகில் அமர்ந்தும் கூட என்னிடம் அவள் எதையும் சொல்லவில்லையே அப்படி அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கும்

'
அவனது மூளை வேகமாக வேலை செய்தது ஆனால் அந்த வேகத்தால் உபயோகம் தான் இல்லாமல் போனது.
' ஒருவேளை இப்படி இருக்குமோ?
இல்லனா அப்படி இருக்குமோ?
இப்படி தான் இருக்கனும். ஒருவேளை இப்படி இல்லனா??? என்று மாற்றி சிந்தனை மட்டும் செய்ய முடிந்ததே தவிர அவளுக்கு இது தான் பிரச்சனை என்ற முடிவுக்கு மட்டும் அவனால் வர முடியவில்லை, காரணம் அவள் இவனிடம் முகத்தை கூட காட்டாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றது தான்.
' ச்சே என்னன்னு நம்மளால கண்டுபிடிக்க முடியலையே அந்த அக்காவும் ஒன்னும் சொல்லாம கிளம்பி போயிட்டாளே பாதகத்தி என்று வாய் விட்டு புலம்பிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான் அந்த கடைக்காரன் வேறு வழி ஏதும் இல்லாமல்.
கடைக்காரன் நல்லவன் தான் ஆனாலும் அவன் கிட்ட தன்னோட பிரச்சனையை சொல்றதுக்கு அந்த பிச்சைக்கார பெண் தயாராக இல்லை அதற்குக் காரணம் இந்த சமுதாயம் அவளுக்கு இழைத்த நம்பிக்கை துரோகமும் அதன் விளைவும் தான்.
இந்த சமுதாயம் எதை நோக்கி போயிட்டு இருக்குன்னு நாம கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நிச்சயமா நமக்கு கண்ணை தான் கட்டும்.
ஏன்னா இந்த சமுதாயத்துல யாரையும் யாரும் நம்பறது போல இல்ல.
நம்பிக்கை என்பது முழுவதும் வற்றிப்போன ஒரு சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இதற்கு காரணம் என்ன என்று யோசித்தால் நிச்சயம் சுயநலம் மட்டுமாகத் தான் இருக்கும்.
ஒருவர் மற்றவரைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் மற்றவர் நலனை பற்றி யோசிக்காமல் தன்னலம் மட்டுமே பெரிது என்று கருதுவதால் தான் நம் சமூகம் இன்று இத்தகைய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் யார் என்று யாரிடமாவது கேள்வியாக கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு மற்றவரை நோக்கி கையை காட்டி விடுவோம்.
அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த சமூகம் அப்படி இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி செயற்கையான சோக முகத்தையும் வர வைத்து கொள்வோம்.
அவர்களையும் இவர்களையும் போலத்தான் நாமும் இருக்கிறோம் என்ற உண்மையை நாம் என்று உணர்கிறோமோ அன்று தான் இந்த சமுதாயத்தின் மீதான பார்வை மாறும். அந்த மாற்றம் தான் சமூகத்தில் இருக்கும் நல்லவர் சிலரை தைரியமாக சுயமாக செயல்பட வைக்கும். அந்த செயல் வளமான நம்பிக்கையான சமுதாயத்தை உருவாக்கும்....
" அப்போ பொதுநலம் மட்டும் போதுமா தன்னலம் பேண கூடாதா?" என்ற கேள்வி நம் மனதில் எழலாம்,
" தன்னலம் வேண்டும் தான் அதை நான் இல்லை என்று ஒருபோதும் மறுக்க போவதில்லை ஆனால் தன்னலம் சுயத்தை பேணி காக்க மட்டும் இருக்க வேண்டும் அடுத்தவர் நலத்தை சீர் கெடுக்கும் பொருட்டு இருக்க கூடாது...."
சுயநலத்திற்காக அடுத்தவர் நலத்தை கெடுப்பது எந்த வகையில் நியாயமாகும்?
சுயத்திற்காக அடுத்தவர் நலத்தை கெடுக்காத நிலை வரும் போது சமூகத்தில் நம்பிக்கை என்னும் மலர் மீண்டும் மலரும்.
அன்புடன்,
மாரிமதி

அன்று வியாழக்கிழமை அந்த ஊரில் வார சந்தை நடைபெறும் என்பதனால் அன்று பிச்சைகாரர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
எப்படி ஒரு கடைக்கு ரெகுலர் கஸ்டமர் இருப்பார்களோ அதே போன்று தான் அன்றைய தினம் அந்த பிச்சைக்காரர்கள் அந்த ஊருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அவர்களுக்காக அனைத்து கடைகளிலும் சில்லறை தனியாக எடுத்து வைப்பது வழக்கம், அப்படி வருபவர்களில் சிலர் இன்முகமும், சிலர் வன்முகமும் கொண்டிருப்பர்.
பிச்சைக்காரர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிச்சை இடும் கடைக்காரர்களும் இந்த இருமுகத்தினுள் அடங்குவார்கள்....
சில இன்முக கடைக்காரர்கள் இன்முக பிச்சைக்காரர்களிடம் பேசி பழகுவது வழக்கம். அந்த வழக்கம் அவர்களை நல்ல நண்பர்களைப் போலவும் ஆக்கிவிடும் அப்படிப்பட்ட இரண்டு இன்முக நண்பர்களுக்கு இடையேயான இடைப்பட்ட நாள் சந்திப்பு தான் இந்த பதிவு.
அன்று அந்த கடைக்காரன் அருகில் இருக்கும் கடைக்கு செல்லும் வழியில் வாரம் தவறாமல் தனது கடைக்கு வந்து தர்மம் வாங்கி செல்லும் அந்த பிச்சைக்கார பெண்மணியை பார்க்கிறான், பொதுவாகவே அவரிடம் சற்று நகைச்சுவையாக பேசி பழக்கம் இருப்பதனால் அவரிடம் சாதாரணமாக தனது பேச்சை தொடங்கினான் கடைக்காரன்,
" எக்கா என்ன இன்னைக்கும் இந்த பக்கம் தலையை காட்டுன மாதிரி இருக்கு "
பதிலுக்கு அந்த பிச்சைக்கார பெண்மணியிடம் சிரிப்பு மட்டும்.
" என்னக்கா சிரிக்கிறீங்க இந்த வாரம் கலெக்ஷன் பத்தலையோ திரும்ப இன்னொரு ரவுண்டு வந்துடலாம்னு வந்துட்டீங்களா என்ன? "
" ம்ம் ஆமா யா " சிறு புன்னகையோடு இரத்தின சுருக்கமாக முடித்து கொண்டாள் அந்த பிச்சைக்காரி.
இவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அந்த பிச்சைக்காரியிடம்,
" சரி கா " என்று சொல்லி விடை பெற்று கொண்டதை போல் அவனது வேலையை பார்க்க கிளம்பினான் .
நேரம் மெதுவாக கடந்தது மணி இப்போது மதியம் 3:30 ஆகியிருந்தது,
அந்த கடைக்காரன் அந்த பக்கம் மீண்டும் வர பிச்சைக்காரி அங்கேயே அமர்ந்து இருந்தாள், அவளை கடந்து வேகமாக நடந்த கால்கள் அவளை பார்க்கவும் தனது வேகத்தை நிறுத்தி கொண்டது , அவனது கண்கள் பிச்சைக்காரியை நோட்டம் பார்த்தது.... பார்த்ததும் தெரிந்தது அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒரு துயர் நிறைந்த உணர்வு அதை கண்ட பின் அவளை அப்படியே கடந்து செல்வதில் ஏனோ அவனுக்கு உடன்பாடு இல்லை அதனால் அவளிடம் என்ன ஏது என்று விஷயத்தை கேட்டுவிடலாம் என்ற தீர்க்கமான முடிவோடு அவளின் அருகில் சென்றான்....
" அக்கா "
" ..................... "
" எக்கா " சற்றே குரல் உசந்திருந்தது
" ம்ம் என்ன தம்பி " தனது சிந்தனை கலைத்து கேட்டாள் பிச்சைக்காரி
" என்ன கா ரொம்ப நேரமா இங்கையே உட்கார்ந்து இருக்க முகம் வேற ஒரு மாதிரி இருக்கு? "
" அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி "
" எக்கா உன் முகமே சொல்லுது ஏதோ பிரச்சனை இருக்குன்னு ஆனா நீ ஏன் ஒன்னும் இல்லன்னு சொல்லுற "
" அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பா "
அவன் விடுவதாக இல்லை காரணம் அவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று அவனது ஆழ்மனம் அடித்து கூறியது. தன்னால் முடிந்த உதவியை அவளுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவளது மனதை தொடும் வண்ணம் அடுத்த கேள்வியை அவளை நோக்கி வீசினான்,
" அக்கா உனக்கு ஒருவேளை சாப்பாடு போட்டவன் என்கிற முறையில, அந்த உரிமையில கேக்குறேன் நீ என்கிட்ட உண்மையை சொல்லு. "
அவளிடம் மௌனம்.
" உனக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு நல்லா தெரியுது அதை நீ மறைக்கிறன்னும் தெரியுது,, தயவு செஞ்சு என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லு கா என்னால முடிஞ்ச உதவிய உனக்கு கண்டிப்பா பண்றேன் "
அவனது பேச்சில் அக்கறை மிகுந்து இருந்தது ஆனால் அவளுக்கு தான் அதை முழுமையாக நம்ப முடியவில்லை அதற்கு காரணம் அவளது கடந்த காலமாக கூட இருக்கலாம்.
ஏன் இன்று இவள் இப்படி வந்து அமர்ந்திருக்க காரணமும் இவனைப் போன்று யாராவது ஒருவர் கொடுத்த பொய்யான நம்பிக்கையாக கூட இருக்கலாம், அதன் காரணமாக
அவள் அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவளது அமைதி அவனுக்கு எதையோ உணர்த்தியதை போல் உணர்ந்தான் அதற்கு மேல் அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை பேசவும் இல்லை அமைதியாக அவளிடமிருந்து சிறிது இடைவெளி விட்டு அவனும் அமர்ந்து கொண்டான்....
' நீ சொல் என்று நான் வற்புறுத்த போவதில்லை. ஆனால் நீ சொல்லாமல், உன்னிடம் என்ன பிரச்சனை என்று தெரியாமல் இங்கிருந்து நான் நகரமாட்டேன் என்பதை அவளுக்கு குறிப்பால் உணர்த்தும் பொருட்டு அவன் அப்படியாக அவளின் அருகில் அமர்ந்திருந்தான். '
நேரம் மெதுவாக கரைந்து கொண்டிருந்தது அவளும் எதுவும் பேசவில்லை அவனும் அப்படியே அமர்ந்து இருந்தான்.
அந்த மௌன நேரம் அவளை, அவனது செயலை பற்றி சற்று சிந்திக்க வைத்தது,
' யார் இவன்??
எதுக்காக நம்ம கிட்ட வந்து உட்கார்ந்து நம்ம பிரச்சனையை பத்தி கேட்குறான்??
இவனுக்கு அதை பத்தி என்ன அக்கறை?
நம்ம பிரச்னை பத்தி சொன்னா இவன் என்ன தீர்த்தா வைக்க போறான்??
ஒருவேளை இவன் நல்லவனா இருப்பானா??
அதெப்படி அப்படி இருப்பான் இவனும் மனுஷன் தான, கொஞ்சம் நேரம் பாவம் பாக்குற மனுஷன் ஜென்மம் அடுத்த கொஞ்சம் நேரத்தில தன்னோட சுய நலத்தை பார்த்துட்டு போயிடும் என்று என்னும் போதே அவளது இதழ் ஏளன புன்னகை ஒன்றை உதிர்த்தது.'
அவளது மனம் அவனை நம்ப மறுத்தது... அதனால் அவன் இருக்கும் திசையை கூட அவள் பார்க்கவில்லை... ஆனாலும் மனித மனம் அத்தனை எளிதில் நம்மை விட்டு விடாதே நமக்கு அருகில் இருப்பவர்கள் நமக்கே தெரியாமல் நம்மை பார்த்தாலும் நமது உள்ளுணர்வு காட்டி கொடுத்து அவன் உன்னை பார்க்கிறான் என்று எச்சரிக்கை செய்து நம்மையும் அவர்களது பக்கம் திருப்பி விடும் அதுபோல நமக்காகத்தான் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான் என்று தெரியும் பொழுது அவன் நம்மளை எந்த கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள அவர்களின் பால் நம் மனம் நம் கண்களை அணிச்சையாகவே திருப்பிவிடும் அப்படித்தான் பிச்சைக்காரியின் கண்களும் கடைக்காரன் பக்கம் திரும்பியது,
அவன் அதே நிலையில் அப்படியே அமர்ந்திருக்க இப்போது கடைக்காரன் மீது அவளுக்கு வெறுப்பு தான் வந்தது அதன் வெளிப்பாடாய் அவளது சிந்தனை,
' யாருக்கு என்ன வந்தா இவனுக்கு என்ன?
இவன் வேலைய பாத்துட்டு போக வேண்டியது தானே.
சம்பந்தமில்லாம அடுத்தவங்க பிரச்சனையில மூக்கை நுழைக்க நினைச்சு இப்படி வந்து உக்காந்து நம்மள இங்க இருந்து கிளம்ப வச்சிட்டானே ' என்று மனதில் மீண்டும் எண்ணம் கொண்டு அந்த இடத்திலிருந்து நகர ஆரம்பித்தாள் அந்த பிச்சைக்காரி....
' தான் இத்தனை கேட்டும் அவளுக்கு அருகில் அமர்ந்தும் கூட என்னிடம் அவள் எதையும் சொல்லவில்லையே அப்படி அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கும்



அவனது மூளை வேகமாக வேலை செய்தது ஆனால் அந்த வேகத்தால் உபயோகம் தான் இல்லாமல் போனது.
' ஒருவேளை இப்படி இருக்குமோ?
இல்லனா அப்படி இருக்குமோ?
இப்படி தான் இருக்கனும். ஒருவேளை இப்படி இல்லனா??? என்று மாற்றி சிந்தனை மட்டும் செய்ய முடிந்ததே தவிர அவளுக்கு இது தான் பிரச்சனை என்ற முடிவுக்கு மட்டும் அவனால் வர முடியவில்லை, காரணம் அவள் இவனிடம் முகத்தை கூட காட்டாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றது தான்.
' ச்சே என்னன்னு நம்மளால கண்டுபிடிக்க முடியலையே அந்த அக்காவும் ஒன்னும் சொல்லாம கிளம்பி போயிட்டாளே பாதகத்தி என்று வாய் விட்டு புலம்பிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான் அந்த கடைக்காரன் வேறு வழி ஏதும் இல்லாமல்.
கடைக்காரன் நல்லவன் தான் ஆனாலும் அவன் கிட்ட தன்னோட பிரச்சனையை சொல்றதுக்கு அந்த பிச்சைக்கார பெண் தயாராக இல்லை அதற்குக் காரணம் இந்த சமுதாயம் அவளுக்கு இழைத்த நம்பிக்கை துரோகமும் அதன் விளைவும் தான்.
இந்த சமுதாயம் எதை நோக்கி போயிட்டு இருக்குன்னு நாம கொஞ்சம் யோசிச்சு பார்த்தா நிச்சயமா நமக்கு கண்ணை தான் கட்டும்.
ஏன்னா இந்த சமுதாயத்துல யாரையும் யாரும் நம்பறது போல இல்ல.
நம்பிக்கை என்பது முழுவதும் வற்றிப்போன ஒரு சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இதற்கு காரணம் என்ன என்று யோசித்தால் நிச்சயம் சுயநலம் மட்டுமாகத் தான் இருக்கும்.
ஒருவர் மற்றவரைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் மற்றவர் நலனை பற்றி யோசிக்காமல் தன்னலம் மட்டுமே பெரிது என்று கருதுவதால் தான் நம் சமூகம் இன்று இத்தகைய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் யார் என்று யாரிடமாவது கேள்வியாக கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு மற்றவரை நோக்கி கையை காட்டி விடுவோம்.
அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த சமூகம் அப்படி இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி செயற்கையான சோக முகத்தையும் வர வைத்து கொள்வோம்.
அவர்களையும் இவர்களையும் போலத்தான் நாமும் இருக்கிறோம் என்ற உண்மையை நாம் என்று உணர்கிறோமோ அன்று தான் இந்த சமுதாயத்தின் மீதான பார்வை மாறும். அந்த மாற்றம் தான் சமூகத்தில் இருக்கும் நல்லவர் சிலரை தைரியமாக சுயமாக செயல்பட வைக்கும். அந்த செயல் வளமான நம்பிக்கையான சமுதாயத்தை உருவாக்கும்....
" அப்போ பொதுநலம் மட்டும் போதுமா தன்னலம் பேண கூடாதா?" என்ற கேள்வி நம் மனதில் எழலாம்,
" தன்னலம் வேண்டும் தான் அதை நான் இல்லை என்று ஒருபோதும் மறுக்க போவதில்லை ஆனால் தன்னலம் சுயத்தை பேணி காக்க மட்டும் இருக்க வேண்டும் அடுத்தவர் நலத்தை சீர் கெடுக்கும் பொருட்டு இருக்க கூடாது...."
சுயநலத்திற்காக அடுத்தவர் நலத்தை கெடுப்பது எந்த வகையில் நியாயமாகும்?
சுயத்திற்காக அடுத்தவர் நலத்தை கெடுக்காத நிலை வரும் போது சமூகத்தில் நம்பிக்கை என்னும் மலர் மீண்டும் மலரும்.
அன்புடன்,
மாரிமதி


Last edited by a moderator: