New member
- Joined
- Feb 8, 2025
- Messages
- 9
- Thread Author
- #1
நடுநிசி நாய்கள் ஓலமிட, நள்ளிரவு நேரத்தில் அவ்வீட்டின் வாசலை கடந்து ஒருவனை இரத்த வெள்ளத்தில் இழுத்துக் கொண்டு சென்றது ஒரு உருவம்...
இரத்தம் ஒழுக அவன் கண்களில் மிரட்சியோடு அவ்வுருவத்தை பார்க்க,
இரத்தம் வழிந்து சதைகள் கிழிந்து தொங்கும் உடலோடு, அவனை கண்கள் சிவக்கும் கோபத்தில் இழுத்து உள்ளே போட்டு அவன் மார்பில் அமர்ந்து அவன் நெஞ்சில் மாறி மாறி ஆக்ரோஷமாய் சதக் சதக் என கத்தியால் குத்தியது அவ்வுருவம்....
அவன் இரத்தம் அதன் முகத்தில் தெறித்து முகமே அழகான பெண்ணின் முகத்தோடு காளி வடிவம் பெற்றிருக்க,
அவன் மீதிருந்து எழுந்து அவன் கன்னத்தை காலால் உதைத்து நிமிர்த்து தன்னை பார்க்க செய்த அந்த இரத்தக் களரியோடு நின்றிருந்த உருவம், தான் சுய உருவத்திற்கு வந்து மீண்டும் பேயாய் மாறி விட,
அவளை கண்டவனோ " நீ... நீ.. நீ பேயா..?" என குரல் நடுங்க கேட்டான்......
அவனை ஓங்கி மிதித்த அந்த காட்டேரி உருவம் " ஆமா டா.. அந்நியாயமா என்னை கொன்னுட்டிங்களா??? இன்னும் அந்த கிழவன் தான் பாக்கி.. அடுத்தது அவன் தான்.. அவனை இன்னும் கொடூரமா பகிரங்கமா கொன்னே தீருவேன் டா " என குரல் கர்ஜித்து அந்த அறையெங்கும் எதிரொலிக்க கூறி, அவனை துடிக்க துடிக்க கொன்று விட்டு, தன் உருவத்தை மாற்றிக் கொண்டு காற்றில் கரைந்தது அந்த காட்டேரி.....
அன்றொரு நாள் மதியம்
பச்சப் பசேல் என படர்ந்திருக்கும் நெல் வயல் வரப்பின் மீதிருந்த இருந்த தெனங்கீற்றால் வேயப்பட்ட கூரை வீட்டின் உள்ளே உத்திரத்தில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது ஒரு உருவம்......
" விட்டுடுங்க பிளீஸ். " என கைகூப்பி கெஞ்சிக் கொண்டு நின்றாள் அவ்வீட்டின் புது மருமகள் நந்தனா..."
அவளின் கூந்தலை பற்றி இழுத்து தன் முகம் பார்க்க செய்த அவ்வுருவம், இரத்தம் வழிந்தோட கூந்தல் விரிந்த நிலையில் கருப்பு புடவை உடுத்தி கொண்டு, சத்தமாய் சிரித்து " என் மாமனை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருப்பிங்களா???? விட மாட்டேன் டி... விடவே மாட்டேன் .. உன்னையும் உன் புருஷன் அதான் என் மாமன் தருமனையும் கொன்னு பழி தீர்த்தா தான் என் ஆத்மா இங்க இருந்து போகும் டி" என கோபம் கண்ணில் ரத்தமாய் வழிய ஆக்ரோஷமாய் அவளை தூக்கி வீசியது அவ்வுருவம்....
அதில் பயந்த நந்தனா, " மல்லி அக்கா.. நான் சொல்ல வரதை கொஞ்சம் கேளு... மாமனுக்கும் எனக்கு எந்த நிலைமையில் கல்யாணம் நடந்தது தெரியுமா??" என ஏதோ கூற வர,
அவளை ஓங்கி அறைந்து கழுத்தை பிடித்து மேலே தூக்கிய ரத்த களரியான முகம் கொண்ட அவ்வுருவமோ, " என்ன டி... நீங்க செய்ததை சரின்னு நிரூபிக்க பார்க்குறிங்களா??? மாமா மாமான்னு அவருக்காக உயிரையே கொடுத்தேனே டி... என்னை மறந்துட்டு அவர் உன்னை எப்படி டி கல்யாணம் பண்ணிக்கலாம்.. என் முன்னாடியே சந்தோஷமா வாழ வேற வந்துருக்கிங்களா? அப்போ என் மாமன் என்னை உருகி உருகி காதலிச்சது எல்லாம் பொய்யா?" என தன் கைவிட்டு போன காதலை எண்ணி கதறி அழுதது அவ்வுருவம்....
ஆறுமாதங்களாகியும் தன் மருமகள் முகம் பார்த்துக் கூட பேசாமல் இருக்கும் தன் மகனின் வாழ்க்கையை எண்ணி பதறிய தருமனின் தாய் மீனாட்சி அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனை தன் தந்தை ஊரான இங்கு அனுப்பி வைத்திருந்தார்...
எனில் பசுமை நிறைந்த இடங்கள் மனதை இதமாக்கி மகனை மனைவியோடு மஞ்சத்தில் மகிழ்வாய் வாழ வழி வகுக்கும் என்பது அவரின் எண்ணம்.. பாவம் அவர் அறியவில்லை இங்கு தான் த மகனின் வாழ்வே பல போராட்டங்களை காணப் போகிறது என.....
மேலிருந்து குதித்து நந்தனாவை நெருங்கி அமர்ந்த கருப்பு புடவையில் சதை கிழிந்து நின்ற அந்த உருவம், வாயில் இரத்தம் ஒழுக,
"அதோ அந்த மாந்தோப்பில் அவர் மடியில் படுத்து எத்தனை கனவுகளோடு எவ்வளவு சந்தோஷமா பேசி சிரிச்சிருப்பேன் தெரியுமா டி???
என் மாமன் வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போதெல்லாம் இதோ இந்த பக்கம் இருக்க பம்ப் செட்டு, இங்கன மறைவா உக்கார்ந்து தான் என் விரல் சொடுக்கெடுத்து பேசி சிரிக்கும்..
அது தோளில் சாய்ஞ்சு அது பேசுறதை ரசிச்சு கேட்டுட்டே இருப்பேன் டி.. பொழுதுக்கும் அது பேச்சு மட்டுமே என் உயிர் மூச்சா இருந்தது..
ஒருவருஷம் ரெண்டு வருஷம் இல்ல டி, முழுசா அஞ்சு வருஷம்..." என கண்களை துடைத்துக் கொண்டு அழுத உருவமோ
"என் மாமன் ரெண்டு பேரோட படிப்பும் முடிக்கும் வரை ஆசைகளை அடக்கிக்கிட்டு கண்ணியமா காதலிச்சிது டி..
அந்த கண்ணியத்தில் மெய் மறந்து வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும் அவரை நினைச்சுட்டு அந்த மொத்த வருஷத்தையும் இதோ இங்கன வந்து அதோட வாசத்தை பிடிச்சு அனுபவிப்பேன்.. அவருக்காக காத்திருந்தேன்... என் மாமன் இப்படி என்னை ஏமாத்துமுன்னு நினைக்கவே இல்லையே... ஐயோ மாமா..." என மீண்டும் குரல் கரகரக்க கூறி கண்களில் இரத்தம் ஒழுக அழுக,
நந்தனாவுக்கும் கூட அதன் உணர்வுகள் அனைத்தும் உயிர் வரை வலித்தது...
தருமனை பற்றி எதுவும் அறியாத நந்தனா, இன்று அவனின் காதலை அவன் காதலி வழியே அறிந்தவள் உள்ளம் நொந்து நொறுங்கி சிதறியது... இப்போது தான் அவன் தன்னிடம் பேசாமல் தன்னை தவிர்க்கும் காரணம் புரிந்து போனது....
அதற்காக உயிரற்ற ஒரு உருவத்திடம் அவனை கொடுத்து விட்டு செல்ல முடியாதே...
எந்த மனைவிக்கு தான் தன் கண் முன்னே தன் கணவனை இன்னொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்கும் மனம் வரும்... அதுவும் அத்தனை வலியிலும் தன்னிடம் கண்ணியமான அன்பை காட்டிய அவனை உருவமில்லா உயிருக்கு விட்டு கொடுக்க முடியுமா என்ன???
கை கூப்பி அவ்வுருவத்தை கண்டு பயந்து பின்னே சென்ற நந்தனா, " அக்கா... உன்னை பத்தி தாத்தா தப்பு தப்பா சொன்னாக... உன்னால வாழ்க்கை இழந்து பைத்தியமாக சுத்திட்டு இருந்த மாமனுக்கு வாழ்க்கை வேணும்னு அத்தை கெஞ்சினதால தான் மாமன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாக அக்கா... மாமன் பாவம் அவரை விட்டுடுக.. பிளீஸ் " என கெஞ்சி கதறிக் கொண்டிருந்தாள்...
அதில் கை தட்டி சத்தமாய் சிரித்த அவ்வுருவம் கண்களில் வழியும் இரத்த கண்ணீரை துடைத்து கொண்டு " நீ சொல்லுறது சரியாகவே இருக்கட்டுமுடி... என் மாமன் எப்படி அதை நம்பலாம்??? என் நடத்தை எப்படி??? இங்கன நான் எதுக்கு வந்தேன்?? என்னை பத்தி அதுக்கு தெரியாதா???" என கர்ஜித்து உறுமியது....
பயத்திலும், தன் கணவனை விட்டு கொடுக்க முடியாத தவிப்பிலும் அழுது அழுது முகம் சிவந்து எழுந்த நந்தனா, வெளியே களத்து மேட்டில் உச்சி வெயிலில் கவலையோடு படுத்திருக்கும் தன்னவனை காக்க எண்ணி பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓட,,
இரத்தக்கறையோடு விரல் சொடுக்கிய அவ்வுருவத்தின் கட்டுப்பாட்டில் அவள் செல்லும் முன் குடிசையில் இருந்த சின்ன கதவும் படாரென அறைந்து சாத்தப்பட்டது....
கதவில் சாய்ந்து உடல் குறுக அமர்ந்த நந்தனா, " அக்கா பிளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்... மாமனை ஒன்னும் பண்ணிடாத " என அழுக துவங்கினாள்....அதில் அவ்விடமே அதிர சிரித்த அவ்வுருவம்,
" அவ்வளவு சுலபமா அவனை கொல்லவா டி இன்னும் மேலோகம் போகாம இருக்கேன்??" என ஆக்ரோஷம் பொங்க கேட்டு, " இங்க இருக்க ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நரகத்தை காட்டுவேன் டி... என்னை மறந்த அவனை கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை செய்யாம விட மாட்டேன்" என கூறி கதவை திறந்து அரூபமாய் மாறி காற்றில் கரைந்து போனது....
தரையில் மடங்கி சரிந்து அழுத நந்தனா,
" ஐயோ... மாமா.. நான் உன்னை எப்படி காப்பாத்த போறேன் " என அழுது வெம்பி துடிக்க,
அடுத்த கணமே கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டு தைரியமாய் எழுந்து தருமனை தேடி ஓடினாள்...
அங்கு தருமன் வெயிலின் வெம்மையை கூட உணராமல் மல்லியை எண்ணி கண்களில் கண்ணீருடன் வெறும் வரப்பில் படுத்திருக்க,
அவனை ஓடி சென்று அணைத்துக் கொண்ட நந்தனா, " மாமா... உள்ள வாங்க மாமா... நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... பிளீஸ் எழுந்திருங்க " என பதறி அழைத்தாள்.....
அவனோ அவள் கைகளை தட்டி விட்டு அவளை விலக்கி நிறுத்தி, " என்னை தொடாதன்னு சொல்லி இருக்கேன் நந்தனா... ப்ச்... நகரு" என எழுந்து கொண்டவன் மல்லிகாவோடு மகிழ்ந்திருந்த பம்ப் செட் மறைவுக்கு சென்று அமர்ந்தான்...அவன் சென்ற பின் சிரித்த அவ்வுருவமோ அவள் கண்களுக்கு புலப்படாமல், " என்ன ரெண்டு பேரும் நாடகமாடுறிங்களா??" என குரல் கரகரக்க கேட்க,
மனதில் வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் எழுந்த நந்தனா, " நீ மாமனை நம்பல தானே... இப்போ நிரூபிக்கிறேன் பாரு மாமன் மேல தப்பு இல்லன்னு" என சபதம் செய்து கொண்டு, " மாமன் உன்னை எவ்வளவு காதலிக்கிதுன்னு இப்போ தெரியும் உனக்கு.. ஆனா அதன் பிறகு நீ அவரை விட்டுட்டு போயிடனும்... எங்க வாழ்க்கையில் தொந்தரவா இருக்க மாட்டேன் சத்தியம் பண்ணு" என அவ்வுருவத்தின் கோபத்தை தூண்டி அதை சத்தியம் செய்ய நிர்பந்தித்தாள்....
ஆக்ரோஷம், வருத்தம், கவலை, தன் காதல் என அனைத்தும் கொண்ட கலவையான உணர்வுகளில் சிக்கிய கருப்பு நிற புடவையில் அரூ
பமாய் காற்றில் பறந்த அவ்வுருவமும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தது.....
இரத்தம் ஒழுக அவன் கண்களில் மிரட்சியோடு அவ்வுருவத்தை பார்க்க,
இரத்தம் வழிந்து சதைகள் கிழிந்து தொங்கும் உடலோடு, அவனை கண்கள் சிவக்கும் கோபத்தில் இழுத்து உள்ளே போட்டு அவன் மார்பில் அமர்ந்து அவன் நெஞ்சில் மாறி மாறி ஆக்ரோஷமாய் சதக் சதக் என கத்தியால் குத்தியது அவ்வுருவம்....
அவன் இரத்தம் அதன் முகத்தில் தெறித்து முகமே அழகான பெண்ணின் முகத்தோடு காளி வடிவம் பெற்றிருக்க,
அவன் மீதிருந்து எழுந்து அவன் கன்னத்தை காலால் உதைத்து நிமிர்த்து தன்னை பார்க்க செய்த அந்த இரத்தக் களரியோடு நின்றிருந்த உருவம், தான் சுய உருவத்திற்கு வந்து மீண்டும் பேயாய் மாறி விட,
அவளை கண்டவனோ " நீ... நீ.. நீ பேயா..?" என குரல் நடுங்க கேட்டான்......
அவனை ஓங்கி மிதித்த அந்த காட்டேரி உருவம் " ஆமா டா.. அந்நியாயமா என்னை கொன்னுட்டிங்களா??? இன்னும் அந்த கிழவன் தான் பாக்கி.. அடுத்தது அவன் தான்.. அவனை இன்னும் கொடூரமா பகிரங்கமா கொன்னே தீருவேன் டா " என குரல் கர்ஜித்து அந்த அறையெங்கும் எதிரொலிக்க கூறி, அவனை துடிக்க துடிக்க கொன்று விட்டு, தன் உருவத்தை மாற்றிக் கொண்டு காற்றில் கரைந்தது அந்த காட்டேரி.....
அன்றொரு நாள் மதியம்
பச்சப் பசேல் என படர்ந்திருக்கும் நெல் வயல் வரப்பின் மீதிருந்த இருந்த தெனங்கீற்றால் வேயப்பட்ட கூரை வீட்டின் உள்ளே உத்திரத்தில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது ஒரு உருவம்......
" விட்டுடுங்க பிளீஸ். " என கைகூப்பி கெஞ்சிக் கொண்டு நின்றாள் அவ்வீட்டின் புது மருமகள் நந்தனா..."
அவளின் கூந்தலை பற்றி இழுத்து தன் முகம் பார்க்க செய்த அவ்வுருவம், இரத்தம் வழிந்தோட கூந்தல் விரிந்த நிலையில் கருப்பு புடவை உடுத்தி கொண்டு, சத்தமாய் சிரித்து " என் மாமனை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருப்பிங்களா???? விட மாட்டேன் டி... விடவே மாட்டேன் .. உன்னையும் உன் புருஷன் அதான் என் மாமன் தருமனையும் கொன்னு பழி தீர்த்தா தான் என் ஆத்மா இங்க இருந்து போகும் டி" என கோபம் கண்ணில் ரத்தமாய் வழிய ஆக்ரோஷமாய் அவளை தூக்கி வீசியது அவ்வுருவம்....
அதில் பயந்த நந்தனா, " மல்லி அக்கா.. நான் சொல்ல வரதை கொஞ்சம் கேளு... மாமனுக்கும் எனக்கு எந்த நிலைமையில் கல்யாணம் நடந்தது தெரியுமா??" என ஏதோ கூற வர,
அவளை ஓங்கி அறைந்து கழுத்தை பிடித்து மேலே தூக்கிய ரத்த களரியான முகம் கொண்ட அவ்வுருவமோ, " என்ன டி... நீங்க செய்ததை சரின்னு நிரூபிக்க பார்க்குறிங்களா??? மாமா மாமான்னு அவருக்காக உயிரையே கொடுத்தேனே டி... என்னை மறந்துட்டு அவர் உன்னை எப்படி டி கல்யாணம் பண்ணிக்கலாம்.. என் முன்னாடியே சந்தோஷமா வாழ வேற வந்துருக்கிங்களா? அப்போ என் மாமன் என்னை உருகி உருகி காதலிச்சது எல்லாம் பொய்யா?" என தன் கைவிட்டு போன காதலை எண்ணி கதறி அழுதது அவ்வுருவம்....
ஆறுமாதங்களாகியும் தன் மருமகள் முகம் பார்த்துக் கூட பேசாமல் இருக்கும் தன் மகனின் வாழ்க்கையை எண்ணி பதறிய தருமனின் தாய் மீனாட்சி அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனை தன் தந்தை ஊரான இங்கு அனுப்பி வைத்திருந்தார்...
எனில் பசுமை நிறைந்த இடங்கள் மனதை இதமாக்கி மகனை மனைவியோடு மஞ்சத்தில் மகிழ்வாய் வாழ வழி வகுக்கும் என்பது அவரின் எண்ணம்.. பாவம் அவர் அறியவில்லை இங்கு தான் த மகனின் வாழ்வே பல போராட்டங்களை காணப் போகிறது என.....
மேலிருந்து குதித்து நந்தனாவை நெருங்கி அமர்ந்த கருப்பு புடவையில் சதை கிழிந்து நின்ற அந்த உருவம், வாயில் இரத்தம் ஒழுக,
"அதோ அந்த மாந்தோப்பில் அவர் மடியில் படுத்து எத்தனை கனவுகளோடு எவ்வளவு சந்தோஷமா பேசி சிரிச்சிருப்பேன் தெரியுமா டி???
என் மாமன் வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போதெல்லாம் இதோ இந்த பக்கம் இருக்க பம்ப் செட்டு, இங்கன மறைவா உக்கார்ந்து தான் என் விரல் சொடுக்கெடுத்து பேசி சிரிக்கும்..
அது தோளில் சாய்ஞ்சு அது பேசுறதை ரசிச்சு கேட்டுட்டே இருப்பேன் டி.. பொழுதுக்கும் அது பேச்சு மட்டுமே என் உயிர் மூச்சா இருந்தது..
ஒருவருஷம் ரெண்டு வருஷம் இல்ல டி, முழுசா அஞ்சு வருஷம்..." என கண்களை துடைத்துக் கொண்டு அழுத உருவமோ
"என் மாமன் ரெண்டு பேரோட படிப்பும் முடிக்கும் வரை ஆசைகளை அடக்கிக்கிட்டு கண்ணியமா காதலிச்சிது டி..
அந்த கண்ணியத்தில் மெய் மறந்து வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும் அவரை நினைச்சுட்டு அந்த மொத்த வருஷத்தையும் இதோ இங்கன வந்து அதோட வாசத்தை பிடிச்சு அனுபவிப்பேன்.. அவருக்காக காத்திருந்தேன்... என் மாமன் இப்படி என்னை ஏமாத்துமுன்னு நினைக்கவே இல்லையே... ஐயோ மாமா..." என மீண்டும் குரல் கரகரக்க கூறி கண்களில் இரத்தம் ஒழுக அழுக,
நந்தனாவுக்கும் கூட அதன் உணர்வுகள் அனைத்தும் உயிர் வரை வலித்தது...
தருமனை பற்றி எதுவும் அறியாத நந்தனா, இன்று அவனின் காதலை அவன் காதலி வழியே அறிந்தவள் உள்ளம் நொந்து நொறுங்கி சிதறியது... இப்போது தான் அவன் தன்னிடம் பேசாமல் தன்னை தவிர்க்கும் காரணம் புரிந்து போனது....
அதற்காக உயிரற்ற ஒரு உருவத்திடம் அவனை கொடுத்து விட்டு செல்ல முடியாதே...
எந்த மனைவிக்கு தான் தன் கண் முன்னே தன் கணவனை இன்னொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்கும் மனம் வரும்... அதுவும் அத்தனை வலியிலும் தன்னிடம் கண்ணியமான அன்பை காட்டிய அவனை உருவமில்லா உயிருக்கு விட்டு கொடுக்க முடியுமா என்ன???
கை கூப்பி அவ்வுருவத்தை கண்டு பயந்து பின்னே சென்ற நந்தனா, " அக்கா... உன்னை பத்தி தாத்தா தப்பு தப்பா சொன்னாக... உன்னால வாழ்க்கை இழந்து பைத்தியமாக சுத்திட்டு இருந்த மாமனுக்கு வாழ்க்கை வேணும்னு அத்தை கெஞ்சினதால தான் மாமன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாக அக்கா... மாமன் பாவம் அவரை விட்டுடுக.. பிளீஸ் " என கெஞ்சி கதறிக் கொண்டிருந்தாள்...
அதில் கை தட்டி சத்தமாய் சிரித்த அவ்வுருவம் கண்களில் வழியும் இரத்த கண்ணீரை துடைத்து கொண்டு " நீ சொல்லுறது சரியாகவே இருக்கட்டுமுடி... என் மாமன் எப்படி அதை நம்பலாம்??? என் நடத்தை எப்படி??? இங்கன நான் எதுக்கு வந்தேன்?? என்னை பத்தி அதுக்கு தெரியாதா???" என கர்ஜித்து உறுமியது....
பயத்திலும், தன் கணவனை விட்டு கொடுக்க முடியாத தவிப்பிலும் அழுது அழுது முகம் சிவந்து எழுந்த நந்தனா, வெளியே களத்து மேட்டில் உச்சி வெயிலில் கவலையோடு படுத்திருக்கும் தன்னவனை காக்க எண்ணி பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓட,,
இரத்தக்கறையோடு விரல் சொடுக்கிய அவ்வுருவத்தின் கட்டுப்பாட்டில் அவள் செல்லும் முன் குடிசையில் இருந்த சின்ன கதவும் படாரென அறைந்து சாத்தப்பட்டது....
கதவில் சாய்ந்து உடல் குறுக அமர்ந்த நந்தனா, " அக்கா பிளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்... மாமனை ஒன்னும் பண்ணிடாத " என அழுக துவங்கினாள்....அதில் அவ்விடமே அதிர சிரித்த அவ்வுருவம்,
" அவ்வளவு சுலபமா அவனை கொல்லவா டி இன்னும் மேலோகம் போகாம இருக்கேன்??" என ஆக்ரோஷம் பொங்க கேட்டு, " இங்க இருக்க ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நரகத்தை காட்டுவேன் டி... என்னை மறந்த அவனை கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை செய்யாம விட மாட்டேன்" என கூறி கதவை திறந்து அரூபமாய் மாறி காற்றில் கரைந்து போனது....
தரையில் மடங்கி சரிந்து அழுத நந்தனா,
" ஐயோ... மாமா.. நான் உன்னை எப்படி காப்பாத்த போறேன் " என அழுது வெம்பி துடிக்க,
அடுத்த கணமே கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டு தைரியமாய் எழுந்து தருமனை தேடி ஓடினாள்...
அங்கு தருமன் வெயிலின் வெம்மையை கூட உணராமல் மல்லியை எண்ணி கண்களில் கண்ணீருடன் வெறும் வரப்பில் படுத்திருக்க,
அவனை ஓடி சென்று அணைத்துக் கொண்ட நந்தனா, " மாமா... உள்ள வாங்க மாமா... நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... பிளீஸ் எழுந்திருங்க " என பதறி அழைத்தாள்.....
அவனோ அவள் கைகளை தட்டி விட்டு அவளை விலக்கி நிறுத்தி, " என்னை தொடாதன்னு சொல்லி இருக்கேன் நந்தனா... ப்ச்... நகரு" என எழுந்து கொண்டவன் மல்லிகாவோடு மகிழ்ந்திருந்த பம்ப் செட் மறைவுக்கு சென்று அமர்ந்தான்...அவன் சென்ற பின் சிரித்த அவ்வுருவமோ அவள் கண்களுக்கு புலப்படாமல், " என்ன ரெண்டு பேரும் நாடகமாடுறிங்களா??" என குரல் கரகரக்க கேட்க,
மனதில் வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் எழுந்த நந்தனா, " நீ மாமனை நம்பல தானே... இப்போ நிரூபிக்கிறேன் பாரு மாமன் மேல தப்பு இல்லன்னு" என சபதம் செய்து கொண்டு, " மாமன் உன்னை எவ்வளவு காதலிக்கிதுன்னு இப்போ தெரியும் உனக்கு.. ஆனா அதன் பிறகு நீ அவரை விட்டுட்டு போயிடனும்... எங்க வாழ்க்கையில் தொந்தரவா இருக்க மாட்டேன் சத்தியம் பண்ணு" என அவ்வுருவத்தின் கோபத்தை தூண்டி அதை சத்தியம் செய்ய நிர்பந்தித்தாள்....
ஆக்ரோஷம், வருத்தம், கவலை, தன் காதல் என அனைத்தும் கொண்ட கலவையான உணர்வுகளில் சிக்கிய கருப்பு நிற புடவையில் அரூ
பமாய் காற்றில் பறந்த அவ்வுருவமும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தது.....