Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
அவனும் அவளும்
சிவப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து, உடுமலைபேட்டை புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். சரியாக 11. 00 மணி அளவில் பேருந்தில் மக்கள் கூட்டம். பேருந்துகளின் இரைச்சல் சத்தம்.
கால் செய்தான் வர 12:30 ஆகுமே என்ற ஒரு சிறு தகவல் நேராக பேருந்து பின்புறம் சென்றான். இதழ் வாங்குவதற்காக ஒரு கடையில் போய் புக்ஸ் சென்டர் எங்கு இருக்கிறதுன்னு கேட்க, பத்து கடை தள்ளிப் போங்க .நேரா போங்க பெண்டுல பாருங்க இருக்கும். கடைக்கு சென்றான் புரவி இதழ் இருக்குதா என்று கேட்டான்.புரவி இதழ் அப்படின்னா? என்று கடையிலிருந்து ஒரு பெண் கேட்டாள்.
மாத இதழ் என்றான்.
இருங்க இதோ வரேன். உள்ளே கடையில் 20 வயது மதிக்கத்தக்க ஒருவன் புத்தகங்களை அடுக்கி கொண்டிருந்தான் ,அந்தப் பெண் அவனிடம் ஏதோ சொன்னது திரும்பி அவன் வந்தான் என்ன வேணும்.
புரவி மாத இதழ் இருக்குதா…..
இங்க இல்லங்க .கலைமகள் புக் சென்டரில் இருக்கும்.
எங்க இருக்குது என்றான். பழைய பஸ் ஸ்டாண்டுங்க நேரா போங்க கொஞ்சம் தூரம் தான் .
நடந்தான்…..
கொஞ்ச தூரம் சென்றபின் கலைமகள் புக்ஸ் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது ,உள்ளே சென்றான் புரவி இதழ் இருக்குதா என்றான். புரவி இதழா!!! கடைக்காரர் அறுவது வயது மதிக்கத்தக்க அவர் கடையில் உள்ளே அமர்ந்து தினமலர் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.
இங்க இல்லைங்க என்றார் .நேராக புதிய பேருந்து நிலையத்திற்கு நடந்தே வந்தான்.
மணி 12.10. கால் செய்தான், திரும்பவும் ஒரு பதில்.
மூணாறு பஸ் நிக்கும் இல்ல அங்க வந்துருங்க, வந்துருவேன். வெள்ளை நிறத்தில் நீல நிறத்தில் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதப்பட்டிருந்தது பேருந்து போகும் இடங்கள்.
பேருந்து வந்தது அவளது முகம்.
தூரத்தில் நின்றவரே அவளை கணித்து விட்டான் பேருந்து வந்து நின்றது, முன்னாள் போய் நின்றான்.
பளபளக்கும் கண்ணாடி பாரதி பெண்களுக்காக இந்தியா என்ற இதழை தொடங்கினார் ,அந்த இதழின் நிறமும் சிவப்பு,
இவள் அணிந்திருந்த மேல் சட்டையும் சிவப்பு, கால் சட்டை மட்டும் கருப்பு .
காதில் கருப்பு வண்ண தோடுகள் ,காதுக்கு ஏற்றவாறு கையில் கருப்பு நிற வளையல். காதோரத்தில் அந்த தோடு மட்டும் அசைந்து கொண்டிருந்து, தோளில் பெரிய பை, அதன் உள்ளே உடைகள்.
சூரியனைப் போல் பிரகாசமாக இருந்தது அவளது முகம் ,பளபளக்கும் கண்ணாடியில் உள்ளே என்னை பிரதிபலிக்கும் கருமை நிற விழிகள் அந்த விழிகளுக்கு மேல் கண் மையிட்டு தீட்டப்பட்டு இருந்தாள். இரு புருவங்களுக்கும் மை
தீட்டி இருந்தாள்,அது பட்டையாக அழகாக இருந்தது.
கண்ணுக்கு மை……. அழகு.
உண்மைதான் அவளுக்கு அவள்தான் அழகு.
எனக்கு செய்வது தெரியவில்லை.எழுத்தாளர்
ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதையை படித்து விட்டு பொள்ளாச்சி டப் ஸிலிப் போக வேண்டும் நீண்ட நாள் கனவு.
அவளும் அவனும் நேராக ஓட்டல் கடைக்கு சென்றார்கள் அவளும், அவனும் கை கழுவி விட்டு அமர சப்ளையர் வந்தார் ,என்ன வேணும் சிக்கன் பிரியாணி, குஸ்கா , தக்காளி சாதம், தயிர் சாதம் இப்படி அடுக்கிக் கொண்டே போனான். சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா என்றான் நீங்க சாப்பிடுங்க எனக்கு தக்காளி சாதம் மட்டும் போதும் என்றாள். பின் இருவருக்குமே தக்காளி சாதம் வந்தது. அவன் அவளது எதிரில் அமர்ந்து இருந்தான். அவள் கொண்டுவந்த பையை பத்திரமாக சேரில் வைத்தாள்.
வாழை இலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது தக்காளி சாதம் சட்னி என்று வாழை இலையில் உணவு. சாப்பிட முடியல என்றாள், ஏன் என்றேன் அதிகமா இருக்குது.
சாப்பிட முடியலன்னா என்னுடைய இலையில் எடுத்து வை என்று சொல்ல அவனுக்கு ஆசைதான், இருந்தாலும் அவள் என்ன சொல்வாளோ !என்று தயக்கத்துடன் இருந்தான்.
பின்பு அவளும் எந்த பதிலும் சொல்லவில்லை.
அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு இருந்தான் போய் கை கழுவுங்க ன்னு சொல்ல.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் காப்பி சாப்பிடுறீங்களா என்றாள்.
வீட்ல அம்மா, அப்பா, பாப்பா, எல்லாம் எப்படி இருக்காங்க என்றான்.
எல்லோரும் நல்லா இருக்காங்க…..
பழனியில் என்ன படித்த
11வது,12வது அங்கு தான் படித்தேன்
ஏன்? முருகன் ரொம்ப பிடிக்கும் அதனால பழனியில் படிக்கணும்னு ஒரு ஆசை அதனால அங்க படித்தேன் அப்புறம் ராஜபாளையம் அது எங்க சித்தி இருக்காங்க இப்ப போவீங்களா ராஜபாளையம் அப்ப போறது இல்ல ஒரு சண்டையா ஆயிருச்சு என்று அவள் சொல்ல அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் நெடுநேரம்.
அவளிடம் எந்த பதில் என்று சொல்வது என்று அவனுக்கு தெரியவே இல்லை.அவனது மனம் துடிதுடித்து கொண்டுஇருந்து.
ஆம்……. அது மனம் அல்லவா சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க சென்றாள் வேண்டாம் நானே கொடுத்துக்கிறேன் என்றான் தனது மணி பிரஷ் இருந்து 500 ரூபாய் தாளினை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினான். ₹ 195 ரூபாய் ,போக மீதி ₹5 இவன் கையில் கடைக்காரர் கொடுத்தார்.
வெளியே வந்ததும் ஏ டி எ ம் போக வேண்டும் என்றாள் ஏன்? என்றேன், ஏதோ ஒரு காரணத்தை சொன்னாள். அவனுக்கு நினைவில்லை . அவன் அவளையை பார்த்து தன்னை மறந்து விட்டான். ஏடிஎம் -யில் பணத்தை எடுத்து விட்டு இருவரும் சாலை ஓரத்தில் நடந்து வந்தார்கள்.
இருவரும் உடனடியாக பேருந்து ஏறவில்லை.
உடுமலைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிற பொள்ளாச்சி வரும் பேருந்துகள் எல்லாம் கூட்டமாக இருந்தது.
பேருந்து வர ஓடிப்போய் அவன் பேருந்தின் உள்ளே சென்று இடத்தை போட்டான், அவளை ஜன்னல் ஓரத்தில் அமர வைத்து விட்டு அவள் பக்கத்தில் அவன் அமர்ந்து கொண்டான்.
பேருந்து பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.
அவன் பேச்சை தொடர்ந்தான் ஏன் வளவி எல்லாம் போட மாட்டியா?
ஏன் இந்த போட்டு இருக்கேன் பாரு…. அப்படி ன்னு…
தனது கையை காட்டினாள்
இது கையில் இருந்து வளையலை உருவி அவனிடம் கொடுத்தாள். அவன் அந்த வளையலை தொட்டு பார்த்தான் அது பிளாஸ்டிக் வளையல் .
அவள் அன்று ரொம்பவும் அழகாக இருந்தாள்
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அவரது முடி காற்றில் ஆடிக்கொண்டே வந்தது தனது கையினால் அதனை எடுத்து விட்டு எடுத்து விட்டுக் கொண்டே இருந்தாள்.அவன் சொன்னான் அந்த ஜன்னலை சாத்து ….உடனே ஜன்னலை சாத்தினாள்.
எப்ப கல்யாணம் என்றான் அவள் சிரித்தாள்.
அந்த சிரிப்பில் ஓராயிரம் வலிகள்,எதையோ பறி கொடுத்த நிலை துயரம் எல்லாமே பளிச்சென்று தெரிந்தது.
வால்பாறையில எத்தனை வருஷம் இருந்த……
ஏழு மாசம் இருந்தேன்.
திருப்பி வரவில்லையா வரவில்லை,, நீங்க தேடி போகலையா, நான் எதுக்கு போகணும் போக வேண்டும். என்ன படிக்கிறாங்கன்னு கூட தெரியாது. நான் ஏன் போகணும் ?என்னோட நியாயங்களா செவத்து கிட்ட தான் சொல்லணும். அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று போன் வந்தது காதில் வைத்து வலது கையை செல்போன் மீது வைத்து பேசிக்கொண்டே இருந்தாள்.
பத்து நிமிடங்கள் பேசி இருப்பாள் அதுவரையிலும் பேருந்தில் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதனை அவன் கேட்டுக் கொண்டே வந்து கொண்டே இருந்தான். மீண்டும் அவன் கேட்டான் எப்ப கல்யாணம்!!!!
பேருந்தில் இருந்து இளையராஜாவின் குரலில் ஒரு பாடல்
“ஆசை மட்டும் இல்லாத ஆள் ஏது கூறு…. அந்த வழி போகாத ஆள் எதுகூறு…
புத்தனும் போனா பாதை தான் பொம்பள என்னும் மோகம்தான்”
என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உன்ன பத்தி சொல்லு ஏன் எழுத போறீங்களா….. இல்ல சொல்லு .
சற்று நேரம் அமைதியாக இருந்தாள்
பேருந்து பொள்ளாச்சி வந்தடைந்தது பேருந்தில் இருந்து கீழே இறங்கி சுரங்கப்பாதை வழியாக இருவரும் நடந்து மறுபுறம் சென்றனர்.
அங்கு கேரளா செல்லும் பேருந்துகள் வெள்ள நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் நின்று கொண்டிருந்தன.
வெள்ளை நிற பேருந்தில் அழகாக மலையாளத்திலும் தமிழிலும் அந்தப் பேருந்து செல்லும் ஊர் பொறிக்கப்பட்டு இருந்தது அவள் அந்தப் பேருந்து உள்ளே ஏறி முன்னாள் அமர்ந்தாள்.பேருந்து
செல்ல நேரமாயிற்று .
அவள் பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.அவன் ஜன்னலுக்கு நேராகவே நின்று கொண்டிருந்தான், பேருந்து செல்ல ரெடியாக இருந்தது. அவன் அவளைப் பார்த்து கேட்டான்
எப்ப சொல்லுவ!! எப்ப சொல்லுவ !!
நான் கல்லூரி போயிட்டு ,கால் பண்றேன், இல்ல மெசேஜ் பண்றேன்.
வெகு நேரமாக அங்கேயே நின்றுக் கொண்டு அந்த பேருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
பேருந்து சென்று கொண்டே இருந்தது….
அவனிடமிருந்து பேருந்து வெகுத் தூரம் சென்று விட்டது. அவன் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டே இருக்கிறான்.
எப்ப சொல்லுவ எப்ப சொல்லுவன்னு……..
அங்கு அவனை சுற்றி யாரும் இல்லை
அவன் மட்டுமே தனியாக நின்று கொண்டு இருக்கிறான்.
அவளுடைய பதிலுக்காக….
ஒரு மாதத்திற்குப் பின் மெசேஜ் வந்தது நாளை நான் காலேஜ் போறேன் எத்தனை மணிக்கு என்று அவன் கேட்க எப்பவும் போல தான் என்றாள் அவள்.
சற்று தாமதமாகவே பேருந்து நிலையத்திற்கு சென்றான் இல்லையென்றால் அரை மணி நேரத்துக்கு முன்பாக போய் காத்திருப்பான் .பேருந்து வந்தது .அவள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். பேருந்தில் இருந்தவளே தூரத்தில் இருந்து கண்டு கொண்டு விட்டான் அவன்.