• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
9


மதியம் மூன்று மணிக்குள் வேலையை முடித்துகே கிளம்பி வரும் வழியில், கார் திடீரென்று நின்றுவிட்டது. கீழே இறங்கி இன்ஜின் முழுவதையும் பார்த்தவனின் கண்களுக்கு, ஒன்றும் புரிபடாமல் போக, “சே! இன்னைக்குப் பார்த்தா இந்தகே கார் வேற காலை வாரும். என்ன பண்ணலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தவனை, ஒரு கார் தாண்டிச் சென்று பின் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தது. காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்து அதிர்ந்தவன், பின், “ராகவன் அங்கிள்” என்றான்.

“என்ன தம்பி இங்க நிற்கிறீங்க? யாருக்காவது வெய்ட்டிங்கா?”

“அதெல்லாம் இல்ல. கார் நின்னுருச்சி. என்னன்னு எனக்கு தெரியல. எனக்குத் தெரிஞ்சவரை செக் பண்ணிட்டேன். மெக்கானிக் தான் வரணும் போலிருக்கு.”

“ஏன் தம்பி என்னைப் பார்த்தா மெக்கானிக்கா தெரியலையா? கார் ரிப்பேருக்கா இவ்வளவு டென்சன். எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல?”

“சாரி அங்கிள். மறந்திட்டேன்.”

“சரி நகருங்க” என்று காரை நெருங்கி, ஐந்து நிமிடத்தில் காரின் பிரச்சனையைக் கண்டவர், சரணிடம் திரும்பி, “தம்பி நான் என்னோட செட் வரைக்கும் ஓடுற மாதிரி வண்டியை ரெடி பண்ணித தர்றேன். சரி பண்ண எப்படியும் இரண்டு மணிநேரமாகும். இதுக்கான பார்ட்ஸ் கடையில இருக்கா தெரியல. இல்லன்னா வெளில போய் தான் வாங்கணும். காத்திருந்து எடுத்துட்டுப் போறீங்களா? இல்லை நாளைக்கு வர்றதா இருந்தாலும் சரி” என்றார்.

“சரி அங்கிள். நான் நாளைக்குக் காலையில வந்து எடுத்துக்கறேன்” என்றவனிடம், “சரி செட்ல என்னோட பைக் இருக்கு. எடுத்துட்டுப் போயி நாளைக்குக் காலைல வேலைக்குப் போகும் போது, காரை எடுத்துட்டுப் போங்க”

“ஓகே அங்கிள். ரொம்ப தேங்க்ஸ். இந்த வாங்க போங்க குறைக்கலாமே?”

“கண்டிப்பா குறைக்க முயற்சி பண்றேன்.”

“அப்பக்கூட முயற்சிதானா?” என்றான் கேலியாக.

அவனிடம் பேசிக் கொண்டே காரை சரி பண்ணியவர், “ரெடி ஆகிருச்சி. நீங்க காரை எடுங்க” என்று சொல்லி காரை சரண் செட்டில் விட்டு வீடு வந்தான். வீடு வந்ததும் தான் போன் காரில்விட்டு வந்தது தெரிய, அந்த நம்பருக்கு போன் செய்து, ராகவனிடம் எடுத்து வைக்கச் சொன்னான்.

இரவு எட்டு மணியளவில் சேகருக்கு போன் செய்து, “நியாபகம் வந்ததா அங்கிள்?” என கேட்டதற்கு அவன் எதிர்பார்த்த பதில் வரவில்லை என்றதும், “அங்கிள் இன்னும் முழுசா ஒரு நாள்தான் இருக்கு. நல்லா நியாபகப்படுத்திப் பாருங்க. அவனைப் பற்றி வேற தகவல் கிடைத்தாலும் உடனே சொல்லுங்க” என்று போனை வைத்தான்.

மறுபடியும் கைபேசியில் அழைத்து தன்னுடைய எம்டியை பிடிக்க, “சாரி சார். நைட்ல டிஸ்டர்ப் பண்றதுக்கு. உங்க ப்ரண்ட் சன் எதாவது சொன்னாரா சார். எதாவது நியூஸ் கிடைச்சிதா? டைம் ரொம்ப கம்மியா இருக்கு சார்” என்றான் தவிப்புடன்.

“சரண் கூல். ஏன் இவ்வளவு டென்சன்?”

“நேரம் ஆக ஆக பயமாயிருக்கு சார்.”

“நீ பயப்படுறியா சரண்? லக்கிதான் அந்தப் பொண்ணு. நாளைக்குள்ள எப்படியும் இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டி, அந்தப் பொண்ணை சேஃபா காப்பாத்திரலாம். கம்பெனியில எனக்கே தெரியாத சில விஷயங்களை அசால்ட்டா செய்றவன் நீ. போய் நிம்மதியா தூங்கு” என்றார் ஆதரவாக.

“தேங்க்யூ சார். நான் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன். பை சார்” என்ற போனை வைத்தவனுக்கு, கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

தங்கை வேறு இரண்டு நாள் முன்னாடி கேட்ட கேள்வி மனதில் வந்து போனது. ஜாதகம் பார்த்த அன்று இரவு, “நீ யாரையாவது காதலிக்கிறியாண்ணா?” என்று கேட்டதும் திடுக்கிட்டவன் பின் அவளின் தலையை லேசாகத் தட்டி, “என்னடா திடீர்னு இப்படி ஒரு கேள்வி?”

“அண்ணா இன்னைக்கு அப்பா ஜாதகம் பார்க்கப் போனாங்க தான? அங்க இன்னும் ஐந்து நாளுக்குள்ள உங்க பையனுக்கு மேரேஜ் ஆகிரும்னு சொன்னாங்களாம்.”

“என்னப்பா இதெல்லாம்?” என்று தந்தையிடம் கேட்க, “நிஜம் தான்பா. அவர் அடிச்சி சொல்றார் கண்டிப்பா நடக்கும்னு.”

தனுவின் முகம் நினைவு வந்தாலும், அவளின் முடிவும் நினைவு வர, “அப்படில்லாம் இல்லப்பா. உங்களுக்குத் தெரியாம நான் எப்படிப்பா” என்று சொல்லி அன்றைய பிரச்சனையை முடித்தான்.

ஆனால், இன்று என்ன முயன்றும் அவன் முகத்தின் வேதனையை மறைக்க முடியாமல் சாப்பிடும் வேளையில் மாட்டினான்.

“என்னடா எதாவது பிரச்சனையா? கொஞ்ச நாளா நானும் பார்க்கிறேன். முகத்துல ஒரு உணர்ச்சியும் இல்லாம, எதோ ஒரு டென்சன்ல இருக்கிற. என்ன பிரச்சனைனாலும் சொல்லு? ஞாயிற்றுக் கிழமை உன் தங்கைக்கு நிச்சயம் பண்ணுறோம். எதுக்கு பொண்ணு பார்க்கிறது தனியான்னு நிச்சயதார்த்தம் பண்ணிரலாம்னு சொல்லிட்டாங்க. நானும் சரின்னுட்டேன். இதை உன்கிட்ட உட்கார்ந்து பேசக் கூட டைம் இல்லை. வேலையில பிரச்சனைனு மழுப்பாத. எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அசால்ட்டா சமாளிச்சிருவன்னு தெரியும். அதுக்கும் மேல ஏதோ இருக்கு” என்றார்.

“ஆமாண்ணா. நீ இப்படி இருக்கிறதை என்னால தாங்க முடியலை. ப்ளீஸ் என்னன்னு சொல்லுண்ணா?”

அவர்களை ரொம்ப சங்கடப் படுத்த வேண்டாம் என்று நினைத்தவன், “அப்பா, அத்தையோட ஹாஸ்டல்ல இருக்கிற ஒரு பொண்ணுக்கு பிரச்சனை” என்று அனைத்தையும் சொல்லி முடித்தான். அவளை நேசித்ததையோ, அதை அவள் மறுத்ததையோ மறைத்தவன், “இதனால அத்தைக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தான் கொஞ்சம் டென்சனா இருக்கு.”

“புரியுதுடா. நான் எதுவும் ஹெல்ப் பண்ணனுமா?”

“இல்லப்பா. நாளைக்குள்ள அவனைப் பற்றிய எல்லா விஷயமும் வெளில வந்துரும். எப்படியும் ரெண்டு நாள்ல சால்வ் ஆகிரும். அதுவரை நீங்க கொஞ்சம் நிச்சய வேலையைப் பார்த்துக்கோங்கப்பா.”

“சாரிடா குட்டிமா. என்னால முழு வேலை பார்க்க முடியல. உன் கல்யாணத்தோட நான் முழுக்க முழுக்க உன்னோடவே இருப்பேன்” என்று உறுதி அளித்தான்.

“பரவாயில்லண்ணா. நீ உன் பிரச்சனையை முதல்ல முடி.”

“சரி சாப்பிட்டு தூங்குங்க. மத்ததை காலையில பேசிக்கலாம்” என்று இருவரையும் அனுப்பினார் வெற்றி.

சாப்பிட்டு தன்னறைக்கு வந்தவன் தாயிடம் அனைத்தையும் சொல்லிப் புலம்பி, ஒரு வழியாக தூங்கி, காலையில் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள, தங்கையோடு சேர்ந்து சமையலறைக் கலாட்டாக்கள் நடத்தினான்.

அனைவரும் வேலைக்குச் செல்லத் தயாராக நியாவிற்கு அடிபட்டிருப்பதால், ஆயிரம் அறிவுரைகளுடன் ஸ்கூட்டிக்கு தடா சொல்லி தந்தையுடன் அனுப்பி வைத்து, ராகவன் கடை நோக்கிச் சென்றான். அங்கிருக்கும் அதிர்ச்சி அறியாமல்.

ஒர்க் ஷாப்பில் காரைவிட்டு இறங்கிய சரணை எதிர்கொண்ட ராகவன், “போன் இல்லாம சிரமப்பட்டீங்களா தம்பி?” என கேட்டதும், “இல்ல அங்கிள். இது கம்பெனிக்கு மட்டும் யூஸ் பண்றது. அந்த நம்பர்ஸ் இன்னொரு செல்லுலயும் இருக்கும். அதனாலதான் இப்ப வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்.”

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் தம்பி தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க கார்ல போன் இருக்குன்னு சொன்னதும் பையனை விட்டு எடுத்துட்டு வரச் சொன்னேன். அவன் வர்றதுக்குள்ள ஒரு ஆர்வத்துல நோண்டிட்டான். நான் சத்தம் போட்டு வாங்கிப் பார்த்தா இந்தப் படம் இருந்தது. இவனைத் தெரியுமா தம்பி? உங்க ப்ரண்டா?” என்றார்.

“அங்கிள் இவனை உங்களுக்குத் தெரியுமா? இவனைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் தான் திணறுறேன்.”

“தம்பி என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. அன்னைக்கு பார்க்கில் நடந்த தப்புக்கு இவன் தான் மூல காரணம். வேண்டாம்னு சொல்லச் சொல்ல வலுக்கட்டாயமா ட்ரக்ஸ் கொடுத்தான்னு சொன்னேன்ல? அது இவன்தான். இவன் போட்டோ உங்க மொபைல்ல எப்படி?” என்று சரணின் முகம் பார்த்தார்.

அவன் முகம் கடுக்க கோவத்தின் உச்சியில் நின்றிருந்தான். ‘அவனை... அந்தச் சரவணனை லேசா எடை போட்டுட்டோமோ? ட்ரக்ஸ் சேல் பண்றான்னா அவன் எதுக்கும் துணிஞ்சவனா இருக்கணும். இவன்கிட்ட இருந்து தனுவை எந்தச சேதாரமும் இல்லாம காப்பாத்தணும். என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்? சரண் உனக்கு நிறைய அவகாசம் இல்லை. சீக்கிரம் முடிவெடு. அவனுடைய டார்கெட் தனு. நாளைக்கு காலை வரை தான் டைம்’ என்று யோசித்தபடி மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்தவனை தட்டி? “என்னாச்சி? எதுவும் பிரச்சனையா? என்றதும்,

“அன்னைக்குப் பார்த்தீங்கள்ல அங்கிள் ஆராதனா” என்று அவளின் பிரச்சனைகளைச் சொல்லி, “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். பண்ணுவீங்களா?” என கேட்டான்.

“என்ன உதவினாலும் நான் செய்றேன்? என்ன செய்யணும்?”

“நான் சொல்ற நேரத்துக்கு, சொல்ற இடத்துக்கு வரணும். அங்க வந்து நீங்க என்கிட்ட சொன்னதைச் சொன்னா போதும். உங்களுக்கு வேற எந்த பிரச்சனையும் இல்லாம நான் பார்த்துக்கறேன்” என்றான்.

“பிரச்சனை என்ன பெரிய பிரச்சனை. நீ எங்க கூப்பிட்டாலும் வர்றேன்பா. நீ கவலைப்படாம போ” என்று தைரியமளித்து அனுப்பினார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அங்கிருந்து கிளம்பி அலுவலகத்திற்குள் நுழையும் முன், சேகரை அழைத்து விஷயத்தின் அவசரத் தன்மையைச சொல்லி, ஆராதனா பயப்படாத அளவிற்கு விஷயத்தை மேலோட்டமாகச் சொல்லச் சொன்னான். அப்படியே தான் அழைக்கும் நேரம் வந்து சந்திக்கச் சொல்லி போனை வைத்தவன், நேரே நிர்வாக இயக்குனர் அறைக்குச் செல்ல அவர் வரவில்லை என்றதும், தன் இடத்துக்குச் செல்ல நடந்தவன், திடீரென்று அப்படியே நின்றான். காரணம் சிவா.

சக்தியின் இருப்பிடத்தில் கடிதம் வைத்துவிட்டு ரோஜாப்பூ வைக்க குனிய, சரண் தோள் தட்டியதும் பதறிப்போய் திரும்பினான். டேபிளில் வைக்கப் போன ரோஜா கையிலேயே இருக்க, “என்ன சிவா லவ்வா?” என்றான்.

அசடுவழிய சிரித்து, “ஆமாம்” என்று தலையசைத்தான்.

“நேர்ல சொல்லியாச்சா?”

“இல்ல சரண். இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுறேன்.”

“பூவை ஏன் எடுத்த? அதைக் கீழே வை” என்று அவனிடம் இருந்து வாங்கி அங்கிருந்த கடிதத்தைக் கவனிக்காமல் அதன் மேல் வைக்க,

அப்பொழுது தான் வந்த சக்தியும், ஷோபியும் அதைப் பார்க்க, சக்திக்கு சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கலாம் போலிருந்தது. ‘இன்னொருவன் அருகில் இருக்கும் போதே தைரியமா பூ வைக்கிறான்னா, என்மேல அவ்வளவு லவ்வா?’ என்று நினைத்து மகிழ்ச்சியில் துள்ளியவள், மறந்தும் அருகில் நின்றிருந்த சிவாவை இதில் சம்பந்தப்படுத்தவில்லை.

பூவை வைத்துவிட்டு சிவாவுடன் சென்ற சரண், “எதுவாயிருந்தாலும் நேர்ல பேசிக்கோங்க. அவங்க பூவை நீ எடுக்கிறதைப் பார்த்தா அனாவசியமான பேச்சி வரும்” என்று சொல்லிச் சென்றான்.

சிவாவோ, ‘என்ன சொல்றான் இவன். நான் வச்சது தெரியாம, அவளோடதை நான் எடுக்கிறதா புரிஞ்சிக்கிட்டானா?’ என்று குழம்பி தன் இருப்பிடம் சென்றான்.

நிர்வாக இயக்குனர் வந்ததும் அவரைத் தேடி வந்த சரண், அவரின் அனுமதி கேட்டு உள்ளே வந்து வணக்கம் வைத்து, எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தவன் அவரிடம் சரவணனைப் பற்றிய உண்மையைச் சொன்னான். உடனே இன்ஸ்பெக்டரை அழைத்து பேசினார் நாராயணன்.

“அவரை உடனே வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்க. என்னோட நம்பரை அவருக்குகே கொடுத்துகே கான்டாக்ட் பண்ணச் சொல்லுங்க அங்கிள். மத்ததை நான் பார்த்துக்கறேன்” என்ற பதில் எதிரில் இருந்து வந்தது.

“சரிப்பா. இதோ அனுப்புறேன்” என்று நம்பர் கொடுத்து, “இன்ஸ்பெக்டர் பேரு முகிலன். பெயர் பதிஞ்சிக்க. எதாவது ஹெல்ப் வேணும்னா கேளு. உன் வேலையை இன்னைக்கு வசந்தியைப் பார்க்கச் சொல்றேன். ஈவ்னிங் ஒரு அரைமணி நேரம் ஆபீஸ் வந்து செக் பண்ணிரு போதும்” என்றார்.

“தேங்க் யூ சார். இந்த உதவியை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்” என்று வெளியே வந்தவன் மற்ற இருவருக்கும் அழைத்து விவரம் சொல்லி, முகிலன் சொன்ன இடத்துக்கு வரச் சொன்னான்.

சேகரும், “அந்தப் பொண்ணுங்களை ஆபீஸில் விட போயிட்டிருக்கேன் விட்டுட்டு அரைமணி நேரத்துல வந்திருவேன்” என்று போனை வைத்தவர் பெண்கள் இருவரும் ஆட்டோவில் இருந்து இறங்கும் பொழுது, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா ஆராதனா” என்றார்.

“என்ன அங்கிள்? என்ன பேசணும்? ரொம்ப டென்சனா தெரியுறீங்க. எதாவது பிரச்சனையா? யாருக்கு.?”

“உனக்குத்தான்மா பிரச்சனை. உனக்கு மட்டும் தான்” என்றார்.

“எனக்கா?” என்று அதிர்ந்தவள், “என்ன சொல்றீங்க? எனக்கென்ன பிரச்சனை வரப்போகுது? குழப்பாம கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க?” என கேட்டாள்.

“சரவணனால தான் வரப் போகுது.”

“சரவணன் அத்தானாலயா? எப்படி? ஏன்?” மனதிற்குள் பயம் எழுந்தாலும் அதை வெளிக்காட்டாது கேட்டாள்.

“அவன் உன் அத்தைப் பையனா இருக்க மாட்டான்மா” என்று அவர் முன்தினம் நேரடியாக பார்த்தது. இப்பொழுது சரண் சொன்ன தகவல்கள் அனைத்தும் சொல்ல, ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது ஆராதனாவிற்கு.

‘கடவுளே! எனக்கேத் தெரியாம எவ்வளவு பெரிய சதியில மாட்டிட்டுருக்கேன்’ என்று யோசனையில் இருந்தவளிடம், “இன்னைக்குள்ள பிடிச்சிருவாங்கம்மா. அதுக்கும் மீறி உன்கிட்ட வந்தா எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. நான் வர்றேன்மா” என்று கிளம்பினார்.

‘பிரச்சனை உனக்குதான்’ என்று சொன்னதும், என்ன செய்வதென்று செய்வதறியாது குழந்தை போல் திகைத்து நின்றவளை, உலுக்கிய வேதவல்லி, “உனக்கு இன்னும் அவன் உன் அத்தான் தான்னு தோணுதா ஆரு.”

“ப்ச்.. இல்ல. எனக்கு கொஞ்சம் யோசிக்கணும். இன்னைக்கு லீவ் எடுக்கலாமா?”

“ட்ரெயினிங் லாஸ்ட் மன்த் ஆரு. லீவ் தரமாட்டாங்க. வேணும்னா ஒரு ஒன் ஹவர் பெர்மிஷன் கேட்டு, அமைதியான இடமாக பார்த்து உட்காரு” என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று அனுமதி வாங்கி அனுப்பி வைத்தாள் வேதவல்லி.

நிறுவனத்தின் முன்னாள் இருந்த பிள்ளையார் கோவிலின் அருகில் இருந்த மரத்தடியில் அமர்ந்தவள் யோசிக்கலானாள்.

ஒருத்தரை நல்லவராகப் பார்த்தால், அவர் செய்யும் காரியங்கள் கெட்டவையாக இருந்தாலும், அதிலுள்ள நல்லது மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். அவரே ஏதோ ஒரு வகையில் குற்றவாளியானால், அவர் செய்த அனைத்துகே கெட்டதும் ஒன்றன் பின் ஒன்றாக நம் கண்ணிற்கு புலப்படும்

அதைப் போலவே முன்னர் அவனின் சின்னச் சின்ன தவறுகளில் எல்லாம் நல்லதை மட்டுமே பார்த்த ஆராதனாவிற்கு, அவன் கெட்டவன் என்று மனதில் பதியா, அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ஆராயத் தோன்றியது.

முதன் முதலாக அவனைப் பார்க்கும் பொழுது, அவளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக நண்பனை பெயர் சொல்லி அழைத்து, நடுரோட்டில் குடும்ப விஷயம் முழுவதும் பகிர்ந்தது. அப்பொழுது, அந்த இடத்தில்தான் யோசித்தாள் ஆராதனா.

‘ப்ளான் பண்ணி நானே அவனிடம் வலிய போய் பேசுற மாதிரி வச்சிருக்கான். கூடவே இருக்கிற நண்பன்கிட்ட ரூம்ல ஷேர் பண்ணிக்காத விஷயத்தையா நடுரோட்டுல பேசுவாங்க. ஆனா, எப்படி என்னுடைய விஷயம் இவனுக்கு? கடவுளே! அன்னைக்கு பார்க்கில் நானும் வேதாவும் பேசிட்டிருந்தோமே. இவன் அங்கதான் இருந்தானா? சே... இப்படி அக்கம் பக்கம் பார்க்காம பேசிட்டு, அவனைக் குறை சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கு. எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன். அதுக்கு நானே காரணமாகவும் இருந்திருக்கேன். ஒரு பத்து நிமிஷ பேச்சில என்னை ஒருத்தன் முட்டாளா ஆக்கியிருக்கான்னா, அந்த அளவுக்கா அத்தான் மேல அன்பு வச்சிருந்திருந்தேன்.’

‘எது என் கண்ணைக் கட்டிபோட்டுச்சி? என் பாட்டி சொன்ன வார்த்தையா? என்னை முட்டாளாக்கி, அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தப் பார்த்த இந்த அன்பு தேவையா? நோ தேவையேயில்ல. இனி என் அத்தானைத் தேடமாட்டேன். இது என்னோட வாழ்க்கை. அதை இந்த மாதிரி சீப்பான எண்ணங்களுக்கு மதிப்புகே கொடுத்து கெடுத்துக்கமாட்டேன். கடைசியா அவனை ஒரு முறை பார்த்து நான் கேட்கணும். இல்ல என்னை ஏமாத்தினதுக்கு அவனை பனிஷ் பண்ணனும். அதுவும் என் கையால” என்றவள் விரக்திப் புன்னகை செய்தாள்.

‘ஹ்ம்... எல்லாரும் ஆரா புத்திசாலின்னு சொன்னதுல எனக்கு கொஞ்சம் தலைக்கனம் ஏறிரூச்சின்னு நினைக்கிறேன். கடவுளாகப் பார்த்து எனக்கு வச்சான் பாரு ஆப்பு’ என்று விநாயகரை திரும்பிப் பார்த்து சிரித்தாள். “என்ன விநாயகா ரொம்ப ஆடிட்டேனா? பெத்தவங்களை மதிக்காம வந்ததுக்கு ஆடாம அப்பா, அம்மா சொல்லைக் கேட்கணும்னு தான், இப்படி ஒரு விளையாட்டு நடத்தி அடக்கிட்டியா? ஆனாலும், கொஞ்சம் ஷாக் அதிகம். இனிமேல் எல்லா வகையிலும் உஷாராகவே இருக்கேன். என்ன எங்கப்பனைப் பெத்த கிழவி ஆன்மா கொஞ்சம் வருத்தப்படும். அவங்க ஆசையை என்னால நிறைவேற்ற முடியாது. ப்ச்... போயிட்டுப் போகட்டும். பாட்டி என்ன பக்கத்துல இருந்தா பார்த்துக்கிட்டிருக்காங்க. என்னை அவங்க மன்னிக்க அமாவாசைக்கு அமாவாசை அவங்களுக்குப் பிடிச்சதா செஞ்சு படையல் போட்டு மனசைக் குளிர வைக்க வேண்டியதுதான்.”

‘ம்... என்னைப் பற்றின விஷயம், என்னைத் தவிர எல்லாருக்கும் தெரியுது. இன்க்ளுடிங் சரண். அவன் எப்படி என் கதையில என்ட்ரியானான்னு தெரியலை. ம்.. நல்லவன் தான் பார்க்கலாம். விதிவிட்ட வழி நானும் போறேன்” என்று சின்ன பெருமூச்சுடன் எழுந்தாள்.

ஆராதனா வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுத் தானும் செல்ல முடிவெடுத்ததால் மனச்சுமைகள் இறங்க, மனதின் தெளிவில் முகமும் பளிச்சிட்டது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top