- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
9
மதியம் மூன்று மணிக்குள் வேலையை முடித்துகே கிளம்பி வரும் வழியில், கார் திடீரென்று நின்றுவிட்டது. கீழே இறங்கி இன்ஜின் முழுவதையும் பார்த்தவனின் கண்களுக்கு, ஒன்றும் புரிபடாமல் போக, “சே! இன்னைக்குப் பார்த்தா இந்தகே கார் வேற காலை வாரும். என்ன பண்ணலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தவனை, ஒரு கார் தாண்டிச் சென்று பின் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தது. காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்து அதிர்ந்தவன், பின், “ராகவன் அங்கிள்” என்றான்.
“என்ன தம்பி இங்க நிற்கிறீங்க? யாருக்காவது வெய்ட்டிங்கா?”
“அதெல்லாம் இல்ல. கார் நின்னுருச்சி. என்னன்னு எனக்கு தெரியல. எனக்குத் தெரிஞ்சவரை செக் பண்ணிட்டேன். மெக்கானிக் தான் வரணும் போலிருக்கு.”
“ஏன் தம்பி என்னைப் பார்த்தா மெக்கானிக்கா தெரியலையா? கார் ரிப்பேருக்கா இவ்வளவு டென்சன். எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல?”
“சாரி அங்கிள். மறந்திட்டேன்.”
“சரி நகருங்க” என்று காரை நெருங்கி, ஐந்து நிமிடத்தில் காரின் பிரச்சனையைக் கண்டவர், சரணிடம் திரும்பி, “தம்பி நான் என்னோட செட் வரைக்கும் ஓடுற மாதிரி வண்டியை ரெடி பண்ணித தர்றேன். சரி பண்ண எப்படியும் இரண்டு மணிநேரமாகும். இதுக்கான பார்ட்ஸ் கடையில இருக்கா தெரியல. இல்லன்னா வெளில போய் தான் வாங்கணும். காத்திருந்து எடுத்துட்டுப் போறீங்களா? இல்லை நாளைக்கு வர்றதா இருந்தாலும் சரி” என்றார்.
“சரி அங்கிள். நான் நாளைக்குக் காலையில வந்து எடுத்துக்கறேன்” என்றவனிடம், “சரி செட்ல என்னோட பைக் இருக்கு. எடுத்துட்டுப் போயி நாளைக்குக் காலைல வேலைக்குப் போகும் போது, காரை எடுத்துட்டுப் போங்க”
“ஓகே அங்கிள். ரொம்ப தேங்க்ஸ். இந்த வாங்க போங்க குறைக்கலாமே?”
“கண்டிப்பா குறைக்க முயற்சி பண்றேன்.”
“அப்பக்கூட முயற்சிதானா?” என்றான் கேலியாக.
அவனிடம் பேசிக் கொண்டே காரை சரி பண்ணியவர், “ரெடி ஆகிருச்சி. நீங்க காரை எடுங்க” என்று சொல்லி காரை சரண் செட்டில் விட்டு வீடு வந்தான். வீடு வந்ததும் தான் போன் காரில்விட்டு வந்தது தெரிய, அந்த நம்பருக்கு போன் செய்து, ராகவனிடம் எடுத்து வைக்கச் சொன்னான்.
இரவு எட்டு மணியளவில் சேகருக்கு போன் செய்து, “நியாபகம் வந்ததா அங்கிள்?” என கேட்டதற்கு அவன் எதிர்பார்த்த பதில் வரவில்லை என்றதும், “அங்கிள் இன்னும் முழுசா ஒரு நாள்தான் இருக்கு. நல்லா நியாபகப்படுத்திப் பாருங்க. அவனைப் பற்றி வேற தகவல் கிடைத்தாலும் உடனே சொல்லுங்க” என்று போனை வைத்தான்.
மறுபடியும் கைபேசியில் அழைத்து தன்னுடைய எம்டியை பிடிக்க, “சாரி சார். நைட்ல டிஸ்டர்ப் பண்றதுக்கு. உங்க ப்ரண்ட் சன் எதாவது சொன்னாரா சார். எதாவது நியூஸ் கிடைச்சிதா? டைம் ரொம்ப கம்மியா இருக்கு சார்” என்றான் தவிப்புடன்.
“சரண் கூல். ஏன் இவ்வளவு டென்சன்?”
“நேரம் ஆக ஆக பயமாயிருக்கு சார்.”
“நீ பயப்படுறியா சரண்? லக்கிதான் அந்தப் பொண்ணு. நாளைக்குள்ள எப்படியும் இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டி, அந்தப் பொண்ணை சேஃபா காப்பாத்திரலாம். கம்பெனியில எனக்கே தெரியாத சில விஷயங்களை அசால்ட்டா செய்றவன் நீ. போய் நிம்மதியா தூங்கு” என்றார் ஆதரவாக.
“தேங்க்யூ சார். நான் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன். பை சார்” என்ற போனை வைத்தவனுக்கு, கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
தங்கை வேறு இரண்டு நாள் முன்னாடி கேட்ட கேள்வி மனதில் வந்து போனது. ஜாதகம் பார்த்த அன்று இரவு, “நீ யாரையாவது காதலிக்கிறியாண்ணா?” என்று கேட்டதும் திடுக்கிட்டவன் பின் அவளின் தலையை லேசாகத் தட்டி, “என்னடா திடீர்னு இப்படி ஒரு கேள்வி?”
“அண்ணா இன்னைக்கு அப்பா ஜாதகம் பார்க்கப் போனாங்க தான? அங்க இன்னும் ஐந்து நாளுக்குள்ள உங்க பையனுக்கு மேரேஜ் ஆகிரும்னு சொன்னாங்களாம்.”
“என்னப்பா இதெல்லாம்?” என்று தந்தையிடம் கேட்க, “நிஜம் தான்பா. அவர் அடிச்சி சொல்றார் கண்டிப்பா நடக்கும்னு.”
தனுவின் முகம் நினைவு வந்தாலும், அவளின் முடிவும் நினைவு வர, “அப்படில்லாம் இல்லப்பா. உங்களுக்குத் தெரியாம நான் எப்படிப்பா” என்று சொல்லி அன்றைய பிரச்சனையை முடித்தான்.
ஆனால், இன்று என்ன முயன்றும் அவன் முகத்தின் வேதனையை மறைக்க முடியாமல் சாப்பிடும் வேளையில் மாட்டினான்.
“என்னடா எதாவது பிரச்சனையா? கொஞ்ச நாளா நானும் பார்க்கிறேன். முகத்துல ஒரு உணர்ச்சியும் இல்லாம, எதோ ஒரு டென்சன்ல இருக்கிற. என்ன பிரச்சனைனாலும் சொல்லு? ஞாயிற்றுக் கிழமை உன் தங்கைக்கு நிச்சயம் பண்ணுறோம். எதுக்கு பொண்ணு பார்க்கிறது தனியான்னு நிச்சயதார்த்தம் பண்ணிரலாம்னு சொல்லிட்டாங்க. நானும் சரின்னுட்டேன். இதை உன்கிட்ட உட்கார்ந்து பேசக் கூட டைம் இல்லை. வேலையில பிரச்சனைனு மழுப்பாத. எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அசால்ட்டா சமாளிச்சிருவன்னு தெரியும். அதுக்கும் மேல ஏதோ இருக்கு” என்றார்.
“ஆமாண்ணா. நீ இப்படி இருக்கிறதை என்னால தாங்க முடியலை. ப்ளீஸ் என்னன்னு சொல்லுண்ணா?”
அவர்களை ரொம்ப சங்கடப் படுத்த வேண்டாம் என்று நினைத்தவன், “அப்பா, அத்தையோட ஹாஸ்டல்ல இருக்கிற ஒரு பொண்ணுக்கு பிரச்சனை” என்று அனைத்தையும் சொல்லி முடித்தான். அவளை நேசித்ததையோ, அதை அவள் மறுத்ததையோ மறைத்தவன், “இதனால அத்தைக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தான் கொஞ்சம் டென்சனா இருக்கு.”
“புரியுதுடா. நான் எதுவும் ஹெல்ப் பண்ணனுமா?”
“இல்லப்பா. நாளைக்குள்ள அவனைப் பற்றிய எல்லா விஷயமும் வெளில வந்துரும். எப்படியும் ரெண்டு நாள்ல சால்வ் ஆகிரும். அதுவரை நீங்க கொஞ்சம் நிச்சய வேலையைப் பார்த்துக்கோங்கப்பா.”
“சாரிடா குட்டிமா. என்னால முழு வேலை பார்க்க முடியல. உன் கல்யாணத்தோட நான் முழுக்க முழுக்க உன்னோடவே இருப்பேன்” என்று உறுதி அளித்தான்.
“பரவாயில்லண்ணா. நீ உன் பிரச்சனையை முதல்ல முடி.”
“சரி சாப்பிட்டு தூங்குங்க. மத்ததை காலையில பேசிக்கலாம்” என்று இருவரையும் அனுப்பினார் வெற்றி.
சாப்பிட்டு தன்னறைக்கு வந்தவன் தாயிடம் அனைத்தையும் சொல்லிப் புலம்பி, ஒரு வழியாக தூங்கி, காலையில் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள, தங்கையோடு சேர்ந்து சமையலறைக் கலாட்டாக்கள் நடத்தினான்.
அனைவரும் வேலைக்குச் செல்லத் தயாராக நியாவிற்கு அடிபட்டிருப்பதால், ஆயிரம் அறிவுரைகளுடன் ஸ்கூட்டிக்கு தடா சொல்லி தந்தையுடன் அனுப்பி வைத்து, ராகவன் கடை நோக்கிச் சென்றான். அங்கிருக்கும் அதிர்ச்சி அறியாமல்.
ஒர்க் ஷாப்பில் காரைவிட்டு இறங்கிய சரணை எதிர்கொண்ட ராகவன், “போன் இல்லாம சிரமப்பட்டீங்களா தம்பி?” என கேட்டதும், “இல்ல அங்கிள். இது கம்பெனிக்கு மட்டும் யூஸ் பண்றது. அந்த நம்பர்ஸ் இன்னொரு செல்லுலயும் இருக்கும். அதனாலதான் இப்ப வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்.”
“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் தம்பி தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க கார்ல போன் இருக்குன்னு சொன்னதும் பையனை விட்டு எடுத்துட்டு வரச் சொன்னேன். அவன் வர்றதுக்குள்ள ஒரு ஆர்வத்துல நோண்டிட்டான். நான் சத்தம் போட்டு வாங்கிப் பார்த்தா இந்தப் படம் இருந்தது. இவனைத் தெரியுமா தம்பி? உங்க ப்ரண்டா?” என்றார்.
“அங்கிள் இவனை உங்களுக்குத் தெரியுமா? இவனைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் தான் திணறுறேன்.”
“தம்பி என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. அன்னைக்கு பார்க்கில் நடந்த தப்புக்கு இவன் தான் மூல காரணம். வேண்டாம்னு சொல்லச் சொல்ல வலுக்கட்டாயமா ட்ரக்ஸ் கொடுத்தான்னு சொன்னேன்ல? அது இவன்தான். இவன் போட்டோ உங்க மொபைல்ல எப்படி?” என்று சரணின் முகம் பார்த்தார்.
அவன் முகம் கடுக்க கோவத்தின் உச்சியில் நின்றிருந்தான். ‘அவனை... அந்தச் சரவணனை லேசா எடை போட்டுட்டோமோ? ட்ரக்ஸ் சேல் பண்றான்னா அவன் எதுக்கும் துணிஞ்சவனா இருக்கணும். இவன்கிட்ட இருந்து தனுவை எந்தச சேதாரமும் இல்லாம காப்பாத்தணும். என்ன பண்ணலாம்? என்ன பண்ணலாம்? சரண் உனக்கு நிறைய அவகாசம் இல்லை. சீக்கிரம் முடிவெடு. அவனுடைய டார்கெட் தனு. நாளைக்கு காலை வரை தான் டைம்’ என்று யோசித்தபடி மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்தவனை தட்டி? “என்னாச்சி? எதுவும் பிரச்சனையா? என்றதும்,
“அன்னைக்குப் பார்த்தீங்கள்ல அங்கிள் ஆராதனா” என்று அவளின் பிரச்சனைகளைச் சொல்லி, “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். பண்ணுவீங்களா?” என கேட்டான்.
“என்ன உதவினாலும் நான் செய்றேன்? என்ன செய்யணும்?”
“நான் சொல்ற நேரத்துக்கு, சொல்ற இடத்துக்கு வரணும். அங்க வந்து நீங்க என்கிட்ட சொன்னதைச் சொன்னா போதும். உங்களுக்கு வேற எந்த பிரச்சனையும் இல்லாம நான் பார்த்துக்கறேன்” என்றான்.
“பிரச்சனை என்ன பெரிய பிரச்சனை. நீ எங்க கூப்பிட்டாலும் வர்றேன்பா. நீ கவலைப்படாம போ” என்று தைரியமளித்து அனுப்பினார்.