• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
8


அவன் சேகரைப் பார்ப்பதற்கு அரைமணி நேரம் முன்பு, சரவணனிடமிருந்து ஆராதனாவிற்கு போன் வந்தது. “ஆரா கொஞ்சம் பேசணும். வெளிய போகலாமா?” என கேட்டான்.

“என்ன பேசணும் அத்தான்? எதுவா இருந்தாலும் போன்லயே பேசுங்க, என்னால எங்கேயும் வர முடியாது.”

“ஆரா ப்ளீஸ். சரி எதிர்ல இருக்கிற பார்க்கிற்காவது வா” என்றழைத்தான்.

முதலில் யோசித்தவள், “சரி வர்றேன். ஆனா, கொஞ்ச நேரம் தான். அப்புறம் கிளம்பிருவேன். சண்டே எனக்கு நிறைய வேலையிருக்கு” என்றாள் அவளும்.

“சரி சரி ஒரு பைவ் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்” என்று போனை வைத்தான்.

ஆராதனாவும், வேதவல்லியும் சில பொருள்கள் வாங்க வேண்டும் என்று கிளம்பிக் கொண்டிருந்ததால், சேகரை வரச் சொல்லியிருந்தார்கள். “வேதா, அத்தான் என்னைப் பார்க்கணுமாம். பார்க் வரச் சொன்னாங்க. என்னன்னு கேட்டுட்டு வந்துர்றேன். அங்கிள் வர்றதுக்குள்ள வந்திருவேன்” என்றாள்.

“என்னடி திடீர்னு?”

“தெரியலை. கேட்டுட்டு வர்றேன்” என்று கிளம்பிச் சென்றாள்.

பூங்காவில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைய, அங்கிருந்த இருக்கையில் சற்று இடைவெளி விட்டே உட்கார்ந்தார்கள். விடுதிக்கு எதிரில் உள்ள பூங்காதான். ஆனால், ஆராதனா அன்றைய சம்பவத்திற்குப் பின் இப்பொழுது தான் வருகிறாள். இதோ இப்பொழுதும் சரணின், ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ வார்த்தைகள் அச்சு பிசகாமல் மனதில் உழன்று கொண்டிருக்க,

அருகில் இருந்த சரவணனின், “ஆரா நாம கல்யாணம் பண்ணிக்குவோம்” என்ற வார்த்தை அவள் காதில் விழவேயில்லை. “என்ன பண்ணிக்கலாம்ல? உனக்குச் சம்மதம்தான? என்று கொஞ்சம் சத்தமாகவேக் கேட்டான்.

அச்சத்தத்தில் கடைசி வார்த்தையைக் கேட்டவள், “என்ன சம்மதம் தானன்னு கேட்குறீங்க?” என்றாள் கேள்வியாய்.

“நான் சொன்னதைக் கவனிக்கலையா ஆரா? நாம கல்யாணம் பண்ணிக்குவோம்னு சொன்னேன்.”

“என்னது கல்யாணமா? என்ன பேசறீங்கன்னு யோசிச்சித்தான் பேசறீங்களா? கல்யாணம் பண்ணிக்குவோம்னு ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க. எப்படி இப்படிலாம் யோசிக்கத் தோணிச்சி? என் பெர்மிஷன் இல்லாம நீங்களே முடிவு பண்ணுவீங்களா? உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதா நான் எப்ப சொன்னேன்?” என கேட்டாள் கோவத்தில்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகத் தான நீ சென்னைக்கு வந்ததே?” என்றான் இவனும்.

“அது... அது” என்று சற்றுத் தடுமாறியவள், பின் சுதாரித்து, “நான் கல்யாணம் உங்களை பண்ணிக்கப் போறேன்னு சொன்னேனா? யார் சொன்னது? அது சரி இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேள்விகளை அடுக்க,

இப்பொழுது முழிப்பது அவன் வேலையாயிற்று. “இ...இல்லை என்னை அத்தான்னு அன்பா கூப்பிடுறியா? அதான் நானே உன்னை என் மனைவிய கற்பனை பண்ணி...” என்று அவன் இழுத்தான்.

“ச்சீ... நிறுத்துங்க. என்ன பைத்தியக்காரத்தனம் இது. உங்க கற்பனைக்கெல்லாம் நான் ஆளில்லை. உங்களைக் கல்யாணம் பண்ணனும் என்ற ஐடியாவும் எனக்கு இல்லை. நான் அத்தான்னு கூப்பிட்டது உறவு முறையில. அதைத் தாண்டி எந்த உறவும் நமக்குள்ள இல்ல. புரியுதா?” என்றாள் அழுத்தமாக.

“என்ன ஆரா இப்படிச் சொல்லிட்ட? என் ப்ரண்ட்ஸ் எல்லாரிடமும் நாம கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்லிட்டேன்.”

“லூசால நீ. என்ன கேனத்தனமா பேசிட்டிருக்கா? அது ஒன்னோட ப்ராப்ளம். எனக்கும் அதுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை” என்றாள் கோவம் குறையாது.

“ஆரா! அவங்க கல்யாணத்துக்கு ரெடி பண்றாங்க” என்று எச்சில் முழுங்கியபடி கொஞ்சம் திணறலுடன் சொல்லி முடித்தான்.

“என்னது? ஏற்பாடு பண்றீங்களா? யாரைக் கேட்டு பண்ணினீங்க? எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. எனக்குன்னு மனசு இருக்கு. அதுல ஆசைகளும் இருக்கு. சும்மா பேத்தாம வேலையைப் பாருங்க. நீங்களா முடிவெடுக்குறதுக்கு நான் ஒண்ணும் நீங்க வச்சி விளையாடுற பொம்மை இல்லை. என் சம்பந்தப்பட்ட விஷயம் உங்க நண்பர்களோட பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும் சொல்லிட்டேன். என்கிட்ட இந்த அளவு உரிமை எடுக்கிறது எனக்குப் பிடிக்காது. இந்த மாதிரி லூசுத்தனமா பேசிட்டு என்னைப் பார்க்க வராதீங்க. அவ்வளவுதான் சொல்வேன்.”

“நான் இன்னும் ஒரு மாசத்துல ஊருக்கு கிளம்புவேன். அப்ப உங்களைக் கூப்பிட்டுப் போயி உங்க மாமாகிட்ட ஒப்படைக்கிறேன். அதுவரை, இங்க வா, அங்க வான்னு கூப்பிட்டா நான் பொல்லாதவளாகிருவேன். தேவைன்னா நானே கூப்பிட்டுக்கறேன். குட் பை” என்றாள்.

அவள் சென்று சிறிது நேரம் கழித்து, “என்னையவாடி லூசுன்ற. என் மாமன் மகளே. உன்னைக் கல்யாணம் பண்ணி, உன்னை.. உன் வாயை அடக்கல... நான் சரவணன் இல்லடி. என்னை ரொம்ப லேசா எடைபோட்டுட்டன்னு நினைக்கிறேன். வர்றேன்டி உன் திமிரை அடக்க” என்றவன் குரலில் இருந்த கோவம் எதற்கோ!

அவனைத் திட்டி வெளியே வந்தவள், “என்னடா ஆராவுக்கு வந்த சோதனை. இந்த பார்க்குக்கும் நமக்கும் கல்யாண ராசி போல. எவன் வந்தாலும் கல்யாணத்தைப் பற்றியே பேசுறான்” என புலம்பியபடியே மகளிர் விடுதியின் வாசல் நுழைய, சேகரும் அதே நேரம் வந்தார்.

“என்னம்மா எதாவது பிரச்சனையா? ஏன் புலம்பிட்டு வர்ற?”

“இல்ல அங்கிள். இந்த சரவணன் அத்தானைப் புரிஞ்சிக்கவே முடியல. இன்னைக்குத் திடீர்னு வந்து கல்யாணம் அது இதுன்னு என்னென்னவோ புலம்புறாங்க” என்றதும் உஷாரான சேகர், “எதுவாயிருந்தாலும் தெளிவா சொல்லுமா?” என்றார்.

பூங்காவில் இருவரும் பேசியதைச் சொல்லி, “சாரி அங்கிள். நாங்க இன்னைக்கு பர்சேஸ் போகல. தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள்.

“அதை விடுமா. இன்னொரு நாள் பார்த்துக்கலாம். மனசைப் போட்டுக் குழப்பிக்காம, ரெஸ்ட் எடுமா. நான் வர்றேன்” என்று கிளம்பினார்.

அறைக்குள் சென்ற ஆறாதனா தோழியிடம் புலம்பிக் கத்தித் தீர்த்தாள். “போதும்டி. வேணாம் வலிக்குது” என்று வேதவல்லி புலம்பும் அளவு போனது.

‘இதே வார்த்தையை சரண் கொஞ்சம் மாற்றிக் கேட்டாலும் கடைசியில் ஒரே அர்த்தம் தான். அவனிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னவள் இங்கே யாருக்காக ஊரை, உறவை விட்டு வந்தாளோ அதே அத்தைப் பையன், இன்று கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா, கத்திக் கலாட்டா பண்ணுறா. என்ன கொடுமை இது’ என்று புலம்பினாள் வேதவல்லி.

இதோ இப்பொழுது சேகரைச் சந்தித்த சரண், “என்ன அங்கிள்? என்னாச்சி? என்று கேட்க,

“ஒண்ணுமில்லை சரண். அந்தச் சரவணனைப் பற்றி, இன்னும் கொஞ்சம் தீவிரமா விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.”

“ஏன்? எதாவது பிரச்சனை பண்றானா?” என்று கொஞ்சம் பதற்றத்துடன் விசாரிக்க,

“அதெல்லாம் இல்ல. அப்படியே பிரச்சனைனாலும் அந்தப் பொண்ணே அவனை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிருவா. அவங்க ஊர் வழக்கப்படிச் சொன்னா சீவிருவா சீவி’ என்று சிரித்தார்.

அவளுக்குப் பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை என்று தோன்றியாதும் மனம் கொஞ்சம் நிம்மதியானது.

பின் ஆராதனாவிடம் பேசியதை அவனிடம் சொன்னார்.

“அங்கிள் ஆள் கொஞ்சம் டேஞ்சரா இருப்பான் போல. எதுக்கும் போலீஸ்ல சொல்லி விசாரிக்கணும். எங்க எம்டி மூலமா சைலன்ட்டா விசாரிக்க ரெடி பண்றேன். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.”

“போடா. இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு” என்று அவன் தோள்தட்டிக் கொடுத்தார்.

‘நீங்க கொடுத்த இன்பார்மேஷன் என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷம் கொடுத்ததுன்னு உங்களுக்குத் தெரியாது அங்கிள். யாருக்காக என்னை மறுத்தாளோ, அவனையே வேண்டாம்னு சொல்லியிருக்கா’ என்று மனதினுள் நினைத்து, “சரி கிளம்பறேன்” என்று வாய்மொழிந்து கிளம்ப,

“அத்தையைப் பார்க்கலையாப்பா?” என்றார் சேகர்.

“இல்ல அங்கிள் குட்டிமாக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட். அதனால, இந்நேரம் எல்லாரும் எங்க வீட்டுலதான் இருப்பாங்க” என்றதும் என்னவென்று பதற்றப்பட்டவரிடம், “லேசா சின்ன சிராய்ப்பு தான்” என்று பதிலளித்து, “அத்தைக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம் அங்கிள்” என்று சொல்லிக் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தால், தன் குடும்பம் முழுவதும் அங்கே இருந்தது. தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமா என்று அறிவுரை மழை பாதி, ஆறுதல் மழை மீதியென்று பொழிந்து கொண்டிருந்தது வீட்டிற்குள்.

உள்ளே நுழைந்ததும், “என்னத்தை யாரையோ பார்க்கப் போகணும்னு கிளம்புனீங்க பார்த்தாச்சா?”

“இல்லடா. அங்க போய்ச் சேர போன் வருது. அதான் அடுத்தவாரம் பார்த்துக்கலாம்னு வந்திட்டேன்.”

தங்கையிடம், “வலி எப்படி இருக்கு?” என்று விசாரித்தான்.

“பரவாயில்லண்ணா. ஐம் ஆல்ரைட்” என்றாள்.

வெற்றி, “போட்டோ பார்த்தியா பிடிச்சிருக்கா?” என்றதும் தான், காலையில் அத்தை கொடுத்துச் சென்ற புகைப்படம் நியாபகம் வந்தது. ‘அச்சோ! இதை எப்படி மறந்தேன். இந்த அத்தைதான் விடமாட்டாங்களே’ என்றவள் கண்முன் அந்த மருத்துவன் வந்து எட்டிப் பார்த்தான். ‘ப்ச்... அதெல்லாம் நடக்காத விஷயம். அவனே அவ்வளவுதான்னு சொல்லிட்டான். பி பராக்டிகல் நியா” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

“நான் பார்த்திட்டேன்கா. பையனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம பாப்பாக்கு ஏற்ற ஜோடி” என்று மற்றவர்களுக்கும் புகைப்படத்தைக் காண்பிக்க, சரணும், ராஜாவும் ஆச்சர்யப்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அது வேறு யாருமல்ல அந்த டாக்டரே தான். நியாவிடம் யாரென்று சொல்லாமல் புகைப்படத்தைக் காண்பிக்க, ஒரு கையால் தடுத்து, “வேண்டாம் நான் பார்க்கல. உங்களுக்குப் பிடிச்சா எனக்கு ஓகே தான்” என்றாள்.

“குட்டிமா கொஞ்சம் பாருடா. உனக்கும் பிடிக்கும்” என்ற அண்ணனிடம் மறுத்து, “உனக்குப் பிடிச்சிருக்குல்ல. அது போதும்” என்று உள்ளே சென்றாள்.

“அத்தை அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கும். எப்ப பார்க்க வர்றாங்க?”

“நாளைக்கே வரச் சொன்னாலும் வருவாங்க. நாளைக்கு அமாவாசை. போயி ஜாதகம் பார்த்துட்டு வந்து ஞாயிற்றுக்கிழமை வரச் சொல்லிரலாம்” என்று தம்பியிடம் திரும்பி, “அது யார் பையன்னு தெரியுமா? கூடவே ஜாதகம் இருந்துதே பார்க்கலையா?” என கேட்டார்.
“இல்லக்கா. பாப்பாக்கு அடிபட்டதும் எதுவும் தோணலை. இப்பதான் பார்க்கிறேன்.”

“என்ன அப்பன் நீ? உன் பொண்ணைப் பொண்ணு பார்க்க வர்றப்ப சம்பந்தி யாருன்னு தெரியாம, சபையில நிற்பியா? என்று தம்பியை கிண்டலடித்துவிட்டு, “அவன் உன்னோட ப்ரண்ட் ஈஸ்வரோட பையன் அசோக்டா” என்றார்.

“அக்கா நிஜமாவா? என்னால நம்பவே முடியலை. பையனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு அப்பவே நினைச்சேன்.”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சரணும் ஆச்சர்யத்துடன் தந்தையிடம் திரும்பி, “அப்பா இன்னொரு விஷயம். இவ அடிபட்டது அவரோட கார்லதான். அவர்தான் அவளுக்கு கட்டுப் போட்டு ஊசி போட்டது. ஊரையே கூட்டுற உங்க பொண்ணு சைலண்ட்டா ஊசி போட்டுக்கிட்டா. இவளுக்கு அவர் தான் கரெக்ட் சாய்ஸ்” என்றான் சரண்.

“அப்படியா? அப்ப பொண்ணும் மாப்பிள்ளையும் பார்த்தாச்சா? நல்லதா போச்சி.”

“அதெல்லாம் பார்த்தாச்சி. இனிமேல் பொண்ணு, மாப்பிள்ளைன்னு அவங்களுக்கு அறிமுகப்படுத்துறது மட்டும்தான். அதைப் பொண்ணு பார்க்கிற அன்னைக்கே செஞ்சிக்கலாம். அதுவரை சர்ப்ரைஸ்” என்றதும் அனைவரும் சம்மதம் சொன்னார்கள்.

தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று அனைவரும் அமைதியாக இருக்க, “என்ன அதிசயம்? ஏன் இவ்வளவு சைலன்ட்?” என்று சரண் கேட்க,

“ஒன்னுமில்லடா. அவளோட பிரச்சனைகளைப் புரிஞ்சிக்குவாங்கள்ல? அவள் சும்மாவே கல்யாணம் வேண்டாம்னு சொல்றா.”

இடைபுகுந்த ராஜி, “இப்படியே சொல்லிச் சொல்லி அவளை பலகீனமாக்கிரூங்க. அப்புறம் அவள் உச்சாணிக்கொம்பில் ஏரி நிற்கட்டும்” என்றார்.

“இல்லக்கா. நியா சின்னப்பொண்ணு. கண்ணுக்குள்ளேயே வச்சிப் பார்த்திட்டிருக்கோமா. அதான் சின்ன பயம். வேறெதுவுமில்லை” என்றார் ராணி.

“நீயெல்லாம் அத்தனை பொண்ணுங்களை வச்சி எப்படித்தான் ஹாஸ்டல் நடத்துறியோ? சின்ன விசயத்துக்கே பயப்படுற. எல்லாம் சரியா வரும்னு நம்பு” என்று சத்தம் போட்டார்.

அந்த ஞாயிறை அங்கேயே அனைவரும் சந்தோஷத்தடன் கழித்தார்கள்.

மறுநாள் காலை வெற்றி ஆபீஸிற்கு செல்லும் முன், சீக்கிரமே கிளம்பி மகன், மகள், இருவரின் ஜாதகத்துடன், மாப்பிள்ளை ஜாதகமும் எடுத்துச் சென்றார்.

“மாப்பிள்ளை பொண்ணுக்கு ஒன்பது பொருத்தம் அமோகமா பொருந்தியிருக்கு. தாராளமா இவங்க ரெண்டு பேர் திருமணத்தை நடத்தலாம். என்ன தடை வந்தாலும், இந்த ரெண்டு பேருக்கும் போட்ட முடிச்சை யாராலும் மாற்ற முடியாது” என்றதும் வெற்றி சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றார்.

ஜாதகம் சரியில்லை என்றால், நண்பனின் சம்பந்தி உறவை இழக்க வேண்டி வருமே, அதற்கு அவர் தயாராக இல்லை. அந்த அளவு நல்ல குடும்பம் நண்பனுடையது.

பின்னர், மகனின் ஜாதகத்தைக் கொடுத்துப் பையனுக்கு இருவத்தொன்பது வயசு ஆகிருச்சி. இப்ப பார்க்கலாமா? இல்லை கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாமா?” என்று கேட்டார்.

ஜாதகத்தை வாங்கி பஞ்சாங்கம் பார்த்த ஜோதிடர், பார்த்து முடித்ததும், அவரின் புருவத்தின் நடுவில் முடிச்சி விழுந்தது.

அதைக் கண்ட வெற்றி பதறிப்போய், “என்ன ஜோசியரே? எதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லிருங்க. எதையும் மறைக்க வேண்டாம்” என்றார்.

“அதெல்லாம் இல்ல சார். உங்க பையனுக்கு கல்யாண யோகம் வந்தாச்சி. இனி நீங்களே தடுத்தாலும் நிறுத்த முடியாது. அதுவும் எண்ணி ஐந்து நாளுக்குள்ள உங்க பையன் புதுமாப்பிள்ளை. உங்க பையன் திருமணம் தான் முதலில் நடக்கும். அதை நீங்க பார்க்கிறதுக்கான வாய்ப்பு கிடையாது. அடுத்தது நீங்க பார்த்த இந்த பையனோட, பொண்ணு கல்யாணமும் நடக்கும்” என்றார்.

“என்ன ஜோசியரே சொல்றீங்க? அவனுக்கு இன்னும் பொண்ணே பார்க்கலையே? மத்தபடி அவன் எந்த பொண்ணையும் விரும்பலை. அப்புறம் எப்படி?” என யோசனையில் மூழ்க,

“எது எப்படி இருந்தாலும், இது நடந்தே தீரும். உங்க வீட்டு மருமகள் உங்க வீட்டுக்குத தாமதமா வந்தாலும், வரும் பொழுது உங்க வீட்டு சந்தோஷம் நிரந்தரமா இருக்கும். இது ராமரோட ராசி ஜாதகம். அவர் திருமணம் பண்ணி பிரிஞ்சி வாழ்ந்த மாதிரி உங்க பையன், மருமகள் பிரிவும் நிச்சயம். கடவுள் மாதிரி பதினான்னு வருஷம் பிரிஞ்சிருக்க மாட்டாங்க. முடிஞ்ச அளவு பதினாலு மாசத்துக்குள்ள சேர்ந்துருவாங்க. என்னோட கணிப்பு தப்புன்னு நினைச்சா, வேற இடத்திலும் பார்த்துக்கோங்க. வேற யார்கிட்டக் கேட்டாலும், இதையே தான் சொல்வாங்க. நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சிட்டு, நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க” என்றார்.

அவரின் தட்சணை கொடுத்துவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தவர், மனைவியின் புகைப்படத்தை கொஞ்ச நேரம் பார்த்திருந்துவிட்டு, “எது நடந்தாலும் நீ இருக்கிறன்ற நம்பிக்கையில்தான்மா இருக்கேன். தப்பா எதுவும் நம்ம குடும்பத்திற்கு நடக்காமல் பார்த்துக்கோ” என்றவருக்கு இருந்த மனக்குழப்பத்தில் வேலை செய்ய முடியாது என்று தோன்ற, கடையில் இருந்த பையனிடம் சொல்லி, “நான் சாயங்காலம் வர்றேன். அதுவரை எதாவது பார்ட்டி வந்தா என்னோட செல்லுக்கு கூப்பிடு” என்று வீட்டிற்கு கிளம்பினார்.

வந்ததும் மகளிடம் ஜாதகத்தைக் கொடுக்க, “என்னப்பா கடைக்குப் போறேன்னு சொன்னீங்க. இப்ப நேரே வீட்டுக்கு வந்துட்டீங்க? ஏன் முகம் டல்லாயிருக்கு? எதுவும் பிரச்சனையாப்பா?” ‘ஒரு வேளை ஜாதகம் பொருந்தலையோ’ என்று நினைத்தவள் மனதில் சந்தோஷம நிறைந்தாலும், முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, “ஜாதகம் சேரலையாப்பா?” என கேட்டாள்.

மனம் குழம்பியிருக்கும் வேலையில் மகளின் கேலி புரியாததால், “ப்ச் அதெல்லாம் இல்ல பாப்பா. உங்க ரெண்டு பேர் ஜாதகமும் எல்லா பொருத்தமும் இருக்காம். எப்ப வேணும்னாலும் கல்யாணம் முடிக்கலாம்” என்றதும் நியாவிற்குள் ஏமாற்றம் வந்தது. “ஆனா, அண்ணனுக்குத் தான்...”

“அண்ணனுக்கு என்னப்பா? எதுவும் பிரச்சனையா?”

“அதெல்லாம் இல்லம்மா” என்று ஜோசியர் சொன்னதைச் சொல்ல, முதலில் திடுக்கிட்டாலும், பின்னர் சுதாரித்து, “போங்கப்பா. அப்படில்லாம் நடக்காது. அண்ணனாவது வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்றதாவது. எதாவது பொண்ணு பார்த்து வச்சிருக்கிறானான்னு வந்ததும் கேட்கிறேன். ஜோசியம் முழுக்க முழுக்க உண்மையா இருக்க வாய்ப்பே இல்லப்பா. மனசைப் போட்டுக் குழப்பிக்காம வேலையைப் பாருங்க” என்றதும் சற்றுத் தெளிந்தவர்,

“நீ சொன்ன மாதிரி இருந்தா ரொம்ப சந்தோஷம். நான் மாப்பிள்ளை வீட்டுக்கு ஜாதகம் பற்றிய தகவல் தெரிவிக்கிறேன். இந்த ஞாயிறே வரச் சொல்லிரலாம்.”

நியா திருதிருவென விழித்தாள். ‘சே... என் வாயாலயே நான் கெட்டேன்’ என்று.

வெற்றி பெண் பார்க்கத் தேவையான ஏற்பாடுகள் செய்வதில் விரைய, நியா இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள்.

புதன் அன்று காலையில் சேகர், சரணுக்கு போன் செய்து, “ஆபீஸ் போறதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட பேசணும் தம்பி” என்றதும், அவனின் தனுவைப் பற்றிய செய்தியாகத் தான் இருக்கும் என்று கொஞ்சம் பதற்றத்துடனே கிளம்பினான். அவர் போடப் போகும் குண்டைப் பற்றித் தெரியாமல்.

குரோம்பேட்டில் உள்ள காஃபி ஷாப்பில் அவரின் அருகில் சென்று அமர்ந்தவன். “என்ன அங்கிள்? எதாவது பிரச்சனையா? அந்தப் பொண்ணை அவன் எதாவது டார்ச்சர் பண்றானா?” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க,

“அமைதியா உட்காரு சரண். ஏன் இவ்வளவு பதற்றப்படுற? அந்தப் பொண்ணுக்காக இப்படித் துடிக்கிற? அதுக்கான காரணம் சொல்?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அங்கிள்.”

“நம்பிட்டேன்” என்று தன் நம்பாத பானையைச் சொன்னவர், “விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்” என்றார்.

“நேத்து நைட் சவாரி முடிச்சிட்டு வீட்டுக்குப் போற வழியில, அந்த சரவணனைப் பார்த்தேன். நைட் ரொம்ப நேரம் ஆகுதே ஒருவேளை ஆட்டோ கிடைக்காம நிற்கிறான் போல. தெரிஞ்ச பயலா இருக்கான். போகும் போது மேன்சன்ல இறக்கிவிட்டுட்டுப் போகலாம்னு, வண்டியை நிறுத்திட்டு அவன் பக்கத்துல போனேன். அதுக்குள்ள மூணு பேர் எங்கிருந்து வந்தானுங்கன்னு தெரியல. மூணு பேரும் பேச ஆரம்பிச்சாங்க. அங்க ஏதோ சரியில்லன்னு தோணிச்சி. அவங்களுக்கேத் தெரியாம அவங்க பேசுறதைக் கவனிச்சேன். அப்ப...”

“டேய்! மச்சி அவ வெள்ளிக்கிழமை கண்டிப்பா வந்திருவாள்ல?”

“கண்டிப்பா வருவாடா. முருகன் கோவில்னா யோசிக்கமாட்டா. வருவா வரலன்னா வரவைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.”

“டேய்! நீங்க ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் பண்ண, வெள்ளிக்கிழமை காலையிலேயே ரெடி பண்ணிரனும். கோவில்ல ஏற்கனவே பதிஞ்சாச்சில்ல? எதையாவது மறந்து சொதப்பலையேடா. அந்த மாவட்டத்துக்கான பகடைக்காய்டா அவள். எக்காரணத்தைக் கொண்டும் விட்டுரக் கூடாது” என்றான்.

“இல்லடா. பக்காவா ரெஜிஸ்டர்கு ரெடி பண்ணியாச்சி. வெள்ளிக்கிழமை கல்யாணம். அன்னைக்கு நைட்டே.. ம்ம்.. என்ஜாய்டா மச்சி.”

“டேய்! நான் முடிக்கிறதே வேற ஒரு காரணத்துக்காக. அதுல இவ ஒரு சைடிஸ் மாதிரி. கொஞ்ச நாள் கழிச்சி நாம ஷேர் பண்ணிக்கப் போறோம். இதுல நீ வேற ஏன்டா?”

“இப்படி இன்னும் என்னென்னவோ சொன்னான். நான் கூடக் கொஞ்ச நேரம் நின்னா அவனைக் கொலை பண்ணக் கிளம்பிருவேனோன்னு பயந்து தான் வந்துட்டேன்” என்று சொல்லியபடி சரணைப் பார்க்க,

அவன் கண்கள் ஆத்திரத்தில் அவனைக் கொல்லும் வெறியை ஏந்தி நிற்க, அதை அடக்க வழியில்லாமல் சுவற்றில் கையைக் குத்தி, “நினைச்சேன் அங்கிள். அவன்கிட்ட என்னவோ தப்பு இருக்குன்னு. அவன் கண்டிப்பா தனுவோட அத்தை பையனா இருக்கமாட்டான். எங்கேயோ தப்பு நடந்திருக்கு. அதைக் கண்டுபிடிக்கணும்” என்றான்.

“எனக்கும் அதே எண்ணம்தான் சரண்.”

“அங்கிள் நீங்க எங்கேயோ பார்தத முகம் மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே? எங்க எப்பன்னு யோசிங்க. இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. என்னோட தனுவைக் காப்பாத்தணும். நீங்க இன்னும் ரெண்டு நாளைக்கு அவளுக்குத் துணையா அவள் எங்க கூப்பிட்டாலும், நீங்களே ஆட்டோ எடுத்துட்டுப் போற மாதிரி பார்த்துக்கோங்க. நான் எங்க எம்டிகிட்டச் சொல்லி, போலீஸ்ல சீக்ரெட்டா விசாரிக்கச் சொல்றேன்” என்று அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்று, அத்தையின் விடுதி வழியாக வர, ‘அவளைப் பார்த்துச் சொல்லலாமா?’ என்ற எண்ணத்தைக் கைவிட்டான்.

‘ஆமா. போய் சொன்னவுடனே மேடம் நான் சொல்றதை நம்பப் போறாங்க. ஏதோ பொறாமையில சொல்றேன்னு சொன்னா. இல்லை அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் ஒண்ணு கோடுத்தா? நோ என்னால முடியாது. இதை அவளுக்குத் தெரியாமலேயே முடிக்கணும்.’

அலுவலகம் சென்றவனுக்கு அங்கும் வேலை ஓடவில்லை. எம்டியிடம் அனுமதி கேட்டு உள்ளே சென்றவன், கொஞ்சமும் தயங்காமல், ‘தன் அத்தையின் விடுதியிலுள்ள பெண்ணுக்கு...’ என்று ஆரம்பித்து அனைத்தையும் சொன்னான்.

“நீ அந்தப் பொண்ணை விரும்புறியா சரண்? என்று நேரடியாக, எம்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் திணறியவன், இல்லையென்று மறுத்தான். அவன் திணறலிலேயே அவனைக் கண்டவர். “ஒரு நிமிஷம் சரண். என்னோட ப்ரண்டோட பையன்தான் உங்க ஏரியா இன்ஸ்பெக்டர். அவன்கிட்ட பேசிடுறேன்” என்று பேசி சரவணனின் புகைப்படத்தை இன்ஸ்பெக்டரின் வாட்சப் எண்ணுக்கு அனுப்ப வைத்த பின்னரே நிம்மதியானான்.

“தேங்க் யூ சார். நான் மதியம் ஹாஃப்டே லீவ் எடுத்துக்கறேன்” என்றதும் சரியென்று சொல்லி அனுப்பினார் அவர்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top