• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
8


ஒருவார பெட் ரெஸ்டில் அவந்திகாவை மருத்துவமனையில் இருந்து அனுப்பலாம் என்று கார்த்திக்கை மருத்துவர் ரஞ்சன் தன்னறைக்கு வரச்சொல்ல, அவனுடன் சுந்தரேசனும் சென்றார்.

“தையல் பிரிக்கிறது வரை, அவங்க கேர்ஃபுல்லா இருக்கிறது நல்லது. இடையில் தையல் விட்டிருச்சின்னா, திரும்பவும் ஸ்டிச் பண்ண வேண்டியிருக்கும். அது இரட்டிப்பு வேதனை. உங்க பொண்ணுக்கு அது வரவேண்டாம். வீட்ல அவங்கம்மா, ஓ... அவங்களுக்கு அம்மா இல்லையில்ல. பேசாம ஒன் மன்த்கு நர்ஸ் ஒருத்தரை அப்பாய்ண்ட் பண்ணிக்கோங்க. நான் அலாட் பண்ணவா?” என்று அவர்களைப் பார்த்தார்.

‘சரி’ என்று சம்மதிக்கப்போன சுந்தரேசனை இடையிட்டு, “வேண்டாம் டாக்டர். நர்ஸை விட, அம்மா ஸ்தானத்துலயே இருந்து பார்த்துக்க, ஆள் இருக்காங்க” எனவும், ‘யார்?’ என்பது போல் சுந்தரேசன் பார்த்தார்.

“எங்கம்மாவை அனுப்புறேன் அங்கிள். அவளை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பாங்க” என்றான்.

“எதுக்கு அவங்களை கஷ்டப்படுத்துறீங்க? அதுக்கும் மேல என் ஒய்ஃப் ஒத்துக்கமாட்டா.”

“அவங்க ஒத்துக்க வேண்டாம். ஏன்னா என்னோட அம்மாவா வரமாட்டாங்க. ஹாஸ்பிடல் மூலமா டாக்டர் பெர்மிஷனோட வருவாங்க. என்ன டாக்டர்?” என நேரடியாக டாக்டரிடம் கேட்டான்.

“கண்டிப்பா. அப்படியே செய்யலாம்.” டாக்டர் சம்மதமாய் தலையசைத்தார்.

“அப்புறம் நாங்க கிளம்பறோம் டாக்டர்” என்று வெளியே வந்து, கார்த்திக் தாய்க்கு போன் செய்து விஷயம் சொன்னதும்,

“இன்னும் அரைமணி நேரத்துல, அங்கே இருப்பேன். அதுக்குள்ள ஃபார்மாலிட்டீஸ் முடிச்சி வைடா” என்றவர் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்தார்.

அதற்குள் அவந்தியிடமும் பேசி, தாயை உடனழைத்துச் செல்ல சம்மதம் கேட்க, முதலில் மறுத்தவள், அவனின் வற்புறுத்தலில் அரைகுறையாகவே என்றாலும் சம்மதம் என்றிருந்தாள்.

இருந்தாலும் ஈஸ்வரி வந்ததும், “சாரி அத்தை. உங்களுக்கு நான் செய்யுறதுனா அதில் ஒரு நியாயம் இருக்கு. ஆனா, நீங்க... வேண்டாமே அத்தை. நாம எதாவது நர்ஸ் வச்சிக்கலாம். நான் உட்கார்ந்திருந்து உங்களை வேலை வாங்குறதுன்னா, மனசுக்கு என்னவோ போலிருக்கு” என கெஞ்சுதலாகச் சொன்னாள்.

அவள் தோளணைத்து, “அதெல்லாம் யாரும் வேண்டாம். நீயும் எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காத. அப்புறம் உங்க வீட்ல இருக்கிறது வரை, என்னை அம்மான்னு கூப்பிடு. அப்பத்தான் உன் மாமா ஒய்ஃப்கு சந்தேகம் வராது.”

“அம்மா” என்ற வார்த்தையைக் கேட்டதும், “ம்... டபுள் ஓகே” என்று சந்தோஷத்துடன் அவந்திகா தலையாட்டினாள்.

பொருட்களை எடுத்து வைத்தபடி, “இதென்ன பொக்கே? யார் அனுப்பிச்சது? நல்லாயிருக்கு” என்று ஈஸ்வரி கேட்டதும்.

“அது ஒரு லூசு அத்தை டெய்லி சி.என் என்கிற நேம்ல நாலுவரிக் கவிதையோட லெட்டர் போடுவான். நான் நினைப்பேன்.. எனக்கு கவிதை எழுதியதை வச்சி பத்து புக்காவது இவன் ரிலீஸ் பண்ணிருக்கலாம்னு. அதுவும் ஆறு மாசமா போரடிக்காமல், தொடர்ந்து போடுறான். முழுப்பெயரைக்கூட சொல்ல முடியாதவன் ஏன் லெட்டர் போடணும் இடியட். அவன் சி.என் இல்லத்தை சரியான லூசன்” என்றாள் கடுப்புடன்.

“ஹா...ஹா ரொம்ப லவ்வா இருக்கும்டா. எங்க நீ அவனை அவாய்ட் பண்ணிருவியோன்னு நினைச்சி சொல்லாமல் இருக்கலாம்.”

“ஆமா, முகம் தெரியாத இந்த லூசனை, அவாய்ட் வேற பண்றாங்க. அவன் மட்டும் என் கண்ணுல மாட்டினான்னு வையுங்க. அவனை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்” என்று கோபத்தில் பல்லைக்கடித்தாள்

“ஓகே கூல். இனி அந்த லூசன்.. சாரி சி.என் பத்தி பேசவேண்டாம். சரிவா கிளம்பலாம்” என அதற்குள் கார்த்திக் அருகில் வந்து, “அம்மா திங்க்ஸ்லாம் கார்ல வைங்க நான் கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

“அதெல்லாம் நான் கூட்டிட்டு வர்றேன்டா. நீ போயி வை” என மகனின் எண்ணம் புரிந்து சீண்டினார்.

“அம்மா ப்ளீஸ். என்னால வீட்டுக்கு வந்தெல்லாம் பார்க்க முடியாது. நம்புங்கம்மா. நான் உங்க மருமகளை கடிச்சி முழுங்கிராம பத்திரமா கூட்டிட்டு வர்றேன்.”

“சரி ஏதோ நம்பிக்கையா சொல்றியேன்னு என் மருமகளை நம்பி விட்டுட்டுப் போறேன். சீக்கிரம் கூட்டிட்டு வந்திருடா” என்று தாய் சென்றதும், அவர்களின் சம்பாஷணையை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தவள் அருகில் வந்தவன், “என்னோட அவஸ்தை உனக்கு சிரிப்பாயிருக்கா” என்றான்.

“எதுக்கு அவஸ்தைபடணும்?”

“ம்... அது உன்னை மாதிரி தத்திக்குப் புரியாது. புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிக்கிறதுல, கெட்டிக்காரிதான் போ.”

“நல்லதுதான கார்த்திக்” என சிரிப்பை அடக்கியபடி அப்பாவியாய் சொன்னாள்.

“உன்னை...” என்று அவளின் தலையை லேசாக தட்டி, “அவந்தி வெய்ட்டா எதையும் தூக்காத. கொஞ்ச நாளைக்கு எந்த வேலையும் செய்யவேண்டாம். உடம்புல எதாவது பிரச்சனைன்னா மறைக்காம அம்மாகிட்டச் சொல்லு. அப்புறம் அவந்தி” என்றவன் குரல் குழைய,

அவனின் திடீர் மாற்றத்தைக் கவனித்தவள், அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்து, “என்ன அப்புறம்?” என கேட்டாள்

“அப்புறம், இனி நீ செக்கப்கு வரும்போதுதான் பார்க்க முடியும். அத்தனை நாளைக்கும் சேர்த்து ஒண்ணும் கிடையாதா?” என்று ஏக்கமாக அவளருகில் வந்து கன்னம் காட்ட,

அவன் முகத்தைத் தள்ளிவிட்டு “எல்லாம் அப்புறமாதான்” என்றாள்.

“ம்க்கும்... இல்லன்னாலும் குடுத்திறப்போற. போடி.”

“என்னது டி யா?”

“ஆமாடி. டிடிடிடி என்னடி பண்ணுவடி?’ என எகிறியபடி வர,

“ம்... அதுவா சார். இன்னும் ஒரு வாரத்திற்கு நோ போன். நோ மெசேஜஸ். அன்ட் நோ மீட்டிங் ஓகே” என்று மௌன சிரிப்புடன் சொன்னாள்.

“அவந்தி நிஜமாவா? ரொம்ப தேங்க்ஸ்டி” என்று மீண்டும் ஒரு டியைப் போட்டு அவளை கடுப்பேத்தினான்.

“என்னது தேங்க்ஸா? அப்படின்னா, எப்படா இவளை கழட்டி விடலாம்னு இருக்கீங்களா? தொலைச்சிருவேன் அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு இருந்தா. உங்களுக்கென்ன டிதான சொல்லணும். தாராளமா, அதுவும் ரொம்ப தாராளமா சொல்லிக்கோங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை.”

“டி வேண்டாம்டா செல்லம். அதுக்கு முன்னாடி கேட்டேனே” என்று கன்னம் காட்டினான்.

“அதெல்லாம் முடியாது போ” என பிகுசெய்ய,

“சரிவிடு. எப்பவும் போல நானே கொடுக்குரேன்” என்று அவள் தடுக்குமுன் முத்தமிட்டு, அவளின் விரிந்த கண்களைப் பார்த்தபடி, “உன்னோட முதல் முத்தத்திற்காக, நான் வெய்ட்டிங்டா அவந்தி.”

அதற்குள் தன்னைச் சமாளித்திருந்தவள், “அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை போ” என்றாள்.

“ஒரு முத்தத்துக்கே இந்த பாடு படுத்துறியே. உனக்கு ரொமான்ஸ் சொல்லிக் கொடுத்தே என்னோட வாழ்நாள் போயிரும் போலிருக்கே. அப்புறம் எப்படி குடும்பம் நடத்தி, குழந்தை பெத்து, ஹ்ம்...” என்று அலுத்தபடி புலம்ப...

அவன் வார்த்தைகளின் கற்பனையில் வெட்கம் தானாய் வந்து முகத்தில் அமர சிரித்தபடி, “பரவாயில்ல. நான் மெல்லவே கத்துக்கறேன்” என்றாள் மென்மையான குரலில் தலைகவிழ்ந்தபடி.

“நீ திருந்தமாட்டடி. சரிவா கிளம்பலாம்” என கைபிடித்து அழைத்துச் சென்று, தாயிடம் ஒப்படைத்ததும், “அம்மா உங்க மருமகளை உங்ககிட்ட முழுசா ஒப்படைச்சிட்டேன். பேசாம அப்பவே உங்களோட அனுப்பிச்சிருக்கலாம். ஹ்ம்... என்று பெருமூச்சி விட்டபடி “உங்க மருமகள் சரியான ட்யூப்லைட்மா” என்றான் ஏக்கப் பார்வையோடு.

“பரவாயில்லடா. இருந்துட்டுப் போகட்டும். இப்போதைக்கு ட்யூப்லைட்டா இருக்கிறதுதான் நல்லது. நீ வாடா அவந்தி நாம கிளம்பலாம்.”

“ம்மா... போங்கம்மா” என்று சிணுங்கியபடி, “நீங்களும் மோசம். உங்க மருமகளும் மோசம்.” அதைக்கண்டு சிரித்தவளிடம், “இருக்குடி உனக்கு” என காதோரம் கொஞ்சி, “அங்கிள் முடிஞ்சளவு உங்க ஒய்ஃப் இவளை ஜாஸ்தி பேசாம பார்த்துக்கோங்க. சரியா?” என்றான்.

“நான் பார்த்துக்கறேன் கார்த்திக்” என்று சுந்தரேசன் சொன்னதும்,

“சரி நேரமாகுது கிளம்புங்க” என்ற கார்த்திக்கிடம் ஈஸ்வரி ‘நான் பார்த்துக்கறேன்டா. என் மருமகளுக்கு நான் பொறுப்பு’ என்பதை தலையசைத்து சொன்னதும்தான் நிம்மதியாக உணர்ந்தான்.

அவந்திகாவிடம் ‘போன் பண்ணுறேன்’ என ஜாடை செய்துவிட்டு அவனும் கிளம்பினான்.

அவந்திகாவின் வீட்டிற்குள் கார் நுழைய, கேட் திறந்துவிட்ட வாட்ச்மேன், காரின் பின்னாடியே வந்து, “ஐயா அம்மா வெளில போயிருக்காங்க. வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்னு சொல்லச் சொன்னாங்க” என்றதும் அவனறியாமல் பற்களைக் கடித்தவர், “நீ போ. நான் பார்த்துக்கறேன்” என்றார்.

பத்திரிக்கை துறையில் இருப்பதால், எப்பொழுதும் அவந்தியை சீக்கிரமாக வீட்டிற்கு அனுப்பிவைத்து, நேரம் கழித்து வருவதால், அவர் வசம் மாற்றுச்சாவி இருந்தது. காரில் இருந்து எடுத்து வந்தவருக்கு, ‘ஒரு வகையில் அவள் இல்லாததும் நல்லதுதான். இல்லன்னா வாய்ல வந்ததைப் பேசி புள்ளைய நோகடிச்சிருவா’ என்று எண்ணியவாறு வீட்டினுள் நுழைந்தார்.

“ஒரு நிமிஷம்” என்று வாசலிலேயே அவந்திகாவைத் தடுத்து நிறுத்திய ஈஸ்வரி, சமையலறை கேட்டு உள்ளே சென்று, தேவையானதை தேடி எடுத்து, அப்படியே பூஜையறை சென்று வெளியே வந்து, மருமகளுக்கு ஆரத்தி சுத்தி, அதன்பின்னே உள்ளே விட்டார். ஆரத்தி கொட்டி உள்ளே வந்தவர், “அவந்தி உன் ரூம் எங்கே?” என்று கேட்டார்.

கைதூக்கி மாடியறையை காண்பித்தவளிடம், “மாடியா? கீழ இருக்கலாமேமா?”

“இல்லத்தை. கீழன்னா அத்தையும், கௌஷிக்கும் இருப்பாங்க. என்னால அடிக்கடி அவங்களைப் பார்த்துட்டு, ஃப்ரீயா இருக்க முடியாது. அதுவுமில்லாம பார்க்கிற நேரமெல்லாம் எதாவது சொல்வாங்க அதான்” என்று வருத்தத்துடன் கூறினாள்.

‘ஓ...’ என விஷயத்தை ஓரளவு கிரகித்தவர், மகன் நர்ஸ் வேண்டாமென்று சொன்னதற்கான காரணமும் விளங்கியது. ‘இதில் இவளின் அத்தையை சமாளிப்பது கடினம்தான் போல. ம்... பார்த்துக்கலாம்’ என தனக்குத்தானே தைரியமளித்து, “சரிமா வா” என்றபடி அவந்தியின் அறைக்கு அழைத்துச்சென்று கட்டிலில் உட்காரவைத்தபடி, “இங்க வேலைக்கு ஆட்கள் இல்லையாமா?” என கேட்டார்.

“இருக்காங்க அத்தை. ஆனா, அத்தனை பேரும் அத்தையோட கண்ட்ரோல்ல இருக்கிறவங்க.”

“அவந்தி! இங்கயிருக்கும் போது அத்தை கூப்பிடக்கூடாது சொல்லியிருக்கேன்ல.”

“சாரி அத்தை” என்றாள்.

‘திரும்பவுமா’ என்று பார்த்தவரை, “ஸ்ஸ்.. சாரி ஈஸூமா.”

“ம்... இது ஓகே. நீ ரெஸ்ட் எடு. நான் சாப்பிட எதாவது ரெடி பண்றேன்.”

“அத்... இல்ல ஈஸூமா. ஆள் வந்ததும் பார்க்கலாமே.”

“அவங்க வர்றவரை நீ பட்டினி கிடப்பியா? உங்க அத்தையோட கண்ட்ரோல்ல இருக்கிறவங்க, அவங்க சொல்றவரை வீட்டுக்கு வரமாட்டாங்கதான” என்றதும் தலையசைத்த அவந்தியிடம், “அப்ப நான் பண்றேன். நீ சமத்தாயிரு” என்று கீழே செல்ல யத்தனித்த ஈஸ்வரியின் கைபிடித்தாள்.

“ஈஸூமா! அத்தை உங்ககிட்ட ஹார்ஸா பேசினா, என்னால தாங்க முடியாதுன்னுதான் உங்களை வேண்டாம்னு சொன்னேன்.”

“அது என்னோட பிரச்சனைமா. நான் பார்த்துக்கறேன்.”

“இல்ல ஈஸூமா. அவங்க நாம நினைக்காத நேரத்துல, நினைக்காத வார்த்தையெல்லாம் பேசுவாங்க. ஆனா, அதை கேட்கிற மத்தவங்களுக்கு செத்துரலாம்னு தோணும்” என்று கண்கலங்கியவளுக்கு, அதை நினைத்ததுமே தன்னையறியாமல் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
‘சே... என்ன பொம்பளை அவள்?’ சின்னப்பெண்ணை இந்தளவிற்கு மிரட்டி வைத்திருக்கும் வனஜாவின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அவந்தியின் கண்கள் துடைத்து “இனி நான் பார்த்துக்கறேன். நீ எதுக்காகவும் அழக்கூடாது புரியுதா?”

சரியென்று தலையசைத்து, “ஈஸூமா நீங்க நைட் என்னோட பெட்ல படுக்கறீங்களா?”

“ஏன்டா? நான் நர்ஸ். உன்னோட சேர்ந்து படுத்தா தப்பாயிருக்கும். நான் இப்படி கீழ...”

“அதெல்லாம் முடியாது. எனக்கு கீழ நீங்க இருக்கிறதை நான் ஒருநாளும் ஒத்துக்க மாட்டேன். அப்புறம் நர்ஸை வலுக்கட்டாயமா மாத்த வேண்டியிருக்கும். முடியுமா? முடியாதா?” என்று குழந்தையின் பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தவளை அணைத்து “உன்னிஷ்டம்” என்று கீழே சென்றார்.

சுந்தரேசனும் தன் மருமகளுக்காக வந்ததற்கு நன்றி சொல்லி, பின் மனைவியின் குணம் பற்றி சொல்லி, ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்.

“ஈஸ்வரி வந்த பிறகு, தன் வீடே தனக்கு அழகாகத் தோற்றமளித்தது அவந்திகாவுக்கு. ஈஸ்வரி வனஜாவின் பேச்சிகளுக்கு வளைவதற்கு வளைந்து, எதிர்ப்பதற்கு எதிர்த்து சமாளிக்க, இரண்டு நாட்கள் அழகாக நகர்ந்தது. இதற்கிடையில் சி.என் கடிதமும், மற்ற கடிதங்களுடன் வீட்டிற்கே வந்தது. அதை ஈஸ்வரியிடமும் படித்துக் காண்பித்து, அவனின் காதல் கவிதைகளை காமெடியாக்கிக் கொண்டிருந்தாள்.

மூன்றாம் நாள் இரவு, நாய் விடாது குரைக்க கண்விழித்த ஈஸ்வரி, அந்த அறையிலுள்ள மெல்லிய ஒளியில் தூங்கிக்கொண்டிருந்த அவந்தியை தொந்தரவு செய்யாமல், கதவை சாத்தி என்னவென்று பார்க்க கீழே சென்றார்.

அதே நேரம் மாடி பால்கனி வழியே அவந்தியின் அறைக்குள் நுழைந்தான் அவன். மெல்ல பூனை நடைபோட்டு அவளருகில் அமர்ந்து அவளையே சில நிமிடங்கள் பார்த்திருந்தான். நைட்டியில் நலுங்காமல், தூக்கத்திலும் புன்னகை முகமாகவே அவனை வசீகரிக்க, இதழ்கள் அவளை முத்தமிட துடித்தது. தூங்கும் அவளின் முகத்திலுள்ள முடிகளை மென்மையாய் விலக்கி, நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான் கார்த்திக். நெற்றி முடித்து கன்னம் வர, சட்டென்று அவந்திகா கண்விழித்து, அத்தனை நெருக்கத்தில் கார்த்திக்கைப் பார்த்து, யாரோவென்று எண்ணியவள் கத்தப்போக, அதனை யூகித்தவன் அவளின் வாய்மூடி, “அவந்தி நான் கார்த்திக்” என்றான்.

அவன் கையைத் தட்டிவிட்டு, “இங்க இந்த நேரத்துல என்ன பண்றீங்க?” சற்று சத்தமாகவே கேட்டாள்.

திரும்பவும் அவள் வாய்மூடி, “ஏன்டி கத்துற? சௌண்ட் கம்மி பண்ணு. யாராவது வந்திரப்போறாங்க.”

“தெரியுதுல்ல. அப்புறமென்ன? ஹையோ... அத்தை!” என்றபடி பக்கவாட்டில் திரும்பிப்பார்க்க, அவரில்லை என்றதும் சற்றே ஆசுவாசப்பட்டவள், பின் “அத்தை எங்க காணோம்?” என்று பதறினாள்.

“ப்ச்... அவந்தி அம்மா கீழ போயிருக்காங்க.” ஏனென்று கேள்வியாய் பார்த்தவளின் அழகில் சொக்கியவன், “நாய் தொடர்ந்து குரைச்சா என்னன்னு பார்க்க மாட்டாங்களா?” புரியாமல் பார்த்தவளிடம், “அந்தப்பக்கம் தாமுவைவிட்டு நாயை டைவர்ட் பண்ணவச்சிட்டு, நான் உன்னைப் பார்க்க வந்தேன்.”

அவனை முடிந்த மட்டும் முறைத்து, “இதென்ன பழக்கம் கார்த்திக்? நடுராத்திரியில திருடன் மாதிரி வர்றது தப்பு. ஐ டோண்ட் லைக் இட் கார்த்திக்.”

“அவந்திமா திருடன்னா சும்மாவா. அவன் எவ்வளவு யோசிச்சி, பக்காவா ப்ளான் பண்ணி திருடுறான் தெரியுமா? அதுவும் மாட்டிக்காம பண்றதுக்கு, மூளையை எவ்வளவு கசக்கணும். இன்னும் எவ்வளவோ இருக்கு” என்றான் திருடர் சங்க தலைவன் போல.

அவனை ஒரு மாதிரியாக பார்த்து, “திருடனுக்கு ரொம்ப வக்காலத்து வாங்குற மாதிரியிருக்கு. உண்மையைச் சொல்லுங்க? நீங்க அந்த வேலைதான் பண்றீங்களா?” என கேட்டாள்.

சில வினாடிகளேனும் தடுமாறியபடி அவளின் முகம்பார்க்க, அதிலிருந்த சிரிப்பில் விளையாடுகிறாள் என்றெண்ணியவன் சட்டென்று சுதாரித்து, “ஆமாடா திருடன்தான்” என்றதும் அவந்தியின் முகமாறுதலை ரசித்து, “உன் இதயத்திருடன்” என்றான் அவளின் இதயம் தொட்டு.

“ப்ச்... அங்கெல்லாம் கை வைக்கக்கூடாது” என்று கையை தட்டிவிட, அவளையே விழுங்குவதுபோல் பார்த்திருந்தான் கார்த்திக். அவன் வந்ததிலிருந்து இவ்வளவு நேரமும் படுக்கையிலிருந்து எழாமலேயே பேசிக்கொண்டிருந்த அவந்தியின் மறுபுறம் ஒரு கையை ஊன்றியபடி இருந்தான்.

அவனின் பார்வையில், ஏதோ ஒரு மயக்கம் தன்னுள் ஊடுறுவுவதை உணர்ந்தவள், அதை சுகமாய் சில வினாடிகள் கண்மூடி அனுபவித்தாள்.

“அவந்தி” என்றவன் குரல் கிறக்கத்துடனும், ஒருவித தாபத்துடனும் கேட்க, கண்திறந்து அவனையே பார்த்திருந்தவளிடம், “அழகிடி நீ! அதுவும் இப்ப உன்னோட முகத்தைப் பார்த்தா, என்னை என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம, தப்புப் பண்ணிருவேனோன்னு பயமாயிருக்கு” என்றதும் சட்டென்று விழிவிரித்துப் பார்த்தாள்.

அந்த கண்களில் கார்த்திக் முத்தமிட, “என்ன பண்றீங்க கார்த்திக்?” என்று படுக்கையிலிருந்து சட்டென்று எழுந்தமர, அவனும் அவளுக்கிணையாக நகர்ந்து, பழைய மாதிரியே கையை மறுபுறம் போட்டு அமர்ந்தான்.

“ப்ச்... கார்த்திக் கையை எடுத்துட்டு இப்ப ஏன் வந்தீங்கன்னு சொல்லுங்க?”

“ஹ்ம்... ஒருத்தன் ரொமாண்டிக் மூடோட வந்திருக்கேன். அதைக் கண்டுக்காம எதுக்கு வந்தன்னு கேட்டு, ட்யூப்லைட்னு நிரூபிக்கிற.”

“அதுக்குன்னு நேரம்காலம் இல்லையா? நீங்க பண்றது தப்பு கார்த்திக்” என்று அவனை கடிந்தாள் இல்லை கடித்தாள்.

“இதான்டா செல்லம் அதுக்கான நேரம்” என்றவனை அவந்திகா முறைக்க, “ஓகே ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். இன்னைக்கு நைட் அர்ஜண்ட் வேலையிருக்கு. அதுல மாட்டலன்னா ஸ்...சாரி” என நாக்கைக் கடித்து, “மாத்தலன்னா உன்னை காண்டாக்ட் பண்ணுவேன். இல்லன்னா வர பதினைந்து நாளாகிரும். அப்பாவும் தம்பியும் சமாளிச்சிப்பாங்க. நீ அம்மாவை பார்த்துக்கோ.”

“அவ்வளவு நாளா? அப்படி என்ன வேலைங்க?”

“அது ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி. சரக்கு இங்கிருந்து அகமதாபாத் போகுது. அதை பத்திரமா கொண்டுபோய் சேர்க்க வேண்டியது என்னோட வேலை.”

“ஓ... வேலைன்னா, அதைப்பாருங்க கார்த்திக். எனக்காகன்னு உங்களுக்கு கிடைச்ச வேலையை கெடுத்துக்க வேண்டாம். அப்படியே உடம்பையும் பார்த்துக்கோங்க.”

“சரிமா நேரமாகுது நான் கிளம்பட்டுமா?” என்றதும்,

“பத்திரமா போயிட்டு வாங்க கார்த்திக்” என்றாலும் அவளின் குரலிலுள்ள வருத்தத்தை உணர்ந்தவன், “சரிமா. அதுக்கு நீ ஒண்ணு கொடுக்கணுமே” என்றான் விஷமமாய்.

புரிந்தவள் விரல் நீட்டி “உதைவிழும்” என்று சிரித்தாள்.

“பரவாயில்லமா ரெண்டையுமே கொடு. நீதான நான் வாங்கிக்கறேன்.”

“அடப்பாவமே! உங்களை!”

“அடப்பாவம் இல்லடா.. வெறும் பாவம்தான். ஒண்ணே ஒண்ணு ப்ளீஸ்.”

“ம்கூம்... முடியாது போ.”

“அப்ப விடு நான் கொடுக்குறேன்” என்றவனை முன் விரல்நீட்டி “கொன்னுருவேன்” என்றாள்.

அவளின் நீட்டிய விரலை மடக்கி தன்னுள் சேர்த்து நெருங்கி, அவள் கன்னத்தில் முத்தமிட்ட உதடுகள், அவளின் எதிர்ப்பின்மையை உணர்ந்து முகமெங்கும் பரவ, அந்த இரவு நேர தனிமையின் மயக்கம், இருவருக்குள்ளும் ஹார்மோன்களைத் தூண்டி முத்தங்கள் இடம்மாறி இதழில் இடம்பிடித்தது.

எல்லை மீறும் நேரத்தில் தன்னுணர்வு வந்தவளுக்கு, செய்யவிருந்த தப்பு புரியவே சில வினாடிகள் பிடித்தது. புரிந்ததும் முழுவதும் அதிர்ந்தவளுக்கு தன்மேலேயே கோவம் வந்தது. தன்மீது முழுவதும் படர்ந்திருந்தவனை தன்னிடமிருந்து பிரிக்க முயற்சிக்க, முடியாத அளவிற்கு அவனின் அணைப்பு இருந்தது.

“கார்த்திக் வேண்டாம்” என்றது அவனின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. ‘இல்ல இது தப்பு’ என்று உள்ளுணர்வு உணர்த்த தன் பலம் முழுவதும் கொண்டு அவனைத் தள்ளிவிட்டாள்.

அந்த வேகத்தில் நிலைதடுமாறி பெட்டில் விழுந்தவனுக்கும், சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. அதன்பின் நிலைமையின் வீரியம் புரிய, ‘சே... என்ன மாதிரி தப்பு பண்ணவிருந்தேன்’ என நினைத்து, “சாரி அவந்தி” என்றான் அவள் முகம் பார்க்க கூச்சப்பட்டு.

தன்னிடமும் தவறு இருப்பதால் “நீங்க போயிருங்க கார்த்திக்” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

அவளின் முகம் பார்த்தவன் அதிலுள்ள கலக்கம் புரிய, “சாரிமா” என்று மனதார மன்னிப்பு கேட்டு, வேகமாக வந்த வழியே சென்றான்.

அவன் சென்றதும் மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், ‘சே... நானா இப்படி? என்னுடைய கார்த்திக்தான். இருந்தாலும்...’ முறையில்லாமல் தான் செய்யவிருந்த தவறு உரைக்க.. ‘அப்படி என்னடி அவசரம்? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாதா உனக்கு?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

‘இனிமேல் இந்தமாதிரி சந்தர்ப்பம் வராம பார்த்துக்கணும். இல்லையா அந்த நேரம் மனசும், உடலும் நிலை தடுமாறாம கவனமா இருக்கணும். மைகாட்! கொஞ்ச நேரத்துல நான் நானாவே இல்லாமல் பண்ணிட்டானே இடியட். அந்தநேரம் பார்த்து அத்தை வந்திருந்தா, ரெண்டுபேரோட மானமும் சேர்ந்தே போயிருக்கும்’ என மனதினுள் போராடிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் ஈஸ்வரி வர தூங்குவதுபோல் கண்மூடிப் படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலை தினமீன் சேர்த்து, அனைத்து பத்திரிக்கைகளிலும் பரபரப்பாக வந்தது அந்தா சூடான செய்தி. ‘நூதன திருட்டு. சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்திகேயன் கைது’ என்றிருந்தது செய்தியில்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top