• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
8


இன்று:

தான் இங்கிருந்து செல்வதற்குள் சேவியரின் வீடியோ பிரச்சனையை தீர்த்துவிடுவேன் என்ற சரத்திற்கு ராசி நன்றி சொல்ல... சட்டென்று அவளின் வாய்பொத்தி தன்புறம் இழுத்து பால்கனி இருட்டில் மறைந்தான்.

அவனின் இந்த திடீர் தாக்குதலில் அதிர்ந்திருந்தவளுக்கு அவனைக் கொல்லும் வெறி. அதை அவனிடம் காண்பிக்க நினைக்கையில், “அப்படியே கொஞ்சம் அந்த மாடியில பாருங்க. ஒருத்தன் எட்டிப் பார்க்கிறது தெரியும். அப்போதிருந்து நிமிஷத்துக்கு ஒருமுறை எட்டிப் பார்த்துட்டிருக்கான். அதனாலதான் சந்தேகமே வந்தது” என்று அவளின் காதோரம் மெல்லிய குரலில் சொன்னான்.

காதோரம் குனிந்து அவன் பேசிய வார்த்தைகளை விட்டு அவன் மூச்சுக்காற்றில், அவளின் தேகம் சில வினாடிகள் சிலிர்த்தடங்கியது. அவனோ கடமையே கண்ணாக, “என்ன ராசி பார்த்தீங்களா? எட்டிப் பார்த்துட்டு மறைஞ்சிட்டான்” என்று அவள் முகம் காணும்போது தான் அவளைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதும், அவளின் நெளிதலும் தெரிய... “சா..சா.. சாரி. ரியலி சாரி ராசி” என்று பதட்டமாக அவளை விட்டு விலகினான்.

“ப..ப..ரவாயில்லை” என்ற வார்த்தையை முடிப்பதற்குள் போதுமென்றாகி இது நானா என்றானது ராசிக்கு. எப்படி இவனை அடிக்காமல் விட்டேன்” எண்ணும்போதே...

“ஏங்க ராசி சாரிங்க. அடிச்சிராதீங்க. நான் வேணும்னுலாம் பண்ணல. அவன் உங்களை பார்த்திரக்கூடாதுன்னு ஒரு பதட்டத்துல” என்றதும்... அவனின் அக்கறையில் விழியுயர்த்தி பார்த்தவள் கண்களை அந்த இருளில் முழுதாக காணமுடியாவிடினும், அவள் பார்வையிலுள்ள வித்தியாசத்துடன், அவளின் பார்வை தன்னுள் ஏதோ மாற்றம் செய்ய உடல் சிலிர்த்து, தன் உணர்வுகள் தலைதூக்குவதை உணர்ந்தான்.

‘தனிமையும், இருளும் சரியில்லையே’ என்று மனம் சொல்ல, ‘திரும்பவும் ஒருமுறை இவளின் மென்மையான தேகத்தை அணைக்கலாமா!’ என்ற யோசனை வர முதலில் தன் நினைவில் திடுக்கிட்டவன், ‘இந்தப் பெண் என்னை ரொம்ப சோதிக்கிறாளே’ எனும்போதே முகத்தில் முறுவல் தன்னால் வந்தது. ‘ரொம்ப மோசமாகிட்டடா சரத்’ என தன்னைத்தானே திட்டினான்.

என்னவென்று கேட்டவளுக்கு, தோளைக்குலுக்கி “நத்திங்” என்றான்.

“சரி வாங்க போகலாம்” என்று அவள் முன்னே எட்டு வைத்தவள் திரும்பி “யூ” என்று பல்லைக்கடித்தபடி கோபத்தில் சரத்தின் புறம் திரும்பினாள்.

அவனோ, “அச்சோ! திரும்பவும் நானில்லங்க” என்று கைதூக்கி சமாதானக்கொடி பறக்கவிட்டான்.

அவனின் பாவனையில் சிரித்தவள் தன்னுடைய முடி அவனின் சட்டை பட்டனில் சிக்கியிருந்ததைக் கண்டாள். முடியை எடுக்க அவன்புறம் திரும்பியவளை, நெருக்கத்தில் பார்த்த சரத்தின் இதயத்துடிப்பு பலவாறு எகிறிக் குதித்தது. முடியை எடுத்துப் பார்த்தவளுக்கு வராமல்போக, “ப்ச்.. தனியா எடுக்கிறேன்ல. கொஞ்சம் ஹெல்ப் பண்ணமாட்டீங்களா?” என்றாள் சற்று எரிச்சல் குரலில்.

அந்தக் குரலில் உரிமை இருந்ததோ! என்று தோன்ற, அது தந்த உரிமையில் “ஹெல்ப் பண்ணட்டுங்களா?” என்றான் சரத் ஒருமாதிரிக் குரலில்.

அவனின் குரலின் வேறுபாட்டைக் கவனிக்காமல், “அதைத்தான சொல்றேன் மண்டு. கொஞ்சமாவது என்னோட அவஸ்தை புரியுதா பாரு” என திட்டிவிட்டு தன் வேலையில் கவனமானாள்.

அவளின் கையை மெல்ல விலக்கி ஒவ்வொரு முடியாக விலக்கி சிக்கல் எடுக்க, சீக்கிரமே வந்தாலும் அந்த நேரத்து இனிமையை இழுத்தடித்துக் கொண்டிருந்தவன், அவளின் “உங்களாலயும் முடியலயா? அப்ப அத்து எடுத்துறலாமா?” என்றதில், “அச்சோ எதுக்குங்க? முடியை கட்பண்ணாதீங்க. பொண்ணுங்களுக்கு முடிதான் அழகு” என்று முடிக்கு விடுதலை கொடுத்து, “ம்... எடுத்தாச்சி பாருங்க. இதுக்குப் போயி ஏங்க” என்றான்.

ஃப்பூ என வாயால் காற்றை வெளியிட்டு “தேங்க்ஸ்” என்றபடி அவனை நிமிர்ந்து பார்க்க... மெல்லிய நிலா வெளிச்சத்தில் அவனருகில் தான் நெருங்கி நிற்க, அவனோ! தன்னையே விழுங்குவது போல் பார்ப்பது தெரிந்ததும் சட்டென்று முகத்தில் வெட்கப்பூக்கள் பூத்ததோ! இவ்வளவு நேரம் தான் அவனிடம் பேசியது நினைவு வர, சட்டென்று நாக்கைக் கடித்தவள், தான் இவனிடம் உரிமையோடு பேசினதால்தான் இந்தப் பார்வை பார்க்கிறான் என்று புரிந்த ராசிக்கும் ‘இது சரியில்லையே.’ மனம் சொல்ல, “நான் போறேன்” என்று சொன்னாள்.

“அதுக்குள்ள போறீங்களா?” என்றவன் குரல் ஏக்கத்துடன் கலந்து வர...

அந்தக் குரலில் சிலவினாடிகள் கட்டுண்டவள், குழந்தையின் சிணுங்கல் குரல் கேட்க தன் மோனநிலை கலைந்து தலையை உலுக்கி, ‘சே.. ராசி என்ன பண்ணிட்டிருக்க?’ என்று தன்னையே கடிந்து உள்ளே சென்றாள்.

“என்னாச்சிமா?” என்ற சேவியரின் கேள்வியில் முழுதாக தெளிந்தவள், “நாளைக்கு காலையில ஆஃபீஸ் வரச்சொல்றாங்க அண்ணா. அந்த ராக்கி க்ரூப் மேலதான் டௌட்படுறாங்க.”

“அவனுங்களா? அவனுங்களை என்ன பண்றேன் பாரு” என்று கிளம்பியவனை..

“சார் ப்ளீஸ். நான் பிரச்சனையை யாருக்கும் தெரியாம முடிக்கணும்னு பார்க்கிறேன். நீங்க எல்லாருக்கும் தெரியப்படுத்திறாதீங்க. அந்த வீடியோவை இனி யாரும் பார்க்க முடியாத மாதிரி பண்ணியாச்சி. வேணும்னா உங்க செல்போன் வீடியோவை செக் பண்ணிப் பாருங்க” என்றதும் வேகவேகமாக செல்லை எழுத்து வீடியோவை ஓபன் செய்ய... அது வேலை நிறுத்தம் செய்திருந்தது.

“உங்களுக்கு வந்த மாதிரிதான் இதை இனி யார் ஓபன் பண்ணினாலும் அவங்களுக்கு ஓபன் ஆகாது. என்ன சார் இப்ப உங்களுக்கு திருப்தியா? இன்னும் அவனுங்களை மட்டும் கவனிக்கிற விதத்துல கவனிச்சா போதும்” என்றான்.

“சார் தேங்க்யூ! தேங்க்யூ ஸோ மச்! எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இந்த மூணு மணி நேரத்துல செத்து செத்து பிழைச்சிட்டிருந்தோம் சார்.”

“உணர்ச்சிவசப்படாதீங்க சார். இதுக்கு நன்றி சொல்லணும்னா மிஸ்.ராசிக்குத்தான் சொல்லியாகணும். அவங்களாலதான் ரொம்ப பரவுறதுக்குள்ள நம்மளால சால்வ் பண்ண முடிஞ்சது.”

“கண்டிப்பா. என் தங்கச்சிக்கு நன்றி சொல்லியே ஆகணும்” என்று ராசியிடம் திரும்பி “தேங்க்ஸ்மா” என்றான்.

“தேங்க்ஸ்லாம் நமக்குள்ள எதுக்கு அண்ணா.” சேவியரிடம் மறுத்தவாறு சரத்தை பார்க்க... அவன் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியதும்... “சீ.. போ” என வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்து, “நான் கிளம்புறேன்ணா. காலையில காரெடுத்துட்டு வர்றேன். ஜெபியை கிளம்பியிருக்கச் சொல்லுங்க” என்று வெளியேறப்போக...

“அப்ப நானும் கிளம்புறேன் சார்” என்று சேவியரிடம் சொல்லி அவளிடம் கண்ணால் விடைபெற்று அவளைத் தாண்டி செல்கையில் “பை மிஸ்.ராசி” என்றான் குறும்புக் குரலில். கண்ணால் எரிப்பதுபோல் அவனை ஒரு பார்வை பார்த்து தானும் கிளம்பினாள்.

மறுநாள் காலை குழந்தையை லோஜியிடம் ஒப்படைத்து மற்றவர்கள் யுவர்ஸ் ஃப்ரண்ட் வர... அலுவலகத்தின் பின்புறம் சரத் அவர்களை அழைத்துச் செல்ல, நாற்காலியில் இருவர் கட்டி வைக்கப்பட்டிருந்தார்கள். வந்த ஆத்திரத்தில் ராசி இருவரையும் திட்டி சரமாறியாக அடித்து சேவியரிடமும் ஜெபிதாவிடமும், “இவனை உங்களுக்கு என்ன செய்யணும்னு தோணுதோ செய்யுங்க” என்றவள், “அவங்க தான் செஞ்சதா ஒத்துக்கிட்டாங்களா சார்?” என்றாள் சரத்திடம்.

“ஆமா. நைட் பதினொன்றரைக்கு எல்லாம் இங்க உள்ள பசங்களோட என் ஃப்ரண்டும் சேர்ந்து இவனுங்க ரெண்டு பேரையும் இழுத்துட்டு வந்தாங்க. என்னடா ரெண்டு பேர்னு கேட்டா நீயே அவனுங்களை விசாரி நான் ஏன் அள்ளிட்டு வந்தேன்னு தெரியும்னான். முதல்ல விசாரிச்சப்ப எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொன்னாங்க. நைட் கொஞ்சம் ட்ரீட்மெண்ட் குடுத்ததுல ஒத்துக்கிட்டாங்க. இதைச் செய்தது நீங்க அடிச்ச ராக்கி கிடையாது. அவன் ஃப்ரண்ட் தான்.”

“எப்படி? எதுக்காக எடுத்தானாம்?” என்றாள் குரலில் கோபத்தை அடக்கி.

“சின்ன பசங்க சில்லறைத்தனமா நடந்திருக்காங்க. இவங்க கல்யாண நாளுக்கு நீங்க எல்லாரும் வெளில கிளம்பினதை பார்த்திருக்காங்க. அப்பத்தான் ப்ரண்ட் ஒருத்தன், டேய்! இன்னைக்கு கண்டிப்பா பர்ஸ்ட் நைட் நடக்கும் நான் பார்த்ததே இல்லைன்னு ஒருத்தன் சொல்ல., மத்தவனுங்களும் அதை ஆமோதிக்க, இந்த ரோஹன் கொஞ்சம் ஓவரா போயி வீடியோ எடுத்திருவோம்னு சொல்லிருக்கான். சும்மா ஜாலிக்காக பேசிட்டிருந்ததால கூடவே பேசிட்டிருந்த ராக்கி வீடியோன்னதும், இல்லடா தப்புன்னு தடுக்க மத்தவங்களும் பயத்துல ஆமாம்டா வேண்டாம்னு சொல்லிருக்காங்க.”

“அடுத்தவனுக்கு அவங்க மறுக்க மறுக்க செஞ்சா என்னன்ற வெறில, நீங்க வரலன்னா போங்க. நான் இன்னைக்கு நைட் எடுக்கத்தான் போறேன். சக்சஸ் பண்ணிட்டு வந்து காட்டுறேன் பாருங்கன்னு, நீங்கல்லாம் டின்னர்கு வெளியில போயிட்டு வர்றதுக்குள்ள யாருக்கும் தெரியாம பால்கனியில ஏறிட்டான். நம்ம வீடு தானேன்னு சேவியர் ஃபேமிலி அசால்ட்டா இருக்க இவனுக்கு சாதகமா போச்சி. குழந்தை அழுததும் வெளியில ஒழிஞ்சி திரும்ப வந்து எடுக்கலாம்னு பார்த்தா கதவடைச்சிட்டாங்க. எடுத்தவரை ஃப்ரண்ட்ஸ்கிட்ட போட்டு காண்பிக்க எல்லாத்தையும் பார்க்கணும்ன்ற வயசு அதனால இவனுங்களும் பார்த்திருக்காங்க.”

“அப்பத்தான், டேய்! வாட்சப்ல போடப்போறேன்னு ரோஹன் சொல்ல, ராக்கிக்கு கோபம் வந்து, இது அவங்க புருஷன் பொண்டாட்டி சம்பந்தப்பட்டது. சேலஞ்ச் பண்ணின, எடுத்த, பார்த்திட்ட அழிச்சிருன்னு சொல்லியிருக்கான்.”

“லூசாடா நீ! நாம என்ஜாய் பண்ணினதை மத்தவங்க பண்ண வேண்டாமான்னு ரோஹன் சொல்ல... ரெண்டுபேருக்குள்ளயும் பிரச்சனையாகிருக்கு. அப்புறம் மத்தவங்க சமாதானப்படுத்தினதும் சரி நான் யார்கிட்டயும் காண்பிக்க மாட்டேன் ரெண்டுநாள் பார்த்துட்டு அழிச்சிடுறேன்னு ராக்கிகிட்ட சொன்னதும், வேற வழியில்லாம இவனும் சரின்னு சொல்லிட்டான்.”

“ஆனா, ரெண்டுநாள் கழிச்சி அதை வாட்சப்ல பார்த்தப்ப தான் ராக்கிக்கே தெரிஞ்சிருக்கு. போன் செஞ்சி அவனை வீட்டுக்கு வரவழைச்சி அடிச்சி, போலீஸ் போனா என்ன பண்ணுவன்னு கேட்ட பிறகுதான், ஐயையோ! நான் இதை யோசிக்கலடான்னு அழுதிருக்கான். போலீஸ் வருமான்னு பார்க்கத்தான் அவன் அடிக்கடி சேவியர் வீட்டை நோட்டம் விட்டது. அதை எப்படியாவது அழிக்கணும்னு தான் மத்தவங்க போன பிறகும் இவனுங்க அங்கேயே நின்னிட்டிருக்க நம்மாளுங்க தூக்கிட்டு வந்துட்டாங்க.”

“இதான் அவங்க வாக்குமூலம். இனிமேல் உங்க இஷ்டம்தான். போலீஸ் போகலாம்னு முடிவு பண்ணினாலும் சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
நேரே அவர்களிடம் சென்ற சேவியர், “உங்க ஜாலிக்காக எங்களை கேவலப்படுத்திட்டீங்களேடா” என்றான்.

“சா..சாரி சார்” என்றார்கள் இருவரும்.

அதுவரை பல்லைக் கடித்தபடி இருந்தவன், “ஹ்ம்.. சாரி இது ஒண்ணு வந்து வாய்ச்சது எதுக்கெடுத்தாலும். சாரி சொன்னா நீங்க செஞ்ச தப்பு மறைஞ்சிருமாடா ராஸ்கல்ஸ்” என்றவன் கோபத்தில் சேரோடு சேர்த்து இருவரையும் எட்டி உதைத்து. முன்தினம் முதல் பட்ட துன்பம் அவமானம், அழுகையெல்லாம் சேர்த்து அடியாக அவர்கள் மேல் இறக்கினான். சற்று நேரத்தில் மணி அவனை அவர்களிடமிருந்து விலக்கி தனியே அழைத்துப் போக, இன்னொருவன் அவர்களை உட்காரவைத்து கட்டவிழ்த்து விட்டான்.

அங்கு வந்த ஜெபிதா, “ஏன்டா இப்படிப் பண்ணுனீங்க? நீங்க கெட்டு சீரழியிறதுக்குத் தான் நெட்ல நிறைய இருக்குதாமே. அதைப் பார்க்க வேண்டியது தான. அதை விட்டுட்டு ஃபேமிலிக்குள்ள வந்து, சே... அப்படி என்னடா அடுத்தவன் குடும்பத்துல வந்து பார்க்குறீங்க? உங்க குடும்பத்துல உங்க அப்பா-அம்மா, அக்கா-அத்தான், அண்ணன்-அண்ணி செய்யாததையாடா நாங்க பண்ணப்போறோம். உன் வீட்லயே கேமரா வச்சி எடுத்து உன் நண்பர்களோட ரசிச்சிட்டு அப்படியே நெட்லயும் விட்டிருக்கலாம்ல. ச்சீய்.. எங்களோட உறவை இப்படி பப்ளிக்ல போட்டு அசிங்கப்படுத்திட்டீங்களேடா! உங்களை எல்லாம் அடிக்கிறது கூட கேவலம். உங்களால எங்களுக்கு எவ்வளவு அசிங்கம், அவமானம். உங்களுக்கென்ன இந்த மாதிரி ஆபாச போட்டோ எடுத்து ரசிக்கணும் அவ்வளவுதான. அதுக்கு நான் ஒரு ஈஸியான வழி சொல்றேன்” என்றாள் முகம் சிவக்க கண்களில் வெறியுடன்.

“ஐயோ! அக்கா எங்களை மன்னிச்சிருங்க” என இருவரும் கோரஸாக சொல்லி காலில் விழ...

சட்டென்று நகர்ந்தவள், “என்னது அக்காவா?” என்று சத்தமாக சிரிக்க... மற்றவர்கள் அவளை பாவமாக பார்த்தார்கள். சேவியர் மனைவியை நெருங்கி ஆதரவாக தொட வர, தட்டிவிட்டு நகர்ந்தவள் அவர்களிடம், “ஓ... அக்காவைத் தான் அசிங்கப்படுத்துவீங்களோ? உங்களால என் புருஷன் என் பக்கத்துல வந்தாகூட விலகி ஓடுறேன்டா நாய்களா! எங்க சந்தோஷம் எல்லாம் நீங்க போட்ட வீடியோல போச்சிது. சொந்தக்காரங்க போன் பண்ணி காரித்துப்புறாங்க. அதையெல்லாம் நீ வாங்கிப்பியா? சொல்லுடா வாங்கிப்பியா?” என்றதும் இருவரும் தலைகுனிய...

“நீங்க பண்ணின வேலையில யாருக்கெல்லாம் தெரியுமோன்னு நினைச்சி நினைச்சி வெளியில போகக்கூட பயந்து வீட்டுக்குள்ளேயே இருக்கேன். அசிங்கம்னா என்ன? அவமானம்னா என்னன்னு உங்களுக்கும் தெரியணும்ல” என்று சரத்திடம் திரும்பி “சார் இவனுங்களுக்கு என்ன தண்டனைன்னாலும் குடுக்க சொன்னீங்கள்ல. அப்ப நான் சொல்றதை செய்வீங்களா?” என்றாள் ஏதோ முடிவு செய்தவளாய்.

“உங்க கூடப்பிறந்தவனா நினைச்சி சொல்லுங்க சிஸ்டர். எதுவாயிருந்தாலும் பண்ணிரலாம்.”

அவனுக்கு நன்றி சொல்லி, “இவனுங்களை ட்ரஸ்ஸே இல்லாம பிறந்த மேனியா வீடியோ எடுத்து வாட்சப், ட்விட்டர், ஃபேஸ்புக்னு இருக்கிற ஆன்லைன் எல்லாத்துலயும் முகம் தெரியுற மாதிரி போடணும். அதிலேயே தவறுக்குத் தண்டனைன்னு லெட்டர்ஸ் வர்ற மாதிரி செய்யணும் முடியும்தான?” என்றாள்.

“கண்டிப்பா பண்ணிரலாம் சிஸ்டர். இன்னும் ஒன் ஹவர்லயே எல்லா இணையதளத்திலும் இவங்க வீடியோஸ் அன்ட் போட்டோஸ் இருக்கும்” என்றான் சரத்.

“ஐயோ! அக்கா தெரியாம தப்பு பண்ணிட்டோம். இனிமேல் ஜென்மத்துக்கும் தப்பே பண்ணமாட்டோம்” என்றலறியும் அசராத ஜெபி “நான் சொன்னதை பைனல் பண்ணிக்கோங்க ப்ரதர்” என்று அவர்களின் கத்தலை காதில் வாங்காமல் வெளியே சென்றாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் ராசியிடம் தகவல் சொல்ல, விஷயம் சேவியர் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட, அன்றிரவு தான் சற்று நிம்மதியானாள் ஜெபிதா.

மறுநாளே ராசி சரத்திடம் ஜெபி விவகாரத்துக்கான பணம் செலுத்த... சரத் வாங்க மறுத்தான் என் தங்கைக்கு செஞ்சதுக்கு கூலி வேண்டாமென்று. அவனை மெச்சியபடி சென்றாள் ராசி.

அதன்பின் தற்செயலாக பார்க்க நேர்ந்தால் சினேகமான புன்னகை அவ்வளவே.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு:

|வணக்கம் தம்பி என் பெயர் சிவராமன். சின்ன வயசுல நான் கண்டுக்காம விட்ட என் பொண்ணை கண்டுபிடிக்கணும் தம்பி. அவ கிடைச்சி கல்யாணம் நடக்காம இருந்தா பையனைப்பற்றி விசாரிக்கவும் உங்களைத்தான் நாடுவேன் என்றார்.

“என்ன சார்? இன்னும் உங்க பொண்ணைப் பற்றி எந்த டீடெய்ல்ஸ்சும் சொல்லாம. அதுக்குள்ள நான் கண்டுபிடிச்சிருவேன் ரேஞ்சிக்கு சொல்லி, கல்யாணம் வரை போய்ட்டீங்க?”

“உங்களைப் பற்றி விசாரிச்சிட்டேன் தம்பி. ஒரு கேஸ் எடுத்தா கண்டிப்பா சக்சஸ் பண்ணாம விடமாட்டீங்களாம். அதான் முழு நம்பிக்கையோட பேசுறேன்.”

“உங்க நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி சார். ஆனாலும், எல்லா நேரமும் நாம நினைக்கிறது போல் நடக்கிறதில்ல.”

“விதி அதுதான்னா என்ன பண்ணமுடியும்பா. முடிஞ்சளவுக்கு நீங்க விசாரிங்க.”

“ஃபுல் டீடெய்ல்ஸ் சொல்லுங்க சார்?”

“எனக்கு சொந்த ஊர் மதுரை சமயநல்லூர். என் பொண்ணுக்கு நாலு வயசிருக்கும் போது என் மனைவி இறந்துட்டா. என் பொண்ணை என் மனைவியோட தங்கை சரிதாகிட்ட கொடுத்துட்டு கொஞ்ச நாள்ல நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ரெண்டாவது மனைவிக்கு ஏற்கனவே கல்யாணமானது குழந்தை இருக்கிறது தெரியாது. தெரிஞ்சா பிரச்சனையாகும்னு அந்த ஊரைவிட்டு திருப்பூர் போயி அப்புறம் அங்கிருந்து சென்னை வந்து செட்டிலாகி பதினைஞ்சு வருஷம் ஆகுது.”

“எனக்கு இருபது வயசுல பையன் இருக்கான். பையன் வளர்றதைப் பார்க்கும் போதெல்லாம், என் பொண்ணு நினைப்பு வரும் எப்படி வளர்றாளோன்னு. பத்து வருஷத்துக்கு முன்னாடி போய் விசாரிச்சப்ப என் பொண்ணு அங்கேயில்ல. பதினைஞ்சி வயசுப் பிள்ளைக்கு கல்யாணம் முடிச்சிக் குடுத்துட்டதா பக்கத்துல உள்ளவங்க சொன்னாங்க. என் மச்சினிச்சி யாருக்கோ தத்து குடுத்துட்டதாகவும், அவ நல்லாயிருக்கா தொல்லை பண்ணாதீங்கன்னும் சொல்லிட்டா. ஆக மொத்தம் என் பொண்ணு காணலைன்றது தான் நிஜம். அந்த நேரம் குடும்ப பொறுப்பும் அதிகம், பணவசதியும் கம்மி ஒரு இயலாமையில் வந்துட்டேன். வருஷம் ஆக ஆக என் பொண்ணை கூட வச்சிக்க முடியலை. எங்க கஷ்டப்படுறாளோன்னு மனசுல உறுத்தல் அதிகமாயிட்டே போகுது. எப்படியாவது கண்டுபிடிச்சிருங்க. தம்பி உங்களுக்கு புண்ணியமா போகும்” என்றார் கையெடுத்து கும்பிட்டு.

“ஹையோ சார் என்ன பண்றீங்க?” என அவர் கையை இறக்கி, “நான் கண்டுபிடிச்சித் தர்றேன். உங்க பொண்ணு பெயர் சொல்லுங்க?”

“ஹரிப்ரியா தம்பி. ராசாத்தின்னு என் மனைவி கூப்பிடுவா.”

அந்த பெயரில் அதிர்ந்து விழித்தவன் உதடுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு “ஹ..ரி..ப்..ரி..யா” என்ற பெயரை நிதானமாக உச்சரித்தது. “அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு போங்க சார். கண்டுபிடிச்சதும் உங்களை காண்டாக்ட் பண்றேன்.”

“நல்லது தம்பி” என்று அவன் கேட்டதைக் கொடுத்து விடைபெற்றார்.

“மதுரைக்குப் போகணும். கல்யாணத்துக்கும் போக வேண்டியிருக்கு” என யோசித்தவன் முதலில் வந்திருக்கும் கேஸை முடித்துவிட்டு மணியை மதுரைக்கு அனுப்பி, தீபாவின் திருமணம் முடிந்ததும் அவனுடன் தானும் சேர்ந்து கொள்வதாக சொல்லலாம் என முடிவு செய்திருந்தான் சரத்.

“ராசி போன் அடிக்குது. எடுத்து யாருன்னு பாரு. நான் கிச்சன்லயிருக்கேன்” என்று லோஜி சத்தமாக அழைத்தார்.

“அச்சோ.. லோஜி நானும் ஒரு இம்பார்டண்ட் வேலையில மாட்டிக்கிட்டேனே” சத்தமாக பதில் குரல் கொடுக்க..

“முதல்ல உள்ளே வா ராசி” எனவும், “போங்க அம்மாஆச்சி” என சலித்தபடி வேகமாக வந்து போனை எடுத்தவள், “லோஜி! ஊர்லயிருந்து சித்தி பேசுறாங்க.”

“ஸ்பீக்கர்ல போடு” என்றார்.

சொன்னதைச் செய்தவள், “ஹாய் சித்தி எப்படியிருக்கீங்க? சித்தப்பா தம்பி எப்படி இருக்காங்க? எங்க வீடு உங்க வீடு எப்படியிருக்கு? எங்க வீட்டு மரத்திலுள்ள பழங்கள்லாம் எப்படியிருக்கு? அப்புறம்..” என யோசித்தவளை..

“ஹான்! மறந்துட்டியே பாப்பா பழைய சைக்கிள் ஒண்ணு, இங்கயிருக்கிற செடி கொடியெல்லாம் விட்டுட்டேன்னு நினைக்கிறேன்” என்றாள் ராசியை தொடரவிடாமல்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“ஆமா சித்தி. அதே தான் எல்லாரும் சுகமா?”

“அடி.. கழுதை வாய் ஓவராகிருச்சி. முதல்ல அத்தையை கூப்பிடு.”

“அம்மாஆச்சி கிச்சன்ல நின்னு நீங்க பேசுறதை ஒட்டு கேட்டுட்டுத்தான் இருக்காங்க. சொல்லுங்க சித்தி?” என்றாள் குறும்பாக.

அவளின் குறும்பை ரசிக்கும் மனநிலையில் இல்லாததால், “என்னத்தைச் சொல்லச் சொல்ற? இங்க நிலவரம் சரியில்ல. வந்து என்ன ஏதுன்னு பார்ப்பீங்கன்னு பார்த்தா எதையும் கண்டுக்காம இருக்கீங்க. அவங்க போலி பத்திரம் ரெடி பண்ணிட்டதா கேள்விப்பட்டேன். உண்மையா பொய்யா தெரியாது. காலாகாலத்துல வந்து வீட்டை மீட்கப்போறீங்களா? இல்லையா?” என்றாள் சீரியஸாக.

“நீங்க பேச வேண்டியதுதான சித்தி?” அமைதியாகவே கேட்க...

“நான் பேசினா காது கேட்காத மாதிரி போயிருதுங்க. இல்லன்னா இதைக்கேட்க நீ யாரு இந்த வீட்டுக்கு உரிமைப்பட்டவளா? அப்படின்னா பத்திரத்தைக் காண்பின்னு எகத்தாளமா பேசுறாங்க ரெண்டுபேரும். நீங்க எவ்வளவு சீக்கிரம் வர்றீங்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. வீட்டை மட்டும் விட்டுறாதீங்க சொல்லிட்டேன்.”

போன் அருகில் வந்த லோஜி “இல்லமா நாங்க இந்த மாதம் கடைசியில வர்றோம். வந்து என்ன ஏதுன்னு முடிவு பண்ணிட்டே ஊருக்குத் திரும்புறோம்” என்றார்.

“ரொம்ப சந்தோஷம் அத்தை. இனி நம்மவீடு நம்மைவிட்டுப் போகாதுன்னு நம்புறேன். சரி வைக்கவா?” என...

“வைக்கலாமே சித்தி. என்ன வைக்கணும்? பொன் இருக்கிற இடத்துல பூ வைக்கணும்னு சொல்வாங்களே அது வைக்கணுமா? இல்ல பூவுக்குப் பதிலா புடவை வைக்கணுமா? இல்ல அதுக்குப் பதிலா பூவைவிட மென்மையான பெண்ணை வைக்கவா?” சித்தியின் சீரியஸான நிலையை மாற்றி சமாதானப்படுத்த என்று கேட்டாள்.

“வாயாடி வந்தேன் உதைபடுவ. நேர்ல வா எதை வைக்கணும்னு சொல்றேன்” என்று போனை வைத்தாள்.

“என்ன பண்ணலாம் ராசிமா? நீ லீவு போடுறியா?”

“சரி அம்மாஆச்சி. ஆனா, இன்னும் மூணுவாரத்துக்கு வேலையிருக்கு. ஏற்கனவே ரெண்டுபேர் மெடிக்கல் லீவ்ல போயிருக்காங்க. பத்து நாள்ல ஒருத்தர் லீவு முடிஞ்சி வர்றாங்க. அப்புறமாதான் எனக்கு லீவ் கிடைக்கும். ஹேய் லோஜி! மாமா என்னைக்கு வர்றாங்க. பார்த்து ரொம்பநாள் ஆகுது? போன் பண்றதோட சரி.”

“போன் பண்ணியிருந்தான்மா. வர இன்னும் ஒரு மாசம் ஆகுமாம். நம்மளை பார்க்கணும் போல இருக்காம். சீக்கிரமே வருவான் வந்ததும்தான் ஒருசில நல்லது நடக்க ரெடி பண்ணனும்” என்றபோது கடைசி வார்த்தைகளை மட்டும் முனகிக்கொண்டார்.

“ஆங்... எனக்கு கேட்கக்கூடாத வார்த்தை பேசினா மட்டும் வார்த்தையை முழுங்கிடுங்க. நீங்க நினைக்கிறதெல்லாம் சான்ஸில்லை” என்றாள் அவர் மனம் புரிந்தவளாய்.

“அத்தை என்னை விட்டுட்டு வந்துட்டீங்க?” என்றபடி குழந்தை வர.. தனக்குத்தானே தலையில் தட்டியவள் குழந்தையைத் தூக்கி வீட்டின் முன்புறம் ஓரமிருந்த கொய்யாவிற்கு சென்று காய் பறிக்க கைக்கு எட்டவில்லை என்றதும், “ப்ரீ டார்லிங் நீ இப்படி உட்கார். அத்தை மரத்துல ஏறி பறிச்சித்தர்றேன் சரியா?”

“ம்.. சரி. ஆனா, என் மேல போட்டுரக்கூடாது சரியா” என திருப்பியடிக்க...

“தெளிவாத்தான்டி இருக்க. நீ பிழைச்சிப்ப. என்னயிருந்தாலும் கோயம்புத்தூர்காரில்ல குசும்பு கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்” என்று சிரித்தபடி மரமேற ஆரம்பித்தாள்.

“ராசிமா வயசுப்பொண்ணு இந்த மாதிரி மரம் ஏறக்கூடாது சொல்லியிருக்கேன்ல. எதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆச்சிதுன்னா யார் உன்னை கல்யாணம் கட்டிப்பாங்க” என்று லோஜி முறைப்புடன் நிற்க... அந்த வார்த்தையில் பழைய நியாபகங்கள் மனதில் எழ தலைகவிழ்ந்து அமைதியானவளிடம்.. “என்ன நான் சொல்லிட்டிருக்கேன் பதிலையே காணோம். முதல்ல கீழே இறங்கி வா” என அதட்டல் போட்டார்.

அமைதியாக இறங்கி வரும்போதே ஏன் இந்த அமைதி என்று லோஜி யோசிக்கையில், தன்னை இறுக்கியணைத்து பின் உள்ளே சென்ற பேத்தியையே பார்த்திருந்தவருக்கு அவளின் நிலை புரிய, “சே... விளையாட்டுத்தனமா இருந்த பொண்ணை வலிய போய் வலியைக் குடுத்திட்டியே” என்று தன்னையே திட்டியபடி குழந்தையைத் தூக்கி உள்ளே சென்று கதவு தட்ட, அது திறந்தே இருந்தது.

அவளின் சோகமுகம் பார்த்தவருக்கு கண்கலங்குவது போல் தோன்ற அதை அடக்கி அருகில் அமர்ந்து, “என்னடா நான்தான் எதோ அக்கறையில தெரியாம உளறிட்டேன். இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி?”

“அப்படில்லாம் இல்ல ஆச்சி” என்றவள் குரலும் ‘ஆச்சி’ என்ற அழைப்புமே அவளின் நிலை சொல்ல, மடிமீது விழுந்த பேத்தியை தடவிக் கொடுத்தபடி பழைய நினைவுகளில் மூழ்கினார்.

“பாட்டி மேல நான்தான் படுப்பேன்” என்று ராசியின் தலையை மடியிலிருந்து ப்ரிகுட்டி நகர்த்தினாள்.

அதில் துக்கம் கலைத்தவள், “போடி இது எங்க பாட்டி. நான்தான் படுப்பேன்” என ராசி பதிலடிக்க...

“இல்ல அத்தை. நான் தான் குட்டி பாப்பா. நீங்க பெரிய பொண்ணுதான. நான் தான் படுக்கணும் இல்ல பாட்டி” என லோஜியை சப்போர்ட்கு அழைத்தது ப்ரீகுட்டி.

“எங்க பாட்டிக்கு நான்தான் பாப்பா” என ராசி சொல்ல, இருவரும் ஒருவரையொருவர் முறைக்க... “ஹையோ ராசிமா! சின்னக் குழந்தைகிட்டப் போய் போட்டி போட்டிட்டிருக்க?”

“ஆங்... அவள் மட்டும் என்கிட்ட வம்புக்கு வர்றா. இரு உன்னை ஸ்கூல்ல சேர்க்க ரெடி பண்றேன்” என்றதும்... தன் இருகைகளையும் காதுக்கு மேல் வைத்து நாக்கைத் துருத்தி ‘வெவ்வவ்வவ்வே’ என அழகுகாட்ட... அந்த அழகில் தன்னை மறந்து சிரித்து குழந்தையை அள்ளிக்கொண்டாள்.

மூன்று வாரங்களில் வங்கியில் விடுமுறை கிடைத்து கிளம்புவதற்கு முன்தினம், “கார்ல வேண்டாம்மா. ரொம்ப தொலைவு. அதனால கால்டாக்ஸி புக் பண்ணிக்கலாம்” என்றதும் சம்மதித்து கால்டாக்ஸி புக் செய்ய, மறுநாள் லோஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இன்னொரு நாள் செல்லலாம் என நினைத்தாலும், அதிகநாள் தள்ளிப்போட பிடிக்காமல் தனியே செல்ல வேண்டியதைத் தவிர வேறு வழியில்லாமல் போக ராசி மட்டும் மதுரை கிளம்பினாள்.

அக்கா பெண் தீபாவின் திருமணத்திற்கு செல்ல கிளம்பிய சரத் அதற்கு இரு தினங்கள் முன்னரே அலுவலகத்தைப் பார்க்க நம்பகமான நபரை அமர்த்திவிட்டு, மணியை மதுரைக்கு அனுப்பி சிவராமன் சொன்ன முகவரிக்கு சென்று விசாரிக்கச் சொல்லி, முடிந்தால் திருமணம் முடிந்ததும் தானும் வருவதாகச் சொன்னான்.

அக்காவிடமும் போன் செய்து திருமணத்திற்கு இரண்டுநாள் முன்னதாக வருவதாகச் சொன்னவனுக்கு கடைசி நேர வேலைகள் இழுத்தடிக்க திருமணத்திற்கு முன்தினம் பகலில் மேலூர் கிளம்பினான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top