- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
8
“உங்களுக்கு எத்தனை முறை சொல்றது? நம்ம பையனை நீங்களே பைத்தியம்னு சொல்லலாமா? முன்ன இருந்ததுக்கு இப்ப தெளிவாயிருக்கான். தினமும் மாத்திரை கொடுக்குறதால இப்பப் பரவாயில்லைங்க. இன்னும் சில வருஷம் போனா முழுசா நம்ம பையனாகவே மாறிருவான். இப்ப அவன் பாதி வளர்ந்துட்ட குழந்தை” என்றார்.
“ப்ச்.. எனக்கு நம்பிக்கையில்லை ஆனந்தி. இப்படியே ஒவ்வொரு வருஷமும் எதிர்பார்த்து ஏமாறுறதே வேலையாகிப் போச்சி. ஆனந்தி கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி வசீகரன் ஏன் ஆஃபீஸ் வரலை? ஏன் அவரோட அண்ணன் எம்.டி சீட்டுல இருக்கார்? அவரோட பைனான்ஸ் ஏன் போறதில்லை? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.”
“சின்னவன் வெளிநாட்டுல தொழில் தொடங்குறது சம்பந்தமா போயிருக்கான். அவன் கல்யாணத்துக்கு வந்து திரும்பவும் கிளம்பிருவான். பெரியவன் பைனான்ஸ் கம்பெனி பெரிய மருமகள் பார்த்துக்குறதால அவன் தம்பி பிசினஸைப் பார்த்துக்குறான்னு சொல்லி சமாளிச்சிட்டிருக்கேன். எத்தனை காலத்துக்கு இதையே செய்யுறது?”
“சின்னவன் சரியாகி வர்றவரைக்கும் செய்யுங்க. நம்ம பையனை நாமளே விட்டுக்கொடுத்திரக் கூடாதுங்க” என்றார் அமைதியாக.
“அது எனக்குத் தெரியாதா ஆனந்தி. அதனாலதான் பையன் நிலை தெரிந்தும் கௌரவத்துக்காகனாலும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். அப்புறம் ஆனந்தி இந்தப்பொண்ணு... “
அடுத்து என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியாமல், எதையும் சிந்திக்கத் தோன்றாமல் தங்களறைக்கு வந்திருந்தாள் பூரணி.
மீதியையும் கேட்டிருக்கலாமே என்பதாய் பார்த்தது விதி!
“உங்களுக்குப் பைத்தியமா வசீகரா? என்னால நம்பவே முடியலை. உங்க அப்பாவும் அம்மாவுமே சொல்லுறப்ப என்னன்னு எடுக்கிறது? உங்கம்மா என்ன சொல்றாங்களோ அதைதான் கிளிப்பிள்ளை மாதிரி என்கிட்ட சொல்றீங்களா? நான் என்னடான்னா ஏதேதோ கற்பனை செய்து... ஐயோ!” என்றலறி தலையைப் பிடித்தமர்ந்தாள்.
“ஏன்.. ஏன் இப்படி செய்தாங்க? கௌரவம்! ஹான் கௌரவம். அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவாங்களா? ஏன் வசீகரா இப்படிப் பொய்யாய் போயிட்டீங்க? நான் இதை சுத்தமா எதிர்பார்க்கலை. பணக்கார சம்பந்தம்னதும் எங்கப்பா விசாரிக்கலை. ஏமாற ஒருத்தி கிடைச்சா போதும்னு உங்க வீட்டாளுங்க என்னை... ப்ச்.. நடந்து முடிஞ்சதைப் பற்றிப் பேசி பிரயோஜனமில்லை” என்று கண்ணீரைத் துடைத்து கணவனாகியவனைப் பார்க்க, அவர்கள் சொல்வது பொய் என்ற ரீதியில் அமைதியாய் துயில் கொண்டிருந்தான் அவளின் வசீகரன்.
அவனருகில் அமர்ந்து, “என்ன வசீகரா இதெல்லாம்? உங்களைப் பார்த்தால் யாரும் அப்படிச் சொல்லமாட்டாங்க. உண்மை தெரிந்தும் உங்களை வெறுக்க மனம் வரலையே ஏன் வசீகரா? உங்களுக்கு உங்களையே தெரியாதப்ப என்னை எப்படிப் புரியும். இந்த.. உங்க...” ‘பைத்தியம்’ என்ற நினைவு கூட கசக்க கண்களில் தன்னால் கண்ணீர் வர, அதை அடக்க முயற்சித்தும் முடியாமல் திணறினாள்.
“உங்க சூழ்நிலை மாறினால் என்னை மறந்துருவீங்களா வசீகரா? என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காதா? இந்த உண்மை வெளில தெரிஞ்சா இந்தக் கல்யாணமே செல்லாது சொல்வாங்கள்ல. ஆசை ஆசையாய் உங்களைக் கல்யாணம் செய்ததுக்கு இன்னும் என்ன தண்டனை கொடுக்கப்போறீங்க? எனக்குப் பயமாயிருக்கு வசீகரா. என்ன செய்யுறதுன்னே புரியாத நிலையில் இருக்கேன். எனக்கு உண்மை தெரியும்னு வெளில சொன்னா என்ன சொல்வாங்க? உங்ககிட்டயிருந்து என்னைப் பிரித்து அனுப்பிருவாங்களா? இல்லை நான் உங்களோடதான் இருப்பேன். உங்களை விட்டுப் போகமாட்டேன்” என்று அவனை அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.
காலை எழுந்ததும் கண்முன் கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த கணவனைக் கண்டவள் புன்னகைத்து, “குட் மார்னிங் குட்டிக்கண்ணா” என்றாள்.
“குட் மார்னிங் பரி. இன்னைக்கு என்னைவிட லேட்டா எழுந்திருக்க. சீக்கிரம் ரெடியாகி வா உனக்காகதான் உட்கார்ந்திருக்கேன்” என்றான்.
‘நானும்கூட உங்களுக்காக மட்டுமே இங்க இருக்கப்போறேன்’ என நினைத்து, “எனக்காக இருக்கீங்களா? ஏன்?” என்றாள்.
“எழுந்ததும் தனியா வரக்கூடாது பூரணியோடதான் வரணும்னு அம்மா சொல்லியிருக்காங்க. நீ சீக்கிரம் வா போகலாம்” என்றான்.
“ஓ.. அப்ப உங்கம்மா சொன்னதைதான் நீங்க செய்யுறீங்களா?”
“ஆமா. அம்மா சொல்லாம எனக்கே எப்படித் தெரியும்? அம்மா சொல்வதைத் தட்டாமல் செய்வதுதான் நல்லபிள்ளைக்கு அழகு. நீ எப்படி?” என்று அவளிடம் திருப்பினான்.
“நானும் உங்களைப் போலதான்” என்றவளுக்கு கண்கள் கலங்க, “இருங்க குளிச்சிட்டு வர்றேன்” என குளியலறை சென்று கதவடைத்தாள்.
வீட்டில் அனைவரோடும் பேசினாலும், கணவனைப் பற்றிய உண்மை தெரிந்ததை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. முடிந்தளவு குலசேகரன் பார்வை தன்மீது படாதளவு ஒழிந்து விளையாடப் பழகிக்கொண்டாள் பூரணி.
மனைவியின் வார்த்தை பொய்யாகிவிடக் கூடாதா என்ற எதிர்பார்ப்போடு தகப்பனை வேவு பார்த்த சுவீகரனுக்கு, அவரின் நடவடிக்கையில் எமாற்றம் மட்டுமே மிஞ்ச, அவர்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வர மனைவியின் வேண்டுதலின்படி பூரணியின் வாழ்விற்காகப் பொறுத்துக் கொண்டாலும், வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தினான். இல்லையானால் மனைவியின் வீட்டிலிருக்கும் நேரத்தைக் குறைத்தான்.
வசீகரன்-பரிபூரணி திருமணம் முடிந்து எட்டாவது நாள் இன்று.
ஏனோ மாமியார் திடீரென்று தன்னைவிட்டு விலகுவது போலொரு தோற்றம் அவளுள். ஆரம்பத்தில் இருந்த அன்பு குறைந்திருந்ததோ! சுமூகமான பேச்சுகள் மொத்தமாய்க் குறைந்திருந்தது. அதே நேரம் ஐஸ்வர்யா பூரணிக்கு நெருக்கமாகியிருந்தாள்.
அன்று தனசேகரன் குடும்பத்துடன் வந்திருக்க, அவர்களே மறுத்தாலும் குடும்பத்தில் ஒருத்தியாய் அவர்களைக் கவனிக்க மறக்கவில்லை பரிபூரணி.
மாலை வடை காஃபியுடன் தங்களறைக்கு வந்தவள் அங்கே கேம் விளையாடிக் கொண்டிருந்த கணவனைக் கண்டு, “ஹேய் குட்டிக்கண்ணா! இங்க என்ன பண்றீங்க? காலையிலிருந்து கீழ வரவேயில்லையே ஏன்?” எப்பொழுதும் அப்படி இருப்பவன் இல்லையே என்பதால் கேட்டாள்.
“அந்த பெரியப்பா எப்பப்பாரு பைத்தியம்னு சொல்றார். அவங்க வீட்டுல தினா தவிர யாருமே சரி கிடையாது பரி. நீயும் அவங்ககிட்டப் பேசாத” என்று புகாரளித்தான்.
“உங்க மனோகரன் அண்ணனுமா?” ஐஸ்வர்யா சொல்வதை வைத்துப் பார்த்ததில் பெரியவர்கள் மட்டுமே தப்பாகத் தெரிந்தார்கள். இவன் என்னவென்றால் இப்படிச் சொல்கிறான் என்றே கேட்டிருந்தாள்.
“அவன் நல்லவன்தான். ஆனா, அண்ணி பக்கத்துல இருந்தா அவங்க சொல்றதைதான் கேட்பான். என்னைப்பற்றி தப்புத்தப்பா சொல்லித் தருவாங்க. அண்ணனும் அதைக்கேட்டு என்னை முறைப்பான்.”
“ஓ.. ஒய்ஃப் பேச்சைக் கேட்கிறது தப்பில்லையே வசீகரா” என்றாள் அவன் தலைகலைத்தபடி.
“நல்லதை மட்டும் கேட்கிறது தப்பில்லை. அண்ணா அப்படியா செய்றான்? பேட் பாய்” என்க, சட்டென்று சிரித்துவிட்டாள்.
“ஏன் சிரிக்கிற?”
“நீங்க சொன்ன விதம், உங்க வாய்ஸ் ரொம்ப க்யூட்டா இருந்ததா அதான் சிரிச்சுட்டேன். அவங்களைப் பிடிக்கலைன்னா விடுங்க. இப்ப காஃபி குடிச்சிட்டே பேசலாம்.”
“உனக்கு அவங்களைப் பிடிக்குமா?”
“என் குட்டிக்கண்ணாவைப் பைத்தியம்னு சொல்ற எந்தப் பைத்தியங்களையும் எனக்குப் பிடிக்காது” என்றாள் யோசிக்காது.
“நாங்க பைத்தியமா?” என்ற குரலில் இருவரும் திரும்ப, “உன் புருஷன்தான்டி பைத்தியம். இப்படி ஒருத்தன் கிடைச்சதுக்கே உனக்கு இவ்வளவு கொழுப்புனா, உனக்கெல்லாம் நல்ல புருஷன் கிடைச்சிருந்தா... ஹ்ம்.. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த சின்ன மாமியார் கொடுக்குற இடம் அப்படி” என்று முகம் கடுத்தாள் ஸ்வாதி.
தங்கள் இருவரின் தனிமையில் திடீரென வந்து தங்களைப் பேசுபவள் மேல் கோபம் எழ, “அண்ணி அப்படிச் சொல்லாதீங்க” என்றான் வசீகரன்.
“வேற எப்படிச் சொல்றது? அறிவாளின்னா? போடா பைத்தியம்” என்று அவனைத் திட்ட...
“ஏய்! இன்னொரு தடவை அந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது. வந்தது...” என்று பூரணி எச்சரிக்க...
“ஹா அப்புறம். ஹேய் ஒழுங்கா உன் வீட்டைப்பார்த்து ஓடிப்போ. இங்கயிருந்தா உனக்கு எந்த சுகமும் கிடைக்காது. இந்த வசதி மட்டுமே போதும்னா இரு” என்று ஏளனமாய்ப் பேச,
வசீகரனோ மனைவியின் கையை அழுந்தப் பற்றிக்கொண்டான். அவனின் பயம் உணர்ந்தாளோ! “வேண்டாம் ஸ்வாதி. நீங்க பேசுறது தப்பாயிருக்கு. வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியாயிருக்கேன். இல்ல...”
“என் பேரைச் சொல்லிக் கூப்பிடுற அளவு பெரியாளா நீ? இப்படித்தான் பேசுவேன். உன் புருஷன் பைத்தியம்தான். என்னை என்ன செய்யமுடியும் உன்னால்?” என்றவள் குரலிலிருந்த எகத்தாளம் இன்னும் கோபத்தைத் தூண்ட,
“என்ன வேணும்னா செய்யமுடியும். இந்த வீட்டுக்கே வராத மாதிரி என்னால் செய்யமுடியும் பார்க்குறீங்களா?” என்று கோபத்தில் சத்தமாகச் சொல்ல,
“என்ன சத்தம்? ஸ்வாதி இங்க என்ன பண்ற?” என்றபடி அங்கிருந்த மூவரையும் நோட்டம் விட்டபடி வந்தார் ஆனந்தி.
“வசீயைப் பார்க்க வந்தேன் அத்தை. உங்க மருமகள் என்னென்னவோ சொல்லித் திட்டுறா” என்று ஸ்வாதி திடீர்க் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
“அப்படியில்லை அத்தை” என்பதற்குள், “பூரணி! அழுற அளவுக்கு என்ன சொன்ன இவளை? வீட்டுக்கு வந்தவங்களுக்கு இதான் நீ கொடுக்கிற மரியாதையா?” எதனாலோ அவள் மீதுள்ள கோபத்தைக் காட்டுவது போலிருந்தது அவரின் செய்கை.
“அத்தை நான் ஒண்ணும் செய்யலை. இவங்கதான்...”
பூரணியின் மீதான ஆனந்தியின் பிடிப்பின்மையை உணர்ந்த ஸ்வாதி, “என்ன இவங்கதான்ற? வசீ ரொம்ப அமைதி. ஆனந்தி அத்தை ரொம்பவே நல்லவங்க. இங்க உள்ளவங்களை நல்லபடியா பார்த்துக்கச் சொன்னது தப்பா அத்தை? அதுக்குப்போய் யார்கிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும். நீங்க எதுவும் சொல்லாம வீட்டைப்பார்த்துப் போங்கன்னு அப்படிக் கத்துறா” என்று நடந்ததை அப்படியே மாற்றினாள்.
“நான் உன்னை என்ன செய்தேன்மா? எதுக்காக அப்படிச் சொன்ன? நான் உன்கிட்ட இந்தளவு எதிர்பார்க்கலை” என்றார் ஆனந்தி.
“அத்தை நான் எதுவும் சொல்லலை. இவங்கதான் உங்க பையனைப் பார்த்து...”
“என்ன பார்த்தாங்க? வந்த ஒரு வாரத்துல எங்க இரண்டு குடும்பத்தையும் பிரிக்கப் பார்க்குறியா? எத்தனை வருட ஒற்றுமை தெரியுமா எங்களது?” என்று பூரணியைப் பேசவிடாமல் செய்ய...
‘அடிப்பாவி’ என்பதாய் நினைத்த பூரணி, “ஏன்ங்க என்னென்னவோ பேசுறீங்க. ப்ளீஸ் கொஞ்ச நேரம் நீங்க பேசாம இருங்க. நான் எங்க அத்தைகிட்ட பேசிக்குறேன்” என்றாள் சற்று காட்டமாகவே.
“பூரணி!” என அதட்டலிட்ட ஆனந்தி, “தப்பு” என்றார் அவ்வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து.
“அத்தை. நான்.. ப்ச்.. ஒரு நிமிஷம்..” என்றவள் தங்களை வேடிக்கை பார்த்திருந்த கணவனிடம் வந்தாள். பூரணி சத்தமாகப் பேசுகையில் அவளை விட்டு விலகி நின்றவன் சற்று பயத்துடனே அவளைப் பார்க்க, “உங்களைத் தப்பாப் பேசினாங்கள்ல. அதை அத்தைகிட்ட சொல்லுங்க” என்றாள்.
“நானா? மாட்டேன் போ” என்று தாயின் பின்னே ஒழிந்தான் வசீகரன்.
“நீங்க பேசலைன்னா நான் தப்புப் பண்ணின மாதிரியாகிரும். ப்ளீஸ் நடந்ததைச் சொல்லுங்க” என்று தன்னிடம் கெஞ்சுபவளை புரியா பார்வை பார்த்து, “அம்மா அவளைப் போகச் சொல்லுங்க” என்று ஸ்வாதியை நோக்கி நீட்டிய கையோ பூரணியைச் சுட்ட... அதில் பூரணியின் மேல் இன்னுமே வெறுப்பைக் காட்டிய ஆனந்தி, “ஸ்வாதிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு கீழ போ” என்று கட்டளையிட்டார்.
அதில் அதிர்ந்தவளோ, “அத்தை! நான் எதுவுமே செய்யலை” என அழுகுரலில் சொல்ல.. “நான் சொன்னதை மட்டும் செய்” என பிடிவாதமாக நிற்கவும், வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு அழுதபடி வெளியே சென்றுவிட்டாள்.
அதன்பிறகே வெளியே சென்றிருந்த சுவீகரன் ஐஸ்வர்யா வர, சற்று நேரத்திற்கெல்லாம் தனசேகரன் குடும்பம் சென்றுவிட, இரவு படுக்க அறைக்கு வந்தவளை அங்கிருந்த ஷோபாவில் தன்னுடன் அமரவைத்து, “அழுதியா பூரணி? நாங்க இல்லாத நேரத்துல என்ன நடந்தது?” என கேட்டாள் ஐஸ்வர்யா.
தனசேகரன் குடும்பம் வந்ததிலிருந்து நடந்ததைச் சொல்லி முடித்து, “உங்க கொழுந்தனுக்கு இப்படின்னு ஏன்கா சொல்லலை? கோவில்ல வச்சி அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து உங்ககிட்ட கேட்டப்ப இல்லைன்னு சொன்னீங்க? நீங்களும் மறைச்சிருக்கீங்கதான?” கண்கலங்கக் கேட்டாள்.
“பூரணி! உனக்கு...” என்றாள் திகைப்புடன்.
“உங்களுக்கு எத்தனை முறை சொல்றது? நம்ம பையனை நீங்களே பைத்தியம்னு சொல்லலாமா? முன்ன இருந்ததுக்கு இப்ப தெளிவாயிருக்கான். தினமும் மாத்திரை கொடுக்குறதால இப்பப் பரவாயில்லைங்க. இன்னும் சில வருஷம் போனா முழுசா நம்ம பையனாகவே மாறிருவான். இப்ப அவன் பாதி வளர்ந்துட்ட குழந்தை” என்றார்.
“ப்ச்.. எனக்கு நம்பிக்கையில்லை ஆனந்தி. இப்படியே ஒவ்வொரு வருஷமும் எதிர்பார்த்து ஏமாறுறதே வேலையாகிப் போச்சி. ஆனந்தி கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி வசீகரன் ஏன் ஆஃபீஸ் வரலை? ஏன் அவரோட அண்ணன் எம்.டி சீட்டுல இருக்கார்? அவரோட பைனான்ஸ் ஏன் போறதில்லை? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.”
“சின்னவன் வெளிநாட்டுல தொழில் தொடங்குறது சம்பந்தமா போயிருக்கான். அவன் கல்யாணத்துக்கு வந்து திரும்பவும் கிளம்பிருவான். பெரியவன் பைனான்ஸ் கம்பெனி பெரிய மருமகள் பார்த்துக்குறதால அவன் தம்பி பிசினஸைப் பார்த்துக்குறான்னு சொல்லி சமாளிச்சிட்டிருக்கேன். எத்தனை காலத்துக்கு இதையே செய்யுறது?”
“சின்னவன் சரியாகி வர்றவரைக்கும் செய்யுங்க. நம்ம பையனை நாமளே விட்டுக்கொடுத்திரக் கூடாதுங்க” என்றார் அமைதியாக.
“அது எனக்குத் தெரியாதா ஆனந்தி. அதனாலதான் பையன் நிலை தெரிந்தும் கௌரவத்துக்காகனாலும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். அப்புறம் ஆனந்தி இந்தப்பொண்ணு... “
அடுத்து என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியாமல், எதையும் சிந்திக்கத் தோன்றாமல் தங்களறைக்கு வந்திருந்தாள் பூரணி.
மீதியையும் கேட்டிருக்கலாமே என்பதாய் பார்த்தது விதி!
“உங்களுக்குப் பைத்தியமா வசீகரா? என்னால நம்பவே முடியலை. உங்க அப்பாவும் அம்மாவுமே சொல்லுறப்ப என்னன்னு எடுக்கிறது? உங்கம்மா என்ன சொல்றாங்களோ அதைதான் கிளிப்பிள்ளை மாதிரி என்கிட்ட சொல்றீங்களா? நான் என்னடான்னா ஏதேதோ கற்பனை செய்து... ஐயோ!” என்றலறி தலையைப் பிடித்தமர்ந்தாள்.
“ஏன்.. ஏன் இப்படி செய்தாங்க? கௌரவம்! ஹான் கௌரவம். அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவாங்களா? ஏன் வசீகரா இப்படிப் பொய்யாய் போயிட்டீங்க? நான் இதை சுத்தமா எதிர்பார்க்கலை. பணக்கார சம்பந்தம்னதும் எங்கப்பா விசாரிக்கலை. ஏமாற ஒருத்தி கிடைச்சா போதும்னு உங்க வீட்டாளுங்க என்னை... ப்ச்.. நடந்து முடிஞ்சதைப் பற்றிப் பேசி பிரயோஜனமில்லை” என்று கண்ணீரைத் துடைத்து கணவனாகியவனைப் பார்க்க, அவர்கள் சொல்வது பொய் என்ற ரீதியில் அமைதியாய் துயில் கொண்டிருந்தான் அவளின் வசீகரன்.
அவனருகில் அமர்ந்து, “என்ன வசீகரா இதெல்லாம்? உங்களைப் பார்த்தால் யாரும் அப்படிச் சொல்லமாட்டாங்க. உண்மை தெரிந்தும் உங்களை வெறுக்க மனம் வரலையே ஏன் வசீகரா? உங்களுக்கு உங்களையே தெரியாதப்ப என்னை எப்படிப் புரியும். இந்த.. உங்க...” ‘பைத்தியம்’ என்ற நினைவு கூட கசக்க கண்களில் தன்னால் கண்ணீர் வர, அதை அடக்க முயற்சித்தும் முடியாமல் திணறினாள்.
“உங்க சூழ்நிலை மாறினால் என்னை மறந்துருவீங்களா வசீகரா? என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காதா? இந்த உண்மை வெளில தெரிஞ்சா இந்தக் கல்யாணமே செல்லாது சொல்வாங்கள்ல. ஆசை ஆசையாய் உங்களைக் கல்யாணம் செய்ததுக்கு இன்னும் என்ன தண்டனை கொடுக்கப்போறீங்க? எனக்குப் பயமாயிருக்கு வசீகரா. என்ன செய்யுறதுன்னே புரியாத நிலையில் இருக்கேன். எனக்கு உண்மை தெரியும்னு வெளில சொன்னா என்ன சொல்வாங்க? உங்ககிட்டயிருந்து என்னைப் பிரித்து அனுப்பிருவாங்களா? இல்லை நான் உங்களோடதான் இருப்பேன். உங்களை விட்டுப் போகமாட்டேன்” என்று அவனை அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.
காலை எழுந்ததும் கண்முன் கைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த கணவனைக் கண்டவள் புன்னகைத்து, “குட் மார்னிங் குட்டிக்கண்ணா” என்றாள்.
“குட் மார்னிங் பரி. இன்னைக்கு என்னைவிட லேட்டா எழுந்திருக்க. சீக்கிரம் ரெடியாகி வா உனக்காகதான் உட்கார்ந்திருக்கேன்” என்றான்.
‘நானும்கூட உங்களுக்காக மட்டுமே இங்க இருக்கப்போறேன்’ என நினைத்து, “எனக்காக இருக்கீங்களா? ஏன்?” என்றாள்.
“எழுந்ததும் தனியா வரக்கூடாது பூரணியோடதான் வரணும்னு அம்மா சொல்லியிருக்காங்க. நீ சீக்கிரம் வா போகலாம்” என்றான்.
“ஓ.. அப்ப உங்கம்மா சொன்னதைதான் நீங்க செய்யுறீங்களா?”
“ஆமா. அம்மா சொல்லாம எனக்கே எப்படித் தெரியும்? அம்மா சொல்வதைத் தட்டாமல் செய்வதுதான் நல்லபிள்ளைக்கு அழகு. நீ எப்படி?” என்று அவளிடம் திருப்பினான்.
“நானும் உங்களைப் போலதான்” என்றவளுக்கு கண்கள் கலங்க, “இருங்க குளிச்சிட்டு வர்றேன்” என குளியலறை சென்று கதவடைத்தாள்.
வீட்டில் அனைவரோடும் பேசினாலும், கணவனைப் பற்றிய உண்மை தெரிந்ததை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. முடிந்தளவு குலசேகரன் பார்வை தன்மீது படாதளவு ஒழிந்து விளையாடப் பழகிக்கொண்டாள் பூரணி.
மனைவியின் வார்த்தை பொய்யாகிவிடக் கூடாதா என்ற எதிர்பார்ப்போடு தகப்பனை வேவு பார்த்த சுவீகரனுக்கு, அவரின் நடவடிக்கையில் எமாற்றம் மட்டுமே மிஞ்ச, அவர்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வர மனைவியின் வேண்டுதலின்படி பூரணியின் வாழ்விற்காகப் பொறுத்துக் கொண்டாலும், வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தினான். இல்லையானால் மனைவியின் வீட்டிலிருக்கும் நேரத்தைக் குறைத்தான்.
வசீகரன்-பரிபூரணி திருமணம் முடிந்து எட்டாவது நாள் இன்று.
ஏனோ மாமியார் திடீரென்று தன்னைவிட்டு விலகுவது போலொரு தோற்றம் அவளுள். ஆரம்பத்தில் இருந்த அன்பு குறைந்திருந்ததோ! சுமூகமான பேச்சுகள் மொத்தமாய்க் குறைந்திருந்தது. அதே நேரம் ஐஸ்வர்யா பூரணிக்கு நெருக்கமாகியிருந்தாள்.
அன்று தனசேகரன் குடும்பத்துடன் வந்திருக்க, அவர்களே மறுத்தாலும் குடும்பத்தில் ஒருத்தியாய் அவர்களைக் கவனிக்க மறக்கவில்லை பரிபூரணி.
மாலை வடை காஃபியுடன் தங்களறைக்கு வந்தவள் அங்கே கேம் விளையாடிக் கொண்டிருந்த கணவனைக் கண்டு, “ஹேய் குட்டிக்கண்ணா! இங்க என்ன பண்றீங்க? காலையிலிருந்து கீழ வரவேயில்லையே ஏன்?” எப்பொழுதும் அப்படி இருப்பவன் இல்லையே என்பதால் கேட்டாள்.
“அந்த பெரியப்பா எப்பப்பாரு பைத்தியம்னு சொல்றார். அவங்க வீட்டுல தினா தவிர யாருமே சரி கிடையாது பரி. நீயும் அவங்ககிட்டப் பேசாத” என்று புகாரளித்தான்.
“உங்க மனோகரன் அண்ணனுமா?” ஐஸ்வர்யா சொல்வதை வைத்துப் பார்த்ததில் பெரியவர்கள் மட்டுமே தப்பாகத் தெரிந்தார்கள். இவன் என்னவென்றால் இப்படிச் சொல்கிறான் என்றே கேட்டிருந்தாள்.
“அவன் நல்லவன்தான். ஆனா, அண்ணி பக்கத்துல இருந்தா அவங்க சொல்றதைதான் கேட்பான். என்னைப்பற்றி தப்புத்தப்பா சொல்லித் தருவாங்க. அண்ணனும் அதைக்கேட்டு என்னை முறைப்பான்.”
“ஓ.. ஒய்ஃப் பேச்சைக் கேட்கிறது தப்பில்லையே வசீகரா” என்றாள் அவன் தலைகலைத்தபடி.
“நல்லதை மட்டும் கேட்கிறது தப்பில்லை. அண்ணா அப்படியா செய்றான்? பேட் பாய்” என்க, சட்டென்று சிரித்துவிட்டாள்.
“ஏன் சிரிக்கிற?”
“நீங்க சொன்ன விதம், உங்க வாய்ஸ் ரொம்ப க்யூட்டா இருந்ததா அதான் சிரிச்சுட்டேன். அவங்களைப் பிடிக்கலைன்னா விடுங்க. இப்ப காஃபி குடிச்சிட்டே பேசலாம்.”
“உனக்கு அவங்களைப் பிடிக்குமா?”
“என் குட்டிக்கண்ணாவைப் பைத்தியம்னு சொல்ற எந்தப் பைத்தியங்களையும் எனக்குப் பிடிக்காது” என்றாள் யோசிக்காது.
“நாங்க பைத்தியமா?” என்ற குரலில் இருவரும் திரும்ப, “உன் புருஷன்தான்டி பைத்தியம். இப்படி ஒருத்தன் கிடைச்சதுக்கே உனக்கு இவ்வளவு கொழுப்புனா, உனக்கெல்லாம் நல்ல புருஷன் கிடைச்சிருந்தா... ஹ்ம்.. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. இந்த சின்ன மாமியார் கொடுக்குற இடம் அப்படி” என்று முகம் கடுத்தாள் ஸ்வாதி.
தங்கள் இருவரின் தனிமையில் திடீரென வந்து தங்களைப் பேசுபவள் மேல் கோபம் எழ, “அண்ணி அப்படிச் சொல்லாதீங்க” என்றான் வசீகரன்.
“வேற எப்படிச் சொல்றது? அறிவாளின்னா? போடா பைத்தியம்” என்று அவனைத் திட்ட...
“ஏய்! இன்னொரு தடவை அந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது. வந்தது...” என்று பூரணி எச்சரிக்க...
“ஹா அப்புறம். ஹேய் ஒழுங்கா உன் வீட்டைப்பார்த்து ஓடிப்போ. இங்கயிருந்தா உனக்கு எந்த சுகமும் கிடைக்காது. இந்த வசதி மட்டுமே போதும்னா இரு” என்று ஏளனமாய்ப் பேச,
வசீகரனோ மனைவியின் கையை அழுந்தப் பற்றிக்கொண்டான். அவனின் பயம் உணர்ந்தாளோ! “வேண்டாம் ஸ்வாதி. நீங்க பேசுறது தப்பாயிருக்கு. வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியாயிருக்கேன். இல்ல...”
“என் பேரைச் சொல்லிக் கூப்பிடுற அளவு பெரியாளா நீ? இப்படித்தான் பேசுவேன். உன் புருஷன் பைத்தியம்தான். என்னை என்ன செய்யமுடியும் உன்னால்?” என்றவள் குரலிலிருந்த எகத்தாளம் இன்னும் கோபத்தைத் தூண்ட,
“என்ன வேணும்னா செய்யமுடியும். இந்த வீட்டுக்கே வராத மாதிரி என்னால் செய்யமுடியும் பார்க்குறீங்களா?” என்று கோபத்தில் சத்தமாகச் சொல்ல,
“என்ன சத்தம்? ஸ்வாதி இங்க என்ன பண்ற?” என்றபடி அங்கிருந்த மூவரையும் நோட்டம் விட்டபடி வந்தார் ஆனந்தி.
“வசீயைப் பார்க்க வந்தேன் அத்தை. உங்க மருமகள் என்னென்னவோ சொல்லித் திட்டுறா” என்று ஸ்வாதி திடீர்க் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
“அப்படியில்லை அத்தை” என்பதற்குள், “பூரணி! அழுற அளவுக்கு என்ன சொன்ன இவளை? வீட்டுக்கு வந்தவங்களுக்கு இதான் நீ கொடுக்கிற மரியாதையா?” எதனாலோ அவள் மீதுள்ள கோபத்தைக் காட்டுவது போலிருந்தது அவரின் செய்கை.
“அத்தை நான் ஒண்ணும் செய்யலை. இவங்கதான்...”
பூரணியின் மீதான ஆனந்தியின் பிடிப்பின்மையை உணர்ந்த ஸ்வாதி, “என்ன இவங்கதான்ற? வசீ ரொம்ப அமைதி. ஆனந்தி அத்தை ரொம்பவே நல்லவங்க. இங்க உள்ளவங்களை நல்லபடியா பார்த்துக்கச் சொன்னது தப்பா அத்தை? அதுக்குப்போய் யார்கிட்ட எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும். நீங்க எதுவும் சொல்லாம வீட்டைப்பார்த்துப் போங்கன்னு அப்படிக் கத்துறா” என்று நடந்ததை அப்படியே மாற்றினாள்.
“நான் உன்னை என்ன செய்தேன்மா? எதுக்காக அப்படிச் சொன்ன? நான் உன்கிட்ட இந்தளவு எதிர்பார்க்கலை” என்றார் ஆனந்தி.
“அத்தை நான் எதுவும் சொல்லலை. இவங்கதான் உங்க பையனைப் பார்த்து...”
“என்ன பார்த்தாங்க? வந்த ஒரு வாரத்துல எங்க இரண்டு குடும்பத்தையும் பிரிக்கப் பார்க்குறியா? எத்தனை வருட ஒற்றுமை தெரியுமா எங்களது?” என்று பூரணியைப் பேசவிடாமல் செய்ய...
‘அடிப்பாவி’ என்பதாய் நினைத்த பூரணி, “ஏன்ங்க என்னென்னவோ பேசுறீங்க. ப்ளீஸ் கொஞ்ச நேரம் நீங்க பேசாம இருங்க. நான் எங்க அத்தைகிட்ட பேசிக்குறேன்” என்றாள் சற்று காட்டமாகவே.
“பூரணி!” என அதட்டலிட்ட ஆனந்தி, “தப்பு” என்றார் அவ்வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து.
“அத்தை. நான்.. ப்ச்.. ஒரு நிமிஷம்..” என்றவள் தங்களை வேடிக்கை பார்த்திருந்த கணவனிடம் வந்தாள். பூரணி சத்தமாகப் பேசுகையில் அவளை விட்டு விலகி நின்றவன் சற்று பயத்துடனே அவளைப் பார்க்க, “உங்களைத் தப்பாப் பேசினாங்கள்ல. அதை அத்தைகிட்ட சொல்லுங்க” என்றாள்.
“நானா? மாட்டேன் போ” என்று தாயின் பின்னே ஒழிந்தான் வசீகரன்.
“நீங்க பேசலைன்னா நான் தப்புப் பண்ணின மாதிரியாகிரும். ப்ளீஸ் நடந்ததைச் சொல்லுங்க” என்று தன்னிடம் கெஞ்சுபவளை புரியா பார்வை பார்த்து, “அம்மா அவளைப் போகச் சொல்லுங்க” என்று ஸ்வாதியை நோக்கி நீட்டிய கையோ பூரணியைச் சுட்ட... அதில் பூரணியின் மேல் இன்னுமே வெறுப்பைக் காட்டிய ஆனந்தி, “ஸ்வாதிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு கீழ போ” என்று கட்டளையிட்டார்.
அதில் அதிர்ந்தவளோ, “அத்தை! நான் எதுவுமே செய்யலை” என அழுகுரலில் சொல்ல.. “நான் சொன்னதை மட்டும் செய்” என பிடிவாதமாக நிற்கவும், வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டு அழுதபடி வெளியே சென்றுவிட்டாள்.
அதன்பிறகே வெளியே சென்றிருந்த சுவீகரன் ஐஸ்வர்யா வர, சற்று நேரத்திற்கெல்லாம் தனசேகரன் குடும்பம் சென்றுவிட, இரவு படுக்க அறைக்கு வந்தவளை அங்கிருந்த ஷோபாவில் தன்னுடன் அமரவைத்து, “அழுதியா பூரணி? நாங்க இல்லாத நேரத்துல என்ன நடந்தது?” என கேட்டாள் ஐஸ்வர்யா.
தனசேகரன் குடும்பம் வந்ததிலிருந்து நடந்ததைச் சொல்லி முடித்து, “உங்க கொழுந்தனுக்கு இப்படின்னு ஏன்கா சொல்லலை? கோவில்ல வச்சி அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து உங்ககிட்ட கேட்டப்ப இல்லைன்னு சொன்னீங்க? நீங்களும் மறைச்சிருக்கீங்கதான?” கண்கலங்கக் கேட்டாள்.
“பூரணி! உனக்கு...” என்றாள் திகைப்புடன்.