- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
6
கார்த்திகாவின் அழுகையை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அவளின் பளிச் முகம் எதையோ உணர்த்த கார்த்திகாவைப் பார்த்து, “வாவ் அக்கா! முகம் பளிச்சின்னு அடிக்குது. பாட்டு சௌண்ட் கூட கேட்ட மாதிரி இருந்ததே. நிஜமா?” என்றார்கள்.
“அப்படியா? எனக்குத் தெரியலையே?” என்று மழுப்ப...
“அண்ணி எதோ பேயடிச்சி அழுதுட்டு வந்த மாதிரி இருந்தது. இப்ப என்ன அதே பேய் திரும்ப அடிச்சி சிரிக்க வச்சிருச்சா” என்ற வித்யாவின் குரலில் நக்கலிருந்தது.
“ஏய் வேண்டாம்” என எச்சரிப்பது போல் விரல் வைத்து சொன்னவள், “வேணும்னா நீங்களே வந்து செக் பண்ணி சொல்லுங்க” என்றாள் சிரித்தபடி.
“அண்ணி சாரி. அண்ணா இப்படிப் பேசியிருக்கக்கூடாது. நீங்க எவ்வளவு ஹர்ட் ஆகிருப்பீங்கன்னு தெரியும். அண்ணா பேசுனதுக்கு அவங்களுக்கே முழு அர்த்தம் தெரிஞ்சிருக்காது. அதை மறந்திருங்க.”
“நான் எதுவும் ஹர்ட் ஆகல. நான் ஏன் ஆகணும்” என்றாள் சர்வசாதாரணமாக.
“ஓ... அப்படீங்களா அண்ணி மேடம்! அப்ப நீங்க அங்கயிருந்து அழுதுட்டு வரலன்னு நாங்களும் நம்பிட்டோம் இல்ல கீர்த்தி” என்றாள்.
“அதைச் சொல்லு வித்தி. என்னயிருந்தாலும் உன்னோட கெத்தை விட்டுக் குடுக்காம இருக்க பாருக்கா” என்றவள் வித்யாவிடம் திரும்பி “ஏன் வித்தி இவங்களுக்கு ஒரு நாரதர் டச் குடுத்தா என்ன?” என்றாள் வேகமாக.
“ம்க்கும். இவங்களுக்கு குடுக்கப்போயி, அதுல நம்மளையே தூக்கிப் போட்டிருவாங்க கீர்த்தி.”
“அதுவும் சரிதான். சரிக்கா மாம்ஸ் என்ன சொன்னாங்க சொல்லு?”
சுபாஷ் வந்து போனதைச் சொன்னவள், “முதல்ல கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்னாங்களா கீர்த்தி, ஒரு செகண்ட் பயந்துட்டேன். உடனே என் ஒய்ஃபா நீ வந்தாலும் உன்னை காதலிப்பேன் சொன்னாங்க பாரு. அப்படியே மெர்சலாயிட்டேன்டா” என்றாள் ஒருவித மயக்கத்துடன்.
“அச்சோ அக்கா! வேண்டாம் வேண்டாம்னு சொல்லி இப்படிக் கவுந்துட்டியேக்கா.”
“உண்மையிலேயே கவுந்துட்டேன்தான்” என்றவளின் குரலிலுள்ள கிறக்கம் இருவரையும் ஒரு வகையில் சந்தோஷப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ‘காதலிக்கும் ஆசையில்லை’ என்று பாடியவர்களை என்ன செய்து சேர்த்து வைப்பதென்று யோசித்த நல்லவர்கள் அல்லவா.
“ம்க்கும்.. அண்ணி டூயட் மேரேஜ் அப்புறம் போய்க்கலாம்.”
“ஹேய்! வித்தி டூயட்னதும்தான் நியாபகம் வருது. ஏய் அக்கா கொஞ்ச நாள் முன்னாடி மாம்ஸைக் கல்யாணம் பண்ணிக்க என்னைக் கேட்டல்ல. இப்ப அதுக்கு சரி சொல்லிடலாம்னு நினைக்கிறேன். நீ என்னக்கா நினைக்கிற?” என்றாள் அப்பாவியாய்.
“ம்... உன் தோலை உரிச்சி உப்புக்கண்டம் போடலாமான்னு நினைக்கிறேன். இப்ப நீ என்ன நினைக்கிற?” என்று தங்கையை அடிக்கத் துரத்தினாள்.
“அடப்பாவி அண்ணா! உங்களுக்கு மாப்பிள்ளைக்கான மார்க்கெட் வேல்யூ ஓவராயிருக்கே. இது தெரிஞ்சிருந்தா, நீ மாடிப்படி ஏறிக் குதிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு சுயம்வரம் வச்சிருந்திருப்பேனே. மிஸ் பண்ணிட்டேனே” என்றாள் கவலையாக.
“ஏய் வித்தி அடி பின்னிடுவேன் உன்னை. உங்கண்ணன் என்னைத் தவிர யாரையாவது கல்யாணம் பண்ணிப்பாங்க. தொலைச்சிடுவேன் அவங்களை. எங்க சுத்தினாலும் நான்தான் உனக்கு அண்ணி. ஐ மீன் உங்கண்ணா ஒய்ஃப் நான்தான். அதை மாற்ற நினைக்காத மைண்ட் இட்.”
“ஹா..ஹா அண்ணிடா” என்றாள் கார்த்திகாவின் தோளணைத்து.
“ஆனா, வித்தி உங்கண்ணா மனசு மாறிட மாட்டாங்களே?” கார்த்திகா தவிப்பாய் கேட்க,
அதை உணர்ந்தவளாய் கேலியைக் கைவிட்டு, “இல்ல அண்ணி. அண்ணா குடும்ப பாசத்துக்கு கட்டுப்பட்டவங்க. யாருக்காக இல்லாட்டியும், என்னோட ப்யூச்சருக்காகவுமாவது நிறுத்த மாட்டாங்க. அதோட கீர்த்தியோட ப்யூச்சரும் இருக்கே.”
“அதிலும் உங்களை அண்ணாவுக்கு பிடிச்சிருக்கு. அதை சொல்லத் தெரியலையா? இல்ல அண்ணாவுக்கே புரியலையா தெரியல. பட், உங்களை விடமாட்டாங்க. சோ பயப்படாம ஜாலியா இருங்க. உங்காளு உங்களுக்குத்தான்! இருந்தாலும் எங்க சார்புல அண்ணாவுக்கு ஒரு பனிஷ்மெண்ட் இருக்கு. இல்ல கீர்த்தி..” என அவளையும் உள்ளிழுக்க...
“யா..யா கண்டிப்பா. எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கும்.”
“எதோ ப்ளான் பண்ணிட்டீங்கன்னு தெரியுது. அது உங்க பாடு. அவங்க பாடு. நான் அதுல தலையிட மாட்டேன்பா” என்றவளுக்குத் தெரியுமா அவளின் தலைதான் உருளப் போகிறதென்று.
சுபாஷ் கார்த்திகா வீட்டிலும் விருந்தினர் ஒரு சிலர் வந்திருந்தார்கள். தணிகாசலம் தவிர, சுதாகரனுக்கும், சுபாஷிணிக்கும் ஒரே சொந்தங்கள் என்பதால் அவர்கள் சுதாகரனின் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். தணிகாசலத்தின் சொந்தங்களாக ஒன்றிரெண்டு பேர் வந்திருந்தார்கள்.
‘தூங்குமூஞ்சி மரங்களெல்லாம்...’ பாடல் ஒலிக்க, மெல்லிய புன்னகை வர அழைப்பை ஏற்காமலேயே எழுந்தவளை, “அக்கா நான் தூங்கு மூஞ்சியில்ல.. அது யார் தூங்குமூஞ்சி?” என கேலி பேசிய தங்கையை அடித்து, “அதை நான் பார்த்துக்கறேன். நீ தூங்கு” என்றபடி மாடியேறினாள்.
மேலே வந்தவளை தன்னருகில் நிற்க வைத்து, “என்ன நான் சொன்னதை யோசிச்சியா?” என்றான்.
‘எதை?’ என விழித்தவள், “கல்யாணத்தை நிறுத்துவதையா?’ என்றாள்.
“எஸ் கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே” என்றான் பாராட்டுதலாக.
“நான் நிறுத்த வேண்டாம்னு எப்ப சொன்னேன். உங்களுக்கு வேணும்னா நிறுத்திக்கோங்கன்னு சொல்லியிருந்தேனே.” விளையாட்டாக சொன்னாலும், “உங்க ஒய்ஃபைத்தான லவ் பண்ணுவீங்க?” என்றாள் அவன் சொன்னது உண்மையென்று உறுதி செய்யும் எண்ணத்துடன்.
“யா..யா என்னோட ஒய்ஃபைதான் காதலிக்க முடியும். அடுத்தவன் மனைவியை காதலிச்சா அது வேற மாதிரி ஆகிறாதா?”
“உங்களை..” என பல்லைக் கடித்தாலும், “நீங்க அப்படி செய்யமாட்டீங்கன்னு தெரியும். ஏன்னா நீங்க ஒரு சோம்பேறி” என்றாள் வந்த சிரிப்பை அடக்கியபடி.
“என்னது சோம்பேறியா? உனக்கு இந்த அசிங்கம் தேவையாடா?” என தனக்குத்தானே சொன்னவன், “சரி. இதுக்கும் சோம்பேறித்தனத்துக்கும் என்ன லிங்க் இருக்குன்னு சொல்லு?” என்றான்.
“இருக்கும்.. ஆனா எனக்குத் தெரியாது. சம்.. எதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசிட்டேன்னு நினைக்கிறேன். அதை எரேசர் வச்சி அழிச்சிருங்க ஓகே.”
“ஹேய் கார்த்தி! நீயா பேசுற? சும்மா கலக்குற போ. எரேசர் வச்சி வார்த்தைகளை அழிக்கணுமா. இரு கல்யாணத்துக்கு அப்புறம் நான் பேசுற வார்த்தைகளை எந்த எரேசர் வச்சி அழிக்கிறன்னு பார்க்கிறேன்.”
‘நீங்க எது பேசினாலும் அதை அழிக்கமாட்டேன். ஒவ்வொரு வேர்ட்ஸ{ம் பொக்கிஷமா சேர்த்து வச்சிப்பேன்’ என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, “அது அப்ப பார்த்துக்கலாம்” என்றாள் மெல்லிய வெட்கத்துடன்.
அப்பொழுது அவன் செல்லிற்கு போன் வர, “ஒரு நிமிஷம் கார்த்தி. கம்பெனியிலிருந்து கால்” என்று அங்கிருந்து நகர்ந்து லைட் வெளிச்சத்தில் சுபாஷ் பேசிக் கொண்டிருக்க, அந்த பொதுச்சுவரில் அமர்ந்து வருங்காலக் கணவனான மாமன் மகனை சைட்டடித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.
பத்து நாட்களுக்கு முன்னர் நீ இப்படி ஒருத்தன் பின் சுற்றுவாய் என்று யாராவது சொல்லியிருந்தால், ‘எனக்கொண்ணும் பைத்தியம் கிடையாது. ஒருத்தன் பின்னாடி சுத்துறக்கு. அதுவும் சுபாஷ் பின்னாடி சுத்துறதுக்கு சான்ஸேயில்லை’ என்றிருப்பாள். இன்றோ! அனைத்தும் தலைகீழ் மாற்றம். அவனே அறியாமல் அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருக்கிறாள் அவனின் முறைப்பெண்.
மனதில் என்னவோ உறுத்த பேசியபடியே திரும்பியவன் என்னவென்று சைகையால் கேட்க... தோள் குலுக்கி உதடு பிதுக்கி ஒன்றுமில்லை என்றாள் சைகையிலேயே. ரகசியமாக அவனை செல்லில் க்ளிக் செய்ய, லைட் வெளிச்சத்தில் மங்கலாகவே தெரிந்தது அவன் உருவம்.
பேசி முடித்து அவளருகில் வந்தவன், “நீ கீழ போ கார்த்தி. ஃப்ரண்ட் ஒருத்தன் வர்றானாம். நான் பஸ்ஸ்டாண்ட் வரை போய் பிக்கப் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றதும் மனமில்லாமல் அவள் தலையசைக்க, அவள் தலையை வருடச்சென்ற கையை மடக்கி வேகமாக கீழே சென்றான். அவனுக்குள்ளும் எதோ ஒரு மாற்றத்தைச் செய்தாள் அவனின் காதலியாகப் போகும் வருங்கால மனைவி.
கீழே பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு மாடியின் முன்புறம் வந்தவள் அவனைப் பார்க்க, தற்செயலாக மேலே ஏறிட்டவன் அவளைக்கண்டு பளிச்சென்ற ஒரு புன்னகையை வெளியிட்டு தலையசைத்து அவளின் மனதையும் அள்ளிக் கொண்டு கிளம்பினான் பைக்கில்.
அந்த மயக்கத்திலேயே வந்தவள் சந்தோஷம் தாளாது அங்கேயே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து செல்போனிலுள்ள அவன் புகைப்படத்திற்கு முத்தமிட்டு கண்மூடி அமர்ந்திருந்தாள்.
கார்த்திகாவின் அழுகையை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அவளின் பளிச் முகம் எதையோ உணர்த்த கார்த்திகாவைப் பார்த்து, “வாவ் அக்கா! முகம் பளிச்சின்னு அடிக்குது. பாட்டு சௌண்ட் கூட கேட்ட மாதிரி இருந்ததே. நிஜமா?” என்றார்கள்.
“அப்படியா? எனக்குத் தெரியலையே?” என்று மழுப்ப...
“அண்ணி எதோ பேயடிச்சி அழுதுட்டு வந்த மாதிரி இருந்தது. இப்ப என்ன அதே பேய் திரும்ப அடிச்சி சிரிக்க வச்சிருச்சா” என்ற வித்யாவின் குரலில் நக்கலிருந்தது.
“ஏய் வேண்டாம்” என எச்சரிப்பது போல் விரல் வைத்து சொன்னவள், “வேணும்னா நீங்களே வந்து செக் பண்ணி சொல்லுங்க” என்றாள் சிரித்தபடி.
“அண்ணி சாரி. அண்ணா இப்படிப் பேசியிருக்கக்கூடாது. நீங்க எவ்வளவு ஹர்ட் ஆகிருப்பீங்கன்னு தெரியும். அண்ணா பேசுனதுக்கு அவங்களுக்கே முழு அர்த்தம் தெரிஞ்சிருக்காது. அதை மறந்திருங்க.”
“நான் எதுவும் ஹர்ட் ஆகல. நான் ஏன் ஆகணும்” என்றாள் சர்வசாதாரணமாக.
“ஓ... அப்படீங்களா அண்ணி மேடம்! அப்ப நீங்க அங்கயிருந்து அழுதுட்டு வரலன்னு நாங்களும் நம்பிட்டோம் இல்ல கீர்த்தி” என்றாள்.
“அதைச் சொல்லு வித்தி. என்னயிருந்தாலும் உன்னோட கெத்தை விட்டுக் குடுக்காம இருக்க பாருக்கா” என்றவள் வித்யாவிடம் திரும்பி “ஏன் வித்தி இவங்களுக்கு ஒரு நாரதர் டச் குடுத்தா என்ன?” என்றாள் வேகமாக.
“ம்க்கும். இவங்களுக்கு குடுக்கப்போயி, அதுல நம்மளையே தூக்கிப் போட்டிருவாங்க கீர்த்தி.”
“அதுவும் சரிதான். சரிக்கா மாம்ஸ் என்ன சொன்னாங்க சொல்லு?”
சுபாஷ் வந்து போனதைச் சொன்னவள், “முதல்ல கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்னாங்களா கீர்த்தி, ஒரு செகண்ட் பயந்துட்டேன். உடனே என் ஒய்ஃபா நீ வந்தாலும் உன்னை காதலிப்பேன் சொன்னாங்க பாரு. அப்படியே மெர்சலாயிட்டேன்டா” என்றாள் ஒருவித மயக்கத்துடன்.
“அச்சோ அக்கா! வேண்டாம் வேண்டாம்னு சொல்லி இப்படிக் கவுந்துட்டியேக்கா.”
“உண்மையிலேயே கவுந்துட்டேன்தான்” என்றவளின் குரலிலுள்ள கிறக்கம் இருவரையும் ஒரு வகையில் சந்தோஷப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ‘காதலிக்கும் ஆசையில்லை’ என்று பாடியவர்களை என்ன செய்து சேர்த்து வைப்பதென்று யோசித்த நல்லவர்கள் அல்லவா.
“ம்க்கும்.. அண்ணி டூயட் மேரேஜ் அப்புறம் போய்க்கலாம்.”
“ஹேய்! வித்தி டூயட்னதும்தான் நியாபகம் வருது. ஏய் அக்கா கொஞ்ச நாள் முன்னாடி மாம்ஸைக் கல்யாணம் பண்ணிக்க என்னைக் கேட்டல்ல. இப்ப அதுக்கு சரி சொல்லிடலாம்னு நினைக்கிறேன். நீ என்னக்கா நினைக்கிற?” என்றாள் அப்பாவியாய்.
“ம்... உன் தோலை உரிச்சி உப்புக்கண்டம் போடலாமான்னு நினைக்கிறேன். இப்ப நீ என்ன நினைக்கிற?” என்று தங்கையை அடிக்கத் துரத்தினாள்.
“அடப்பாவி அண்ணா! உங்களுக்கு மாப்பிள்ளைக்கான மார்க்கெட் வேல்யூ ஓவராயிருக்கே. இது தெரிஞ்சிருந்தா, நீ மாடிப்படி ஏறிக் குதிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு சுயம்வரம் வச்சிருந்திருப்பேனே. மிஸ் பண்ணிட்டேனே” என்றாள் கவலையாக.
“ஏய் வித்தி அடி பின்னிடுவேன் உன்னை. உங்கண்ணன் என்னைத் தவிர யாரையாவது கல்யாணம் பண்ணிப்பாங்க. தொலைச்சிடுவேன் அவங்களை. எங்க சுத்தினாலும் நான்தான் உனக்கு அண்ணி. ஐ மீன் உங்கண்ணா ஒய்ஃப் நான்தான். அதை மாற்ற நினைக்காத மைண்ட் இட்.”
“ஹா..ஹா அண்ணிடா” என்றாள் கார்த்திகாவின் தோளணைத்து.
“ஆனா, வித்தி உங்கண்ணா மனசு மாறிட மாட்டாங்களே?” கார்த்திகா தவிப்பாய் கேட்க,
அதை உணர்ந்தவளாய் கேலியைக் கைவிட்டு, “இல்ல அண்ணி. அண்ணா குடும்ப பாசத்துக்கு கட்டுப்பட்டவங்க. யாருக்காக இல்லாட்டியும், என்னோட ப்யூச்சருக்காகவுமாவது நிறுத்த மாட்டாங்க. அதோட கீர்த்தியோட ப்யூச்சரும் இருக்கே.”
“அதிலும் உங்களை அண்ணாவுக்கு பிடிச்சிருக்கு. அதை சொல்லத் தெரியலையா? இல்ல அண்ணாவுக்கே புரியலையா தெரியல. பட், உங்களை விடமாட்டாங்க. சோ பயப்படாம ஜாலியா இருங்க. உங்காளு உங்களுக்குத்தான்! இருந்தாலும் எங்க சார்புல அண்ணாவுக்கு ஒரு பனிஷ்மெண்ட் இருக்கு. இல்ல கீர்த்தி..” என அவளையும் உள்ளிழுக்க...
“யா..யா கண்டிப்பா. எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கும்.”
“எதோ ப்ளான் பண்ணிட்டீங்கன்னு தெரியுது. அது உங்க பாடு. அவங்க பாடு. நான் அதுல தலையிட மாட்டேன்பா” என்றவளுக்குத் தெரியுமா அவளின் தலைதான் உருளப் போகிறதென்று.
சுபாஷ் கார்த்திகா வீட்டிலும் விருந்தினர் ஒரு சிலர் வந்திருந்தார்கள். தணிகாசலம் தவிர, சுதாகரனுக்கும், சுபாஷிணிக்கும் ஒரே சொந்தங்கள் என்பதால் அவர்கள் சுதாகரனின் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். தணிகாசலத்தின் சொந்தங்களாக ஒன்றிரெண்டு பேர் வந்திருந்தார்கள்.
‘தூங்குமூஞ்சி மரங்களெல்லாம்...’ பாடல் ஒலிக்க, மெல்லிய புன்னகை வர அழைப்பை ஏற்காமலேயே எழுந்தவளை, “அக்கா நான் தூங்கு மூஞ்சியில்ல.. அது யார் தூங்குமூஞ்சி?” என கேலி பேசிய தங்கையை அடித்து, “அதை நான் பார்த்துக்கறேன். நீ தூங்கு” என்றபடி மாடியேறினாள்.
மேலே வந்தவளை தன்னருகில் நிற்க வைத்து, “என்ன நான் சொன்னதை யோசிச்சியா?” என்றான்.
‘எதை?’ என விழித்தவள், “கல்யாணத்தை நிறுத்துவதையா?’ என்றாள்.
“எஸ் கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே” என்றான் பாராட்டுதலாக.
“நான் நிறுத்த வேண்டாம்னு எப்ப சொன்னேன். உங்களுக்கு வேணும்னா நிறுத்திக்கோங்கன்னு சொல்லியிருந்தேனே.” விளையாட்டாக சொன்னாலும், “உங்க ஒய்ஃபைத்தான லவ் பண்ணுவீங்க?” என்றாள் அவன் சொன்னது உண்மையென்று உறுதி செய்யும் எண்ணத்துடன்.
“யா..யா என்னோட ஒய்ஃபைதான் காதலிக்க முடியும். அடுத்தவன் மனைவியை காதலிச்சா அது வேற மாதிரி ஆகிறாதா?”
“உங்களை..” என பல்லைக் கடித்தாலும், “நீங்க அப்படி செய்யமாட்டீங்கன்னு தெரியும். ஏன்னா நீங்க ஒரு சோம்பேறி” என்றாள் வந்த சிரிப்பை அடக்கியபடி.
“என்னது சோம்பேறியா? உனக்கு இந்த அசிங்கம் தேவையாடா?” என தனக்குத்தானே சொன்னவன், “சரி. இதுக்கும் சோம்பேறித்தனத்துக்கும் என்ன லிங்க் இருக்குன்னு சொல்லு?” என்றான்.
“இருக்கும்.. ஆனா எனக்குத் தெரியாது. சம்.. எதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசிட்டேன்னு நினைக்கிறேன். அதை எரேசர் வச்சி அழிச்சிருங்க ஓகே.”
“ஹேய் கார்த்தி! நீயா பேசுற? சும்மா கலக்குற போ. எரேசர் வச்சி வார்த்தைகளை அழிக்கணுமா. இரு கல்யாணத்துக்கு அப்புறம் நான் பேசுற வார்த்தைகளை எந்த எரேசர் வச்சி அழிக்கிறன்னு பார்க்கிறேன்.”
‘நீங்க எது பேசினாலும் அதை அழிக்கமாட்டேன். ஒவ்வொரு வேர்ட்ஸ{ம் பொக்கிஷமா சேர்த்து வச்சிப்பேன்’ என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, “அது அப்ப பார்த்துக்கலாம்” என்றாள் மெல்லிய வெட்கத்துடன்.
அப்பொழுது அவன் செல்லிற்கு போன் வர, “ஒரு நிமிஷம் கார்த்தி. கம்பெனியிலிருந்து கால்” என்று அங்கிருந்து நகர்ந்து லைட் வெளிச்சத்தில் சுபாஷ் பேசிக் கொண்டிருக்க, அந்த பொதுச்சுவரில் அமர்ந்து வருங்காலக் கணவனான மாமன் மகனை சைட்டடித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.
பத்து நாட்களுக்கு முன்னர் நீ இப்படி ஒருத்தன் பின் சுற்றுவாய் என்று யாராவது சொல்லியிருந்தால், ‘எனக்கொண்ணும் பைத்தியம் கிடையாது. ஒருத்தன் பின்னாடி சுத்துறக்கு. அதுவும் சுபாஷ் பின்னாடி சுத்துறதுக்கு சான்ஸேயில்லை’ என்றிருப்பாள். இன்றோ! அனைத்தும் தலைகீழ் மாற்றம். அவனே அறியாமல் அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருக்கிறாள் அவனின் முறைப்பெண்.
மனதில் என்னவோ உறுத்த பேசியபடியே திரும்பியவன் என்னவென்று சைகையால் கேட்க... தோள் குலுக்கி உதடு பிதுக்கி ஒன்றுமில்லை என்றாள் சைகையிலேயே. ரகசியமாக அவனை செல்லில் க்ளிக் செய்ய, லைட் வெளிச்சத்தில் மங்கலாகவே தெரிந்தது அவன் உருவம்.
பேசி முடித்து அவளருகில் வந்தவன், “நீ கீழ போ கார்த்தி. ஃப்ரண்ட் ஒருத்தன் வர்றானாம். நான் பஸ்ஸ்டாண்ட் வரை போய் பிக்கப் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றதும் மனமில்லாமல் அவள் தலையசைக்க, அவள் தலையை வருடச்சென்ற கையை மடக்கி வேகமாக கீழே சென்றான். அவனுக்குள்ளும் எதோ ஒரு மாற்றத்தைச் செய்தாள் அவனின் காதலியாகப் போகும் வருங்கால மனைவி.
கீழே பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு மாடியின் முன்புறம் வந்தவள் அவனைப் பார்க்க, தற்செயலாக மேலே ஏறிட்டவன் அவளைக்கண்டு பளிச்சென்ற ஒரு புன்னகையை வெளியிட்டு தலையசைத்து அவளின் மனதையும் அள்ளிக் கொண்டு கிளம்பினான் பைக்கில்.
அந்த மயக்கத்திலேயே வந்தவள் சந்தோஷம் தாளாது அங்கேயே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து செல்போனிலுள்ள அவன் புகைப்படத்திற்கு முத்தமிட்டு கண்மூடி அமர்ந்திருந்தாள்.