• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
6



கார்த்திகாவின் அழுகையை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அவளின் பளிச் முகம் எதையோ உணர்த்த கார்த்திகாவைப் பார்த்து, “வாவ் அக்கா! முகம் பளிச்சின்னு அடிக்குது. பாட்டு சௌண்ட் கூட கேட்ட மாதிரி இருந்ததே. நிஜமா?” என்றார்கள்.

“அப்படியா? எனக்குத் தெரியலையே?” என்று மழுப்ப...

“அண்ணி எதோ பேயடிச்சி அழுதுட்டு வந்த மாதிரி இருந்தது. இப்ப என்ன அதே பேய் திரும்ப அடிச்சி சிரிக்க வச்சிருச்சா” என்ற வித்யாவின் குரலில் நக்கலிருந்தது.

“ஏய் வேண்டாம்” என எச்சரிப்பது போல் விரல் வைத்து சொன்னவள், “வேணும்னா நீங்களே வந்து செக் பண்ணி சொல்லுங்க” என்றாள் சிரித்தபடி.

“அண்ணி சாரி. அண்ணா இப்படிப் பேசியிருக்கக்கூடாது. நீங்க எவ்வளவு ஹர்ட் ஆகிருப்பீங்கன்னு தெரியும். அண்ணா பேசுனதுக்கு அவங்களுக்கே முழு அர்த்தம் தெரிஞ்சிருக்காது. அதை மறந்திருங்க.”

“நான் எதுவும் ஹர்ட் ஆகல. நான் ஏன் ஆகணும்” என்றாள் சர்வசாதாரணமாக.

“ஓ... அப்படீங்களா அண்ணி மேடம்! அப்ப நீங்க அங்கயிருந்து அழுதுட்டு வரலன்னு நாங்களும் நம்பிட்டோம் இல்ல கீர்த்தி” என்றாள்.

“அதைச் சொல்லு வித்தி. என்னயிருந்தாலும் உன்னோட கெத்தை விட்டுக் குடுக்காம இருக்க பாருக்கா” என்றவள் வித்யாவிடம் திரும்பி “ஏன் வித்தி இவங்களுக்கு ஒரு நாரதர் டச் குடுத்தா என்ன?” என்றாள் வேகமாக.

“ம்க்கும். இவங்களுக்கு குடுக்கப்போயி, அதுல நம்மளையே தூக்கிப் போட்டிருவாங்க கீர்த்தி.”

“அதுவும் சரிதான். சரிக்கா மாம்ஸ் என்ன சொன்னாங்க சொல்லு?”

சுபாஷ் வந்து போனதைச் சொன்னவள், “முதல்ல கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்னாங்களா கீர்த்தி, ஒரு செகண்ட் பயந்துட்டேன். உடனே என் ஒய்ஃபா நீ வந்தாலும் உன்னை காதலிப்பேன் சொன்னாங்க பாரு. அப்படியே மெர்சலாயிட்டேன்டா” என்றாள் ஒருவித மயக்கத்துடன்.

“அச்சோ அக்கா! வேண்டாம் வேண்டாம்னு சொல்லி இப்படிக் கவுந்துட்டியேக்கா.”

“உண்மையிலேயே கவுந்துட்டேன்தான்” என்றவளின் குரலிலுள்ள கிறக்கம் இருவரையும் ஒரு வகையில் சந்தோஷப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ‘காதலிக்கும் ஆசையில்லை’ என்று பாடியவர்களை என்ன செய்து சேர்த்து வைப்பதென்று யோசித்த நல்லவர்கள் அல்லவா.

“ம்க்கும்.. அண்ணி டூயட் மேரேஜ் அப்புறம் போய்க்கலாம்.”

“ஹேய்! வித்தி டூயட்னதும்தான் நியாபகம் வருது. ஏய் அக்கா கொஞ்ச நாள் முன்னாடி மாம்ஸைக் கல்யாணம் பண்ணிக்க என்னைக் கேட்டல்ல. இப்ப அதுக்கு சரி சொல்லிடலாம்னு நினைக்கிறேன். நீ என்னக்கா நினைக்கிற?” என்றாள் அப்பாவியாய்.

“ம்... உன் தோலை உரிச்சி உப்புக்கண்டம் போடலாமான்னு நினைக்கிறேன். இப்ப நீ என்ன நினைக்கிற?” என்று தங்கையை அடிக்கத் துரத்தினாள்.

“அடப்பாவி அண்ணா! உங்களுக்கு மாப்பிள்ளைக்கான மார்க்கெட் வேல்யூ ஓவராயிருக்கே. இது தெரிஞ்சிருந்தா, நீ மாடிப்படி ஏறிக் குதிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு சுயம்வரம் வச்சிருந்திருப்பேனே. மிஸ் பண்ணிட்டேனே” என்றாள் கவலையாக.

“ஏய் வித்தி அடி பின்னிடுவேன் உன்னை. உங்கண்ணன் என்னைத் தவிர யாரையாவது கல்யாணம் பண்ணிப்பாங்க. தொலைச்சிடுவேன் அவங்களை. எங்க சுத்தினாலும் நான்தான் உனக்கு அண்ணி. ஐ மீன் உங்கண்ணா ஒய்ஃப் நான்தான். அதை மாற்ற நினைக்காத மைண்ட் இட்.”

“ஹா..ஹா அண்ணிடா” என்றாள் கார்த்திகாவின் தோளணைத்து.

“ஆனா, வித்தி உங்கண்ணா மனசு மாறிட மாட்டாங்களே?” கார்த்திகா தவிப்பாய் கேட்க,

அதை உணர்ந்தவளாய் கேலியைக் கைவிட்டு, “இல்ல அண்ணி. அண்ணா குடும்ப பாசத்துக்கு கட்டுப்பட்டவங்க. யாருக்காக இல்லாட்டியும், என்னோட ப்யூச்சருக்காகவுமாவது நிறுத்த மாட்டாங்க. அதோட கீர்த்தியோட ப்யூச்சரும் இருக்கே.”

“அதிலும் உங்களை அண்ணாவுக்கு பிடிச்சிருக்கு. அதை சொல்லத் தெரியலையா? இல்ல அண்ணாவுக்கே புரியலையா தெரியல. பட், உங்களை விடமாட்டாங்க. சோ பயப்படாம ஜாலியா இருங்க. உங்காளு உங்களுக்குத்தான்! இருந்தாலும் எங்க சார்புல அண்ணாவுக்கு ஒரு பனிஷ்மெண்ட் இருக்கு. இல்ல கீர்த்தி..” என அவளையும் உள்ளிழுக்க...

“யா..யா கண்டிப்பா. எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கும்.”

“எதோ ப்ளான் பண்ணிட்டீங்கன்னு தெரியுது. அது உங்க பாடு. அவங்க பாடு. நான் அதுல தலையிட மாட்டேன்பா” என்றவளுக்குத் தெரியுமா அவளின் தலைதான் உருளப் போகிறதென்று.

சுபாஷ் கார்த்திகா வீட்டிலும் விருந்தினர் ஒரு சிலர் வந்திருந்தார்கள். தணிகாசலம் தவிர, சுதாகரனுக்கும், சுபாஷிணிக்கும் ஒரே சொந்தங்கள் என்பதால் அவர்கள் சுதாகரனின் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். தணிகாசலத்தின் சொந்தங்களாக ஒன்றிரெண்டு பேர் வந்திருந்தார்கள்.

‘தூங்குமூஞ்சி மரங்களெல்லாம்...’ பாடல் ஒலிக்க, மெல்லிய புன்னகை வர அழைப்பை ஏற்காமலேயே எழுந்தவளை, “அக்கா நான் தூங்கு மூஞ்சியில்ல.. அது யார் தூங்குமூஞ்சி?” என கேலி பேசிய தங்கையை அடித்து, “அதை நான் பார்த்துக்கறேன். நீ தூங்கு” என்றபடி மாடியேறினாள்.

மேலே வந்தவளை தன்னருகில் நிற்க வைத்து, “என்ன நான் சொன்னதை யோசிச்சியா?” என்றான்.

‘எதை?’ என விழித்தவள், “கல்யாணத்தை நிறுத்துவதையா?’ என்றாள்.

“எஸ் கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே” என்றான் பாராட்டுதலாக.

“நான் நிறுத்த வேண்டாம்னு எப்ப சொன்னேன். உங்களுக்கு வேணும்னா நிறுத்திக்கோங்கன்னு சொல்லியிருந்தேனே.” விளையாட்டாக சொன்னாலும், “உங்க ஒய்ஃபைத்தான லவ் பண்ணுவீங்க?” என்றாள் அவன் சொன்னது உண்மையென்று உறுதி செய்யும் எண்ணத்துடன்.

“யா..யா என்னோட ஒய்ஃபைதான் காதலிக்க முடியும். அடுத்தவன் மனைவியை காதலிச்சா அது வேற மாதிரி ஆகிறாதா?”

“உங்களை..” என பல்லைக் கடித்தாலும், “நீங்க அப்படி செய்யமாட்டீங்கன்னு தெரியும். ஏன்னா நீங்க ஒரு சோம்பேறி” என்றாள் வந்த சிரிப்பை அடக்கியபடி.

“என்னது சோம்பேறியா? உனக்கு இந்த அசிங்கம் தேவையாடா?” என தனக்குத்தானே சொன்னவன், “சரி. இதுக்கும் சோம்பேறித்தனத்துக்கும் என்ன லிங்க் இருக்குன்னு சொல்லு?” என்றான்.

“இருக்கும்.. ஆனா எனக்குத் தெரியாது. சம்.. எதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசிட்டேன்னு நினைக்கிறேன். அதை எரேசர் வச்சி அழிச்சிருங்க ஓகே.”

“ஹேய் கார்த்தி! நீயா பேசுற? சும்மா கலக்குற போ. எரேசர் வச்சி வார்த்தைகளை அழிக்கணுமா. இரு கல்யாணத்துக்கு அப்புறம் நான் பேசுற வார்த்தைகளை எந்த எரேசர் வச்சி அழிக்கிறன்னு பார்க்கிறேன்.”

‘நீங்க எது பேசினாலும் அதை அழிக்கமாட்டேன். ஒவ்வொரு வேர்ட்ஸ{ம் பொக்கிஷமா சேர்த்து வச்சிப்பேன்’ என்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, “அது அப்ப பார்த்துக்கலாம்” என்றாள் மெல்லிய வெட்கத்துடன்.

அப்பொழுது அவன் செல்லிற்கு போன் வர, “ஒரு நிமிஷம் கார்த்தி. கம்பெனியிலிருந்து கால்” என்று அங்கிருந்து நகர்ந்து லைட் வெளிச்சத்தில் சுபாஷ் பேசிக் கொண்டிருக்க, அந்த பொதுச்சுவரில் அமர்ந்து வருங்காலக் கணவனான மாமன் மகனை சைட்டடித்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

பத்து நாட்களுக்கு முன்னர் நீ இப்படி ஒருத்தன் பின் சுற்றுவாய் என்று யாராவது சொல்லியிருந்தால், ‘எனக்கொண்ணும் பைத்தியம் கிடையாது. ஒருத்தன் பின்னாடி சுத்துறக்கு. அதுவும் சுபாஷ் பின்னாடி சுத்துறதுக்கு சான்ஸேயில்லை’ என்றிருப்பாள். இன்றோ! அனைத்தும் தலைகீழ் மாற்றம். அவனே அறியாமல் அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருக்கிறாள் அவனின் முறைப்பெண்.

மனதில் என்னவோ உறுத்த பேசியபடியே திரும்பியவன் என்னவென்று சைகையால் கேட்க... தோள் குலுக்கி உதடு பிதுக்கி ஒன்றுமில்லை என்றாள் சைகையிலேயே. ரகசியமாக அவனை செல்லில் க்ளிக் செய்ய, லைட் வெளிச்சத்தில் மங்கலாகவே தெரிந்தது அவன் உருவம்.

பேசி முடித்து அவளருகில் வந்தவன், “நீ கீழ போ கார்த்தி. ஃப்ரண்ட் ஒருத்தன் வர்றானாம். நான் பஸ்ஸ்டாண்ட் வரை போய் பிக்கப் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றதும் மனமில்லாமல் அவள் தலையசைக்க, அவள் தலையை வருடச்சென்ற கையை மடக்கி வேகமாக கீழே சென்றான். அவனுக்குள்ளும் எதோ ஒரு மாற்றத்தைச் செய்தாள் அவனின் காதலியாகப் போகும் வருங்கால மனைவி.

கீழே பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு மாடியின் முன்புறம் வந்தவள் அவனைப் பார்க்க, தற்செயலாக மேலே ஏறிட்டவன் அவளைக்கண்டு பளிச்சென்ற ஒரு புன்னகையை வெளியிட்டு தலையசைத்து அவளின் மனதையும் அள்ளிக் கொண்டு கிளம்பினான் பைக்கில்.

அந்த மயக்கத்திலேயே வந்தவள் சந்தோஷம் தாளாது அங்கேயே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து செல்போனிலுள்ள அவன் புகைப்படத்திற்கு முத்தமிட்டு கண்மூடி அமர்ந்திருந்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சில நிமிட நேரத்தில் அருகில் அரவம் கேட்டு திரும்பியவள் தாயைக் கண்டதும், “ம்மா.. தேங்க்ஸ்” என்று தாயை கீழே அமர வைத்து தாயின் மடியில் படுத்துக் கொண்டாள்.

“எதுக்கு கார்த்திமா.. இந்த திடீர் தேங்க்ஸ்?”

“எதுக்கோ! ஆனா தேங்க்யூ வெரி மச்” என்றாள் மனதார.

“உன் சம்மதமில்லாமல் மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டேன்னு அம்மா மேல கோபமாடா?”

“உண்மையிலேயே அப்ப இருந்தது. இப்ப இல்லமா சுத்தமா போயிடுச்சி.”

“நிஜமாவாடா?”

“ப்ராமிஸ்மா. அப்பாதான் ஒரு நாள் உட்காரவச்சி சொல்லி புரியவச்சாங்க.”

“அப்பாவா!” என்றார் ஆச்சர்யமாய்.

“ம்.. ஆமாம்மா. அப்பாதான் உங்க மருமகன் புகழை எடுத்துச் சொல்லி மனசுல பதியம் போட்டுட்டாங்க.”

“ரொம்ப ஸ்ட்ராங்கா போட்டிருக்காங்க போல” என்று கேலி செய்தாலுமே அவருக்கே மனதில் இப்பொழுதுதான் ஒரு நிம்மதி வந்தது. பிடிக்காத திருமணத்தில் இணைந்து கடைசிவரை பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தால் அந்த வாழ்க்கை நரகமல்லவா!

“ம்மா.. போங்கம்மா” என செல்லம் கொஞ்சி, “ஆனாலும் பயமாயிருக்குமா. இந்த கல்யாணம் நடக்கும்தான?” ஏனோ அவளுக்குள் அந்த எண்ணம் அடிக்கடி வந்தது. இந்த கல்யாணம் நடக்குமா? நடக்க வேண்டுமென்று மனம் உறுதியாக நினைத்தாலும் ஏதோ ஒன்று இடையிட்டு அவள் மனதைக் குழப்பிக் கொண்டிருந்தது.

“அதிலென்னடா சந்தேகம் உனக்கு?”

“சந்தேகம் இல்லம்மா. என்னதான் நல்லா பேசினாலும் உங்க மருமகனுக்கு என்மேல ஒரு சாப்ட் கார்னர்தான் இருக்கு. ஆனா, தனி இன்ட்ரெஸ்ட் இல்லையேமா. அப்படியிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்.”

“எதுவும் ஈஸியா கிடைச்சிராதுடா கார்த்திமா. கொஞ்சம் கஷ்டப்பட்டால்தான் அதனோட வேல்யூ நமக்குத் தெரியும். அப்படி கிடைக்கிறதை பொத்திப் பாதுகாக்கத் தோணும். ஈஸியா கிடைக்கிறதை ஈஸியா தூக்கிப் போடத் தோணும். அதான் நிறைய இடங்களில் நடக்குது.”

“ஆனாலும், உங்க மருமகன் சான்ஸே இல்லமா. ரொம்ப ரொம்ப கஷ்டம்” என்றாள் சிரித்தபடி.

அவளின் தலையில் தட்டி, “என் மருமகனை என் முன்னாடியே கிண்டலடிக்கிற. ராஸ்கல் கொன்னுடுவேன்” என்றார் மிரட்டலாக.

“வேற யார் கிண்டலடிப்பாங்க. நான்தான் கிண்டலடிக்க முடியும். அடுத்தவங்களை நடுவுல விட்டுருவோமா. துரத்தித் துரத்தி அடிக்க மாட்டோம். அதுக்கான ரைட்ஸ் வாங்குறதுக்குத்தான நாள் நட்சத்திரம்லாம் குறிச்சி வச்சிருக்கீங்க” என்றாள் கிண்டலாகவே.

மகளின் பேச்சில் மனதிலிருந்த பாரம் முழுவதும் இறங்க சந்தோஷமாக சிரித்தார் சுபாஷிணி.

“என்ன ஆச்சர்யம்? அம்மா பொண்ணு சிரிப்புச் சத்தம் கீழ கேட்குது. தனியா இங்க என்ன பண்றீங்க? அதுவும் கார்த்தி கல்யாணப் பொண்ணு இந்நேரத்துல இங்க என்ன பண்ற?” என்றபடி அங்கு வந்தார் வாணி.

“சும்மாதான் அத்தை வந்தேன்.”

“சும்மா வந்தியா, சுபாஷைப் பார்க்கலாம்னு வந்தியா?”

“அத்தை அதான் தெரிஞ்சிருக்குல்ல அப்புறம் என்ன?”

“பார்றா கார்த்திமா நீயா இது? இவ்வளவு பேசுவியா நீ?”

“அண்ணி உங்க மருமகளுக்கு தைரியத்தோட சேர்த்து பெரிய பெரிய சந்தேகம்லாம் வருது. அதான் சரிபண்ணிட்டிருக்கேன்.”

“என்னது சந்தேகமா? யார் மேல? எதுக்காக?”

“நீங்க வேற. உங்க பையன் லவ் ப்ரபோஸ் பண்ணலைனு கேட்கிறா.”

“அம்மா ஏன்மா?” என்றபடி அவரின் முந்தானைக்குள் ஒழிய...

“கல்யாணநாள் அன்னைக்கு கண்டிப்பா சொல்வான் கார்த்திமா. நீ கவலையே படாத” என்றார் நம்பிக்கையாக.

“எப்படி அண்ணி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க?”

“அதெல்லாம் அப்படித்தான். கல்யாணம் முடிஞ்சிருச்சின்னா அவள்தான் அவனுக்கு எல்லாமேன்னு வர்றப்ப, நம்மகிட்ட அவள் எதிர்பார்க்கிற முதல் விஷயம் காதல். அதை அவளுக்கு மட்டும்தான்மா குடுக்க முடியும். அதையும் கல்யாணம் முடிந்த அன்னைக்கே குடுத்தா அவளோட சந்தோஷத்திற்கு அளவிருக்காதில்லையா. சோ, எனக்கு மனைவியா வர்றவளுக்காக நான் செய்யப்போகும் முதல் நல்ல விஷயம். அதனால உங்க மருமக எதுக்காகவும் ஃபீல் பண்ணமாட்டா. என்னோட சேர்த்து உங்களையும் தாங்குவான்றதுல எந்தவித சந்தேகமும் இல்ல. சோ, யூ ஹேப்பிமான்னு சொல்லுவான்.”

“அப்புறம் ஏன் அத்தை என்கிட்ட மட்டும் கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொல்றாங்க. இப்பக்கூட அதைத்தான் சொன்னாங்க. அடிக்கடி அதைச் சொல்றதால எதாவது அசம்பாவிதமா நடந்திட்டா என்ன பண்றதுன்ற கலக்கம் என்னையும் அறியாமல் வருது அத்தை.” சிறு பதட்டம் அவளின் குரலில்.

“ப்ச்.. கார்த்தி மனசார சொன்னால்தான் அது பலிக்கும் சொல்வாங்க. இவன் சும்மா உன்னை கலாட்டா பண்ண சொன்னதுதான விடு.”

“கலாட்டாவோட நிறுத்திக்கச் சொல்லுங்க அத்தை. இல்ல நான் கொலைகாரியாகிடுவேன்” என்றாள் மிரட்டலாக.

“ஹா..ஹா என்ன வேணும்னா பண்ணிக்கோ. அவன் உன் புருஷன். இது உங்க பிரச்சனை. சுபா இந்தப்புள்ள இந்தளவு பேசுவாள்னு இப்பத்தான் தெரியுது. எங்க வீட்ல மாமியார் மருமகள் சண்டைக்கு பஞ்சமிருக்காது போலவே!” என்றார் பயந்தவராய்.

“அப்படின்றீங்க.. எனக்கென்னவோ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து, என் மருமகனை கலாய்க்கப் போறீங்கன்னு மட்டும் தெரியுது.”

“அப்படியிருந்தாலும் நல்லாத்தான் இருக்கும் இல்லடா கார்த்தி” என்றதும் அவள் தலையசைத்து சம்மதிக்க, சரி போய் படுங்க. காலையில எழுந்திருக்கணும் நிறைய வேலையிருக்கு என்றதும் மூவரும் கிளம்பினார்கள்.

தங்கை அனுவின் கல்யாணத்திற்கென்று சென்னை வந்திருந்தான் ஆனந்த். தங்கை பேசினாலும் மேலோட்டமாகப் பேச, தாயோ அவன்புறம் சுத்தமாகத் திரும்பவில்லை. அவனின் கெஞ்சல்கள் கூட பலனில்லாமல் போக... ‘முகூர்த்தத்திற்கு மட்டும் வந்து சென்றிருக்கலாமோ’ என்றே தோன்றியது. மாப்பிள்ளை சாரகேஷ{ம் அவனின் குடும்பத்தினரும் ஆனந்திடம் நட்பு பாராட்ட, அவர்களிடம் தன்னைப்பற்றித் தவறாக எதுவும் சொல்லாமல் விட்டிருப்பது புரிந்தது.

இதுவே போதுமென்று மனம் சொன்னாலும், கல்யாண வேலைகள் என்று எதுவும் அவனுக்குக் கொடுக்காமல், எதிலும் அவன் உதவியை அவர்கள் நாடவில்லை என்கையில் அதுவே தன் குடும்பத்தினரிடம் ஒன்றவிடாமல் செய்தது. ‘இப்படியிருக்கும் பட்சத்தில் கீர்த்தியை எப்படிப் பெண் கேட்பது? இல்லை கல்யாணமே வேண்டாம்’ என்று தோன்ற வாழ்க்கையை அதன்போக்கில் விடத் தயாரானான் ஆனந்த்.

காலை விடிந்ததும் வீடும் கல்யாணக்களை கட்டியது. மண்டபத்திற்கும் வீட்டிற்குமாக பெரியவர்கள் அலைய, சிறியவர்கள் ஏதோ சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஹேய் கேர்ள்ஸ், என்ன முகம் இவ்வளவு சீரியஸாயிருக்கு. அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்ற கேள்வியோடு வந்தாள் காhத்தி.

அவளின் திடீர் கேள்வி ப்ளஸ் வருகையில், “அ..அண்ணி அ..அது மேக்கப் பண்றதுக்கு எந்த பார்லர் சூஸ் பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கோம்” என வித்யா சொல்ல...

“என்னது யோசிச்சிட்டிருக்கீங்களா? அப்ப இன்னும் ரெடியாகலையா? நான் அம்மா சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேனே. இரு ஃப்ரண்ட் ஒருத்தி பார்லர் வச்சிருக்கா. நான் வீட்டுக்கு வரச்சொல்றேன்” என போனை எடுக்க...

“அக்கா வேண்டாம். அம்மா ரெடி பண்ணிட்டாங்க” என்றாள் வேகமாக.

“அப்ப என்கிட்ட பொய் சொன்னீங்களா? பொய் சொல்றது தப்புன்னு தெரியாத குழந்தைங்க நீங்க இல்லன்றது நியாபமிருக்கா?” என்று முறைத்தாள்.

“அண்ணி நாங்க வேற ஒரு விஷயத்தை திங்க் பண்ணிட்டிருந்தோம். நீங்க திடீர்னு கேட்டதும் சமாளிக்கிறதுக்காக வாய்ல வந்ததை உளறிட்டோம்.”

“ஏன்டா என்னாச்சி? யாருக்காவது எதாவது பிரச்சனையா?” என பதட்டமா கேட்டார்கள்.

“அச்சோ.. அக்கா பிரச்சனைலாம் கிடையாது” என்ற பெண்களின் வேகமான பதிலில்...

“எதோ தப்பாயிருக்கே! உண்மையைச் சொல்றீங்களா? இல்ல பிரச்சனையை அம்மா, மாமாகிட்ட சொல்லவா?” என மிரட்டினாள்.

“ஐயோ தெய்வமே! வேண்டாம். உங்க கல்யாணத்துக்கு எதாவது சர்ப்ரைஸ் கிஃப்ட் பண்ணலாமா? அப்படி பண்ணினா என்ன செய்யலாம்? அதுவும் லைஃப்கும் மறக்க முடியாத பரிசா இருக்கணும்னுதான் யோசிச்சிட்டிருக்கோம். வேற எந்த உள்நோக்கமும் இல்ல” என்றார்கள் இருவரும்.

“அது அப்படி வாங்க வழிக்கு. சரி கிடைச்சிருச்சா.”

“எங்க.. ஒண்ணு சொல்லி வச்சிருக்கோம். அது வந்தா அது. இல்லன்னா வேற ரெடி பண்ணனும்.”

“என்னவோ பண்ணுங்க. நான் இதோ வர்றேன்” என்று மாடியேறப் போனவளை, ‘ஓஹ்ஹோ..’ என்ற கேலிக்குரல்கள் தடுக்க.

“ப்ச்.. சும்மாயிருக்க மாட்டீங்க” என்று அவர்களை அதட்டி வந்த வெட்கத்தை மாடிப்படியில் செலுத்தி வேகமாக மேலேற,

“அக்கா நாங்க வேணும்னா உனக்கு காக்காக்கு சோறு வைக்க ஹெல்ப் பண்ணவா? எப்படியும் காக்காக்கு சோறு வைக்குற கருவாச்சி கதை எங்களுக்கு கிடைக்க சான்ஸேயில்ல. ஏன்னா நம்ம ரெண்டு பேர் வீட்டுலயும் பையன் இல்லையே” என வருத்தப்பட்டு, “ஹ்ம்.. பேசாம நீ பையனா பிறந்திருக்கலாம் வித்தி. நாமளும் மொட்டைமாடி மொட்டைமாடி ஒரு லவ் ஜோடின்னு பாட்டுப் பாடியிருக்கலாம். எல்லாத்தையும் பொண்ணா பிறந்து கெடுத்துட்ட போ” என்றாள் வித்யாவைப் பார்த்து.

“ம்... நக்கலு. ஏன் நீ பையனா பிறந்திருக்கலாம்ல?”

“நான் பையனா பிறந்திருந்தாலும் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்க முடியாதே வித்தி.”

“ஏன்? ஏன்?” என எகிறிய மாமன் மகளை நோக்கி, “ஏன்னா நீ என்னோட பெரியவ. நான் சின்னவ. சின்னப் பையனை யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா? தப்பாகிடாது?” என்றாள் சோகமாக முகம் வைத்து.

“அட அப்படி ஒண்ணு இருக்கோ! சரி விடு கீர்த்தி. அடுத்த ஜென்மத்துல பார்த்துக்கலாம்” என சோகமாக சொன்னவள், “ஏய் எங்க அண்ணியைக் காணோம்?” என்றாள் அலறலாக.

“ஹ்க்கும் இன்னும் இங்க நின்னுட்டிருக்க அவ என்ன லூசா. அவளோட காக்கா அங்க என்ட்ரி குடுத்தாச்சி. இருந்தாலும் இவங்களை எதாவது பண்ணனும் வித்தி. கல்யாணம் பேசினதிலிருந்து மாட்டேன் மாட்டேன்னு நம்மளை எவ்வளவு மண்டை காயவிட்டாங்க.”

“வித்தி எதுக்கு இருக்கா. வித்தியாசமா பண்றதுக்குத்தான. செஞ்சிருவோம்” என்றதும் இருவரும் ஹைபை கொடுத்துக் கொண்டார்கள். அதன் பின்விளைவை யோசிக்காமல்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top