• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
6


உள்ளே சந்நிதானத்துக்கு செல்லும் வழியில், ஒருசிலர் மேல் சின்னதாக சந்தேகம் எழுந்தது. அது உண்மையா என்று ஆராய இது நேரமில்லையென்று, முருகன் சந்நிதானத்திற்குச் சென்று அப்பன் முருகனை வணங்கி, சுற்றிலும் உள்ள தெய்வங்களையும் வணங்கினாள். கோவிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளம் செல்ல, அங்கிருந்த கூட்டத்தையும் தாண்டி படியில் செனறமர்ந்து அதை ரசிக்க ஆரம்பித்திருந்தாள். தண்ணீரில் எந்தவித கழிவுகளுமில்லாமல் தெளிவாக இருந்தது.

‘ம்... குட் நல்ல பராமரிப்பு’ என்று மனதினுள் பாராட்டிக் கொண்டாள்.

அப்பொழுது அவளருகில் வந்தமர்ந்தவனைக் கவனிக்காமல், சின்னச்சின்ன அலைகளாய் ஓடிக்கொண்டிருந்த, தெப்பக்குளத்து நீரையே வேடிக்கை பார்த்திருக்க,

“அழகா இருக்குல்ல அவந்தி” என்ற குரல் கேட்டு சட்டெனத் திரும்பிப் பார்க்க, அங்கே அவளின் நாயகன் அவளருகில். மனதின் மகிழ்ச்சியை முகத்தில் காட்டி, “வாட் எ சர்ப்ரைஸ்! நான் உங்களை இங்க எதிர்பார்க்கவேயில்லை?” என்றாள்.

“இதை நானும் கேட்கலாமே? நீ எப்படி இங்க? இவ்வளவு தூரம் வந்திருக்க. என்கிட்ட சொல்லவேயில்ல. எத்தனை நேரம் சொன்னேன், ஒரு மெசேஜாவது அனுப்புன்னு” என்றான் குரலில் தன் ஆதங்கத்தைக் காட்டி.

“சாரிங்க. நான் ஒரு கேஸ் விஷயமா அர்ஜெண்டா கிளம்பியதால, மெசேஸ் பண்ண மறந்துட்டேன். இனிமேல் இந்த தப்பு நடக்காது” என்று தன் காதைப்பிடித்து “சாரி கார்த்திக்” என்றாள்.

அவந்திகாவின் அந்த அழகிய பாவனையில் கிறங்கியவன், “சரி. வந்த வேலை முடிஞ்சிதா?” என கேட்டான்.

“இன்னும் இல்ல கார்த்திக். ஆனா, இப்ப உங்களைப் பார்த்ததும் சக்சஸாகிரும்னு நம்பிக்கை வந்திருச்சி.”

“அதென்ன என்னைப் பார்த்ததும்?”

கண்சிமிட்டி “அது அப்படித்தான். சென்டிமெண்ட்னு வச்சிக்கோங்களேன்.”

“ம்... வச்சிக்கிறேன்ன்” என்று ‘ன்’னுக்கு அழுத்தம் கொடுத்து, ஒரு மார்க்கமாய் அவளைப் பார்த்தபடி சொன்னான்.

“அச்சோ! போங்க கார்த்திக்” என்று கொஞ்சலாய் சொல்லி அவனுக்கு செல்லமாக ஒரு அடிவைக்க,

“ஏய் என்ன அடிக்கிற? அப்புறம் இதுக்கல்லாம் சேர்த்து, கல்யாணத்துக்கப்புறம் நான் நிறைய அடி கொடுப்பேன்” என்றான் தன் இதழ்களைக் காண்பித்து.

அவந்திக்குத் தெரியாதது, ‘அவன் கொடுக்கப்போகும் அடி தன் இதழ்களுக்கல்ல. தன் மனதிற்கென்று.’

கார்த்திக் சொன்னதில் இன்னும் வெட்கத்தில் உதடுகடிக்க, அவளையே பார்த்திருந்தவன், அவளைத் தொடப்போன தன் கைகளை அடக்கி, மனதை நடப்புக்கு இழுத்து வந்து “அவந்தி எதாவது பிரச்சனையா? எதுனாலும் தைரியமா சொல்லுமா? நீ சொல்ற நியூஸ் என்னைவிட்டு எங்கேயும் போகாது. என்னை நீ தாராளமா நம்ப...”

சட்டென்று அவன் வாயை மூடியவள், “என்னங்க இது நம்பலாம்னு கேட்குறீங்க? நான் என்னைவிட அதிகமா உங்களை... உங்களை மட்டும் நம்புறேன்” என்று அவன் இதயத்திற்கு நேரே கைவைத்து, நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்.

அவளின் கைபிடித்து தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து, “அதை எப்பவும் நியாபகம் வச்சிக்கோ. இப்ப சொல்லு? என்ன விஷயமா இவ்வளவு தூரம் வந்திருக்க?” என்றான்.

“அது..” என்று வைஷ்ணவி லெட்டர் போட்டது. விஷ்ணுவும் தானும் வந்தது, அந்த இன்ஸ்பெக்டர் பரத்தைப் பார்த்தது. பின் பந்தோபஸ்துக்கு இருந்த காவலர்களிடமும் தெரிவித்தது என சுருக்கமாக சொன்னாள்.

“ஏன்மா ரிஸ்க் எடுத்த? என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல? அதுவுமில்லாம அவனுக்கு உன்னைத் தெரியும்ன்ற போது, அவன் உன்னைப் பார்த்திருந்தா, உனக்கு ஆபத்துதானே?”

“ம்... புரியுதுங்க. அதான் போலீஸூம் இருக்கிறாங்கள்ல. அதனால நோ ப்ராப்ளம். சரி நீங்க எங்க இவ்வளவு தூரம்?”

“ஃப்ரண்ட் பொண்ணுக்கு காதுகுத்தி மொட்டை போடுறாங்க. ரொம்ப வற்புறுத்தினதால வரவேண்டியதா போயிருச்சி. ம்... அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா, அந்த பாலசுப்ரமணியன் தரிசனத்தோட சேர்த்து, தி கிரேட் அவந்தி மேடம் தரிசனமும் கிடைச்சிருக்குமா?”

“உங்களை... என்ன நக்கலா அப்...” அவளின் பேச்சின் நடுவே தடுத்து, “ஒரு நிமிஷம் அவந்தி. ஒரு போன் பண்ணிட்டு வந்திடுறேன்” என்று கொஞ்சம் தள்ளிச்சென்று பேசிவிட்டு வந்தவனுடன், இன்னொருவனும் வந்தான்.

“அவந்தி இவன் தாமு. இவன் பொண்ணுக்குத்தான் பங்ஷன்” என்றதும், தாமு சற்று பே என விழித்து கார்த்திக்கை பார்த்தவன், அவன் ஏதோ சைகை செய்ததும், “வணக்கம் சிஸ்டர்” என்றான்.

பதிலுக்கு வணக்கம் சொன்னவள் அருகில் கார்த்திக் வந்து தோளணைத்தபடி, “என்னோட எதிர்காலம் எப்படிடா?” என்றவனை சட்டென்று திரும்பிப் பார்க்க, யாருமறியாமல் அவளைப் பார்த்து கண்ணடித்ததும், வெட்கத்தில் தலை கவிழ்ந்தவளையே கார்த்திக் ரசித்திருந்தான்.

அதைக் கண்டும் காணாதவனாய் “குட் செலக்ஷன்டா” என்று தாமு சொன்னதும்தான், இருவரும் நிகழ்வுக்கு திரும்பினார்கள். “ஏன் கார்த்திக். உங்க ப்ரண்ட் போலீஸா?” என திடீரென்று கேட்டாள்.

இருவரும் புரியாமல் விழிக்க, அதை உணர்ந்தவள் “இல்ல ஹேர் கட்டிங்லயிருந்து, ஃபேஸ் லுக் வரை பார்த்தா, அப்படித்தான் தெரியுது.”

“ஹா...ஹா மிலிட்டரிக்காரங்க கூட இப்படித்தான்மா இருப்பாங்க. இவனுக்கு வேலை கல்கத்தாவுல. ரெண்டு மாத லீவுல வந்த இடத்துலதான் பங்ஷன் வச்சிருக்காங்க. சரிமா நீ கிளம்பு. எதாவது ப்ராப்ளம்னா கால் பண்ணு. முடிஞ்சா நாம சேர்ந்தே போகலாம்” என்று அவளை அனுப்பிவிட்டு, நண்பனின் புறம் திரும்பி, “எப்படிடா உன் தங்கச்சி?” என்றான் தாமுவிடம்.

“அதான் என் தங்கச்சின்னுட்டியே. அப்புறம் என்ன ஸ்மார்ட்டாதான் இருப்பாங்க. ஆனா, கார்த்திக் உன்னைப்பற்றிய முழுவிவரம் தெரியுமாடா?”

“ம்கூம்... தெரியாது. நான் யாரு, என் தொழில் என்ன, என்னோட ஒரிஜினல் கேரக்டர் என்ன, என் குடும்ப பேக்ரௌண்ட் என்ன, எதுவுமே தெரியாது. அவளா வந்தா, ப்ரபோஸ் பண்ணினா. நான் அக்செப்ட் பண்ணிட்டேன். இவ்வளவு அழகான பெண்ணை யாராவது வேண்டாம்னு சொல்வாங்களாடா? வேண்டாம்னு சொல்றதுக்குத்தான் நானும் என்ன லூசா” என்று சிரித்தான்.

“கேடிடா நீ! எங்க உன்னைப்பற்றிய உண்மை சொன்னா ஒத்துக்க மாட்டாங்களோன்னு, கடைசிவரை செக்யூரிட்டி ஆக்ட் குடுத்தே கவுத்துட்டியேடா. இதுக்கு உன் ஃபேமிலி வேற ஜால்ரா. ம்... நடத்துடா. பொண்ணு பத்திரிக்கைக்காரி. சின்னதா நீ பண்ற தில்லலாலங்கடி வேலை தெரிஞ்சிதுன்னு வையி, அவங்க எஸ்கேப்பு. அப்ப உன் நிலையை யோசிச்சிக்கோ. முடிஞ்சா சீக்கிரம் முடி. இல்லன்னா உனக்கு அடி” என்றான் ரைமிங்காக.

‘போடா! அவ என்னை முழுசா நம்புறா. பார்க்கலாம் சீக்கிரம் கரெக்ட் பண்றேன் எல்லாத்தையும்’ என்று கண்ணடித்துச் சிரித்தான்.

தன் முதுகுப்புறம் நடந்ததையும் அறியாமல், தனக்கு எதிராக வரப்போகும் ஆபத்தையும் அறியாமல், மீண்டும் ஒருமுறை முருகனை தரிசித்து வெளியே செல்ல யத்தனித்தவளுக்கு விஷ்ணுவிடமிருந்து தகவல் வர, என்னவென்று பார்த்தவள் அதிர்ந்தாள்.

அதில் இருந்தது இதுதான். ‘அவந்தி! நீ சொன்ன அந்த நபர், உன்னை அடையாளம் கண்டு பிடிச்சிட்டான்னு நினைக்கிறேன். அவனோட நடவடிக்கையெல்லாம் உன்னைச் சுற்றியே இருக்கு. முடிஞ்சா அவன் கண்ணுல படாம போயிரு. போலீஸ்கு இன்பார்ம் பண்ணியும், எந்தவித ஸ்டெப்பும் எடுத்தமாதிரி தெரியல. இன்னைக்கு வெள்ளிக்கிழமை சஷ்டிவிரதமாம். அதனால கூட்டம் ஜாஸ்தி. கூட்டத்தோட கூட்டமா எஸ்கேப்பாகி வெளியே வந்திரு. நான் வேற அந்த பரத்தை மிஸ் பண்ணிட்டேன். ஸோ, பி கேர்புல்’ என்றிருந்தது.

‘ஒரு கொலை செய்த மகாபாவியாகிற்றே’ என்ற எண்ணத்தில் சின்னதாக மனதினுள் பயம் எழ, டக்கென்று கார்த்திக்கின் நினைவு வர, அந்த மெசேஜை அவனுக்கு பார்வர்ட் செய்து வெளியே கிளம்பினாள்.

ரொம்ப சின்னதும் இல்லாமல், பெரியதும் இல்லாத கோவில் ஆகையால், விசேஷ நாள் என்றதும் கூட்டம் அதிமாகவே இருந்தது. திரும்பிச் செல்வதற்கான மறுவழி தேடிச் செல்கையில், தன்னை யாரோ தொடர்வதுபோல் தோன்ற, திரும்பிப் பார்த்தவள் கண்களில் யாரும் தென்படவில்லை. வாசல் செல்லும் சமயம் கார்த்திக்கிடமிருந்து, ‘உள்ளே வா என்ற தகவல் வர, அதைப் பார்த்து சிரித்தபடி திரும்பி உள்ளே சென்று கொண்டிருந்த பொழுதுதான், கண்சிமிட்டும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.

கார்த்திக்கின் தகவல் பார்த்து உள்ளே நுழைந்தவள் எதிரில், அந்த பரத் நின்று வழிமறித்தான். ஒரு வினாடி உடல் அதிர, கண்களில் தோன்றிய பயத்தை தன் தைரியத்தால் மறைத்து, ‘கூட்டத்தில் என்னை என்ன செய்ய முடியும் இவனால்? நான் கற்ற கராத்தே என்னைக் கைவிடாது’ என்ற அசட்டு தைரியம் வந்தது.

ஆம் அசட்டு தைரியம்தான். என்னதான் கராத்தே கற்றிருந்தாலும். எதிரியின் மனநிலையை எவ்வாறு யூகிக்க முடியும். அந்த தைரியம் முகத்திற்கு வர, அவனை நேரிடையாகவே எதிர்கொண்டாள்.

“என்னை அடையாளம் கண்டுகிட்டபோல. நான் அனுப்பின அத்தனை கொலை மிரட்டலுக்கும் பயப்படலையே நீ. ஆனாலும், உனக்கு தைரியம்தான்டி.”

“ஏய்! இந்த டி போட்டுப் பேசுற வேலையெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன். அப்புறம், அந்த மிரட்டல் வீரன் நீதானா? என்னடா அட்ரஸில்லா அறிவுகெட்ட நாய் எதோ, மிரட்டல்ன்ற பெயர்ல டெய்லி லெட்டர் போடுதேன்னு நினைச்சேன். கடைசியா அந்த அ-நா... நீதானா?” என நக்கலாக கேட்டாள்.

“ஏய்! என்னடி வாய் ஓவரா நீளுது. பத்திரிக்கைக்காரின்ற திமிறுதான உன்னைப் பேசவைக்குது. அதை அடக்கத்தான்டி இந்த கடவுளே என்னை அனுப்பியிருக்கான்.”

“நீ பண்ற வேலைக்கு கடவுளை கூட்டு சேர்க்கிறியா” எனும்போது பரத்தின் பின்னால் வந்த விஷ்ணுவைப் பார்த்தாள்.

‘இனி பயமில்லை’ என்று அவன் ஜாடை செய்ய, மனம் கொஞ்சம் நிம்மதியானாள் அவந்திகா.

அவள் அறியாத ஒன்று, அந்த இடைவெளியில் பரத் தன் பேண்ட் பாக்கெட்டில் கைவைத்தபடி, எப்பவும் எடுக்கத் தயாராக கத்தியை பிடித்திருந்தது.

சுற்றிலும் ஒருதரம் பார்த்தவன், “கடவுள் குடுத்த வேலையை நான் செய்யலன்னா எப்படிமா?” என்றபோது போலீஸ் அவனை நெருங்கி கைவைக்கப் போக., அந்தச் சின்ன இடைவெளியில், யாரும் யோசிக்காத நேரம், சட்டென்று பேண்ட் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்து, அவந்திகா வயிற்றில் சொருகப்போக, ஆட்கள் இடித்ததில் அது வயிற்றுப் பகுதியை நேர்கோடாகவும், கொஞ்சம் ஆழமாகவும் கிழித்துச் சென்றது.

அதே நேரம் அவனை போலீஸூம் மடக்கிப் பிடிக்க, அவந்திகா கத்திக்குத்து பட்டதை யாரும் அறியவில்லை. ஏன் அவளே அதை உணரவில்லை. வயிற்றுப் பகுதியில், ஏதோ ஒரு வலி திடீரென்று வர, குனிந்து என்னவென்று வயிற்றைப் பார்த்த பொழுதுதான், வெட்டுப்பட்டது அவளால் உணரப்பட்டது.

அதற்குள் மக்கள் கூட்டம் கூச்சலுடன் அவர்களைவிட்டு விலகிச் செல்ல, அவளோ அதிர்ச்சியில் கண்களில் தோன்றிய வேதனையுடன், நேராக நின்றிருந்த விஷ்ணுவைப் பார்க்க, அவன் ‘சக்சஸ்’ என்று விரல் தூக்கி காண்பிக்கும் பொழுதுதான் கவனித்தான் அவள் நிலையை. அதிர்ச்சியானவன் அவளை நோக்கி வர,

அதற்குள் கீழே விழப்போனவளை “அவந்தீஈஈஈ...” என்று ஓடிவந்து தன் மடியில் தாங்கிக் கொண்டான். கார்த்திக்.

தன்னை கைகளில் ஏந்தியவனின் முகத்தைப் பார்த்ததும் அந்த நிலையிலும் கூட முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவளின் சிரிப்பில் குற்றவுணர்ச்சியாக, அவனையும் மீறி வந்த கண்ணீரை அடக்க முடியாமல், “அப்பவே சொன்னேனேமா. தனியா ரிஸ்க் எடுத்து... ப்ச்.. பாரு. நானும் உன்னோடவே வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று அழுதவன் கண்ணீர் துடைத்துவிட்டாள்.

அவனின் இந்தக் கண்ணீர் தனக்கானதென்ற சந்தோஷத்திலும், தனக்காக கண்ணீர்விட்ட அந்த அன்பிலும், அவளின் புன்னகை இதழில் அப்படியே நிலைத்தது.

அதற்குள் அருகில் வந்த விஷ்ணு கண்கலங்கியபடியே, “ஒரு பத்து செகண்ட் முன்னாடி வந்திருந்தேன்னா கூட, இதை நடக்க விட்டிருக்கமாட்டேன் அவந்தி. ஐம் சாரி” என்று பழியை தான் ஏற்றுக்கொண்டான் அவளின் நண்பன்.

“டேய் தாமு! காரை ரெடி பண்ணு” என்றவன் குரல் வெளியே வரவேயில்லை. நண்பனைப் புரிந்த தாமு, வேகமாக அடுத்து செய்ய வேண்டியதைச் செய்யக் கிளம்பினான். அவளின் துப்பட்டாவை எடுத்து, வயிற்றைச் சுற்றி ஓடிய இரத்தத்தை நிப்பாட்டவென்று சுற்றிலும் கட்ட, அதையும் மிறி வழிந்த இரத்தத்தை தன் சட்டையைக் கொண்டு அணை போட்டபடி, அவளைக் கைகளில் தூக்கப்போகையில்,

“கார்த்திக்” என்ற அழைப்பிற்கு அவள் முகம் பார்த்தவனிடம், “ஐ லவ் யூ” என்றாள் சிரித்தபடி.

அந்த நிலையிலும் தன் வார்த்தைகளால், தன் சிரிப்பினால் அவனை அவள்புறம் அடியோடு சாய்த்துக் கொண்டிருந்தாள் அவன் காதலி.

கண்களில் வழிந்த நீருடன் அவளை மார்போடு சேர்த்தணைத்து, “ஐ லவ் யூ அவந்தி” என்று நெற்றியில் முத்தமிட்டான்.

அதற்குள் கோவிலினுள் சலசலப்பு அதிகமாகி, “ஒரு பொண்ணை கத்தியால குத்திட்டாங்க. புள்ளை நல்ல அழகுப்பா. பாவம் அல்பாயுசு போல” என சிலபல குரல்கள் அவந்திகாவிற்காக வருத்தப்பட்டனர். “அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ தெரியலையே. நல்ல வேளை அவனை போலீஸ் பிடிச்சிட்டாங்க” என்று கூடிக்கூடிப் பேசினார்கள்.

அதற்குள் காவல் துறையினர் ஆட்களை நகர்த்தி, பரத்திற்கு விலங்கிட்டு அழைத்துவர, அதைப் பார்த்ததும்தான் வைஷ்ணவிக்கு நிம்மதியாக இருந்தது. அவந்திகாவிற்கு ஆயிரம் நன்றிகள் சொல்லி, அவள் நன்றாக இருக்க முருகனிடம் மனுபோட்டாள் கொஞ்சம் தாமதமாக.

அவந்திகாவைக் கையில் தூக்கும் சமயம் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தவள் கண்களில் பட்டது, கார்த்திக்கின் நாடியிலிருந்த அந்தத் தழும்பு. நேராகப் பார்த்தால், அப்படி ஒரு தழும்பு அவனுக்கு இருப்பதே யாருக்கும் தெரியாது. அவந்திகாவை கைகளில் ஏந்தியிருந்ததால், தழும்பு கண்களில் பட்டு, எதையோ நினைவு படுத்தியது. அந்த நிலையிலும், ‘இந்தத் தழும்பை எங்கே பார்த்தோம்?’ என நினைவுபடுத்த முயற்சிக்க முடியாது முழுவதும் மயங்கிச் சரிந்தாள்.

வெளியே அவந்திகாவைக் கார்த்திக் தூக்கி வருவதைப் பார்த்த வைஷ்ணவி விக்கித்து நின்றாள். ‘கத்திக்குத்து பட்டது அவந்திகாவா? அவளின் இந்த நிலைக்கு தான்தான் காரணம்’ என்ற குற்றவுணர்ச்சி மேலிட, அத்துடன் சேர்ந்து கண்களில் நீருடன் கடவுளை வேண்டினாள் அவந்திகா பிழைப்பதற்காக. பின் ஒரு முடிவுடன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

தாமுவின் காரில் ஏற்றி பதினான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பொன்னேரியை, பத்தே நிமிடத்தில் அடைந்து, அங்கிருந்த அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, பின் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்க, இதர வேலைகள் அனைத்தும் விஷ்ணுவும், தாமுவும் செய்தார்கள்.

என்னவென்று யோசிக்குமுன் நடந்து முடிந்த இந்தச் செயலை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. யாராலும் எதிர்த்து நிற்கவும் முடியவில்லை. விதி வலியது என்பது இதுதானோ!

மருத்துவமனை அருகில் செல்லும் பொழுதே, சுந்தரேசனுக்கு, விஷ்ணு போன் மூலம் தகவல் சொல்ல, என்னவென்று பதறியவரிடம்,” பெருசா ஒண்ணுமில்ல அங்கிள். நீங்க வாங்க” என்று போனை வைத்தான்.

அவந்திகாவிற்கு சிகிச்சை ஆரம்பிக்கவும், சுந்தரேசன் அங்கு வரவும் சரியாக இருந்தது. வந்தவரிடம் சில விஷயங்களைச் சொல்லி, சிலவற்றை மறைத்தான் விஷ்ணு. அதுகூட கார்த்திக்கின் கட்டளையினால்தான் என்பது அவருக்குத் தெரியாது.

“ஐயோ! எத்தனை முறை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னேன். ஏற்கனவே அழகப்பனையும், ஜெயந்தியையும் இழந்து தவிக்கிறேன். இப்ப அவங்க பெத்த பொண்ணையும் இழந்திருவேன் போலிருக்கே” என்றவரின் கண்முன்னே தங்கையின் வேண்டுகோள் வந்துபோனது.

நடப்புக்கு நடுவில்:

இருபது வருடங்களுக்குமுன்:

அழகப்பன் தன் சுய உழைப்பில் தினமீன் நாளிதழ் ஆரம்பித்து, ஓரளவு வெற்றிகரமாகவே நடத்தியவர். ஒரு அரசியல்வாதியைப் பற்றிய உண்மையை அவர்களின் மிரட்டலையும் மீறி எழுதப்போக, தக்க தருணம் பார்த்து லாரி ஏற்றி அடித்துத் தூக்கி, அந்தக் கொலையை விபத்தாக்கினார்கள். அந்த அதிர்ச்சியிலேயே பாதி உயிர்போன அழகப்பனின் மனைவி ஜெயந்தி, தன் மூன்று வயது மகளுக்காக உயிரைப் பிடித்து தன் அண்ணனின் வரவிற்காக காத்திருந்தாள். அந்தநேரம் திருச்சியிலிருந்த சுந்தரேசன் வந்து, அனைத்து சடங்குகளையும் செய்து முடிக்க, தங்கையின் நிலைதான் கவலைக்கிடமாக இருந்தது.

அவளருகே சென்றவர் கண்கலங்கியபடி, “என்னமா நீ. டாக்டருக்கு ஒத்துழைக்க மாட்டேன்றியாம்? இப்படியிருந்தா எப்படி? குழந்தையைப்பற்றி நினைத்துப் பார்த்தியா?”

“அவளுக்கு நீ இருக்கிறேன்ற நம்பிக்கையிலதான் நான் இந்த உலகத்தைவிட்டு போகப்போறேன் அண்ணா.”

“ஜெயந்தீ...” என அதட்டி, “என்ன பேசுற நீ? புருஷனை நினைச்ச நீ உன் பொண்ணை நினைக்க மாட்டேன்றியேமா? அன்புகாட்ட நீங்க ரெண்டு பேருமே இல்லாம, இந்தக் குழந்தை எப்படி வளரும்?” என வருத்தமாகச் சொன்னார்.

“இல்லண்ணா என்னோட உடலும், மனசும் அப்படித்தான் சொல்லுது. எனக்கு எதாவது ஆகுறதுக்கு முன்னாடி, அவளை பொறுப்பா உன் கையில ஒப்படைக்கணும்னுதான் காத்திருந்தேன்” என்றவர் குழந்தை அவந்திகாவை அருகில் அழைத்து தாய்க்குச் சமமான தாய்மாமனிடம் ஒப்படைத்தார்.

“அண்ணா எனக்கு அண்ணியோட குணம் தெரியும். நான் உன்னை மட்டும்தான் நம்பி என் பொண்ணை, இந்தப் பொல்லாத உலகத்துல விட்டுட்டுப் போறேன். அவளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச் சொல்லி நல்லவளா, தெளிவானவளா அதைவிட தைரியசாலியா, வளர்க்க வேண்டியது உன்னோட பொறுப்பு. அவங்கப்பா ஆரம்பிச்ச தினமீனை பொறுப்பேற்று நடத்துற அளவுக்கு திறமைசாலியா இருக்கணும் இவள் என்றார்.”

அதே நேரம் வக்கீல் உள்ளே வர, சொத்துக்கள் அனைத்தையும் பெண்ணிற்கு எழுதிவைத்து, அதற்கு பாதுகாவலாக தன் அண்ணனைப் போட்டு, உயில் எழுதி முடித்ததும், தானும் முடிந்து போனாள் இவ்வுலகைவிட்டு.

திருச்சியிலிருந்த தன் குடும்பத்தைத் தங்கை வீட்டிற்கே அழைத்து வந்தவருக்கு, மனைவியால் குழந்தைக்கு எந்த கொடுமையும் நடந்துவிடக் கூடாதென்று, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அவளுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்தார். இருப்பினும் அவரில்லா நேரங்களில் குழந்தையை தன் மிரட்டலிலேயே வைத்திருக்கிறாள் என்பது, வருடங்கள் கடந்தே தெரிய வந்தது. வெளியில் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் அவந்திகா, தன் சொந்த வீட்டில் எந்த அதிகாரமும் செய்ய முடியாதளவிற்கு ஊமையாகியிருந்தாள்.

தங்கை தன்முன் வந்து, ‘என் பொண்ணு வாழ வேண்டியவ அண்ணா. எப்படியாவது காப்பாத்தி வாழவைண்ணா’ என்று சொல்வதுபோல் தோன்றியது சுந்தரேசனுக்கு.

கண்களில் தன் மருமகளுக்காக கண்ணீர்வர, “கடவுளே! ஏன் அவளை சோதிக்கிற? மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒருமுறை, ரெத்த வெள்ளத்துல மிதக்கவிட்டது பத்தாதா உனக்கு? இன்னுமா அவமேல உனக்கு கருணை வரல? உன் சன்னிதியில் உன் கண்முன்னால நடந்ததை தடுக்கக்கூடவா நீ வரல? பாவம் செய்யுறவங்களையெல்லாம் விட்டுட்டு, அப்பாவியான என் மருமகள்தான் கிடைச்சாளா? போதும்பா உன்னோட சோதனையை நிறுத்திக்கோ. அவளைப் பிழைக்கவை” என்று கடவுளிடம் முடிந்தமட்டும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

கார்த்திக்கோ, யார் வந்தார்கள்? யார் சென்றார்கள்? தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அறுவை சிகிச்சை நடக்கும் அறையின் வாயிலையே வெறித்துக் கொண்டிருந்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அதற்குள் ப்ரஸ், மீடியா என்று வர, விஷ்ணுவிற்கு அனைத்ததையும் சமாளித்து அனுப்புவதற்கே போதும் போதுமென்றானது. இதுவரை அவந்திகாவின் பாதுகாப்பை எண்ணி அவளின் புகைப்படத்தை வெளியிட்டதில்லை என்பதால், விஷ்ணுவாலும் ஓரளவு சமாளிக்க முடிந்தது.

குற்றவாளியான பரத் மாட்டியதில், போலீசாருக்கோ முழு திருப்தி. இருக்காதா பின்னே, அவனுக்காக மாதக்கணக்கில் அலைந்து திரிந்தார்கள் அல்லவா.

சிகிச்சை முடித்து கார்த்திக், சுந்தரேசனிடம் வந்த டாக்டர் ரஞ்சன் “நீங்க பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வெட்டு கொஞ்சம் ஆழம்தான். பட், உள்ளே உள்ள உறுப்புகளை சேதப்படுத்தல. அப்படிப் போயிருந்தால்தான் சிக்கலாயிருக்கும். தையல் மட்டும் பிரியாமல் பார்த்துக்கோங்க. ரூம்கு வாங்க. மருந்து எழுதித்தர்றேன்” என்று செல்ல,

கார்த்திக்கிடம், “நான்போயி வாங்கிட்டு வர்றேன்டா” என்று கிளம்பினான் தாமு.

விஷயம் தெரிந்து வனஜா, கௌஷிக் வர, எந்த ஆபத்தும் இல்லையென்றதும், ஒரு நொடி ஏமாற்றம் வந்து சென்றது இருவர் முகத்திலும்.

பின், கார்த்திக்கைச் சுட்டிக்காட்டி “அம்மா அவன்தான், அவந்திகா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு ஒத்தைக்கால்ல நிற்கிற, ஆணழகன் கார்த்திக்” என்றான் நக்கலாக.

அவனைப் பார்த்த வனஜாவின் கண்களுக்கு உண்மையிலேயே ஆணழகன் தான் என்று தோன்றியது. வாட்டசாட்டமான அவனின் உருவம். முகத்தில் ஒரு தெளிவு. யாரையும் அதிகம் நெருங்கவிட மாட்டேனென்பது போன்றதொரு தோற்றம். அதையும் மீறி ஒரு சிநேகபாவம். ஏனென்று தெரியவில்லை இவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று மட்டும் வனஜாவிற்கு தோன்றியது.

பின் சுந்தரேசனிடம் சென்று ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று இருவரும் நின்றுகொண்டார்கள்.

தாமு கார்த்திக்கிடம் வந்து, “ஒரு காஃபியாவது குடிடா. சிஸ்டர்குதான் பயப்படுற மாதிரி எதுவுமில்லைல. வாடா” என்றழைத்தவனிடம், ‘மாட்டேன்’ என்று மறுக்க சுந்தரேசனிடம் சொல்லி வலுக்கட்டாயமாக, கேண்டீன் இழுத்துச்சென்றான்.

கார்த்திக்கை உள்ளே அமரவைத்து டோக்கன் போட்டு வந்தமர்ந்த தாமு, “என்னடா இவ்வளவு எமோஷனல் ஆகுற? நீ பார்க்கிற தொழிலுக்கு இதெல்லாம் சரிவராதுடா. எமோஷனலைக் குறைச்சிக்கோ. கோவில்ல வச்சி என்னென்னவோ பேசின. இப்ப அவனா நீன்னு தோணுதுடா.”

“ப்ச்... விடுடா நானே எதிர்பார்க்கல. அவளை அந்த நிலையில ரத்தத்தோட பார்த்தப்போ, எப்படிச் சொல்றது தெரியலடா செத்துட்டேன்னு வச்சிக்கோயேன். முதல்முறை இந்த மாதிரி சூழ்நிலையில் பார்க்கும்போது, எனக்கு எந்த ஃபீலிங்கும் வரலன்றதுதான் நிஜம். இப்ப தெரியுதுடா எனக்கே தெரியாம அவள்மேல, எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு. அதுலயும் என்னைக் கண்ட உடனே வலியையும் மீறி, நீ வந்திட்டியா கார்த்திக் ரேஞ்சில பார்த்து சிரிச்சா பாரு. இதைவிட என்னடா பெருசு?”

“சாரிடா தாமு. கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை ஒரு குழந்தைக்கு அப்பாவாக்கிட்டேன்” என்றான்.

“பார்த்துடா. நீ சொன்ன பொய்யை நம்பி எனக்கு பொண்ணு தராம போயிடப்போறானுங்க. எனக்குக் கல்யாணம் பண்ணுற ஐடியால்லாம் இல்லன்றது வேற. அப்படியே வந்தாலும் அவந்திகா தங்கச்சி மாதிரியே வேணும்னு தோணுதுடா.”

“அப்ப உனக்கு மேரேஜ் கடைசிவரை நடக்காதுடா.”

‘ஏன்?’ என விழித்த நண்பனிடம், கண்களில் ஒருவித மயக்கத்துடன், “அவளை மாதிரி ஒரு கேரக்டர்னா, அது அவள் மட்டும்தான்டா.” மயக்கத்திலிருந்து வெளி வந்து, “மீறி சந்திக்கணும்னா எங்களோட ப்ரோடக்டாதான் இருக்கும்” என கண்ணடித்து, “உனக்கெல்லாம் என் பொண்ணை கட்டிவைக்கிறதுக்கு நான் தயாராயில்ல சொல்லிட்டேன்” என்றான்.

“நீயெல்லாம் ஒரு நண்பனா? நல்லா வருவடா நீ” என பல்லைக்கடித்தபடி, எனக்கு கடைசிவரை கல்யாணம் முடியக்கூடாதுன்றதுல தெளிவாயிருக்க போல” என்றான்.

“அதைவிடுடா. நெக்ஸ்ட் எந்த வீடு? என்ன ப்ளான்?” என கார்த்திக் கேட்டான்.

“நெக்ஸ்ட் நம்மோட டார்கெட். எக்ஸ் விவசாயத்துறை அமைச்சர் சந்திரன். நேர்மையான மனுஷன். இப்போதைக்கு அவர் பதிவியில இல்லன்றதுதான் நம்மளோட ப்ளஸ்.”

“ஓ..சரிடா. அவந்தி டிஸ்சார்ஜ் பண்ணினதும் தூக்கலாம்” என்று வந்த காஃபியை பருகி பில் கொடுத்து, ஹாஸ்பிடலுக்குள் செல்லும் பொழுது அங்கு கேட்ட குரல்களில் இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.

“அவ போயிருவா. சொத்தெல்லாம் நமக்கு ஈஸியா வரும்னு நினைச்சா பிழைச்சிட்டாளேடா. இரண்டு முறை சாவின் விழிம்புவரை போயிருக்கா. அப்படியிருந்தும் ஆயுசு கெட்டிடா அவளுக்கு. உனக்கு கட்டிவச்சி சொத்தை அடையலாம்னாலும், அந்த கார்த்திக் நடுவுல வந்திட்டான். அவளாவே போக சந்தர்ப்பம் கிடைத்தும் போகாம இருக்கா பாரு. சே... என்னை டென்சன் படுத்தவே இந்த ஜென்மம் எடுத்திருப்பாபோல” எரிச்சலில் கடுப்புடன் வார்த்தைகளை கொட்டினான்.

“விடுங்கம்மா. நம்மளைத்தாண்டி அவளால எங்கேயும் போகமுடியாது. போகவும் விடமாட்டேன். டோன்ட் ஒர்றிம்மா. கூலாயிருங்க. உங்க பையன் நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”

“என்னவோடா. நான் உன்னைத்தான் நம்பியிருக்கேன். சரிவா எனக்கு இங்க நிற்கவே பிடிக்கலை. கிளம்பலாம்” என்று வெளியே சென்றார்கள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் கண்கள் கோவத்தில் ஜொலிக்க, “அவள் செத்தாவது உங்களுக்கு சொத்து கொடுக்கணுமா? அவ்வளவு பேராசையா உங்களுக்கு? அவளே கொடுக்குறேன்னு சொன்னாலும், கொடுக்கவிடாம எந்த சொத்துமில்லாமல் ,உங்களை நடுரோட்டுல நிற்க வைக்கிறேனா இல்லையா பாருங்க” என்றவன் நண்பனிடம் திரும்பி “பார்த்தியாடா? இத்தனை வருஷமா வளர்த்தாங்களே. அந்த பாசம்கூடவா இல்லாமல் போகும் இவங்களுக்கு. பார்த்துக்கிறேன்டா” என்றவன் ‘சொத்தா வேணும். ஒரு நயா பைசாகூட கிடைக்காமல் பண்றேன்’ என்று மனதினுள் சபதமிட்டான்.

சிறிது நேரத்தில் கார்த்திக்கின் குடும்பத்தினர் வர, மகனின் நிலையை உணர்ந்தவர்களுக்கு அவனுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. சுந்தரேசனிடம் பேசும் சூழ்நிலை இல்லையாதலால் தங்களை சின்னதாக அறிமுகம் மட்டும் செய்துகொண்டார்கள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top